Thursday, February 5, 2009

துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி






துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஹபூப் அலி தலைமை வகித்தார். யுஏஇ தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலர் ஏ. முஹம்மது சிராஜுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மணக்கும் மணவாழ்வு நூல் தொகுப்பாசிரியர் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் நூலை வெளியிட நூலின் பிரதியினை யுஏஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.

மணக்கும் மணவாழ்வு எனும் இந்நூலில் கணவன் மனைவி உறவுகள், பெற்றொர் பிள்ளை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலினை படித்து உணர்ந்து அதன்படி நடக்க முற்பட்டால் திருமண வாழ்வு சிறப்புற அமையும் என்றார் ஆடிட்டர் ஃபெரோஸ்கான்.

ஆடிட்டர் ஃபெரோஸ்கானுக்கு யுஎஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் அசன், முஹம்மது, இளங்கோவன், அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments: