Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Saturday, August 8, 2009

’பிறை’ ஆசிரியர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் நினைவுத் தொகுப்பு

’பிறை’ ஆசிரியர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் நினைவுத் தொகுப்பு

www.mudukulathur.com


மெளலவி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் எம்.ஏ., பிடிஎச் அவர்கள் பற்றிய ஆவணமாக ’’அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) நினைவுத் தொகுப்பு’’ என்னும் பெயரில் நூல் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

அவர்களைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளைச் சேகரித் திருப்போர் நினைவில் நிலை நிறுத்தியிருப்போர் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் அன்னாரைப் பற்றி அறிந்த விவரங்களை எமக்கு எழுதி அனுப்பினால் நன்றியுடன் அவைகளை அப்துல் வஹ்ஹாப் சாஹிப் பற்றி வரவிருக்கும் தொகுப்பில் வெளியிடுவோம்.

முகவரி: ஹாஜி எம். முஹம்மது மீரா சாகிப்
திரியெம் பப்ளிஷர்ஸ்
புதிய எண் 12, அப்பு மேஸ்திரி தெரு
சென்னை – 600 001
தொலைபேசி : 25225143
ந‌ன்றி :
முஸ்லிம் முர‌சு
ஏப்ர‌ல் 2009

Saturday, February 14, 2009

ஆசிரியர்கள் தேவை

ஆசிரியர்கள் தேவை

இளையான்குடியில் செயல்பட்டு வரும் இக்ரா மெட்ரிக் பள்ளிக்கு பல்வேறு வகுப்புகளுக்கு
ஆசிரிய/ஆசிரியைகள் தேவை.

சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலதிக விபரம் பெற


இக்ரா மெட்ரிக் பள்ளி
சிவகெங்கை சாலை
இளையான்குடி 630 702
மின்னஞ்சல் : vetrifff@yahoo.com

Thursday, September 18, 2008

ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்

ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்

www.muduvaivision.com


லக்னோ,செப்.18-

ரூ.200 காணாமல் போனதால் ஆசிரியை 200 மாணவர்களை 10 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இதில் மூச்சு திணறி 12 பேர் மயக்கம் அடைந்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜிர்கா கிராமம்.இங்கு அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் பையில் இருந்த ரூ.200 காணாமல் போய் விட்டது.இதை மாணவர்களில் யாரோ ஒருவர் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

இதுபற்றி சந்தேகப்படும் மாணவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். ஆனால் பணத்தை எடுத்ததாக யாரும் கூறவில்லை.

எனவே அங்கு படித்து வந்த 200 மாணவர்களÛயும் வகுப்பறையில் வைத்து பூட்டும்படி வகுப்பு ஆசிரியைக்கு உத்தரவிட்டார். அவர் 200 மாணவர்களையும் இடநெருக்கடி உள்ள அறைக்குள் அடைத்து பூட்டினார்.தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கவில்லை.

குறுகிய இடத்தில் அனைவரையும் அடைத்து இருந்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கதறினார்கள். ஆனாலும் ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.

மாலையில் வகுப்பு முடிந்த போதும் மாணவர்களை வெளியே அனுப்பவில்லை. அவர்கள் 10 மணி நேரத்துக்கு மேலாக அடைத்து வைக்கபட்டு கிடந்தனர்.

மாணவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு தேடி சென்றனர். அப்போது தான் மாணவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

அப்போதும் அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். இதனால் பெற்றோர்கள் வகுப்பறையின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை மீட்டு வந்தனர். உள்ளே 12 மாணவர்கள் மயங்கி கிடந்தனர்.

இதுபற்றி கல்வித்துறையிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Tuesday, June 10, 2008

தமிழ் பயிற்றுவிக்க மலையாள ஆசிரியர்கள்

பொதுவாக படுக்க போகும் முன் மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை
பார்த்துவிட்டு போவது வழக்கம் என்று சொன்னால் அதுபொய். எப்போதாவது
பார்ப்பேன்.அப்படி நேற்றைய செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு
அதிர்ச்சியான செய்தியை கேட்க நேர்ந்தது.

நீலகிரி மாவட்டம் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பள்ளிகளில் ஆரம்ப
பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக மலையாள ஆசிரியப் பெருமக்களை பணிக்கு
அமர்த்தி இருக்கிறார்களாம். தமிழ் எடுக்க தமிழ்நாட்டில் அதுவும் அஸ்திவாரம்
போடக்கூடிய ஆரம்ப பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி மலையாள ஆசிரியரைக்
கொண்டு... எங்கு போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்..?

குறிப்பாய் இரண்டு மழலையரை பேட்டிக் கண்டிருந்தனர் அந்த செய்தியிடையே..
அவர்கள் சொன்னதிலிருந்து ஒன்று புரிந்தது. தமிழ் கற்றுக் கொடுக்க அந்த ஆசிரியர்
முயன்றாலும் ( அது சுத்தமாகப் புரியவில்லை என்கின்றனர் குழந்தைகள்..) தொடர்பு
மொழி எல்லாம் மலையாளத்தில் தானாம்..

நானே கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்

வாத்தியார் : எங்கே பற.. அ...ம்..மா அம்மே.. பறடா
==

இந்தோ இது பேர் என்ன..?

முந்திரிப்பருப்பு...

அதில்லடா அண்டிப் பருப்பாக்கும் (முந்திரிப்பருப்பு மலையாளத்தில் இப்படி அழைக்கப்படுகிறது)

அப்ப இது (திராட்சையைக் காட்டி..)

அது முந்திரியாக்கும்.

===

இன்னும் என்னவெல்லாம் என்று யோசித்துப் பார்க்க கொஞ்சம் திகிலாக இருந்தது.
நீலகிரி தமிழகத்தில் தானே இருக்கிறது. 23 மலையாள ஆசிரியர்கள் தமிழ்ச் சொல்லித்தர
நியமிக்கப்பட்டுள்ளதாய் வேறு உப செய்தி கேள்விப்பட்டேன்.. (என்ன கொடுமை ஸார் இது)

==
கவிக்கோஅப்துல் ரஹ்மானின் ஒரு கவிதை நினைவாடலில்

முத்தமிழிடம்
அதன் முகவரி
எதுவென்று விசாரித்தேன்
மேற்பார்வை
மு.கருணாநிதி என்றது...

மேற்பார்வைக்கு எட்டாமலா இருந்திருக்கும்..?



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
__._,_.___