Thursday, March 19, 2009

Understand Quran Prog. at Nagercoil and Kanyakumari Dist. Details

Dear Brothers,

Assalamu Alaikkum,

Alhamdhulillah, we have conducted Understand Quran Short course The Easy Way in Tamil - 3 Hours Prog. in Tirunelveli and Kanyakumar dist. Details follows.

Prog. 1. March 12 2009 at Sadakathullah Appa Collage, Palayamkottai, Tirunelveli Dist, on 11:30 we start up to 1:15 Presented by Br. M.F. Ali,
Morethan 75 Ladies Students, Morethan 40 Gents Students attend the class. (insha allah feed back form will send soon)

Prog. 2. March 13 2009 at Haji Abdurrahim Arabic Madarasa at Kottar, Nagercoil, Kannayakumari Dist on Moring 9am to 12pm Presented by Br. M.F.Ali, More than 20 Participants attend the class. (insha allah feed back form will send soon)

Prog. 3. March 13 2009 at Islamic Research and Guidance Trust at Nagercoil on 4:30pm to 8Pm Presented by Br. M.F.Ali, More than 50 Gents, More than 25 Ladies attend the class. (insha allah feed back form will send soon)

Prog. 4. March 14 2009 at Jamia Azhar Jumma Masjid at Kayal patinam on 11am to 1:20pm Presented by Br. M.F.Ali, More than 50 Gents, More than 35 Ladies attend the class. (insha allah feed back form will send soon)--

Prog. 5 March 14 2009 at Udangudi IGC Masjid on 7pm to 10pm Presented by Br. M.F.Ali, More than 40Gents, Students 25, More than 45 Ladies attend the class. (insha allah feed back form will send soon)

Prog. 6 March 15 2009 at Kadayanallur Hanifa Mahal on 11pm to 1pm Presented by Br. M.F.Ali, More than 20 Gents, More than 25 Ladies attend the class. (insha allah feed back form will send soon)

Prog. 7 March 15 2009 at Alwartirunagari at Masjdur Raham on 7pm to 10pm Presented by Br. M.F.Ali, More than 50 Gents, More than 50 Ladies attend the class. (insha allah feed back form will send soon)


Jazakallah
Sheik Masthan
9841 223 553

__._,_.___

நாகர்கோவிலில் UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way வெள்ளியன்று நடைபெற்றது.


இறையருளால் UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way - என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில் IRG ட்ரஸ்ட் அரங்கத்தில் சென்ற வெள்ளியன்று (13,மார்ச்09) மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூக நல அமைதி அறக்கட்டளையும் IRG அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து வந்த சகோதரர் ஜனாப். ஷேக். M.F. அலி அவர்கள் அனைவருக்கும் எளிதாக விளங்கும் விதத்தி மல்டி மீடியா படக்காட்சிகளின் மூலம் பாடங்களை விளக்கினார். பயிற்சியின் போது, பயிலவந்தவர்களை சைகைகள் மூலமும், உரக்க உச்சரிக்கச் செய்வதன் மூலமும் பங்கெடுக்கச் செய்து பாடங்களை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.

இந்த பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒவ்வொரு பாடங்களுக்கு இடையிலும் பயில்பவர்களை உற்சாகமூட்ட மூச்சுப் பயிற்சியளித்தார். இது பங்கெடுத்தவர்களின் கவனத்தில் தொய்வு ஏற்படா வண்ணம், நிகழ்ச்சி முடியும்வரை அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தது.

குரானிலுள்ள முக்கிய 50 வார்த்தைகளை இப்பயிற்சி மூலம் தெரிந்து கொள்வதால் அதிலுள்ள சுமார் 27000 வார்த்தைகளைப் புரிந்து ஓத இயலும். குரானிலுள்ள சுமார் 78000 மொத்த வார்த்தைகளில் இது 35 சதவீதமாகும்.

மாலை நாலரை மணி முதல் இரவு சுமார் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணி நேரத்தில் 8 பாடங்கள் வாயிலாக இந்த வகுப்பு நடத்தப்பட்டது. மஃக்ரிப் தொழுகக்காக அரை மணி நேரம் தேனீருடன் இடைவேளை அளிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வழக்கறிஞர் அஸீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பேசிய IRG அறக்கட்டளையின் சேர்மன் அல்ஹாஜ். செய்யது முஹம்மது மதனி நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப் பேசியதோடு, மேலும் இது போன்ற நல்ல பலனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த IRGT வளாகத்தின் கதவுகள் திறந்திருக்குமென உறுதியளித்தார். சமூக நல அமைதி அறக்கட்டளையின் செயலர், பொறியாளர். பிஜிலி ஸாஹிப் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய தொடக்கம் முதலே முழு முயற்சியுடன் எல்லா ஏற்பாடுகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய சமூக நல அமைதி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை இங்கு நினைவு கூறுவது இன்றியமையாததாகும்.

மேலும் இந்த நிகழ்சியைப் பல்வேறு இடங்களில் சிறப்புற நடத்த பக்க பலமாக இருந்து வரும் ஜனாப். கஸ்ஸாலி அவர்களும், நிகழ்ச்சிக்கான தொழில் நுட்ப அமைப்புகளைப் பொறுப்பாகச் செய்துவரும் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஷேக் மஸ்தான் அவர்களும் நிகழ்ச்சி சிறப்புற உதவினர்.

பயனுள்ள இந்த நிகழ்ச்சியினை தமிழ் முஸ்லிம்கள் வாழும்
அனைத்துப் பகுதிகளிலும் நடத்திப் பயன்பெறச்
செய்யவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

வல்ல நாயன் அதற்கு அருள்புரிவானாக. ஆமீன்.

--------
minjamal@gmail.com







.

டாக்டர் அப்துல்கலாமின் அறிவு பெட்டகத்திலிருந்து

டாக்டர் அப்துல்கலாமின் அறிவு பெட்டகத்திலிருந்து


அறிவுதான் வெல்ல முடியாதது எனக் கருதப்படுவதை வெல்லக் கூடியது.இந்த அறிவு நான்கு அம்சங்களைக் கொண்டது.
1.கற்பனைத் திறன்
2.நேர்மை
3.துணிவு
4.வெல்ல முடியாத சக்தி.

இந்த நான்கும் ஒன்று சேர்ந்து குணங்களைக் கொண்டது.இவற்றைப் பெற்றவர்கள் அறிவில் சிறந்த குடிமகன்களாகத் திகழ்வார்கள்.

கற்பனைத் திறன் பற்றி கூறவேண்டுமானால்…

கற்றல் தருவது கற்பனைத்திறன்…
கற்பனைத்திறன் தூண்டுவது சிந்தனையை…
சிந்தனை அளிப்பது அறிவு…
அறிவு உங்களை மிகச் சிறந்தவராக்கும்….

நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்…அவை…

நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது.

நடத்தையில் அழகு மிளிர்கின்ற இல்லங்களில் நல்லிணக்கம் மலர்கிறது….

நல்லிணக்கம் மலர்கின்ற இல்லங்கள் நிறைந்த தேசத்தில் ஒழுங்கு நிலவுகிறது.

ஒழுங்கு நிலுவுகிற தேசங்கள் நிறைந்த உலகத்தில் அமைதி தவழ்கிறது.

இதயம் நடத்தை தேசம் மற்றும் உலகம் ஆகிய நான்குக்கும் ஓர் அழகான இணைப்பு தொடர்பு உள்ளது.ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் நேர்மை பொதுவானதாக இருக்கவேண்டும்.
குடும்பத்தில் கல்வியில் சேவையில் தொழிலில் மற்றும் வர்த்தகத்தில் நேர்மை இருக்கவேண்டும்.

நிர்வாகம் அரசியல் அரசு நீதித்துறை ஆகிய அனைத்திலும் நேர்மை நிலை கொண்டு இருக்கவேண்டும்.வெல்ல முடியாத ஒரு சக்தியை அளிக்கவல்ல இந்த நேர்மைதான் இந்தியா வளந்த நாடாக மாறுவதற்கான வல்லமை அளிக்கும்.

துணிவு பற்றியும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்

வித்தியாசமாக சிந்திக்கும் துணிவு கண்டுபிடிக்கும் துணிவு இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்லும் துணிவு சிக்கல்ளைத் தீர்க்கும் துணிவு.

இவையே இளைஞர்களின் உயிர்மூச்சாக இருக்கவேண்டும்…அவர்கள் வெற்றிபெற வேண்டும்…மாணவர்களின் முதல் குறிக்கோள் அவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குபவர்களாக இருக்கவேண்டும். நாட்டுக்கான அவர்களது முதல் சேவை இதுதான்.

படிக்கும் காலத்தில் கேள்விகேட்கும் தன்மை கற்பனைவளம் தொழில் நுட்பஅறிவு தொழில் முனையும் திறன் மற்றும் அறவழியிலான தலைமைப்பண்பு ஆகியன அவரிடத்தே உருவாகியிருக்க வேண்டும். இவை ஐந்தையும் பெற்ற மாணவர் தன்னிசையாக கற்றுக் கொள்ளக் கூடிய மாணவராக வளர்ந்து நிற்பார்..

தன்னைத் தானே இயக்கிக் கொள்ளக்கூடிய தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய கற்றுக் கொள்பவராக அவர் உருவாவார். அதிகாரம் பெற்றவரை மதிக்கத் தெரிந்தவராக அவரிடம் முறைப்படி கேள்வி கேட்கத் தெரிந்தவராக இருப்பார். இவர்களைப்போன்றவர்கள் சேர்ந்துதான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

இளம் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்கள்தாம் சரியான பாதையில் அவர்களை இட்டுச் செல்லும். ஐன்ஸ்டின் வாழ்க்கையில் அவர் தந்தை வாங்கித்தந்த காம்பஸ்தான் அவரை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அவரது 12ஆவது வயதில் பரிசளிக்கப்பட்ட புத்தகம்தான் அவருக்கு இரண்டாவது அற்புதமாக விளங்கியது. பெரிய ஆய்வுக்கூடமோ அதிக செலவு பிடிக்கும் கருவிகளோ இன்றி இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை தனது கணித அறிவால் கண்டறிந்தார்.

வெல்ல முடியாத சக்திபற்றி சர் சி.வி.ராமன் தனது 82ஆவது வயதில் உரை நிகழ்த்தினார்.
அது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது. என் முன்னே உள்ள இளைஞர்களே பெண்களே…நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம்…எப்போதும் நம்பிக்கையையும் துணிவையும் இழந்து விடாதீர்கள்…

உங்கள் முன் உள்ள சவாலை துணிச்சலான ஈடுபாட்டின் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். இந்தியர்களின் சிந்தனை ஜெர்மன் வட ஐரோப்பியர்களின் கொஞ்சமும் குறைந்தது அல்ல. நம்மிடம் இல்லாதது துணிச்சல் மட்டுதான்.

நம்மை இயக்கும் சக்தியைப் பெற நாம் தவறிவிடுகிறோம். அது இருந்தால் நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும். நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இப்போது இந்தியாவுக்கு தேவைப்படுவதெல்லாம் நம்மைத் தோற்கடிக்கும் இந்த சக்திகளை அழிப்பதுதான். நமக்கு வெற்றிக்கான சக்தி வேண்டும்.

நம்மை சரியான இடத்துக்கு எடுத்துச் செல்கின்ற பாதையை தேர்வு செய்கின்ற சக்தி வேண்டும்.இந்த பூமியில் மிகச் சிறந்த இடத்தைப் பெறக்கூடிய பெருமைமிகு நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்கும் சக்தி தேவை. இந்த வெல்ல முடியாத சக்திகளே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார் ராமன். எனவே நண்பர்களே அறிவு என்பது அறிவு கற்பனைத்திறன் நேர்மை துணிச்சல் வெல்ல முடியாத சக்தி.

மாணவப் பருவத்திலேயே இந்த குணாதியசங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஆசிரியர்களும் கல்வியாளர்களும் உண்மையான அறிவு மாணவர்களிடம் சென்று சேர வேண்டும் என்று விரும்பவேண்டும்.

-மறைஞானப்பேழை மாத இதழ் சனவரி2009



--
3/17/2009 04:32:00 PM அன்று கவி(மதி)வனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது

Wednesday, March 18, 2009

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 5 )

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 5 )
"உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை தருமமாக செலவு செய்யுங்கள்" - எம்பெருமானார் நபிகள் நாயகம்.
சிக்கனமாயிரு... கருமியாயிராதே....!
நபிகள் நாயகத்தின் போதனைகளில் இதுவும் ஒன்று.
ஒரு சமயம்...
எம்பெருமானார், நபிகள் நாயகம் அவர்களைத் தேடிக்கொண்டு ஒரு பெரியவர் வந்தார். வந்த பெரியவரை அமரவைத்து என்ன காரியமாக வந்தீர்கள் என்று கேட்கிறார்.
"எங்கள் ஊரில் பள்ளிவாசல் கிடையாது... தொழுகைக்குப் பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லோருமாகச் சேர்ந்து கொஞ்சம் வரி மாதிரிப் போட்டு பணம் வசூல் செய்து பள்ளி வாசல் வேலையைத் துவக்கிவிட்டோம்.

ஆனால், போதிய பணம் இல்லாமல் பாதியோடு வேலை அப்படியே நிற்கிறது. அதை எப்படியும் கட்டியாகணும். நீங்கதான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நபிகள் நாயகம் அந்தப் பெரியவரைப் பார்த்துச் சொன்னார்,
"
அருகிலுள்ள ஊரில் ஒரு செல்வந்தர் இருக்கிறார்... அவருடைய பெயர், விபரம் எல்லாம் தருகிறேன். நீங்கள்அவரிடம் போய் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவவேண்டும் என்று கேளுங்கள்; உங்கள் வேலை சுலபமாகவே முடிந்துவிடும், " என்று சொன்னார்கள் எம்பெருமானார்.
எம்பெருமானார் சொன்னதைக் கேட்ட பின்னும் சற்றுத் தயக்கமாக நின்றார், அந்தப் பெரியவர். அவரது தயக்கத்தைப் பார்த்த எம்பெருமானார் அவர்கள், "உங்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள், அவர் நிச்சயம் கொடுப்பார் " என்றார்.
அதற்குப் பிறகு பெரியவர், எம்பெருமானார் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பணக்காரர் வசிக்கின்ற ஊரைத் தேடிப் போனார்.

அந்தப் பணக்காரரையும் பார்த்தார்.

பணக்காரரைப் பார்த்ததும் பெரியவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி!

பெரியவர் அதிர்ச்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தாம் பார்க்கப் போகின்ற பணக்காரர் பெரிய கருமி என்றும் எச்சில் கையால் காக்கையைக்கூட விரட்டாதவர் என்ற அளவில் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். அப்படிக் கேள்விப்பட்டது எவ்வளவு உண்மை என்பதைத்தான் அந்தப் பணக்காரரைப் பார்த்தபோது தெரிந்து கொண்டார்.

பார்த்த மாத்திரத்தில் எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்?
பெரியவர் பணக்காரரைப் பார்க்கப்போன நேரத்தில், அந்தப் பணக்காரர், ஒருத்தரை தூணில் கட்டிவைத்து அடித்துக் கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த பெரியவர், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரிடம், "எதுக்காக அந்த மனிதரை அப்படி அடிக்கிறார்?" என்று கேட்டார்.
அதற்கு அங்கிருந்தவர் சொன்னார், "அய்யா அவங்க, அந்த ஆளைக் கடைக்கு அனுப்பிப் பருப்பு வாங்கி வரச் சொல்லியிருக்கின்றார். அந்த ஆள் பருப்பு வாங்கிவரும்போது பத்துப் பருப்பு கீழே சிந்திச் சிதறவிட்டுவிட்டாராம். அதுக்காக பத்து அடி அடிக்கிறார்," என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.
ஒரு பருப்புக்கு, ஒரு அடி வீதம் பத்து அடி என்று கணக்குப் பார்த்து அடிக்கின்ற இந்தக் கஞ்சப் பேர்வழி எங்கே பள்ளிவாசல் கட்டப் பணம் தரப்போகின்றார்? இந்த நேரம் போய் நாம் பணம் கேட்டால் நமக்கு என்ன நடக்குமோ என்று அங்கிருந்து தலை தப்பினால் போதும் என்று நடையைக் கட்டிவிட்டார்.
அங்கே எடுத்த ஓட்டம் நேரே நபிகள் முன்னால் வந்து நின்றார், பெரியவர். அவரைப்பார்த்து நபிகள் அவர்கள் கேட்கிறார்கள்,"பணக்காரர் என்ன கொடுத்தார்?"
"கொடுத்தார், கொடுத்தார் நல்லாவே கொடுத்தார்...அடி, உதை என்று ஆரம்பித்து நடந்ததை விபரமாகச் சொல்லி அப்படிப்பட்டவரிடம் என்னை அனுப்பினீர்களே?!", என்று சொல்லி நிறுத்தினார்.
எம்பெருமானார் அமைதியாகச் சொன்னார், "மறுபடியும் அந்தப் பணக்காரரைப் போய் பார்த்துக் கேளுங்கள், " என்று சொல்கிறார்.
பெரியவருக்கு எம்பெருமானார் சொல்லைத் தட்டயியலாம,
மீண்டும் அந்தப் பணக்காரரைப் போய் பார்க்கக் கிளம்பிச் சென்றார்.

இந்த முறை பெரியவர் பணக்காரரைப் போய் பார்த்தபோது மேலும் அதிர்ந்து போனார். அவருக்கு எம்பெருமானார் மீதே கோபம் வந்தது. அப்படிக் கோபம் வர என்ன காரணம் என்கிறீர்களா?

இந்த முறையும் அந்தப் பணக்காரர் ஒரு ஆளை ஒரு மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்தவரிடம் பெரியவர், "ஏன் இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கின்றார்? காரணம் என்ன?" என்று கேட்டார்.
"அந்த ஆளைக் கடையில் போய் எண்ணெய் வாங்கிவரச் சொல்லியிருக்கின்றார், அந்த ஆள் எண்ணெய் வாங்கி வரும்போது பத்துச் சொட்டு எண்ணெயை கீழே சிந்தி விட்டாராம், அதனால் பத்து சவுக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார், " என்றார் அங்கிருந்தவர்.
பள்ளிவாசல் கட்டப் பணம் கேட்க வந்த நம்ம பெரியவருக்கு நபிகள் பேச்சைக் கேட்டு வந்தது தப்பாப்போச்சு; இந்தக் கருமியிடம் பணம் கேட்டு பள்ளிவாசல் கட்டுவதைவிட பள்ளிவாசல் கட்டுகின்ற எண்ணத்தையே விட்டுவிடுவது நல்லது என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்து விட்டார்.
இந்தக் கருமியிடம் பணம் கேட்டு அவரும் பத்துரூபாய் நன்கொடை என்று கொடுத்துவிட்டு பள்ளிவாசலை சரியாக் கட்டவில்லை என்று ரூபாய்க்கு ஒரு அடியோ உதை என்று கொடுத்தால் அதை வாங்குவது நாம்தான் என்றெண்ணிய பெரியவர், கருமியிடம் பணம் கேட்பதை கைவிட்டுவிட்டு பேசாமல் நபிகள் முன்னால் வந்து நின்றார்.
"செல்வந்தர் என்ன கொடுத்தார்?" என்று எம்பெருமானார் கேட்கின்றார்கள்
"சவுக்கடிதான்.... ", என்று சொல்லி நடந்த விபரத்தையும் அந்தக் கருமியிடம் பணம் கேட்கவேண்டாம் என்று முடிவெடுத்துத் திரும்பியதாகச் சொல்கின்றார்.
இந்த முறை எம்பெருமானார் " மறுபடியும் நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள்! " என்று உத்தரவிடும் தொனியில் சொல்கின்றார்கள்.
எம்பெருமானாரின் கட்டளையை மீற முடியாத பெரியவர் மறுபடியும் அந்தப் பணக்காரரைப் பார்க்கப்போகின்றார்.

பெரியவர் பணக்காரர் வீட்டுக்குள் நுழையும்போது சிறிது நின்று யோசித்தார். சரி வருவது வரட்டும் என்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு போனார்.
நல்லவேளையாக அங்கே யாரும் அடிபடவில்லை; ஆனால் அந்தப்பணக்காரர் வீட்டுக்குள் யாரிடமோ சத்தமாக திட்டிப் பேசிக்கொண்டிருந்தார். எம்பெருமானாரின் கட்டளை நினைவில் எழ, பெரியவர் துணிந்து அவரை அணுகி தாம் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லி உங்களால் முடிந்ததை தந்து உதவ வேண்டுமென்று மிகப் பணிவாகக் கேட்டுக்கொண்டார், பெரியவர்.
"பள்ளி வாசலைக் கட்டிமுடிக்க எவ்வளவு செலவு செய்வதாக உத்தேசித்திருக்கின்றீர்கள்?" என்று அந்தச் செல்வந்தர் கேட்டார்.
"பள்ளிவாசல் கட்டி முடிக்க பத்தாயிரம் ரூபாய் தேவைப்படும். நீங்க உங்களால் முடிந்ததைக் கொடுத்தீர்களானால் மீதியை மத்தவங்களிடம் நன்கொடையா வாங்கி பள்ளி வேலையை முடித்திடுவோம்," என்றார் பெரியவர்.
அதுக்கு அந்தப் பணக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?


என்ன சொல்லீருப்பார்ன்னு நினைக்கிறீங்க? கொஞ்சம் யூகிச்சுப் பாருங்களேன்!


"இவ்வளவு காலம் உங்கள் ஊரில் பள்ளிவாயில் இல்லாமல் இருந்ததே தவறு. இதில் இன்னமும் பலபேர்களிடம் போய் நன்கொடை அது... இது என்று காலம் தள்ளுவது நல்லதல்ல; பள்ளிவாயில் கட்டத் தேவையான பத்தாயிரத்தையும் நானே தருகின்றேன். இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்திற்கு உதவாத பணம் என்னிடம் இருந்து என்ன ஆகப் போகின்றது?" என்று சொன்னவர் சற்றும் தாமதிக்காமல் உள்ளே சென்று பத்தாயிரம் ரூபாயை எடுத்து வந்து பெரியவரிடம் கொடுத்தார்.


பெரியவருக்கு நடப்பது கனவா? நனவா? என்று குழம்பிய நிலையில் எம்பெருமானார் முன் வந்து விபரத்தைச் சொல்கின்றார். விபரம் சொன்னதோடு நிற்காமல் நபி அவர்களிடம் கேட்கின்றார்.

"பத்துப் பருப்பு சிந்தியதற்கும், பத்துச் சொட்டு எண்ணெய் சிந்தியவருக்கும் அடியும் உதையும் கொடுத்தார்; அப்படிப்பட்டவர் பள்ளிவாசல் கட்ட எதாவது கொடுங்கள் என்றால் பத்தாயிரத்தை சுளையாகத் தூக்கிக் கொடுக்கின்றாரே இவரை கருமி என்பதா? கொடைவள்ளல் என்று சொல்வதா?" என்று தன் ஆச்சரியம் விலகாமல் கேட்கின்றார் பெரியவர்.

பெரியவர் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பத் திரும்ப வந்து நின்ற போதெல்லாம் நபியவர்கள், 'போய் அவரிடம் கேளுங்கள்' என்றுதான் சொன்னாரேயொழிய வேறு எதுவும் சொல்லாவில்லை. ஆனால் இப்போது விளக்கம் சொல்கின்றார்.

"கருமித்தனம்ங்கறது வேற! சிக்கனம்ங்கறது வேற!! அந்த ஆள் கருமி கிடையாது. சிக்கனத்தைக் கையாளுபவர்; அவர் சிக்கனமாய் இருந்து சேர்த்து வைத்ததால்தான் அந்தப் பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது. எனவே சிக்கனமாக இருப்பவரை கருமி என்று எண்ணாதீர்கள்", என்று சொன்னார்கள்.

(நம்மாளுகள்ள பலபேர் இப்படித்தான் சிக்கனமா இருக்காங்களோ!!)
எம்பெருமானார் சொன்ன அந்த வைர வார்த்தைகள்தான் கருமித்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் உள்ள இடைவெளியை நமக்குப் புலப்படவைக்கின்றது.

இந்தச் செய்தியை நீங்கள் படித்துவிட்டு உங்கள் வீட்டம்மாவிடம் சொன்னாலும் சொல்லலாம்; அல்லது யார் மூலமாவது இந்தச் செய்தி காற்று வாக்கில் பல குடும்பத் தலைவிகளின் காதிலும் விழுந்திருக்கலாம்!
குடும்பத் தலைவர்கள் மேல எனக்கு அனுதாபம் அதிகமா இருக்கிறதால ஒன்றைச் சொல்ல வேண்டியது அவசியம்ன்னு நெனைக்கேன்....
இனிமேலும் நீங்கள் கடைக்குப் போய் பருப்போ இல்லை எண்ணெய்யோ வாங்கி வருகின்ற சந்தர்ப்பம் ஏற்படலாம்!?

அப்படி வாங்கி வர்ற‌ வழியில் எதாவது தப்பித் தவறி சிந்திட்டா
இவ்வளவு சிந்திப் போய்ட்டதுன்னு வெகுளித்தனமாக வீட்டில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். ஏன்னா ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது....!??????

Prophet's Medicine

Prophet's Medicine

Barley
The Prophet (Pbuh) recommended Barley to cure griefs of heart and ailments of kidney
Dr. M.Laiq Ali Khan

Barley crops are cultivated throughout the country during the season of rabi crops and utilized in various forms including the Barley flour. The plants of barley are very similiar to wheat and the seeds are elongated in shape in comparison to wheat with a covering of light yellow colour. Prophet Muahmmad (Pbuh) liked it very much and used it in various forms such as barley bread, gruel and dough.

During the period of the Prophet (Pbuh) the people either used to eat the Barley bread or to mix the wheat flour with Barley flour to prepare the bread generally. One lad used to sell the preparation from Beet roots and barley at the gate of Masjid-e-Nabwi on every Friday and it is said that holy companions liked this preparation as much as they used to wait for Friday eagerly.

Hazrat Ummul Manzar states that the Prophet (Pbuh) along with Hazrat Ali came to our house, we had the dates and those were presented to them. Both of them ate from those dates. When Hazrat Ali consumed a little of those, the Prophet (Pbuh) said “You recently recovered from illness, hence you are weak, hence don’t eat more. Therefore, that lady prepared a dish from barley and beet root. Then, the Prophet (Pbuh) told Hazrat Ali “eat from it, it is better for you”. (Ibn-e-Maja, Sanad-e-Ahmed, Tirmizi)

This proves that after illness, the preparation made from barley and beet roots is very good tonic for weak persons.

Hazrat Anas Bin Malik states that a tailor invited the Prophet (Pbuh) to meals. He prepared the barley bread and meat with Pumpkin. The Prophet (Pbuh) very effectionately ate the pumpkin pieces from the curry. (Bukhari, Muslim)

Yousuf Bin Abdullah Bin Salam states that I saw the Prophet taking a piece of barley bread and put a date on it and stated that was bread’s vegetable (salan). (Abu Dawood)

The barley gruel was especially prepared after boiling barley with milk and sweetened with honey. That preparation was called as Talbina.

Whenever a person of the family of Rasool Allah fell sick then it was ordered that the barley gruel should be prepared for him. Then he used to state “it removes the grief of the patients heart, removes its weakness as any of you removes the dirt from your face after washing it”. (Ibn Maja)

Hazrat Aisha (R.A) used to order preparation of Talbina for sick person and used to tell “though the patient dislike it, but it is highly beneficial for him. (Bukhari)

Another narration is found on record from Hazrat Aisha Siddiqua (R.A). Whenever anyone complained of loss of appetite to the Prophet (Pbuh). He ordered to use Talbina and stated “By Allah who hold my life, this removes the dirts of your abdomen as one of you removes the dirt of your face by washing it”.

Powdered barley (Sattoo) was very much liked by the Prophet (Pbuh). At the time of victory of Khaibar, the Prophet agreed to marry to Hazrat Safia, the very next day he directed to Hazrat Anas Bin Malik to invite the people to attend the Dawat-e-Walima of Hazrat Safia.

According to the narrations of Tirmizi and Ibn Majah the walima comprised of dates and sattoo, but according to Bukhari a confection was prepared from dates, barley and sattoo and served before the guests.

In Nisai, Abu Dawood, Bukhari, Ibn-e-Majah, Tirmizi and Ahmed Bin Hambal, there are 21 hadiths recommending the consumption of Sattoo. Besides this the description of Sattoo is also available in other Hadiths.

According to the scholars of hadith barley is very nutritious and provides energy for the body, besides this is also beneficial in pharyngitis and cough. It resolves the inflammation of the stomach (Gastritis), expells the toxins from the body and a good diuretic. It quenches the thirst. Barley water is a good remedy in kidney problem, to quench the thirst and provide the best nutrition for indisposed and weak persons. preparation of Barley water is described by Ibn Al-Qayyim. According to him, barley with five times water should be boiled, till the contents become 3/4 and the colour of the mixture becomes milky.

Scientists have found the following items during the chemical synthesis of barley- albuminoids, starch, fat, fibre, ash and water. Chemical composition shows that it contains the fat in the form of Leucosine Gluten Albumen, the compound of Nitrogen as palmatic Acid, Salisylic Acid, Phosphoric Acid. Besides, it contains Hypoxanthens. British Pharmacopoeia recommends Malt extract for internal use. It contains 4 per cent Protiens, the enzymes for digestion of carbohydrates and vitamins. Some scientists also indicate the presence of Arsenic in the barley grain.

The ancient physician’s explained various experiences regarding the use of barley. Ibn Sina says that the blood produced by consuming barley is neutral, pure and of low consistancy.

According to Firdous Al-Hikmat the suspension prepared from one part of barley and fifteen part of water untill after boiling this volume becomes 2/3rd of its basic solution, is beneficial for at least hundered diseases of the body.

ஒட்ஸ் பார்லி நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்
1.ஒட்ஸ் - 50 கிராம்
2.அரைத்த பார்லி பவுடர்-இரண்டு டேபிள் ஸ்பூன்
3.ஆயில் - இரண்டு டேபிள் ஸ்பூன்
4. பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1
5. தக்காளி (நறுக்கியது) - 1
6. பச்சை மிளகாய் (கீறியது) - 2
6. வெந்தயம் - 1 டீஸ்பூன்
7. பட்டை - 1
8. பூண்டு - 2
9. நறுக்கிய புதினா - இரண்டு டேபிள் ஸ்பூன்
10. பால்- 1 டம்ளர்
11. உப்பு தேவைக்கேற்ப
12. சூப் செய்வதற்கேற்ற பாத்திரம்

செய்முறை
1.பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,வெந்தயம்,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவும்.
2.வதக்கியதும் சுமார் 11/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்பொழுது கீழ்கண்ட பொருட்களுடன் கொதிக்கவிடவும்.
ஒட்ஸ்,தக்காளி மற்றும் அரைத்த பார்லி பவுடரை பச்சை தண்ணீரில் கட்டியில்லாமல் களந்தது.
3.மிதமான தீயில் வைக்கவும்.
4.ஒட்ஸ் நன்றாக வெந்ததும் பால்,உப்பு மற்றும் நறுக்கிய புதினா சேர்க்கவும்.
5.சுமார் 25 நிமிடம் மிதமான தீயில் கொதித்தால் சூப் பதத்திற்கு வரும்.
6.இப்பொழுது சுவையான, மருத்துவ குணம் நிறைந்த ஒட்ஸ் பார்லி நோன்பு கஞ்சி ரெடி.

மருத்துவ குறிப்பு:
சர்க்கரை,இதய கோளாறு, மற்றும் கொலஸ்ட்றால் வியாதிகளுக்கு அருமருந்து.

தயாரிப்பு
அபூஹூதைஃபா.

Information Guide to Hypertension

K Seyed Jaafar
toMuduvai Hidayath ,
hameedsac@gmail.com,
kahidarts@gmail.com

ccjaafars98@yahoo.com,
mmsihab@gmail.com,
ahamedraja@gmail.com

dateWed, Mar 18, 2009 at 9:17 AM
subjectInformation Guide to Hypertension

Dear Brother/s

I am in receipt of the following email from our Clinic.
The same is forwarded for the benefit of our brethren to make awareness
of this SILENT KILLER.

Kindly distribute one and all .

With kind regards
Seyed Jaafar
=======================================

http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/hypertension/htm/video.htm
http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/hypertension/htm/index.htm

What is Hypertension?
Hypertension (also called high blood pressure) is a blood pressure reading of 140/90 mmHg or higher. Once high blood pressure develops, it usually lasts a lifetime but the good news is that it can be treated and controlled.

High blood pressure is called the silent killer because it usually has no symptoms. Some people may not find out they have it until they have trouble with their heart, brain or kidneys.
When high blood pressure is not found and treated it can cause -

The heart to get larger, which may lead to heart failure.
Small bulges (aneurysms) to form in blood vessels. Common locations are the main artery from the heart (aorta); arteries in the brain, legs, and intestines; and the artery leading to the spleen.
Blood vessels in the kidney to narrow, which may cause kidney failure.
Arteries throughout the body to "harden" faster, especially those in the heart, brain, kidneys, and legs. This can cause a heart attack, stroke, kidney failure, or amputation of part of the leg.
Blood vessels in the eyes to burst or bleed which may cause vision changes and can result in blindness.

Certain traits, conditions, or habits may raise the risk of HBP. These include older age, race/ethnicity, overweight or obesity, gender, unhealthy lifestyle habits, a family history of HBP, long-lasting stress, and having prehypertension (blood pressure levels between 120–139/80–89).

Managing Hypertension
This is why knowing your blood pressure numbers is important, even when you're feeling fine. To have your blood pressure checked, simply make an appointment at the clinic. Even if your blood pressure is normal, the Clinic can help you keep it that way through lifestyle recommendations.

If your blood pressure is too high, then the Clinic is there to give you the right advice on a healthy lifestyle, ongoing medical care, and a specific treatment plan.

Further information

· A Pocket Guide to Blood Pressure Measurement in Children
· My Blood Pressure Wallet Card
· Your Guide to a Healthy Heart
· Your Guide to Lowering High Blood Pressure (Interactive Web Site)
· Your Guide to Lowering Blood Pressure
· Your Guide to Lowering Your Blood Pressure With DASH
· High Blood Pressure (Medline Plus)
· Hypertension: Interactive Tutorial (MedlinePlus)

Saturday, March 14, 2009

திப்புவின் ஆட்சித்திறன்

திப்புவின் ஆட்சித்திறன்

http://www.keetru.com/history/india/thippu.php


திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.

“அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். “மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.”

காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.

சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர்.

திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.

தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி

முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி
தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947
களந்தை பீர் முகம்மது

http://www.keetru.com/vizhippunarvu/mar09/beer_mohmed.php

பிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அது தென்னிந்திய முஸ்லிம்களை மையப்படுத்தாமல், வட இந்திய முஸ்லிம்களின் வரலாற்று நிழலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்க முயற்சி செய்கிறது. முனைவர் பட்டத்திற்கான அவருடைய ஆய்வுதான் முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி - தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947 எனப்படும் இந்நூல்.

தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை மிக இயல்பாகவும் அரசியல் குறித்த சிந்தனைகளை அலட்சியப்படுத்தியதாகவுமே இருந்துள்ளது. இப்போதைய அரசியல் விழிப்புணர்வு வரை முஸ்லிம்களுடைய நிலையைக் கவனித்தால், அவர்களாகவே எழுச்சிபெற்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததில்லை என்பது தெரியவரும். இஸ்லாமிய வாழ்க்கையே போதும் என்கிற எண்ணமே மேலோங்கியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். முஸ்லிம்களுக்குள்ளேயே பலமாக வேரூன்றிய தப்லீக் இயக்கம் இப்போதும் அரசியலை வெறுக்கின்றது. அரசியல் எழுச்சி இஸ்லாமிய உணர்வுகளை மழுங்கடித்துவிடும் என்று அது கற்பிதம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் அரசியல் விழிப்பை அடையவிடாமல் தடுப்பதிலும் அது முனைந்து செயல்பட்டு வருவதைக் காணமுடியும்.

உலகத் தலைவர்களைப் படுகொலை செய்வதைத் தங்களின் ஏகாதிபத்திய உரிமையாகவே கருதும் அமெரிக்க சி.ஐ.ஏ.யினுடைய முன்னாள் அதிகாரிகளில் ஒருவராக கிரகாம் இ புல்லர் தன்னுடைய இஸ்லாமின் எதிர்காலம் என்ற நூலில் தப்லீக் ஜமாத்தைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார் : “அமைதியான அரசியல் கலப்பில்லாத இயக்கம்”. அதே போல கலிபோர்னியா பல்கலைக் கழக அறிஞரான பார்பரா மெட்காஃப் தெற்காசிய இஸ்லாம் குறித்த தனது ஆய்வில், “அரசியல் கலப்பில்லாத மத அடிப்படை மறுமலர்ச்சிக்கான அமைதியான இயக்கம்” என்று கூறுகிறார். இந்த இரண்டு மேற்கோள்களிலும் “அமைதி” என்ற சொல் “அரசியல் கலப்பில்லாத” என்ற சொற்றொடரும் இணைக்கப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்குவது அவசியம் (ஆதாரம் : த சண்டே இந்தியன் - 11, ஜனவரி, 2009.) அரசியலை எண்ணாத சமூகம் கல்வி வளர்ச்சியையும் இயல்பாகவே கைவிட்டுவிடும். அப்படித்தான் இந்திய முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமாகவே இருந்து வந்துள்ளது; இப்போதும் கூட இதில் தலைகீழ் மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லைதான் - சச்சார் குழு அறிக்கை சாட்சியாக! இது மாதிரியான ஆய்வுகளை எவரேனும் முயற்சி செய்தால் அவர்களுக்கான முன்னெடுப்புகளை இந்தநூல் எடுத்துக் கொடுக்கும்.

ஆசிரியர் எடுத்துக்கொண்டிருக்கிற இந்தக் கால கட்டம், இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கிய உச்சத்தைக் கொண்டிருப்பது, பிரிட்டிஷாருககு எதிரான விடுதலைப் போராட்டங்கள் பேரளவில் நிகழ்ந்து, அவர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடித்து வெற்றி பெற்ற கட்டமாகும். இந்தச் சமயத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்பதை ஆய்வு செய்துள்ளது இந்நூல். ஆதலால் அதற்க முந்திய நிலை என்ன என்பதையும் ஆசிரியர் ஆய்வு செய்திருக்கிறார். அவற்றுள் புதிய தகவல்களும் அடங்கியுள்ளன.

தென்னிந்திய முஸ்லிம்கள் வணிகத்தில் ஈடுபட்டு, சோனகர்களுடனும் இதர பிரிவினருடனும் அவற்றைக் கையாண்டு வாழ்ந்திருப்பது ஒரு வகை. இஸ்லாமிய நடைமுறைகள் மேலெழும்போது இதர சமூகத்தாருடன் கொள்கிற பிணக்குகள் அல்லது இணக்கங்கள் பிறிதொரு வகை. ஆனாலும் வணிகத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள் அரசியல் ஆதரவைப் பெற முனையாமல், வருங்காலம் குறித்த சிந்தனைகளில்லாமல் இருந்தது பெரிய வேடிக்கையாகவே இருந்துள்ளது. வணிகத்தை மேம்படுத்துபவர்கள் அந்தந்த நாட்டின் அல்லது பகுதியின் தலைநகரங்களிலோ, வியாபார மேம்பாட்டுப் பகுதிகளிலோ தங்கள் நிறுவனங்களை விஸ்தரித்துக் கொள்வதே இயல்பானது. ஆனால் தமிழ் முஸ்லிம்கள் வெளி நாட்டினருடன் தொழில் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் வந்து காலூன்றவில்லை. அவர்களுடைய அதிகபட்சத் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்து முஸ்லிம்கள் மாத்திரம் இராமநாதபுரம் இராஜாவுடன் உறவுகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். கடலூருக்கு அருகிலுள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர் மற்றும் பிரபல வணிகரான மஹ்மூது ரெய்னா உள்ளிட்ட கப்பலோட்டிய வேறு பல முஸ்லிம்களும் சென்னையில் வந்து குடியேறவில்லை, இங்கிருந் டியே வர்த்தகம் புரியவும் இல்லை. (பக்.29)

சென்னை ராஜதானியில் மூன்று சதவிகிதம் மாத்திரமே இருந்த பிராமணர்கள் படுவேகமாக வளர்ச்சி யடைந்து கல்வித் துறையிலும் அரசுப் பணிகளிலும் ஆதிக்கம் பெற்றார்கள். இதன் பின்னர்தான் முஸ்லிம் களிடையிலும் நவீன கல்வி குறித்த எண்ணம் தோன்றியது. 1902- ஆம் ஆண்டில் தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து வந்த சூழல்களில் முஸ்லிம்களின் மேட்டுக்குடிப் பிரிவும் உண்டானது. இவவ்ளவு முக்கியச் சூழல்கள் நிகழ்ந்தும் கூட முஸ்லிம்களின் அரசியல் எண்ணம் பலமடைய வில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் போன்ற பிளவுகள் அதைப் பிரதிபலித்த நீதிக்கட்சித் தோற்றம், பின்னர் சுயமரியாதை இயக்கம் ஆகியன தோன்றவும் இவற்றினால் அதிர்வலைகள் தோன்றின. இவைதான் முஸ்லிம் சமூகத்தை இலேசாக அசைத்தும் பார்க்கின்றன. அதுவரையிலும் உருது முஸ்லிம்களுடன் மார்க்க ரீதியான ஒருங்கிணைப்பைத் தமிழ் முஸ்லிம்களும் கொண்டிருந்தார்கள்.

சுயமரியாதை இயக்கம் திராவிட உணர்வுகளை முன்மொழியும் போது திராவிடத் தன்மைக்கு அப்பாற்பட்ட உருது முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் முஸ்லிம்கள் இனரீதியாகப் பிளவுபடும் தன்மை உண்டானது. ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் சென்னை ராஜதானியில் உருவாக முடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. அகில இந்திய அளவில் கிலாபத் இயக்கமும் இதே காலத்தில்தான் நடந்தது. வட இந்திய முஸ்லிம்கள் பெற்றிருந்த அரசியல் உணர்வின் வீரியத்தை தென்னிந்திய முஸ்லிம்கள் பெறவில்லை; என்றாலும் தேக்க நிலையும் இல்லை. வெளிப்புறத் தாக்குதல்களினால் முஸ்லிம்களும் முடங்கிவிட முடியாமல் போயிற்று. ஒரு வகையான நிர்பந்தச் சூழல்தான். முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு என யூகிக்கலாம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சச்சரவுகள் குறித்து மோரே குறிப்பிடும்போது, இஸ்லாம் தென்னிந்தியாவில் கால் வைத்ததில் இருந்தே இதற்கான காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்கிறார் (பக் 105) இதைக் குறித்து மேலும் ஆய்வு செய்தலே நல்லது. இது ஆசிரியர் ஜே.பி.பி.மோரேயின் சொந்தக் கருத்துதான்.

ஆயிரக்கணக்கிற்கும் மேலான குறிப்புகளும் நூற்களுமாக அவருடைய இந்த ஆராய்ச்சி நூலுக்கு உதவியுள்ளன. ஆனால் அவருடைய சொந்தக் கருத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் எந்த மேற்கோள்களும் இல்லை அவரிடம். முதலில் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இஸ்லாம் அதன் ஆரம்பக் காலத்திலேயே உணரப்பட்டது. இங்கு முகலாயர் களின் வருகை தேவைப்படவில்லை. சோனகர்கள் எனப்படும் அரேபிய வணிகர்களின் மூலமே அது நிகழ்ந்தது. முத்துக்கள், ரத்தினங்கள், ஏலக்காய், குதிரைகள் என்று பரஸ்பர பரிமாற்றங்கள் மூலம் நிகழ்ந்த உன்னதமான வியாபார உறவுகளும். சூப்பிகளின் ஞானப் பிரச்சாரம் - சேவைகளும் இஸ்லாம் பரவுதலுக்கான உந்துசக்திகள். அப்போது வணிகம் சுமூகமான மதமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.

ஆசிரியர் மோரே இந்து - முஸ்லிம் சச்சரவுகளைக் குறிப்பிடும் போது ஆர்.எஸ்.எஸ். தோன்றுவதற்கு முன் மிகச் சிலவற்றையே சொல்கிறார். அனால் அவர் பட்டியலிடும் பெரும்பாலான வகுப்பு மோதல்களின் காலகட்டம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிறப்புக்குப் பின்னர்தான் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. இந்தியாவில் வகுப்பு மோதல்கள் உக்கிரமாய் வெளிப்பட்டபோது அவற்றின் அலையடிப்புகளே தமிழ்நாட்டிலும் நேர்ந்துள்ளன. மேலும் இஸ்லாம் இந்திய மண்ணில் நுழைந்தபோது ஒன்றுபட்ட இந்து மதம் என்பதும் கிடையாது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் மட்டுமே இருந்தன. இந்து என்ற நாமத்தையே பின்னர் அரேபியர்கள்தான் வழங்கினர். கி.பி. 632-ல் முகம்மது நபியின் மறைவுக்குப் பின் கி.பி. 700-ம் ஆண்டியலேயே நபித் தோழர்களை மிகவும் நெருங்கியிருந்த ஹஸரத் நபி இப்னே சபி என்பவர் குஜராத்தின் பாட்புட் கிராமத்திற்கு வந்து சூஃபித்துவ நெறிமுறையின் கீழ் இஸ்லாத்தைப் பரப்பியுள்ளார். காஷ்மீரும் சூஃபித்துவப் பண்பாட்டில் மலர்ந்ததுதான் என்பதையும் பல வரலாற்று ஆசிரியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாகவே இருவேறு விதமான கலாச்சாரங்கள் ஒரே மண்ணில் இடம் பெறுகையில் சிறுசிறு சச்சரவுகள் முதல் பெரும் மோதல்கள் வரை ஏற்படுவது இயற்கையே. ஆனால் அப்படிப்பட்ட மோதல்களுக்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், நம் வாழ்க்கை அனுபவங்கள் அவற்றிற்கிடையே நல்லுறவுகளை மேம்படுத்த வழிவகுக்கின்றன. இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஒரு நடைமுறை வழியாகப் பார்க்காமல் நமது பாரம்பரியப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவும் பார்த்திருக்கும் ஹக்கீம் அஜ்மல்கான் (1863 - 1928) போன்ற ஆளுமைகளும் நம்மிடையே உள்ளனர். (இந்தியாவும் இஸ்லாமும் - டி.ஞானையா பக்.135) முஸ்லிம்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியதால். அவர்கள் தம் வணிக நலனின் பொருட்டாக சமய ஒற்றுமையை விரும்புபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். சூஃபிகளின் வருகையும் அவர்களின் பணியும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே சுமுக நிலைகளை உருவாக்கத் தவறவில்லை.

முகம்மது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்குத் தமிழ் முஸ்லிம்களின் ஆதரவு எப்படி இருந்தது? அவர்களும் அதை விரும்பியே இருக்கிறார்கள். எனினும் சிறு தயக்கமும் ஊசலாட்டமும் கூடவே இருந்துள்ளன. இதனோடு இயைந்ததாக பெரியார் திராவிட நாடு கோரிக்கையையும் எழுப்பியிருந்தார். அவர் அதற்கு முஸ்லிம்களின் ஆதரவை எதிர்பார்த்தது இயல்பானதே. ஆனால் திராவிட நாடு கோரிக்கையை விடவும் பாகிஸ்தானுக்கான கோரிக்கையே முஸ்லிம்களிடம் அதிகம். முஸ்லிம்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் மைய மதிப்பீடுகளின் வரலாறு சார்ந்த தொடர்ச்சியே பாகிஸ்தான் கோரிக்கை என்று மோரே கூறுகிறார். இதை பிரிட்டிஷ்காரர்கள் துரிதப்படுத்தியது வரலாற்று உண்மை. தங்களின் காலனி நாடுகள் வளர்ச்சி பெறுவதை எந்த ஏகாதிபத்தியமும் விரும்பாது. எதிரும் புதிருமாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் முஸ்லிம்களின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது சுவாரசியமான செய்தியாகும். இந்தியா ஒரு ராமராஜ்யமாக இருக்கும் என்பது காந்தியடிகளின் விருப்பமாக இருந்தது. மகாத்மா காந்தியின் இந்தப் பேச்சு முஸ்லிம்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது. மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதிய ஸ்டேன்லி ஜோன்ஸ் அவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் போரில் முஸ்லிம்களின் மீது மகாத்மா காந்தி, இராஜாஜி ஆகியோருக்கும் மதரீதியான விமர்சனங்கள் இருந்தன. காங்கிரசிற்குள் இருந்த மதன்மோகன் மாளவியா போன்றவர்களின் செயல்பாடுகள் முஸ்லிம்களின் அச்சத்தைப் பெருகிட வைத்தன என்பதை காந்தியின் கூற்றுக்கான பதிலாக முகம்மது அலி ஜின்னா முன்வைத்தார். காந்தி மேலும் கடுமையான அறிக்கையை வெளியிட இது போன்ற சிக்கல்கள் உதவின. எனவே விடுதலைப்போர் ஒரு முகமாக நடைபெற்றாலும் இந்து - முஸ்லிம் என்ற கசப்புப் பிரிவினைகள் பாகிஸ்தான் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தின. காந்தியைப் போலவே ராஜாஜிக்கும் கடுமையான விமர்சனங்கள் முஸ்லிம் களின் மீது இருந்தது. இதை பிரிட்டிஷார் மேலும் மேலும் ஊதி வளர்த்தார்கள். இந்தியா விடுதலையை நோக்கி முன்னேற, பிரிட்டிஷார் அதை பிரிவினையை நோக்கி நகர்த்தினார்கள். தலைவர்களின் மனக் கசப்புகள் அதற்கு நன்றாக உதவின. ஆனால் இந்துக்களுக் கும் முஸ்லிம்களுக்குமான தனித்தனித் தேசங்களை, பாகிஸ்தானியக் கோரிக்கைக்கும் முன்னரே வைத்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோல்வால்கர்தான். அவருடைய ‘சிந்தனைக் கொத்து’ நூலில் இதைக் காணலாம்.

பாகிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதைப் போலவே, மலபார் முஸ்லிம்களுக்காக மாப்ளஸ்தான் கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆனால் ஜின்னா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் கோரிய திராவிட நாடு கோரிக்கையையும் ஜின்னா ஏற்றுப் போராடவில்லை. முஸ்லிம்களின் ஆதரவும் இல்லை. தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியற் பரிணாமம் வகுப்பு மோதல்களையும் கசப்புணர்வுகளையும் விட்டு விலகியே இருந்தது குறிப்பிடத்தக்கது. உருது முஸ்லிம்களுடன் இனரீதியான வேறுபாடு இருந்தாலும், அவர்கள் அரசியலில் எதிர்ப்புகளைக் கொள்ளவில்லை. முஸ்லிம்லீக் தலைவராயிருந்த முஹம்மது இஸ்மாயில் சாகிப் உருது முஸ்லிம்களுடன் நல்லுறவையே வளர்த்துக் கொண்டார். தமிழ் முஸ்லிம்களுக்கே உரிய நிலப்பரப்பாக இருந்தாலும், உருது முஸ்லிம்களை விட தமிழ் முஸ்லிம்கள் வர்த்தக ரீதியாகப் பெரும் பங்கு வகித்ததும், ஆர்க்காடு நவாப் செல்வாக்கிழந்து பிரிட்டிஷாரை அண்டியிருந்ததும் என உருது முஸ்லிம்களின் ஆதிக்கம் சென்னை ராஜதானியில் எடுபடாமல் போனது. சுயமரியாதை இயக்கம் வீறு பெற்று இருந்ததால் அதனோடு இணைந்த திராவிட உணர்வு தமிழ் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு வாய்ப்பளித்தது. என்ன இருந்தாலும், இவையெல்லாம் இயல்பான வளர்ச்சிப் போக்குகளாகவே பரிணமித்தன. முரட்டுத்தனமான ஆதிக்க மோதல்களும், கண்ணுக்கு மறைவான அதிகாரத்தை இழப்பதில் பதற்றங்களும் உருது முஸ்லிம்களிடத்தில் நிகழவில்லை.

பிரிவினைக்குப் பின் தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட தென்னிந்திய முஸ்லிம்களைப் புதியநிலைக்கு அழைத்துச் சென்றதில் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப்பிற்குப் பெரும் பங்கு இருந்தது. சுதந்திரநாளைக் கொண்டாடும்படி அவர் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். பிரிவினைக் கோரிக்கையின் மிச்ச சொச்சங்களைக் கைவிட்டு இந்திய விடுதலைக்கான போராட்ட உணர்வுகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு, யூனியன் முஸ்லிம் லீகையும் இஸ்மாயில் சாகிப் வழிநடத்திச் சென்றதன் மூலம் பாகிஸ்தானை மனதளவில் துறந்துவிட இந்திய முஸ்லிம்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது.

ஏராளம் ஏராளமான நூல்கள், குறிப்புகள், நேர்காணல்கள், அரசு அறிக்கைகள், நாளிதழ்கள் உள்ளிட்டவை இந்த நூலின் ஆக்கத்திற்கு உதவியுள்ளன. சில மாற்றுக் கருததுக்களும் உள்ளன. பெரம்பூரில் உள்ள ஜமாலியா மதரசாவின் தோற்றம், முஸ்லிம்களின் கல்வி - பொருளாதார நிலை குறித்த நிறைய தகவல்களும், அரசியல் நிகழ்வுகளும் தலைப்பின் உடன்போக்காக வந்துள்ளன. வாசிக்கத் தோதான, நெருடலில்லாத மொழிபெயர்ப் பாக இது இருக்கின்றது. இதனை மொழி பெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. அரிய பணி அவருடையது.

முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி

தமிழ்நாடு மற்றும் சென்னை - 1930 - 1947

ஆசிரியர்: ஜே.பி.பி.மோரே

பக்கங்கள்: 256 விலை ரூ.110/-

வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310.

தொலைபேசி : 04332- 273444

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.
வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.
எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.
இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்
முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு
தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.
நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.
சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.
ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்
நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.
எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?
நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.
ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.
ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார் --~--~---------~--~----~------
------~-------~--~----~
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

அமுதம் மாதஇதழ் மற்றும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

சிறுகதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 1000
2 வது பரிசு ரூ. 500
3 வது பரிசு ரூ. 300
ஆறுதல் பரிசு - 5 ரூ. 100

சமுதாய சிந்தனையுடன் சமூக, வரலாற்று பின்னணி கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் அமுதம் இதழின் மூன்று பக்கங்களுக்கு மிகாது இருக்க வேண்டும்.

கவிதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 500
2 வது பரிசு ரூ. 300
3 வது பரிசு ரூ. 200
ஆறுதல் பரிசு - 5 ரூ. 50

கவிதைகள் சமுதாய வளர்ச்சி சிந்தனைகள் கொண்டதாகவும் 20 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

சிறுகதை, கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள். 31-3-2009


அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி:

Kathai & Kavithai Potti
Editor,
Amudam tamil monthly,
519, Main Road,
Christu nagar,
Nagercoil - 629003
K.K. Dist., TN, India.

நாம் உணர்வது என்ன?

நாம் உணர்வது என்ன?

* உலகச்சந்தை சரிவில் இருக்கிறது.
* தினமும் வேலை இழப்பை பற்றி செய்திகளை படிக்கின்றோம்.
* சில நண்பர்களுக்கு வேலை இழப்பு ஏற்ப்படதையும் அறிகிறோம்.
* இன்னும் 24 மாதத்திற்கு இந்த நிலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
* ஆங்காங்கே, சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
* நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நமது தேவை என்ன?

> தற்ப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்கவைக்க வேண்டும்.
> மாதாமாதம் 'வாங்கிய' கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
> நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தை பேண வேண்டும்.
> இவற்றை தடையின்றி செய்யலாம் என்ற பாதுக்கப்பு உணர்வு வேண்டும்!.

செய்யக்கூடியான சில

# தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்கவும்.
# பயணம் மேற்கொள்ளவும், இடம் மாறுதல் செய்யவும் தயாராக இருக்கவும்.
# சம்பள உயர்வை எதிர்நோக்க வேண்டாம்.
# சிரமம் பாராமல் கொடுத்த பணியை முடித்து கொடுக்கவும்.
# புதிய நிறுவனங்களுக்கு செல்ல, அவசியம் இன்றி முயல வேண்டாம்.
# புதிய தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவேண்டும்.
# முடிந்த வரை உறப்பத்தியை பெருக்கி வேலைகளை துரிதாமாக செய்து
நிறுவனம் லாபம் ஈட்ட உதவ வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இது, பல நெருக்கடிகளில் இருந்து காக்கும்.
$ குறிப்பாக கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடனை அடைக்கவும்.
$ அது போல் மாத சந்தாக்கள் ('E.M.I') அனைத்தையும் அடைக்க முயலவும்.
$ நீங்கள் இருக்கும் வீடு வாடகை அதிகமானதாகவும் தேவைக்குமேல்
பெரிதாகவும் இருந்தால் வேறு குறைந்த வாடகை வீடு பார்க்கவும்.
$ உங்கள் மாத செலவுகளை பட்டியலிடவும்.
$ தேவையானது, அனாவசியமானது என்று பட்டியலை பிரித்துக் கொள்ளவும்.
$ அனாவசியமானதை பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
$ அடிக்கடி வெளியில்('Restaurants') உண்பதை தவிர்க்கவும்.
$ மேலும் என்னென்ன வழிகளில் பணம் விரயமாகுமோ அனைத்தையும் தவிர்க்கவும்.

(Better to India)
தயாராக இருங்கள்
இனி ஒரு வேளை பணி இழப்பு ஏற்ப்பட்டால் சந்திக்க, செய்யவேண்டியன...

@ இயன்ற வரை - வேறு துறைகளில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
@ தந்தை, சுய தொழில் செய்பவராக இருந்தால், அந்த தொழிலில் ஈடுபடும் மனநிலையை வளர்த்துகொள்வது நல்லது.
@ நண்பர்கள் வேறு தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடன் கலந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஓரளவு தடையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்..
@ இந்த சந்தர்ப்பத்தை ஒரு தொய்வாக எடுத்துகொள்ளாமல், நமக்கு பிடித்த துறைகளில் ஈடு பட கிடைத்த வாய்ப்பாக எண்ணி, முயற்சி செய்யலாம்.
(என்னை கேட்டால் விவசாயத்துறையில் ஈடு பட விருப்பம்!
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." நினைவிற்கு வருகிறது... )


அன்புடன்,
சா. ஸைபுல்லாஹ் ஹூஸைன்,
அபுதாபி.

Qatar Faculty of Islamic Studies

Dear friends,

Are you interested in learning more about Islam? Have you been searching for a golden opportunity to do so? Well, I'd like to inform you of the following...

The Qatar Faculty of Islamic Studies (QFIS) is offering full-scholarships for the following programs:

1. Master of Arts in Islamic Studies with a specialization in Contemporary Fiqh
2. Master of Arts in Islamic Studies with a specialization in Religions and Contemporary thought
3. Master of Arts in Public Policy in Islam
4. Master of Science in Islamic Finance
5. Diploma in Islamic Finance
6. Diploma in Islamic Studies

Note: only the first two programs require a bachelors of religious studies as a pre-requisite

Scholarships include tuition, housing etc. for international students

Deadline for applying: 31 March, 09
Deadline for submitting language results (TOEFL & Arabic test): 13 August, 09

Please visit the website for the admissions and scholarship forms and for further details.

Contact Information:

Admissions Office
Qatar Faculty of Islamic Studies
P.O Box 34110
Doha, Qatar
Phone: +974 4546560 / +974 4546559
email: nalmerikhi@qfis.edu.qa
website: http://www.qfis.edu.qa

Madhyamam: A Muslim Media Success Story

Madhyamam: A Muslim Media Success Story
Submitted by admin4 on 10 March 2009 - 11:37am.

By Yoginder Sikand,

Kerala’s Muslims, who form roughly a quarter of the state’s population, are among the most literate Muslim communities in India. A major reason for, as well as a consequence of, the community’s high literacy rate is the thriving Muslim-owned Malayalam press. Today, literally hundreds of magazines, journals and newspapers are brought out by various Kerala Muslim organizations. These deal not simply with religion (as in the case of many north Indian Muslim-owned publications) but with social and political issues as well. These publications have played a crucial role in promoting social and political awareness among Kerala’s Muslims and in getting Muslim views and concerns across to fellow Malayali non-Muslims and to the state authorities and in promoting closer interaction between the various communities in Kerala.

Set up in 1987 by the Ideal Publications Trust, most of whose members are affiliated with the Kerala unit of the Jamaat-e Islami, Madhyamam is regarded as the most successful Muslim-owned daily newspaper in Kerala. It boasts the third highest circulation among all Malayalam daily newspapers in the state. Its chief editor O.Abdur Rahman stresses that it is not a specifically Muslim or an Islamic paper. ‘Madhyamam is geared to all Malayalam readers and takes up general issues, while focusing in particular on those related to marginalized and minority communities, including Dalits, Adivasis and Backward Castes, and not just Muslims alone. We see it as the voice of the voiceless’, he states. ‘We have been consistently anti-imperialist, supporting a range of liberation movements and also bitterly critiquing fascism, extremism in the name of religion and terrorism’, he adds. He describes Madhyamam as ‘a value-based paper, stressing ethics and morals, in contrast to commercial papers, whose sole motive is profit-making.’



Madhyamam’s editorial offices are located in Calicut, the major intellectual centre for Muslims in Kerala. Currently, it brings out separate editions from six cities in Kerala—Cochin, Trivandrum, Cannanore, Mallapuram, Kottayam and Calicut—and two in Karnataka—Bangalore and Mangalore. Separate Gulf editions, catering to the half million-odd Malayalis living in Arab countries, come out from Dubai, Bahrain, Kuwait, Doha, Dammam, Riyadh and Jeddah, making Madhyamam the largest-circulated Malayalam newspaper in the region. In addition, the Madhyamam Weekly magazine has a circulation of some 25,000. Currently, the entire Madhyamam group has some 1200 staff on its rolls, including around 500 full-time journalists.

A major challenge that Madhyamam has had to contend with is lack of sufficient advertisement revenue. Explains Abdur Rahman, ‘Newspapers survive on money from advertisements, but from the very beginning we had decided, as a matter of policy, to be very selective about the advertisements we published. No ads showing immodestly-clad women, no ads for banks, alchohol, fraudulent investments and movies. This is why we had to suffer major losses, and even now just manage to break even.’ A portion of the profits that the paper generates is diverted to the Madhyamam Health Care Programme, which provides free medical facilities to poor people, irrespective of religion and caste in hospitals with which it has a tie-up with. In the last six years, some 3000 patients have benefited from the Programme at a cost of 3 crore rupees.

A major problem that Muslim-run papers face, Abdur Rahman explains, is the lack of professionally- qualified journalists. It was to address this concern that last year the Madhyamam Institute of Journalism was launched. Currently located in the paper’s Calicut office, the Institute offers a one year diploma in journalism. At present, it has fourteen students—girls and boys, Muslims and Hindus—on its rolls. The course fee is Rs.20,000. ‘This is the only Muslim-run institution of its kind in Kerala,’ says Abdur Rahman. The course involves considerable hands-on training in Madhyamam itself, and successful students are likely to be absorbed by the newspaper after they finish.

What lessons does the successful Madhyamam experiment provide for Muslim-owned media houses in India? How is it that Madhyamam has made such bold strides, in contrast to many Muslim-run papers in other parts of the country? Abdur Rahman insists that for Muslim-owned newspapers in India to be effective must be broad-based in their appeal and approach, and not limited just to Muslims alone. ‘A Muslim-owned daily newspaper should be secular, and not confined to simply Muslim community or religious issues,’ he says. ‘This is the only way we can present our views and problems to the wider society. Otherwise, others will not take us seriously and we won’t be able to have any impact outside a narrow Muslim circle. The example of ghettoized north Indian Urdu papers well illustrates this argument. Because of our approach, many of our readers are non-Muslims.’

‘We do not regularly publish articles on or about religion as such, limiting ourselves, as any newspaper should, to just news and views about news’, Abdur Rahman elaborates. ‘On religious festivals we bring out special issues, but this is not limited to just Muslim festivals. We do this for Onam and Vishu—Malayali Hindu festivals—and for Christmas as well.’ He contrasts this ecumenical approach to that of most Muslim-run publications in other parts of India, which, he laments, ‘focus only on Islam alone, often narrowly defined, and ignore social issues.’
‘At the same time,’ Abdur Rahman continues, ‘this does not mean that a Muslim daily newspaper should ignore Muslim concerns. What we in Madhyamam do is to present news as news, and highlight all relevant news, and not just developments concerned only with Muslims. But we also highlight our own views about the news in our editorial pages and in the columns to which we invite specialists to contribute. In this way, Muslim perspectives on various developments can be articulated. We also allow people to critique us in our columns. Muslim papers must allow this, and abstain from a one-way monologue.’

Another advice that Abdur Rahman gives for Muslim-run papers is to invite non-Muslim writers to contribute their views. ‘A number of leading non-Muslim intellectuals and social activists write for Madhyamam.’ To make for a healthy work environment, he also suggests that Muslim-owned papers employ non-Muslim professionals too and not make themselves into a Muslim-only concern. ‘In Madhyamam some forty per cent of our journalists are non-Muslims—Christia ns, Hindus, Marxists and atheists. And our staff have their own political leanings and affiliations. Some are pro-Muslim League, others are with the Congress, and yet others are with the Communists, but that does not matter as long as they work in a professional manner,’ he says. This openness to others, he remarks, is a hallmark of Kerala society, where different religious communities share a common culture and a strong common identity as Malayalis. ‘A major drawback of most Muslim-owned papers’, he opines, ‘is the lack of professionalism. A multi-religious and multi-communal workplace can make much of a difference in this regard.’

Madhyamam has ambitious plans for the future, says Abdur Rahman. These include a daily English newspaper, with simultaneous editions from Delhi, Mumbai, Calcutta, Hyderabad, Bangalore and Chennai, a regular television channel (that would follow the same media policy as Madhyamam), as well as new editions from some other locations in Kerala. Certainly, then, a novel experiment that other Muslim media houses could learn much from.

MSOffice 2007 பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட!

MSOffice 2007 பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட!

இப்போது எல்லாம் MS Office 2007 தான் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ஆபிஸ் 2003-ல் சேமித்திடும் பைல்கள் யாவும் 2007-ல் திறக்கும். ஆனால், ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய பைல்ளை ஆபிஸ் 2003-ல் திறந்திட முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ஏனெனில் ஆபிஸ் 2007-ல் சேமித்திடும் பைல்கள் யாவும் .docx, . xlsx, .pptx என்று முடியும். இதை எப்படி படிப்பது என்று ஆபிஸ் 2003-க்குத் தெரியாது. ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட வழி உள்ளது. (ஆபிஸ் 2003 உபயோகிப்பவர்களுக்காக)

1) மைக்ரோ சாப்ட் "File Format Converter" என்ற patch ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை ஆபிஸ் 2003 இருக்கும் கம்ப்யுட்டாில் நிறுவினால், ஆபிஸ் 2007 பைல்கள் அனைத்தும் அந்த கணினியிலும் திறக்கலாம்.

இதை டவுண்லோட் செய்ய இங்கே செல்லவும். (27mb)


http://getitfreely.co.cc/content/open-ms-office-2007-files-ms-office-2003

--
Endrum Ninaivudan...
K. Saravanan

Thursday, March 12, 2009

சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டும் கட்டுரைப் போட்டி

சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டும் கட்டுரைப் போட்டி

தலைப்பு: இன்றைய கல்வி நிலையங்கள் நற்குடி மக்களை உருவாக்க உதவுகின்றதா ?
ரூ 25,௦௦௦ பரிசு காத்திருக்கிறது . மேல் விபரங்களுக்கு www.makkalsevai.org Tel:9443117984 / 9786489493

ஏற்பாட்டாளர்கள் : மக்கள் சேவை மையம் . இளையான்குடி

மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சமூக சேவை மனப்பான்மையுள்ள ஆங்கில ஆசிரியை / தலைமை ஆசிரியை தேவை . தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

Thank you

ferozkhan
fk@ferozkhancpa.com

எல்லாப் புகழும் இறைவனுக்கே

எல்லாப் புகழும் இறைவனுக்கே

முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
mdaliips@yahoo.com

2009 ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய துணைக் கண்டமே ஆவலுடன் எதிர்பார்த்த மும்பை பத்ரா குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்வளின் வாழ்க்கையினை தத்துருவமாக சித்தரித்த “ஸ்லம்டாக் மில்லினர்” என்ற படத்திற்கு எட்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது கண்டு அனைவர் உள்ளமும் துள்ளிக் குதித்தது. அதற்கு சிகரம் வைத்தாற்போல ஒரு தமிழன் என்ற முறையிலும், அதிலும் ஒரு முஸ்லிம் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த செய்தி அத்தனை இந்தியரையும், குறிப்பாக அதைத்து முஸ்லிம்களும் ஒட்டுமொத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூல்கடித்தது. அமெரிக்க நாட்டின் ஹாலிவுட் நகரை நான் 2001 ஆம் ஆண்டு கண்டிருக்கிறேன். லூஸ் ஏஞ்சலில் உள்ள பிரமாண்டமான அரங்கங்களைப் பார்வையிட உலக அளவில் மக்கள் கூட்டம் மொய்க்கும். அங்கே விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர். ரகுமான் தனது கொஞ்சும் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று நன்றி சொன்னபோது அனைத்து இறை நம்பிக்கை உள்ளவர்களும், குறிப்பாக ஏக இறைவன் அல்லாஹ் மீது ஈமான் கொண்டுள்ள அத்தனை இஸ்லாமியர்களின் உள்ளங்களும் குளிர்ந்தது.

ஏனென்றால் கடும் வெயிலிலும், கரடு முரடான பகுதியிலும், மூட நம்பிக்கையின் மொத்த உருவத்தில் உழன்ற காட்டு அரபிகளின் மத்தியிலே கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்த அன்னல் நபி அவர்கள் அரேபியர்களை செம்மைப்படுத்த தனது 40 ஆம் வயதில் நபித்துவம் பெற்று, சொல்லடியும், கல்லடியும் பெற்று ஏக இறைவன் ‘அல்லஹ்’ என்ற தாரக மந்திரத்தை மாந்தருக்கெல்லாம் கற்றுத்தந்த பொன்மொழி அகில உலகெங்கும் ஒளித்துக் கொண்டிருக்கிறது. மதினாவிலிருந்து மக்காவிற்;க்கு தனது காலடியினை எடுத்து வைத்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? ஏக இறை கொள்கைக்கு எதிராக நாள்தோறும் ஒரு கடவுள் உருவத்தினை வைத்து வணங்கிய ‘காபா’விற்கு சென்று அங்கு இருந்த சிலைகளை தானே ஒரு கம்பினை எடுத்து ஒவ்வொன்றாக உடைத்து எறிந்தார்கள் என்கிறது வரலாறு.
ரசூலல்லாவினால் ஏற்றிவைத்த ஏக இறை தத்துவத் தீபத்தினை எடுத்துக்கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தைப் பரப்பிய புகழ் ரசூலல்லாவின் தோழர்களையும், சகாபிகளையும் சாரும். அவ்வாறு பரப்ப இந்தியாவிற்கும் சில சகாபிகள் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள்களும், அவர்களால் ஈர்க்கப்பட்டவர்களும் மரணமடைந்து பல இடங்களில் சமாதிகளும் உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால் அவர்களெல்லாம் தனி சக்தி பெற்று வரம் தருபவர்களல்ல எனக் கருதாது சமாதியே கதி என கிடக்கும் இஸ்லாமியர்களைக் காண பரிதாபமாக இல்லையா?

பாமரர்கள், படிக்காதவர்கள், புகழ் பெறாதவர்கள் அவ்வாறு சமாதிகளை வழி பட்டால் அவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் என விட்டு விடலாம். ஆனால் உலக புகழின் உச்சியில் இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவான ‘பெட்ட தர்காவிற்கு 27.2.2009 அன்று சென்று காலை 7 மணியிலிருந்து மாலை ஒரு மணிவரை வழிபட்டிருக்கிறார். ஏதற்காக? அந்த ‘பெட்ட தர்காவிற்கு வந்த பின்பு தான் தனது ஒவ்வொரு காரியமும் வெற்றியடைந்ததாக’ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். யார் சொல்வது? உலக மக்கள் அத்தனை பேர்களும் டி.வி யில் வைத்த கண் மாறாது லாஸ் ஏஞ்சலில் இரட்டை ஆஸ்கார் விருதினை பெறும்போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உரத்த குரலில் சொன்ன ஏ.ஆர். ரகுமான் தான் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?


அவர் பெட்ட தர்காவில் வழிபட்ட பெட்டிச் செய்தியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
எங்கள் ஊர் இளையாங்குடியில் 1970 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு இங்கே தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் ஊர் அருகில் மல்லிபட்டணம் என்ற ஊர் உள்ளது.
அங்கு வருடந்தோரும் ஒரு சிறிய தர்காவின் சந்தனக்கூடு வருடா வருடம் நடக்கும்.
அந்த சந்தனக்கூடை இளையாங்குடிக்கு கொண்டுவர சிலர் முயன்றனர். ஆனால் ஈமானில் நம்பிக்கை உள்ள சிலர் சந்தனக்கூடு எடுத்து வந்த டிராக்டரின் டயர்களின் முன் விழுந்து மறித்து எங்கள் பிணம் மீது தான் சந்தனக்கூடு இளையாங்குடிக்குள் வர வேண்டும் என்று எதிர்த்ததால் அந்த முயற்சியினை அவர்கள் கை விட்டனர். அதன் பிறகு இது வரை 30 ஆண்டுகளாக மல்லிபட்டணம் சந்தனக்கூடு இளையாங்குடி எல்லையினைத் தொடவில்லை.
ரசூலுல்லாவிற்கு எல்லாம் வல்ல இறைவன் கொள்கையினை கைவிட்டால் உகது மலை அளவு தங்கம் தருவதாகவும், விரும்பும் பெண்ணை மணம் முடித்துத் தருவதாகவும் கூறிய குரைசியர்களின் ஆசை வார்த்தைக்கெல்லாம் ரசூலல்லா மசியவில்லை. ஏன் ரசூலல்லாவிற்குப் பின் வந்த கலிபாக்கள், சகாபிக்கள் நினைத்திருந்தால் தங்களுக்கு அழங்காரமான சமாதிகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அது போன்ற தனி நபர் துதிபாடு;க்கெல்லாம் அவர்கள் இடம் கொடுக்கவில்லை என்பதினை மக்கா, மதினா சென்றவர்கள் நன்கு அறிவர். மாற்று மதத்தினர் காபாவினை படங்களில் பார்க்கும்போது அதனை ஒரு கல் என்றும் எங்களைப்போல் முஸ்லிம்களும் கல்லைத்தானே வணங்க மக்கா செல்கிறார்கள் என்று சொல்வதைக்கேட்டிருக்கிறேன். நான் மக்கா 1999 ஆம் ஆண்டு சென்றபோது காபாவில் அசர்(சுகர்) தொழுது கொண்டு இருந்தபோது அதிசயமாக திடீர் என்று ஆலங்கட்டி மலை பெய்தது. இரவோடு இரவாக காபாவை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது தான் அது கல்லல்ல, மாறாக கதவுடன் கூடிய தொழுகைக் கட்டிடம் என்று அறிந்தேன். இததை மாற்று மதத்தினரிடமும் எடுத்துச் சொன்னால் தான் அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

இப்போதும் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப்பெற சென்னை மவுணட்;ரோடு தர்கா போன்ற இடங்களில் போர்வை, மலர் வலையம் வைப்பதினைக் காணலாம். அவர்கள் எதற்காக அவ்வாறு செய்கிறார்கள் தெரியுமா? முஸ்லிம்களில் சிலர் அங்கு சென்று வழிபடுவதால் தானே மாற்று மதத்தினரும் தர்காக்கள் தான் முஸ்லிம்கள் வழிபடும் கடவுள் என நினைக்கின்றனர். மனநிலை பாதித்த மக்களுக்கு நல்ல மனநல டாக்டர்களிடம் வைத்தியம் செய்யாது இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் வைத்திருந்த 30 க்கு மேற்பட்டோர் தீ விபத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்ததினை நாம் மறக்க முடியுமா?

ஓரு முறை நபித்தோழர் முஆத் பின் ஜபல் ரசூலல்லா அவர்களுடன் பயணம் மேற்கொண்டு இருக்கும் போது முஆத்தை அழைத்து, “ அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்று தெரியுமா? ஏன வினவினார்கள். ஆதற்கு முஆத் அவர்கள், ‘ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள் என்றார்.

அதற்கு ரசூலுல்லாஹ், “மக்கள் அல்லாவிற்கு மட்டுமே அடிபணிந்து வணங்கி வாழ்வதும்-வேறொருவரையும் இணை வைக்காமலிருப்பதும் தான் அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்” என்றார்கள். “ யா முஆதிப்ன ஜபலி குத்து லப்பைக்க யாரசூலல்லாஹி வசைஹ்தைக்க…” என்ற வசனத்தில் இருக்கிறது. இசை முறசு நாகூர் கனிபா 50 வருடத்திற்கு முன்பு நான் சிறுவனாக இருந்த போது பாடிய பாடல் இங்கே சொல்வது பொருத்தமானதாக இருக்கும், “இறைவன் மேல் ஆணை, இறை மறையின் மேல் ஆணை, ஈமான் மறக்க மாட்டேன்”. சாதாரன மக்கள் யாராவது தர்காவிற்கு சென்றால் இஸ்லாத்திற்கு பெரிய தாக்கத்தினை ஏர்ப்படுத்தாது. ஆனால் உலக அளவில் புகழ் பெற்ற ஏ.ஆர். ரகுமான் செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 1987ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது உடல் நலம் குன்றி அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து சென்னை திரும்பிய உடன் கர்னாடகாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதனை அடுத்து மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகமானது. அவர் மறைவதிற்கு பின் அதன் மவுசு குறைந்து விட்டது என்று நான் சொல்லவில்லை, மாற்று மத நண்பர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஆகவே எப்போதும் அழியா புகழுடன் இருக்கும் எல்லா வல்ல அல்லாவிஹ்கு யாரும் நிகரில்லை. ஆகவே இனியாவது நாம் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொல்வதினை மாற்றி “எல்லாப் புகழும் அல்லாவிஹ்விற்கே” என்பதின் மூலம் ஏக இறை தத்துவத்திற்கு மாற்று எதுவுமில்லை என இஸ்லாமிய சமூகத்திற்கு உரத்த குரலில் சொல்லலாம்

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 20ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது.

இம்மாதத்திற்கான தலைப்புகள் 'பணம் மற்றும் உழவு'. கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டு இத்தலைப்புகளில் கவிதை படிக்க உள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வரும் ஏப்ரலில் தமிழ்த்தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் மிக விரைவில்....
தொடர்புக்கு,
சிம்மபாரதி, +971505646267
reachsimma@gmail.com

சொற்பொழிவு : Spiritual Medidation

Assalamu Alaikum

All are cordially invited to attend valuable speech, will be delivered by Khalifa. M Mohamed Malik, details as follows

Speaker : Khalifa. M Mohamed Malik
Subject : Spiritual Medidation
Venue : Lootha Jamia (Kuwait) Masjid , Deira
Date : 13 March 2009
Time : After Juma' Prayer

Wassalam
Rgds
Shuja
md_suja@yahoo.com

சென்னையில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீட்டு விழா

சென்னையில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீட்டு விழா

சென்னையில் ஆத்ம் ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மஸ்னவி ஷரீப்பின் தமிழாக்கம் வெளியீட்டு விழா 15.03.2009 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு சென்னை-17, தி.நகர், 32 வெங்கடேசன் தெருவில் அமையப்பெற்றுள்ள கீதாஞ்சலி கன்வென்ஷன் செண்டரில் நடைபெற இருக்கிறது.

ஃபஹிமிய்யா டிரஸ்ட் தலைவர் காஜா ஃபஹீமுல்லாஹ் ஷாஹ் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியினை கூடுவாஞ்சேரி கான்காஹே ஃபஹீமிய்யாவின் ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

Wednesday, March 11, 2009

வல்லோனே ! ரஹ்மானே !

வல்லோனே ! ரஹ்மானே !
எம். முஹம்மது ஆஸாத் – இராஜமுந்திரி

இறைவா ! ஒரு நொடியும் உனை
மறவா இதயம் வேண்டும்
ஒரு போதும் உன் கட்டளையை
மீறாத வாழ்வு வேண்டும்

உலகை விரும்பாத மனம் வேண்டும்
மறுமையே குறிக்கோளாய் வாழ வேண்டும்
கோபமும், காமமும் அகல வேண்டும்
அனைவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்

இருப்பதில் இன்பமாக வாழவேண்டும்
பொறுமை, அமைதி, சாந்தி,
சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்

பாதுகாப்பை நீ தர வேண்டும்
குறைகளை எடுத்துச் சொல்லும் – நல்ல
நண்பன் அருகில் வேண்டும்
உனக்கு அடிபணிவதில் எனக்கு

பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்
முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்
முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்
பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே இனி வேண்டும்

அனைவருக்கும் உதாரணமாய் என்
வாழ்வு அமைய வேண்டும்

இறக்கும் போது கலிமவை நான்
மொழிய வேண்டும் – மறுமையில்

இனிய பரிசாக இன்பம் நிறைந்த – சொர்க்கத்தை
நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .

நன்றி : குர் ஆனின் குரல் - பிப்ரவரி 2009

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி


கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.

இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.

விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.

Tuesday, March 10, 2009

கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து

கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து

கீழக்கரை தினகரன் நாளிதழ் செய்தியாளர் K.S.M.S. அம்ஜத் இப்ராஹிம் ( 9443466669 ) மகளும், துபாய் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் A. ஹமீது யாசின் ( 90034 33642 ) சகோதரி

ஏ.தாஜுல் ஹஸனா மணமகளுக்கும்
ஏ.ஜெய்னுல் ஆபிதீன் மணமகனுக்கும்

14.03.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.

இவண்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
www.muduvaivision.com
www.mudukulathur.com

Sunday, March 8, 2009

Saturday, March 7, 2009

Quality of a leader in one line

A leader is one who knows the way, goes the way, and shows the way

Friday, March 6, 2009

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
EEGARAI SIVAKUMAR


--
Posted By Adirai Mansoor to அதிரை எக்ஸ்பிரஸ் அனைவரையும் அன்போடு அழைக்கிறது at 3/04/2009 10:53:00 PM

SEVEN COMMON MISTAKES IN CV WRITING

SEVEN COMMON MISTAKES IN CV WRITING

Typo errors: Spelling mistakes can leave a poor impression. So your CV proof read by someone to remove such errors.

Factual mistakes: Incorrect tenure in an organization, faulty name of chronology of experience, can all lead to misunderstandings.

Long flowing sentences: This distracts the scanning eyes of a recruiter due to the limited time they allot to reading CVs.

Formatting: The size & type of font chosen can have an impact on the readability.
Incorrect contact information: This being the second most critical data after your experience & skills, has to be correctly presented. Mention both present & permanent addresses with direct contact numbers.

Lack of objective/focus: Unclear objectives can leave a recruiter guessing which field or type of job you are interested in. A great objective statement clearly defines your career goal aligned with the job you are targeting for.

Length: The CV should be descriptive enough to explain what your key skills are, yet short enough to retain interest of the recruiter.

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.

இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்!