Thursday, December 31, 2009

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010


கடந்த 10.12.09 அன்று துபாயில் நடைபெற்ற அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுகூட்டத்தில்,
அமைப்பின் 8-ஆம் ஆண்டு விழாவினையும், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையும் வருகிற
12.02.2010 அன்று “தமிழரங்கம்-2010’ என்று கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கனிமொழி எம்.பி, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை
அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, திராவிடர்கழகத்தலைவர் திரு கி.வீரமணி, நாகை நாடளுமன்ற
உறுப்பினர் திரு ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரை அழைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
பிரபல திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், பின்னனி பாடகர்கள் பங்குபெறும்
இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும் என அவ்வமைப்பின் தலைவர் திரு அமுதரசன் தெரிவித்தார்.
மேலும் விபரங்கட்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு சலீம் அவர்களை (050-4557513)
தொடர்புகொள்ளவும்

செய்திகள் வரவேற்கப்படுகின்றன

செய்திகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்சிகரம்.காம் கடந்த 3 ஆண்டுகளாக இணையதளத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இதில் அனைத்து துறகைள் சம்பந்தமான செய்திகளும் கொடுக்கப்படுகிறது.

எனவே தங்களுடைய நிறுவனங்கள், தங்களின் சுற்றுப்புறம் தொடர்பான செய்திகளும் வரேவற்கப்படுகின்றன. செய்திகளை இமெயில் மூலம் அனுப்பவும்.

நன்றி

இப்படிக்கு,
தமிழ்சிகரம் குழு.
tamilsigaram@yahoo.com

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். இவரா இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் சார்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம், புஹாரி ஷரீஃப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நூல்களை அழகு தமிழில், எளிய நடையில் மொழிபெயர்த்தவர் என எண்ணத் தோன்றும். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் துபையில் பணிபுரிந்து வந்த இவர் ஜுலை மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார்.

சமுதாயத்தில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள இவரது சமுதாயப் பணிகளை அறிந்து கொள்ள அவருடன் ஒரு சந்திப்பு :


கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்

பதில் : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி


கே : தங்களது இளமைப் பருவம் பற்றி….. ?

பதில் : நான் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தேன். பெற்றோர் பெயர் ஹாஜி எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் – ஹசீனாபி. எனது பெற்றோருக்கு 9 வது கடைக்குட்டியாக பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் 3 அக்கா, 5 அண்ணன்கள். 1970 ல் எனது தாயார் வஃபாத்தானார்.


கே : தங்களது கல்வி குறித்து ?


பதில் : காஞ்சிபுரத்தில் தர்கா பள்ளி,, டிஆர்.எஸ். பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்தேன். பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி.யை மார்ககக் கல்விக்காகத் துறந்தேன்.


பின்னர் வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1972 முதல் 1979 ஆம் ஆண்டு வரை ஓதி ஆலிம் ஸனது பட்டம் பெற்றேன்.


கே : பள்ளிக்கல்வியில் சிறப்புறக் கற்றிருந்த தாங்கள் அரபிக் கல்லூரியில் சேரக் காரணம் ?

பதில் : பிறை, முஸ்லிம் முரசு உள்ளிட்ட இதழ்களில் மார்க்க அறிஞர்கள் அப்துல் வஹ்ஹாப் சாஹிப், மஹதி, அல் ஃபத்தாஹ் பாகவி உள்ளிட்டோரின் கட்டுரைகள் என்னை அரபிக்கல்லூரியிலும், மேலும் வட மாநிலங்களில் உள்ள தேவ்பந்த் போன்ற மார்க்க்க் கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே 1972 ஆம் ஆண்டு வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த ஆண்டே அதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நீதிபதி மு.மு. இஸ்மாயில், எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முஸ்லிம் முரசு மாத இதழ் வெள்ளிவிழாவினையொட்டி நடத்திய ’நான் விரும்பும் தலைவர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நான் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் குறித்து எழுதிய கட்டுரைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் பரிசு ஏ.கே.அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் குறித்து எழுதிய சாயபு மரைக்காயருக்கு கிடைத்தது.

மதரஸாவில் படிக்கும் போது அதிகம் படிக்காமல் தேர்வுக்கு சில நாட்கள் முன்னர் படித்து விட்டு முதல் மாணவனாக தேர்வு பெறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. எனது அரபு மொழித் திறனுக்கு ஆசிரியர் சையது முஹம்மது மதனி அவர்கள் முக்கியக் காரணமானவர்.

மதரஸா பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தேன்.

அப்போதைய குடும்பச் சூழல் காரணமாக வட மாநிலங்களுக்கு சென்று படிக்க இயலவில்லை.

1990 ல் அலிகர் முஸ்லிம் பல்கலையில் எம்.ஏ. சேர்ந்த நான் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புக் கலவரம் காரணமாக அதனைத் தொடர இயலவில்லை.

அப்ஸலுல் உலமா படிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக எம்.ஏ. நவீன அரபி இலக்கியத்தில் 2007 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டம் பெற்றேன்.

தற்பொழுது எம்.ஃபில் பட்டப்படிப்புக்காக இஸ்லாமியப் பொருளாதாரம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எனும் தலைப்பில் பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பிக்க உள்ளேன்.

அதனைத் தொடர்ந்து பி.எச்.டி. படிப்பினை சென்னை அல்லது உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இறைவன் நாடினால் மேற்கொள்ள உள்ளேன்.


கே : தங்களது பணி குறித்து ?

பதில் : அரபுக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து மவ்லானா அபுல் ஹஸன் அலீ நத்வி அவர்களின் இஸ்லாமியப் பணியால் கவரப்பட்டு அவர் ஆரம்பித்த சகோதரத்துவ செய்தி ( Message of Humanity ) எனும் அமைப்பில் ஈடுபட நினைத்தேன். ஆனால் மவ்லானாவின் முக்கிய நண்பர்கள் சிலர் வஃபாத்தானதைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்பாடின்றி முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியக் களம் கிடைக்காததைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு மவ்லானா ஜமீல் அஹமத் அவர்களைச் சந்தித்து இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டில் ( ஐ.எஃப்.டி.) இணைந்தேன்.

1977 ல் அரபுக் கல்லூரியில் பயிலும் போதே மவ்லானா ஜமீல் சாஹிப் அவர்களின் வேண்டுகோளின்படி மவ்லானா மௌதூதி அவர்களால் உர்தூ மொழியில் எழுதப்பட்ட நூல் அகிலத்தலைவரின் அடிப்படைப்பணி எனும் தலைப்பில் தமிழில் எனது முதல் நூலாக மொழி பெயர்க்கப்பட்டது. எனினும் இந்நூல் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

பிறகு தீண்டாமை எனும் சிறு நூலை தமிழில் மொழிபெயர்த்தேன். தொடர்ந்து சுமார் 40 நூல்களை தமிழில் மொழிபெயர்த்தேன். அவற்றில் சுமார் 25 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.எஃப்.டி.யில் பணிபுரிந்ததன் காரணமாக சகோதர சமுதாய மக்கள், கம்யூனிசச் சித்தாந்த்தில் ஈடுபாடுடையவர்கள் என பல தரப்பு மக்களிடமும் இஸ்லாத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது என பயிற்சி பெற்றேன். இதற்கு வேலூர் இஸ்லாமிய செண்டரிலும், ஐ.எஃப்.டியிலும் நான் ஆற்றிய பணி மிகவும் உறுதுணையாய் இருந்தது.

1981-82 மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த காலம். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பேட்டி கண்டு கண்ணுக்குப் புலப்படாத இஸ்லாமிக் செண்டர் எனும் தலைப்பில் இருமுறை வெளியிட்டது அதன் பணிகளுக்கு மேலும் அங்கீகாரம் கிடைத்தது போலாகியது.

அதனைத்தொடர்ந்து திருக்குர்ஆனின் தமிழாக்கப்பணியினை ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. 1 முதல் 37 ஆம் அத்தியாயம் வரை மவ்லவி குத்புதீன் பாகவியும், 38 முதல் அம்ம ஜூஸ்வு வரை நானும் மொழிபெயர்த்தேன்.

இப்பணியில் பி.எஸ்.அலாவுதீன் மன்பஈ, ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத், சையது முஹம்மது மதனி, மஸ்தான் அலி உமரி உள்ளிட்ட பலர் ஒத்துழைத்ததை மறக்கவியலாது.

1990 ஆம் ஆண்டு திருக்குர் ஆன் முதல் தொகுதியும், 1991 ஆம் திருக்குர் ஆன் இரண்டாம் தொகுதியும் வெளியிடப்பட்டது.

எனது ஒப்பந்தப்படி 1986 டிசம்பர் 31 உடன் ஐ.எஃப்.டி. பணி நிறைவுற்றது.


இதன் பின்னர்


ஃபுர்கான் ப்ப்ளிகேஷன்ஸ்க்காக முஸ்லிம்கள் முன்னேறாத்து ஏன் ?, அஹ்மத் தீதாத் அவர்களின் நபிகள் நாயகம் பற்றி பைபிள், முஹம்மது பின் ஜமீலின் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், ஹதீஸ் கலை உள்ளிட்ட ஐந்து நூல்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். இப்பணி 1987 முதல் 1989 வரை.

அதனைத் தொடர்ந்து

1989 – 90 வரை ஈகா தியேட்டர் பின்னால் உள்ள எம்.இ.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரபி மொழி ஆசிரியர் பணி செய்தேன்.

பின்னர் 91ல் இந்தியா பைத்துஸ் ஸகாத்தில் ஆறு மாதம் பணியாற்றினேன்.


மேலும்

1984 முதல் 86 வரை சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரில் திருக்குர் ஆன் விரிவுரையாற்றும் பணி

1987 முதல் 90 வரை காயல்பட்டணத்தில் ரமளான் திருக்குர் ஆன் விளக்கவுரை



கே : தங்களது வெளிநாட்டுப் பயணம் குறித்து ?


1991 டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஸ்ட்டீஸ் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டேன்.

விமானப் பயணம் புதிதாக இருந்த்தால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட்து. இருப்பினும் ஸாஹிரா கல்லூரியில் 5000 பேர் பங்கேற்ற நிகழ்வில் உரை நிகழ்த்தினேன். அதனைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மாளிகாவத்தெ பிரதிபாஹாலில் நடைபெற்றது. இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் மீடியாவும் இஸ்லாமும் குறித்தும் உரை நிகழ்த்தினேன்.

அப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு தொடர்ந்து பாபர்மசூதி விவகாரத்தில் மந்தப் போக்கைக் கடைப்பிடித்தால் ஓராண்டில் அது இடிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை எனத் தெரிவித்தேன். ஆனால் அடுத்த ஆண்டே அது இடிக்கப்பட்டது பெரும் துரதிருஷ்டம்.

சவுதி அரேபியா :

1992 ஆம் ஆண்டு அல் அஹ்ஸா பகுதியில் உள்ள ஹுபூஃப் இஸ்லாமிக் சென்டரில் முதல் பொறுப்பாளராகப் பணிபுரிந்தேன்.

அறையில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபொழுது அரபி மற்றும் ஆங்கில மொழியில் இந்துத் தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியினைத் தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு இலங்கையில் பேசிய பேச்சினை நினைவு கூர்ந்தேன்.

அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் நடைபெற்ற கண்டனக் கூட்ட்த்தில் உர்தூ மொழியில் கடுமையான உரை நிகழ்த்தினேன். இது குறித்து பலரும் கவலை கொண்டனர். தான் காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணினர். எனினும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட சவுதி காவல்துறை அவ்வாறு எதுவும் செய்யவில்லை.





கே : வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ?


1995 ஆம் ஆண்டு மீண்டும் சென்னையில். ரஹ்மத் டிரஸ்டின் புஹாரி ஷரீஃப் மொழிபெயர்ப்புப் பணி, அதனைத் தொடர்ந்து புலூகுல் மரம் என்ற பிக்ஹ் நூல் தயாரிப்புப் பணி


கே : மீண்டும் வெளிநாட்டுப் பயணம் ?


ப 1999 ஆம் ஆண்டு அபுதாபியில் இஸ்லாமிய விவகாரத்துறையில் மூன்று ஆண்டுகள் பணி.

2003 ஆம் ஆண்டு முதல் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தில் பணி. அப்பொழுது இரு கண்கள் அறுவை சிகிச்சை, இரு பெண்களது திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பணிகளுக்கு ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ETA HRM Executive Director எம். அக்பர் கான் உள்ளிட்டோரது உதவிகள் மறக்கமுடியாதவை.

துபாயில் கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வுகள் முக்கியமானவை.



கே : தங்களது மறக்கவியலாத நிகழ்வுகள் குறித்து ?


பதில் :

எனது 9 வது வயதில் 1965 ல் சீன ஆக்ரமிப்பின் போது சீனாவை எதிர்த்தும், நமது இந்திய ராணுவத்தின் வீரத்தைப் பாராட்டியும் பொதுமக்களின் ஆதரவை நமது நாட்டுக்காகத்திரட்டும் வகையிலும் நான் காஞ்சிபுரம் சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் பல்லாயிரம் மக்களிடையே ஆற்றிய ஆவேச உரை என்னால் மறக்க முடியாத ஒன்று.

கோகலே ஹாலில் மது ஒழிப்பு குறித்து துக்ளக் ஆசிரியர் சோவுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, 1984-85 ல் சென்னை எல்.எல்.ஏ. அரங்கில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, ஐ.எஃப்.டி. சார்பில் 1995 ல் பெரியார் திடலில் நான் தலைமை வகித்த நிகழ்வில் குமரி அனந்தன் பங்கேற்றது,

காஞ்சிபுரம் சமய நண்பர்கள் வட்டத்தின் சார்பில் ஆண்டர்சன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் எனது தமிழாற்றல் கண்டு வியந்தவர்கள் என்னை வருங்காலத்தில் தமிழக முதல்வராகக் கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலையுடன் பங்குபெறும் வாய்ப்பு. பல்சமய நிகழ்வுகளில் இஸ்லாம் ஒரு மதமல்ல அது ஒரு வாழ்க்கை நெறி என்பதனை மிகவும் உறுதியுடன் கூறியது அனைவரையும் சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஐக்கிய ஆலயத்தில் இஸ்லாம் குறித்து பாதிரியார்களுக்கு வகுப்பு எடுத்தேன்.

டெல்லிக்கு பின்னர் பணியின் நிமித்தமாக சென்றபொழுது அங்குள்ள பாதிரியார்களது தலைமை அலுவலகத்துக்கு சென்ற பொழுது என்னிடம் இஸ்லாம் குறித்து பாடம் படித்த பாதிரியார்கள் மிகவும் அன்புடன் நடந்து கொண்ட நிகழ்வு மறக்கவியலாது. டெல்லியில் இருந்து திரும்பிய சமயத்தில் அப்போதைய பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது மிகவும் வருத்தமானது.

போப் ஜான்பால் II அவர்கள் 1986ல் சென்னை வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சமய அறிஞர்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்த்து. அதில் சிராஜுல் மில்லத், மதுரை கண் டாக்டர் அப்துல் சத்தார் ஆகியோருடன் அடியேனுக்கும் வாய்ப்பு கிடைத்து வாழ்வில் மறக்கவியலாது.


கவிதை அனுபவம் குறித்து ?


மாதுளம் கனி என்ற தலைப்பில் நீண்ட கவிதையொன்றை பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் படிக்கும் போது வெளியிட்டேன். அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அமீரகத்தில் வானலை வளர்தமிழ் அமைப்பின் காரணமாக எனது கவித்திறனை கூர்தீட்ட மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது என்றால் மிகையல்ல.

வருங்காலத் திட்டம் ?


சென்னையில் மீண்டும் ஞாயிறு தோறும் திருக்குர் ஆன் விரிவுரையினைத் தொடர்வது, இஸ்லாமிய நூல்களை மொழிபெயர்த்தும், எழுதியும் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொள்வது.


இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது ?


இஸ்லாத்தை கூடுதல் குறைவின்றி அறிமுகப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது மேலாதிக்கத்திற்காக அதனைப் பயன்படுத்துகின்றனர். மக்களில் குறிப்பாக இளைஞர்கள் அப்பாவித்தனமாக அவர்களுக்கு பலியாகின்றனர்.

இதிலிருந்து விடுபட இளைஞர்கள் உண்மையான இஸ்லாத்தை, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினைப் பின்பற்றி வாழ்வில் உயர்நிலையினை அடைய வேண்டும். உண்மையான அறிவுப்புரட்சி கொணரப்படவேண்டும்.

கவர்ச்சிகரமான உரைகளை நம்பி இந்தப் போலி பிரச்சாரகர்களின் வலையில் வீழ்ந்து விடக்கூடாது.

ஸஹாபாக்கள், இமாம்கள், அவுலியாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரது வாழ்வு வரையறுக்கப்பட்டது. அவர்கள் வாயிலாகத்தான் இஸ்லாத்தை நாம் பெற்றுக்கொண்டோம்.

இவர்களைக் குறித்து இழிவாகப் பேசி வருபவர்கள் பயனற்றவர்கள். சமுதாயத்திற்கு தீங்கிழைப்பவர்கள். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் என்றே கூற வேண்டும்.

Pl correct the below para

சமுதாய நீதி பயனற்ற நுரைகுமிழாகப் போய்விடும், மக்களுக்குப் பயனளிக்கும் பொருட்டுதான் பூமியில் நிலைத்திருக்கும் என்று திருக்குர் ஆனில் கூறுகின்றது. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தப் போலி பிரச்சாரகர்கள் ஒருநாள் ஒழிந்து விரைவில் உண்மையான பிரச்சாரகர்கள் காணாமல் போய்விடுவர்.


சமுதாயம் வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு சமயம் முதலான ஆய்வுத்துறைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த நவீன உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

அறிவியல், தொழில்நுட்பக்கல்வியில் சிறப்புற திகழ்ந்தால் உலகத்தார் நம்மை புறக்கணிக்க முடியாது. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


மார்க்க்க் கல்வி உலக ஆதாயத்திற்காக்க் கற்கப்படுமேயானால் அதுவும் உலாகாதயமாகவே கருதப்படும். உலகக்கல்வி இறைதிருப்திக்காகக் கற்கப்பட்டால் அதுவும் இஸ்லாமியக் கல்வியாகக் கருதப்படும்.


இஸ்லாமியக் கல்வி இறை உணர்வோடு கற்கப்பட வேண்டும்

இஸ்லாமியக் கல்வியினால் நவீன தொழில்நுட்பத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கும்.

இறை நம்பிக்கையாளர்கள் உலகை அழிவில் இருந்து காப்பாற்றலாம். அவர்களிடத்தில் உலகின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் இறையுணர்வுடன் ஊழலற்ற ஆட்சியை உலகிற்குத் தருவார்கள்.


சந்திப்பு & பேட்டி : காஹிலா

‘ஹிஸ்னுல் முஸ்லிம்’

இப்போது புத்தம் புதிய வடிவில்

‘ஹிஸ்னுல் முஸ்லிம்’
(நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் களஞ்சியம்)


எனும் நூல் வெளிவந்துள்ளது.


தாருஸ் ஸலாஹ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூல் அழகிய வடிவில், கையடக்கத் தோற்றத்தில் வந்துள்ளது. குறிப்பிடத் தக்கது. சுமார் 267 துஆக்கள் அழகிய அரபி எழுத்துக்களுடன் 256 பக்கங்களில் ஆதாரக் குறிப்புகளுடன் காணப்படுகிறது. எளிமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒலிபெயர்ப்பும் (உச்சரிப்பும்) அடங்கியுள்ளது. இந்நூல் எல்லலோர் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்



தொடர்புக்கு


தாருஸ் ஸலாஹ் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
மொபைல் எண்கள் +91 94443 16031 / 94443 16031 / 96000 16031 / 98844 38740
மின்னஞ்சல் dharussalah@gmail.com

Thangam Magazine Jan 2010 issue e-Book

Thangam Magazine Jan 2010 issue e-Book

e-Book Link : http://ebook.thangamonline.com/jan10/

Plz Check it.
--
Regards,
T. Shaik Mydeen
CEO & Editor,
Thangam Tamil Monthly,
www.thangamonline.com.
e-mail : tshaikmydeen@yahoo.co.in
Mob: 098417 41392.

Wednesday, December 30, 2009

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=231


சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.
கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி
பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக்
பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக
வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த
மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும்
சந்தோசப் பட்டிருப்பார்கள் என்றால் மிகையாகாது.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி
சிறுபான்மை நலன் பற்றி விசாரித்த கமிஷன் அறிக்கையினை இந்திய
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்பதினை அனைவரும் அறிவர். அந்த
அறிக்கையில் மத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் 73 சதவீதம்
இருப்பதாகவும் ஆகவே 10 சதவீத வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என்றும், மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க
வேண்டும் என்றும், அவ்வாறு முஸ்லிம் மைனாரிட்டி வேட்பாளர்கள்
வேலைக்கு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையினை மற்ற
மைனாரிட்டிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அத்துடன் 50 சதவீத ரிசர்வேஷன் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற
நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர் நடத்தும்
நிறுவனங்களிலும் அமல் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த
ஒதுக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதத்திற்கு மனமாற்றம் கொண்டு இணைந்த
தலித் மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விரும்பினால் தங்கள் பழைய
சாதிச் சான்றிதழிலேயே ரிசர்வேஷன் பெற தடையில்லை என்றும்
சொல்லியுள்ளார். அவருடைய அறிக்கை நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி
அளித்த அறிக்கைக்கு பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
மத்திய அரசு சாரபில்; பிரதமர் தெரிவித்தார். நீதிபதி சச்சார் அறிக்கையின்
சாராம்சம் என்ன? முஸ்லிம் படிப்பிலும்-வேலை வாய்ப்பிலும் தலித்களை
விட மிகவும் தாழ்ந்திருக்கிறார்கள் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 62
ஆண்டுகள் ஆன பின்னரும் என்று தான் சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள்
முன்னேற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விட்டுள்ளார் என்பதினை அனைவரும் அறிந்ததே.

திரு. இல. கணேசன் அவர்கள் 23.12.2009 ஆம் தேதி வெளியிட்ட
அறிக்கையில், ‘நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் இந்த அறிக்கை இஸ்லாமிய,
கிறிஸ்துவ மத குருமார்கள் தூண்டிதலின் பேரில் கொடுக்கப்பட்ட
அறிக்கையென்றும், இந்த குருமார்கள் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழும்
பகுதிகளுக்கு சென்று, ‘நீ இந்துவாக இருப்பதால்தான் சாதிக் கொடுமை
நீடிக்கிறது, என் மதத்திற்கு வந்து விட்டால் சாதி ஒழியும், சமத்துவம்
நிலவும்’ என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள். இப்போதோ
மதம் மாறிய பின்னும் சாதி நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை
கேட்கிறார்கள், ஆகவே அந்த அறிக்கையினை நிராகரிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத ரீதியான பின் விளைவுகள் உண்டாக்கி விடும்’
கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையென்ன? நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டவர் முற்பட்ட,
ஆதிக்க சாதிகளின் முன்னால் சட்டையணிக்கூடாது, காலணி அணியக்கூடாது,
டீக்கடையில் ஒரே டம்ளரில் டீ வழக்கக் கூடாது, பிணங்கள் எரிப்பதிற்கு தனி
சுடுகாடு, அவர்கள் மேல் ஜாதி வீதிகளில் நடமாடக்கூடாது, கிணற்றில்
தண்ணீர் மேல் ஜாதியினர் பிடிக்கும் போது தண்ணீர் பிடிக்கக்கூடாது,
குளத்தில் ஒன்றாக குளிக்கக்கூடாது, கோயில்களில் ஒன்றாக சேர்ந்து
வணங்கக்கூடாது, மனமாற இரு ஜோடிகள் வௌ;வேறு ஜாதியினராக
இருந்தாலும் இணையக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளினால்
மனம் நொந்து கடலை நோக்கி ஓடி வரும் சிறு ஆறுகள் போல சமத்துவம்
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதம் நோக்கி ஓடி வருகிறாரகள் இந்து
மதத்திலுள்ள தலித் மக்கள். அவர்களுக்கு ஆசை வார்த்தை கொடுத்து யாரும்
அழைப்பதில்லை என்பதுதான் உண்மை. எப்போது ஒருவன் ‘லாயிலாக
இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸீலல்;லாஹ’; என்று இஸ்லாமிய மதத்தினை
ஏற்றுக் கொண்டானோ அப்போது ஜாதி வேறுபாடுகள் அறுத்ததெறிந்து
வீசப்படுகின்றன. இந்த நவீன உலகத்திலும் ஜாதி இந்துக்கள் தலித் மக்கள்
தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று சுவர் எழுப்பிய அதிசயம் பல
வருடங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடந்தபோது
இருந்தது. அதன் பின்பு நெல்சன் மண்டேலா 27 ஆண்டு தனிமை சிறையில்
இருந்தாலும் போராடி கறுப்பின மக்கள் உரிமை காத்ததோடு மட்டில்லாமல்
அதன் ஜனநாயக அரசின் ஜனாதிபதியாகவும் இருந்தார். ஆனால் தமிழகத்தில்
மதுரை மாவட்டத்தில் உத்தமபுரத்திலும் அது போன்ற சுவர் சமீபத்தில் அரசு
முயற்கியால் இடிக்கப்பட்டாலும் இன்னும் உரிமை மறுக்கப்படுகிறது என்று
தகவல் கிடைத்து பார்வையிட வந்த மார்க்கிஸ்ட் கம்ய+னிஸ்ட் பொலைட்
பீரோ மெம்பர் பிரிந்தா கரட் கூட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
என்றும் அது சம்பந்தமாக விசாரணை நடந்தது என்பதினையும் அனைவரும்
அறிந்ததே.

ஏன் சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனை கிராமத்தில் கோயில் தேர்
இழுக்க தலித்துகள் மறுக்கப் பட்டு அதனை தட்டிக்கேட்ட ஒன்பது தலித்
கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த கிராமத்தைப் பார்ப்பதிற்காக
1988ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் சென்றதினையும் அனைவரும் மறந்து
விடவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு தலித் முருகேசன் மதுரை மாவட்டம்
கீழையூர்பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டார் என அறிந்து அவரை
பணியாற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல,; அவர் உள்பட ஆறு
தலித்துகள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு பஸ்ஸில் வரும்
போது கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த வழக்கில்
உச்சநீதிமன்றமும் குற்றவாளிகளின் தண்டனையினை உறுதி செய்ததினையும்
அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள். விவசாய கூலி உயர்வு கேட்ட
தலித் விவசாயிகள் மிராசுதார்களால் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
25ந்தேதி மிருகத்தனமான செயலில் தஞசை மாவட்டம் கீழ் வெண்மணி
கிராமத்தில் 40 பேர் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட உயிருடன்
எரித்து கருக்பட்டனர் என்பதினை கல்லூரி மாணவானாக இருந்த
காலத்திலிருந்து இன்னும் பசுமையாக நெஞ்சில் உள்ளது. அன்றை முதல்வர்
பேரரிஞர் அண்ணா கூட அந்த செய்தி கேட்டு துடி துடித்து, ‘ என் நெஞ்சில்
பாய்ச்சிய ஈட்டியாக கருதி வேதனையடைந்து இரவு முழுவதும் உறங்காது
அல்லல் பட்டேன் என்று சொன்னதினை எல்லோரும் படித்திருப்பீர்கள.

சென்ற மாதங்கூட திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தலித்
மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நீதித் துறையின்
உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு அவர்களை
பஸ்ஸில் அணியாக அழைத்துச் செல்லும் போது கல், தடி கொண்டு
தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆகவே தான் கம்ய
+னிஸ்ட்டுகள் ஆலய நுழையும் போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
பழைய புராணத்தில் நந்தன் என்ற தலித் ஆண்டவனை தரிசிக்க கோவிலுக்கு
சென்றதாகவும் இறைவனை தரிசிக்க விடாமல் நந்நி போன்றவர்கள்
மறைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆகவே அவன் இறைவனிடம், ‘சற்றே
விலகியிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்கிறது, என்றும் நந்தன்
முறையிட்டதாகவும், இறைவன் செவிசாய்த்து ‘நந்தாய் உள்ளே வா’ என்று
அழைத்து நந்தன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாகவும் புராணம்
சொல்கிறது. ஆகவே ஆண்டவனே சொன்னால் தான் தலித்களுக்கு உரிமை
கொடுக்கும் நிலையிருப்பதால் தானே தலித் மக்கள் சமத்துவம்-
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஓடோடி வருகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏற்கனவே நீதியரசர் சச்சார்
அறிக்கையில் படிப்பில்- வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் தலித் போன்று
இருப்பதாலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய
தலித்கள் பொருளாதாரம்-கல்வியில் பின் தங்கியிருப்பதாலும் நீதியரசர்
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலித்கள் அனுபவித்த அரசு சலுகைகளை அவர்கள்
மதம் மாறினாலும் வழங்க வேண்டும் என்று பரிந்திருக்கிறாரே தவிர எந்த
முஸ்லிம் மத குருமார்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா போன்ற
அப்பழுக்கற்ற நீதிபதியினை யாரும் வசியப்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்ய
முடியாது.

பி.ஜே.பியில் தலித்-பிற்பட்ட தலைவர்கள் தலை தூக்க முடியுமா?
அவ்வாறு தமிழக தலைவராக வந்த டாக்டர் கிருபாநிதி வடநாட்டில் நடந்த
மாநாட்டில் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று அறிக்கை
விடுத்து ராஜினாமா செய்யவில்லையா? பிற்பட்ட சமுதாய தலைவர்களான
உமாபாரதி-கல்யான்சிங்-ஏன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போன்றோர்
பி.ஜே.பியில் இருந்து ஏன் விலகினார்கள் என்பது அவர்கள் விலகும் போது
கொடுத்த அறிக்கையினைப் பார்த்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
அங்கு தலித்-பிற்பட்ட சமூதாய மக்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது
என்பதே உண்மை. அவருடைய வீட்டினை ஒழுங்கு படுத்துவதிற்கு பதில்
கண்ணாடி மாளிகை போன்று இருக்கிற இஸ்;லாம் மதத்தினை ஜாதி உணர்வு
இஸ்லாத்திலும் இருக்கிறது போன்ற மாயையை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
ஆகவே தான் பி.ஜே.பி கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுத்தினார்கள் மக்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திருநாவுக்கரசர் பி.ஜே.பியிலிருந்து விலகும்
போது, ‘பி.ஜே.பியில் சேர்ந்ததால் நான் நல்ல இஸ்லாமிய நண்பர்களை
இழந்தேன், தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சி என்ற அமைப்புக்கு மக்கள்
ஆதரவு இல்லை என தெரிந்து கொண்டதாக’ வருத்தத்துடன் அறிவித்து விட்டு
விலகி இன்று காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே தான் மக்கள் ஆதரவே இல்லாத ஒரு அமைப்பில் இருந்து
கொண்டு தன் பெயர் தினந்தோரும் பத்திரிக்கைகளிலும்-தொலைக்காட்சியிலும்
வரவேண்டுமென்று ஓதும் வேதத்தினை சாத்தான் ஓதும் வேதமாக
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்லாது-ஒட்டுமொத்த தமிழக சமுதாயமும்
நினைத்து சிரிக்கிறது என்றால் அது உண்னைதானே?
சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=231


சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.
கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி
பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக்
பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக
வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த
மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும்
சந்தோசப் பட்டிருப்பார்கள் என்றால் மிகையாகாது.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி
சிறுபான்மை நலன் பற்றி விசாரித்த கமிஷன் அறிக்கையினை இந்திய
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்பதினை அனைவரும் அறிவர். அந்த
அறிக்கையில் மத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் 73 சதவீதம்
இருப்பதாகவும் ஆகவே 10 சதவீத வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என்றும், மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க
வேண்டும் என்றும், அவ்வாறு முஸ்லிம் மைனாரிட்டி வேட்பாளர்கள்
வேலைக்கு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையினை மற்ற
மைனாரிட்டிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அத்துடன் 50 சதவீத ரிசர்வேஷன் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற
நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர் நடத்தும்
நிறுவனங்களிலும் அமல் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த
ஒதுக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதத்திற்கு மனமாற்றம் கொண்டு இணைந்த
தலித் மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விரும்பினால் தங்கள் பழைய
சாதிச் சான்றிதழிலேயே ரிசர்வேஷன் பெற தடையில்லை என்றும்
சொல்லியுள்ளார். அவருடைய அறிக்கை நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி
அளித்த அறிக்கைக்கு பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
மத்திய அரசு சாரபில்; பிரதமர் தெரிவித்தார். நீதிபதி சச்சார் அறிக்கையின்
சாராம்சம் என்ன? முஸ்லிம் படிப்பிலும்-வேலை வாய்ப்பிலும் தலித்களை
விட மிகவும் தாழ்ந்திருக்கிறார்கள் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 62
ஆண்டுகள் ஆன பின்னரும் என்று தான் சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள்
முன்னேற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விட்டுள்ளார் என்பதினை அனைவரும் அறிந்ததே.

திரு. இல. கணேசன் அவர்கள் 23.12.2009 ஆம் தேதி வெளியிட்ட
அறிக்கையில், ‘நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் இந்த அறிக்கை இஸ்லாமிய,
கிறிஸ்துவ மத குருமார்கள் தூண்டிதலின் பேரில் கொடுக்கப்பட்ட
அறிக்கையென்றும், இந்த குருமார்கள் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழும்
பகுதிகளுக்கு சென்று, ‘நீ இந்துவாக இருப்பதால்தான் சாதிக் கொடுமை
நீடிக்கிறது, என் மதத்திற்கு வந்து விட்டால் சாதி ஒழியும், சமத்துவம்
நிலவும்’ என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள். இப்போதோ
மதம் மாறிய பின்னும் சாதி நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை
கேட்கிறார்கள், ஆகவே அந்த அறிக்கையினை நிராகரிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத ரீதியான பின் விளைவுகள் உண்டாக்கி விடும்’
கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையென்ன? நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டவர் முற்பட்ட,
ஆதிக்க சாதிகளின் முன்னால் சட்டையணிக்கூடாது, காலணி அணியக்கூடாது,
டீக்கடையில் ஒரே டம்ளரில் டீ வழக்கக் கூடாது, பிணங்கள் எரிப்பதிற்கு தனி
சுடுகாடு, அவர்கள் மேல் ஜாதி வீதிகளில் நடமாடக்கூடாது, கிணற்றில்
தண்ணீர் மேல் ஜாதியினர் பிடிக்கும் போது தண்ணீர் பிடிக்கக்கூடாது,
குளத்தில் ஒன்றாக குளிக்கக்கூடாது, கோயில்களில் ஒன்றாக சேர்ந்து
வணங்கக்கூடாது, மனமாற இரு ஜோடிகள் வௌ;வேறு ஜாதியினராக
இருந்தாலும் இணையக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளினால்
மனம் நொந்து கடலை நோக்கி ஓடி வரும் சிறு ஆறுகள் போல சமத்துவம்
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதம் நோக்கி ஓடி வருகிறாரகள் இந்து
மதத்திலுள்ள தலித் மக்கள். அவர்களுக்கு ஆசை வார்த்தை கொடுத்து யாரும்
அழைப்பதில்லை என்பதுதான் உண்மை. எப்போது ஒருவன் ‘லாயிலாக
இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸீலல்;லாஹ’; என்று இஸ்லாமிய மதத்தினை
ஏற்றுக் கொண்டானோ அப்போது ஜாதி வேறுபாடுகள் அறுத்ததெறிந்து
வீசப்படுகின்றன. இந்த நவீன உலகத்திலும் ஜாதி இந்துக்கள் தலித் மக்கள்
தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று சுவர் எழுப்பிய அதிசயம் பல
வருடங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடந்தபோது
இருந்தது. அதன் பின்பு நெல்சன் மண்டேலா 27 ஆண்டு தனிமை சிறையில்
இருந்தாலும் போராடி கறுப்பின மக்கள் உரிமை காத்ததோடு மட்டில்லாமல்
அதன் ஜனநாயக அரசின் ஜனாதிபதியாகவும் இருந்தார். ஆனால் தமிழகத்தில்
மதுரை மாவட்டத்தில் உத்தமபுரத்திலும் அது போன்ற சுவர் சமீபத்தில் அரசு
முயற்கியால் இடிக்கப்பட்டாலும் இன்னும் உரிமை மறுக்கப்படுகிறது என்று
தகவல் கிடைத்து பார்வையிட வந்த மார்க்கிஸ்ட் கம்ய+னிஸ்ட் பொலைட்
பீரோ மெம்பர் பிரிந்தா கரட் கூட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
என்றும் அது சம்பந்தமாக விசாரணை நடந்தது என்பதினையும் அனைவரும்
அறிந்ததே.

ஏன் சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனை கிராமத்தில் கோயில் தேர்
இழுக்க தலித்துகள் மறுக்கப் பட்டு அதனை தட்டிக்கேட்ட ஒன்பது தலித்
கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த கிராமத்தைப் பார்ப்பதிற்காக
1988ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் சென்றதினையும் அனைவரும் மறந்து
விடவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு தலித் முருகேசன் மதுரை மாவட்டம்
கீழையூர்பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டார் என அறிந்து அவரை
பணியாற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல,; அவர் உள்பட ஆறு
தலித்துகள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு பஸ்ஸில் வரும்
போது கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த வழக்கில்
உச்சநீதிமன்றமும் குற்றவாளிகளின் தண்டனையினை உறுதி செய்ததினையும்
அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள். விவசாய கூலி உயர்வு கேட்ட
தலித் விவசாயிகள் மிராசுதார்களால் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
25ந்தேதி மிருகத்தனமான செயலில் தஞசை மாவட்டம் கீழ் வெண்மணி
கிராமத்தில் 40 பேர் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட உயிருடன்
எரித்து கருக்பட்டனர் என்பதினை கல்லூரி மாணவானாக இருந்த
காலத்திலிருந்து இன்னும் பசுமையாக நெஞ்சில் உள்ளது. அன்றை முதல்வர்
பேரரிஞர் அண்ணா கூட அந்த செய்தி கேட்டு துடி துடித்து, ‘ என் நெஞ்சில்
பாய்ச்சிய ஈட்டியாக கருதி வேதனையடைந்து இரவு முழுவதும் உறங்காது
அல்லல் பட்டேன் என்று சொன்னதினை எல்லோரும் படித்திருப்பீர்கள.

சென்ற மாதங்கூட திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தலித்
மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நீதித் துறையின்
உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு அவர்களை
பஸ்ஸில் அணியாக அழைத்துச் செல்லும் போது கல், தடி கொண்டு
தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆகவே தான் கம்ய
+னிஸ்ட்டுகள் ஆலய நுழையும் போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
பழைய புராணத்தில் நந்தன் என்ற தலித் ஆண்டவனை தரிசிக்க கோவிலுக்கு
சென்றதாகவும் இறைவனை தரிசிக்க விடாமல் நந்நி போன்றவர்கள்
மறைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆகவே அவன் இறைவனிடம், ‘சற்றே
விலகியிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்கிறது, என்றும் நந்தன்
முறையிட்டதாகவும், இறைவன் செவிசாய்த்து ‘நந்தாய் உள்ளே வா’ என்று
அழைத்து நந்தன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாகவும் புராணம்
சொல்கிறது. ஆகவே ஆண்டவனே சொன்னால் தான் தலித்களுக்கு உரிமை
கொடுக்கும் நிலையிருப்பதால் தானே தலித் மக்கள் சமத்துவம்-
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஓடோடி வருகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏற்கனவே நீதியரசர் சச்சார்
அறிக்கையில் படிப்பில்- வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் தலித் போன்று
இருப்பதாலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய
தலித்கள் பொருளாதாரம்-கல்வியில் பின் தங்கியிருப்பதாலும் நீதியரசர்
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலித்கள் அனுபவித்த அரசு சலுகைகளை அவர்கள்
மதம் மாறினாலும் வழங்க வேண்டும் என்று பரிந்திருக்கிறாரே தவிர எந்த
முஸ்லிம் மத குருமார்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா போன்ற
அப்பழுக்கற்ற நீதிபதியினை யாரும் வசியப்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்ய
முடியாது.

பி.ஜே.பியில் தலித்-பிற்பட்ட தலைவர்கள் தலை தூக்க முடியுமா?
அவ்வாறு தமிழக தலைவராக வந்த டாக்டர் கிருபாநிதி வடநாட்டில் நடந்த
மாநாட்டில் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று அறிக்கை
விடுத்து ராஜினாமா செய்யவில்லையா? பிற்பட்ட சமுதாய தலைவர்களான
உமாபாரதி-கல்யான்சிங்-ஏன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போன்றோர்
பி.ஜே.பியில் இருந்து ஏன் விலகினார்கள் என்பது அவர்கள் விலகும் போது
கொடுத்த அறிக்கையினைப் பார்த்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
அங்கு தலித்-பிற்பட்ட சமூதாய மக்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது
என்பதே உண்மை. அவருடைய வீட்டினை ஒழுங்கு படுத்துவதிற்கு பதில்
கண்ணாடி மாளிகை போன்று இருக்கிற இஸ்;லாம் மதத்தினை ஜாதி உணர்வு
இஸ்லாத்திலும் இருக்கிறது போன்ற மாயையை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
ஆகவே தான் பி.ஜே.பி கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுத்தினார்கள் மக்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திருநாவுக்கரசர் பி.ஜே.பியிலிருந்து விலகும்
போது, ‘பி.ஜே.பியில் சேர்ந்ததால் நான் நல்ல இஸ்லாமிய நண்பர்களை
இழந்தேன், தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சி என்ற அமைப்புக்கு மக்கள்
ஆதரவு இல்லை என தெரிந்து கொண்டதாக’ வருத்தத்துடன் அறிவித்து விட்டு
விலகி இன்று காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே தான் மக்கள் ஆதரவே இல்லாத ஒரு அமைப்பில் இருந்து
கொண்டு தன் பெயர் தினந்தோரும் பத்திரிக்கைகளிலும்-தொலைக்காட்சியிலும்
வரவேண்டுமென்று ஓதும் வேதத்தினை சாத்தான் ஓதும் வேதமாக
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்லாது-ஒட்டுமொத்த தமிழக சமுதாயமும்
நினைத்து சிரிக்கிறது என்றால் அது உண்னைதானே?

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!
………………………………………………………………………

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
Sent from Chennai, TN, India

--

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ......!

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ......!



நெல்லை ஆ. க‌ண‌ப‌தி


இராம‌ர் கோயில் அவ‌சிய‌மா ?
நாட்டின் அமைதி அவ‌சிய‌மா ?
பாப‌ர் ம‌சூதி இடித்த‌ பாவ‌மும்
ப‌ழியும் நீங்கிட‌ வேண்டாமா ?

க‌ல்விதான் க‌ற்க‌ இள‌மையிலும்
கைகேயிவ‌ர‌த்தால் வ‌ள‌மையிலும்
ப‌ல்வேறு ஆண்டுக‌ள் காடுக‌ளில்
ப‌ழ‌கியே வாழ்ந்த‌வ‌ன் இராம‌பிரான் !

கானில் ப‌ட‌கோட்டி குக‌ன் த‌னையே
கண்ட‌தும் சோத‌ர‌ர் ஐவ‌ர் என‌
மானிட‌ன் ஆன்வ‌ன் பிற‌ இன‌த்தை
ம‌திப்ப‌தே பெருமை என்றுரைத்தான்

அயோத்தியில் வாழ்ந்த‌ அர‌ண்ம‌னையும்
ஆர‌ண்ய‌ வாழ்வும் ச‌ம‌ம் என்றான்
வ‌யோதிக‌ன் த‌ச‌ர‌த‌ன் த‌ந்தையினால்
வ‌ன்வாச‌ம் சென்ற‌வ‌ன் புண்ணிய‌வான் !

ம‌ன்ன‌வ‌ன் இராம‌ன் பிற‌ர் உண‌ர்வை
ம‌திப்ப‌தே ப‌ண்பு என‌ வாழ்ந்தான் !
என்ன‌வோ கோயில் கட்டுகிறோம்
இங்கு இரு என்றால் இருப்பனோ ?

இராம‌ர் இருக்கும் இட‌ம் அயோத்தி
எல்லோரும் அறிந்த‌ உண்மை இது !
பாப‌ர் ம‌சூதி கோயிலையே
ப‌டைப்பினும் இராம‌ன் வ‌ர‌மாட்டான்
அடுத்த‌வ‌ர் ம‌னைவியை அப‌க‌ரித்த‌
அதைக் க‌ண்டு கொதித்த‌வ‌ன் இராம‌பிரான்
அடுத்த‌வ‌ர் ம‌சூதியை அப‌க‌ரித்தே
அமைத்திடும் கோயிலில் புக‌மாட்டான் !

நெற்றியில் நாம‌ம் போடுவ‌தும்
நெஞ்சினில் ராம‌னைத் தேடுவ‌தும்
க‌ற்ற‌வ‌ர் போடும் திருக்கோயில்
க‌ற்கோயில் ந‌ம‌து நெஞ்ச‌மதே !

பாப‌ர் ம‌சூதியும் தாஜ்ம‌காலும்
ப‌ழ‌ம்புக‌ழ் போற்றும் பொக்கிஷ‌மே !
யாவ‌ரும் அறிந்த‌ உண்மை இது !
இத‌னை ம‌ற‌ப்ப‌து ச‌ரிதானோ ?

ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் டிச‌ம்ப‌ர் 16 31, 2009

Monday, December 28, 2009

அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி


அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி

அபுதாபி :

அமீரத்தில் செயல்படும் தமிழக அமைப்புகளில் அய்மான் சங்கம் மிகத் தொன்மையும்
சிறப்பும் வாய்ந்த அமைப்பாகும். அமீரகத்திலும் தாயகத்திலும் அய்மான் அமைப்பின்
பணிகள் பெரும் வரவேற்பை பெற்றவை. அதனை நிறுவியவர்களுள் ஒருவரும் 1976 முதல்
சங்கத்தின் உறுப்பினரும் கீழக்கரை நர காஜியாரும் சங்கத்தின் இந்நாள் தலைவருமான
காதர் பக்ஸ் ஹாஜி M.A. அவர்கள் தனது 33 வருட அமீரக வாழ்வை, சமுதாயப் பணியை
நிறைவு செய்து தாயம் திரும்புகிறார்.

அன்னாரை பாராட்டி வழியனுப்பும் முகமாக ஜனவரி 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று
தலைநகர் அபுதாபி ஹம்தான் சாலையில் அமைந்திருக்கும் ருசி ரெஸ்டாரன்ட் பேன்குவெட்
ஹாலில் மாலை 7 மணிக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தினர் ஏற்பாடு
செய்துள்ளனர்.

அய்மான் புதிய தலைவர் அதிரை சாஹுல் ஹமீது M.Sc தலைமையில் இந்நிகழ்சி
நடைபெறுகிறது. சமுதாயப் புரவலர் நோபிள் ஹமீது ஹாஜியார் அவர்கள் முன்னிலையில்
நடைபெறும் இந்நிகழ்வில் அபுதாபி தமிழ் சங்கம், துபை ஈமான் சங்கம் மற்றும்
தொழிலதிபர்களும் பல்வேறு தமிழக மற்றும் கேரள அமைப்புகளின் பிரதிநிதிகளும்
அறிஞர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

அய்மானின் நிறுவனத் தலைவர்களான அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார், கனிமொழிக் கவிஞர்
ஷம்சுதீன் ஹாஜி, கல்லூரிச் செயலளார் செய்யது ஜாபர், தொழிலதிபர் பனியாஸ் ஹமீத்
ஹாஜி, ஈமான் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, பாடகர்
தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Sunday, December 27, 2009

மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப் போட்டி

மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப் போட்டி

மேல்நிலைப்ப‌ள்ளி / க‌ல்லூரி / அர‌பிக் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்காக‌

ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இன்ஷா அல்லாஹ் வ‌ருகிற‌ 2010 ஜ‌ன‌வ‌ரி 30,31 அகிய‌ நாட்க‌ளில் திருச்சியில் மாநில‌ மாநாட்டை ந‌ட‌த்த‌ உள்ள‌து. இத‌னையொட்டி மேல்நிலைப்ப‌ள்ளிக‌ள், கல்லூரிக‌ள், அர‌பிக் க‌ல்லூரிக‌ளில் ப‌யிலும் மாண‌வ‌, மாண‌விய‌ருக்காக‌ மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப்போட்டி ஒன்றை ந‌ட‌த்துகிற‌து.

த‌லைப்பு

இஸ்லாம் ஒரு முழுமையான‌ வாழ்க்கை நெறி
அல்ல‌து
ச‌மூக‌ப் புத்த‌மைப்பில் முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளின் ப‌ங்கு
அல்ல‌து
முன்மாதிரிச் ச‌மூக‌த்தை உருவாக்குவ‌தில் இஸ்லாத்தின் ப‌ங்கு



விதிமுறைக‌ள்

மாண‌வ‌, மாண‌விய‌ர் மேற்குறிப்பிட்ட‌ த‌லைப்புக‌ளில் ஏதேனும் ஒன்றில் க‌ட்டுரைக‌ள் எழுத‌லாம்.
க‌ட்டுரைக‌ள் த‌மிழ் / ஆங்கில‌ம் / உருது மொழிக‌ளில் எழுத‌லாம்
க‌ட்டுரை 1000 வார்த்தைக‌ளுக்கு மிகாம‌ல் இருக்க‌ வேண்டும்
போட்டியில் ப‌ங்கு பெறும் மாண‌வ‌ / மாண‌விய‌ர் தாளின் ஒரு ப‌க்க‌த்தில் ம‌ட்டுமே த‌ங்க‌ள் கைப்ப‌ட‌ எழுத‌ வேண்டும்
தாங்க‌ள் ப‌யிலும் க‌ல்வி நிறுவ‌ன‌த்தின் ஒப்புத‌லோடு க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டும்
க‌ட்டுரைக‌ள் 30.12.2009 க்குள் பின்வ‌ரும் முக‌வ‌ரிக்கு வ‌ந்து சேர்ந்திட‌ வேண்டும்

ப‌ரிசுத் தொகை

முத‌ல் ப‌ரிசு : ரூ 5000
இர‌ண்டாம் ப‌ரிசு : ரூ 3000
மூன்றாம் ப‌ரிசு : ரூ 2000

இத்துட‌ன் சான்றித‌ழும், கேட‌ய‌மும், ம‌திப்புவாய்ந்த‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளும் ப‌ரிசாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் அனைவ‌ருக்கு சான்றித‌ழ்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

வெற்றி பெறும் மாண‌வ‌, மாண‌விய‌ருக்கு மாநில‌ மாநாட்டில் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி

ஒருங்கிணைப்பாள‌ர்
மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப் போட்டி
ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில‌ மாநாடு
ஐ.எஃப்.டி. வ‌ளாக‌ம்
138 பெர‌ம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012

தொலைபேசி : 044 2662 1101 / 94449 01422 / 90431 30358

இறுதி நாள் : 05. 01. 2010

Saturday, December 26, 2009

பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள் -

பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள்!

_

துபாயில் கவிஞர் ஜின்னாஹ்வின் உணர்ச்சிபூர்வமான பேச்சு


25- 12- 2009 அன்று துபை சிவ்ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் மன்றத்தின் தமிழ்த்தேர் நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான

கவிஞர் திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் கலந்துகொண்டார்



நீரோடை http://niroodai.blogspot.com யென்னும் வலைப்பூவில் 100 கவிதைகளுக்குமேல் எழுதிய

கவிஞர் மலிக்காவின் கவிதைகளைப்பற்றி பேசும்போது அவர்

கூறியதாவது.

“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட

இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!


அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தpபடவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுkகவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!

இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு

அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.


அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து

“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.


என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...

.

அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.

ஆனால்

இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!

எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?

[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.

இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.

இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


என்ற வரிகளை முடிக்கும்போது அரங்கத்தில் கனமான அமைதி...

குண்டுசி விழுந்தால்கூட கேட்கும் சத்தம்.... பிறகு கவிதையின் ஆழத்தை அர்த்தத்தை புரிந்துகொண்ட பார்வையாளர்களின் கைதட்டல்

அடங்க வெகுநேரமானது. ஒரு சிலபெண்களின் கண்கள் ஈரமானதையும் பார்க்கமுடிந்தது பெண்களின் பக்கம் பலத்தவரவேற்பையும் பெருமிதத்தையும் பார்க்க முடிந்தது


இது ஒரு நல்ல கவிதையல்லவா?


உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது

இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்றுசொல்லிவிட்டு


மற்றும் ஒரு கவிதையான ”வலி” என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இது நான் ஏற்கனவே 8 பக்கம்கொண்ட ஒரு சிறுகதை ஒன்று எழுதியிருந்தேன். ஒரு முதியவரைப்பற்றி அந்த கதையை இவர் தன்சிறிய கவிதைக்குள் கொண்டுவந்துவிட்டார். என அந்த கவிதையை வசித்தார்


இதோ அந்த கவிதை:


கைத்தடியை தட்டித் தட்டிக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி வீடுவந்து
சேர்த்தவர்கள் வாசல்திரும்பவில்லை

உள்ளிருந்து ஒலித்தது ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின் ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு வாக்கிங்

கத்தியில்லாமல் குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல் வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம் தானாய் புலம்பியது ரத்தினமே

நீ”
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்!



என அந்த கவிதையை வாசித்து இடையிடையே அதற்கான விளக்கங்களும் சொல்லி மிகவும் பெருமைபட பாராட்டினார்.


மலிக்காவை ஊக்கப்படுத்தும் விதமாக காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

அவர்கள் விருதை வழங்க அழைத்தபோது மலிக்கா அவர் அருகில் வந்து

தான் விருது வாங்கும் நேரத்தில் தன்னுடைய இலக்கியப்பணி மற்றும் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் கணவரும் தன்னருகில் இருக்கவேண்டும் என்று சொல்லியபோது,


மிகவும் சந்தோஷப்பட்ட கவிஞர் ஜின்னாஹ் உடனே மலிக்காவின் கணவர் ஃபாரூக்அலியை மேடைக்கு அழைத்தார்கள், “வாங்கப்பா” உங்களுக்காத்தான் அவர் கவிதை எழுதியிருக்கிறார் எவ்வளவு மகிழ்ச்சியான விசயம்!’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது மீண்டும் அரங்கம் அதிர்ந்தது கரகோசத்தால்.

ஃபாரூக்அலி அருகில் வர கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து விருதை பெற்றுக்கொண்டகாட்சியை பார்வையாளர்கள் மகிழ்ச்சியோடு பார்த்து இருவரையும் கவுரவிக்கும் விதமாக பலத்த கைதட்டல் எழுப்பினார்கள்.


வளர்ந்து வரும் கவிஞரை புகழ்பெற்ற, பலவிருதுகள் பெற்ற,

ஜின்னா அவர்கள் மேடையில் மனதார பாராட்டிய நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஜின்னா அவர்களின்மீது மேலும் உயர்வான மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது.


கவிஞர் ஜின்னா அவர்களின் பெருந்தன்மை பாராட்டதக்கது.

ஆற்றல் மிக்க ஜின்னா அவர்களின் வாழ்த்து வளரும் இந்த கவிஞரை நிச்சயம் இலக்கிய உலகில் செழித்து வாழவைக்கும்!


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒருபெண் இருப்பாள் என்பது பழமொழி

ஓவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒருஆண் உண்டு என்ற புதுமொழியை உண்டாக்கிய கவிஞர் மலிக்கா அவர்களின் அன்புக்கணவர் பாரூக் அலி அவர்களை பெண்கள் சமூகமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது


விருதுக்கான ஏற்பாடுகளை குமுதம் சிறுகதை எழுத்தாளர் ஷேக் சிந்தா மதார். கவிஞர் கமால். பத்திரிகையாளர் திருச்சி சையது. ஆகியோர் செய்திருந்தனர்.


.கவிஞர் ஜின்னா அவர்களால் வழங்கப்பட்ட பரிசு கேடயத்திலிருந்த

மின்னும் நட்சத்திரம்போல்கவிஞர் மலிக்காவும்

கவிதை வானில் நட்சத்திரமாக வாழ வாழ்த்துகிறோம்!


..

PROPHET'S MEDICINE FOR HEALTH

PROPHET'S MEDICINE FOR HEALTH
Dr K. S. RAMAKRISHNA RAO, an Indian Professor of Philosophy in his booklet, "Muhammad, the Prophet of Islam," calls him the "PERFECT MODEL FOR HUMAN LIFE." Prof. Ramakrishna Rao explains his point by saying "The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes! There is Muhammad, the Prophet. There is Muhammad, the Warrior; Muhammad, the Businessman ; Muhammad, the Statesman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of Orphans; Muhammad, the Protector of Slaves ; Muhammad, the Emancipator of Women; Muhammad, the Judge; Muhammad, the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero."
God's Messenger said, "If anyone among you is secure in mind (also, among his family or in his house) in the morning, healthy in body, and has food for the day, it is as though the whole world has been brought into his possession."
Prophets advice for Eating
"In eating, apportion a third of your stomach to food, another third to water, and leave the last third empty. The bowl most distasteful to God is a full stomach."
What I fear concerning my community is a large paunch, oversleep, idleness and the lack of certainty.
'Cleanliness is half of faith (Iman)'.
"Do not lean and eat."
"Wash both hands up to the wrists"
"Do not find fault with the food."
"Remove your shoes before eating."
"When eating, sit with either both knees on the ground or one knee raised or both knees raised."
"Eat with the right hand."
"Whilst eating one should not remain completely silent"
"Drink water in 3 breaths removing the utensil from the mouth after each sip. Do not drink directly from the jug or bottle. One should pour the contents into a glass first and then drink"
"The best drink in this world and the hereafter is water; when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver."
"Don't eat until you are hungry."
"The blessings of food lie in washing hands before and after eating."
"When a fly falls into the bowl of somebody among you, he should dip it completely in the food before taking it out. For there is disease in one of the fly's wings and cure in the other." (Flies carry microbes. But, when it is submerged in the food with a slight touch, the tiny bag on the other wing bursts open to scatter the anti-bacteria to kill the germs it has already left. This is one of the latest discoveries in medicine.)

Prophets advice for health
"O Servant of God, use medicine, because God hath not created a pain without a remedy for it".
"Use of Medicine is the Decree of God"
"If I bring something to you on your religion, do act according to it, and if I bring you something related to this world, then you have a better knowledge of your own earthly affairs (Maurice Bucaille in 'Quran Bible and Science')."
"Do not neglect having your diseases treated, for God does not send a disease for which He will not send a cure except for old age."
'When you hear about a break of plague in any area, do not enter there and when it has broken in a land where you are, then do not run way from it (and spread elsewhere). '(Principle of quarantine)
"Keep away from the leper as you do from a lion. (To prevent the spread of leprosy.)"
"When a dog has licked a bowl of yours, clean it seven times, first time with earth, the other six with water. (Dogs carry microbes of certain diseases)"
"If dogs were not a separate community, I would order their killing. (For they carry germs harmful to man's health.)"

Before going to sleep:-
1. One should change into some other clothes (e.g. pyjamas).
2. Apply surmah in both the eyes,
3. To brush the teeth with a miswaak,
4. Sleep on the right hand side.
5. Sleep with the right palm under the right cheek.
6. Keep the knees slightly bent when sleeping.
"One must cut one's nails & hairs of the pubic region within every forty days."
"Males must wear the pants above the ankles. Females should ensure that their lower garment covers their ankles"
"To announce ones arrival by coughing, greeting, etc. even though it may be your own house"(A means for avoiding any fear.)"
"If it did not place an excessive burden upon my community, I would command them to clean their teeth with miswaak [a tooth stick] before each of the five daily prayers."
'Disease' he said, 'is not the wrath of God, because Prophets also suffered great pains, much greater than ordinary people. Victims of epidemics like Cholera and Plague are martyrs. '
"Resort to Medicine first and then pray to God to get rid of the diseases."
Prophets medicine for health
--God's Messenger, upon him be peace and blessings, once proclaimed that ten things are intrinsically necessary for men and therefore ordered by the Prophets. Circumcision is one of them. (Scientists admit that the loose fold of the skin at the end of the male sex organ is exposed and susceptible to infections and even to cancer. Therefore, millions of people are circumcised in Europe and America .)
--"Khumbi (mushroom) is a part of Mann, Mann actually is from paradise, its water is a cure for the ailments of the eyes."
--"A house without dates has no food - also to be eaten at the time of childbirth."
--"Fig is a fruit from paradise and a cure for piles."
--"None of your women who are pregnant and eat of water melon will fail to produce off spring who are good in countenance and good in character."
--"Pomegranate cleanses you of Satan and evil aspirations for 40 days."
--"The best drink in this world and the hereafter is water, when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver. "
--"Have regular use of honey for keeping fit."
--"Black Cumin (Hadith; Habb al-Sauda) is a remedy for every disease except death."
--"milk wipes away heat from the heart just as the finger wipes away sweat from the brow. It strengthens the back, improved the brain, renews vision and drives away forgetfulness.
--For loss of appetite he frequently advised to take Talbina, a preparation of Barley.
--For constipation he used to recommend the use of Senna.
-- Similarly, for different ailments he would advise for taking herbal drugs like Olive, Black Cumin, Chicory, Fenugreek, Ginger, Marjorum, Saffron, Vinegar, Water-Cress etc.
--"Treat your eyes with kohl, for it nourishes eyes and eyelashes."
--"It is not permissible to eat any unslaughtered chicken. Such chicken will be Harmful" (It's the Scientific fact Jhatka (Blood Clotted Meat) is harmful for Human beings and more painful for the animals (SPINAL CORD disaster before death))
--"I command every woman to have Clothing such as to cover the whole body with the exception of the face and the hands. & that clothing should not be fitting that reveal the shape of the body. (Not exposing the skin is an advice given by the US Department of Health And Human Services (HHS) and the Centers for Disease Control and Prevention. They have sponsored a campaign called "Choose Your Cover for skin", encouraging people to protect themselves from sun's UV rays and skin cancer. The campaign's section on clothing notes that "a long-sleeved shirt and long pants with a thick weave provide the best protection.)
A man asked the Messenger: 'I used to suffer from an illness, and I took alcohol for a remedy. When alcohol was banned, I went to God's Messenger, and asked him whether I would be allowed to continue taking alcohol. No, for it (alcohol) is not a remedy, rather it is the disease itself, God's Messenger declared. A woman asked the Messenger: - 'O God's Messenger, my blood does not stop; shall I abandon the prescribed prayers?' No, you must not, for it is not the menstrual blood, it is a hemorrhage, God's Messenger replied.

Muhammad (pbuh) was nothing more or less than a human being. But he was a man with a noble mission, which was to unite humanity on the worship of ONE and ONLY ONE GOD and to teach them the way to honest and upright living based on the commands of God. He always described himself as, 'A Servant and Messenger of God,' and so indeed every action of his proclaimed to be. (EDWARD GIBBON and SIMON OCKLEY in HISTORY OF THE SARACEN EMPIRES, London, 1870, p. 54)
In the name of Allah, the Beneficent, the Merciful.
All praise is due to Allah, the Lord of the Worlds.
The Beneficent, the Merciful.
Master of the Day of Judgment.
Thee do we serve and Thee do we beseech for help.
Keep us on the right path.
The path of those upon whom Thou hast bestowed favours. Not (the path) of those upon whom Thy wrath is brought down, nor of those who go astray.[the Holy Quran- Sura # 1,Aayat 1-7] - AMEEN

"Say: we believe in God and in what has been revealed to us, and what was revealed to Abraham, Isma'il: Isaac, Jacob and The Tribes, and in (the Books) given to Moses, Jesus and the Prophets, from their Lord: We make no distinction between one and another, among them, and to God do we bow our will (in Islam).." (Qur'an, Al-Imran 3:84) "So verily with every difficulty there is relief."- [THE HOLY QURAN, 094.005]

"If Allah is your protector, none can overcome you, and if He forsakes you, then who can help you? Trust Allah and have faith in His sovereign power"[Qur'an, Al-Imran, Surah 3:160]

"Faint not nor grieve for you will overcome them if you are(indeed) believers."[ Qur'an, Aal -e-imraan-3, Aayat 139]

"And say "O my Lord! I seek refuge with Thee from the suggestions of the Evil Ones. And I seek refuge with Thee O my Lord! Lest they should come near me." [Qur'an, AL-MUMENOON 023.097-98]

"O ye who believe! Fear Allah and be with those who are true (in word and deed)." [Qur'an, Al-Tauba, 009.119]

Then which of the favors of your Lord will ye deny?
[THE HOLY QURAN, AR-RAHMAN]

Wednesday, December 23, 2009

Application for Imam post (Singapore)

From: Farook M
Date: Tue, Dec 22, 2009 at 8:05 AM
Subject: Application for Imam post (Singapore)
To: ilumseeker@gmail.com


Asslamu alikum

Applications wanted for Imam post

We are looking for an enthusiastic Tamil speaking Imam, with the following qualification
- Hafiz
- Alim
- Knowledge of current affairs
- Able to converse in English would be an added advantage

Interested applicants, please send your resume with a copy of your recent photo, qualification certificates and recording of your qirath (Quranic recitation) and speech in Mp3 format to:

Secretary
Masjid Abdul Gafoor
41 Dunlop Street
Singapore 209369

email: masjidag@superdsl.com.sg

For enquiries, please email to Secretary, Masjid Abdul Gafoor at masjidabdulgafoor@gmail.com

Note: Only short listed candidates will be notified

Please fwd to your alim contacts who may be interested. Jazakallah.

Salaam

Tuesday, November 24, 2009

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சி

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சி
துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் அமீர‌க‌த்தின் 38 ஆவ‌து தேசிய‌ தின‌ம், வேலூர் எம்.பி. எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சிக‌ளை டிச‌ம்ப‌ர் 2 ஆம் தேதி இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளி ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இம்மாபெரும் விழாவில் அமீர‌க‌த்தில் வாழ்ந்து வ‌ரும் இந்திய‌ ம‌க்க‌ளுக்குப் ப‌ல்வேறு சேவைக‌ளை ஆற்றிவ‌ரும் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, தொழில்துறை ம‌ற்றும் ம‌னித‌நேய‌ப்ப‌ணிக‌ளுக்கு உத‌வி வ‌ரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன், ச‌மூக‌ சேவைக்காக‌ இந்திய‌ க‌ம்யூனிட்டி வெல்ஃபேர் க‌மிட்டியின் க‌ன்வீன‌ர் கே. குமார் உள்ளிட்டோர் கௌர‌வ‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌ர்.
மேலும் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து.

இவ்விழாவிற்கு க‌லைப்புலி தாணு சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்கிறார். ச‌ன்டிவி க‌ல்யாண‌மாலை புக‌ழ் வாசுகி ம‌னோக‌ர‌ன் குழுவின‌ரின் ப‌ட்டிம‌ன்ற‌ம், இசைய‌மைப்பாள‌ர் க‌ங்கை அமர‌ன் த‌லைமையில் பாட்டுக்கு பாட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து. துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ குழ‌ந்தைக‌ளின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சியும் இட‌ம்பெற‌ இருக்கிற‌து.

அனும‌திச் சீட்டு உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கினுள் அனும‌திக்க‌ப்ப‌டுவ‌ர். அனும‌திச் சீட்டுக‌ளை பெற‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் சி. ஜெக‌நாத‌ன் 050 5787657 / விழாக்குழு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா 050 467 4399 / 050 51 96 433 / dubaitamilsangam@gmail.com உள்ளிட்ட‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொண்டு பெற‌லாம்.

Thursday, November 19, 2009

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளி உரை

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்.

http://islamintamil.blogspot.com/2009_08_01_archive.html

1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்...
5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன்... அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!
7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.
10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்... ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்.

Monday, November 16, 2009

Reduce your salt intake, live longer

Reduce your salt intake, live longer

16 Mar 2009, 0000 hrs IST, ANI

A reduction in salt consumption by people may help decrease the incidences of death, say researchers.

Making a presentation at the American Heart Association's 49th Annual Conference on Cardiovascular Disease Epidemiology and Prevention, University of California-San Francisco researchers said that for every gram of salt that people reduce in their diets daily, a quarter of a million fewer new heart disease cases and over 200,000 fewer deaths would occur over a decade.

The researchers revealed that the results were derived from a validated computer-simulation of heart disease among U.S. adults.

"A very modest decrease in the amount of salt -- hardly detectable in the taste of food -- can have dramatic health benefits for the US. It was a surprise to see the magnitude of the impact on the population, given the very small reductions in salt that we were modelling," said Dr. Kirsten Bibbins-Domingo, lead author of the study and an assistant professor of Medicine and of Epidemiology at the university.

The researchers say that a 3-gram-a-day reduction in salt intake could result in six percent fewer cases of new heart disease, eight percent fewer heart attacks, and three percent fewer deaths.

They said that African Americans, who are more likely to have high blood pressure and whose blood pressure may be more sensitive to salt, could derive even more health benefits.

They reckoned that among African Americans, new heart disease cases could be reduced by 10 percent, heart attacks by 13 percent, and deaths by six percent.

"It's clear that we need to lower salt intake, but individuals find it hard to make substantial cuts because most salt comes from processed foods, not from the salt shaker," Bibbins-Domingo said.

"Our study suggests that the food industry and those who regulate it could contribute substantially to the health of the nation by achieving even small reductions in the amount of salt in these processed foods," the researcher added.

Because the majority of salt in the diet comes from prepared and packaged foods, the results of the study reveal the need for regulatory changes or voluntary actions by the food industry to make achievable changes in heart health, Bibbins-Domingo said.

The researchers say that they will next try to assess the cost-effectiveness of various interventions already being used to reduce salt consumption in other countries, including industry collaborations, regulations and labelling changes.

Sunday, November 15, 2009

Muslim leaders demand reservation, implementation of Sachar report

Muslim leaders demand reservation, implementation of Sachar report

Patna: Muslim leaders from across the country and heads of some political parties shared the dais of the newly formed Muttahida Milli Mahaz group in Patna on November 11 to reiterate the demand of reservation for the Muslim community and full implementation of the Rajendra Sachar Committee recommendations.

Thousands of Muslims had thronged the Krishna Memorial Hall in the capital city of Patna to attend the Insaf Rally organized by the Mahaz.

“Muslims as a community are most backward of all communities as Sachar Committee described and Ranganath Misra Commission recommended 10% reservation for Muslims. I ask the government that when a retired chief justice of India has recommended for Muslim reservation then why it is in doubt about implementation” said ex-MP and diplomat Mr. Syed Shahabuddin.

“There has been a propaganda that Muslims cannot be given reservation as a community while other communities have benefited in the past and Indian constitution has space for that” said Shahabuddin.

“Muslims should take part in politics but not form a Muslim party. Muslims should ask the political parties before voting as to how many tickets they give to Muslims and also if they support reservation for Muslims or not. If yes then vote and if not then no votes” he added.

He also demanded that government should give constitutional status to 15-point program so that its effect would be seen on the ground.

“It was propagated that Muslims have been appeased but Sachar Committee report has disclosed the reality. We politicians are really responsible for worst condition of the community. Secular parties should come up to take on Muslims problems because country cannot progress ignoring the Muslims” said NCP leader and MP Tariq Anwer.
The daylong program began with the recitation of the glorious Quran. It was presided over by former Bihar chief minister Dr. Jagannnath Misra and conducted by Congress leader Azmi Bari.

In his welcome speech, ex-minister of Bihar Mr. Akhlaq Ahmad informed the audience about objective and purposes behind the conference.

“We demand the government to put Ranganath Misra Commission report on the floor of Parliament in coming session. For that we gathered here and it is not last but first step in this regard. We will continue until our demands are fulfilled” he said.

Mr. E.M. Abdur Rahman, president of Popular Front of India, said: “Sachar Committee identified the sorry condition of Muslims but did not prescribe the solution which is sorrowful but Misra Commission recommended reservation for Muslims which is the real solution to the problem.”

“Communal forces say that if Muslims would be given reservation, the country would be partitioned again but we say that if Muslim would be provided with reservation, it would be in the interest of the country” Rahman said.

He also said that Muslims should make all efforts for getting reservation then no party can stop them from getting their constitutional rights.

“Muslims did not come from anywhere; on the contrary they have embraced Islam here and because of their good character they ruled over India for centuries. Muslims have struggled for freedom of the country along with other communities but after the independence they have been pushed behind and ignored in all spheres of life. Therefore, reservation is necessary to uplift them and include them in national mainstream” said Akhtrul Iman, RJD MLA.

RJD MLC Ghulam Ghaus said that he appealed to Mr. Nitesh Kumar, Chief Minister of Bihar, to give 5% reservation to Muslims on the pattern of Andhra Pradesh, Kerala, Karnataka and Tamil Nadu but he refused to do so.

Former union minister Mr. Aslam Sher Khan who came from MP to attend the program said: “Bihar has played vital role in Indian politics so this program will leave positive impact all over the country. We have only two demands. First is to table Misra Commission report in Parliament and second is to implement Fatmi committee recommendations.”

“India is like a garden where various kinds of people are living. It is the responsibility of gardener to take care of all. But Muslims have been discriminated in independent India. Muslims will have to come forward to take part in government and then make all efforts to solve their problems” said LJP chief Ram Vilas Paswan.
RJD supremo Mr. Lalu Prasad assured that he is with Muslims in this movement and will offer all kinds of help, if needed. He also told president of Muttahida Milli Mahaz to hold a program in Gandhi Maidan.

“Ranganath Misra Commission was set up by government and not by Muslims so government should put it in Parliament in next parliament session” he demanded.
Former union minister M. Ali Ashraf Fatmi who was also the chairman of Fatmi Committee, said: “Fatmi Committee has recommended for spending 7000 crore for welfare of Muslims in five years. Of them 200 crore for 5 campuses of Aligarh Muslim University in Murshidabad, Kishanganj, Malappuram, Bhopal, and Pune but so far only 50 crore has been granted for Murshidabad and Malappuram”

“We demand full implementation of Fatmi Committee recommendations and reservation on the basis of Ranganath Misra Commission” he said.

Notably, Sachar Committee disclosed that Muslims are lagging behind in education and their representation in government jobs is poor. On the basis of that, Fatmi Committee recommended various programs to meet educational problems of the community and Ranganath Misra Commission recommended many schemes to solve their financial problems. The commission also recommended 10% reservation for Muslims.

It was first time in Bihar when Muslim leaders irrespective of their parties and groups came together to press government to table Ranganath Misra Commission Report in Parliament and to implement Fatmi Committee recommendations.

It is to be noted that a national convention for Muslim reservation was organized at India Islamic Cultural Centre in New Delhi under the banner of Joint Committee of Muslim Organizations for Empowerment. The convention had appealed to attendees to start this movement in their areas to make it powerful.

Mr. Akhlaq Ahmad, the ex-minister of Bihar, who attended the convention, was inspired by this initiative and decided to take this ahead. On 13 June 2009 the first meeting about this matter was held in MLA Club, Patna where Muttahida Milli Mahaz was launched. Since then several programs were held in almost all districts of the state to create awareness among Muslims about reservation.

Mr. Tanveer Hasan, the convener of the Muttahida Milli Mahaz, said: “If our demand will not be fulfilled in next parliament session we will hold agitation before parliament in Delhi.”

A large number of people from across the state as well as outside of the state attended the program. The Krishna Memorial Hall was not enough space for people who came to attend the program which sent a message for politicians that Muslims are no longer to be ignored.

Dr. Ayyub Ansari, president of Peace Party, Shoaib Iqbal, Delhi MLA, Abdul Khaliq, national secretary of LJP, LJP leader Ezhar Ahmad, Pervez Ahmad, Zafar Emam, noted journalist Mr. Saeed Naqvi and several others also spoke on the occasion.

Saturday, November 7, 2009

Chidambram's speech at Jamiet Coference

FOR THE RECORD

'It Is The Duty Of The Majority To Protect The Minority'
This is the golden rule in a democracy. Its sub-rule is that what is a minority in one place could well be the majority in another, says the home minister. 'Alas, some think that the golden rule is dispensable or that it can be applied selectively.'
P. CHIDAMBARAM

The Union Home Minister's address to the Annual Conference of the Jamiat Ulema e Hind.

Today, you hold your 30th Annual Conference and I offer you my greetings and felicitations. I also bring to you a special message of greetings from Smt. Sonia Gandhi, Congress President and Chairperson, UPA. The most learned Ulemas of India – over 10,000 – are present this morning, and it is my honour to address them. I also greet the Rector of the Darul Uloom and recognize the presence of many renowned scholars.

We know that the JUH was founded in 1919 in order to lend the support of the Muslim clergy to the anti-British movement. It was among the first organizations that stood firmly on the side of the nationalist forces and resolutely opposed the two-nation theory espoused by the Muslim League. After Independence, the JUH has focused on the promotion of the social, religious and economic interests of the Muslim community. I am therefore very happy to be able to share some thoughts with this august assembly.

Your invitation to me is a significant gesture. I take the view that it is part of my duty to reach out to every section of the people and understand their problems, their aspirations, their doubts, and their fears. It is my duty to learn about their history, their society, their evolution, and their place in contemporary India. It is also my responsibility to communicate to them the arduous nature of the task of nation-building and the duty of every citizen to contribute to making India a modern, strong, prosperous, just, humane and peaceful country.

Since the beginning of civilization, the world has always been torn by conflicts. The birth of free India was under circumstances that could only be described as traumatic. The scars of partition and of the largest migration in human history still remain. Post-Independence too, the country has witnessed numerous conflicts – caste against caste, religion against religion, language against language.

Nevertheless, we must always remember that pluralism is our inheritance. Pluralism should be our strength. It is only due to the thoughtless words and actions of some that we have, sadly, allowed our diversity to become differences.

The advent of Islam in the Indian sub-continent may have occurred during the life time of the Prophet himself. The Cheruman Juma Masjid in Kodungallur, in Kerala, is believed to be the oldest mosque in India. It was constructed in 629 A.D. by Malik Bin Deenar. According to historians, the first ship bearing Muslim travellers was seen on the Indian coast as early as 630 A.D.

The spread of Islam was largely owing to the efforts of numerous Sufis. Sufis acted as missionaries and spread the message of Islam in a manner that the laity could understand.

India had always welcomed men imbued with high moral and spiritual ideas. It was a sign of our confidence in our innate strength. India thus became the most diverse multi-racial, multi-religious and multi-lingual society in human history. That is a matter of pride, especially when we see some countries struggling to come to terms with their new-found diversity.

We should not turn our back on our history and our heritage. We should not discount or diminish our unique strength; nor view our pluralism as a source of perennial conflict.

Let me recall some facts of history. One of the earliest acts of resistance to British rule was the Vellore Mutiny. It was in 1806, a good 50 years before the First War of Independence in 1857.

During the freedom struggle, hundreds of Muslim leaders fought and suffered, shoulder to shoulder, with leaders belonging to other faiths. Who can forget the glorious contribution of Maulana Mehmoodul Hassain, popularly known as Sheikhul Hind, Maulana Qasim Nanauti, Maulana Abul Kalam Azad, Maulana Ubaidullah Sindhi, Saifuddin Kichlu, Khan Abdul Gaffar Khan, M.A. Ansari, Rafi Ahmed Kidwai and Badruddin Tyabjee and many other freedom fighters?

No less has been the contribution of Muslims in modern India. Among them were outstanding Deobandi scholars such as Maulana Hassan Ahmed Madani, Maulana Hibzur Rehman and Maulana Asad Madani. Other renowned Muslims including political leaders and scholars, actors and artists, and sportspersons and scientists, too numerous to be recounted by name, have enriched our society.

We cannot view Islam as an alien faith. Our Muslim brethren are honoured citizens of India. This is the land of your forbears; this is the land of your birth; and this is where you will live and work. It is a matter of pride for us that all major religions of the world, including Islam, exist and thrive in India.

A nation can ignore its minorities only at its peril. The golden rule in a democracy is that it is the duty of the majority to protect the minority, be it religious, racial or linguistic. It is a self-evident rule. It is a rule that is firmly rooted in the universality of human rights. Hence, we have no hesitation in invoking that rule when Tamils are denied their rights in Sri Lanka or Indian students are assaulted in Australia.

There is also a sub-rule to the golden rule. What is a minority in one place could well be the majority in another place: for example, Muslims in Jammu & Kashmir or Sikhs in Punjab. In such situations, the roles will be reversed. Although a minority nation-wide, the Muslim community in Jammu & Kashmir is bound by the golden rule as well as the tenets of Islam to protect the minority communities in that State.

Alas, some think that the golden rule is dispensable or that it can be applied selectively. It is that thought that is pernicious. It is that thought that sows the seeds of communalism.

We must deplore communalism whenever and wherever it manifests itself in word or action.

Communalism is the negation of pluralism. Communalism also opposes modernity, rejects the idea of civil society, and opposes political freedom to the people.

Three lessons flow from a true assessment of the perils of communalism. Firstly, we must strive to build a modern nation. Secondly, we must reiterate the concepts of a civil society. And thirdly, we must expand the political freedoms and ensure that every person enjoys those undeniable and inalienable freedoms.

I believe that all Indians share a common cause – to fight communalism. That cause cannot be advanced by rhetoric alone. We must confront communalism with the instruments that will defeat communalism.

Moral and spiritual values form the core of a civilization. The education system must instil these values in its citizens, especially its children. Education, however, has a larger purpose. It must empower the child. The education system must turn the wonder of the child into inquiry and the bewilderment of the adolescent into discovery. It is mathematics and science, and that fruit of a historical conjunction, English, that will equip our children to build a modern India. The implementation of Sarva Shiksha Abhiyan, especially the Scheme for Providing Quality Education in Madrasas (SPQEM) and Infrastructure Development in Minority Institutions (IDMI) and the setting up of Kasturba Gandhi Balika Vidyalayas (KGBV) provide the best assurance of quality education to Muslim children.

Civil society is based on a compact. There is an unspoken understanding among people who live together. At the core of this compact is tolerance. The sharper the differences, the greater must be the degree of tolerance. When this compact is eroded, the foundations of civil society are shaken. It is our duty to spread the message of tolerance and strengthen the strands that bind civil society.

In the final analysis, it is the assurance of political freedom, and all the rights associated with such freedom, that will defeat communalism. Equality, equal status, personal liberty, freedom of speech and expression, freedom of worship, right to education, right to work, right to property, right to information, and the other freedoms are the hallmark of a civilized nation. The Prime Minister’s 15-point programme is intended to ensure that these freedoms are enjoyed by all minority communities, including the Muslim community.

While all manifestations of communalism are deplorable, the worst kind of communalism is unleashing communal violence. Violence and violent means to achieve any objective is the anti-thesis of a civilized society governed by the rule of law. The demolition of the Babri Masjid was a manifestation of religious fanaticism and an act of extreme prejudice. Likewise, taking to the path of violence in the name of religion must also be deplored in unequivocal terms. I am glad to note that the Darul Ulloom at Deoband issued a Fatwa against terrorism on February 25, 2008 and categorically stated that “Islam rejects all kinds of unwarranted violence, breach of peace, bloodshed, killing and plunder and does not allow it in any form.” I regard that decree as a call to duty to not only Muslims but to all right thinking people. I would urge that more voices be raised, loudly and clearly, against terrorism and all forms of violence.

I belong to a political party, the Indian National Congress, that has for over a hundred years championed the cause of all the people of India without distinction of caste or creed. I represent a Government that is sworn to uphold the values of secularism, equality and democracy. I bring you the greetings and good wishes of my party and my government. I wish your deliberations success. May peace be with you and may your endeavours be blessed with success.

http://www.outlookindia.com/article.aspx?262634

Thursday, November 5, 2009

10 Reasons why SMS is the easy way out

10 Reasons why SMS is the easy way out

Bypass the spell check You don't need to worry about the correct placement of characters, spelling or about using shorthand. Everything sent over SMS becomes a part of the lingo.

How you sound is not important You don't need a voice like Morgan Freeman.
The reaction to your action isn't visible No more worrying about how violently your wife will react to your message.

Privacy is possible Privacy of conversation is guaranteed, even when you're sitting in the midst of a hundred people.

Passing the buck is easy You can use excuses like: “Something must be wrong with the network. I was wondering why you didn't show up for the party when I sent the invite text well in time.”

Creativity criteria doesn't exist You don't have to ponder over a thousand different card designs in order to send out a party invite.

Bad breath? No longer a problem! You won't need any mouthwash before this conversation.

Looks just don't matter You can communicate by SMS even while you're in a crumpled night gown. And bad hair days no longer matter either.

No need to mind the mannerisms Conscious about how your head shakes when you talk? SMS conversations will let you be yourself at all times.

Celebs are no different A smiley sent from my phone looks the same as one sent from Obama's. Now that's cool, isn't it?!

Your Brother in faith,

Javeed Iqbal Sait

saitji@yahoo.com

Monday, November 2, 2009

Online Jobs available without investment

Online Jobs available without investment**

Dear Friend,

Are you looking for Home based data entry jobs at your convenient time?

If yes! you have entered in right place.

We are providing a Home based Data Entry Jobs / Online Jobs for for Single system / Multi system without any investment.

Typing knowledge preferable.

Payment will be done on weekly basis.

Assure income proof.

For more details log on to :http://www.trueinfos.com/

Sunday, November 1, 2009

Indira: Great heroes make great mistakes

Indira: Great heroes make great mistakes


By M J Akbar

Sunday Times of India, New Delhi
Sunday, November 01, 2009


Gandhi gave us freedom, Nehru protected our independence and Indira Gandhi saved the nation. Is that too neat to be correct?



A leader, unlike a mere office-bearer, possesses the ability to define the existential challenge of the moment, and guide a generation towards a promised destination. Gandhi, Nehru and Indira were leaders, albeit on different tiers of history, each a mixture of success and failure. Gandhi's pedestal is secure from controversy but elevation tends to deflect his achievement. As Jawaharlal observed, Gandhi freed Indians from fear; freedom from the British was a consequence. Gandhi's most significant failure, by his own values, was surely that he could not free Indians from violence.



Did Gandhi insist on non-violence for both moral and tactical reasons? He was committed to the principle, of course, but did he also suspect that only an inherently violent people needed the imposition of non-violence in order to save themselves from themselves? Did he suspect that armed Indians might destroy each other in the name of caste or creed long before they identified the true enemy? Untouchability is best described as insidious and silent violence. Gandhi lost his life to the gun he could not eliminate, but his cathartic death exhausted India's surge towards civil war.



Nehru understood, better than some of his successors, that freedom was not synonymous with independence. Neo-colonization is, after all, the grant of independence on condition you do not exercise it. British India was both colony and neo-colony, the latter being the status of princely states. Nehru saw, all around him, how quickly the post-colonial world sought the sanctuary of nurseries set up by both Washington and Moscow. He believed that India's tryst with destiny was something more substantive than occasional lollipops; that India's success could not be outsourced to even a well-wisher, let alone any cynical superpower searching for allies in a Cold War. He needed to look no further than Pakistan for a narrative of dependency. He stumbled when he trusted the Third World as much as he distrusted the First. His Himalayan blunder was a calculation, or miscalculation, that China would be a partner in such a world view. He confused himself with others, and the Chinese laughed at his commitment to peace. Trust is so often the ultimate naivete.



India welcomed the realism of Indira Gandhi after the travails of Nehru's idealism. Her two decades, between 1964 and 1984, as cabinet minister and prime minister, constituted an age of violence in all its myriad complexities: communal, ethnic, linguistic, Communist, secessionist. Language riots in the south; Hindu-Muslim mayhem across the map; Naxalite insurgents lighting a Maoist prairie fire; radical trade unions; a war with Pakistan; Emergency; and, in her second term as prime minister, upheaval in Assam, explosions across the North-East and a full-fledged rebellion in Punjab led by a charismatic theocrat. Calm was not written in Mrs Gandhi's fate lines. Was Bangladesh her high point and Emergency the nadir?



India could have gone the way so many post-colonial dictatorships in Africa and Asia if the Emergency, justified by sycophants as essential to the national interest, had stratified into long-term one-person rule. Some of her closest advisers were determined that it should continue for 20 years. The government had survived the initial outburst by sending the Opposition into prison and the press into coma. Individuals and institutions were gradually co-opted into the quasi-dictatorship. But just when hope for democracy had begun to ebb, one person realized that a government without a mandate was illegitimate. That person was Mrs Gandhi. In January 1977, she shocked friend and foe by calling a general election. In March, she was shocked when the Congress was routed. Democracy has never been challenged again.



It is odd that a leader who was so adept at war in 1971 should prove so gullible in the subsequent peace process. No matter which way you look at it, the Simla Agreement of 1972 was an opportunity thrown away. The cease-fire line of 1948 should have been converted into the permanent border, sealing, thereby, the 1966 Tashkent Agreement in which India and Pakistan inked a commitment to respect this line. Mrs Gandhi held all the trumps in 1972, and lost the hand to Zulfiqar Bhutto. His successor, Zia-ul-Haq, took revenge for Bangladesh by helping foment the Punjab revolt: its apex, in 1984, saw the destruction of the Golden Temple, the assassination of Indira Gandhi, and the frenzied massacre of Sikhs. Zia-ul-Haq could not tear India apart, but he left a wound in India's heart.

Mrs Gandhi's martyrdom washed away her mistakes from public memory. But only great heroes make great mistakes.



- Appeared in Times of India - November 1, 2009


http://www.mjakbar.org/

செருப்பின் செய்தி எப்படி ?

செருப்பின் செய்தி எப்படி ?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

நான் விடுதலையடைந்து விட்டேன்.
ஆனால், எனது நாடு இன்னமும்
போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது.
செயல் குறித்தும்,
செயல்பட்டவர் குறித்தும்,
நாயகனைக் குறித்தும்,
நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும்,
குறியீடு குறித்தும்,
குறியீடான செயல் குறித்தும்
நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஆனால், எனது எளிமையான பதில் இதுதான்.
என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்,

எனது தாயகத்தை
ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால்
நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்,
என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளில்,
ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள்
தமது இன்னுயிரை இழந்தார்கள்.
கணவனை இழந்த பத்து இலட்சம் பெண்களும்,
ஐம்பது லட்சம் அனாதைகளும்,
உடல் உறுப்புகளை இழந்த லட்சக்கணக்கான மக்களும்
நிறைந்து கிடக்கும் தேசம்தான்
இன்றைய இராக்.
நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள்
அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
துருக்கியர், அசிரியர், சபியர், யாசித்
அனைவரோடும் தனது அன்றாட உணவை
அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக
நாங்கள் வாழ்ந்திருந்தோம்.
சன்னியுடன் ஷியா
ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது.
கிறிஸ்துவின் பிறந்தநாளை
கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை.
இவையனைத்தும்

பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே,
பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட
நீடித்திருந்தன.
எமது பொறுமையும், ஒற்றுமையும்
ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.
ஆனால்,
ஆக்கிரமிப்போ
சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும்
பிரித்துத் துண்டாடியது.

எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.
நான் நாயகனல்ல.
ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு.
ஒரு நிலைப்பாடு உண்டு.
எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது,
எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது,
எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது,
நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன்.
ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள்
எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.
என்னை போரிடத் தூண்டின.
இழிவுபடுத்தப்பட்ட

அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம்,
பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர்
என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்…
ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு…
எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து,
நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக்
கண்ணால் கண்டேன்.
துயருற்றவர்களின் ஓலத்தை,
அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.
ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது.
நான் பலவீனனாக உணர்ந்தேன்.
அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும்
ஒரு தொலைக்காட்சி நிருபராக,
எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால்,
தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின்
இடிபாடுகளின்
தூசியையோ
அல்லது

ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ,
நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில்,
பற்கள் நெறுநெறுக்க,
பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால்
பழிக்குப் பழி வாங்குவேனென
நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.
வாய்ப்பு வழிதேடி வந்தது.
நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும்,
ஆக்கிரமிப்பின் விளைவாகவும்
சிந்தப்பட்ட அப்பாவிகளின்
ஒவ்வொரு இரத்தத் துளிக்கும்,

வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும்,
துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும்,
பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும்,
நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான்
அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:
“நான் வீசியெறிந்த காலணி,
உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?

எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது
செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது
செருப்பை வீசியெறிந்த பொழுது,
எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை,
எனது மக்களைப் படுகொலை செய்ததை,
எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை,
அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை,
அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை,
நான் ஏற்க மறுக்கிறேன்
என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக,
நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும்,
ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும்
ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால்,
அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும்,
எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டுமொத்தத்தில்,
ஒவ்வொரு நாளும்

தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக்
காணச் சகியாத ஒரு குடிமகனின்
அணையாத மனசாட்சியை
வெளிப்படுத்தவே நான் விரும்பினேன்.
ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து
தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல்
நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது.
நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது,
அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.


எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ,
காசு, பணம் கிடைக்குமென்றோ,
இதனைச் செய்யவில்லை.
நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

-நன்றி, போராட்டம்.