ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!
வியாழன், 22 ஜனவரி 2009
உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வால்டர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.
பெரும்பான்மைப் பத்திரிகைகள் "புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது" எனத் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், "பெரும்தோல்வி" என்ற பொருளில் "The Failure" என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் "உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்டுத்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்" என்று குறிப்பிட்டு எழுதி, "தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்" என வருணித்துள்ளது.
அதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த 'பெருமை' இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.
அதேவேளை, 'ஜெருஸலம் போஸ்ட்' என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, "கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது" என்று புகழாரம் சூட்டியிருந்தது. "இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்" என்றும் தெரிவித்திருந்தது.
கனடாவின் 'டொரண்டோ ஸ்டார்' என்ற நாளிதழ், "உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்" என்று கூறியதோடு, "ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்" என்றும் வருணித்துள்ளது. "ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்" எனச் சாடியுள்ளது.
பிரிட்டனின் 'டெய்லி மெயில்' நாளிதழ், "மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே" எனக் கூறியுள்ளது.
ஸ்காட்டிஷ் நாளிதழான 'டெய்லி ரெக்கார்டு', "அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு நாளிதழான 'Le Monde', "புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்" என்று கூறியுள்ளது.
அதே வேளை, ஜெர்மனியின் 'ஸ்டெர்ன்' நாளிதழ், "புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார். பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்" எனக் கூறியுள்ளது.
அரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான 'அல்-ஹயாத்', "விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது" என்று நையாண்டி செய்திருந்தது. "எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.
ஆஸ்திரியப் பத்திரிக்கையான 'Wiener Zeitung', "புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்" என எழுதியுள்ளது. "நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்" என்று தெரிவித்துள்ளது.
புஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை "misunderestimate" செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.
முஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார்.
கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்!
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label முடிவு. Show all posts
Showing posts with label முடிவு. Show all posts
Monday, January 26, 2009
Thursday, May 29, 2008
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிய
10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை 30-05-2008 காலை 9.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.
இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
http://tnresults.nic.in
www.indiaresult.com
www.tnresults.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
www.dinamalar.com
www.webulagam.com
www.timeschennai.com
www.chennaivision.com
www.indiaresults.com
www.tnagar.com
www.results.sify.com
www.squrebrothers.com
www.results.southindia.com
www.worldcolleges.info
message from
S.M. Arif Maricar
http://www.tmcaonline.com
http://arifmaricar.blogspot.com
இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
http://tnresults.nic.in
www.indiaresult.com
www.tnresults.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
www.dinamalar.com
www.webulagam.com
www.timeschennai.com
www.chennaivision.com
www.indiaresults.com
www.tnagar.com
www.results.sify.com
www.squrebrothers.com
www.results.southindia.com
www.worldcolleges.info
message from
S.M. Arif Maricar
http://www.tmcaonline.com
http://arifmaricar.blogspot.com
Friday, May 9, 2008
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை
பிளஸ் 2: திருச்செங்கோடு மாணவி, செங்கை மாணவர் முதலிடம்
"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண:
http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/
இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:
இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html
புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.
தட்ஸ்தமிழ்.காம்
மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்
* தமிழ்:
ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.
பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.
* அரபி:
கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.
ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
* பிரெஞ்சு:
ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.
ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
* ஹிந்தி:
எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.
சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.
* கன்னடம்:
கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
* மலையாளம்:
எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.
லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.
பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.
* தெலுங்கு:
வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
* சம்ஸ்கிருதம்:
எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.
ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.
எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
* உருது:
கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.
ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.
* ஆங்கிலம்:
பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.
எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
தினமணி.காம்
"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண:
http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/
இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:
இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html
புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.
தட்ஸ்தமிழ்.காம்
மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்
* தமிழ்:
ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.
பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.
* அரபி:
கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.
ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
* பிரெஞ்சு:
ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.
ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
* ஹிந்தி:
எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.
சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.
* கன்னடம்:
கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
* மலையாளம்:
எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.
லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.
பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.
* தெலுங்கு:
வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
* சம்ஸ்கிருதம்:
எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.
ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.
எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
* உருது:
கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.
ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.
* ஆங்கிலம்:
பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.
எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
தினமணி.காம்
Subscribe to:
Posts (Atom)