இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)
Posted by: முஃப்தி on Sunday, February 8th, 2009
தமிழ்மணம் பரிந்துரை : 0/0
http://www.nwebsupport.com/?p=118
Pathivu Toolbar ©2009thamizmanam.com
இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இரண்டு மட்டுமே.
உதா: image shadow
மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட html பக்கம் அதற்குரிய துணைக் கோப்புகளுடன் இங்கு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியிலேயே சோதித்துப் பார்க்கலாம்.
தனிப்பட்ட html பக்கங்களை பயன்படுத்துகின்றவர்கள் மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட இம்முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேர்ட்பிரஸ்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் Theme-ல் “img” என்ற மூன்றெழுத்து folder-ஐ உருவாக்கி அதில் shadow.gif என்ற கோப்பினை பதிவேற்றுங்கள்.
உங்களின் theme sytlesheet மாதிரியை முழுவதுமாக backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழ்கண்ட வரிகளை sytlesheet-ல் சேர்க்கவேண்டும்.
img
{
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
படங்களுக்காக இதனை ஒத்த வேறு ஏதேனும் css code (உதா: img { } ) உங்கள் stylesheet-ல் எழுதப்பட்டிருந்தால் அதனை மட்டும் கண்டுப்பிடித்து நீக்கி சோதித்துப் பார்க்கவும்.
பிளாக்கர்:
பிளாக்கர் டெம்ளேட்டுகளில் அதிகமானவை ஏதாவதொரு image decor code-களை உள்ளடக்கியிருக்கம். அத்தகைய Code-களை நீக்காவிட்டால் இதனை சோதித்துப்பார்க்க இயலாது. எனவே ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் பிளாக்கரில் இதனை சோதித்துப் பார்க்கவும்.
Layout பகுதிக் சென்று Edit HTML கிளிக் செய்து Download Full Template என்பதை சொடுக்கி Backup ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, கீழ்கண்ட வரிகளை Template-ன் Head பகுதியில் stylesheet code-களை குறிக்கக்கூடிய பகுதியில் சேர்க்க வேண்டும்.
img
{
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
குறிப்பு: பொதுவாக stylesheet-ல் ஏற்பட்ட மாற்றங்கள், தளத்தில் உடனடியாக தெரிவிதில்லை. எனவே refresh செய்து பார்க்கவும்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts
Sunday, February 8, 2009
Wednesday, September 24, 2008
செல்ஃபோனில் படம் பிடித்த விவகாரம்: கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைதாகிறார்கள்
செல்ஃபோனில் படம் பிடித்த விவகாரம்: கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைதாகிறார்கள்
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080924132856&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/25/2008&dName=No+Title&Dist=0
கடலூர் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்த மாணவி ஷகநாச்பேகம்,
அவரது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்.
கடலூர், செப். 24: மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து துன்புறுத்திய கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைது செய்யப்படுவார்கள் என்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் இடையே எழுந்த பிரச்னைகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியைகளின் தூண்டுதல் காரணமாகவே, மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை பி.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஷகநாச்பேகம், வகுப்புக்குச் சென்று இருந்தார்.
பாடம் நடத்த வராத ஆசிரியைகள் அவரை, பல கோணத்தில் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
புதன்கிழமை அந்த மாணவி தனது பெற்றோருடன் வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:
கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள பிரச்னை, ஆசிரியைகளுக்கும் முதல்வருக்கும் இடையேயானது. இது மாணவிகள் பிரச்னை அல்ல. இப்பிரச்னைக்குக் கல்லூரி நிர்வாகம்தான் தீர்வு காணவேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கூட்டி இருந்த கூட்டத்துக்கு வந்த பெற்றோரை, ஆசிரியைகள் மிரட்டி இருக்கிறார்கள். திங்கள்கிழமை கோட்டாட்சியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள்.
ஆனால் அவர் இது குறித்துக் காவல்துறையில் புகார் செய்ய வில்லை. வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச் பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து ஆபாசமாகத் திட்டி இருக்கிறார்கள்.
செல்ஃபோன் படங்களை தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி, கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள, கடலூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
ஏற்கெனவே சாலை மறியலுக்கு மாணவிகளைத் தூண்டியது தொடர்பான வழக்கைக் கைவிடவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். கல்லூரி வளாகத்துக்குள் வெளியாட்கள் நுழைவது குற்றம். விழாக்கள் எதுவும் இல்லாதபோது, முன்னாள் மாணவிகள் வருவதும் குற்றமாகும். போலீஸôரையும் செய்தியாளர்களையும் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது, என் தகவலுக்கு வந்துள்ளது. அச்சகத்தின் பெயர், அச்சிட்டோர் பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது. அவ்வாறு போஸ்டர் வெளியானால் அச்சகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
கல்லூரி பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் எஸ்.பி.
முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச்பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தியதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவை புதன்கிழமை அறிவித்து உள்ளன.
ஷகநாச்பேகம் தனது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு அளித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் முகமுது கமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது முஸ்தபா ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.
இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
மாணவியைக் கல்லூரி ஆசிரியர்களே செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டிய சம்பவம் மோசமானது. வேறு எங்கும் நிகழாதது. இது ""சைஃபர் கிரைம்'' பிரிவில் வரும்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்து, போலீஸôர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
ஷகநாச்பேகம் மன உளைச்சலில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். மாணவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள்தான் பொறுப்பு.
இது குறித்து மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியைகளை அழைத்துப் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரி முதல்வர் ஆர்.வள்ளி, புதன்கிழமை விடுமுறையில் சென்றுள்ளார்.
எத்தனை நாள் விடுமுறை என்று தெரியவில்லை. பொறுப்பு முதல்வராக ரமாமணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதன்கிழமை மாணவிகள் கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080924132856&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/25/2008&dName=No+Title&Dist=0
கடலூர் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்த மாணவி ஷகநாச்பேகம்,
அவரது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்.
கடலூர், செப். 24: மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து துன்புறுத்திய கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைது செய்யப்படுவார்கள் என்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் இடையே எழுந்த பிரச்னைகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியைகளின் தூண்டுதல் காரணமாகவே, மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை பி.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஷகநாச்பேகம், வகுப்புக்குச் சென்று இருந்தார்.
பாடம் நடத்த வராத ஆசிரியைகள் அவரை, பல கோணத்தில் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
புதன்கிழமை அந்த மாணவி தனது பெற்றோருடன் வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:
கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள பிரச்னை, ஆசிரியைகளுக்கும் முதல்வருக்கும் இடையேயானது. இது மாணவிகள் பிரச்னை அல்ல. இப்பிரச்னைக்குக் கல்லூரி நிர்வாகம்தான் தீர்வு காணவேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கூட்டி இருந்த கூட்டத்துக்கு வந்த பெற்றோரை, ஆசிரியைகள் மிரட்டி இருக்கிறார்கள். திங்கள்கிழமை கோட்டாட்சியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள்.
ஆனால் அவர் இது குறித்துக் காவல்துறையில் புகார் செய்ய வில்லை. வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச் பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து ஆபாசமாகத் திட்டி இருக்கிறார்கள்.
செல்ஃபோன் படங்களை தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி, கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள, கடலூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
ஏற்கெனவே சாலை மறியலுக்கு மாணவிகளைத் தூண்டியது தொடர்பான வழக்கைக் கைவிடவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். கல்லூரி வளாகத்துக்குள் வெளியாட்கள் நுழைவது குற்றம். விழாக்கள் எதுவும் இல்லாதபோது, முன்னாள் மாணவிகள் வருவதும் குற்றமாகும். போலீஸôரையும் செய்தியாளர்களையும் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது, என் தகவலுக்கு வந்துள்ளது. அச்சகத்தின் பெயர், அச்சிட்டோர் பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது. அவ்வாறு போஸ்டர் வெளியானால் அச்சகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
கல்லூரி பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் எஸ்.பி.
முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச்பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தியதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவை புதன்கிழமை அறிவித்து உள்ளன.
ஷகநாச்பேகம் தனது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு அளித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் முகமுது கமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது முஸ்தபா ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.
இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
மாணவியைக் கல்லூரி ஆசிரியர்களே செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டிய சம்பவம் மோசமானது. வேறு எங்கும் நிகழாதது. இது ""சைஃபர் கிரைம்'' பிரிவில் வரும்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்து, போலீஸôர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
ஷகநாச்பேகம் மன உளைச்சலில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். மாணவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள்தான் பொறுப்பு.
இது குறித்து மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியைகளை அழைத்துப் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரி முதல்வர் ஆர்.வள்ளி, புதன்கிழமை விடுமுறையில் சென்றுள்ளார்.
எத்தனை நாள் விடுமுறை என்று தெரியவில்லை. பொறுப்பு முதல்வராக ரமாமணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதன்கிழமை மாணவிகள் கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.
Tuesday, August 26, 2008
அழகான படங்கள் எடுக்க............
அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன்.
http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_04.html
நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள்.
சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப காலங்களில், 10 எடுத்தா 1 படம் தான் சரியா வரும். As you build your experience in framing, your ratio of good hits will increase.
(framing, viewfinder, இதுக்கெல்லாம் தமிழ்ல என்னங்க சொல்லணும்?).
சூ 2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.
Flower modeல (நண்பனின்) Nikon D80 கேமரால எடுத்தது. Adobe Photoshop வச்சு கொஞ்சமா டச்சிங் பண்ணிருக்கேன். Flower Mode உபயோகித்ததால், பூக்கள் அழகா focus ஆகி, பின்னால் இருக்கும், இலைகள் out of focusல் தெரிவதை கவனியுங்கள். போடோக்கு ஒரு அழக கொடுக்குது இல்லியா? (என்னது? இல்லையா?:))
சூ 3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாயிண்ட், சூ1 க்கு சற்று முரணானது மாதிரி தெரியும். இருந்தாலும், இங்க என்ன சொல்றோம்னா, சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.
குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.
சூ 4- ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.
இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்.
சூ 5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.
சூ 6. நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.
சூ 7. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
சூ 8. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.
சூ 9. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.
சூ 10. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.
யாராவது ஒருத்தர், இந்த பத்து பாயிண்ட வச்சு படம் புடிச்சு, தப்பா செஞ்சா எப்படி வரும், ரைட்டா செஞ்சா எப்படி வரும்னு விலாவாரியா பதியுங்களேன்? நானும் முயற்ச்சி பண்றேன்.
படங்காட்டுங்க!
http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_04.html
நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள்.
சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப காலங்களில், 10 எடுத்தா 1 படம் தான் சரியா வரும். As you build your experience in framing, your ratio of good hits will increase.
(framing, viewfinder, இதுக்கெல்லாம் தமிழ்ல என்னங்க சொல்லணும்?).
சூ 2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.
Flower modeல (நண்பனின்) Nikon D80 கேமரால எடுத்தது. Adobe Photoshop வச்சு கொஞ்சமா டச்சிங் பண்ணிருக்கேன். Flower Mode உபயோகித்ததால், பூக்கள் அழகா focus ஆகி, பின்னால் இருக்கும், இலைகள் out of focusல் தெரிவதை கவனியுங்கள். போடோக்கு ஒரு அழக கொடுக்குது இல்லியா? (என்னது? இல்லையா?:))
சூ 3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாயிண்ட், சூ1 க்கு சற்று முரணானது மாதிரி தெரியும். இருந்தாலும், இங்க என்ன சொல்றோம்னா, சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.
குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.
சூ 4- ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.
இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்.
சூ 5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.
சூ 6. நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.
சூ 7. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
சூ 8. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.
சூ 9. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.
சூ 10. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.
யாராவது ஒருத்தர், இந்த பத்து பாயிண்ட வச்சு படம் புடிச்சு, தப்பா செஞ்சா எப்படி வரும், ரைட்டா செஞ்சா எப்படி வரும்னு விலாவாரியா பதியுங்களேன்? நானும் முயற்ச்சி பண்றேன்.
படங்காட்டுங்க!
Subscribe to:
Posts (Atom)