Thursday, March 5, 2009

லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை

லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை

சென்னை, மார்ச் 3: லெப்பை நல வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தர்ஹாக்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். பாக்கர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:

தர்ஹாக்களில் அடக்கமாகி அருள்பாலித்து வரும் இறைநேயர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டம், அங்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாத்திஹா ஓதி சேவை செய்து கொண்டும் இருக்கிறவர்கள் லெப்பைமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி சுமார் 30 லட்சம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். பொருளாதார நிலையிலும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர்.

இவர்களுக்கு லெப்பைமார்கள் நல வாரியம் என்று தனியாக அமைத்து துயர்நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக உலேமாக்கள் நல வாரியம் உருவாக்கியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

சிறுபான்மை சமூகத்தினரின் நல்வாழ்வுக்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நீங்கள் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: