Showing posts with label வருந்துகிறோம். Show all posts
Showing posts with label வருந்துகிறோம். Show all posts

Wednesday, September 15, 2010

வருந்துகிறோம்....

வருந்துகிறோம்....

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின்
மாநிலத் துணைத் தலைவரும்,
தமிழ் நாடு முஸ்லிம் இயக்கங்களின்
கூட்டமைப்பின் தலைவருமான
அல்ஹாஜ் பி.எஸ்.எம்.செய்யிது அப்துல் காதிர்
அவர்களின் அருமைத் துணைவியார் இன்று
வபாத்தானார்களென்ற செய்தியை மிகுந்த
மன வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்....
(இன்னாலில்லாஹி வ இன்னா....)
அன்னாரது மறைவால் வாடும் அல்ஹாஜ்
பி.எஸ்.எம்.செய்யிது அப்துல் காதிர் அவர்களுக்கும்
அவர்களது குடும்பத்தாருக்கும் தமிழ் நாடு
முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பாகவும்
தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த வேதனையைத்
தெரிவித்துக் கொள்கிறோம். மார்க்கப் பற்று
மிகுந்தும், துணைவருக்கு இல்லற வாழ்விலும்
பொது வாழ்விலும் உறுதுணை புரிந்தும்,
விருந்தோம்பல் பண்பில் சிறந்தும்,
நற்பண்புகளால் மலர்ந்தும் வாழ்ந்த
அன்னையார் அவர்கள் இறையருளால்
மறுமை நல் சுவன வாழ்வு பெற்றிலங்கிட
இருகரமேந்தித் துஆ செய்கிறோம்...
சமுதாயப் பெருமக்கள் அனைவரும்
மறைந்த அன்னாருக்காகத் துஆ
செய்ய விழைகிறோம்...
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு.
(சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்)