Saturday, February 14, 2009

நீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்டுமே கொண்டு ‌!!!

நீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்டுமே கொண்டு ‌!!!

இதை க‌டைபிடிப்ப‌த‌ன் மூல‌ம் எந்த‌ தீங்கும் விளைய‌ வாய்ப்பில்லையாத‌லால் இதை செய்து பாருங்க‌ளேன்.

இத்த‌க‌வ‌ல் எனக்கு ஈ மெயில் மூல‌மாக‌ கிடைக்க‌ப்பெற்ற‌து.
நல்ல எண்னத்தில் இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். யாரையும் கிண்ட‌ல‌டிக்கும் எண்ணத்திலோ, யாருக்கும் தீங்கும் விளைக்கும் எண்ண‌த்திலோ இதை நான் ப‌திவு செய்ய‌வில்லை

CLICK AND READ THIS ARTICLE

நீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்டுமே கொண்டு ‌!!!

http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/blog-post_06.html




2009/2/8 ASALAM SMT HOUSE

http://nunippul.blogspot.com/2009/02/blog-post.html

சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?
தமிழ்மணம் பரிந்துரை : 3/3



Pathivu Toolbar ©2009thamizmanam.com


சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் எம். மருதுபாண்டியன்
எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்
200 பக்கங்கள் விலை ரூ. 80
நீயூ ஹாரிசன் மீடியாவின் நலம் வெளியிடு.


சர்க்கரை நோய் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை மிக தெளிவாய், விரிவாய் விளக்கியிருக்கிறார் டாக்டர் எம். மருதுபாண்டியன். அட்டையில் போட்டிருந்தப்படி
டயாபடீஸ் A to Z விளக்குகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாய் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இணையத்தில் தேடி, சாப்பிடும் முறைகளையும், உடல்பயிற்சியின்
அவசியத்தை தெரிந்துக் கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சில பல சந்தேகங்கள்- முக்கியமாய் உணவுகளைக் குறித்து எப்பொழுது வரும்.

அந்நேரத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி!

சர்க்கரை நோய்- இதைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் மருத்துவர். உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்றால், இந்தியாவில்
இரண்டு கோடி பேர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஏழ்மை நிலையில் வியாதியைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். உடல் எடை முக்கிய பங்கு என்றால், எனக்கு சொல்லப்பட்ட காரணம் தாயின் சீதனம்..

முதல் அத்தியாயத்திலேயே நம்பிக்கை தருகிறார். அதாவது மருத்துவரை நம்பியிருக்காமல், சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு, நீடித்த உடற்பயிற்சி, தீவிர உணவு கட்டுப்பாடு, உரிய காலஹ்தில் பரிசோதனைகள், உடல் பருமனைத் தவிர்த்தல். இந்த ஐந்தும் போதுமா, நோயின் தாக்கலில் இருந்து மீள என்றால் போதும் என்றுச் சொல்பவர் ஆறாவதாக ஒரு விஷயம்- மருத்துவ சிகிச்சை. குறைந்த மருந்தில் நிறைந்த சிகிச்சை. இதுவே சர்க்கரை நோய்க்கான சிறப்பான சிகிச்சை. (மேற்படி வரிகளை அப்படியே தந்துள்ளேன். அனாவசிய மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிறார் என்று நினைக்கிறேன்.

எடையைக் குறைக்க எளிய யோசனைகள் தந்துள்ளார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிக உபயோகமாய் இருக்கிறது.

பத்திய உணவின் நிச்சய பலன் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. காலை, நன் பகல், மதியம், மாலை, இரவு என்று உணவு உண்ணுவதை ஐந்து முறையாய் பிரித்து என்ன உணவுகள் எவ்வளவு சாப்பிடலாம் என்று துல்லியமாய் கணக்கிட்டு சொல்கிறார். கலோரி கணக்கும், ரத்தத்தில் அதனால் சேரும் சர்க்கரை அளவையும் சொல்லியிருக்கிறார். உதாரணமாய் 200மி.லி நீர் மோர் குடித்தால் 10 மி.கி சதவீதம் வரை அதிகமாகலாம். 200 மி.லி சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி (பாதி பால்/ பாதி நீர்) குடித்தால் 40 மி.கி சதவீதம் அதிகரிக்கலாம். இதே சர்க்கரைப் போட்டு குடித்தால் 140 மி.கி வரை சர்க்கரை அதிகமாகுமாம்.

200மி.லி உப்பிட்ட எலுமிச்சை , தக்காளி ஜூஸ் குடித்தால் 30 மி.கி சதவீதம் அதிகமாகும். இதே 200 மிலி பழரசம் , சர்க்கரை இட்டு குடித்தால் 250 மி.கி அதிகரிக்கும்.

பொதுவாய் பட்டியலில் இருப்பதைப் பார்த்து ரத்தத்தில் சர்க்கரையை 50 மி.கி சதவீதம் குறைவான அளவில் அதிகமாக்கும் பானங்களை பருகலாம் என்கிறார்.

காய்கறிகள், பழ வகைகளிலும் எதை சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும் என்ற பட்டியலும் இருக்கிறது. முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழையை
தவிர்க்க சொல்கிறார். இதைத்தவிர அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுவகைகளில், அசைவம் உட்பட அனைத்து சத்துக்களின் (நூறுகிராமில்) நீண்ட பட்டியல் இருக்கிறது.

''வாழ்க்கை முழுவதும் உடல்பயிற்சியா, உணவுகட்டுப்பாடா என்று திகைத்துவிடாதீர்கள். அதுவே அன்றாட வாடிக்கையாய் மாற்றிக் கொள்ளுங்கள். போக போக
பழகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமையாகியும் விடுவீர்கள். பிறகென்ன பூரண ஆரோக்கியம்தான்'' - மருத்துவர் சொன்ன அறிவுரையில் ஹைலைட் இதுதான். நன்றி டாக்டர். இதை புரிந்துக் கொண்டாலே, சர்க்கரை நோயால் வரும் பல பிரச்சனைகளை, வராமல் தடை செய்யலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமில்லையா?

புத்தகத்தில் எதை எடுத்து இங்கு சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் முக்கியமானவை. பொதுவாய் இத்தகைய மருத்துவ விழிப்புணர்வு
புத்தகங்களில் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இதில் டாக்டர் எம். மருது பாண்டியன் அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்களை எழுத்தில் மிக அருமையாய் வடித்திருக்கிறார் அய். ஜெயச்சந்திரன் (எழுத்து வடிவம்). அவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிறேன். தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அந்தளவிற்கு எல்ல்லார் வீடுகளிலும் சர்க்கரையும் நோய் புகுந்துள்ளதே :-(
Labels: புத்தகவாசம்

No comments: