அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் இந்திய தொலைபேசிக்கு பேச ஓர் காலிங்கார்டு உள்ளது. இது Mobileக்கு 10மணி நேரமும், Landlineக்கு 6மணி நேரமும் பேசலாம். 40திரஹம் மட்டுமே.
தொடர்புக்கு - 056 1434481
E-Mail - tbcgroup@hotmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label வளைகுடா. Show all posts
Showing posts with label வளைகுடா. Show all posts
Saturday, June 26, 2010
Thursday, April 29, 2010
வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!
வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!
மத்தியக் கிழக்கு ஆசியாவில் உள்ள வளைகுடா நாடுகள் தங்களது எண்ணெய் வளத்தினால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், தங்களுடைய செழுமையான வாழ்விற்கும் இந்த நூற்றாண்டில் வழித் தேடிக் கொண்டன.
இந்த பிரதேசத்தின் பூமிக்கு அடியில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற கருப்புத் தங்கத்தை வெளியில் கொண்டு வந்து அதை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச சந்தையில் உச்ச விலையில் விற்பதற்கு தேவையான அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் செய்தது மேலைநாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள் என்றாலும்....
இந்த எண்ணெய் உற்பத்தியைக் கொண்டு வெறும் பாலைவனமாகக் கிடந்த நாடுகளை நாகரிகத்தின் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய உல்லாசபுரிகளாக,
செல்வ செழிப்பின் அடையாளங்களான வானுயர்ந்த கட்டிடங்கள்,
குறுக்கும் நெடுக்குமாக பல அடுக்குமாடி பாலங்கள்,
பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளையும், நகரங்களையும் இணைக்கும் நெடுந்தூரச் சாலைகள்,
தொலைத்தொடர்பு சாதனங்கள்,
ரயில் போக்குவரத்து,
பாலைவனச் சோலைகளாக ஆங்காங்கே பசுமை பூத்து நிற்கும் பூங்காக்கள்,
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
வகைவகையான சொகுசு வீடுகள் என்று எதுவெல்லாம் இன்று நம் கண்ணில் படுகிறதோ அத்தனையிலும்
தங்கள் வியர்வையை, கடும் உழைப்பை கலந்தவர்கள் கீழைநாட்டு பிரஜைகள்தான்.
அவர்களில் குறிப்பாக இந்தியர்களுக்கென்று தன்னிகரற்ற தனி இடம் உண்டு என்பதை கீழே உள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
படித்துப் பாருங்களேன்! நாமா இப்படி? என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் சதவீதம்?
சவூதி அரேபியாவில் மொத்த வெளிநாட்டவரில் 20% இந்தியர்கள்.
ஓமனில் உள்ள 61% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
குவைத்தில் உள்ள 83% வெளிநாட்டவரில் 25% இந்தியர்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 93% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றமும், வெளிநாட்டவருக்கான வாய்ப்பும்
விரைவான மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சியும், முன்னேற்றப் பாதைக்கான உடனடித் திட்டங்களும்.
உள்நாட்டில் திறமையான டாக்டர்கள், இன்ஜினியர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பற்றாக்குறை.
செல்வச் செழிப்பான நாடுகளாக இருப்பதால், குறைந்த செலவில் திறமையான வெளிநாட்டவர்களை பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை.
பல முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான ஒப்பந்தங்கள் இந்தியர்களோடும் இந்திய நிறுவனங்களோடும் தொடர்பு கொண்டதாயிருக்கின்றன.
கட்டமைப்பு பணிகள்
நாட்டின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு பணிகளுக்காக படித்த மற்றும் படிக்காத மனித ஆற்றல் பெருமளவில் தேவைப்படுகிறது.
பல மத்தியக் கிழக்கு நாடுகள் பெரிய பாலங்கள், தொலைத்தொடர்பு, மருத்துவ மற்றும் வணிக வளாக கட்டமைப்புகளை பெருமளவில் ஊக்கப்படுத்துகின்றன.
உஷ்ணமான பாலைவன பிரதேசமாக இருப்பதால் பெரும்பாலும் கடுமையான சுடுமணலில் தான் வேலை என்ற நிர்பந்தம்.
இந்தியர்கள் இதுபோன்ற கடினமான வேலைகளில் இயற்கையாகவே பழக்கப்பட்டவர்கள்.
மற்றவர்களால் செய்ய இயலாதவற்றை இந்தியர்களால் எப்படி செய்ய முடிகிறது?
இந்தியாவினால் குறைந்த விலைக்கு அதிக மனித ஆற்றலை வழங்க முடியும்.
பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் மனித ஆற்றலுடன் போட்டிபோட இயலாது.
மேற்கத்திய நாட்டவர்கள் சாதாரண கூலி வேலைகளுக்கு வர மாட்டார்கள்.
இந்தியர்கள் அசுத்தமோ, ஆபத்துக்களோ நிறைந்த இன்னபிற சாதாரண வேலைகளைச் செய்ய தயங்குவதில்லை.
இந்தியர்களிடமிருந்து கிடைக்கும் உள்நாட்டு செலாவணி
இந்தியர்கள் தாங்கள் தங்கும் இடங்களுக்கு வாடகை தரவேண்டும். அவர்களால் எந்த சொத்தையும் அங்கே வாங்க இயலாது. இது பல பில்லியன் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் துறையில் பெற்றுத் தருகிறது.
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக வருமானங்கள்.
குடும்பங்களுடன் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கே தங்களது சேவைகளை வழங்க எத்தனிக்கிறார்கள்.
அன்னிய செலாவணி முதலீட்டாளர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாகக் கொண்ட சாப்ரியஸின் ஜம்போ குரூப் நிறுவனம். இது 25 நாடுகளில் 28 கம்பெனிகளையும் 20 ஆயிரம் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அலீ யூசுப் நிறுவனத்தின் எம்கி குரூப் 10,800 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பி.ஆர். செட்டி நிறுவனத்தின் நியூ மெடிக்கல் சென்டர் குரூப் 3,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர்கள் ஆகும்.
ஓமனைச் சார்ந்த கனக்சி கிம்ஜி நிறுவனத்தின் கிம்ஜி ராம்தாஸ் நிறுவனம்.
விமான போக்குவரத்து
மத்தியக் கிழக்கின் பெரிய விமான நிறுவனங்களான: கல்ஃப் ஏர், குவைத் ஏர்வேஸ். சவூதியா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஓமன் ஏர்; போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவை நம்பியே நடத்தப்படுகின்றன.
இந்த ஏர்லைன்ஸ்களின்; 50% விமான போக்குவரத்து இந்திய துணைக் கண்டத்திற்கு செல்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு 100 விமானங்களை அரபு நாடுகளுக்கு இயக்குகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு நிகர வருவாயாக 1000 கோடியை ஈட்டுகிறது.
ஈராக் - புதிர்
சமீப காலங்களில் நடந்த பல்வேறு சிக்கல்கள், போர், மற்றும் நோய் போன்ற காரணங்களால் இராக் தன்னுடைய மனித ஆற்றலை மேம்படுத்த அல்லது பயன்படுத்த இயலரத நிலையில் உள்ளது.
இராக்கின் புணர் நிர்மாணத்திற்கான புதிய ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தரப்படுகிpன்றன.
இத்தகைய புணர் நிர்மாணத்திற்காக குவைத்தில் உள்ள சில நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கின்றன.
By பிரகாஷ் குமார்
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
இப்படிக்கு,என்றும் அன்புடன்,
Regards
Na.Prasannan
n.prasannam@yahoo.com
n.prasannam@gmail.com
94880-19015, 99415-05431
See my new slideshare site for Power Points
http://www.slideshare.net/nprasannam
மத்தியக் கிழக்கு ஆசியாவில் உள்ள வளைகுடா நாடுகள் தங்களது எண்ணெய் வளத்தினால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், தங்களுடைய செழுமையான வாழ்விற்கும் இந்த நூற்றாண்டில் வழித் தேடிக் கொண்டன.
