Thursday, March 5, 2009

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.சையது சலாஹுதீன் பெயரில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத் துறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து ஆண்டுதோறும் சொற்பொழிவு நடத்துவதற்காக, இ.டி.ஏ. குழுமங்களின் நிர்வாக இயக்குநரான சலாஹுதீன் பெயரில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கான நிதி ஒரு லட்சம் ரூபாயை இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலர் எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகியோர் துணைவேந்தர் ராமச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

இந்த அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு ஏப்ரல் மாதக் கடைசியில் நடக்கிறது.

No comments: