Showing posts with label நிக‌ழ்ச்சி. Show all posts
Showing posts with label நிக‌ழ்ச்சி. Show all posts

Monday, December 28, 2009

அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி


அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி

அபுதாபி :

அமீரத்தில் செயல்படும் தமிழக அமைப்புகளில் அய்மான் சங்கம் மிகத் தொன்மையும்
சிறப்பும் வாய்ந்த அமைப்பாகும். அமீரகத்திலும் தாயகத்திலும் அய்மான் அமைப்பின்
பணிகள் பெரும் வரவேற்பை பெற்றவை. அதனை நிறுவியவர்களுள் ஒருவரும் 1976 முதல்
சங்கத்தின் உறுப்பினரும் கீழக்கரை நர காஜியாரும் சங்கத்தின் இந்நாள் தலைவருமான
காதர் பக்ஸ் ஹாஜி M.A. அவர்கள் தனது 33 வருட அமீரக வாழ்வை, சமுதாயப் பணியை
நிறைவு செய்து தாயம் திரும்புகிறார்.

அன்னாரை பாராட்டி வழியனுப்பும் முகமாக ஜனவரி 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று
தலைநகர் அபுதாபி ஹம்தான் சாலையில் அமைந்திருக்கும் ருசி ரெஸ்டாரன்ட் பேன்குவெட்
ஹாலில் மாலை 7 மணிக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தினர் ஏற்பாடு
செய்துள்ளனர்.

அய்மான் புதிய தலைவர் அதிரை சாஹுல் ஹமீது M.Sc தலைமையில் இந்நிகழ்சி
நடைபெறுகிறது. சமுதாயப் புரவலர் நோபிள் ஹமீது ஹாஜியார் அவர்கள் முன்னிலையில்
நடைபெறும் இந்நிகழ்வில் அபுதாபி தமிழ் சங்கம், துபை ஈமான் சங்கம் மற்றும்
தொழிலதிபர்களும் பல்வேறு தமிழக மற்றும் கேரள அமைப்புகளின் பிரதிநிதிகளும்
அறிஞர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

அய்மானின் நிறுவனத் தலைவர்களான அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார், கனிமொழிக் கவிஞர்
ஷம்சுதீன் ஹாஜி, கல்லூரிச் செயலளார் செய்யது ஜாபர், தொழிலதிபர் பனியாஸ் ஹமீத்
ஹாஜி, ஈமான் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, பாடகர்
தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Tuesday, July 28, 2009

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜமாஅத் பேரவையின் சார்பில் 29.07.2009 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் காஞ்சி ம‌வ்ல‌வி அப்துல் ர‌வூஃப் பாக‌வி அவ‌ர்க‌ள் 'ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.

இந்நிகழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்த‌ காஞ்சி ர‌வூஃப் பாக‌வி இம்மாத‌ இறுதியில் அமீர‌க‌ப் ப‌ணியில் இருந்து விருப்ப‌ ஓய்வு பெற்று தாய‌க‌ம் செல்ல‌ இருக்கிறார்.

Monday, July 13, 2009

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புக் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழ‌மை காலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.

கோடையும் வாடையும் என்ற‌ சிற‌ப்பு க‌விதை நிக‌ழ்ச்சியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ திருப்ப‌த்தூர் அப்துல் வாஹித், ப‌ழ‌னி ஆகியோர் இருந்த‌ன‌ர். க‌விஞ‌ர்க‌ள் சிம்ம‌ பார‌தி, ஜியா, ச‌ந்திர‌சேக‌ர், க‌மால், ந‌ர்கிஸ், ம‌லிக்கா, நிலாவ‌ண்ண‌ன், அமுதா ப‌த்ம‌நாப‌ன், ஜெயா ப‌ழ‌னி, வேலூர் க‌ந்த‌நாத‌ன், கிளிய‌னூர் இஸ்ம‌த், ராஜா க‌மால் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌விதை வாசித்த‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியின் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா, க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ர் டாக்ட‌ர் ச‌ம்ப‌த் குமார், முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளி ஓய்வுபெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

த‌மிழ்த்தேர் இத‌ழை டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை உத‌ய‌குமார் பெற்றுக்கொண்டார்.

சிற‌ப்புவிருந்தின‌ர்க‌ள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கியும் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ள் குறித்த‌ அறிமுக‌த்தை க‌லைய‌ன்ப‌ன் ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் ஆகியோர் செய்த‌ன‌ர்.

க‌விஞ‌ர் நிலாவ‌ண்ண‌ன் தாய‌க‌ம் செல்வ‌தையொட்டி அவ‌ருக்கு பிரியாவிடை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ருக்கு நினைவுப் ப‌ரிசும் வ‌ழ‌ங்கப்ப‌ட்ட‌து. அத‌னைத்தொட‌ர்ந்து அவ‌ர் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.
செயலாள‌ர் ச‌ந்திர‌சேக‌ர் ந‌ன்றி கூறினார். நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஜியாவுத்தின், சிம்ம‌பார‌தி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ஏற்பாடு செய்த‌ன‌ர்.













Friday, January 2, 2009

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் இளையான்குடி ஜமாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 01.01.2009 வியாழ‌க்கிழ‌மை முஸ்ரிஃப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து.

இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு செல்வ‌ முஹ‌ம்ம‌து த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ மாண‌வ‌ர் ஒருவ‌ர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

செல்வ‌ முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் த‌ன‌து த‌லைமையுரையில் இதுபோன்ற‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள‌ அனைவ‌ரையும் பாராட்டுவ‌தாக‌த் தெரிவித்தார்.
ப‌ரீத் அஹ‌ம‌து வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.இச்சந்திப்பு நிக‌ழ்ச்சியின் நோக்க‌ம் குறித்த‌ அறிமுக‌வுரையினை ஜ‌லால் நிக‌ழ்த்தினார்.

அத‌னைத் தொட‌ர்ந்து க‌லிஃபா செய்ய‌து ஹுசைன் த‌ன‌து வாழ்த்துரையில் முப்ப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் இளையான்குடியில் டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரி துவ‌க்க‌ விழாவில் ப‌ங்கேற்ற‌ க‌ல்வி வ‌ள்ள‌ல் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துல் ர‌ஹ்மான் இத்த‌கைய‌ க‌ல்விப்ப‌ணிக்கு தூண்டுகோலாக‌ இருந்த‌ அனைவ‌ரையும் பாராட்டினார். இளையான்குடி ந‌க‌ரின் பெருமைக‌ளை க‌விதை ந‌டையில் எடுத்திய‌ம்பினார்.

அஹ்ம‌து க‌பீர் த‌ன‌து சிற‌ப்புரையில் இளையான்குடி ந‌க‌ர் குறித்த‌ ம‌ல‌ரும் நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். தொழிற்துறையில் நாம் ஈடுப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். வாழ்விய‌லின் நோக்க‌ங்க‌ளை உண‌ர்ந்து செய‌ல்ப‌ட‌க் கேட்டுக் கொண்டார். க‌ல்விச்சேவையில் இளையான்குடி ப‌ங்க‌ளிப்பை எடுத்துரைத்தார். இளையான்குடியில் 25 க்கும் மேற்ப‌ட்ட‌ க‌விஞ‌ர்க‌ள‌து இல‌க்கிய‌ச் சேவை குறித்து விவ‌ரித்தார். அர‌சிய‌ல், ச‌மூக‌ம், பொதுச்சேவை, ஆராய்ச்சித்துறை, அர‌சுப்ப‌ணி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறைக‌ளிலும் இளையான்குடி ம‌க்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்து விள‌க்கினார். தொட‌ர்ந்து ந‌ம‌தூரின் பெருமையினை நிலைநாட்ட‌ அனைவ‌ரும் த‌ங்க‌ள‌து ஒத்துழைப்பினை ந‌ல்கிட‌ கேட்டுக் கொண்டார்.


ப‌ஷீர் த‌ன‌து உரையில் த‌ற்பொழுதுள்ள‌ தொழில்நுட்ப‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ம‌க்கிடையே த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் எளிதாக‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ணியினை மேற்கொள்ள‌ வேண்டும். ப‌ணிவாய்ப்பு தேடி அமீர‌க‌ம் வ‌ரும் ந‌ம‌தூர் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு உத‌விட‌ முய‌ற்சிக‌ள் செய்ய‌ வேண்டும்.

அத‌னைத் தொட‌ர்ந்து அஷ்ர‌ஃப் அலி, அயூப் அலி, புரோஸ்கான், குத்புதீன், சுக‌ர்னோ, அப்துல் காத‌ர், லியாக்க‌த் அலி, நிஹ்ம‌த்துல்லாஹ், அமானுல்லாஹ், சுல்தான், செய்ய‌து, சாதிக், பாசித்,த‌மீம் அன்சாரி, செய்ய‌து, தாஹிர், சேட், ஹ‌மீதுல்லாஹ், சுல்தான், பைச‌ல், யாச‌ர், காத‌ர் சுல்தான், சுபைர், ப‌ரீத் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர்.

ரோஸ்லான் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார். நிக‌ழ்ச்சியினை சுல்த்தான் தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

இந்நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொள்ள‌ இய‌லாத‌ இளையான்குடி ச‌கோத‌ர‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பெய‌ரினை
050 745 0359 / 055 975 9919 ஆகிய‌ எண்க‌ளில் ப‌திவு செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்