இந்த பிரதேசத்தின் பூமிக்கு அடியில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற கருப்புத் தங்கத்தை வெளியில் கொண்டு வந்து அதை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச சந்தையில் உச்ச விலையில் விற்பதற்கு தேவையான அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் செய்தது மேலைநாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள் என்றாலும்....
இந்த எண்ணெய் உற்பத்தியைக் கொண்டு வெறும் பாலைவனமாகக் கிடந்த நாடுகளை நாகரிகத்தின் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய உல்லாசபுரிகளாக,
செல்வ செழிப்பின் அடையாளங்களான வானுயர்ந்த கட்டிடங்கள்,
குறுக்கும் நெடுக்குமாக பல அடுக்குமாடி பாலங்கள்,
பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளையும், நகரங்களையும் இணைக்கும் நெடுந்தூரச் சாலைகள்,
தொலைத்தொடர்பு சாதனங்கள்,
ரயில் போக்குவரத்து,
பாலைவனச் சோலைகளாக ஆங்காங்கே பசுமை பூத்து நிற்கும் பூங்காக்கள்,
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
வகைவகையான சொகுசு வீடுகள் என்று எதுவெல்லாம் இன்று நம் கண்ணில் படுகிறதோ அத்தனையிலும்
தங்கள் வியர்வையை, கடும் உழைப்பை கலந்தவர்கள் கீழைநாட்டு பிரஜைகள்தான்.
அவர்களில் குறிப்பாக இந்தியர்களுக்கென்று தன்னிகரற்ற தனி இடம் உண்டு என்பதை கீழே உள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
படித்துப் பாருங்களேன்! நாமா இப்படி? என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் சதவீதம்?
சவூதி அரேபியாவில் மொத்த வெளிநாட்டவரில் 20% இந்தியர்கள்.
ஓமனில் உள்ள 61% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
குவைத்தில் உள்ள 83% வெளிநாட்டவரில் 25% இந்தியர்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 93% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றமும், வெளிநாட்டவருக்கான வாய்ப்பும்
விரைவான மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சியும், முன்னேற்றப் பாதைக்கான உடனடித் திட்டங்களும்.
உள்நாட்டில் திறமையான டாக்டர்கள், இன்ஜினியர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பற்றாக்குறை.
செல்வச் செழிப்பான நாடுகளாக இருப்பதால், குறைந்த செலவில் திறமையான வெளிநாட்டவர்களை பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை.
பல முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான ஒப்பந்தங்கள் இந்தியர்களோடும் இந்திய நிறுவனங்களோடும் தொடர்பு கொண்டதாயிருக்கின்றன.
கட்டமைப்பு பணிகள்
நாட்டின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு பணிகளுக்காக படித்த மற்றும் படிக்காத மனித ஆற்றல் பெருமளவில் தேவைப்படுகிறது.
பல மத்தியக் கிழக்கு நாடுகள் பெரிய பாலங்கள், தொலைத்தொடர்பு, மருத்துவ மற்றும் வணிக வளாக கட்டமைப்புகளை பெருமளவில் ஊக்கப்படுத்துகின்றன.
உஷ்ணமான பாலைவன பிரதேசமாக இருப்பதால் பெரும்பாலும் கடுமையான சுடுமணலில் தான் வேலை என்ற நிர்பந்தம்.
இந்தியர்கள் இதுபோன்ற கடினமான வேலைகளில் இயற்கையாகவே பழக்கப்பட்டவர்கள்.
மற்றவர்களால் செய்ய இயலாதவற்றை இந்தியர்களால் எப்படி செய்ய முடிகிறது?
