Showing posts with label ஜமாஅத். Show all posts
Showing posts with label ஜமாஅத். Show all posts

Thursday, July 2, 2009

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை துபை தேரா அல் முதினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் நடைபெற்றது.
அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் தலைவர் ஜனாப் முஹ‌ம்ம‌து சாலிஹ் தலைமை வ‌கித்தார். முன்ன‌தாக‌ முஹ‌ம்ம‌து சாலிஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

ஜனாப் எம். சைய‌து அபூதாகிர் வரவேற்புரை நல்கினார். ஜனாப் பைசல் அஹ்ம‌த் அமைப்பின் செயல்பாட்டினை தொகுத்து வழங்கினார்.

கீழக்கரை ஜமாஅத் நிர்வாகி ஜனாப் ஹமீத் யாஸீன்,ஐக்கிய‌ முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஜனாப் கே. முஹ‌ம்ம‌து ஹிதாயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

திருக்குர்ஆன் ஆய்வாள‌ர் ஜனாப் காஞ்சி அப்துல் ர‌வூப் பாக்கவி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் இஸ்லாமிய‌ வ‌ங்கி முறையினைப் பின்ப‌ற்றி க‌ட‌ன் உள்ளிட்ட‌வ‌ற்றை மேற்கொண்டு வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜஹாங்கீகீர் அரூஸி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் பொதுந‌ல‌நோக்குட‌ன் செய‌லாற்றி வ‌ரும் அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ இய‌க்க‌த்தின‌ரைப் பாராட்டினார்.

அமைப்பின் பொருளாளர் ஜ‌னாப் அபூதாகிர் தொகுத்து வழங்க, ஜனாப் கலந்தர் மைதீன் நன்றி உரை வழங்க, விழா இனிதே முடிவடைந்தது


Warm Regards,

FAISAL AHMAD.S.A
M/S SHAHEEN EXCHANGE LLC,
UNITED ARAB EMIRATES,
DUBAI, DEIRA, NAIF ROAD,
POST BOX NO. 28478,
TEL NO. 9714 2266488,
MOB NO. 97150 6579841,
Alternate Email. fasa@india.com

Tuesday, March 31, 2009

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் ந‌ட‌த்தும் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் ந‌ட‌த்தும் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், அர்ர‌ஹீமிய்யா க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளையின் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு ஆராய்ச்சிய‌க‌ம் ஆகிய‌வை இணைந்து க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கை 02.04.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை 8.30 ம‌ணிய‌ள‌வில் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் தென்ஆற்காடு, ஒருங்கிணைந்த‌ த‌ஞ்சை ( நாகை, த‌ஞ்சை, திருவாரூர் ), காரைக்கால் மாவ‌ட்ட‌ முஸ்லிம் ஜ‌மாஅத்தார்க‌ள் ஒருங்கிணைந்து க‌ல்விப் ப‌ணி மேற்கொள்வ‌து குறித்த‌ ஆலோச‌னையும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

துபாய் ஸ்கை சீ குரூப் இய‌க்குந‌ர் சி.த‌.அப்துல் காத‌ர் த‌லைமை தாங்குகிறார். இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா சிற‌ப்புப் பேருரை நிக‌ழ்த்துகிறார்.

இக்க‌ருத்த‌ர‌ங்கின் முக்கிய‌ நோக்க‌ம் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்லூரியினை ஏற்ப‌டுத்துவ‌து குறித்தாகும்.

இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் ( 050 5429422 ) ஏற்பாடு செய்து வ‌ருகிறார்.

மின்னஞ்சல் : thajanas@gmail.com / abdulrabik@yahoo.com

Thursday, February 19, 2009

துபாயில் பிப். 27ல் தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததான முகாம்

துபாயில் பிப். 27ல் தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததான முகாம்
வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009, 11:16 [IST]

துபாய்: துபாயில் வரும் 27ம் தேதி ரத்ததான முகாம் நடக்கிறது.

துபாய் நகரில் உள்ள அல் வசல் மருத்துவமனையில் தமிழ்நாடு ஜமாஅத்துத் தவ்ஹீத் சார்பில் ரத்ததான முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துவங்குகிறது. ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்கவதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 050-5756518, 04-2715830.

Thursday, March 13, 2008

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் செயல்பட்டு வரும் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 12.10.2007 வெள்ளிக்கிழமை மம்சார் பூங்காவில் நடைபெற்றது. அல் அமீன் ஜமாஅத் சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஜமாஅத்தினர் இணைந்து அல் அமீன் ஜமாஅத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

விழாவிற்கு எஸ்.நயினார் முஹம்மது தலைமை வகித்தார். துவக்கமாக பீர் அலி இறைவசனங்களை ஓதினார். மவ்லவி ஷெரீப் ஆலிம் துவக்கவுரை நிகழ்த்தினார். பொறியாளர் முஹம்மது கனி ஆண்டு அறிக்கை வாசித்தார். ஜமாஅத் வரவு செலவு அறிக்கையினை ஹஸன் சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் பத்ரு ஸஹாபாக்கள் நிர்வாகத் தலைவர் வாவா முஹம்மது சமுதாய இளைஞர்கள் ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வருவது குறித்து பாராட்டினார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் இணையத்தளம், மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தப்பட வேண்டியது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர் : புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது
துணைத் தலைவர்கள் : ஊத்துமலை ஷேக் அப்துல் காதர்
செயலாளர் : அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா
துணைச் செயலாளர் : அருளாச்சி அஷரப் மில்லத், அருளாச்சி அப்துல் கரீம்
பொருளாளர் : வெள்ளானைக் கோட்டை நாகூர் மைதீன்
துணைப் பொருளாளர் : வாசுதேவநல்லூர் முஜீபுர் ரஹ்மான், அருளாச்சி ஹஸன்
செயற்குழு உறுப்பினர்கள் : வாசுதேவநல்லூர் சதக்கத்துல்லா, அருளாச்சி பாதுஷா, வெள்ளானைக் கோட்டை ஹ¤ஸைன், திவான் மைதீன்,ஊத்துமலை செல்லவாப்பா
கெளரவ ஆலோசகர்கள் : அருளாச்சி முஹம்மது மைதீன் ( ஷெரிப் ), அருளாச்சி டி.முஹம்மது மைதீன்

Wednesday, February 13, 2008

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது



துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.

பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.

ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.

அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.

டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.




நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008