Thursday, March 5, 2009

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மார்ச் 3: இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பயணத்துக்கான விண்ணப்பங்கள், புதிய எண். 13, (பழைய எண். 7), மகாத்மா காந்தி சாலை, (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் இருந்து மார்ச் 5-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு ரூ. 200-ஐ பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவுக்கான நடப்பு கணக்கு எண். 30683623887-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு அளிக்க வேண்டும்.

பரிசீலனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.

குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டோர், பின்னர் அந்நியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீத தொகையுடன், முழுமையான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, ஹஜ் விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சர்வதேச பாஸ்போர்ட் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: