Showing posts with label இயக்கம். Show all posts
Showing posts with label இயக்கம். Show all posts

Wednesday, May 6, 2009

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

மதிப்பிற்குரிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு எழுதிக் கொள்வது !

இதைப் படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவிட ‘துஆ’ செய்கிறேன் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழகத்தை பொருத்த வரைக்கும் ஒற்றுமை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாத ஒரு சமுதாயம் உண்டு என்றால் அது நமது முஸ்லிம் சமுதாயம் மட்டுமே எனக்கூறுவதில் வெட்கப்படுகிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமது சமுதாயம் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக் என்னும் கட்சியுடனும், இஸ்லாமிய கொள்கை ரீதியாக ஜமாஅத்துல் உலமா (மார்க்க அறிஞர்களின் ) சபையுடனும், ஒழுங்கு முறைக்கு ‘’ஜமாஅத்” மஹல்லா என்னும் கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த நமது சமுதாயம் இப்போது எப்படி இருக்கிறது ? எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? இடைப்பட்ட 25 ஆண்டுகளில் சமுதாயத்தின் பெயரால் எத்தனை கட்சிகள், எத்தனை இயக்கங்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை பிளவுகள் …இவையெல்லாம் ஏன்? எதனால்? என்ற கேள்விக்கு ஒரே பதில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்பட்ட சுயநலம் தான் ! நாம் குறிப்பிட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே இறையச்சம் அதிகமிருந்தது ! மரணத்தின் பயம் இருந்தது ! மண்ணறையின் திடுக்கம் இருந்தது!!! ஆனால் தற்போதோ? இவையெல்லாம் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நினைத்து பார்க்க கூடியதாய் மனிதனின் மனம் மாறிவிட்டது. அதனால் தான் ‘’துன்யா’’ வெனும் இவ்வுலக ஆடம்பர வாழ்க்கையின் சுக போகத்திற்கு நம்மை அடிமை படுத்திக் கொண்டோம். ஆடம்பர வாழ்க்கை யென்பது? சொகுசு பங்களா, சொகுசு கார் நினைத்து பார்க்க முடியாத பண மழையில் குளித்து சுகம் காண்பது தான் ! இது ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பாகவும் மாறிவிட்டது. இவற்றையெல்லாம் ஹலாலான வழியில் உழைத்து அனுபவித்தால் கூட இஸ்லாத்தின் பார்வையில் தவறு என்பதை நமது உத்தம தலைவராம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்தும், (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டிய உன்னதமான சகாபாக்களின் வாழ்க்கை தத்துவத்திலிருந்தும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் தங்களது பதவி காலத்தின் போது கொளுத்தும் வெயில் காலத்திலும் கூட திறந்த வெளியில் ஈச்ச மர ஓலையின் மீது படுத்து உறங்கிய எளிமையை இன்றும் கூட வரலாற்று ஆசிரியர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். உலக மக்களுக்கு மட்டுமல்ல, நாளை மறுமை நாளின் போது ஒன்று திரட்டப்படும் லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களுக்கும் கூட தலைமை தாங்கவிருக்கும் நமது உயிரினும் மேலான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கைக்கு கோடி உவமைகளை அடுக்கினாலும் நிகராகாது !
ஆடம்பரம் தான் ஒரு தலைவனின் சமூக அந்தஸ்து என்னும் காலத்திலும் கூட அனைத்து வசதியும் இருந்தும் கூட எளிமையாய் வாழ்ந்து காட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்களை பின் பற்றியே தான் நபித்தோழர்களும் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய சமுதாய தலைவர்களின் நிலையை ஆராய்ந்து பாருங்கள். நேற்று ஆரம்பித்த இயக்கங்களின் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரைக்கும் ஸ்கார்பியோ, டாடா சுமோ, குவாலிஸ்,இன்னோவா போன்ற சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். இவையெல்லாம் முறையாக சம்பாதித்து வாங்கியது என சொல்லும் அருகதை எத்தனை பேருக்கு இருக்க முடியும்? குறிப்பிட்ட ஒரு இயக்கத்திற்கு வருவதற்கு முன் டீக்கடையில் வேலை பார்த்தவன் இந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவரான பிறகு பல கோடிகளுக்கு அதிபதியாகி விட்டானே ! என்று அந்த நபரை அருகிலிருந்து பார்த்து வந்த பிற மனிதர்கள் கூறும் உண்மையை புறக்கணிக்க முடியுமா? சமுதாயத்தின் பெயரால் இயங்கி வரும் பெரும்பாலான இயக்கங்களின் பொறுப்பாளர்களில் அதிகமானோர் எவ்வித தொழில் துறையும் இல்லாதவர்களாகவும் இயக்கத்தின் பணி மட்டுமே கதி என்று கிடப்பவர்கள். இவர்களின் பொருளாதார நிலையை கூர்ந்து பாருங்கள். நேர்மையாய் உழைத்தவனை விட பல மடங்கு சொத்து சேர்த்தவர்களாய் மாறி விட்டனர். எங்கிருந்து எப்படி இவ்வளவு பணம் இவர்களுக்கு கிடைத்தது? என்பது தான் பாமரனாய் எல்லோரும் கேட்கும் கேள்வி? இத்தகைய கேள்விக்குரிய பதிலை ஆய்வு செய்யும் போது நமக்குத் தலை சுற்ற ஆரம்பித்து விடும். எங்காவது மதக்கலவரம் வராதா? அதில் நம் மக்கள் சிலர் சாக மாட்டார்களா? உடனே அதை வீடியோ எடுத்து கேசட் ரெடி பண்ணி முதலில் அனுப்பப்படும் ஏரியாவாக அரபு நாடுகளையும் பிறகு தமிழகம் முழுவதும் என்ற திட்டத்தின் படி கேசட் விநியோகம் முடிந்ததும் அதே வேகத்தில் வசூல் வேட்டையிலும் இறங்கி கலவரத்தில் இறந்தவர்களது குடும்பத்தினருக்குரிய நிதி என்று அதற்கு பெயரும் சூட்டி கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட பணத்தில் சிலதை கண் துடைப்புக்காக சிலருக்கு மட்டும் கொடுத்து விட்டு பெரும் பகுதி பணத்தை அமுக்கி கொண்டவர்களாய் சில காலம் இயக்கம் நடத்தினார்கள். இதற்கு 1998 கோவைக் கலவர வசூல், 2002 ல் நடைபெற்ற குஜராத் பூகம்ப வசூல் மற்றும் குஜராத் கலவர வசூல், 2004 சுனாமி வசூல் போன்றவை ஆதாரங்களாகும். கடந்த சில வருடங்களாக மதக்கலவரம் எங்கும் நடைபெற வில்லையே ! எப்படி இயக்கவாதிகள் பிழைப்பு நடத்தினார்கள்? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது ! ஒவ்வொரு வருடமும் ரமலான் காலங்களில் முஸ்லிம்களின் இறைக்கடமையில் ஒன்றான ஜகாத், மற்றும் ஃபித்ரா, கூட்டுக் குர்பானி போன்ற ஏழைகளுக்குரிய தர்மங்கள் விநியோகத்தில் மார்க்கத்தின் பெயரால் உள்ளே நுழைந்து பித்ரா, ஜகாத் புரோக்கர்களாய் மாறி கோடிக்கணக்கில் வசூல் செய்து ஏழைகளுக்கு தங்களது இயக்கத்தின் பெயரால் ஃபித்ரா,ஜகாத் விநியோகம் என்ற போலியான விளம்பரத்தையும் தேடிக்கொண்டு வசூல் தொகையில் சிலதை கொடுத்து விட்டு பெரும் பங்கை அவரவர்களின் சொந்த கணக்கில் சேர்த்துக் கொண்டதையும் ஒவ்வொரு வருடமும் நாம் காண முடிந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக பித்ரா, ஜகாத்,கூட்டுக் குர்பானி வசூல் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை! மக்கள் ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டதும் தான் பிழைப்புக்கு வழி இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தின் விளைவாகவே தற்போது ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியாய் மாறி வலம் வர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் இயக்கங்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. எல்லா காலத்திலும் எல்லோரையும் ஒரே மாதிரி ஏமாற்ற முடியாது என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் இறுதி புகலிடம் தான் அரசியல் களம்! கடந்த காலத்தில் அரசியலைப் பற்றிய இவர்களது விமர்சனத்தை பாருங்கள். இந்திய அரசியல் என்பது சாக்கடையாகும். அதில் குளிப்பதற்கு நாங்கள் விரும்ப வில்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அரசியலுக்கு வரமாட்டோம்! என வீர? வசனம் பேசி தங்களை யோக்கியர்களாய் காட்டிக் கொண்ட அந்த நிறம் மாறிகளான பச்சோந்திகள் தான் இன்றைக்கு அரசியல் என்னும் சாக்கடையை குளிப்பதற்கு மட்டுமல்ல தாகம் தீர குடிப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இயக்கங்களாய் இருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதால் தான். அரசியலுக்குள் நுழைகிறோம் எனக் கூறுவோர் சமுதாயத்தின் அரசியல் கட்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தலாமே! பெட்டிக் கடையை போல உருவாகிய இயக்கங்கள் ஆளுக்கொரு கட்சியென ஆரம்பித்து எதை சாதிக்கப் போகின்றனவாம்? தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி இவர்களது கூட்டணியில் இணைந்து அவர்கள் வீசும் 1 அல்லது 2 எலும்புத் துண்டுகளை மட்டுமே கவ்வ முடியும். அதிலும் ஜெயலலிதா பக்கம் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருந்தால் கருணாநிதி பக்கமும் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருக்கும். இந்த பெட்டிக்கடை அமைப்புகளுக்கு ஜெயலலிதா எந்த தொகுதியை ஒதுக்குகிறாரோ? அதே தொகுதியை கருணாநிதி சார்பிலான பெட்டிக்கடை அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு ஓநாய் காத்திருப்பது போலத்தான். இது கருணாநிதி, ஜெயலலிதாவின் சூழ்ச்சி அல்ல! சாட்சாத் நமது பெட்டிக் கடை இயக்கங்களின் அணுகு முறை தான். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு 2 கண் போக வேண்டும் என்ற இலக்கணத்தை உணர்ந்து செயல்படும் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் ‘’ஈகோ’’வால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் அதுவும் அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடிகிறது. தி.மு.க –அ.தி.மு.க வீசும் 1 அல்லது 2 சீட்டுகளே தமது கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என நினைத்து செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் போக்கினால் தான் வாரத்திற்கு இரண்டு பெட்டிக்கடை இயக்கங்களின் தோன்றுகின்றன. மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்களை விட முஸ்லிம் சமுதாய மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் வன்னியர் சமுதாயத்தின் அரசியல் சபையான பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று 6 எம்பிக்களும், 18 எம்.எல்.ஏக்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இரண்டு மத்திய அமைச்சர் பதவியும் உள்ளபோது நமது சமுதாயத்தின் பிரதி நிதித்துவம் “0” பூஜ்ஜியமாய் இருப்பதற்கு என்ன காரணம்? அரசியல் ரீதியாக வன்னியர் சமுதாய மக்கள் பா.ம.க என்ற குடையின் கீழ் திரண்டு விடுகிறார்கள் அவர்களுக்குள் ஏராளமான பெட்டிக்கடை இயக்கங்கள், லெட்டர் பேடு அமைப்புகள் கிடையாது ! இதே போன்ற உணர்வு முஸ்லிம் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? எல்லாம் தங்களுக்குள் இருக்கும் சுய நலமும், எல்லோரும் தலைவர்களாக வேண்டும் என்ற கேவலமான சிந்தனைகளும் தான் ! அதனால் தான் ஒவ்வொரு பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களும் நாம் மேலே சொன்னது போல் குளு குளு ஆடம்பர கார்களில் பந்தாவாய் வலம் வருகின்றனர். ஒற்றுமை குறித்த இறை வசனத்தையும், நபிவழியையும் புறக்கணித்து விட்டு மேடை தோறும் ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசும் ஒவ்வொரு இயக்கவாதியின் பேச்சும் பைத்தியங்கள் தெருவில் கத்துவது போலத்தான் !

எவர் இயக்கம் ஆரம்பித்தாலும் உடனே வசூல் கொடுக்கும் பாமர மக்களின் தவறான அணுகுமுறைதான் ! திரட்டப்பட்ட பணத்தை பங்கு வைக்கும் போது பிரச்சினை ஏற்பட்டு ஒவ்வொரு இயக்கங்களும் இரண்டாக பிளவுபடுகிறது. இயக்கவாதிகளின் முக்கிய நோக்கமே வசூல் என்பதுதான். எனது பாசத்திற்கும், மரியாதைக்குமுரிய சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவரும் அல்லாஹ் ரசூலுக்கு பயந்து இனிமேல் எந்த இயக்கத்திற்கும், எதற்காகவும் நயா பைசா கொடுக்க மாட்டோம் என உறுதி கொண்டு நடைமுறை படுத்திப் பாருங்கள். எல்லா பெட்டிக்கடை இயக்கங்களும் காணாமல் மறைந்து விடும். சமுதாயத்தின் பெயரால் அவ்வப்போது நிகழும் பிரிவினைகளும் பிளவுகளும் ஏற்பட ஒரு வகையில் இயக்கங்களுக்கு வசூல் கொடுக்கும் பொதுமக்களும் காரணமாகி விடுவதால் நாளை மறுமையில் இயக்க வாதிகளின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய இறைவனின் கேள்விக்கு வசூல் கொடுத்த பொதுமக்களும் தான் பதில் சொல்லியாக வேண்டும். எனதருமை பொது ஜனங்களே ! ஜகாத்,பித்ரா, கூட்டுக்குர்பானி போன்ற இறைவனுக்குரிய அமல்கள் விஷயத்தில் உங்களது தர்மங்களை எந்த இடைத் தரகர்களிடமும் புரோக்கர் இயக்கங்களுக்கும் கொடுக்காமல் நீங்களே நேரடியாக உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு மறைமுகமாக கொடுத்து அதற்குரிய நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரே ஒரு வருடமாவது இதை நடைமுறை படுத்திப் பாருங்கள். அனைத்து பெட்டிக்கடை இயக்கங்களும் அழிந்து போய் விடும். அதன் மூலமாகவாவது சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படட்டும் ! இன்ஷா அல்லாஹ் !!

சமுதாயக் கவலையுடன்
மெளலவி
கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.

Sunday, July 27, 2008

மக்கள் சக்தி இயக்கம்

Dear Mr. Bala - Gurusamy.
Well written.

Since you are talking about "Self development" - following link could be useful for those people.
This is by the famous "writer" on Self development Dr. MS Udayamurthy.
These days - lot of youngsters have joined and making their monthly magazine on socio-political change.

Interested could read from this.



http://www.makkalsakthi.org/index.php?option=com_content&task=view&id=36&Itemid=45

http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/

MAKKAL SAKTHI EYAKKAM

Dr.M.S.UDAYAMURTHY



17A, South avenue
Thiruvanmiyur, Chennai - 41
Tamil Nadu
India
600041

044-24421810 ,9443562030



http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/

Monday, July 7, 2008

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.

இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.

ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.

பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.

இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.

இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.

அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=86

Sunday, June 22, 2008

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை

சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.

திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.

திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.

ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.

மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.

நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.

இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.

திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.

இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.

இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.

முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.

மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.

நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.

உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.

http://viduthalai.com/20080622/news14.html

www.quaidemillathforumuae.blogspot.com

Wednesday, May 28, 2008

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

http://azadibachaoandolan.freedomindia.com/

Thursday, May 1, 2008

தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?

தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?


கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?

( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )

பதில் :

தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.

5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003


தகவல் : பாமரன் பதில்களிலிருந்து

இனிய திசைகள் பிப்ரவர் 2008