Thursday, July 10, 2008

ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு


ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.

லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.

Monday, July 7, 2008

இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து

இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து

பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.

கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.

( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746

கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

Expa registration closes on 20th July
Plase register now
http://expascan.registerhere.org

CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)

"Celebrate Learning - Experience Living"

On
2008' August 13,14,15,16 & 17

at
CIGI Campus
Chevayoor, Calicut

Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :

http://expascan.registerhere.org

or call
Adv. Backer Ali
050-4599159

அப்துல் முஸவ்விரின் பிளாக்

அப்துல் முஸவ்விர் சென்னையைச் சேர்ந்த இவர் தற்பொழுது குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது பிளாக் முகவரி


http://musawir.ipcblogger.com/


மேற்கண்ட தளத்தை பார்த்து நிறை, குறைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்

amusavir@gmail.com

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.

இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.

ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.

பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.

இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.

இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.

அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=86

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24.

ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------

சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்

vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935

Sunday, July 6, 2008

ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி

ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி

சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.

இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Saturday, July 5, 2008

சமூக நலப்பணியில் பிவிஎம் தொண்டு நிறுவனம்

சமூக நலப்பணியில் பிவிஎம் தொண்டு நிறுவனம்

PVM தொண்டு நிறுவனம்
( மக்கள் வெற்றி இயக்கம் )

தலைமை அலுவலகம்

ஆர்.ஏ.பி. காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
எண் 7 பி, தலைமை போஸ்ட் ஆபிஸ் தெரு
அரண்மனை ரோடு
இராமநாதபுரம் 623 501

திட்ட இயக்குநர் : பிவிஎம். அப்துல் ரசாக்

எண் 9 நாகநாதபுரம்
முதல் தெரு
வெளிப்பட்டணம்
இராமநாதபுரம் 623 504

செல் : 94434 65765
98 424 23752
போன் : 04567 - 229280

Friday, July 4, 2008

ரியாத்தில் இந்திய தூதரக சந்திப்பு நிகழ்ச்சி

Dear Friend,

The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.

Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.

The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.

FOKASA


From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries

Dear Mr.Muraleedhan

That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.

Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.

In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.

Mr.Murali, we, India Forum is really proud to have members like you.

Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum

TAIBAH UNIVERSITY

TAIBAH UNIVERSITY includes 22 colleges in the fields of: Medicine; Education and Humanities; Science; Computer and Engineering Science; Financial and Administrative Sciences; Community; Engineering; Applied Medical Sciences; Dentistry; Pharmacy; Family Science; Arts & Science; and Applied Sciences. Taibah University is equipped with a chain of Language; Computer; Clinical; and Science laboratories. It has also a closed-circuit television system having 13 studios. It aims to impart quality education through innovative delivery of instruction by highly qualified and experienced faculty in all domains to satisfy the needs of our students.

Bachelor of Education, Science, Medicine, Applied Medical Sciences, Pharmacy, Dentistry, Engineering, Computer & Engineering Sciences, and Financial & Administrative Sciences are offered by Taibah University. In Arts, Education and Science disciplines, postgraduate degrees are offered in different majors. The administration of Taibah University envisions the development of such an academic culture that has strong emphasis on lifelong learning, personal growth and service to the community. Therefore, we are eager to have the services of such faculty and staff who are committed to teaching excellence and provide exceptional service to student community. Applicants should have the highest degree in the appropriate academic discipline, provide recent evidence of teaching effectiveness, and demonstrate an interest and experience in interdisciplinary and student-centered teaching. Successful candidates will teach undergraduate classes.

Salary and Benefits: Competitive salary based on academic qualification and teaching experience in the specialized field. Rank is determined by previous employment history. Other benefits include: Housing allowance; Transportation allowance; medical coverage; maximum four air tickets to Madinah Munawwarah on employment & upon final departure from the Kingdom of Saudi Arabia KSA to country of origin; four round-trip air tickets to country of residence with 60 days paid vacation; end of service gratuity.

Job Openings: Job openings are available at the following colleges of Taibah University, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
An ideal candidate (Male/Female) should have or have had a University position, teaching experience and qualifications from any of the North American, European or Australian universities with at least three years post-doctoral teaching experience at university level. He/She should have leadership qualities in curriculum planning; research & administrative pursuits with excellent communication in English; interpersonal & IT skills as well as team work spirit
Please download the application form, fill it up and send us with a letter of interest, current CV and names and email addresses of three professional references to below given address:

Prof. Mansour M. Al-Nozha, President, Taibah University,
P.O.Box. 344, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
Tel: 00966-4-846 0020 Fax: 00966-4-846 1172
OR

e-mail recruitment@ taibahu.edu. sa

http://www.taibahu. edu.sa/cont/ Jobs/engannounce ment.html

Thursday, July 3, 2008

மலேசியா

மலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன்
மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும்
கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில்
இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.

முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது
பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக
இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.

கோலாம்பூரில் வ‌ந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வ‌ந்து பெட்டியை கீழே
வைத்த‌வுட‌ன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கிய‌து. மாலையில் உண்வுக்காக‌ச் சென்ற‌
போது காசிம் முஸ்த‌பா ரெஸ்டார‌ண்ட் வாச‌லில் புரோட்டா மாவு பிசைந்து
கொண்டிருந்தார்க‌ள். ஹைத‌ராபாத்தில் கூட‌ புரோட்டா எளிதில் கிடைக்காது. இர‌ண்டு
புரோட்டா 1.60 வெள்ளி. ந‌ம்ம‌ க‌ண‌க்கில் ஒரு வெள்ளி ப‌தின்மூன்று சொச்ச‌ம்
ரூபாய்க‌ள். க‌டையில் இருக்கும் கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளோடு கொஞ்ச‌ம் அள‌வளாவி
அருகில் இருக்கும் புகிட் ஜ‌ம்புல் என்ற‌ ஷாப்பிங் காம்ப்ள‌க்சில்
த‌சாவதார‌த்திற்கு க‌ழுத்தை கொடுத்து அசின் அல‌ம்ப‌லில் வெந்து போய் வெளியே
வ‌ரும் போது அட‌ ந‌ம்ம‌ ஊரு என்ற‌ ம‌ன‌நிலை வ‌ந்துவிட்ட‌து.

வ‌ல்லின‌ம் ந‌வீன் ஜிடாக்கில் பேசும் போது ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் ப‌ர‌வ‌லாக‌
க‌வ‌ன‌ம் பெற‌வில்லை என்றார். இன்னொரு ந‌ண்ப‌ர் ம‌லேசியாவில் கார்த்திகேசு,
பீர் முக‌ம்ம‌து த‌விர்த்து இல‌க்கிய‌த்தில் தீவிர‌மாக‌ இய‌ங்கும் ஆட்க‌ளை
என‌க்குத் தெரிய‌வில்லை என்றார்.

என‌க்கு வேறு பெய‌ர்க‌ள் அறிமுக‌மில்லை. நான் வ‌ந்த‌ நாளிலிருந்தே யாராவ‌து
இல‌க்கிய‌ நண்ப‌ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும்
ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சென்ற‌ வார‌ம் ஜெட்டி க‌ட‌ற்கரையில் த‌னியாக‌ச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக்
கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு க‌ட‌ற்க‌ரை ந‌க‌ர‌ம்.
தீவும் கூட‌. இன்று பினாங்கை ம‌லேசியாவுட‌ன் இணைப்பத‌ற்கான‌ பால‌ம்
இருக்கிற‌து. அன்று க‌ட‌ல் ம‌ட்டுமே இணைப்பாக‌ இருந்திருக்கும். அத‌னால்தான்
துறைமுக‌ம் இருக்கும் ஜெட்டி என்ற இட‌ம் அந்த‌க் கால‌த்தில் செழித்து
இருந்திருக்கிற‌து. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்த‌க்கால‌த்தின்
க‌ட்ட‌ங்க‌ளை இன்ன‌மும் பாதுகாக்கிறார்க‌ள். 1700களின் இறுதியில் கட்டப்
பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.

துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு க‌ம‌ர்சிய‌ல் க‌ம்பெனி" என்ற பெய‌ர்
ப‌ல‌கையை ஒரு பாழ‌டைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு
வ‌ருட‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.அந்த‌க் கால‌த்தில் த‌மிழ‌ன் ப‌ணி
செய்திருப்பான். இந்தியாவில் அவ‌ன‌து சொந்த‌ ஊரிலும் சுற்றுவ‌ட்டார‌த்திலும்
அவ‌ன் ம‌லேசியாவில் க‌ப்ப‌ல் க‌ம்பெனியில் ப‌ணிபுரிவ‌தாக‌ பேசிக்
கொண்டிருந்திருப்பார்கள்.

நாகூர் த‌ர்கா ஷெரீப் என்ற‌ த‌ர்க்கா நானூறு வ‌ருட‌ங்க‌ள் ப‌ழ‌மையான‌தாக‌
இருக்க‌லாம் என்று நினைக்கிறேன். தமிழ‌னுக்கும் ம‌லேசியாவிற்குமான‌ இணைப்பு
இன்னும் கூட‌ ப‌ழ‌மையான‌து என்றாலும் ப‌த்து நாட்க‌ளில் என்னால் நானூறு
வ‌ருட‌ங்க‌ளைத்தான் நெருங்க‌ முடிந்திருக்கிற‌து.

லிட்டில் இந்தியா என்ற‌ ஒரு இட‌ம். இதுவும் அதே ஜெட்டி ப‌குதியில்தான்.
காரைக்குடி மெஸ்க‌ளும், த‌மிழ்த் திரைப்பாட‌ல்க‌ள் ஒலிக்கும் கேச‌ட்
க‌டைக‌ளும், அண்ணாச்சி ம‌ளிகைக்க‌டைக‌ளும் நிர‌ம்பியிருக்கின்ற‌ன‌. க‌டுகு
எண்ணெய் வாடையில்லாத‌ ஒரு இட‌ம் என்ப‌து இத‌ன் கூடுத‌ல் சிற‌ப்பு.

ஒரு புத்த‌க்க‌டை தென்ப‌ட்ட‌து. வைர‌முத்துவும் ர‌ம‌ணிச் ச‌ந்திர‌னும்
நிர‌ம்பியிருக்கிறார்க‌ள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த‌ வார‌ விக‌ட‌ன்
வாங்க‌லாம். "வேற‌ புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைர‌முத்துவோட‌
வைக‌றை மேக‌ங்க‌ள் ப‌டிங்க‌. ரொம்ப‌ ந‌ல்லா இருக்கும்" என்றார்.
என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம். த‌மிழ‌க‌த்தில் சில‌ க‌டைக‌ளில் ந‌வீன‌ இலக்கிய‌
புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் கிடைக்காது. ஜோதிட‌ம், ஆன்மிக‌ம் தொட‌ங்கி,
உத‌ய‌மூர்த்தி வ‌ழியாக‌, ர‌ம‌ணிச் ச‌ந்திர‌னிலும், வைர‌முத்துவிலும் நின்று
விடுவார்க‌ள். த‌பூ ச‌ங்க‌ர் அல்ல‌து பா.விஜ‌ய்க்கு கொஞ்ச‌ம் இட‌ம்
இருக்க‌லாம். நான் ம‌லேசியாவில் நுழைந்த‌ க‌டை இது போன்ற‌ க‌டையா?

இல்லையென்றால் ந‌வீனின் வினாவிற்கு ப‌தில் கிடைத்திருக்கிற‌து என‌க்கு.

ம‌லேசியாவில் இல‌க்கிய‌ ஆர்வ‌முள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளின் தொட‌ர்பு கிடைக்குமானால்
ம‌கிழ்ச்சி.
vaamanikandan@gmail.com

பிரிய‌த்துட‌ன்,
வா.ம‌ணிக‌ண்ட‌ன்
--

www.pesalaam.blogspot.com

இலவச இ-புக் பதிவிறக்கம் செய்ய

நண்பர்களுக்கு.......

கீழே குறிப்பிட்ட Wesite link -ல் இலவசமாக E-Book உள்ளது.
பதிவிறக்கமும் செய்யலாம்.

http://allfree.fermanaziz.com/tamil_ebooks.html

இப்படிக்கு.......

நூருல் ஜமான்
noorulzaman@yahoo.com

Wednesday, July 2, 2008

சிங்கப்பூர் முகவரிகள்

Asan Ibrahim S
Project Engineer
HP 65 - 829 81 842
Meiden Singapore Pte Ltd
5 Jalan pesawat
Singapore 619363
DDI 65 - 6477 6849
Fax 65 - 6264 4292
asan@meidensg.com.sg
Dubai : 050 1517075



ஜஹாங்கீர்

REGENT MONEY CHANGER PTE LTD
390 VICTORIA STREET
#01-11 GOLDEN LANDMARK
SINGAPORE 188061
TEL : 6292 1079 / 6296 68 65
Fax : 6295 4044
jahan_5star@yahoo.com.sg

RES : BLK 161 HOUGANG ST
11, #06-65 SINGAPORE 530161
TEL : 6284 9360


Shahul Hameed
Producer / director
Verite productions pte ltd
20 ayer rajah crescent
#08-28 Singapore 139964

Tel : 6471 1809
Fax : 6471 2729
hp : 9191 2420
hameed@veriteproductions.com
www.veriteproductions.com




MALAYSIA

Dutho Sri Samivelu
Kementerian Kerja Raya
Pejabat Menteri, Kompleks Baru
Kementerian Kerja Raya, Block A Tingkat 5
Jalan Sultan Salahuddin, 50580 Kuala Lumpur

Tel : 03 - 27714002
Fax : 03 - 27116361

சிறுவர் பராமரிப்பு இல்லம்

அல் ஹுதா சிறுவர் பராமரிப்பு இல்லம்
எண் 6/7 சலஃபி நகர்
விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி 620 007

தொலைபேசி : 0431 2340447 /2341775
செல் : 94431 54648
தொலைநகல் : 0431 233 2417
மின்னஞ்சல் : alhudha@gmail.com/alhudha2002@yahoo.co.in
www.alhudha.org

( Al Hudha High School
Hifz Madrasa for Boys
Islahiya Arabic College - Afzalul Ulama
Al Hudha School for Hearing Impaired
Al Hudha Computer Centre


Run By : Jamiyyathu Ahlil Quran Val Hadhees ( JAQH )

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி

அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.

இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.

பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.


ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி


சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.

Tuesday, July 1, 2008

பாங்கு சப்தம்

பாங்கு சப்தம்

விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.

ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்

உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக

பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.

கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.

இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்

சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
"அல்லாஹு அக்பர்" என்ற
அழைப்புச் சப்தம்.

- அப்துல் கையூம், பஹ்ரைன்
vapuchi@hotmail.com

ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?

ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?

முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..

எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...

Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.

எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?

நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....

(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)

(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)

ஜித்தா இந்திய துணைத் தூதரகத்தின் தற்காலிக பணி வாய்ப்புகள்

Applications are invited from Indian nationals for temporary posts of Data Entry Operators, Clerks, Drivers and Office Boys-cum-Cleaners for Haj season - 2008.

http://www.cgijeddah.com/cgijed/index.htm




Applications in the prescribed proforma along with copies of valid Iqama, passport, educational certificates and Driving License (for those applying for drivers’ posts) and no objection letters from sponsors should reach Haj Section, Consulate General of India, P.O.Box.No. 952, Jeddah-21421 latest by 01.08.2008. The prescribed proforma can be obtained from the Haj Information Desks at our offices in Jeddah, Makkah and Madinah or down loaded from our website

http://www.cgijeddah.com/cgijed/haj/contacts.HTM Candidates holding a Bachelor’s degree from a recognized University and conversant with Arabic language in addition to one Indian language will be given preference for the post of clerks. Those applying for the post of Data Entry Operator should also possess a diploma/certificate in Computer applications from a recognized University/Institution and at least a year’s exper/ience as Data Entry Operator. For the posts located in Makkah and Madinah, candidates resident there will be given preference.

Photocopies of Passport, Iqama, Educational Certificates, No objection letter from the sponsor (In original) along with two recent passport size photographs should be attached with the application. Applications without the required enclosures are liable to be rejected.

Hajj – 2008 : Contact Details:


Indian Hajj Office: Makkah Al-Mukarramah
Tel: 02 – 5758218/5761447/5758214
Fax: 02 – 5758216

Indian Hajj Office: Madinah Al-Munawwarah
Tel: 04 – 8380025/8344715
Fax: 04 – 8387549

Consulate of India, Jeddah (Haj Section)
Phone: 02-6520084/6510514
Fax: 02-6533964
E-mail: haj@cgijeddah.com

Sunday, June 29, 2008

வெளிநாடு வாழ் இந்தியர் அவசர உதவி பெற

NEED HELP, PLEASE CALL 1800113090
(No Charges when calls made through BSNL/MTNL in India)

MAY WE HELP YOU PLEASE?
AUTHENTIC NRI INTORMATION CENTER
Since the Ministry of External Affairs received increased number of enquiries and complaints from the NRIs, it was felt to have a Center to sort out all the problems faced by the NRIs.
Through this Center it is possible to establish a link between anyone who lives at any part of India and outside world.
*It is the first big step taken to protect and help the NRIs
*Immediate help and assitance will be provided by the Government
Released for the Welfare
by

Ministry of External Affairs
www.moia.gov.in

For help approach the
Authentic NRI Information Center
through BSNL/MTNL

Toll Free No. in India: 1800113090

0091-11-40503090
can also be contacted
from any part of the
world