Tuesday, January 27, 2009

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

கடலூர், ஜன. 3: அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, புதுப்பிக்க முடியாமல் போனவர்கள் புதுப்பித்துக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழகத்தினரை பணி அமர்த்தி வருகிறது.
பதிவு மூப்பு அடிப்படையில், அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே பதிவு செய்தவர்களில் பலர் தவிர்க்க முடியாத காரணத்தால் புதுப்பிக்கத் தவறியிருப்பார்கள்.
அவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க 1-1-2009 முதல் 31-3-2009 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
புதுப்பிக்கத் தவறியவர்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றிதழ்களின் 2 நகல்கள், புதுப்பித்தல் கட்டணம் ரூ.112-க்கான ஓவர்ஸீஸ் மேன்பவர் கார்பரேஷன் லிமிடெட் என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை ஆகியவற்றுடன் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 24464286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20090103215629&Title=Districts+News&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=1/4/2009&dName=LP%DB%F4o&Dist=

No comments: