Showing posts with label பனாத்வாலா. Show all posts
Showing posts with label பனாத்வாலா. Show all posts

Thursday, June 26, 2008

மர்ஹூம் குலாம் முகம்மது பனத்வாலா

கேரளீயர்களான கிருஷ்ணமேனன் மும்பையிலிருந்தும், அனந்தன் நம்பியார்
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..

ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.

அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.

என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.

மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.

மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.

வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.

"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.

காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது

பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.

காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.

காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.

காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.

இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.

முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.

ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.

ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.

பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!

பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.

அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

Wednesday, June 25, 2008

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்


சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

பனாத்வாலாசாஹிபின் நினைவு கூறத்தக்க பணிகள்

"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்

B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!



முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-

ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:

பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:

காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:

'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.

தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.



வாசகர் கருத்துக்கள்

மணியன்
manimalar.blog@gmail.com


அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்


khaleel: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பித்து வைக்க துஆ செய்கின்றோம்.
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை
குவைத் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Abdul Jabbar

இன்னா லில்லாஹி வ இனா இலைஹி ராஜிவூன் - சாத்.அப்.ஜப்பார்

Patel Raheem
dateThu, Jun 26, 2008 at 4:25 PM
subjectG M Banatwala

Inna lillahi wa inna ilaihi rajiwoon

S.M.Abdurraheem Patel
Ph:+91 44 25268314
Mob: 09381000236

Abdul Hameed Rafiudeen
dateThu, Jun 26, 2008 at 7:59 AM
subjectRE: துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை

PLEASE CONVEY OUR CONDOLENCE FOR BANATWALAS SAHIB SUDDEN DMISE


RAFIUDEEN
PRESIDENT FROM HONG KONG
WORLD TAMIL CUL ASSN

TEL 93814255