இந்தியாவினால் குறைந்த விலைக்கு அதிக மனித ஆற்றலை வழங்க முடியும்.
பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் மனித ஆற்றலுடன் போட்டிபோட இயலாது.
மேற்கத்திய நாட்டவர்கள் சாதாரண கூலி வேலைகளுக்கு வர மாட்டார்கள்.
இந்தியர்கள் அசுத்தமோ, ஆபத்துக்களோ நிறைந்த இன்னபிற சாதாரண வேலைகளைச் செய்ய தயங்குவதில்லை.
இந்தியர்களிடமிருந்து கிடைக்கும் உள்நாட்டு செலாவணி
இந்தியர்கள் தாங்கள் தங்கும் இடங்களுக்கு வாடகை தரவேண்டும். அவர்களால் எந்த சொத்தையும் அங்கே வாங்க இயலாது. இது பல பில்லியன் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் துறையில் பெற்றுத் தருகிறது.
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக வருமானங்கள்.
குடும்பங்களுடன் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கே தங்களது சேவைகளை வழங்க எத்தனிக்கிறார்கள்.
அன்னிய செலாவணி முதலீட்டாளர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாகக் கொண்ட சாப்ரியஸின் ஜம்போ குரூப் நிறுவனம். இது 25 நாடுகளில் 28 கம்பெனிகளையும் 20 ஆயிரம் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அலீ யூசுப் நிறுவனத்தின் எம்கி குரூப் 10,800 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பி.ஆர். செட்டி நிறுவனத்தின் நியூ மெடிக்கல் சென்டர் குரூப் 3,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர்கள் ஆகும்.
ஓமனைச் சார்ந்த கனக்சி கிம்ஜி நிறுவனத்தின் கிம்ஜி ராம்தாஸ் நிறுவனம்.
விமான போக்குவரத்து
மத்தியக் கிழக்கின் பெரிய விமான நிறுவனங்களான: கல்ஃப் ஏர், குவைத் ஏர்வேஸ். சவூதியா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஓமன் ஏர்; போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவை நம்பியே நடத்தப்படுகின்றன.
இந்த ஏர்லைன்ஸ்களின்; 50% விமான போக்குவரத்து இந்திய துணைக் கண்டத்திற்கு செல்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு 100 விமானங்களை அரபு நாடுகளுக்கு இயக்குகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு நிகர வருவாயாக 1000 கோடியை ஈட்டுகிறது.
ஈராக் - புதிர்
சமீப காலங்களில் நடந்த பல்வேறு சிக்கல்கள், போர், மற்றும் நோய் போன்ற காரணங்களால் இராக் தன்னுடைய மனித ஆற்றலை மேம்படுத்த அல்லது பயன்படுத்த இயலரத நிலையில் உள்ளது.
இராக்கின் புணர் நிர்மாணத்திற்கான புதிய ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தரப்படுகிpன்றன.
இத்தகைய புணர் நிர்மாணத்திற்காக குவைத்தில் உள்ள சில நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கின்றன.
By பிரகாஷ் குமார்
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
இப்படிக்கு,என்றும் அன்புடன்,
Regards
Na.Prasannan
n.prasannam@yahoo.com
n.prasannam@gmail.com
94880-19015, 99415-05431
See my new slideshare site for Power Points
http://www.slideshare.net/nprasannam
Wednesday, March 3, 2010
கொடிகட்டி பறக்கும் வளைகுடாவில் நான்!
கொடிகட்டி பறக்கும் வளைகுடாவில் நான்!
இறந்துப்போன உறவினர்களுக்கு
வழிந்தோடும் கண்ணீரால் மட்டுமே
பலமுறை நல்லடக்கம்!
கருகிய கண்களோடு
மெல்லிய உதறலோடு
ஆறுதல் மட்டுமே சொல்லும் அவலம்!!
தினமும் கதறும் இதயத்திற்கு
மருந்தாய் மனைவியின் குரல்!
காதுகளின் வழியே மூளையை கிறங்கடிக்கும்
என் மழலையின் சிரிப்பலைகள்!!
எத்துனை முறை தொடர்பு கொண்டாலும்
அத்துனை முறையும் அம்மாவின் அதிகாரம்
"நல்ல சாப்பிடு"!!
வடிகட்டிய வயதுடன்
கொடிகட்டி பறக்கும் வளைகுடாவில் நான்!
வளர்ச்சியடைந்த விஞ்சானதால்
எல்லோரும் புகைப்படமாய் என் பாக்கெட்டில்!!
மாதத்திற்கு இத்தனை நாட்கள் என தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்க்கும் நான்
விடுமுறையை!!
பணயம் வைத்துவிட்டுதான் வந்திருக்கிறோம்
பந்தங்களை பணத்திற்காக!!
- யாசர் அரஃபாத்
itzyasa@gmail.com
இறந்துப்போன உறவினர்களுக்கு
வழிந்தோடும் கண்ணீரால் மட்டுமே
பலமுறை நல்லடக்கம்!
கருகிய கண்களோடு
மெல்லிய உதறலோடு
ஆறுதல் மட்டுமே சொல்லும் அவலம்!!
தினமும் கதறும் இதயத்திற்கு
மருந்தாய் மனைவியின் குரல்!
காதுகளின் வழியே மூளையை கிறங்கடிக்கும்
என் மழலையின் சிரிப்பலைகள்!!
எத்துனை முறை தொடர்பு கொண்டாலும்
அத்துனை முறையும் அம்மாவின் அதிகாரம்
"நல்ல சாப்பிடு"!!
வடிகட்டிய வயதுடன்
கொடிகட்டி பறக்கும் வளைகுடாவில் நான்!
வளர்ச்சியடைந்த விஞ்சானதால்
எல்லோரும் புகைப்படமாய் என் பாக்கெட்டில்!!
மாதத்திற்கு இத்தனை நாட்கள் என தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்க்கும் நான்
விடுமுறையை!!
பணயம் வைத்துவிட்டுதான் வந்திருக்கிறோம்
பந்தங்களை பணத்திற்காக!!
- யாசர் அரஃபாத்
itzyasa@gmail.com
Saturday, October 25, 2008
வளைகுடா மாப்பிள்ளை
வளைகுடா மாப்பிள்ளை
- மரியம் குமாரன்
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்
அன்புள்ள மனைவிக்கு,
நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..
என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது
அன்புள்ள கணவனுக்கு
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.
நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.
மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.
பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்
அன்புள்ள மனைவிக்கு,
நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.
உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.
கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.
ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,
அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.
புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது
மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.
- நன்றி: மக்கள் உரிமை
- மரியம் குமாரன்
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்
அன்புள்ள மனைவிக்கு,
நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..
என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது
அன்புள்ள கணவனுக்கு
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.
நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.
மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.
பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்
அன்புள்ள மனைவிக்கு,
நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.
உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.
கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.
ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,
அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.
புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது
மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.
- நன்றி: மக்கள் உரிமை
Saturday, January 19, 2008
Real life in GULF
Real life in GULF
* Local calls are free
* Petrol is cheaper than water, Payment for drainage too
* Any building construction finishes in 3 months
* Unqualified get more salary than Qualified
* Show-off matters more than real quality & performance
* Laborers are paid less than what they can earn back in their own country
* Companies can kick out their employees without any reason
* Wastas (recommendation) are more powerful than money
* Cleaners have more Wasta than officers
* Watchman has more Rights than the Building Owner
* Office boy & Drivers have more influence on Boss than Manager.......
* Gulf climate changes so fast, in one hour u can see raining, dust storm, hot / humid / chilling weather
* Gulf is located in desert, still u find greenery everywhere
* If u can't earn money in the Gulf, u can earn anywhere in the world
* In Gulf, time goes very fast, Friday to Friday comes u never know, its so fast
* Every bachelor has a dream of getting married and buying a house in India
* U love your parents, friends, relatives 100 times more than when you were together
* Being at home is more painful than being at work
* Theatres are full of Arab nationals whenever there is a movie of Salman / Sharukh
* Gulf girls sing Hindi songs but don't understand anything
* Dance Bars and Pubs more than that in Bangalore
* A ladies hair saloon every 5 meters
* Food/Grocery delivery to the car
* A Starbucks every 10 meters
* Hard Rock Cafe with no alcohol
* In one single flat sharing with 5 families
* In one single room sharing with 5 bachelors.
* A Shopping Mall located every 2 km
* Highway lanes differentiated for slow & fast drivers
* Getting a license is more difficult than buying a car
* Smashed cars are more than bugs
* Parking charge: 2 Dirham for 1 hour - 5 Dirham for 2 hours & so on
* No Queues for women
* Medical is very poor
* Everybody is looking for their annual vacation.
* U can find healthy food in everywhere.
TRAFFIC SIGNAL IN GULF:
* GREEN: Signal to go for Indians,Americans & Europeans
* YELLOW: Signal to go for Egyptians and Pakistanis,
* RED : Signal to go for Kuwaitis, Saudis , Palestinians & Lebanese
Last but not least.
There is no PEACEFUL LIFE
Don't be afraid that your life will end, be afraid that it will never begin
Thanks & Brgds
Adam.Arifin
Ras Al Khaimah
UAE
THOPPUTHURAI@gmail.com
* Local calls are free
* Petrol is cheaper than water, Payment for drainage too
* Any building construction finishes in 3 months
* Unqualified get more salary than Qualified
* Show-off matters more than real quality & performance
* Laborers are paid less than what they can earn back in their own country
* Companies can kick out their employees without any reason
* Wastas (recommendation) are more powerful than money
* Cleaners have more Wasta than officers
* Watchman has more Rights than the Building Owner
* Office boy & Drivers have more influence on Boss than Manager.......
* Gulf climate changes so fast, in one hour u can see raining, dust storm, hot / humid / chilling weather
* Gulf is located in desert, still u find greenery everywhere
* If u can't earn money in the Gulf, u can earn anywhere in the world
* In Gulf, time goes very fast, Friday to Friday comes u never know, its so fast
* Every bachelor has a dream of getting married and buying a house in India
* U love your parents, friends, relatives 100 times more than when you were together
* Being at home is more painful than being at work
* Theatres are full of Arab nationals whenever there is a movie of Salman / Sharukh
* Gulf girls sing Hindi songs but don't understand anything
* Dance Bars and Pubs more than that in Bangalore
* A ladies hair saloon every 5 meters
* Food/Grocery delivery to the car
* A Starbucks every 10 meters
* Hard Rock Cafe with no alcohol
* In one single flat sharing with 5 families
* In one single room sharing with 5 bachelors.
* A Shopping Mall located every 2 km
* Highway lanes differentiated for slow & fast drivers
* Getting a license is more difficult than buying a car
* Smashed cars are more than bugs
* Parking charge: 2 Dirham for 1 hour - 5 Dirham for 2 hours & so on
* No Queues for women
* Medical is very poor
* Everybody is looking for their annual vacation.
* U can find healthy food in everywhere.
TRAFFIC SIGNAL IN GULF:
* GREEN: Signal to go for Indians,Americans & Europeans
* YELLOW: Signal to go for Egyptians and Pakistanis,
* RED : Signal to go for Kuwaitis, Saudis , Palestinians & Lebanese
Last but not least.
There is no PEACEFUL LIFE
Don't be afraid that your life will end, be afraid that it will never begin
Thanks & Brgds
Adam.Arifin
Ras Al Khaimah
UAE
THOPPUTHURAI@gmail.com
Subscribe to:
Posts (Atom)