Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, April 10, 2010

சென்னையில் டெஸ்டிங் டூல்ஸ் பழக

சென்னையில் டெஸ்டிங் டூல்ஸ் பழக



சென்னையில் Load Runner and QTP மற்றும் அனைத்து டெஸ்டிங் தொடர்பான செய்திகளையும் தெரிந்துகொள்ள பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது போன்ற டெஸ்டிங் கோர்ஸ் நடத்தும் நிறுவனங்களில் பொதுவாக நேரில் தான் சொல்லித்தருவார்கள்.

சென்னையில் ஒரு தமிழர் இது போன்ற டெஸ்டிங் கோர்ஸை முழுமையான ஆன்லைனிலேயே நடத்துகிறார். மொத்தம் 30 மணி நேரம் ஆன்லைனில் இந்த கோர்ஸை நடத்துகிறார். இதில் வசதி என்னவென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த டெஸ்டிங் கோர்ஸை பழகலாம்.

அவரை தொடர்புகொள்ள loadrunner.qtp@gmail.com

கோர்ஸ் மெட்டீரியல் என்ன என்று கேட்டு அதனை முழுமையாக பார்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டும் இணையுங்கள். ரெபரன்ஸ் 'செந்தழல் ரவி' என்று சொல்லவும்.

Thursday, March 11, 2010

மதிநாவில் சென்னை ரெஸ்டாரண்ட்

மதிநாவில் சென்னை ரெஸ்டாரண்ட்

சென்னை ரெஸ்டாரண்ட்
பிலால் மஸ்ஜித் பின்புறம்
குர்பான் ரோடு
மதிநா முனவ்வரா

அலைபேசி : 0500932681

Wednesday, January 6, 2010

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ ..............

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ ..............


சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் அழ‌கிய‌ வீட்டு ம‌னைக‌ள் விற்ப‌னைக்கு உள்ள‌ன‌.
வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ விரும்புவோர்

அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண்க‌ள்

அன்வ‌ர் 050 922 1202 / 050 894 6518 / ச‌ர்புதீன் 050 788 6919

Al Hira Real Estate & Builders
24 Baba Tower
Thennur High Road
Trichy 620 017
94435 58224
99445 50250
luckyhomeindia@gmail.com


site visit plz contact
Mr. Fasal (managing director)
9840332113
9976922786

Monday, July 6, 2009

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு
Sunday, 05 July 2009
சென்னை, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 9-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் நடத்துவது என இக்கழகத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுக் குழு தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுச் செயலாளர் கேப்டன் அமீர் அலி பொருளாளர் எஸ்.எம்.இதயத்துல்லா தலைமையில் நடந்தது. இலக்கிய கழகத்தின் மாநாட்டை வரும் டிசம்பரம் மாதம் சோழிங்கநல்லலூரில் உள்ள சதக் கல்லூரியில் நடத்துவது எனவும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய இஸ்லாமிய அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கான விரிவான சர்வதேச இலக்கிய கருத்தரங்க ஏற்பாடுகளை நிறைவற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Monday, May 25, 2009

பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்

பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் படிப்பை நிறுத்தினால், அதற்கேற்ப சான்றிதழ் வழங்கப்படும் என்பது சிறப்பம்சம்.

ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூறியது:

"பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நலன் கருதி சென்னை பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு இந்த வருடம் தொடங்கப்படவுள்ளது. எம்.ஏ. மானுடவியல், எம்.ஏ. நவீன மேம்பாட்டு (போஸ்ட் மாடர்ன் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேசன்) நிர்வாகம், எம்.ஏ. பிரெஞ்சு ஆகியவையும் எம்.எஸ்சி. வாழ்க்கை அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளன. இவற்றில் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதிகமானோர் விண்ணப்பித்தால் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
இந்த படிப்புகளில் மாணவர்கள் ஒரு வருடத்தில் நின்றால் சான்றிதழ், 2 வருடத்தில் நின்றால் டிப்ளமோ, 3 வருடத்தில் நின்றால் பட்டம், 4 வருடத்தில் நின்றால் முதுகலை டிப்ளமோ, 5 வருடம் படித்து தேர்ச்சி பெற்றால் முதுகலை பட்டம் வழங்கப்படும்.

இவற்றில் எம்.எஸ்சி. படிப்புக்கு மட்டும் அவ்வாறு சான்றிதழ் கிடையாது. 3 வருடம் படித்தால்தான் பட்டமும், 5 வருடம் முடித்தால் முதுகலைப்பட்டமும் கிடைக்கும். இதற்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ.4, 500 மட்டுமே," என்றார் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன்.

மேலும், "இந்தப் படிப்புகள் தவிர எம்.எஸ்சி. கடல் சார் அறிவியல் தொழில்நுட்பம் படிப்பும், எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகார கல்லூரிகளில் 250 படிப்புகள் உள்ளன. மாணவர்கள் அவர்களின் திறனுக்கு ஏற்ப சரியான பாடங்களை தேர்ந்து எடுத்து நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு உறுதி.

மாணவர்கள் நலன் கருதி கல்விக் கண்காட்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 23 மற்றும் 24 தேதிகளில் நடத்தப்படவுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

Friday, April 3, 2009

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்
ஹெச்.ஜி.ரசூல்
mylanchirazool@yahoo.co.in

கவிஞர் சோதுகுடியானின் ஏழைமுஸ்லிம்கள் களப்பணி ஆய்வுத் தொகுப்பு குறுநூல் தமிழகத்து அடித்தள முஸ்லிம்கள் குறித்த தரவுகளின் முக்கியதொரு ஆவணமாக விளங்குகிறது.
நகர்புற சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றிய அறியப்படாத உலகம் வாசகனை அதிர்ச்சியடையச் செய்கிறது.
ஆய்வின் முன்குறிப்பில் கவிஞர் சோதுகுடியான் சேரிமுஸ்லிம்கள் என தலைப்பிடுவதாக இருந்தபோது சில இஸ்லாமிய அறிவுஜீவிகளின் எதிர்ப்பால் ஏழை முஸ்லிம்கள் என தலைபிட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.இது முஸ்லிம் அறிவுஜீவிகளின் போதாமையையும்,திறந்த உரையாடலுக்கான சாத்தியங்களை மறுப்பதாகவும் அமைந்துவிடுகிறது.
முஸ்லிம்களின் வலியும் துயரமும் மிகுந்த வாழ்க்கையை கண்டுணர்ந்து சொல்வதற்கும் முஸ்லிம்முரசு மாத இதழில் தொடராக எழுதவும் துணிந்த சோதுகுடியான் அத் தொடரை தற்போது தொடராமல்நிறுத்தியிருப்பதுவருத்தத்திற்குரிய ஒன்றாகும்.


இன வரைவியல் ஆய்வுக்கு குறிப்பிட்ட பிரதேச மக்களின் அன்றாட சமூக நடத்தைகள்,வாழ்க்கைவட்டச் சடங்குகள்,முழுமையாக பதிவு செய்யப்படவேண்டும். எனவே ஏழைமுஸ்லிம்கள் நூலை ஒரு முஸ்லிம் இனவரைவியல் தொகுப்பாக கருதுவதைவிட நகர்புற சேரி முஸ்லிம்களின் தொழில் மற்றும் சமூக, பொருளாதார ,கல்விநிலை குறித்த விவரங்களை ஆவணப்படுத்துகிற கள ஆய்வியல் தொகுப்பு என மதிப்பிடலாம்.



நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஒடுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு
ஆதாரமாக முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையையே மையப்படுத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மரைக்காயர்,ராவுத்தர்,லெப்பை ,ஒசாக்கள் என அறியப்பட்ட முஸ்லிம்கள் தவிர்த்த இன்னொரு பரிமாணத்தை கவிஞர் சோதுகுடியான் வெளிப்படுத்துகிறார். முஸ்லிம் சமூகத்தின் வர்க்க உள்முரண்களை பேசிவிட்டார் என்று கூட சில அறிவுஜீவிகள் விமர்சிக்ககூடும்.. இஸ்லாத்தின் சமத்துவ பொருளியல் கோட்பாடு குறித்த அக்கறை இருக்கின்ற காரணத்தாலும் அடித்தள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கும் ,ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக்குமான ஆர்வத்தின் வெளிப்பாடாகவுமே கவிஞர் சோதுகுடியானின் விளிம்புநிலை முஸ்லிம்கள் குறித்த இந்த ஆவணத்தை குறிப்பிட வேண்டும்.


முஸ்லிம் பண்பாட்டு இயக்கங்கள் விரலாட்டுவதில் தொடங்கி மீடியாக்களில் ஊடக யுத்தம் செய்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியமான சூழல் நம்முன் உள்ளது. முஸ்லிம் அரசியல் இயக்க்கங்கள் ஓட்டு அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதற்கு மட்டுமே அதிகபட்சம் முயல்கின்றன. இச் சூழலில் இந்த அதிகாரங்களும் வகாபிய மசாயில் ஆர்ப்பாட்டங்களும் முற்றிலும் விளிம்பு நிலை முஸ்லிம்களுக்கானதாக நிகழவே இல்லை என்பதை அப்பட்டமாக இத் தொகுப்பை வாசிப்பதின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது


தமிழக அறிவுஜீவிகள் சேரிமுஸ்லிம்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில் இந்திய நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்கள் நிலைகுறித்து ஆய்வு நிறுவனங்களோ,அல்லது தனிநபர் கல்விப் புலம்சார்ந்தோ சில கள ஆய்வியல் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எம்.எச்.லக்டவாலா அடித்தள முஸ்லிம்கள் கடன் பெறும் நிதி நிறுவனங்கள் குறித்த ஆய்வில் சேரிவாழ் முஸ்லிம்கள் குறித்துப் பேசுகிறார்.இந்தியாவில் நகர்புற சேரிகளில் குடியிருப்போரில் மில்லியன் கணக்கீட்டில் மிக அதிகமாக மும்பையில் 5.8,டெல்லியில் 1.82,கல்கத்தாவில் 1.49 ,சென்னையில் 1.08 மில்லியன் மக்கள் வசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.இதனையே அவர் மொத்த சேரி மக்கள் தொகையில் சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்களை சதவிகிதப்படி விளக்கும் போது மும்பையில் 28.5,டெல்லியில் 18.8
சென்னையில் 18.3,கல்கத்தாவில் 12.7 சதவிகிதமாக உள்ளனர் என தெரிவிக்கின்றனர்.(த மில்லி கெசட்,16 - 30 செப் 2004)



ரிஸ்வி சையது ஹைதர் அப்பாஸ் உத்தரபிரதேசம் லக்னோவில் முஸ்லிம்சேரிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலை குறித்த ஆய்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்ட 6734 நகர்புற சேரிகளில் வசிக்கிண்றனர்.இதில் லக்னோவில் மட்டும் 639 சேரிகள் உள்ளன. மொத்த சேரி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 27.6சதவிகிதத்தினர் இங்கு வசிக்கின்றனர்.சேரிமுஸ்லிம்களின் வாழ்நிலை மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெற்று வறுமை கோட்டுக்கு கீழுள்ள நிலையில் இருப்பதையும்,பாலின விகிதம் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருப்பதையும் இன்னும் பெண்சிசுமரணம்.ஆரம்பக் கல்விஉள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் அவற்றிற்கான மாற்று என இவ்வாய்வு முன்வைக்கப்படுகிறது.(த மில்லி கெசட் அக்டோபர் 2004)


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முஸ்லிம் சேரிவாழ் பெண்கள் குறித்து பி.வி.எல்.ரமணா கள ஆய்வொன்றை நிகழ்த்தி நூலாக வெளியிட்டுள்ளார்.சேரிகளில் உழைக்கும் முஸ்லிம் பெண்களின் கல்விநிலை,குழந்தைப் பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகள்,சேரியில் வளரும் பெண்களின் நிலைபாடு உள்ளிட்ட பகுதிகள் சார்ந்து இந்த ஆய்வு இயங்குகிறது.சேரி வாழ்வின் பொருளாதார நிலை, பெளதீக அடிப்படைவசதிகளின் கட்டுமானம் என்பதான எல்லைகளைத் தாண்டி சேரிப்பெண்களின்மீதான பாலின பாகுபாடும் ஒடுக்குமுறையும் சேரிப் பெண்களிடத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இந்த ஆய்வு கவனப்படுத்துவது குறிப்பிடத்தக்கது


கவிஞர் சோதுகுடியான் நகர்புற சேரி முஸ்லிம் கள ஆய்வுக்கு தேர்வு செய்த சென்னை பெருநகர் பகுதிக்குள் அமைந்த திருவல்லிக்கேணி நீலம்பாதுஷாதர்கா, சிட்டிசென்டர் எதிரில் அமைந்த இஸ்மாயில் கிரவுண்டு,மயிலாப்பூர் பாஷாதோட்டம். ஐஸ்ஹவுஸ் அத்திக்குண்டா,வண்ணாரப் பேட்டை லாலாகுண்டா,புரசைவாக்கம் புளியந்தோப்பு,அருகம்பாக்கம் ஆசாத்நகர்,கிருஷ்ணாம்பேட்டை குத்ரத் அலி மக்கான், வியாசர்பாடி பி.வி.காலனி, என ஒன்பது பகுதிகளாகும்.மேலும் சென்னை புறநகர் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை,பூந்தமல்லி பட்டூர்,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ராமராஜபுரம் பேரூராட்சி பகுதிகளுமாகும்


ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இச் சேரிகளில் வாழும் முஸ்லிம்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 48,000க்கும்மேல் உள்ளது. இரண்டாயிரமும் அதற்கு கீழிலான மக்கள்தொகையை நீலம்பாஷாதர்கா ,பாஷாதோட்டம், அத்திக்குண்டா ,கிருஷ்ணாம்பேட்டை,ராமராஜபுரம் பகுதிகளைக் கொண்டுள்ளன. அதிகபட்சமாக எட்டாயிரமும் அத்ற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளாக லாலாகுண்டா,புளியந்தொப்பு பகுதிகள் அமைந்துள்ளன.
.
பொதுவான இந்த சேரிகளின் அமைவிடம், முஸ்லிம்கள் உடல் அடக்கம் செய்வதற்கு பயன்பட்ட மையவாடிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக ஆற்காடு நவாபால் வழங்கப்பட்ட 44 கிரவுண்டு மனையில்தான் நீலம்பாதுஷா தர்கா சேரிப்பகுதி அமைந்துள்ளது.ஹாஜி இஸ்மாயில் வக்ப் செய்தது இஸ்மாயில் கிரவுண்டு பகுதி குடியிருப்பாகியுள்ளது.இவ்வாறு வக்ப் செய்யப்பட்ட நிலங்கள் அரசாலும் தனிநபர்களாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் இத்தோடு கவனிக்க வேண்டியுள்ளது.இஸ்மாயில் கிரவுண்ட்டில் ஐந்தேகால் கிரவுண்டு நிலம் வீட்டுவசதிவாரியத்தால் பறிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். ஒரு கிரவுண்டு நிலம் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டரை கோடிவரை மதிப்பீடு கொண்டுள்ளதையும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் 100 - 400 சதுர அடியில் சிறு கட்டிட அமைப்பைக் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு,தார்சீட்டு கவுத்திய வீடுகளாகவே பெருமளவில் உள்ளன. ஆய்வாளர் இவ் வீடுகளை ஓரிடத்தில் புறாகூண்டுகள் எனவும் மற்றொரு இடத்தில் எலிப்பொந்துகள் எனவும் குறிப்பிடும் போது அம்மக்களின் இருப்பிட நெருக்கடியை மிக எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது


கிருஷ்ணாம்பேட்டை குத்ரதலி மக்கான் முஸ்லிம் சேரியை சித்தரிக்கும்போது வேனிற்காலத்தில் ஆண்களும் பெண்களுமாக பக்கிர் எலப்பை பள்ளியின் முன்பாக வாசலில், பிளாட்பாரத்தில் படுக்கின்றனர் என்கிறார்.பிறிதொரு இடத்தில் ஒரு குறும் வீட்டிற்குள் படுக்கையறையும் சமையலறையும் எவ்வாறு மாறிமாறி அமைக்கப்படுகிறது என்பதை சமையலறை,இரவில் கட்டிலுக்கு அடியில் இருக்கும்,பகலில் கட்டில் மடித்து சுவற்றில் சாத்தப்பட்டிருக்கும் என அத்திகுண்டா பகுதி சேரிவீடுகளை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிடுகிறார்.


முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளம்தாண்டி மொழியடிப்படையில் உருதுமுஸ்லிம்,தமிழ்முஸ்லிம் என மாறுபட்ட அடையாளங்களைமுஸ்லிம்கள் கொண்டுள்ளனர்..நீலம்பாஷா தர்கா பகுதியில் எழுபத்தைந்து சதவிகிதம் உருது தக்னி முஸ்லிம்கள் சங்கராபுரத்திலும் இதுபோன்று உள்ளனர். அத்திகுண்டாபகுதியில் உருது,தமிழ் முஸ்லிம்கள் சரிசமமாகவும்,இதரபகுதிகளில் கலந்தும் வாழ்கின்றனர். பொருளாதார வாழ்நிலை,சமயநிலை ஏறத்தாழ சமமாக இருந்தபோதும் கூட உருதுகள் தமிழ்முஸ்லிம்களைப் பார்த்து லெப்பை என இளக்காரமாக சொல்வார்கள் என்ற வரிகளில் புதைந்து கிடக்கும் மேலாதிக்க மனோபாவத்தையும் ஆய்வாளர் கட்டுடைக்கத் தவறவில்லை.
நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 98 சதவிகித்த்தினர் அடித்தள தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர்


கேரள மலப்புறம் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம் ஆண்கள இங்குள்ள பிறமத பெண்களோடு குடித்தனம் நடத்திவிட்டு பிறகு ஓடிவிடுகின்றனர் அல்லது மரணத்தை எதிர் கொண்ட பிறகு இவ்வாறான குடும்பங்களின் வாரிசுகள் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன. சில குடும்பங்களின் வீடுகளில் மக்கா, மதிநா,நாகூர்பள்ளி,வேளாங்கண்ணி மாதா,இயேசு,பிள்ளையார்,சிவன் புகைப்படங்கள் இருப்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.இரு சமயங்களின் கலாச்சாரங்களிடையே அல்லல்பட்டு அடையாள நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்களாக இவை இருக்கின்றன.
தாடி, தொப்பி, ஜிப்பா என்பதான புற அடையாளங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் கட்டமைக்கப்படுவதின் விளைவாகவே சங்கராபுரத்தைச் சார்ந்த ஒரு முஸ்லிமின் கூற்றுஇவ்வாறு வெளிப்படுகிறது.


சங்கராபுரம்சுற்றியுள்ளபாவளம்,மல்லாபுரம்,ஆலத்தூர்,பாலப்பட்டு,லெக்கநாயக்கன்பட்டி,உள்ளிட்ட 60 கிராமங்களில் பெயரைக் கேட்டுத்தான் முஸ்லிம் என கூற முடியும்.பார்வையிலும்,கலாசாரத்திலும் முஸ்லிம் இந்துக்கள் ஒரே இனம் போல்தான் காட்சி அளிப்பார்கள். அவர்களைவிட நாங்கள் மேல் என்பதாக இருக்கிறது


பிற இன ஆண்களோடு திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்கள், கணவனால் மூன்று,நான்கு குழந்தைகளோடு கைவிடப்பட்ட பெண்கள் என்பதைத் தவிர முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் மற்றுமொரு பிரச்சினை தலாக். மணமகன் செல்போனில் மணமகளை பிடிக்கவில்லை என்ற ஒற்றை வரியோடு ,முத்தலாக் சொல்வதும், மணமான மூன்று நாளில் கூட இது நிகழ்வதும், கைக்குழந்தையோடு தலாக் சொல்வதும் சகஜமான சம்பவங்களாக இருப்பதை ஆய்வாளர் குறிப்பிட்டு, தலாக்கில் குரானிய முறை எதுவும் பின்பற்றப்படாமல் கட்ட பஞ்சாயத்து முறையாக இச் சம்பவங்கள் நடைபெறுவதை விமர்சனம் செய்கிறார்.இன்னொருநிலையில் பெண்சார்ந்து மணவிடுதலை பிரச்சினை எழும்போது தலாக் கொடுக்காது இழுத்தடிப்பதும் சிரமப்பட்டு நஷ்ட ஈடாக எந்தப் பண்மும் பெறாமல் வெறும் தலாக்கே போதும் என்ற நிலையில் பெண்கள் தள்ளப்படுவது நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகிறார்


கள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இப்பகுதிகளில் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பு பெரும்பாலும் ஆரம்பக் கல்வியோடு முடிந்து விடுகிறது. உயர்நிலை,மேல்நிலைப் படிப்பு மிக குறைந்த சதவிகிதமே காணப்படுகிறது. சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சிறிய அளவிலான பள்ளிவாசல்கள், தர்காக்கள் உள்ளன. சில பகுதிகளில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது வாக்குவங்கியின் சார்பு நிலை குறித்த தகவல்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் சங்கராபுரம் பகுதியை முன்வைத்து ஆய்வாளர் பேசும்போது,வகாபி அமைப்புகளின் தோற்றத்தால் நல்லிணக்கபாதிப்பு, அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான் என் அமைந்த இந்துக்கள், முஸ்லிம்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் பிற இனமக்களும் திரட்சியுற்று பேரூராட்சி தலைவர் பஷீர்பாய் தோற்கடிக்கப்பட்ட விவரத்தை ஆய்வாளர் பதிவு செய்கிறார்


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே பங்களாவீடுகளில் வசிப்பவர்கள்,எப்போதும் பிரியாணி இறைச்சி சாப்பிடுபவர்கள் ,அரபுநாட்டு செல்வத்தில் சென்ட் வாசனையோடு திளைப்பவர்கள் வசதியாக வாழ்பவர்கள, தொழில்முதலாளிகள், அரசுப்பணி ஆசிரியப்பணியில் இருப்பவர்கள் துருக்கித் தொப்பி அணிந்த அரசியல்வாதிகள் என்பதான புனைவுகளை மட்டுமே பலர் பரப்பிவருகின்றனர்,வெகுஜன மக்களின் ம்னோபாவங்களிலும் இதுவே நிலைபெற்றுள்ளது. இதனை கட்டுடைப்பு செய்து அடித்தள முஸ்லிம்களின் வேதனைக்குரிய வாழ்வை கவிஞர் சோதுகுடியானின் இந்த கள ஆய்வியல் தொகுப்பு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு வெளிப்படுத்துகிறது
.
முஸ்லிம்தனவந்தர்களிடம் கல்விச் செலவுக்கான பட்டியல் போட்டு ஏற்கச் சொல்வது, எழைமுஸ்லிம் பெண்களின் பிரச்சினை தீர பலதாரமணத்தை தீர்வாக வைப்பது உள்ளிட்ட சில் தீர்வுகளை நீக்கிவிட்டு அணுகிணால் அடித்தள் முஸ்லிம்களுக்கான கொள்கை உருவாக்கத்திற்கான ஒரு அடிப்படை ஆவணமாகக் கூட இதை கருதலாம்.


முஸ்லிம்களுக்கான கல்வி,வேலைவாய்ப்புபுக்கான இடஒதுக்கீட்டை நலிவடைந்த்த ஒடுக்கப்படுகிற அடித்தள முஸ்லிம்களின் சார்பாக திருப்புவதற்கு இந்த ஆவணத்தை ஒரு ஆயுதமாக நாம் பயன்படுத்தலாம்.

Thursday, March 12, 2009

சென்னையில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீட்டு விழா

சென்னையில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீட்டு விழா

சென்னையில் ஆத்ம் ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மஸ்னவி ஷரீப்பின் தமிழாக்கம் வெளியீட்டு விழா 15.03.2009 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு சென்னை-17, தி.நகர், 32 வெங்கடேசன் தெருவில் அமையப்பெற்றுள்ள கீதாஞ்சலி கன்வென்ஷன் செண்டரில் நடைபெற இருக்கிறது.

ஃபஹிமிய்யா டிரஸ்ட் தலைவர் காஜா ஃபஹீமுல்லாஹ் ஷாஹ் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியினை கூடுவாஞ்சேரி கான்காஹே ஃபஹீமிய்யாவின் ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

Thursday, March 5, 2009

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.சையது சலாஹுதீன் பெயரில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத் துறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து ஆண்டுதோறும் சொற்பொழிவு நடத்துவதற்காக, இ.டி.ஏ. குழுமங்களின் நிர்வாக இயக்குநரான சலாஹுதீன் பெயரில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கான நிதி ஒரு லட்சம் ரூபாயை இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலர் எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகியோர் துணைவேந்தர் ராமச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

இந்த அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு ஏப்ரல் மாதக் கடைசியில் நடக்கிறது.

Monday, February 23, 2009

சென்னை – ஜும் ஆ உரைகள்

சென்னை – ஜும் ஆ உரைகள்

அடையார் எல்.பி.ரோடு பள்ளிவாசலில் மெளலவி சதீதுதீன் பாகவி அவர்கள் 21.11.08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !

இஸ்லாம் என்பதற்கு வழிபடுதல் கட்டுப்படுதல் என்பது பொருளாகும். கொள்கை அறிமுகத்தை இஸ்லாம் நூஹு காலத்தில் ஏற்படுத்தியது உலகம் முடியும் வரை இஸ்லாம் தனது கொள்கையை அறிமுகம் செய்து கொண்டேயிருக்கும் அல்லாஹ் சொல்கிறான் மார்க்கத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் என்று

நீங்கள் முஸ்லிமாக இருந்தால் முழுமையாக மார்க்கத்துக்குள் வந்து விடுங்கள் இல்லாவிட்டால் ஷைத்தான் உங்களைத் தடுப்பான் ஈமான் கொண்டவர்களே நீங்கள் ஈமான் கொள்ளுங்கள் என்பதன் பொருளென்ன ? வாசற்படியிலேயே நிற்கிறீர்கள் உள்ளே நுழையுங்கள் முழுமையாக மார்க்கத்துக்குத் தோதாக மாறிக் கொள்ளுங்கள் என்பது தான் .

எல்லா மதங்களும் தோற்றுப் போகிற மார்க்கம் இஸ்லாம் எல்லாவற்றுக்கும் எல்லா நேரத்துக்கும் தீர்வை வைத்திருக்கிறது இஸ்லாம். 360 சிலைகளை வைத்திருந்தார்கள் ஒவ்வொருவரும் கக்கத்தில் மூன்று கல்லை வைத்துக் கொண்டிருந்தார்கள் 2 கல் அடுப்பெரிக்க ஒரு கல் வணங்க

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை இஸ்லாத்தில் பூரண முஸ்லிமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் ஏதோ இருந்துட்டு போவுது எனக்கூறுபவன் முஸ்லிம் இல்லை. குலப்பெருமை குடும்பப் பெருமைகளை தூக்கி வீசியது இஸ்லாம் இந்த மாற்றத்தை கொண்டு வராது பெயர் வைத்திருப்பவர்கள் முஸ்லிம் அல்ல பாதி இப்படியும் பாதி அப்படியுமாக சமீப காலங்களில் தான் தெரிகிறது நபி (ஸல்) காலத்தில் இப்படி இல்லை நாம் ஏற்றுக் கொண்ட ஈமான் சொல்லளவில் உள்ளது செயலளவில் இல்லை.

ஓர் ஒட்டகம் அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்ததற்காக நூறு வருஷம் போர் நடைபெற்றது அந்த மண்ணில் கூட இஸ்லாம் சாத்தியப்பட்டது அடுத்தவர் பசியோடு இருப்பார் என்பதற்காக ஒரு ஆட்டுத்தலை அடுத்தடுத்த வீடுகளுக்கு கைமாறி கொடுத்தவர் வீட்டுக்கே திரும்ப வருகிறது. அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்ற கட்டளையை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. போரில் எல்லாரும் இறந்தாலும் நபி (ஸல்) மட்டும் உயிரோடு இருந்தால் போதும் என ”துஆ”ச் செய்யப்பட்டது.மலை மாறியது என்றால் நம்பலாம் மனிதன் மாறினான் என்றால் நம்ப இயலாது ஆனால் இதனைச் சாத்தியப்படுத்தியது இஸ்லாம்.

ஒவ்வொருவரும் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் நாம் ஒரு சதவிகிதம் தான் தேறுவோம் ஸஹாபாக்கள் நூறு சதவிகிதம் தேறுவார்கள் நம்மைப் பார்த்து இஸ்லாத்தை மற்றவர்கள் படிக்க வேண்டும் அப்படி நம்மை அமைத்துக் கொள்வது அவசியம்.

பூமிக்காக இருவர் சண்டையிட்டுக் கொண்டு நபிகளாரிடம் வருகிறார்கள் இது சம்பந்தமான ‘வஹி’ (இறை ஆணை) எதுவும் இறங்கவில்லை நபி ஒரு மனிதராக இருந்து தீர்ப்பளித்தார்கள் இருவருக்கும் இடத்தை பிரித்துக் கொடுக்கிறேன் அதில் ஒரு துண்டு கூடுதலாக இருந்தால் அத்துண்டு நரகத்தின் ஒரு பகுதி என நபிகள் மறுமையை முன்னிறுத்தி கூறியவுடன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து எனது இடத்தை அவருக்கே கொடுத்து விடுகிறேன் என பூமிக்காகச் சண்டையிட்டவர்கள் ஒருவர் மற்றவர் இடத்தை விட்டுக் கொடுக்க முன் வருகின்றனர்.

ஹிஜ்ரி 8 இல் மக்கா வெற்றி 11 கோத்திரங்களைக் கொண்ட 50 குடும்பங்கள் இஸ்லாத்திற்கு வந்தன இஸ்லாத்திற்குள் வந்த பிறகு அவர்களுக்குள் இருந்த கொடுக்கல் வாங்கலில் ஒருவருக்கொருவர் வட்டி, அசலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது தான் வட்டியைப் பற்றிய ஆயத்து இறங்கியது நபி (ஸல்) அக்குடும்பங்களை அழைத்து கேட்டார்கள் வட்டியை முழுமையாக விட்டு விடுங்கள் அசலை மட்டும் கொடுங்கள் எனக்கூற அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் நாம் பட்டியலிட்டுப் பார்த்தால் நிறைய முஸ்லிம்களிடம் பாவங்கள் மிச்சமிருக்கின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் முஸ்லிமாக மாறியவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்கிறார் முழுமையான மார்க்கத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம். அவரிடம் ஒரு முஸ்லிம் இவ்வளவு அதிகப்படியான முஸ்லிம் தோற்றம் தேவைதானா என வினவ அவர் உங்களுக்கு தாய் தந்தை வழியாக இஸ்லாம் வந்துள்ளது நாங்களோ தேடி எடுத்துக் கொண்டது இஸ்லாத்தில் எங்களுக்கு ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது எனப் பதிலளித்துள்ளார்.

இறைவனது வாக்குறுதி முழுமையாக இஸ்லாத்திற்கு மாறவில்லையெனில் வேறு வகையில் மாற்றிவிடுவேன் எந்த சமூகமும் அதுவாக மாறவேண்டும் நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம் எத்தகைய தியாகத்தை முஸ்லிம் என்பதற்காக விட்டு வந்திருக்கிறோம்.

(12.50 க்கு துவங்கிய ஜும் ஆ உரை ½ மணிநேரம் நடைபெற்றது ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் தொழுகையில் கலந்து கொண்டனர் )



மந்தைவெளி ஈத்கா பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் மன்பயீ அவர்கள் 28-11-08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !

துல்ஹஜ் மாதத்தின் பிறை 10 வரை அமல்கள் ( நற்செயல்கள் ) செய்வது மற்ற நாட்களை விட அல்லாஹ்வுக்கு விருப்பமானது ஸஹாபாக்கள் கேட்டார்கள் அறப்போர் செய்வதை விட இந்த நாட்கள் பொருத்தமா? எனக் கேட்கப்பட அல்லாஹ்வுக்கு பொருத்தமானது என நபி (ஸல்) பதிலளித்தார்கள் ‘பத்ரு’ போர் இல்லையென்றால் நாமெல்லாம் முஸ்லிமாக இருந்திருக்க முடியாது ரமலானுக்குப் பின்பாக மொத்த நாட்களைக் கூறி அமல்களைச் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியிருப்பது இந்த துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள்தான்.

ஹஜ் செல்லாதவர்கள் வீட்டிலிருந்தபடியே 10 நாட்கள் அமல்கள் செய்யலாம் வசதி படைத்தவர்களுக்கு குர்பானி வாஜிபு (கடமை) என இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியிருக்கிறார்கள் நிய்யத் வைத்தவர்கள் முடி,நகம் 10 நாட்களுக்குக் களையக்கூடாது.

மற்றவர்கள் பலியிடுவதற்கும் நமக்கும் வித்தியாசமுள்ளது அங்கு கொடுக்கப்படுவது சித்தாந்தத்தின் அடிப்படையில் நாம் கொடுப்பது தியாகத்தின் அடிப்படையில். தியாகத்தின் அடிப்படையில் மகனுக்குப் பகரமாக குர்பானீயை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அல்லாது இருந்திருந்தால் நாம் ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளைப் பலியிட வேண்டியிருந்திருக்கும் குர்பானியின் இரத்தம்,மாமிசம் இறைவனை அடைவதில்லை ஈமான் இறையச்சம் மட்டுமே இறைவனைச் சென்றடைகிறது தியாகம் முதல் நோக்கம் ஏழைகளுக்கு வழங்குவது இரண்டாவது நோக்கம் ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சியை கொடுக்கவேண்டும் என்பதற்காக அல்லாஹ் ஆடு,மாடு,ஒட்டகத்தை குர்பானீ கொடுக்கக் கூறியுள்ளான் பெருமைக்காக கொடுக்கக்கூடாது குர்பானீ

( இப்பள்ளியில் சுமார் 500 பேர் தொழுதனர் 25 நிமிடங்கள் ஜும் ஆ உரை நடைபெற்றது )


சென்னை கடற்கரை சாலையில் எழிலகத்தை ஒட்டி அமைந்துள்ள அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குப் பின்புறமாக அரசுப் பணியிலுள்ள முஸ்லிம்கள் அமைத்துள்ள பள்ளி மசூதியே ஏ அக்ஸா இப்பள்ளியில் அப்துல் வஹாப் பயாஜி அவர்கள் ஆற்றிய 05-12-08 ஜும் ஆ உரை!

அல்லாஹ் எதைப் பிரியப் படுகின்றானோ அது தான் தக்வா நீங்கள் தொழுத தொழுகை உங்கள் முகத்தில் தூக்கி அடிக்கப்படுவதாக ஹதீஸ் உள்ளது

கலிஃபா உமர் (ரலி) தனது மனைவிக்கு தேவையானதை அளந்து கொடுத்தார்கள் அதே சமயம் அனாதை ஏழை விதவை ஊனமுற்றோர் வந்தால் பணியாளர்களை அழைத்து கூட்டிட்டுப் போய் பைத்துல்மாலிலிருந்து தேவையானதை எடுத்துக் கொடுங்கள் எனக் கூறினார்கள் உமர்(ரலி) மனைவி கேட்டார்கள் எனக்கு மட்டும் அளந்து தருகிறீர்கள் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று. ஏழைகளுக்கு தர்மம் செய்வதை அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான் என்று பதிலளித்தார்கள் .

இன்றைய நாள் துல்ஹஜ் மாதத்தின் நாள் இந்த நாளை நினைவுறுத்தும் நபி இபுராகிம் அவர்களுக்கு வயது 120 ஆகவும் ஹாஜரா அன்னைக்கு வயது 80 ஆகவும் இருக்கும் போது நபி இஸ்மாயில் பிறந்தார் நபி இபுராகிமுக்குப் பிறந்த நபி இஸ்ஹாக்கின் வாரிசுகளாக வரிசையாக நபிகள் வந்துள்ளனர். நபி இஸ்மாயில் அவர்களின் வரிசையில் வந்த ஒரே நபி ரசூலுல்லாஹ் மட்டுமே!

மகன் இஸ்மாயிலை நபி இபுராகிம் அல்லாஹ்வுக்கு பலியிடுவதற்காக அழைத்துச் செல்லும் போது ஷைத்தான் வந்து ஹாஜரா அன்னையாரிடம் கூறுகிறான் உங்களுக்கோ வயது 80 இடங்கள் கணவருக்கோ வயது 120 இனி இது போல் மகன் பிறக்க வாய்ப்பில்லை அல்லாஹ்வுக்கும் பலி தேவையில்லை எனக் கனைக்கிறான் ஆயினும் அன்னை ஹாஜரா அவர்கள் குறுக்கே வந்து கணவரைத் தடுக்கவில்லை இதே போன்று இஸ்லாத்திற்கு கணவர் நன்மை செய்ய முனையும்போது மனைவி குறுக்கே வந்து தடுக்கக்கூடாது உங்கள் தியாகத்திற்கு விலை இல்லை.

ஆட்டுக்கறி திண்ணாதவர்கள் மாட்டுக்கறியைத் திரும்பியே பார்க்காதவர்கள் நம்மிடையே உண்டு அதற்காகக் குர்பானீ கொடுக்காமல் இருக்கக்கூடாது ஆடு அல்லாஹ் அக்பர் என்ற ஒற்றை வார்த்தையில் உயிரைக் கொடுக்கிறது அது அல்லாஹ்விடம் செவிமடுக்கப்படுகிறது நாம் தொழுகையில் எத்தனை அல்லாஹ் அக்பர் சொன்னாலும் உள்ளச்சம் இல்லாதவரை அல்லாஹ் செவி மடுப்பதில்லை.

(20 நிமிடங்கள் ‘ஜும் ஆ’ உரை நிகழ்த்தப்பட்டது 125 ஆண்கள் சில பெண்கள் தொழுகையில் கலந்து கொண்டனர் ஆண்கள் தொழும் இடத்தில் மூன்றில் ஒரு பகுதியை பிரித்து திரையைத் தொங்கவிட்டிருந்தனர் அரசுப் பணியிலுள்ள முஸ்லிம் பெண்கள் இமாமைப் பின் தொடர்ந்து அங்கு தொழுதனர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு ஊழியர்களது பொருளாதார நிலையை தம் பாட்டு ஒன்றில் ஒன்னுலயிருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் 20 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் எனப் பாடியிருந்தது இத்தனைவருடங்கள் கடந்தும் பொருந்தும் விதமாக பள்ளிவாசல் கரும் பலகையில் எழுதப்பட்டிருந்த ஜும் ஆ வசூல் காட்சியளித்தது 14ந் தேதி 850/- 21ந்தேதி510/- 28ந்தேதி 275/- என்று எழுதப்பட்டிருந்தது அரசு ஊழியர்களான முஸ்லிம்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது )

விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் அமைந்துள்ள சாதிக் பாட்சா நகரில் உள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளியில் சிங்கப்பூர் ஹஜ்ரத் என அழைக்கப்பெற்ற ஹனீப் மன்பயீ அவர்கள் 12.12.08ல் நிகழ்த்திய ஜும் ஆ உரையிலிருந்து …

வருங்கால வளத்துக்கு பொறுப்பேற்கக் கூடிய இளைஞர்களே ! ஆண்டுக்கு இருமுறை அல்லாஹ் நன்மைகளை நன்னாட்சிகளின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறான் அந்நாட்களுக்கான நன்மைகளை முடித்த வரையில் நிறைவு செய்திருக்கிறோம்

நாம் செய்யக்கூடிய தொழுகை, ஜகாத், ஹஜ், போன்றவற்றில் நன்மையும் மகிழ்ச்சி இருக்கிறது நாம் மகிழ்ச்சியோடு வாழ எவ்வளவு தான் பொருளீட்டி வாழ்ந்தாலும் அது அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சியைத் தராது நமது இபாதத்தில் தான் அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சியிருக்கிறது உயிர்வாழ உடல் தேவை. உடல் வாழ பொருள் தேவை. இந்த உடல் பொருள் இரண்டும் அல்லாஹ் கொடுத்தது.

நம் இஷ்டத்திற்கு உலகில் வாழ முடியாது அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்குத் தருகிறான் 80 வயதுடைய இபுராகீம் நபிக்கு இரண்டு மனைவிகளிருந்தும் குழந்தைகளில்லை யா அல்லாஹ் எனக்கு சாலிஹான குழந்தையைக் கொடு எனத் துஆக் கேட்டார்கள் ஆண் பெண் குழந்தையைக் கொடு எனக் கேட்கவில்லை நல்ல குழந்தையைக் கொடு என்று கேட்டார்கள் அல்லாஹ் இபுராகீம் நபிக்கு 90 வயதில் அன்னை ஹாஜரா மூலமாக நபி இஸ்மாயிலைக் கொடுத்தான்.

நாம் எதை எதிர்க்கிறோமோ அதில் நன்மை இருக்கும் எதைக் கேட்கிறீர்களோ அதில் தீமை இருக்கும் நபியிடம் அல்லாஹ்கூறுகிறான் நபியே! நீங்கள் இபுராகீம் வழியில் வந்தவர் என்று அன்று ஹாஜரா அன்னையார் ஸபா! மர்வா! மலைக்குன்றுகளுக் கிடையே ஓடி மகன் இஸ்மாயில் மூலம் அல்லாஹ்விடமிருந்து ஜம்-ஜம் நீரைப் பெற்றார்கள் அன்னை ஹாஜரா செய்த தியாகத்திற்கு அடையாளமாக இன்று ஸயீ தொங்கோட்டம் ஓடப்படுகிறது ஜம், ஜம் நீரை ஒரு நிமிடத்திற்கு லட்சக் கணக்கானோர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள் 5,000ம் வருடத்துக்கு முந்தைய தியாகம் இன்றைக்கும் நினைவு படுத்தப்படுகிறது.

ஜகாத் ஹஜ் பொருள் சம்பந்தமானது தொழுகை உடல் சம்பந்தமானது. உடலைக் காப்பாற்றுவதற்கு பர்ளு அவசியம் உனக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதிலிருந்து ஜகாத்தொடு உலகில் எதுவும் உனக்குச் சொந்தமல்ல ஒரு விருந்தின் போது இபுராகீம் அவர்களிடம் உங்களுக்கென்ன ஏராளமான ஒட்டகங்களை வைத்திருக்கிறீர்கள் விருந்தளிக்கிறீர்கள் என்று ஒருவர் கூற உடனே நபி இபுராகீம் ஒட்டகம் என்ன என் பிள்ளையை அல்லாஹ் கேட்டால் அறுத்துப் பலியிடுவேன். எனக்கூறுவதைத் தான் அல்லாஹ் பிடித்துக்கொண்டு இபுராகீமே! எதைச் சொன்னாயோ அதைச் செய் எனக் கட்டளையிடுகிறான்.

மகனை பலி கொடுக்க தந்தை இபுராகீம் அழைத்துச் செல்லும் வேளையில் மூன்று இடங்களில் ஷைத்தான் இஸ்மாயில் நபி மனத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறான நபி இபுராகீம் மூன்று இடங்களிலும் ஷைத்தானை நோக்கிக் கல்லெறிகிறார். அது தான் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்மாயில் நபி தந்தையிடம் மூன்று விஷயங்களைக் கூறுகிறார் தந்தையே! எனது கை கால்களைக் கட்டி விடுங்கள் நீங்கள் அறுக்கும் போது திமிறாது இருப்பதற்காக. குப்புறப் போட்டு எனது கழுத்தை அறுங்கள் அப்போது தான் எனது முகத்தை நீங்கள் பார்த்து மனவேதனை அடைய மாட்டீர்கள் உங்களது கடமை தடுக்கப்படாது இரத்தம் படிந்த ஆடைகளை எனது அன்னையிடம் சேர்ப்பித்து விடுங்கள் அதை எனது நினைவாக என் அன்னை வைத்துக் கொள்வார். இது தான் இஸ்லாம் உணர்த்தும் தியாகம்.

( முஸ்லிம் முரசு ஜனவரி 2009 லிருந்து )

Friday, February 6, 2009

Green Channel Business Center & Guest House

From: Jaffer Rafiq [mailto:Rafiq.Jaffer@tetrapak.com]
Sent: Tuesday, February 03, 2009 7:48 PM
To: gcinfotech@gmail.com
Subject: Green Channel Business Center & Guest House

Dear Brothers,
Assalamu Alaikum!
I have sarted a business center in coimbatore & Chennai offering fully furnished office space and facilities .
Please find enclosed details of the services offered. You can also visit www.gcinfotech.in for more information.

In another one month, GREEN CHANNEL GUEST HOUSE will be offering fully furnished a/c apartments near chennai airport : MKN road , Alandur on daily rental basis.
Location: 5 minutes drive to airport, St thomas mount Railway stn , Kattipara etc
Mosque: Located just after 2 buildings on MKN road.

Following facilities will be offered:Airport pick up & Drop, 24hrs internet connectivity, car hire, air/train / bus ticket booking /reconfirmation and any other services required by NRIs.

A new website www.nriclub.net will slso be launched on March 15th where NRIs can post classified ads free of cost . The site will provide free news letters and consultancy on various investment options available for NRIs. Your input is highly appreciated to shape the site to include various topics which could be of interest to NRIs.

If you need any of the above services or interested in promoting this among your circle , please feel free to contact me.

Best regards
BEST REGARDS,
A.Rafiq Mohammed Jaffer
Systems Sales Manager – Processing Division
Tetra Pak Arabia

Tetra Pak Manufacturing Limited
P.O.Box:9454,Lot 88-103, JCCI Warehouse city,
Jeddah-21413 , SAUDI ARABIA
Telephone: +966 2 6351515,Direct: +966 2 2688236 Mobile: +966504653276
Fax: +96626370188
Rafiq.jaffer@tetrapak.com
www.tetrapak.com

Thursday, January 29, 2009

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

Thursday, January 8, 2009

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை

மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் 2522 8025
மாவ‌ட்ட‌ வ‌ருவாய் அதிகாரி 2522 9454
ஆட்சிய‌ரின் நேர்முக‌ உத‌வியாள‌ர் ( பொது ) 2526 8323

வ‌ட்டாட்சிய‌ர்க‌ள்

த‌ண்டையார்பேட்டை 2538 8978
புர‌சைவாக்க‌ம் பெர‌ம்பூர் 2537 5131
எழும்பூர் நுங்க‌ம்பாக்க‌ம் 2836 1890
மாம்ப‌ல‌ம் கிண்டி 2489 164
ம‌யிலாப்பூர் திருவ‌ல்லிக்கேணி 2433 1291


காவ‌ல்துறை த‌லைமை இய‌க்குந‌ர் 2844 7777/2844 7755
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( ச‌ட்ட‌ம் ஒழுங்கு ) 2844 7799
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( நிருவாக‌ம் ) 2844 7705
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( த‌லைமை அலுவ‌ல‌க‌ம் ) 2844 7706

தீய‌விப்புத்துறை இய‌க்குந‌ர் 2855 4156
தீய‌விப்பு க‌ட்டுப்பாட்டு அறை 2855 4176

தீய‌விப்பு நிலைய‌ங்க‌ள்

திருவான்மியூர் 2440 1213
கொருக்குபேட்டை 2554 4662
ஜெ.ஜெ.ந‌க‌ர் 2656 3629
கோய‌ம்பேடு 2479 2610
ஆளுந‌ர் மாளிகை 2235 4835
எழும்பூர் 2575 0633
ம‌ண‌லி 2594 1147
அத்திபட்டு 2795 0080

சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னை முத‌ல்வ‌ர் 2530 5111
இருப்பிட‌ ம‌ருத்துவ‌ அதிகாரி 2530 5555

Tuesday, December 23, 2008

த‌மிழ‌க‌த்தில் இஸ்லாம்

த‌மிழ‌க‌த்தில் இஸ்லாம் என்ற‌ சிற‌ப்பு மானுட‌ வ‌ச‌ந்த‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி ப‌ட‌ப்பிடிப்பு 04.01.2009 ஞாயிறு காலை 9.30 ம‌ணிய‌ள‌வில் சென்னை ஸ்பென்ஸர் பிளாசா எதிரில் உள்ள புக் பாயிண்ட் ஆடிட்டோரியத்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இந்நிக‌ழ்வில் ப‌ல்வேறு கேள்விக‌ளுக்கு புக‌ழ்பெற்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர் முனைவ‌ர் ஜெ.ராஜா முஹ‌ம்ம‌து, டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ஆகியோர் ப‌தில் அளிக்க‌ இருக்கின்ற‌ன‌ர்.

மானுட‌ வ‌ச‌ந்த‌ம் த‌மிழ‌ன் தொலைக்காட்சியில் புத‌ன்கிழ‌மைக‌ளில் இர‌வு 10 ம‌ணிக்கும், வெள்ளி தோறும் மாலை 4.30 ம‌ணிக்கும் ஒலிப‌ர‌ப்பாகிற‌து. வியாழ‌ன் தோறும் இர‌வு 10 ம‌ணிக்கு அன்றாட‌ வாழ்வில் இஸ்லாம் எனும் நிக‌ழ்ச்சி ஒலிப‌ர‌ப்பாகிற‌து.

Friday, November 21, 2008

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு


கீற்று இணையத்தைத் தொடங்கியது நாள் முதல் வாசகர்களாகிய நீங்கள், எங்களுக்கு அளித்துவரும் உற்சாகமும், ஆதரவும் அளப்பரியது. கடந்த மூன்றாண்டுகளில் எங்களது தொடர்பு முகவரியோ, கைப்பேசி எண்ணோ தராத நிலையிலும் நண்பர்கள் வாயிலாக அதைப் பெற்று, எங்களைத் தொடர்பு கொண்டு, கீற்றுவின் மீதான தங்களது மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தினந்தோறும் எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிலும், படைப்புகளுக்கு நீங்கள் தரும் பின்னூட்டங்களிலும் எங்கள் மீதான அன்பை உணர்ந்திருக்கிறோம்.

‘நான் வசிக்கும் நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் கீற்றுதான் எனக்கு ஒரே துணையாக இருக்கிறது’ என்றும், ‘அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயான உறவுப்பாலமாக கீற்று விளங்குகிறது’ என்றும், ‘தங்களின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த முறை நான் சென்னை வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்றும் வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின்றன. அதுவே தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது.

கீற்றுவின் நான்காம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வாசகர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் எங்களது கைப்பேசி எண்ணைத் தந்திருந்தோம். அதுமுதல் எங்களைச் சந்திக்க விரும்புவதாக வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வாசகர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதுகுறித்து கீற்று வலைக்குழுமத்தில் விவாதித்தபோது நிறையபேர் ஆர்வம் தெரிவித்தார்கள்.

நாள் குறித்தோம், அரங்கைப் பிடித்தோம். இதோ, வாசகர் சந்திப்புக்குத் தயாராகிவிட்டோம். கீற்றுவின் நிறை, குறைகள் குறித்தும், கீற்று தொடர வேண்டிய/ செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீங்கள் பேசலாம். கீற்று தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறோம்.

நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு.



editor@keetru.com

Thursday, August 14, 2008

தனலட்சுமி வங்கி

Assalamu Alaikkum.

At the outset,I would like to introduce myself that I am M.Mohammed Ashraf Ali,Manager of NRI Relationship Centre, Dhanalakshmi Bank, Chennai.

I would like to inform your goodself that I have recently taken charge of NRI Relationship Centre of Dhanalakhsmi Bank which is a modern bank providing all hi-tech banking services for the past 80 years through their
181 branches and 26 extension counters spread all over India. In Tamilnadu, we have got branches in important locations including Adhirampattinam.

We are offering all the modern banking services such as tele-banking, web banking , Online transfer / remittance facilities, Any Branch Banking, ATMs, International Visa Debit card, Insurance services ( Life and Non-life ) and RTGS facilities. We assure you that you can enjoy these modern services with our traditional, courteous and personalised customer service.

The bank has always been a trend setter, constantly making pioneering moves.
The bank has in its books top corporate clients and blue chips, both established and emerging. The delivery channels are being supplemented by putting up onsite as well offsite ATMs across the country.

All our branches are in the country are authorized to conduct NRI business.
We offer the spectrum of the banking and financial services to the NRIs, the harbinger of prosperity to the country, with absolute confidentiality.
For sending remittances, we have concluded rupee drawing arrangements with a large number of exchange houses. For example, in UAE , we have got arrangement with Redha Al Ansari Est, UAE EXchange Centre, Al Ahalia Money Exchange Bureau,Al Fardan Exchange and Thomas Cook Al Rostamani Ex.co.

We extend our hearty welcome to you and the honourable members of the association and request you to patronize us with your valuable accounts.

We enclose the profile of our bank for your kind perusal.More informaion and account opening form are available in our website

www.dhanbank.com

We request you to kindly provide us the e-mail ids of the members to enable us to contact them individually. If you need any clarification, please feel free to contact us.

Let Allah’s blessings be always with you.

Looking forward to serve you better and forge a life long relationship.

Yours sincerely,

M.Mohammed Ashraf Ali
Manager, NRI Relationship Centre,Dhanalakshmi Bank No.34, CSM Plaza, VK Road,Mandaveli, Chennai-600 028
Phone: 044-24618732 Mobile:9444580806
E-mail: dhanalakshminri@vsnl.net

Saturday, August 2, 2008

இஸ்லாத்தை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்

Assalamualaikum.

We can even start by giving a booklet " Understanding Islam and the Muslims ", a 32 page booklet having the following topics like, ' what is Islam', what do muslims believe', ' do islam and christianity have different origins'.

This book has photos beside the answer for easier understanding.

It can be printed in bulk and distributed.

Any person interested to know about Islam, can understand the entire concept about Islam.

Sincerely,

Mohamed Imtiaz
Jan Trust
97 Coral Merchant Street
Chennai 1
T: 25244015

imtiazhlc@hotmail.com

Friday, July 18, 2008

பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம்

பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?,
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.

Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.

Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.

Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .

Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?

Part 5 - Is lottery is good and acceptable for the society?

Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?

Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?

Part 8 – How to face difficulties?

Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.

Part 10 – What are the reasons for Islam's growth?

Part 11 – Is Islam if the first religion of the world?

Part 12 - What is Dargah and is it allowed to go there?

Part 13 – What are all the responsibilities of Muslims?

Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?

Part 15 – What is Islam's view on "Interest"?

Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?



All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com

Wednesday, July 2, 2008

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி

அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.

இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.

பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.


ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி


சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.