Wednesday, November 26, 2008

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை கண்காட்சி

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை கண்காட்சி
நாளை தொடக்கம்


மதுரை, நவ.26-

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளுடன் அமைக்கப்படும் புத்தக கண்காட்சியில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. இந்த கண்காட்சி நாளை தொடங்குகிறது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புத்தக திருவிழா

மதுரையில் புத்தக விற்பனை கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை(27-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி வரை நடைபெறும். இங்கு 150 அரங்குகள் ஒதுக்கப்பட்டு, 1 லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கான நூல்கள், கல்வி, தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழ், ஆங்கில புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இந்த புத்தக திருவிழாவில் தினமும் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், குறும்படம், கவியரங்கம் உள்ளிட்டவை நடைபெறும். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, மனப்பாடம், ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகள் மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளிகூடத்தில் வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். தினமும் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

நாளை தொடக்கம்

விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புத்தக கண்காட்சிக்கு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரையில் புத்தக திருவிழாவிற்கு 3 லட்சம் பேர் வந்து சென்றனர். இந்த ஆண்டு 5 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார். அமைச்சர் தமிழரசி உள்பட பலர் பேசுகிறார்கள். விழாவுக்கு மதுரை கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். கூடுதல் கலெக்டர் தாரேஷ் அகமது, மாநகராட்சி கமிஷனர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Saudi Visit Visa Requirements

Who requires a visa?

Required by all except the following:
(a) nationals of Bahrain, Kuwait, Oman, Qatar and United Arab
Emirates;
(b) transit passengers continuing their journey by the same or first
connecting aircraft within 18 hours, provided holding valid onward
or return documentation, not leaving the airport and making no
further landing in Saudi Arabia, except nationals of Burkina Faso,
Mali, Niger and Nigeria who always require a transit visa.
(c) holders of re-entry permits and `Landing Permits' issued by the
Saudi Arabian Ministry of Foreign Affairs (see Contact Addresses
section).
Restricted entry: (a) Holders of an Israeli passport or passports
with Israeli stamps in them. (b) Passengers not complying with Saudi
conventions of dress and behavior, including those who appear to be
in a state of intoxication, will be refused entry (see Social
Conventions section). (c) There are special regulations concerning
pilgrims entering Saudi Arabia. Contact the Consulate (or Consular
section at Embassy) for further information.

Saudi Arabia Visa Requirements
The following must be met in order to process your Visa

Passports must be valid for at least six months
Provide photocopies of everything you send or bring in with your
Visa Application
Medical Reports (when required) Must be stamped in your local
residence or application area by the local Health Department; and
also the Doctors medical ID number Must be included.
The photograph for your application should have the following
specifications:

White background.
Dimensions should not exceed 4x6 cm.
The face from forehead to chin should be 70 - 80 % of the vertical
dimension.
Business Visit Visa

A white visa application form, a valid passport and one photograph.
An original cover letter from a registered company or firm based in
the US indicating the name of the Saudi Arabian company, the nature
of the applicant's visit, length of stay and financial
responsibility. The letter must bear the company's stamp or seal.
An application from the sponsor in the Kingdom on the applicant's
behalf to the Ministry of Foreign Affairs, or an original letter of
invitation from the company in Saudi Arabia. This letter must be
signed and sealed by the company and stamped by the Saudi Chamber of
Commerce. For businesswomen, the invitation must come from the Saudi
Ministry of Foreign Affairs.

Diplomatic And Official Visa

A white visa application form, two (2) photographs, and a valid
official diplomatic passport.
A letter from the concerned US Departments or concerned Embassy.
Diplomatic and official visas are gratis.
Flight information must be furnished in detail, in particular the
last flight before entering Saudi Arabia.
Who requires a visa?
Required by all except the following:
(a) nationals of Bahrain, Kuwait, Oman, Qatar and United Arab
Emirates;
(b) transit passengers continuing their journey by the same or first
connecting aircraft within 18 hours, provided holding valid onward
or return documentation, not leaving the airport and making no
further landing in Saudi Arabia, except nationals of Burkina Faso,
Mali, Niger and Nigeria who always require a transit visa.
(c) holders of re-entry permits and `Landing Permits' issued by the
Saudi Arabian Ministry of Foreign Affairs (see Contact Addresses
section).
Restricted entry: (a) Holders of an Israeli passport or passports
with Israeli stamps in them. (b) Passengers not complying with Saudi
conventions of dress and behavior, including those who appear to be
in a state of intoxication, will be refused entry (see Social
Conventions section). (c) There are special regulations concerning
pilgrims entering Saudi Arabia. Contact the Consulate (or Consular
section at Embassy) for further information.

Saudi Arabia Visa Requirements
The following must be met in order to process your Visa

Passports must be valid for at least six months
Provide photocopies of everything you send or bring in with your
Visa Application
Medical Reports (when required) Must be stamped in your local
residence or application area by the local Health Department; and
also the Doctors medical ID number Must be included.
The photograph for your application should have the following
specifications:

White background.
Dimensions should not exceed 4x6 cm.
The face from forehead to chin should be 70 - 80 % of the vertical
dimension.
Business Visit Visa

A white visa application form, a valid passport and one photograph.
An original cover letter from a registered company or firm based in
the US indicating the name of the Saudi Arabian company, the nature
of the applicant's visit, length of stay and financial
responsibility. The letter must bear the company's stamp or seal.
An application from the sponsor in the Kingdom on the applicant's
behalf to the Ministry of Foreign Affairs, or an original letter of
invitation from the company in Saudi Arabia. This letter must be
signed and sealed by the company and stamped by the Saudi Chamber of
Commerce. For businesswomen, the invitation must come from the Saudi
Ministry of Foreign Affairs.

Diplomatic And Official Visa

A white visa application form, two (2) photographs, and a valid
official diplomatic passport.
A letter from the concerned US Departments or concerned Embassy.
Diplomatic and official visas are gratis.
Flight information must be furnished in detail, in particular the
last flight before entering Saudi Arabia.
Who requires a visa?
Required by all except the following:
(a) nationals of Bahrain, Kuwait, Oman, Qatar and United Arab
Emirates;
(b) transit passengers continuing their journey by the same or first
connecting aircraft within 18 hours, provided holding valid onward
or return documentation, not leaving the airport and making no
further landing in Saudi Arabia, except nationals of Burkina Faso,
Mali, Niger and Nigeria who always require a transit visa.
(c) holders of re-entry permits and `Landing Permits' issued by the
Saudi Arabian Ministry of Foreign Affairs (see Contact Addresses
section).
Restricted entry: (a) Holders of an Israeli passport or passports
with Israeli stamps in them. (b) Passengers not complying with Saudi
conventions of dress and behavior, including those who appear to be
in a state of intoxication, will be refused entry (see Social
Conventions section). (c) There are special regulations concerning
pilgrims entering Saudi Arabia. Contact the Consulate (or Consular
section at Embassy) for further information.

Saudi Arabia Visa Requirements
The following must be met in order to process your Visa

Passports must be valid for at least six months
Provide photocopies of everything you send or bring in with your
Visa Application
Medical Reports (when required) Must be stamped in your local
residence or application area by the local Health Department; and
also the Doctors medical ID number Must be included.
The photograph for your application should have the following
specifications:

White background.
Dimensions should not exceed 4x6 cm.
The face from forehead to chin should be 70 - 80 % of the vertical
dimension.
Business Visit Visa

A white visa application form, a valid passport and one photograph.
An original cover letter from a registered company or firm based in
the US indicating the name of the Saudi Arabian company, the nature
of the applicant's visit, length of stay and financial
responsibility. The letter must bear the company's stamp or seal.
An application from the sponsor in the Kingdom on the applicant's
behalf to the Ministry of Foreign Affairs, or an original letter of
invitation from the company in Saudi Arabia. This letter must be
signed and sealed by the company and stamped by the Saudi Chamber of
Commerce. For businesswomen, the invitation must come from the Saudi
Ministry of Foreign Affairs.

Diplomatic And Official Visa

A white visa application form, two (2) photographs, and a valid
official diplomatic passport.
A letter from the concerned US Departments or concerned Embassy.
Diplomatic and official visas are gratis.
Flight information must be furnished in detail, in particular the
last flight before entering Saudi Arabia.
Mahaboob Basha, mahaboob59@yahoo.co.in

சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி

இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றைச் சத்தியமார்க்கம்.காம் நல்லமுறையில் நடத்தியது. அதனைப் போன்றதொரு கட்டுரைப் போட்டியினை தமிழ் மொழியில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் சத்தியமார்க்கம்.காம் நடத்தத் தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றோடு, எடுத்தாளப்படும் கட்டுரைத் தலைப்பில் சிறப்பான ஆய்வுடன் கூடிய சமுதாயத்தின் எதிர்கால நன்மைக்கான சரியானத் தீர்வைத் தரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் தங்களின் அரிய சிந்தனைகளைச் சிறப்பான ஆய்வுகளுடனும் அதற்குரிய சரியான தீர்வுகளுடனும் சமர்ப்பிக்க முன்வருமாறு தமிழ் சமுதாய வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.


------------------------------------------
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
------------------------------------------
(பரிசுகள் விபரம்: ஆண்கள் & பெண்கள்)
சிறப்புப் பரிசு: x 1



லேப்டாப் (acer-aspire)

முதல் பரிசு: x 2 (ஆண்-1, பெண்-1)




டிஜிட்டல் திருக்குர்ஆன்
இரண்டாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,
ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்.

மூன்றாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்

ஆறுதல் பரிசுகள் : x 2 (ஆண்கள்-2, பெண்கள்-2)

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்




கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

3.5 சத இடஒதுக்கீடு தீர்வாகுமா?.
இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?
இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!
உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்?
இந்திய அரசியல் முஸ்லிம்களுக்கு ஹராமா?!
இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு...?
காங்கிரஸில் சங்கபரிவாரத்தின் ஊடுருவல்.
பெருகிவரும் போலி முஸ்லிம் தீவிரவாத குற்றச்சாட்டுக்கான தீர்வு!
உலக அமைதி இஸ்லாத்தினூடாக..!
உலகின் அழியா நிலையான இஸம் - இஸ்லாம்!
இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு.
முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்!
உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!
இஸ்லாமியப் பிரச்சாரம் திரைப்படத்துறை மூலமாக...
சாவர்க்கரும் பாராளுமன்றத்தீட்டும்!
இலங்கை முஸ்லிம்களின் அவலநிலைக்கான தீர்வு!
குண்டுவெடிப்புகளும் திரைமறைவு சதிகளும்!
ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?
போராட்டம் - நிலையான வாழ்விற்கான ஒரே வழி!.
அமெரிக்கா இஸ்லாத்தை நோக்கி..!.
மத்திய கிழக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!
மஸ்ஜிதுல் அக்ஸா - முஸ்லிம்களின் ஆன்மா!
சியோனிஸ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி!
ஊழல் அரசியலை ஒழிப்பதற்கான வழி!
தமிழகம் - ஜாதி அரசியலிலிருந்து விடியலை நோக்கி!


-------------------------------
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
-------------------------------
1. போட்டியாளர் மேற்கூறப்பட்ட தலைப்புகளில் அதிகபட்சமாக மூன்று தலைப்பில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.

2. கொடுக்கப்பட்ட தலைப்பைத் தழுவி மட்டுமே கட்டுரை இருத்தல் வேண்டும்; சம்பந்தப்பட்டத் தலைப்புக்கான தீர்வு இஸ்லாமிய அடிப்படையில் அலசப்பட்டிருக்க வேண்டும்.

3. போட்டியாளர் சமர்ப்பிக்கும் கட்டுரைகள் தானே சொந்தமாய் எழுதியதாகவும் முன் எந்தத் தாளிகளிலோ இணையத் தளத்திலோ வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்.

4. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் குறிப்பிடும் பொழுதுத் தெளிவாக எண்களுடன் குறிப்பிட வேண்டும்.

5. கட்டுரை கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும். எந்த நாட்டினதும் சமயம், அரசியல் கட்சி, இயக்கங்கள் ஆகியவற்றையோ தனிமனிதரையோ இழித்துரைப்பதாகவோ தாக்குவதாகவோ இல்லாமல், தெளிவான ஆதாரங்களுடனும் அழகிய வாதங்களுடன் ஓர் அழகிய இஸ்லாமியப் படைப்பு என்ற தகுதியை நாடுவதாகவும் நயத்துடனும் எழுதப்படவேண்டும்.

6. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் கட்டுரைப்போட்டி குழுவினர்களால் தணிக்கை செய்யப்பட்டு தளத்தில் பதிக்கப்படும்.

7. கட்டுரைப் போட்டியில் பங்குபெறுபவருக்கு வயதிற்கான வரம்பு ஏதுமில்லை.

8. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அறிவிக்கப்படும்.

9. தமிழ் அறிந்த சர்வதேச அளவிலான அனைத்துலக வாசகர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

10. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.

11. போட்டியாளர் கண்டிப்பாகத் தனது தொடர்பு எண்ணைத் தவறாமல் கட்டுரையின் இறுதியில் தெரிவித்திருக்க வேண்டும்.

12. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

------------------------------
கட்டுரை எழுதுபவர் கவனத்திற்கு :
------------------------------
1. கட்டுரைகள் தட்டச்சியோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ எவ்வடிவில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.

2. கட்டுரை தட்டச்சப்பட்டு அனுப்பப்படுகிறது எனில், கட்டுரையின் எழுத்துரு எண் 10 அளவை தேர்ந்தெடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டு, A4 தாள் அளவில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டுரை வரைவதற்குத் துணை நின்ற நூல்கள், துணை ஆக்கங்களுக்கான குறிப்புக்களைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டும். இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தால் தள முகவரியைக் குறிப்பிட வேண்டும். சுட்டப்படும் ஆதாரங்கள் இணையத்தில் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரையின் துவக்கப் பக்கத்தில் கட்டுரைக்கான தலைப்பைக் குறிப்பிட வேண்டும்.

3. குர்ஆன், ஹதீஸ்களை பக்கபலமாக சேர்க்க விரும்புபவர்கள், மிகவும் அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிக அளவில் இறைவசனங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். இறைவசனங்கள், ஹதீஸ் சம்பவங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, சொல்லவரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.

4. கட்டுரையாளரின் பெயர் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்ணிட்டு முழு முகவரியுடன் 15.12.2008 அன்று இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வந்து சேரும் ஆக்கங்கள் போட்டிக்குப் பரிசீலிக்கப்படாது.

5. கட்டுரைகளை contest@satyamargam.com This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரையாளரின் ஆக்கத்தை நிர்வாகம் பெற்றவுடன் அதை உறுதிப்படுத்தும் செய்தி கட்டுரையாளருக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

7. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிடும். பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் இருப்பின் அவர்கள் வெளியிட விரும்பும் புனைப்பெயர்களின் விபரங்களைக் கட்டுரையின் முடிவில் குறிப்பிட வேண்டும்.
போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், ஆலோசனை வழங்க விரும்புவோர் நிர்வாகத்தை contest@satyamargam.com This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

ரியாத் தமிழ்ச் சங்கம்

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எழுத்துக்கூடமானது கடந்த இரண்டு வருடங்களாக மாதத்தின்
முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் இலக்கியக்கூட்டம் நடத்தி ரியாத் வாழ் தமிழ்
எழுத்தாளர்களை எழுத்துலகில் மேலும் வளர ஊக்குவித்து வருவது நாம் அனைவருக்கும்
தெரிந்ததே. நமது எழுத்துக்கூட கிரீடத்தில் மற்றோர் இறகாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று
எழுத்துக்கூடத்தின் தமிழ் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்துக்கூடத்தின் இரண்டு வருட கனவு
நனவாவதற்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளது.

நூலகத்திற்கு திரு. வெற்றிவேல் அவர்கள் கதாவிலாசம் மற்றும் தமிழ் என்ஸைக்ளோபீடியா பாகம்
1, 2 3 ஆகிய புத்தகங்களையும், திரு. சபாபதி அவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள்
பலவற்றையும், முனைவர் மாசிலாமணி அவர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட பலதரப்பட்ட செம்மையான
தமிழ் புத்தகங்களையும் முதற்கட்டமாக வழங்கியுள்ளனர். புத்தகம் வழங்கிய அனைவருக்கும் ரியாத்
தமிழ்ச் சங்கம் தனது நன்றிகளை காணிக்கையாக்குகிறது. இந்த நூலகத்திற்காக சென்னையில்
இருந்து பல புத்தகங்களை தேடித் தேடி தெரிவுசெய்து நமக்கு வழங்கிய எழுத்துக்கூடத்தின்
மூத்த உறுப்பினர் திருமதி. விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களுக்கும் நமது தனிப்பட்ட
நன்றிகளை ரியாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

புத்தகங்களின் வரிசை மற்றும் அன்பளிப்பு செய்தவர்களின் விபரம் விரைவில் ரியாத் தமிழ்ச்
சங்கத்தின் வலைத்தளத்தில் (http://www.riyadhtamilsangam.com/) வெளியாகும் என்பதனைத்
தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த எழுத்துக்கூடக் கூட்டங்களில் மேலும் பல புத்தகங்கள்
அன்பளிப்பாக வர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
கி.வை. ராஜா
செயலாளர், ரியாத் தமிழ்ச் சங்கம்
kvraja@gmail.com

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது


புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த நோயின்
கடுமையிலிருந்து தப்ப இரண்டே வழிகள் தான்.முதலாவது நோய் வராதவாறு
பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது.இரண்டாவது, தப்பித் தவறி வந்தால்
இதை துவக்கக் கட்டத்திலேயே கண்டறிவது.

இந்த முயற்சியில் உலகெங்கும் பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்
தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.இந்த ஓட்டப்பந்தயத்தில் டாக்டர்.வ.மாசிலாமணி
என்ற தமிழக விஞ்ஞானி ஒரு அற்புத சாதனைப் படைத்து சவூதி இளவரசர் மேதகு
நாயிஃபா ( Prince Naifa) அவர்களிடம் பரிசும் பட்டயமும் பெற்றுள்ளார்.பரிசுத் தொகை
இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய்.அவருக்கும், அவருக்குத் துணையாக இருந்த
மருத்துவர்கள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பாராட்டி ,பரிசுகள்
வழங்கி ரியாத் சவூதி மன்னர் பல்கலைகழகம் 3-11-2008 அன்று விழா எடுத்து சிறப்பு
செய்தது.அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட
முதல் கௌரவம் இது.முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒர் தமிழக விஞ்ஞானி.
இந்தியாவும் - குறிப்பாய் தமிழகமும் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.

அவர் அப்படி என்னதான் செய்தார்?

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை
லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார்.இதேபோல் அதிகாலையில் வரும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக்
கூறுகளையும் பகுத்தெடுத்தார்.இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நோயற்றவர்களிடம் இல்லாத
சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தன.இதைக் கொண்டு புதிதாக
மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதியக் கருத்தமைவை (Technique)கொண்டுவந்தார்
இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய்
இருக்கிறதா இல்லையா , இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா என்பன போன்ற பலவிஷயங்களை கணிக்கமுடியும்.இந்தப் புதிய முறை இந்திய மத்திய அரசின் ICMR ல்
தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையின் தொடர் ஆராய்ச்சிக் காரணமாகத்தான் நுரையீரல் புற்று நோய்க்கு மட்டும்
தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார்.இந்த முறையின்
நம்பகத்தன்மை (Reliablity) 80% என்பதும் இதுவரையில் இத்தகைய்ய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த புதிய முறையின் துணைக் கொண்டு நுரையீரல் புற்று நோயின் துவக்க நிலையைக் கண்டறிவது
மட்டுமன்றி தொடர்ந்து பலகாலம் புகை பிடித்துக் கொண்டிருப்பவரில் யாருக்கு இந்நோய் வந்து
கொண்டிருக்கிறது என்பதையும் நிர்ணயித்து எச்சரிக்கை மணி அடிக்க முடியும்.

masilamaniv@yahoo.com

Understand Salah and the Qur'an - the Easy Way

A Short Course [Language: English] on

"Begin to
Understand Salah and the Qur'an - the Easy Way"


[organized by TAFAREG-Jeddah in conjunction with WAMY]

Conducted by:
Dr. Abdulazeez Abdulraheem
http://www.understandquran.com/

1st Day [Nov 27, 2008, Thursday]
04:30 pm – 09:00 pm (including ½ hr Break)

2nd Day [Nov 28, 2008, Friday]
09:30 am – 11:30 am & 02:30 pm – 05:30 pm

Venue:
WAMY Auditorium (in the common section), Sitheen Road, Jeddah
[opp. Albaik/close to Palastine Road Bridge]

Note: Reading materials, refreshments and lunch shall be provided

LIMITED SEATS ONLY
(Register early with your contact details to ensure seats)

For Registration, Call TAFAREG-Jeddah Coordinator
Br. Abdul Salam @ 0564206485 and/or
send email to tafaregjeddah@gmail.com
About the course: The course consists of common recitations (Last few Surahs of Qur'an, recitations of Salah and other supplications) and basic Arabic grammar. Through these, you will also learn many words, which occur thousands of times in the Qur'an.
· Were you not looking for someone who can teach you basic Arabic quickly and effectively.
· You will not only be taught the words but also the techniques to remember them.
· These techniques are extremely powerful and can be used for studying any subject (You can guide your kids too!!!).
· You will learn basic Arabic grammar forms in minutes which normally take hours!!!

· Can't you spare even 9 hours to learn the basics Arabic of Qur'an or of Salah which you have been praying for years and years without understanding?

TAFAREG-Jeddah
http://groups.yahoo.com/group/TAFAREG-Jeddah/

tafaregjeddah@gmail.com
.

சமூகம் ஆற்றவேண்டிய பணிகள்

அன்புள்ள சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அபுதாபியில் அய்மான் சங்கம் மூலம் ‌'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்' ஏற்பாடு செய்யப்பட்டு கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்க‌த்தின் நோக்கமாக சமூகம் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி கவிக்கோ எழுதிய சிறிய நூல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், முஹ‌ல்லா மற்றும் ஊர் ஜமாத்துக்கள் பைத்துல்மால் ஏற்படுத்தும்படியும் வலியுருத்தப்பட்டது. பைத்துல்மால் ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு அய்மான் சங்கம் தகுந்த ஆலோசனைகளையும், அதற்கான வழிமுறைகளையும் தர முன் வந்துள்ளது. விபரம் வேண்டுவோர், கீழ்கண்ட நபர்களை தொடர்புக்கொள்ளவும்:

Janab A. Shahul Hameed, (Adirampattinam), 050-7824129, ashahul@gmail.com
Janab M.K. Mubarak Ali, (Devadanapatti), 050-7523755, mua.ad@adia.ae
Janab S.A.C. Hameed, (Kayalpattinam), 050-6212569, hameedsac@hotmail.com
Janab Mohamed Iqbal, (Eravanchery), 050-3162356, iqbal@alpha.ae

அய்மான் சங்கம்,
அபுதாபி

கேள்விகளால் ஒரு வேள்வி

கேள்விகளால் ஒரு வேள்வி

http://jazeela.blogspot.com/


துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.

இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் அது கேள்வி- பதில் நேரம் என்று தெரிந்தது. முதல் கேள்வியை முத்துகுமரன் சுவாரஸ்யத்துடன் ஆரம்பித்தார். 'புதுக்கவிதை எழுதுபவருக்கு மரபுக் கவிதை தெரிந்திருக்க வேண்டுமா?' என்று கேட்க. ’இப்படி உங்களுக்கு தோன்றுவதே பெரிய விஷயம்தான்’ என்று தொடங்கிய கவிக்கோ புதுக்கவிதையை பெரும்பாலோர் வசனக்கவிதையாக கருத்தை முதலிடம் கொண்டு எழுதிவிடுகிறார்கள். கருத்தை மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது நயமும் அவசியமென்றார்கள்.


ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுத் துளைத்ததற்கெல்லாம் ஊற்றாக தனது அனுபவத்தை வடித்தார்கள் கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள். மனிதனை வரையறுக்க ஒரு கூட்டம் கூடியதாம் அதில் இரு கால் மிருகம் தான் மனிதன் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று ஒரு கோழியை கொண்டு வந்து ‘அப்ப இது மனிதனா’ என்று கேலி செய்ய, சரி இறகில்லாத இரண்டு கால் பிராணி தான் மனிதன் என்று முடிக்கும் முன் மறுபடியும் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இறகில்லாத கோழியை மறுபடியும் கொண்டு வந்து கேள்வி கேட்க - மனிதனை வரையறுக்க முடியாது என்று முடிவானதாம். அதே போல் தான் கவிதையையும் வரையறுக்க முடியாது என்று முடித்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர் நீங்கள் காக்கை பற்றி எழுதியிருந்தீர்கள் அந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கு ஒப்புதலாக இருக்காது அதனை கேட்க விரும்புகிறேன் என்றதும். பல விஷயங்களை பல தளத்தில் பல ஆண்டுகளாக எழுதித் தள்ளுபவருக்கு அது எப்படி நினைவிருக்கும் ஆகையால் என்ன எழுதியிருந்தேன் என்று கேட்டவரையே திரும்பி வினவ. அவரும் அவருக்கு நினைவூட்டுவதாக அதனை எடுத்து தர, புரிந்துக் கொண்ட கவிக்கோ அவர்கள் விவரித்தார்கள். அவர் கறி வாங்க சென்றிருந்த போது ஒரு காக்கை சக காக்கையை சாப்பிட விடாமல் கொத்துவதை கண்டு வியந்தவருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றியதாம். காக்கையென்றாலே ஒரு வாய் சோறு கிடைத்தாலும் எல்லா காக்கைகளையும் அழைத்து உண்ணுமே இது என்ன வகையென்று யோசிக்கும் போது அவருக்கு பழங்காலத்தில் அரசர்களின் வினை நினைவுக்கு வந்ததாம். அரசர்கள் தான் உண்ணும் முன்பு அதில் விஷம் கலந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதற்காக நிறைய பொருட்களும் தங்கமும் தந்து தன்னுடனே ஒரு ஆளை தமக்காக முதலில் சாப்பிட்டு அதில் விஷமில்லாத பட்சத்தில் அரசர்கள் உண்ணுவார்களாம். சிலர் இந்த விஷயங்களுக்காக மைனாவையோ அல்லது வேறு பிராணிகளையோ வளர்ப்பார்களாம். விஷத்தை அருகில் கொண்டு சென்றாலே மைனாவின் கண்கள் சிவந்துவிடுமாம். அந்த விஷயம்தான் இந்த காக்கையின் செயலும் - காக்கை இயற்கையான பண்டத்தை பகிர்ந்து உண்ணாது மனிதன் படைத்த செயற்கையான உணவின் மீது நம்பிக்கையில்லாமல் சக காக்கைகளை அழைத்து உண்ணக் கண்டு பிறகு தின்று கொள்கிறதாக அவர் உணர்ந்ததாக கூறினார். அவர் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ சிந்தனை மிகவும் வித்தியாசமாக தோன்றியது.

தமிழை செம்மொழியாக்குவதின் பயன்களை விளக்கும் போது இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும், பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக்கியங்கள், பண்பாட்டுக் கருத்துக்கள், கலாச்சாரம் இவற்றை விளக்குவதற்காக தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும். ஓய்வு பெற்றவர் தமிழ் அறிஞர்களுக்கு கூட நல்லவேளை வரக்கூடும் என்று நான் அறியாத விஷயங்களையும் அறிய வைத்தார்.

படிமம், குறியீடு பற்றி பேசும் போது ’பெண்ணே உன் கண்கள் மீன்கள்’ என்று வடித்த வாக்கியத்தில் கூட பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதை கூறினார். கண்கள் மீன் வடிவில் இருப்பதால் சொல்லியிருக்கலாம் அல்லது வலை வீசச் சொல்கிறதாக எடுத்துக் கொள்ளலாம், எப்போதுமே தண்ணீரில் இருக்கிறது என்பதாகவும் பொருட்கொள்ளலாம் என்று ஒரே விஷயத்திற்கு பல கோணங்கள் உண்டு வாசிப்பவரின் அனுகுமுறையை பொருத்தே குறியீடுகளை புரிந்துக் கொள்ள முடியுமே தவிர எழுதுபவர் எல்லாவற்றையும் விளக்கி எழுத முடியாது அப்படி விவரித்திருந்தால் அது கவிதையல்ல என்பதற்கு உதாரணமாக

‘என் மனம்
அவளை நினைப்பேனென
அடம்பிடிக்கிறது - நான்
அதட்டினால் அழுகிறது’

என்று சொல்லும் போது மனதை படிமமாக்கி குழந்தையாக்கி கவிஞர் சொல்ல வருவது சிறப்பே தவிர மனம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது நான் அதட்டினால் அழுகிறது என்று விளக்குவதில் கவிதை காணாமல் போய்விடுகிறது என்று அவர் பாணியில் விளக்கினார்.

கவிஞர்கள் என்றாலே கொஞ்சம் கோபம் இருக்கும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்தான் எழுத்தில் வீரியமிருக்கும், வார்த்தைகளில் உண்மையிருக்கும் என்பதற்கு கவிக்கோ ஒரு சிறந்த சான்று. ‘வணக்கம்’ பற்றி எழுந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் சொல்லும் போது அவரை பேசவிடாமல் இடைமறித்து பேசிக்கொண்டே போனவரிடம் ‘நான் பேசி முடிக்கும் முன்பே நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு பேசிக் கொண்டே போனால் எப்படி’ என்று கண்டிப்பாக கேட்ட குரலில் நியாயமிருந்தது. அதையும் தொடர்ந்து விடாது இடைமறித்ததால் ஒலிவாங்கியை கீழே வைத்துவிட்டு ’நீங்களே பேசி முடியுங்கள்’ என்று சொன்னதில் அவர் கோபம் தெரிந்தது. அதனை தொடர்ந்து அவர் தந்த விளக்கம் அற்புதமாக அமைந்தது. எந்த ஒரு வார்த்தைக்கும் பல பொருள் புரிந்துக் கொள்ளலாம். ’கோ’ என்றால் அது மாடு என்றும் பொருள் தரும் அரசன் என்றும் பொருள் தரும். வீடு என்ற சொல் பின்னாட்களில் கண்டுபிடித்த சொல், ஆரம்பத்தில் கோவில் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரசன் வசிக்குமிடம் கோவில் ஆனது. அந்த காலத்தில் அரசரை தெய்வமாக கருதி வந்ததால் அரசர் வசிக்குமிடம் கோவிலானது பின்பு வேறுபடுத்த வீடு தோன்றியிருக்கலாம். மொழி என்பது காலத்தோடு வளர்ந்துக் கொண்டே உருமாறிக் கொண்டே போகும் விஷயம். ஆகையால் ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே அப்படியிருக்க ஏன் அந்த நிய்யத்தில்லாத வெறும் வார்த்தைக்கு புதிதாய் அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த சொல் பிடிக்கவில்லையா சொல்லாதீர்கள் ஆனால் மற்றவரையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீ தவறு செய்கிறாய் என்று எந்த அளவுக்கு தவறு என்று தெரியாமலே சுட்டிக் காட்டாதீர்கள். இஸ்லாத்தை முதலில் சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் பிறகு வாதிடலாம் என்றார்கள். அவர் சொன்னது சத்தியமான வார்த்தையாகப்பட்டது எனக்கு. ’கடவுளின் முகவரி’ அறிந்தவருக்கு இதைக் கூட புரிய வைக்க முடியாதா என்ன?

அவரிடம் கேட்க என்னிடம் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று இக்காலத்து பெண்ணியவாதி என்ற பெயரில் சிலரும் மற்றவர்களும் படைப்பில் நாக்கூசப்படும் சொற்களைக் கூட பாவித்து எழுதுகிறார்களே, சர்ச்சைக்குரியவர்களாகி எளிதில் பிரபலமாகும் குறுக்கு வழி கொண்டவர்களை பற்றிய அவருடைய கருத்து. இதனை வேறு விதமாக அழகாக நண்பர் ஷாஜி கேட்க, கவிக்கோ அவர்கள் அதனை எதிர்த்து வருவதாகவே சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அது நிலைக்காது என்றும் ஆருடம் சொன்னவர்களை அய்யனார் நண்பர் என்று எங்களிடம் அறிமுகமான அசோக் ’அதில் என்ன தவறு? கவிஞர் அவர்களையே கொண்டாடிக் கொள்கிறார்கள்’ அவ்வளவுதான் என்று எதிர்வாதம் செய்ய. ’கொண்டாடிக் கொள்ளட்டும் ஆனால் உடல் உறுப்புக்கு அவசியமென்ன’ என்று கவிக்கோ கேட்டதற்கு. அவர் எதை சொல்கிறார் என்று தெரிந்தும் கவிஞர்கள் எல்லா உறுப்புகளை பற்றியும்தான் பேசுகிறார்கள் எது ஆபாசமென்று யார் தீர்மானிப்பது என்று கொதித்தெழுந்தார் அவர், அதன் பின் நிலைமை சீரானது.

