Wednesday, February 25, 2009

தமிழக பாதுகாப்பு இயக்கம்

தமிழக பாதுகாப்பு இயக்கம்

அன்பு நண்பர்களே! தாய்மார்களே!! மாணவச் செல்வங்களே!!!

velunachiar@gmail.com

இந்த இந்திய தேசம் பல்வேறு இனம், மொழி, கலாசாரம், பண்பாடு மற்றும் பல்வேறு மாநிலங்கள் உள்ளடங்கிய கோடிக்கணக்கான மக்கள் வாழும் செழிப்பான பூமியாகும். இங்கு அவ்வபோது ஒரு சில சாதிகளின் பெயராலும், மதத்தின் பெயராலும் விரும்ப தாகத சம்பவங்கள் நடைப்பெற்றபோதும் கூட இந்த இந்திய தேசத்தை கட்டி அமைப்பதில் நாம் அனைவரும் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டில் ஒரு இனத்தின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கின்ற அனைத்து கிரிமினல் வேலைகளையும் செய்த கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக பழ. நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமாவளவன், இலங்கை தமிழனின் வரலாறே தெரியாத சீமான் போன்ற சமூக விரோத கூட்டம் இன்று தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க புறப்பட்டு இருக்கிறது இளைஞர்களின் தமிழக பாதுகாப்பு இயக்கம்.

உலகப் பொருளாதார நெருக்கடிகளால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுரியாக்கப்படுள்ள நிலையில் அரசிற்கு அவப்பெயரை தேடித்தரும் என்ற நிலையில் இதுபோன்ற சமுக விரோதிகளின் செயல்களை அரசு கண்டுக்கொள்ள மறுக்கிறது. எனவே அன்பிற்கினிய தமிழ் சமுதாய சொந்தங்களே! இளைஞர்களே! மிகவும் விழிப்புடன் இருங்கள். மாணவச் செல்வங்களுக்கு தேர்வுகள் நெருங்கி விட்டன. கடந்த காலங்களில் தமிழ் பத்திரிகைகள் எல்லாம் கல்வி பற்றிய செய்தியை வெளியிட்டன. ஆனால் இந்த வருடம் ஈழ தமிழன் என்று சொல்லி காசுப் பார்த்து வருகின்றன.

எங்கள் இயக்கத்தை பற்றிய செய்திகள் அனைத்து தமிழ் நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

வாருங்கள் ஒன்றுப்படுவோம்!
தமிழகத்தை பாதுகாப்போம்!!

No comments: