Sunday, December 14, 2008

கடவுளுக்கு ஒரு கடிதம்

கடவுளுக்கு ஒரு கடிதம்

நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
புளங்காகிதம் அடைவதில் நமக்கோர் மயக்கம்;
உள்ளத்தளவில் ஈமானின் தளர்ச்சி
ஒத்துக்கொள்வதில் நமக்கேன் தயக்கம்?
தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே
தாரணிக்கு நாம் தந்த சமத்துவம் எங்கே?
ஆயினும் நமக்குள் ஆயிரம் பிளவுகள் உண்டே
ஆயுதம் கொண்டும் நமக்குள்
சண்டையிட்டு மாய்த்து கொள்வது யாரோடு?
சகோதரத்துவ மரத்தை சாய்த்து விடுகின்றோம் வேரோடு....!
அண்டை வீட்டார் பசித்திருத்தலாகாது -என்ற
அண்ணல்நபி(ஸல்) அமுத மொழி மறந்தோம் அடியோடு..
பண்டைய முஸ்லிம்கள் உலகுக்கு
பயிற்றுவித்தனர் அறிவியல்- கணிதம்*
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள்
எத்தனை பேரிடம் உண்டு உயர்கல்வி விகிதம்?
மூளைச்சலவைச் செய்து முஸ்லிம் இளைஞர்களை
மூலைக்குத்தள்ளி விட்ட முல்லாக்களே....!
நாளை மஹ்ஷரிலே பதில் தர வேண்டும் அல்லாஹ்விடம்
நானே வந்து சாட்சி சொல்வேன் அப்போது...

---"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்.
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Accounts Department
Granite Construction Company
Post Box # 842
Abu Dhabi, U.A.E.

விதைகள்

விதைகள்"

கருவாகி உருவாகி வளர விதை;
பருகும் பழமுண்டாக விதை;
கவிஞனின் கற்பனை விதை;
க"விதை" என்பதும் அதனாலே..!
விதை ஓர் ஒப்பற்ற ஆசான்;
அதைக் கொண்டு பாடம் பெறலாம்
வீரியமுள்ள விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்...!
விஞ்ஞானத்தில் விந்தைகள் யாவும் விதை வடிவமே துவக்கம்;
எஞ்ஞான்றும் இதனை ஒத்துகொள்வோம்..
கணிணி முதல் கைப்பேசி வரை
அனைத்திலும் ஆதாரப் பொருள்
விதை வடிவமே..............
விதையே நீ வாழ்க! வளர்க!!!!!

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்


050-8351499
shaickkalam@yahoo.com

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.

தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்


தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.

தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்


தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.