Thursday, August 14, 2008

masila cancer research foundation

You all have been a source of constant encouragement in my research on cancer detection

Between my last mail and this we have been tweaking and tweaking for greater and greater reliability . Now we can do MCD on

1 Sputum of heavy smokers and urine of heavy alcoholics to see how far they have moved from the domain of healthy normals to premalignant or early malignant conditions

We can catch them when they
still still still have a chance to revert

2 FAN of breast lump or cervical swab or oral swab to warn for
the pre or early malignant condition



all the above are in addition to our 85% detection success rate of pancreatic or stomach or esophagus ca early detection

Now that we have reached a definite stage of maturity
we are entering the arena

pl see visit our web site www.thendrel.com

We are building a nationwide network to
reach every nook and corner of india

Some of you or your friends in the medical care profession may be intrested in joining hands with us as business partners or for social service.

you are welcome to e mail or call me 050 51 42074
masila123@gmail.com

rgds vm



Life is to cherish and ennoble
Dr V Masilamani
Prof. Laser Group, King Saud Univ Riyadh, KSA
off ph:00 966 1 4676624/6611 res ph 2802332

தங்கம் மாத இதழ்

தங்கம் மாத இதழ்

நண்பர்களே!

கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி சிறப்பாக நடைபோட்டு வருகிறது தங்கம் மாத இதழ். மரத்தடியின் படைப்பாளிகள், கவிஞர்கள் அனைவரும் தங்கம் இத௞ல் பங்கெடுத்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். மற்றும் தங்கம்ஆன்லைன்.காம் www.thangamonline.com இணையதளத்திற்கும் பங்களிப்பு செய்ய அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்,
முருகன் மந்திரம்
முதன்மை நிர்வாக ஆசிரியர். (தங்கம் மாத இதழ்)
முதன்மை நிர்வாக அலுவலர் (தங்கம்ஆன்லைன்.காம்)

தொடர்புக்கு
33-1/7, வெங்கட் நாராயணா சாலை,
நந்தனம், சென்னை-35.
Tel: 044 42127170
Cell: 98417 41395

Email : editor@thangamonline.com / thangameditor@gmail.com / cc : muruganlm@yahoo.com / muruganlm@gmail.com
www.thangamonline.com

Rabita Trading Est. (Educational services),

Rabita Trading Est. (Educational services)
Riyadh.

Attention prospective students,

We get you confirmed admission in Riyadh itself for the following higher learning courses in Russia, China, Chennai(India) and London, if you have required qualifying marks in your class XII.

1) Medical (M.B.B.S.) and Dental (B.D.S.) and PG courses in "Jiamusi university", China (www.juchina.org), "Northern State Medical university" Arkhangelsk, Russia.

2) B.E. (Bio-Medical, Computer Science & Engineering, Electronics & Communication Engineering and B.Tech.(Information Technology) in "Alpha College of Engineering", Chennai (Madras), India. (www.alphagroup.edu).(Non-Indians too can join, if their country of origin law permits).

3) BBA, MBA and accountancy courses in "The International School of Business Studies" London, UK (www.isbs.org.uk).

4) Distance Education of "Banasthali Vidyapith", Rajasthan, India (www.banasthali.org, www.banasthali.ac.in) for working class. Exams will be conducted in Saudi itself.

5) Online courses of " Washington American Global University", Delaver, USA (www.wagu.edu.us) for working class. Exams will be conducted in their premises.
-----------------------------------------------------------------------------------------------------------
a) Confirmed admission can be obtained here in Riyadh itself.

b) We do not charge anything from the student.

Contact:
Mr.Ashfaq Hussain
Rabita Trading Est.(Educational Services),
Behind Al-Bilad Bank, Sitteen Road, Malaz,Riyadh.
Phone # 01 2911991. Mobile # 0551986077, Email: ashfaq106@gmail.com

இலவச வரிவிளம்பரம் செய்ய

post your Free Classified Ads at YaHind.Com

http://ads.yahind.com

If you want to:

- Buy/Sell your household items
- Housing Available/Wanted
- Real Estate (Buy/Sell)
- Jobs Wanted or Offered
- Matrimonial Ads
- Vehicles (Buy/Sell)
- Learning / Trainings Ads
- Community Ads
- Other Services Ads

Please visit http://ads.yahind.com, its easy to use and publish your ads with picture.

Post Matric Scholarships

"Post Matric Scholarships" offered for students belonging to Minority Communities (Muslims, Christians, Buddhists, Parsees & Sikhs).

The Scholarship is a Central Govt Scheme under Ministry of Minority Affairs, Govt. of India, New Delhi. Its co-ordinated in every state by the respective Department of Minorities. In Karnataka its being implemented by Department of Minorities, 20th Floor, V.V.Towers, Ambedkar Veedhi, Bangalore 560 001. Phone : 080-22863618 / 22865958.

Who can apply ?

Students studying in the following courses can apply – 1st Year PUC, 2nd Year PUC, 11th / 12th std, Diploma, ITI, JOC, Vocational Training, Paramedical Courses, D.Ed, UG Courses – BA, BCom, BSc, BBM, B.Ed , BCA, Nursing, Pharmacy & Post Graduate Courses – MA, MSc, MCom, M.Ed. Students pursuing Ph.d can also apply

Eligibility Criteria

1. At least 50% marks or equivalent grade in the previous final examination.
2. Annual income of parents/guardian from all sources should not exceed Rs.2 lakh.
3. Student must belong to any of the Minority Communities (Muslims, Christians, Buddhists, Parsees & Sikhs).

Scholarship Amount for Hostelers (Students who stay in Hostel / paying guest / rented room)

For Vocational / Technical Training Courses : Rs.10,000/- (course fee) + Rs.2350/- (Maintenance allowance). Total : Rs.12,350/- p.a.
For PUC - 1st year & 2nd Year : Rs.7000/- (course fee) + Rs.2350/- (Maintenance allowance). Total : Rs.9,350/- p.a.
For UG & PG Courses : Rs.3000/- (Course fee) + Rs.3,550/- (Maintenance allowance). Total : Rs.6550/- p.a
For M.Phil & Ph.D : Rs.5,100/- p.a. (Only Maintenance allowance)

Scholarship Amount for Day Scholars

For Vocational / Technical Training Courses : Rs.10,000/- (course fee) + Rs.1400/- (Maintenance allowance). Total : Rs.11,400/- p.a.
For PUC - 1st year & 2nd Year : Rs.7000/- (course fee) + Rs.1400/- (Maintenance allowance). Total : Rs.8400/- p.a.
For UG & PG Courses : Rs.3000/- (Course fee) + Rs.1850/- (Maintenance allowance). Total : Rs.4850/- p.a
For M.Phil & Ph.D : Rs.3,300/- p.a. (Only Maintenance allowance)

Last date to submit application form
10 February 2008.

I request all those who recieve this email to kindly download this form, make copies and distribute it among the most deserving students. Any clarifications, please email me.

For more details, visit
http://minorityaffairs.gov.in/newsite/schemes/postmatric/scheme_details.pdf
http://minorityaffairs.gov.in/newsite/schemes/postmatric/postmatric.htm

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ( எஸ்.ஐ.ஓ)

Students Islamic Organisation of India

AN INTRODUCTION

In order to understand SIO it is essential to have a good grasp on its views on Islam, student and organization. The Arabic word Islam signifies peace, dedication and absolute submission. In other words it is the path to peace through complete surrender to God.

SIO believes that the real function of education should be to impart genuine knowledge about life, existence and future. A real student is therefore one seeking for the realities about life and universe.

SIO believes that the function of the organization should not be to assemble as many people as possible by any means. But it is to transform the cadre into a crop of activists committed to ideals and gifted with inner strength.

SIO aims…
SIO finds itself committed to impart genuine knowledge and awareness to students and getting them ready to become torchlight of morality and fighters against evils by reinforcing their own life. The organization will also strive for promoting moral values in educational system and better academic and moral atmosphere in educational institutions and to nurture the talents of students in such a way as to benefit the society. Above all, preference will be given to spread the truths as understood by the organization among the most critical group of civil society – students.

SIO works…
All afore mentioned aims will be striven for only within the limits of morality and constructive – peaceful manner. The organization shall keep away from anything that is contrary to truth and honesty and that may result in communal hatred and class struggle

We do regularly
Weekly meetings held regularly in thousands of its units spread throughout the country are a unique feature of SIO On Goings. Students gathered in every unit benefit from discussions on various contemporary issues, educational matters, political and philosophical topics as well as they plan their future works and analyses previous On Goings.

Nizamul Usra held under the supervision of SIO members every day is a dynamic activity to look into the self of everybody. They study according to their requirements and tries to know each other well.

Monthly cadre meets at local units provide every worker a chance to analyse himself and to think over the organizational On Goings.

Bimonthly students meet at every unit provide the participants to debate over various faiths and understandings and thus helping in creating an accommodative culture among different believers.

Educational awareness programs are the inevitable part of SIO agenda every year. Surveys in selected colonies followed by enrolment in schools, other educational assistances like scholarships, book banks, libraries, reading rooms, study circles, guidance for better academic future, hostels, coaching classes etc are also carried out.
Students’ issues are not mere topics of organizational interest for SIO. Rather the organization looks into every issue fundamentally and tries to create awareness on it among general and thus to solve them in a creative manner. Demand for 6% GDP for education, awareness on the proposed university model act, protests on various anti students policies of central and state governments etc are a few from such interventions.

Strength
SIO has membership strength of 4000 in addition to 65,000 associates and 25,000 junior associates. Total units come up to 550, while circles are 1250. There are 900 junior associate circles, 675 campus branches as well as 50 branches in religious institutions.



Head Quarters

D – 300, Abul Fazl Enclave,Jamia Nagar, Okhla
New Delhi – 110025
Phone/Fax:011 – 26849817, 26926285
E Mail: president@sio-india.org ,gs@sio-india.org , orgs@sio-india.org
prs@sio-india.org , sec@sio-india.org
website: www.sio-india.org

இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ் - Institute of Objective Studies (IOS)

Institute of Objective Studies (IOS)


AN INTRODUCTION

Institute of Objective Studies (IOS) was established in the year 1986 with a view to promote empirical and conceptual research. Research is carried out on ideologies and problems relevant to Indian polity, society, economy, religion and culture. Attention has been focused on the problems of Muslims and other minority groups. The studies include the problems of development processes, community relations, social tensions, status of women etc. Within the said period the Institute has established itself as a Centre of research and intellectual activities, which is known for its objectivity in the academic world.

Its achievements and programme have received recognition from the Economic and Social Council (ECOSOC) of the United Nations. The IOS is in Consultative Status (Roster) with ECOSOC of UN.

The Institute has tried to fill the academic vacuum in approaching societal issues faced by Indian people in general and Muslims in particular. It has provided a platform for serious intellectual endeavor in the areas of Social Sciences and Humanities, and became a trendsetter in the fields of conceptual and investigative research on the Qur’anic approach to human problems and the problems of Muslims in India. Various survey projects, which focus on the problems of Muslims and other weaker sections of Indian society, are fulfilling a long felt need for statistical information and analysis in different areas.

Institute of objective studies functions in a structured manner through three types of set-ups.

Governing Structure
Academic Structure
Administrative Structure



--------------------------------------------------------------------------------

Contact Detail


Institute of Objective Studies
P.Box No.9725
162-Joga Bai Extension,Jamia Nagar,
New Delhi-110025,

INDIA.

Phone: 011-26981187, 26987467, 26989253
Fax: 91-11-26981104

E-Mail :

ios1@vsnl.com

manzoor@ndf.vsnl.net.in
Website:www.iosworld.org

தனலட்சுமி வங்கி

Assalamu Alaikkum.

At the outset,I would like to introduce myself that I am M.Mohammed Ashraf Ali,Manager of NRI Relationship Centre, Dhanalakshmi Bank, Chennai.

I would like to inform your goodself that I have recently taken charge of NRI Relationship Centre of Dhanalakhsmi Bank which is a modern bank providing all hi-tech banking services for the past 80 years through their
181 branches and 26 extension counters spread all over India. In Tamilnadu, we have got branches in important locations including Adhirampattinam.

We are offering all the modern banking services such as tele-banking, web banking , Online transfer / remittance facilities, Any Branch Banking, ATMs, International Visa Debit card, Insurance services ( Life and Non-life ) and RTGS facilities. We assure you that you can enjoy these modern services with our traditional, courteous and personalised customer service.

The bank has always been a trend setter, constantly making pioneering moves.
The bank has in its books top corporate clients and blue chips, both established and emerging. The delivery channels are being supplemented by putting up onsite as well offsite ATMs across the country.

All our branches are in the country are authorized to conduct NRI business.
We offer the spectrum of the banking and financial services to the NRIs, the harbinger of prosperity to the country, with absolute confidentiality.
For sending remittances, we have concluded rupee drawing arrangements with a large number of exchange houses. For example, in UAE , we have got arrangement with Redha Al Ansari Est, UAE EXchange Centre, Al Ahalia Money Exchange Bureau,Al Fardan Exchange and Thomas Cook Al Rostamani Ex.co.

We extend our hearty welcome to you and the honourable members of the association and request you to patronize us with your valuable accounts.

We enclose the profile of our bank for your kind perusal.More informaion and account opening form are available in our website

www.dhanbank.com

We request you to kindly provide us the e-mail ids of the members to enable us to contact them individually. If you need any clarification, please feel free to contact us.

Let Allah’s blessings be always with you.

Looking forward to serve you better and forge a life long relationship.

Yours sincerely,

M.Mohammed Ashraf Ali
Manager, NRI Relationship Centre,Dhanalakshmi Bank No.34, CSM Plaza, VK Road,Mandaveli, Chennai-600 028
Phone: 044-24618732 Mobile:9444580806
E-mail: dhanalakshminri@vsnl.net

தமிழ் இணையச் சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வு

அன்புடையீர்,

வணக்கம்.

எம். சுப்பிரமணி எனும் நான் இக்கடிதம் வாயிலாக தங்களுடன் தொடர்பு
கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் " முத்துக்கமலம் " ( http://www.muthukamalam.com )எனும் இணையச்
சிற்றிதழ் ஒன்றினை கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறேன்.
நான் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தின்
மூலம் எம்.பில், (இதழியல் & மக்கள் தொடர்பியல்) [M.Phil (J.M.C)]
பயின்று வருகிறேன்.

இந்த ஆய்வுக் கல்விக்காக " தமிழ் இணையச் சிற்றிதழ்கள் - ஓர் ஆய்வு "
எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்து சமர்ப்பிக்க உள்ளேன்.
இந்த ஆய்வுக்கு " தமிழ்த்திணை " இணையச் சிற்றிதழின் ஆசிரியரும்,
தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு
மையத்தின் இணைப் பேராசிரியருமான முனைவர்.தி.நெடுஞ்செழியன் அவர்கள்
வழிகாட்டுனராக உதவிட முன் வந்துள்ளார்.

அச்சுப்பிரதியாக வெளியாகாமல், வணிக மூலமான இலாப நோக்கமில்லாது ஏதாவது ஒரு
(உயரிய) நோக்கத்துடன் இணையத்தில் மட்டும் வெளியிடப்படும் இணைய இதழ்களை "
இணையச் சிற்றிதழ்கள் " என்று ஒரு வரையறை செய்து ஆய்வு செய்யப்பட உள்ள
எனது ஆய்வுப் பணிக்கு
தங்கள் இணைய இதழ் குறித்த கீழ்க்காணும் தகவல்கள் எனக்குத் தேவையாக உள்ளது.
தங்களின் மேலான பணிகளுக்கிடையில், தயவு செய்து எனக்குத் தேவையாக உள்ள

கீழ்காணும் தகவல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு
(msmuthukamalam@yahoo.co.in)அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.

நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
எம்.சுப்பிரமணி,
தேனி.
தொலைபேசி: 91-4546-265630
கைத்தொலைபேசி: 91-9940785925

__________________________________

" தமிழ் இணையச் சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வு " க்குத் தேவையாக உள்ள தகவல்கள்

1. இணைய இதழ் பெயர் :

2. இணைய இதழ் முகவரி :
( உதாரணமாக, http://www.tamilthinai.com/)

3. துவங்கப்பட்ட நாள் / ஆண்டு :

4. துவங்கப்பட்ட நோக்கம் :

5. முக்கியக் கருத்து :
( சமூகம் / இலக்கியம் / அரசியல் / ஆன்மீகம் / பகுத்தறிவு / சமையல் /
பல்சுவை... போன்று எது சார்ந்தது எனக் குறிப்பிடவும் )

6. வெளியிடும் அமைப்பு / வெளியிடுபவர் :

7. வெளியீட்டு முகவரி :
(நாடு குறிப்பிடவும்)

8. பயன்படுத்தும் எழுத்துரு :

9. பயன்படுத்தும் தொழில்நுட்பம் :

10. கணினி வடிவமைப்பு :
(தாங்களே மேற்கொள்கிறீர்களா? நண்பர்கள் / ஊழியர்கள் உதவுகிறார்களா?)

11. வாசகர்கள் நிலை :
( வாசகர்கள் மற்றும் அவர்களது நாடுகளை குறிப்பிடுங்கள்)

12. வாசகர்கள் அதிகரிப்புக்கு தங்களின் முயற்சி :

13. படைப்புகளில் வாசகர்களின் பங்கு :

14. விளம்பர வாய்ப்பும் தங்கள் முயற்சியும் :

15. வரவேற்பில்லாத இணைய இதழின் தற்போதைய நிலை குறித்து தங்கள் கருத்து :

16. இணைய இதழ்களின் எதிர்காலம் :

17. தாங்கள் கூற விரும்பும் பிற தகவல்கள் :
(ஏதாவது இருந்தால்...)

முஸ்லிம் லீக் வழங்கும் சஹர் நேர ஒளிபரப்பு - விளம்பர விகிதம்

முஸ்லிம் லீக் வழங்கும் சஹர் நேர ஒளிபரப்பு - விளம்பர விகிதம்

A Training Guide for Islamic Workers

Tamil edition of 'A Training Guide for Islamic Workers' by Dr. Hisham AlTaleb

Originally published by The International Institute of Islamic Thought - USA

Tamil edition : Pages 460, Size: 290 cm x 210 cm

Available at Hathee Book Depot, Colombo, Sri-Lanka. Phone : 0094 112 332 672 Email : mhathee2005@yahoo.com.au

Adaiyalam, Puththanaththam, TamilNad, India. Mobile: 0091 944 376 8004 Email: admin@adaiyalam.com

ஆற்றலை வளர்க்கும் அழகிய வழிகாட்டி

ஆற்றலை வளர்க்கும் அழகிய வழிகாட்டி

அமெரிக்க-கனடிய அமைப்பான மு°லிம் °டூடன்ட் அஸோசியேசன் என்ற அமைப்பின் சார்பாக நவீன தஃவா பணி முறைமைக்கு தலைமைத்துவப் பயிற்சி முக்கியம் என்பதனால், இ°லாமியப் பணிகளில் ஈடுபடுபவர்களின் பயிற்சிக்கென தலைமைத்துவ பயிற்சி வழிகாட்டியினை எழுதும் பொறுப்பு கலாநிதி ஹிஷாம் அல் தாலிப் அவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈராக்கிலுள்ள மோஸுல் நகரில் ஹிஜ்ரி 1360 (1940)ல் அவர் பிறந்தார். 1962ல் லிவர்பூல் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் துறையில் பி.எ°. பட்டமும், இண்டியானாவிலுள்ள புர்து பல்கலைக்கழகத்தில் எம்.எ°. மற்றும் பி.எச்.டி. பட்டங்களையும் 1974ல் பெற்றார். எம்.எ°.ஏ. வில் 1975-77ல் முழு நேரப் பணிப்பாளராகவும் பல உயர் பதவி களையும் வகித்தார்.

இத்தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டியில் நான்கு அடிப்படை விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது.

1. ஆன்மீக மேம்பாடு.
2. இ°லாத்தைப் பற்றிய சரியான அறிவும் விளக்கமும்.
3. ஏனைய மார்க்கங்கள், சிந்தனை கோட்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு.
4. தஃவா பணிக்கு உதவும் செயல் திறன்கள்.

பல இ°லாமிய இயக்கங்களில் பொறுப்பும் அதிகார மும் மிக்க பதவிகளில் மு°லிம் இளைஞர்களே உள்ளனர். அதேபோல் தஃவா பணிக் களத்தில் பெண்களும் பொறுப்பு மிக்க பதவிகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர். சுருக்கமாக இயக்கங்களில் பதவி வகிக்கக்கூடிய, வழி நடத்தக்கூடிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கட்டாயம் படித்து, அறிவை
வளர்த்து, அதன் வழிகாட்டுதலில் செயல்பட இந்நூல் முக்கிய மானதாகும். இதன் மூலம் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு பல விதமான பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். அதன் மூலம் திறன்கள் வெளிப்பட்டு இயக்கம் மேம்பாடு அடையும். மேலும் ஒவ்வொரு பொறுப்பாளரும் இயக்க வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை சந்திக்கும் போது அதற்கான திட்டங்களையும் உதவிகளையும் இந்நூல் வாயிலாகப் பெறலாம். உதாரணமாக:

1. ஓர் உரையை தயார்படுத்த முனையும்போது
2. ஓர் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய / வடிவமைக்க
3. தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள
4. கூட்டம் ஒன்றிற்கு தலைமை வகிக்க
5. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள / நடத்த

இக்குறிப்பிட்ட நிலைமைகளில் இவ்வழிகாட்டியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்நூலின் முதலாம் பாகத்தில் பயிற்சி குறித்த கண் ணோட்டங்கள் என்ற தலைப்பில் மூன்று அத்தியாயங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம் ஓர் இ°லாமிய ஊழியன் அறிந்துகொள்ள வேண்டிய சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் கூட்டத்தைப் பற்றிய விபரங்களை பரந்த கண்ணோட் டத்துடன் விளக்குகிறது. இரண்டாம் அத்தியாயம் 14வது ஹிஜ்ரி நூற்றாண்டின் போது இ°லாமிய இயக்கம் பற்றிய பின்னணியும், வளர்ச்சி அடையவேண்டிய துறைகளைப் பற்றி விளக்குவதோடு மீளாய்வும், சில கேள்விகளையும் முன் வைக்கிறது. மூன்றாம் அத்தியாயத்தில் நமது குறிக்கோள்கள் விளக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாகத்தில் தலைமைத்துவத்தின் தொழிற் பாடுகள். ஒவ்வொரு இயக்க ஊழியரும் பயில வேண்டிய தன்னகத்தே கொள்ள வேண்டிய இன்றியமையாத பண்பு தலைமைத்துவ பண்பு ஆகும்.

“உங்களில் ஒவ்வொருவரும் ஒரு மேய்ப்பாளர் ஆவீர். தாம் மேய்ப்பன பற்றி ஒவ்வொருவரும் பொறுப்பு கூற வேண்டும்” (புகாரி, மு°லிம்).
என்ற ஹதீஸுக்கு இணங்க தலைமைத்துவப் பண்புகள் பற்றி விரிவாக ஆராய்கிற இப்பகுதி சிறந்த அட்டவணைகள், கருத்துப் படம், வரைபடங்கள் மற்றும் குர்ஆன் வசனங் களுடன் விளக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக தொகுக்கப் பட்டுள்ள சிறந்த ஆவணம் இது.
மூன்றாம் பாகத்தில் திறன் விருத்தியும், சுய அபிவிருத் தியும் என்ற தலைப்பில் ஓர் இயக்க ஊழியர் அல்லது பொறுப்பாளர் சில திறமைகளை வளர்த்துக் கொள்ளல் அவசியம்; அவ்வகையில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஆலோசனை வழங்குதல்,செவி சாய்த்தல், நேரத்தை ஒழுங்கு செய்தல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கூட்டங்களை தயார் செய்தல், தலைமை வகித்தல், குழுக்களை உருவாக்குதல், தொடர்பாடல் போன்றவைகளைப் பற்றி இப்பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இறுதியில் பயிற்சியில் நயவஞ்சகமா? அல்லது மனோதத்துவமா? என்றொரு கடிதமும் “நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை கண்டுகொள்ளும்” எனும் தலைப்பில் கவிதையும் முத்தாய்ப் பாய் உள்ளது.
நான்காம் பாகத்தில் பயிற்றுவிப்போருக்கான பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சியின் வகைகள், திட்டங்கள், நுட்பங் கள் அதன் பண்புகள், பயிற்சிக்கான தேவைகளின் மதிப்பீடும், பகுப்பாய்வும் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பாகத்தில் இளைஞர் முகாமின் நோக்கம், தயார்படுத்தும் விதம், நிகழ்ச்சி நிரல் வடிவமைப்பு, செயல் திட்டங்கள் மதிப்பீட்டையும் விளக்குவதோடு இ°லாமிய ஒழுக்க நெறிகளையும் கூறுகிறது. ஒவ்வொரு இ°லாமிய இயக்க ஊழியரும் படித்து பயன்பெற, வழிநடத்த சிறந்ததொரு வழிகாட்டி இது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு மேலாளர், அல்லது இயக்குனர் பதவிக்கு எம்.பி.ஏ என்ற கல்வித் தகுதி முக்கியம். அதுபோல் இ°லாமிய இயக்க ஊழியன் ஒவ்வொருவரும் பொறுப்பு வகிப்பதற்கு முன்னால் “இத்தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டியை” கட்டாயம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ள ஊழியர்கள் இதிலு ள்ள ஒவ்வொரு தலைப்பையும் தனித்தனியே எடுத்து ஆய்வு செய்து கலந்துரையாடல் நடத்தி திறனையும்அறிவையும் மேம்படுத்திட வேண்டும். இது ஒரு மிகச் சிறந்த பாடப் புத்தகம். இதனை வெளியிட்ட பதிப்பாசிரியருக்கும், சிறந்த முறையில் எளிமையாக மொழி பெயர்த்த ஆசிரியர் அவர்களுக் கும் இதன் மூல ஆசிரியர் மற்றும் இந்நூல் வெளிவரக் காரண மாய் அமைந்த அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்பேறுகளை வழங்கிடுவானாக. ஆமீன்!

நன்றி: விடியல் வெள்ளி (சென்னை)
மார்ச் 2008

காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டயப் படிப்பு சேர்க்கை

காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டயப் படிப்பு சேர்க்கை


மதுரை, ஆக. 13: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் மூலம் காந்தியச் சிந்தனை சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து அருங்காட்சியகச் செயலர் இரா.ரெங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2008-09-ம் ஆண்டுக்கான காந்தியச் சிந்தனைச் சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கும், யோகா, தியான மற்றும் முழுமை நலவாழ்வு பட்டய மற்றும் உயர் பட்டயப் படிப்புக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது (மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

காந்தியச் சிந்தனை- சான்றிதழ் படிப்பு, காந்தியச் சிந்தனை- பட்டயப் படிப்பு, யோகா, தியானம் மற்றும் முழுமை நலவாழ்வு- பட்டயப் படிப்பு மற்றும் உயர் பட்டயப் படிப்பு.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அல்லது 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும், டிகிரி படிப்பு முடித்தோர் உயர் பட்டயப் படிப்புக்கும் ஆக.25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பேராசிரியர் எஸ்.ஜெயராஜ், காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனம், காந்தி மியூசியம்-625 020 (தொலைபேசி எண்: 9442405759, 9976888960).

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம்.
-ஆசிரியர், மக்கள் உரிமை வார இதழ், சென்னை.


குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறை யாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர் களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டி லேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.

சிராஜுத் தௌலா

17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர் கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத் தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

மருதநாயகம்

பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத் தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத் துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர் களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கிய தையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.

திப்பு சுல்தான்
'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தி யாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.

ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர் களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கி லேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.

திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட னர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806லிஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார் கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.

இரண்டாம் பகதூர்ஷா
1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

ஜான்சி ராணி லெட்சுமிபாய்
ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங் களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டை யைக் கைப்பற்றி னார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவரா வார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவ ராவார்.

முதல் இந்திய இடைக்கால அரசு

1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கி லேயப் படையை முஸ்லிம்கள் தோற் கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியா வுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல் லாஹ், உள்துறை அமைச்ச ராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்ருதீன் தையாப்ஜி

இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்லிஉன்லிநபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

காங்கிரஸில் முஸ்லிம்கள்

காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல் லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915லில்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந் தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்கள்

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.



அலி சகோதரர்கள்

கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.

பகத்சிங்

மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர் கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

மதரஸாக்களின் சுதந்திர வேட்கை

சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி னர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக் களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.

முஸ்லிம் வள்ளல்கள்

இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்

காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.

ஜாலியன் வாலாபாக்

இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கி லேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக் களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.

வள்ளல் ஜமால் முஹம்மது

காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத் திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.

காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

கேரள மாப்பிள்ளைமார்கள்

1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.


தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்