என்னுடைய இரண்டாவது கேள்வி, 'தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிக்கோ மற்றவர்களை விட எப்படி தனித்து நிற்கிறார்கள்’ என்பது. இந்த கேள்வியை தனியாக கேட்க வேண்டிய அவசியம் வரவில்லை. அது சொல்லாமலே எனக்கு புரிந்துவிட்டது.

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க கவிக்கோ தான். கேட்டுவிட்டார்களே என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல் இரசிக்கும் படியானதாகவும் அமைந்திருந்தது அவருடைய ஒவ்வொரு பதிலும். கவிதை தெரியாதவர்கள் இக்கூட்டத்ததிற்கு வந்திருந்தால் கூட கவிதைப் பற்றிய ஆர்வம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஈமான் ஆண்டு விழா அழைப்பு

ஈமான் ஆண்டு விழா அழைப்பு

அன்புடையீர்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

ஈமான் ச‌ங்க‌த்தின் 33 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா அமீர‌க‌த்தின் தேசிய‌ தின‌த்த‌ன்று

02 டிச‌ம்ப‌ர் 2008
செவ்வாய்க்கிழ‌மை
காலை ச‌ரியாக‌ 10.00 ம‌ணிக்கு

துபாய் ம‌ம்ஸார் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

அது ச‌ம‌ய‌ம் பெரிய‌வ‌ர்க‌ளுக்கான‌ பொழுதுபோக்கு, சிறுவ‌ர் சிறுமிய‌ருக்கான‌ விளையாட்டு நிக‌ழ்ச்சிக‌ளும் இருக்கின்ற‌ன‌.

என‌வே அனைவ‌ரும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து விழாவினை சிற‌ப்பிக்க‌ அன்புட‌ன் அழைக்கிறோம்.

குறிப்பு :

அனைவ‌ருக்கும் சிற்றுண்டி, ம‌திய‌ உண‌வு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.
தேரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள‌ டூரிஸ்ட் ப‌ஸ் நிலைய‌த்திலிருந்து காலை 9.00 ம‌ணிக்கு வாக‌ன‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

பூங்கா நுழைவு க‌ட்ட‌ண‌ம் ரூ. 5 ( ஐந்து ) த‌மிழ் உண‌வ‌க‌த்தில் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளுங்க‌ள்.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ :

ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லா 050 7752737
காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888
முதுவை ஹிதாய‌த் 050 51 96 433
கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 2533712

விழாக் குழுவின‌ர்

இந்திய‌ன் முஸ்லிம் அசோஸியேஷ‌ன்
துபாய்

தொலைபேசி : 04 266 1415
தொலைந‌க‌ல் : 04 266 4142
குறிப்பு : அலுவ‌ல‌க நிர்வாகிக‌ள் மொபைல் எண்ணில் ம‌ட்டும் தொட‌ர்பு கொள்ள‌வும்.

சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி (சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி)யில் படித்து உலகின் பல பாகங்களிலும் வாழும் முன்னாள் மாணவர்கள் இணைந்து APSA ( Association of Pavalar School Alumni) எனும் பெயரில் பள்ளியின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை நிறுவியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் APSA உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 21/11/2008 ஆம் நாள் துபை தெய்ராப் பகுதியில் அமைந்துள்ள ASCON D BLOCK இல் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு அரிய ஆலோசனைகளை வழங்கினர்.தேவைப்படும்

நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

amsakabeer@hotmail.com

SUCCESS

1. SUCCESS IS GETTING WHAT YOU WANT, HAPPINESS IS WANTING WHAT YOU GET
2. WHEN YOU LOOSE, DONT LOSE THE LESSON
3. BE BOLD WHEN YOU LOOSE AND BE CALM WHEN YOU WIN
4.TO SAY NOTHING, ESPECIALLY WHEN SPEAKING, IS HALF THE ART OF DIPLOMACY
5.BEWARE THE BARRENNESS OF A BUSY LIFE -SOCRETES
6.IT IS NOT LIVING THAT MATTERS, BUT LIVING RIGHTLY -SOCRETES
7.THE ONLY TRUE WISDOM IS IN KNOWING YOU KNOW NOTHING -SOCRETES
8.BEAUTY IS A SHORT LIVED TYRANNY -SOCRETES
9.A FRIEND TO ALL IS A FRIEND TO NONE.
-ARISTOTLE
10.THE LESS YOU KNOW, THE MORE YOU BELIEVE -BONO