Saturday, May 9, 2009

வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட வி. களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.05.2009 திங்கட்கிழமை ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிகாட்டுதல், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடரமுடியாத ஆண், பெண்களுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு தொடர வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்குகிறார்.

இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை செய்துள்ளது.

குறிப்பு :

இதுபோன்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை தங்களது ஊரில் நட த்த விரும்புவோர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களை 9965892706. எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: