Friday, December 12, 2008

சிறுவர் கதைப் போட்டி: படைப்புகளை டிச.31-க்குள் அனுப்பலாம்

சிறுவர் கதைப் போட்டி: படைப்புகளை டிச.31-க்குள் அனுப்பலாம்

கோவை, டிச.11: கனவு அமைப்பு சார்பில் சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது கதைகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

கனவு அமைப்பு சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான "கதை சொல்லி' நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

போட்டியில் பங்கேற்பவர்கள் சிறுவர் கதைகளை எளிய நடையில் 3 முதல் 5 பக்கங்கள் வரை எழுதி அனுப்பலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும்.

சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும். கதைகளை அனுப்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய சுப்ரபாரதி மணியன், கனவு அமைப்பு, இலக்கிய இதழ், 8/2835 பாண்டியன் நகர், திருப்பூர்-641602 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0421-2350199, 9486101003.

No comments: