Monday, April 19, 2010

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

முகம்

முகம் திங்கள் என்றனர் எதனால்?

அகம் என்னும் ஞாயிற்றின் பிரதிபிம்பம் அதனால்...

இல்லத்தின் முகம்
இனிய மனைவியே ஆகும்

குடும்பத்தின் முகம்
கணவரே ஆகும்

உடுத்தும் உடையே தான்
உங்கள் செல்வத்தின் முகம்

கவிஞனின் முகம் பார்க்கும்

கண்ணாடி மற்ற கவிஞனாகும்

குழந்தை தான் ஒப்பற்ற
கவிதை முகம்;

படைத்தவன் என்னும் கவிமுகம்
இங்கேதான் அறிமுகம்..........!!!

"கவியன்பன்" கலாம்

மனசே... மனசே..! களத்தூரான்

மனசே... மனசே..! களத்தூரான்

எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

நல்லெண்ணங்கள் கொண்ட மனிதனை நல்லவனென்றும, தீய எண்ணங்கள் கொண்ட மனிதனை கெட்டவனென்றும், அவன் வாழும் காலத்திலும் சரி.. இறந்த பின்னரும் கூட சுலபமா சொல்லிடறோம். முத்திரையே பதிச்சுடறோம்!

ஒருவன் எவ்வளவுதான் நல்லவன்னு சொன்னாலும், நல்லவனாவே இருந்தாலும், (சில நேரம் அவனே உணராமல்) அவனுக்குள்ளே ஒரு மிருகம் உறுமிட்டுதான் இருக்கு. அந்த மிருகத்தை நம்மிலிருந்து விரட்டனும்! என்ன களத்தூரான்... என்னமோ மிருகம், சிங்கம், புலின்னு ஏதேதோ கதை சொல்ற மாதிரி தெரியுதுன்னுதானே கேட்கறீங்க...!

சரி... நாயகன் படத்துல கமலஹாசன்கிட்ட ஒரு குழந்தை கேற்குமே... ‘நீங்க நல்லவரா... இல்ல கெட்டவரா?’ன்னு, அதைப் போல உங்ககிட்ட ஒரு கேள்வி..! ‘நீங்க இளகிய மனம் படைத்தவரா... இல்ல கர்ண கொடூரமான மனசு உள்ளவரா?’ (படத்துல கமலஹாசன் திக்கித்தினறி மழுப்பற மாதிரி இல்லாம) உடனே உங்களிடமிருந்து பதில் வரும்... எனக்கு இளகிய மனசுதான்னு! நீங்க மட்டுமில்லைங்க... திருடன், கொள்ளைக்காரன், கொலை பன்றவன் கூட யோசிக்காம உடனே சொல்லுற பதில் இதுவாத்தான் இருக்கும். அதற்காக... அவனுங்களோட சேர்த்து என்னையும் ஒப்பிடறியான்னு.. என் மேல நீங்க கோபப்படுவது எனக்கு புரியுது! நான் உங்களை அப்படி சொல்வேனா?

சரி... உங்க மனச, உங்க எண்ணங்களை நீங்களே சுயபரிசோதனை செஞ்சிப் பாருங்க..! என் மனசப்பத்தி எனக்கு தெரியாதா? இதுல சுயபரிசோதனை என்ன வேண்டிக் கிடக்குன்னுதானே கேட்கறீங்க? ஒரு சின்ன முயற்சி... பன்னித்தான் பாருங்களேன்!

அதாவது... நீங்க ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு, ஓய்வு நேரத்துல தொலைக்காட்சி பார்த்திட்டுருக்கீங்க... அப்ப விளம்பர இடைவேளை வருது... அதில் “இன்று இரவு எட்டு மணிக்கு... (சன்) செய்திகளில்... (ஏதோ ஒரு ஊரைக் குறிப்பிட்டு) பள்ளி பேருந்து காத்து சாலையோரம் நின்றிருந்த பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில்... 12 மாணவவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. (நவூதுபில்லாஹ் அல்லா காப்பாத்தனும்) தத்ரூபமாக பதிவான நேரடி காட்சிகளை காணத்தவராதீர்கள். தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்கள் இதைக் காண வேண்டாம்” இப்படி ஒரு அறிவிப்பு வருது... இப்ப உங்க நிலை என்னவா இருக்கும்?

நீங்க எப்படியோ... ஆனால், பெரும்பாலானவர்கள் நிலை... கண்டிப்பாக ஆர்வத்துடன் செய்தி வரப்போகும் நேரத்தை எதிர் பார்ப்பதாய்தான் இருக்கும். இளகிய மனம்படைத்தவர்கள் காண வேண்டாம்னு சொன்னாத்தான் ஆர்வம் கூடும். அப்ப இந்த மனித சமூகம் எங்கே, எதை நோக்கி போயிட்டுருக்கு...! மனிதனுக்கு ஏன் இந்த குரூர எண்ணம். பலரின் செல் போன்களில்... பிரேத பரிசோதனை(மனித உடலை கிழித்து கூறுபோடுதல்)யின் வீடியோ கிளிப், மிருகங்கள் மனிதனை கடித்து குதறுவதன் வீடியோ கிளிப் இப்படி குரூரமான, கொடூரமான காட்சிகளின் வீடியோ கிளிப்களை குழந்தகள்கூட செல் போன்களில் வைத்திருப்பதை காண முடிகிறது. ஏன்... இராக் முன்னால் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட துயர சம்பவம் நாமெல்லாம் அறிந்ததே! தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களிலெல்லாம் கூட, சதாம் தூக்கு மேடைவரை கொண்டுவரப்பட்ட காட்சிகளே இடம் பெற்றன. அதுவரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட காட்சியும் கூட. ஆனால்... எத்தனையோ பேரின் செல்போன்களில், சதாம் தூக்கிலிடப்படும் காட்சியும், அவரின் மரண அவசஸ்தையும் வீடியோ கிளிப்பாய் இருந்தன. இவை யாவும்... மனிதனுக்குள்ளே மிருக குணம் ஒளிந்திருப்பதாய்தானே காட்டுகிறது.

மனிதனின்... எண்ண ஓட்டங்களையும், விபரீத எதிர்பார்ப்புகளையும் முழுதாய் அறிந்ததினாலேயே, மீடியாக்களும் கூட இதுப்போன்ற அசம்பாவித நிகழ்வுகளையும், கோரச்சம்பவங்களையும் திரும்ப திரும்ப ஒளிப் பரப்புறானுங்க! இந்த நிலைக்கு என்ன காரணம். ’ஓடி வர்ற நரி.. கிழக்குமா போனா என்ன மேற்குமா போனா என்ன. நம்ம கடிக்காம போனா சரி.’ அப்படித்தானே?

இந்த நிலை மாறனும்க.. அல்லது மாற்றனும்! நல்ல சிந்திச்சு பாருங்க..!இப்படிப்பட்ட ஒரு சம்பவம், நம் குடும்பத்தினரில் யாருக்கோ, அல்லது நம் உறவினரில் யாருக்கேனும்... நடந்தா அதை பார்த்து நாம் ரசிப்போமா? நமக்கு உயிரே போனமாதிரி உள்ளம் துடிக்காது? அப்ப... நமக்கு துயரம்னா அது வேதனை. அதுவே வேறு யாருக்கோன்னா.. அது வேடிக்கையா?

இதற்கெல்லாம்... நவீன தொழில் நுற்பம்ங்கற பேருலயும்... நவ நாகரிகம்ங்கற பேருலயும், கண்ட கண்ட கழிசடை கலாசாரம் நம்மை தொற்றிக் கொண்டதே இதற்கு காரணம். பின்ன என்னாங்க...! குழந்தை பருவத்திலிருந்தே.. நாம் வன்மத்தை கண்டே... நமக்கே தெரியாமல் வன்மம் ஊட்டப்பட்டே.. வன்மம் ஊக்குவிக்கப் பட்டே வளர்கிறோம். அல்லது சமூகம் நம்மை வளர்த்து விடுகிறது. 90 சதவிகிதம் சினிமாவே இதற்கு காரணம். போதாக்குறைக்கு வீட்டு வரவேற்பறையிலேயே டிவி. இப்ப உள்ள தலைமுறைக்கு.. கேற்கவே வேண்டாம். முன்பு நாம சின்ன குழந்தயா இருந்தப்பல்லாம்... விளையாட்டுன்னு சொன்னா, கபடி, கிட்டி புல்லு, கிரிக்கட், புட் பால் இப்படி உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட விளையாட்டா இருந்திச்சு. ஆனால்... இப்ப வீடியோ கேம், கம்ப்யூடர் கேம் இப்படி நவீனம்கிற பேருல.. வன்மத்தை தூண்ட கூடிய விபரீத விளையாட்டுக்கள். வெட்டு, குத்து, ஒருத்தன் மேல ஒருத்தன் அம்பெறிவது, துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வீசுவது இப்படிப் பட்ட கேம்கள்தான் அதிகம். அதுவும் இந்த 'play station' கேம் இருக்கே... அது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. (கார்டூன் போல இல்லாம) ரியல் மனுசன போல உருவாக்கி வச்சுருக்கான். அந்த கேம்ல ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கும் போதும், ரத்தம் பீறிடும் போதும்... (அட சே.. கண்ட்றாவி) இளம் தலைமுறைகளை இல்லதாக்குவதற்காகவே, இதுபோல கேம் உருவாக்கப்படுகிறாதான்னு யோசிக்கவே தோனுது!

அன்பு, அறம், நீதி இப்படிப்பட்ட போதனைகளையோ... நல்லுபதேசங்களையோ, என்னைக்காவது நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கோமா? அதற்கெல்லாம் நமக்கேது நேரம்..! அப்படித்தானே!

எந்த ஒரு காரியத்தில் நாம் ஈடுபடும்போதும்... நம்மால இறைவனை பார்க்க முடியாட்டாலும்... இறைவன் நம்ம பார்திட்டிருக்கான்கிற எண்ணமும், இறையச்சமும் இருந்தா... நம் எண்ணங்களும் சீர்படும். நம்ம வாழ்க்கையும் அர்த்தமுள்ளதா மாறும். ஏன்னா... எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நல்லெண்ணங்கள் கொண்ட நன் மக்களாக நாமும், நம் தலைமுறைகளும் சிறக்க.. எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! (ஆமீன்).

சரி... உங்க சுயபரிசோதனையின் ரிசல்ட் என்னான்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லியே!
சரி அடுத்த பதிவில் சந்திப்போம்! வர்றட்டுங்களா?

‘களத்தூரான்”

பதக் மியான்

பதக் மியான்:

மறக்கடிக்கப்பட்ட தியாகி, 1917 இல் காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர்

பாட்னா:1917 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் இரு தலைவர்கள்- ஒருவர் மகாத்மா காந்தி மற்றொருவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இருவரும் பீகார் மாநிலத்தின் அன்றைய சம்பரன் மாவட்டத்தின் தலைநகராக விளங்கிய மோடிஹாரிக்கு செல்கின்றார்கள்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்களின் மோசமான நிலையை கண்டறிவதற்காக சென்றார்கள். அவர்களின் நிலையைக் கண்டு அதற்கு காரணமான பிரிட்டீஷ் அரசிற்கெதிரான போராட்டத்தை துவக்கினார்கள். இதுதான் பிரிட்டீஷாருக்கு எதிராக காந்தியடிகள் துவக்கிய முதல் போராட்டமாகும்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தின் மேலாளராக பொறுப்பு வகித்த வெள்ளைக்காரன் காந்தியை இரவு உணவுக்கு அழைக்கிறான். காரணம் காந்தி சாப்பிடப்போகும் உணவில் விஷம் கலக்கப்பட்டு அவரைக் கொல்வதுதான் அவனது நோக்கமாகும். அந்த பிரிட்டீஷ் மேலாளரான ஆங்கிலேயனிடம் சமையல்காரராக வேலைப்பார்த்தவர் பதக் மியான். அவரிடம் ஒரு கோப்பை பாலில் விஷம் கலந்து காந்திக்கு கொடுக்குமாறு கூறுகிறான்.ஆனால் பதக் மியானின் தேசப்பற்று இந்தக் கொடுஞ்செயலுக்கு இடம் தரவில்லை. அவர் கோப்பையை எடுத்துச்சென்று காந்தியிடம் விஷயத்தை கூறிவிடுகிறார். இதற்கு டாக்டர் ராஜேந்திரபிரசாத் நேரில் கண்ட சாட்சியாவார்.

இதன் மூலம் பதக் மியான் காந்தியின் உயிரை காப்பாற்றுகிறார். காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டதால் காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கி இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படுகிறார். ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னர் பதக் மியான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

பதக் மியான் காந்திஜிக்கு விஷம் கொடுக்காததால் பிரிட்டீஷ் மேலாளர் கடும் கோபம் அடைந்து பதக் மியானை சிறையிலடைத்து கடுமையாக சித்திரவதைச் செய்கிறார். அவருடைய வீடு சுடுகாடாக மாற்றப்பட்டது. பின்னர் அவரும் அவருடைய குடும்பமும் அவர் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டும் துரத்தப்பட்டனர். இந்திய தேசபிதாவின் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதர் மறக்கடிக்கப்பட்டார்.

ஆனால் காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சேவை தெரியாத நபர் இல்லை எனலாம். 1950 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திரபிரசாத் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது மோடிஹாரிக்கு சுற்றுப்பயணம் சென்றபொழுது பதக் மியானின் தன்னலமற்ற தியாகத்திற்காக 24 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளிக்க உத்தரவிட்டார்.

60 ஆண்டுகள் தாண்டிவிட்டன, இதுவரை மறைந்த ஜனாதிபதியின் உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மறக்கடிக்கப்பட்ட அந்தத்தியாகி 1957 ஆம் ஆண்டு மரணித்துவிட்டார். தற்பொழுது அவருடைய ஐந்து பேரர்களும் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள அக்வா பர்ஸாவ்னி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தனது அன்றாட வாழ்க்கைக்காக இடம் புலர்ந்து தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள்.ஏனெனில் இவர்களுக்கு கல்வியறிவு இல்லை. அவர்கள் அரசு அதிகாரிகளைச் சென்று பார்த்து முறையிட்டபொழுது அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணானதுதான் மிச்சம்.
சமீபத்தில் இந்தியாவின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் இவர்களின் பரிதாப நிலையை அறிந்து இந்தியாவின் முதல் ஜனாதிபதியால் அன்பளிப்பாகக் கொடுக்க உத்தரவிட்ட நிலம் அவர்களுக்கு கிடைக்க உறுதியளித்துள்ளார். இது காந்திஜியின் 62-வது நினைவுதினத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை பதக் மியான் குடும்பத்தின் மோசமான நிலையைப் பற்றி வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிறகு தான் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா சம்பரன் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பீகார் அரசு ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வரும் இவ்விஷயத்தில் அக்கறையோடு திர்ஹுட் டிவிசனல் கமிசனருக்கு பதக் மியானின் குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது காந்திஜியின் அடுத்த நினைவுதினம் வரை கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

source:twocircles

Green Tea Benefit

Green Tea Benefit 1: Green Tea Lowers the Risk of Cancer.

Many studies have shown that people who drink green tea have significantly lower risk of cancer. Green Tea polyphenols are potent antioxidants, especially in the brain. Some studies show that the polyphenols most prevalent in green tea, the catechins, are far more potent in suppressing free radicals than vitamins C or E.
The ability of green tea to prevent cancer is so well established that new studies are testing green tea as a potential cancer therapy. Green tea may be especially protective against lung cancer in former and current cigarette smokers.
Green tea has been shown to counteract both the initiation and promotion of carcinogenesis. Some studies have shown that green tea blocks the formation of certain tumors. If green tea's only benefit were to reduce the risk of cancer, it would be well worth taking as a beverage or supplement.
Green Tea Benefit 2: Green Tea Lowers Cholesterol and Thus, The Risk of Stroke and Heart Diseases.

Green Tea has been shown to lower LDL cholesterol and serum triglyceride levels. The potent antioxidant effects of green tea inhibit the oxidation of LDL cholesterol in the arteries. It plays a major contributory role in the formation of atherosclerosis.
The formation of blood clots, also known as thrombosis, is the leading cause of heart attack and stroke. Green Tea has been proven to exhibit abnormal blood clot formation as effectively as aspirin. When looking at coagulation risk factors in the blood, green tea specifically inhibits platelet aggregation and adhesion via effects that differ from those of aspirin.

Green Tea Benefit 3: Green Tea Lowers Blood Pressure.

Green Tea blocks the effects of angiotension- converting enzyme (ACE), an enzyme secreted by the kidneys, which is a significant cause of hypertension. By blocking the effects of ACE, blood pressure is reduced significantly, and with it, the risk of heart attacks and strokes.

Published studies have shown lowered blood pressure in animals and humans that are given green tea extracts. If you will be using green tea to treat hypertension, do so only under the supervision of a competent medical professional. Regular testing of your blood pressure is mandatory.

Green Tea Benefit 4: Green Tea Prevents Tooth Decay.

The formation of dental plaque, bacterial colonies that form on tooth surfaces causing tooth decay, has been shown to be inhibited by catechins. Tea has been shown to inhibit Streptococcus mutans, a major bacteria involved with decay. A reduction of the bacterial cell membrane fluidity, induced by the catechins, results in the antiplaque activity. Tea also has been shown to have a positive effect in fighting gum disease.

Green Tea Benefit 5: Green Tea Inhibits Viruses.

Green tea has been known to lower blood sugar levels. It can also kill certain bacterias and is effective against staph. Green tea inhibits several viruses including viral hepatitis. Green tea, via catechins and theaflavins and its gallates, have shown antibacterial properties.

Others have shown that catechins effectively kills almost every kind of bacteria which causes food poisoning. It also inactivates the toxins that are produced by those bacteria. At the same time, it enhances the growth of beneficial bacteria in the digestive tract. There is evidence that green tea also inhibits the flu virus. It has been proven by lab studies that green tea extract protects against many common degenerative diseases.