Thursday, September 9, 2010

ஈகைத் திருநாள்!

ஈகைத் திருநாள்! *

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
கூறிடுமின்பத் திருநாளில்
உள்ளத்தின் குதூகலம் ஒருபுறத்தில்
இருந்துமோர் வருத்தம் உள்மனத்தில்

ஒருமாத காலம் நோன்பு நோற்று
உறவினரை நண்பரை வீட்டுக்கழைத்து
ஒன்றாயமர்ந்துண்டு நோன்பு திறந்து
ஐவேளை தொழுகை தவறாது செய்து
தறாவே தஹ்ஜூத் கூடுதலாய் சேய்து
ஓய்வு நேரத்தில் 'திருக்குரான்' வாசித்து
ஏழை எளியோர்க்கு அள்ளிக் கொடுத்து
தீயதைத் துறந்து நல்லவையே நினைத்து
அறிந்தோ அறியாமையிலோ செய்திட்ட
தவறுகட்கு மன்னிப்பு வேண்டி
இரண்டரை சதவீத மார்க்கவரி முறையாயீந்து
தேவையிலிருப்போர்க்கு உதவிகள் செய்து
பன்மடங்கு புண்ணியம் ஈட்டித்தரும் ரமலான்

இதற்குள் முடிந்ததில் வருத்தமே! எம் இறைவா!
இல்லாமையில்லா நிலைவேண்டும்! -எல்லோரும்
ஈருலக கல்வி பெற்றிட வேண்டும்!
தவறுகள் செய்யா மன உறுதி வேண்டும்!
செய்திட்ட தவறுகட்கு மன்னிப்பு வேண்டும்!
ஏற்றத் தாழ்விலா நிலை எல்லோர்க்கும் வேண்டும்!
பகைமை மறந்து நட்பு மலர வேண்டும்!
நோயிலும் துன்பத்திலுமுள்ளோர் துயர் நீங்கிடவேண்டும்!
பொறாமை பூசல்கள் அழிந்திட வேண்டும்!
ஈகைசெய்திடும் உள்ளம் என்றென்றும் வேண்டும்!
ஈயாருமீந்திடும் மனம் பெற்றிட வேண்டும்!
எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே! எம் இறைவா!
இவ்வினிய நேரத்தில் நீதான் அருள்புரிய வேண்டும்!
ஈத் முபாரக்!!

*- இமாம்.கவுஸ் மொய்தீன்.*

WISH YOU ALL A HAPPY EID-EL-FITR AL MUBARAK

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

ஈதென் வாழ்த்துகளே!

ஈதென் வாழ்த்துகளே!

மாதம் ஒன்று மலர்ந்ததுவே
மண்ணில் மனிதம் புலர்ந்ததுவே
வேத வெளிச்சம் படர்ந்திடவே
உள்ளம் தூய்மை அடைந்திடுமே!
நீத நெறிகள் துலங்கியதால்
நன்மை தீமை விளங்கியதே!
மீத வாழ்வும் ஒளிபெறவே
மீட்சி என்றும் இறையிடமே!

பொய்யும் புறமும் அற்றிருந்தோம்
பாவம் தொலைக்கக் கற்றிருந்தோம்
மெய்யின் மெய்யை அறிந்திட்டோம்
மேன்மை நோன்பைப் புரிந்திட்டோம்
செய்யும் செயலில் உள்ளெண்ணம்
சிறப்பாய் இறையைச் சார்ந்துவிடின்
உய்யும் வழியும் நமதாகும்
உணர வைத்தான் இறையவனே!

நோன்பை சரியாய் வைத்தோரே
நோக்கில் வெற்றி பெற்றோராம்.
தான்தான் என்னும் தன்னலனை
தவிடு செய்தோம் பசித்திருந்தே...
ஆன்ம பலத்தின் பயிற்சிக்கே
அழகுப் பரிசாய் பெருநாளே!
மாண்பு மிக்க வெற்றியிலே
மதிப்பாய் ஈதென் வாழ்த்துகளே!




--

H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

பணம்

பணம்
பணம் பற்றி உலக அறிஞர்கள் கூறுவது:
ஹென்றிக் இப்சன்
பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.
பணத்தால் தொடர்புகளைப் பெறலாம்; ஆனால் நண்பர்களைப் பெற முடியாது.
பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
பணத்தால் பலநாள் சந்தோஷத்தைப் பெறலாம்; ஆனால் அமைதியை, இன்பத்தை பெற முடியாது.
ஆண்ட்ரோ மாராயிஸ் – பணத்தையோ வெற்றியையோ பேராசையோடு தேடுவதால் துக்கம்தான் ஏற்படும். ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு வெளியே உள்ளவற்றைச் சார்ந்திருக்கச் செய்கிறது.
எட்வர்ட் பாக் – மனிதனால் உணவை உண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. பணத்தைச் சம்பாதிப்பது, அதன் மூலம் அதிகாரத்தைச் சேர்ப்பதால் வாழ்விற்கு பயனில்லை. வாழ்வு இவற்றை விட மேலானது. இந்த உண்மையை அறியாதவற்கள், அடுத்தவா்களுக்கு சேவை புரிவதால் கிடைக்கும் மாபெரும் சந்தோஷம், திருப்த்தியை அடையமாட்டார்கள்.
ஜார்ஜ் ஹோரேஸ் லாரிபர் – பணத்தையும் பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் பெற்றிருப்பது நல்லதுதான். ஆனால் அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்து பணத்தால் பெற முடியாதவற்றை நீங்கள் இழந்துவிடவில்லை என்று நிச்சயம் செய்து கொள்வதும் நலமே!!!

யாருக்குப் பெருநாள்?

யாருக்குப் பெருநாள்?

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்...
என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி - பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!


பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,
அலைபேசி: (+965) 66 64 14 34
மின்னஞ்சல்: abkaleel@gmail.com / abkaleel1@gmail.com / abkaleel@yahoo.com / khaleel_baaqavee@yahoo.co.in
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
கௌரவ தலைவர், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
இணை ஆசிரியர், K-TIc பிறை செய்தி மடல், குவைத்
ஆசிரியர் குழாம், www.mypno.com / www.k-tic.com
நிறுவனர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை (PIT)
வலைப்பூக்கள்: www.khaleel-baaqavee.blogspot.com / www.khaleelbaaqavee.blogspot.com / www.ulamaa-pno.blogspot.com / www.608502.blogspot.com / www.mypno.blogspot.com / www.lalpetexpress.blogspot.com / www.pinnaijaffar.blogspot.com / www.ppettai.blogspot.com / www.ulamaa-chidambaram.blogspot.com / www.aimaan-pno.blogspot.com / www.news-portonovo.blogspot.com / www.mammsm.blogspot.com / www.ismailpno.blogspot.com

இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்:ஷ‌வ்வால்

இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்:

ஷ‌வ்வால்

ஈதுல் ஃபித்ரு பெருநாள்

ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌ விப‌ர‌ம்:

இஸ்லாத்தில் ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு கார‌ணம்; 1.அல்லாஹுத்த‌ஆலா அடியானுக்கு இட்ட‌ க‌ட்ட‌ளையை ஏற்று, அவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்து அதை நிறைவேற்றிய‌ ம‌கிழ்ச்சியை அவ‌ன‌து தூத‌ர் காட்டிய‌ வ‌ழியில் வெளிப்ப‌டுத்துவ‌து. 2. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ளுக்கும், ஏழைக‌ளுக்கும், தேவையுடைய‌வ‌ர்க‌ளுக்கும் உத‌வி செய்து அவ‌ர்க‌ளையும் ம‌கிழ்ச்சிய‌டைய‌ச் செய்வ‌து.

அன‌ஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: அல்லாஹுடைய‌ தூத‌ர்(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் மதீனாவிற்கு (ஹிஜ்ர‌த் செய்து) வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் ம‌தீனாவாசிக‌ள்(அன்சாரிக‌ள்) இர‌ண்டு நாட்க‌ள் விளையாடிக் கொண்டிருந்தார்க‌ள். இவ்விரு நாட்க‌ளில் ஏன் விளையாடுகிறீர்க‌ள் என்று ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அறியாமைக்கால‌த்தில் இவ்விரு நாட்க‌ளில் விளையாடுவோம் என்று ப‌தில் கூறினார்க‌ள். அப்போது அண்ண‌ல் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்கள்: நிச்ச‌ய‌மாக‌ அல்லாஹ் இவ்விரு நாட்க‌ளை விட‌ சிறந்த‌ நாட்க‌ளை உங்களுக்கு ப‌க‌ர‌மாக்கி இருக்கின்றான். அதுதான் ஈதுல் அழ்ஹா, ஈதுல் ஃபித்ரு (ஆகிய‌ இரு பெருநாட்க‌ள்) ஆகும். (அஹ்ம‌த்‍‍ந‌ஸ‌யீஇப்னு ஹிப்பான்)

இத‌ன்ப‌டி, முத‌ல் ஈதுல் ஃபித்ரு பெருநாள் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு முத‌ல் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.
ஈதுல் ஃபித்ரு பெருநாள் தின‌த்தில் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ செய‌ல் பாடுக‌ள்:

1. குளிப்ப‌து

2. புதிய‌ ஆடைக‌ள் அணிந்து கொள்ளுத‌ல், அல்லது த‌ன்னிட‌ம் இருக்கும் ஆடைக‌ளில் சிற‌ந்த‌ ஆடையை அணிந்து கொள்ளுத‌ல்.

3. தொழுகைக்கு புறப்படும் முன் உணவு உண்டுகொள்ளுத‌ல். ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஈதுல் ஃபித்ரு பெருநாள‌ன்று தொழுகைக்குச் செல்லும் முன் ஒற்றைப்ப‌டையாக‌ பேரீத்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை சாப்பிட்டார்க‌ள் என்று அன‌ஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்.

4. ஜ‌க்காத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பே உறிய‌வ‌ர்க‌ளுக்கு கொடுத்து விடுத‌ல். இர‌ண்ட‌ரை கிலோ கோதுமை அல்ல‌து அரிசி போன்ற‌ தானிய‌மாக‌வோ, அல்ல‌து அத‌ன் கிர‌ய‌த்தையோ ஃபித்ராவாக‌ நிறைவேற்ற‌ வேண்டும்.

5. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ள் ஏழைக‌ளுக்கு உபகார‌ம் செய்த‌ல்.

6. தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வ‌ழியாகவும், திரும்பும்போது ம‌ற்றொரு வ‌ழியாக‌வும் வ‌‌ருத‌ல்.

7. பெருநாள‌ன்று ம‌கிழ்ச்சியை வெளிப்ப‌டுத்தும் வ‌கையில் விளையாட்டுக்க‌ளிலும் ஈடுப‌ட‌லாம்.

இத‌னால் க‌ட‌மையான‌ தொழுகையைவிட்டு விடாம‌லும், முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ள் ம‌ற்றும் சொத்துக்க‌ளுக்கு பாதிப்பு ஏற்ப‌டுத்தாத‌ வ‌கையிலும் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும்.


முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்

உஹ‌து யுத்த‌ம்:

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு, ஷ‌வ்வால் மாத‌ம் ஏழாம் நாள் ச‌னிக்கிழ‌மை நிக‌ழ்ந்த‌து. இப்போர் முஸ்லிம்க‌ளுக்கு க‌டும் சோத‌னையாக‌ அமைந்த‌து. இதில் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் சிறிய‌ த‌கப்ப‌னார் ஹ‌ம்ஜா(ர‌ழி) அவ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டு ஷ‌ஹீது (வீர‌ம‌ர‌ண‌ம்) அடைந்தார்க‌ள். மேலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் முன் ப‌ல் உடைக்க‌ப்ப‌ட்டு முக‌த்தில் காய‌ம் ஏற்ப‌ட்டு, வ‌ழிந்த‌ குருதியை துடைத்த‌வ‌ர்க‌ளாக‌...,

"அல்லாஹ்வின் தூத‌ராகிய‌ நான், ம‌க்க‌ளை அல்லாஹ்வின் ப‌க்க‌ம் அழைக்க‌ அவ‌ர்க‌ளோ என் முக‌த்தையும், முன் ப‌ல்லையும் உடைத்து விட‌ எவ்வாறு அவ‌ர்க‌ள் வெற்றிபெற முடியும்? என்று கூறினார்க‌ள்".

இப்போரில் க‌தாதா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்ட‌தால் விழி பிதுங்கி விட்ட‌து. ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அவ‌ர‌து க‌ண்ணில் த‌ன‌து கையை வைத்து துஆச் செய்தார்க‌ள். மீண்டும் ந‌ல்ல‌ கூர்மையான பார்வையை பெற்றுக் கொண்டார்.
அல்அஹ்ஜாப் யுத்தம்:

ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, ஷவ்வால் பிறை 5ஆம் நாள் இந்த யுத்தம் நடைபெற்றது. இதை “கன்தக் யுத்தம்” என்றும் சொல்லப்படும். இதற்கு முன் நடைபெற்ற பத்ரு, உஹது யுத்தங்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் மத்தியில் நடைபெற்று அவைகளில் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். இவற்றை கவனித்துக்கொண்டிருந்த யூதர்கள், முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மக்கத்து குரைஷிகள் உட்பட அரபு நாட்டின் அனைத்து கூட்டத்தினரையும் ஒன்று திரட்டி ஒரு பெரும் படையை தயார் செய்து வந்தனர். இதற்கு காரணகர்த்தாவாக இருந்தது, யூதர்களில் பனூ நழீர் கூட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் அவர்களில் ஒருவனான கஃப் இப்னு அஷ்ரஃப் இப்னு அக்தப் என்பவனும் ஆகும்.

இந்த விபரம் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவரவே, சஹாபாக்களுடன் ஆலோசனை செய்தார்கள். சல்மான் ஃபார்ஸி(ரழி) என்ற தோழர், தங்களது பாரஸீக நாட்டில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அகழ் தோண்டி போரிடும் முறையை கூறினார்கள். அதனை ஏற்ற நபி(ஸல்) அவர்கள், மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட கட்டளையிட்டு தாங்களும் அப்பணியில் ஈடுபட்டார்கள். இப்போர் முறையை புதிதாக பார்த்த யூதர்களையும், இணை வைப்போர்களையும்

அல்லாஹ் புறமுதுகிட்டு ஓடிடச் செய்தான். இப்போரைப்பற்றியே அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“நிராகரித்தோரை அவர்களின் கோபத்துடனேயே அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் எந்த நன்மையையும் அடையவில்லை. நம்பிக்கையாளர்களுக்காகப் போரிட அல்லாஹ்வே போதுமானவன். அல்லாஹ் வலிமைமிக்கவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாக இருக்கிறான்”. குர்ஆன் (33;25)

ஆயிஷா(ரழி) அவர்கள்:

நபித்துவத்தின் 11ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள். பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமிக்கவர்களாக இருந்தார்கள்.
உம்மு ஸலமா(ரழி) அவர்கள்:

ஹிஜ்ரி 4ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதக்கடைசியில் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள்.
பனூ கைனூகா கிளையினருடன் போர்:

நபி(ஸல்) அவர்கள் யூதர்களில் பனூ கைனூகா கூட்டத்தினருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அவ்வொப்பந்தத்தை அவர்கள் முறித்து, முஸ்லிம்களுடன் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்களுடன் போரிட நேர்ந்தது. இப்போர் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 15இல் தொடங்கி சுமார் 15 நாட்கள் நீடித்தது. இறுதியில் யூதர்கள் அனைவரும் சரணடைந்தனர்.

தாயிஃப் போர்:

ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ஹுனைன் யுத்தம் முடிந்தவுடன் தாயிஃப் கோட்டை முற்றுகை தொடங்கியது. இங்குள்ள ஸகீஃப் கூட்டத்தினருக்கு எதிராக பிரார்த்தனை செய்யுமாறு நபி(ஸல்) அவர்களிடம் சிலர் வேண்ட, அவர்களின் நேர்வழிக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள்:

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ அய்யூப்(ரழி) அறிவிக்கிறார்கள்: யார் ரமழான் மாத்தில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்புகள் வைக்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். (முஸ்லிம்)

தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்.
(0559764994)


--

எச்சரிக்கை : கழுத்தையும் நெரிக்கும் கசகசா

எச்சரிக்கை : கழுத்தையும் நெரிக்கும் கசகசா


பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!




'மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு


சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு? சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார். அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள். இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!'
- இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!
சென்னை செய்த எச்சரிக்கை!
முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.

நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.
சிக்கன், மட்டன், சிறை!
கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.
'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.
உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.
ஸ்டார் பார், குளிர்பான கிக்!
இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.
கசகசா ஏன் கதி கலக்குது?

உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.



ஜூனியர் விகடன்

Eid-ul-fitr

Eid-ul-fitr
The second meritorious aspect of Shawwal is that it has been chosen by Allah Almighty for the celebration of "Eid-ul-fitr", one of the only two annual festivals recognized by the Shari'ah. This happy day is designed by the Shari'ah as a sign of gratefulness by the Muslims on the accomplishment of Ramadan, and as an immediate reward by Allah for those who spent the month of Ramadan in fasting and performing other forms of 'ibadah.
Instead of commemorating an event from the past, the Shari'ah has prescribed the first of Shawwal as an annual festival for the Muslims at an occasion when they themselves accomplish a great 'ibadah. This approach reminds the Muslims that they should not rely only on the accomplishments of their ancestors, rather, they should themselves perform meritorious acts to please their Creator.
In prescribing the ways to celebrate the happy day, Islam has adopted another unique approach. The festivals of other religions or nations normally comprise of some acts of rejoicing and enjoyment. The whole happy day is normally spent in dancing, singing and playing.
In contrast, Islam has prescribed a simple yet graceful way to observe the happy day. First of all, it is mandatory on all the well-off Muslims to start their day by paying "Sadaqat-ul-fitr" to the poor of their society, so that they, too, may enjoy the day along with others, and may not be worried for earning their livelihood at least on that day of happiness.
After paying the "Sadaqat-ul-fitr", the Muslims are required to proceed to an open place where they can offer the Eid prayer collectively. In this way, they are supposed to present themselves before their Creator and offer two rak'ats of this special type of Salah, which makes them receive blessings from Allah and start their celebration by these divine blessings.
After the Salah also, they are supposed to rejoice the day in a responsible manner, without violating the limits prescribed for them and never indulging in the acts prohibited by Allah.
Keeping this point in view, we will now discuss specific rules prescribed for observing the day of Eid-ul-fitr.
Back to Top
The Night Preceding 'Eid-ul-Fitr'
It had been the practice of the Prophet, Sall-Allahu alayhi wa sallam, that he would not sleep in the night preceding the day of Eid-ul-fitr. This night has been named in a Hadith as the Night of Reward (Lailatul Jaiza). Almighty bestows his rewards on those who have spent the month of Ramadan abiding by the dictates of Shari'ah, and all their prayers in this night are accepted. Therefore, it is desirable to perform nafl prayers in this night. The Prophet, Sall-Allahu alayhi wa sallam, is reported to have said:
Whoever stands up (in worship) in the nights preceding the two Eids expecting rewards from his Lord, his heart will not die when the other hearts will die. (Ibn Majah)
To benefit from this opportunity, one should perform as much worship in this night as he can, and should pray for all his needs and desires.
Back to Top
Before Going to Eid Prayer
The following acts are prescribed as Sunnah at the beginning of the day of 'Eid-ul-Fitr before proceeding to the Eid prayer:
1. To wake up early in the morning.
2. To clean one's teeth with a Miswaak or a brush.
3. To take a bath.
4. To put on one's best available clothes.
5. To wear perfume.
6. To eat a sweet food, preferably dates, before the Eid prayer.
7. To recite the following Takbir in the low voice while going to the 'Eid prayer:
Allahu Akbar Allahu Akbar La Ilaha Ila Allah Wa Allahu Akbar Allahu Akbar Wa Lillahi Alhamd
Back to Top
Sadaqat-ul-fitr
Sadaqat-ul-fitr is an obligation for every Muslim, male or female, who owns 613.35 grams of silver or its equivalent, either in the form of money, ornaments, stock-in-trade, or in the form of some goods or commodities beyond one's normal needs. Every person who owns such an amount has to pay Sadaqat-ul-fitr, not only on behalf of himself but also on behalf of his minor children. The prescribed amount of Sadaqat-ul-fitr is 1.75 Kilograms of wheat or its value in money. This amount is prescribed for paying Sadaqat-ul-fitr for one person only. If a person has some minor children, the same amount has to be paid on behalf of each one of them separately. The following points must be remembered concerning the payment of Sadaqat-ul-fitr.
1. Sadaqat-ul-fitr is obligated on each adult male or female separately, and the relevant adult person himself is responsible to pay it. The husband is not required to pay Sadaqat-ul-fitr on behalf of his wife nor is the wife supposed to pay it on behalf of her husband. Similarly, a father is not bound to pay Sadaqat-ul-fitr on behalf of his adult children or vice-versa. However, if the head of the family, by his own free will, wishes to pay Sadaqat-ul-fitr for each one of the members of his family, he should seek their authorization for that purpose. In this case the Sadaqat-ul-fitr paid by him will be valid on their behalf. If he did not pay the Sadaqat-ul-fitr on behalf of any of the members of his family, he will not be responsible for it. Rather, it is the duty of every adult member of the family to discharge his own obligation or to request the head of the family to pay it on his or her behalf.
2. It is a Sunnah that the Sadaqat-ul-fitr is paid before performing the 'Eid prayer. It can also be paid before the 'Eid day, but it is not advisable to delay it up to the performance of'Eid prayer. However, if a person has failed to pay on its proper time, he should pay it as soon as possible, whereby the obligation will stand discharged.
3. The Sadaqat-ul-fitr is not necessary on behalf of a child who was born after the break of dawn in the 'Eid day, nor is it necessary to pay Sadaqat-ul-fitr on behalf of a person who dies before the dawn of the Eid day.
4. Sadaqat-ul-fitr should be paid only to a person who is entitled to receive Zakah.
Back to Top
The 'Eid Prayer
The second obligation on 'Eid day is to perform the 'Eid prayer. Some rules in this respect are mentioned hereunder:
1. The Eid prayer is Wajib (obligatory) on every male Muslim.
2. The Eid prayer can be performed any time between the Ishraq and Zawal.
3. It is preferable that the 'Eid prayer is performed at an open field and not in a mosque. However, if, it is difficult for any reason to perform it in an open field, it can also be performed in a big mosque.
4. It is not advisable to hold the 'Eid prayer in every mosque, rather it is preferable that the people from several small mosques get together to either perform it in an open field or, in its absence, in a big mosque which can accommodate a large number of people.
5. No Nafl Salah can be performed before the 'Eid prayer, neither in one's home, nor at the place of' Eid prayer. Similarly, Nafl prayer cannot be performed after the Eid prayer at the same place. However, it can be performed after one comes back to his home.
6. The Eid prayer has neither Adhan nor Iqamah.
Back to Top
How to Perform Eid Prayer
The Eid Prayer has two rak'ah to perform in the normal way, with the only addition of six takbirs, three of them in the beginning of the first rak'ah, and three of them just before ruku' in the second rak'ah. The detailed way of performing the 'Eid prayer is as follows:
The Imam will begin the prayer without Adhan or Iqamah. He will begin the prayer by reciting takbir of Tahrimah (Allahu Akbar). You should raise your hands up to the ears, and reciting the takbir, you give a little pause during which you should recite Thana' (Subhanak Allahumma.......)· After the completion of Thana' the Imam will recite takbir (Allahu Akbar) three times, and after reciting each Takbir (Allahu Akbar) in a low voice, you should bring your hands down and leave them earthwards. But, after the third takbir, you should set them at the level of your navel as you do in the normal prayer.
After these three takbirs the Imam will recite the Holy Qur'an, which you should listen quietly. The rest of the rak'ah will be performed in the normal way.
After rising for the second rak'ah, the Imam will begin the recitations from the Qur'an during which you should remain calm and quiet. When the Imam finishes his recitation, he will recite three takbirs once again, but this time it will be before bowing down for ruku'. At each takbir you should raise your hands up to the ears, and after saying "Allahu Akbar' bring them down and leave them earthwards. After these three takbirs have been called and completed, the Imam will say another takbir for bowing down into the ruku' position. At this takbir you need not raise your hands. You just bow down for your ruku' saying, 'Allahu Akbar'. The rest of the Salah will be performed in its usual way.
Back to Top
Khutbah: The Address of 'Eid-ul-fitr
In this Salah, Khutbah is a Sunnah and is delivered after the Salah, unlike the Salah of Jumu'ah where it is Fard and is delivered before the Salah. However, listening to the Khutbah of 'Eid Salah is wajib or necessary and must be heard in perfect peace and silence.
It is a sunnah that the Imam begins the first Khutba by reciting takbirs 'Allahu Akbar' nine times and the second Khutbah with reciting it seven times.
Note: The way of 'Eid prayer described above is according to the Hanafi school of Muslim jurists. Some other jurists, like Imam Shafi'i, have some other ways to perform it. They recite Takbir twelve times before beginning the recitations from the Holy Qur'an in both rak'ah. This way is also permissible. If the Imam, being of the Shafi'i school, follows this way, you can also follow him. Both ways are based on the practice of the Prophet, Sall-Allahu alayhi wa sallam.
Back to Top
Six Fasts in the Month of Shawwal
It is commendable to keep six fasts in the month of Shawwal. The Prophet, Sall-Allahu alayhi wa sallam, has said:
Whoever completes fasts of Ramadan then adds to them the fast of six days in the month of Shawwal, it will carry the thawab of fasting for the whole year. (Sahih Muslim)
This hadith had described the great thawab of six fasts of this month. Therefore, the Muslims should take this opportunity of acquiring such an enormous reward from Allah. It is more preferable to start these fasts from the 2nd of Shawwal and keep fasting up to the 7th of it. However, if, they are kept in other days, it is hoped that the requirement of the above hadith may also be fulfilled.

நோன்பென்னும் தேர்வெழுதி ........

நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!


“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
அபுதபி (இருப்பிடம்)

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி



திருச்சி.A.M.அப்துல் காதிர் ஹஸனி M.A.,





மகிழ்ச்சி பொங்குக

பெருநாள் காலை

அன்பு சகோதரனே



உன்னை பார்க்க

ரொம்பவே வியப்பு எனக்கு

ரமளான் முழுவதும்

உனக்குள்

அத்தனை மாற்றம்



ஃபஜர் தொழுகைக்கு

கூட எழாமல்

போர்த்திக்கொண்டு

உறங்கும் நீ

தஹஜ்ஜத் கூட

தவறவிட வில்லையே



சாப்பாடு

சற்று தாமதமானாலும்

கூப்பாடு போடும்

நீயா முப்பதுநாள்

நோன்பிருந்தாய்



நீ திருமறை ஒதி

நான் பார்த்ததில்லையே

பள்ளியிலேயே அமர்ந்து

ஒதிக்கொண்டிருந்தது

நீதானா



வறியோர் தேடிவந்தால்

ஆயிரம் கேள்வி

கேட்கும் நீயா

வாரி வழங்கினாய்



சிறிதாய்

சீண்டினாலும்

சீறிப்பாய்வாயே நீயா

சகிப்போடு

நடந்து கொண்டாய்;;;;;;;;;;;;;



திக்ரென்ன..

துஆவென்ன …

நம்பவே முடியவில்லை

என்னால்

இதுவெல்லாம்

நீதானா



எனக்கு தெரியும்..

யாரின் முகத்திற்காகவும்

இதை நீ

செய்யவில்லைஸ



அல்லாஹ்வின்

அருளை நாடி மட்டுமே

செய்தாய்

அவனின்

அன்பை தேடி மட்டுமே

செய்தாய்



மகத்தான

இரட்சகனின்

மன்னிப்பை

தேடிமட்டுமே

செய்தாய்





நன்கு மாறியிருக்கிறாய்

நல்ல நிலைக்கு

தேறியிருக்கிறாய்



அன்பு சகோதரனே

ஈமான்?

தொழுகை?

நோன்பு?

கொடை?

நல்லமல்கள்

இதுவெல்லாம்

ஒருமாதத்திற்கு

மட்டுமே உரியதல்ல



இறைவனுக்காக

எதையும்

செய்ய பழகுவற்குதான்

ரமளான்



ஒரு மாதத்தோடு

விலகுவதற்கல்ல



ரமளானில்

உன்னை பார்த்தது

போன்று

எல்லோரும் பார்க்க

வேண்டும்



பெருநாளோடு

முடியவில்லை

உனது கணக்கு



ரமளான்

நடத்திய பாடத்தை

வாழ்வில்

இனிபடிக்கத்

தொடங்கு

juharazi@gmail.com

Farewell Ramadan

Farewell Ramadan

Alhamdulillah! For the bountiful month of ‘Saum’
When we give up food, comfort and ‘naum’
Alhamdulillah! For helping us practice abstinence
And to learn the art of patience
We were all blessed this year by Allah’s grace
To strengthen our Iman and mend our ways

Kids as young as four
Defy thirst for 12 hours or more
Men and women, young and old
Learn to break the devil’s stranglehold
By keeping the impulses in check with a smile
Growing in piety and closeness to Allah meanwhile

But alas! All good things must come to an end
For the next month is round the bend
For another Ramadan with the family let’s pray
Till then to vice and weakness let’s not fall prey
And our Takwah should be strong and clear
For the rest of the year

Let us pray for those who could not
Reap the bounties of ‘Saum’. Who gathered naught
Of Allah’s blessings available in abundance
Available to those who practiced abstinence
May Allah accept our humble ‘ibaadah’
Our ‘tilawah’, ‘zakath’ and ‘sadakah’

So to Ramadan I bid a helpless farewell
With a hope that we all fared well
In this brief test that Allah put us through
Seeking an excuse to reward the simplest virtue
We cannot claim to be worthy of justice or just measure
We are blessed by Allah’s Grace and Pleasure

By
Mohamed Azam