Showing posts with label ரியாத். Show all posts
Showing posts with label ரியாத். Show all posts

Thursday, May 21, 2009

ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத் தமிழ்ச் சங்கம் உதவி

ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத்தமிழ்ச் சங்கம் உதவி

அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது, அவரின் உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது, அவர் கபீலிடம் இருந்து ஓடிவந்து வெளியில் வேளைபார்த்த காரணத்தால் கபீல் அவருடைய பாஸ்போர்ட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். இக்காமாவும் கலாவதி போன்ற பிரச்னைகளால் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

விபரமறிந்த உறவினர்கள் இந்தியாவில் இருந்து என்னை தொடர்பு கொண்டு உதவும் படி கோரினார்கள், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு எமர்ஜென்சி பாஸ்போர்ட், மற்றும் தேவையான உதவிகள் பெறப்பட்டு கேரளாவைச் சேர்ந்த சமுதாய ஆர்வலர் திரு. சிகாப் அவர்கள் மாறல் உடலை அனுப்பி வைப்பதற்குண்டான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. என் வேண்டுகோளை ஏற்று சிகாப் அவர்கள் முழுமூச்சுடன் மும்முரமாக செயலாற்றிக்கொண்டுள்ளார், இறைவன் நாடினால் இந்த மாத இறுதிக்குள் அவர் உடலை இந்தியா அனுப்பிவிடலாம், ஊரிலும் அவர் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற விபரம் அறியப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த பாதிக்கப்பட்ட மனிதரின் உடலை அனுப்ப தேவையாகும் செலவுகளுக்கும், குடும்பத்தினருக்கு உதவுவதற்கும் உதவிசெய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (imthias@imthias.com) தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
இம்தியாஸ் அஹமது
தலைவர்
ரியாத் தமிழ்ச் சங்கம்.

Monday, February 23, 2009

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

சட்டம் கருப்பு சட்டையின் ஊடே
ஒழுங்கு காக்கி சட்டையின் கைகளில்
சகித்து இனைந்து வாழ்ந்தே தீர
வேண்;டிய கட்டாயம் இருவருக்குமே உண்டு

இவ்விரு நிறங்களும் சச்சரவு புரிந்து
செந்நிர குருதிகள் ஆறாய் ஒழித்தோட
பொது ஜனம் கேட்கிறது உங்களிடம்
சந்தேகம் கலந்த சந்தேக குரலில்

காக்கும் பொறுப்பாளிகளே உங்களுக்கு தகுமா?
காக்கி அணிந்த காவலர்களே
உங்கள் உடலை மறைக்கத்தானே காக்கி உடை
இதயங்களுமா அதனுள் மறைந்து விட்டது?

சட்டம் பயின்றவர்களுக்கே இக்கதி எனில்
சட்டத்தின் நியாயங்களை கேட்டு
சாலை ஓரம் நின்று மன்றாடும்
சாமானியர்களுக்கு எக்கெதி?

சட்டக்கல்லூரி மாணவர்கள்
சண்டையிட்டு மண்டை உடைத்தபோது
செவ்வனே வேடிக்கை பார்த்தீர்கள் கைகட்டி அன்று
சாலையெல்லாம் ரத்த வெள்ளம்

என்னே ஒரு பெருமை இன்று!
ஏங்கிய உங்களின் கரங்களால்
மண்டை உடைக்கப்பட்டவர்களில்
மாநில நீதிமன்றத்தின் நீதிபதியும் ஒருவர்

ஒற்றுமை ஒன்று இங்கே உண்டு
ஓடிய ரத்தமெல்லாம் சட்டம் பயின்றவை
பாடம் சொல்கிறது உங்கள் சண்டைகள்
பயன் ஒன்றும் இல்லை உங்களை நம்பி

காக்கியும் கருப்பும் கை உயர்த்தி
காட்சிகளை கண்ணுற்ற மக்களிடத்தில்
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் அன்றி
நீதி மன்றங்களும் காவல் நிலையங்களும்

கோட்டான்கள் வாழும் கூடாரங்கள்தான்
கேட்பாரற்று பாழமைந்த கட்டிடங்கள்தாம்
சிந்திய ரத்தங்களின் அழுக்கு கறைகள்
சீரிய வழியில் துடைக்கப்படாவிடின்
சட்டமும் ஒழுங்கும் சவக்கிடங்கில்தான்.

முதுவை சல்மான்
ரியாத்

Saturday, January 3, 2009

ரியாத்தில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

Dear All,

We have one Mr. Rajendran from the town of Chinna Salem, in Tamil Nadu, admitted to Shimesy Hospital's, Accident emergency section. He is suffering from High BP and has resulted in total paralysis of his left side. His brother approached Riyadh Indian Association (RIA) for help. Our Humanitarian Committee Convener Mr. Shahjagan from the day, the call was received, is behind this case. We all as Indians, owe Shajagan a lot, in this and many other cases.

Mr. Rajendran was claimed as brain dead by the doctors on arrival and was kept under observation. By god's grace, he reclaimed his consciousness and is now able to move his body and Doctors have advised to sent him to India ASAP for further medical assistance.

Mr. Rajendran has no valid Iqama and his Iqama is not renewed for the last nine years. All these works + his visa transfer from old to new transport, his authorization from Indian Embassy, strecher tickets from Air India are being followed up by our contacts. We are in need of money for all these, in tune of SAR.8000-SAR.10000.

RIA request all of you, who receive this e-mail to help as much possible to this unfortunate fellow countrymen. You can provide your contributions to me, Magesh ( Mob : 050-6634823) or Mr. Sekhar- Rajendran's brother (Mob : 050-9145644).

Rajendran is a make-shift tailor in KSA and has a family of wife and 2 daughters aged 17 and 13 in India.

Please help.

Thanks

Magesh
magesh74p@yahoo.com

Wednesday, November 26, 2008

ரியாத் தமிழ்ச் சங்கம்

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எழுத்துக்கூடமானது கடந்த இரண்டு வருடங்களாக மாதத்தின்
முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் இலக்கியக்கூட்டம் நடத்தி ரியாத் வாழ் தமிழ்
எழுத்தாளர்களை எழுத்துலகில் மேலும் வளர ஊக்குவித்து வருவது நாம் அனைவருக்கும்
தெரிந்ததே. நமது எழுத்துக்கூட கிரீடத்தில் மற்றோர் இறகாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று
எழுத்துக்கூடத்தின் தமிழ் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்துக்கூடத்தின் இரண்டு வருட கனவு
நனவாவதற்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளது.

நூலகத்திற்கு திரு. வெற்றிவேல் அவர்கள் கதாவிலாசம் மற்றும் தமிழ் என்ஸைக்ளோபீடியா பாகம்
1, 2 3 ஆகிய புத்தகங்களையும், திரு. சபாபதி அவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள்
பலவற்றையும், முனைவர் மாசிலாமணி அவர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட பலதரப்பட்ட செம்மையான
தமிழ் புத்தகங்களையும் முதற்கட்டமாக வழங்கியுள்ளனர். புத்தகம் வழங்கிய அனைவருக்கும் ரியாத்
தமிழ்ச் சங்கம் தனது நன்றிகளை காணிக்கையாக்குகிறது. இந்த நூலகத்திற்காக சென்னையில்
இருந்து பல புத்தகங்களை தேடித் தேடி தெரிவுசெய்து நமக்கு வழங்கிய எழுத்துக்கூடத்தின்
மூத்த உறுப்பினர் திருமதி. விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களுக்கும் நமது தனிப்பட்ட
நன்றிகளை ரியாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

புத்தகங்களின் வரிசை மற்றும் அன்பளிப்பு செய்தவர்களின் விபரம் விரைவில் ரியாத் தமிழ்ச்
சங்கத்தின் வலைத்தளத்தில் (http://www.riyadhtamilsangam.com/) வெளியாகும் என்பதனைத்
தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த எழுத்துக்கூடக் கூட்டங்களில் மேலும் பல புத்தகங்கள்
அன்பளிப்பாக வர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
கி.வை. ராஜா
செயலாளர், ரியாத் தமிழ்ச் சங்கம்
kvraja@gmail.com

Thursday, August 14, 2008

Rabita Trading Est. (Educational services),

Rabita Trading Est. (Educational services)
Riyadh.

Attention prospective students,

We get you confirmed admission in Riyadh itself for the following higher learning courses in Russia, China, Chennai(India) and London, if you have required qualifying marks in your class XII.

1) Medical (M.B.B.S.) and Dental (B.D.S.) and PG courses in "Jiamusi university", China (www.juchina.org), "Northern State Medical university" Arkhangelsk, Russia.

2) B.E. (Bio-Medical, Computer Science & Engineering, Electronics & Communication Engineering and B.Tech.(Information Technology) in "Alpha College of Engineering", Chennai (Madras), India. (www.alphagroup.edu).(Non-Indians too can join, if their country of origin law permits).

3) BBA, MBA and accountancy courses in "The International School of Business Studies" London, UK (www.isbs.org.uk).

4) Distance Education of "Banasthali Vidyapith", Rajasthan, India (www.banasthali.org, www.banasthali.ac.in) for working class. Exams will be conducted in Saudi itself.

5) Online courses of " Washington American Global University", Delaver, USA (www.wagu.edu.us) for working class. Exams will be conducted in their premises.
-----------------------------------------------------------------------------------------------------------
a) Confirmed admission can be obtained here in Riyadh itself.

b) We do not charge anything from the student.

Contact:
Mr.Ashfaq Hussain
Rabita Trading Est.(Educational Services),
Behind Al-Bilad Bank, Sitteen Road, Malaz,Riyadh.
Phone # 01 2911991. Mobile # 0551986077, Email: ashfaq106@gmail.com

Sunday, July 27, 2008

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.


மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163


INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.

THE DETAILS ARE AS FOLLOWS ::

FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163

Sunday, July 13, 2008

ரியாத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள்

ரியாத் தமிழ்ச்சங்கத்திற்க்கு நடப்பு ஆண்டு (2008 - 2009) க்காண, கீழ்க்கண்ட உயர் மட்டக்குழு

உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தலைவர் : திரு ஜவகர் சவரிமுத்து
துணைத்தலைவர் : திரு முகம்மது சரீப்

செயலாளர்: திரு இராசா
இணைச்செயலாளர் : திரு டெரன்ச் லியோ

பொருளாளர்: திரு பெரோஸ்கான்

புதிய உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சவுதி வாழ் தமிழக மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தகவல் :

சஜ்ஜாவுதீன்
ரியாத் தமிழ்ச்சங்கம்
asajja@alcatel-lucent.com
JSavarimuthu@alfransi.com.sa
SDawood@alfransi.com.sa

Friday, July 4, 2008

ரியாத்தில் இந்திய தூதரக சந்திப்பு நிகழ்ச்சி

Dear Friend,

The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.

Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.

The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.

FOKASA


From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries

Dear Mr.Muraleedhan

That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.

Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.

In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.

Mr.Murali, we, India Forum is really proud to have members like you.

Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum

Tuesday, June 3, 2008

ரியாத்தில் குறுகிய கால பயிற்சி

ரியாத்தில் குறுகிய கால பயிற்சி

ரியாத்தில் திருக்குர்ஆனை எளிய வகையில் அறிந்து கொள்ள உதவும் குறுகிய கால பயிற்சி நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகின்றன.

1.சனி, திங்கள் மற்றும் புதன்கிழமை - மாலை 8 மணி முதல் 9 மணி வரை

2. வியாழன் மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை
வெள்ளி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

இப்பயிற்சி வகுப்புகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்

மேலும் விபரங்களுக்கு

மௌலவி இப்ராஹிம்
uqchennai@gmail.com
055 777 9305
055 2048 163

Saturday, February 23, 2008

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் கலை விழா

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் கலை விழா

நாள் : 14-02-08 இடம் : இந்திய தூதரகம்

ரியாத் மாநகரில் ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முப்பெரும் கலைவிழா கடந்த 14-02-2008 அன்று மாலை இந்திய தூதரகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள அரங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் ஆறு மணியளவில் விழா தொடங்கியது. மேடையின் திரைகளில் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் கைகள் விரித்து நின்றிருந்தன. தமிழ்த்தாய் வாழ்த்தொலிக்க தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினர் ஓருடையை சீருடையாக்கி மெழுகுவர்த்திகள் ஏந்தி நின்றிருந்த காட்சி கடலைச்சுற்றி பதினேழு சூரியன்கள் எழுந்து நிற்பதைப் போன்றிருந்தது.

நிகழ்ச்சிகளைத் தொகுப்பதற்கென்றே பிறந்தவர்களாய் ராஜாவும் கிரு~;ணவேனியும் களமிறங்கினர். மேதகு இந்தியத் தூதுவர் ஃபருக் மரைக்காயர் அவர்களை டாக்டர் திரு ர~Pத் பா~h அவர்கள் மேடைக்கு அழைத்துவர அவரைத் தொடர்ந்து டாக்டர் மாசிலாமணி அவர்கள், ஜித்தா ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு மாலிக் அவர்கள், ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் சஜ்ஜாவுதீன் மற்றும் மூத்த ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ஜெயசீலன் மற்றும் திரு விஜய சுந்தரம் ஆகியோர் மேடையேற மேடையின் சிகை அலங்காரமாய் நின்றது.

திரு. முத்துராமன் அவர்கள் மேதகு இந்திய தூதருக்கு ப+ங்கொத்தை கொடுத்து வரவேற்றார். திரு ஜெயசீலன் அவர்கள் டாக்டர் மாசிலாமணி அவர்களுக்கு ப+ங்கொத்தை கொடுத்து வரவேற்றார். அரங்கு நிறைந்து வழிந்தது. வாழ்த்தே உரையாய் வாழ்த்துரை வழங்க வந்த திரு கஸ்ஸாலி அவர்கள் சுபசோபனம் பற்றி சுருக்கமாய் விவரித்தார்.

அரங்கு அமைதிபெற மாண்புமிகு இந்திய தூதர் ஃபருக் மரைக்காயர் அவர்கள் அவையின் மௌனம் கலைத்து தன் உரையைத் தொடங்கினார். தமிழ்ச்சங்கத்தின் அவசியம் பற்றியும் அதனால் அடைய வேண்டிய பலன்கள் பற்றியும் அது செய்ய வேண்டிய கடமைகள், அது தாங்கும் சுமைகள், அதன் விரிந்த எல்லைகள் மற்றும் தான் கொண்ட பொறுப்பு, அதன் யதார்த்தம் ஆகியன பற்றியும் ஆழமாகவும் அழகாகவும் பேசி முடித்தார்.

சுமார் எட்டு மணியளவில் முதல் நிகழ்ச்சியாக தில்லானா மேகனாம்பாள் திரைப்படத்திலிருந்து நலந்தானா பாடலின் முன்னிசைக்கு ~மாவும் வர்~hவும் தங்களது நாட்டிய நளினங்களை நடனத்தில் கொட்டி மெய்சிலிர்க்க வைத்தார்கள். அரங்கு அலைபாயத் தொடங்கியது.

அடுத்ததாக கவியரங்கம் சுடர்விட்டது. திருவாளர் தாவூத் அவர்கள் வர்ணனை வார்ததைகள் பொழிய தமிழையும் தமிழரையும் வாழ்த்தி மதுரம் தமிழ் என்ற தலைப்பில் கவிபேச மதுரை பெரோஸ்கான் அவர்களை அழைக்க, திரு பெரோஸ்கான் அவர்கள் தனது வலிமையான வசனங்களால் அரங்கம் அதிர தனது கவிதையை விதைத்து வைத்தார். அவரைத் தொடர்ந்து வந்த மலர் சபாபதி அவர்கள் பாரதியை அழைத்து சொன்ன கவிதை அரங்கத்தை குதூகலிக்கச் செய்தது.


அவரைத் தொடர்ந்த வழக்குச் சித்தர் ஜாபர் சாதிக் அவர்களின் புரட்சிக்கவிதை புரட்சிகரமாய் அரங்கேறியது. இறுதியாக வந்த சேலத்து சோலைக் கவிஞர் திரு சிக்கந்தர் அவர்கள் வரம் வேண்டும் என்று சொல்லி கவிதைபாடி கவியரங்கத்தை நிறைவு செய்தார்.

இடையிடையே ராஜா கிரு~;ணவேணியின் கிள்ளை மொழிகள் கொஞ்சிச் சென்றன. அடுத்து இசை விருந்து ஆரம்பமானது. திரு ஸஜ்ஜாவுதீன், திருமதி அணுராதா, திரு பாலா, திரு ஸபீர் ஹ_சைன,; திரு நெவிசன், திரு கென்னடி, திரு வினு, திரு குருராஜன் வரிசையாக பாடல்கள் பாடி அரங்கத்தை ஆனந்தத்தில் தள்ளினர்.

திரு தாவூத் மற்றும் வளவன் அவர்கள் இடைவெளிகிடைத்த போதெல்லாம் திரைக்கு முன்னால் வந்து கேள்விக்கணைகளை தொடுத்து பரிசுகளையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

சுமார் ஒன்பது மணியளவில் பட்டிமன்றம் தொடங்கியது. நடுவராக தலைவர் திரு ஸஜ்ஜாவுதீன் அவர்கள் பொறுப்பேற்றார் இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைவது
காதல் திருமணத்திலே பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்ற தலைப்பில் பட்டிமன்றம் துவங்கியது. முதலாவதாக காதல் திருமணத்திலே என்ற தலைப்பில் திரு மீரான், திரு ய+சுப,; திரு சுவாமிநாதன் தங்களது சுவை மிகுந்த சொற்களால் அரங்கத்தை - அசத்தியும் ஆட்டியும் வைத்தனர். பின்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்ற தலைப்பில் பேசிய திரு லியோ, திரு ஹைதர் அலி, திரு ரேணுகா சுப்பையா ஆகியோர் தங்களது வாள்வீச்சுப் பேச்சினால் அவையைக் கவர்ந்திழுத்தனர். நடுவர் ஸஜ்ஜாவுதீன் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கிடையே சிரிப்பில் சில்மி~ங்கள் செய்தார். இறுதியாக இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைவது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்று நாட்டாமையாக வாழ்;ந்து தீர்ப்பு சொல்லி தீர்;த்து வைத்தார்.

திரு ஜாபர் சாதிக் அவர்கள் அவ்வப்போது சபை ஒழுங்கிலும் தனது பொறுப்பிலும் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொன்ன பார்வையாளர்கள் வரை பரிசுகளை பெற்றுச் சென்றனர். பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக நிறைந்த அரங்கம் அளவில்லாத ஆனந்தம் கொண்டது. ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை தூதரகத்தின் வாயிலில் வைத்து திரு ஜாபர் சாதிக், திரு சிக்கந்தர் இன்னும் சில அங்கத்தினர்களால் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் யாவும் சுருங்கிய நெற்றியின் சுருக்கம் நீக்கி திலகமிட்டது போலிருந்தது கண்டு தமிழ் மன்றமும் தமிழ் மனங்களும் திருப்தி கொண்டன.

சுமார் பத்தரை மணியளவில் விழா இனிதே நிறைவு பெற்றது.

தமிழில் தொகுத்தது: ஃபெரோஸ் கான்
ரியாத் தமிழ்ச் சங்கம்

sadikjafar@gmail.com