Thursday, December 31, 2009

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!








குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட
மறையாய் வந்த அல்புர்கானே!
திரு மறையாய் வந்த அல் குர் ஆனே!
உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன்
அருட் கொடை தந்த ரஹ்மானே
(வேறு)
உன்றன் உள்ளே முழுதும் எண்ணங்கள் கோடி
எங்கள் உள்ளம் முழுதும் கொண்டாடும் கூடி
(வேறு)
அள்ளித்தான் குறையாது; சொல்லித்தான் முடியாது
கல்விக்கும் கேள்விக்கும் தாயகமாய் உண்டானது!
(வேறு)
கலைஞானக் கதிரே உன் வரவாலேதான் – எங்கள்
கலை ஞானக் கதிரே உன் வரவாலேதான் – இந்த
உலகடைந்த மகிமைக்கு அளவு முண்டோ? – என்றும்
நிலையாக ஒளி வீசி இருளகற்றியே – நல்ல
நெறிமேவும் வாழ்க்கைக்கு வழியாகினாய்!
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – ஞானக்
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – உன்றன்
கருவூலம் ஆராய்வுக் கரிதானதே – எங்கும்
மடம் நீங்கி மதி ஓங்கச் சுடரேற்றவே – மனம்
குணத்தோடு மணம் வீசும் மலராகுமே!
(வேறு)
உன்னை இறைவன் அளித்தான் மறையாகத்தானே
நீயே உயர்ந்து நின்றாய் கதிராக வானில்!
(வேறு)
எண்ணத்தான் இயலாது எண்ணித்தான் முடியாது
விண்ணுக்கும், மண்ணுக்கும் விதியாக வந்ததிது
(வேறு)
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – உந்தன்
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – கசடை
உடைத்தெறிந்து தூய்வாக்கி அறங்காக்குமே – எந்தத்
துறையேனும் எப்பொருளும் எக்கேள்வியும் –இங்கு
அருளார்ந்து மெய்ப் பொருளில் தெளிவாகுமே
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – உயர்
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – நல்ல
அறிவார்ந்து நேர்மையுடன் ஒழுக்கந்தரும் – உன்றன்
ஹர்பு(க்)கள் ஒவ்வொன்றும் உலகளந்திடும் – அதன்
அர்த்தங்கள் புலனுக்கு வியப்பாகுமே
(வேறு)
உந்தன் வரவால் பாலையில் வீசியது தென்றல்;
காற்றில் சுகந்தம் மணந்தது; விலையுயர்ந்தது
அரபுமண் !
(வேறு)
அகக் கண்கள் திறந்து விட்டு அஞ்ஞானம் அறுத்தெறிந்து
சுக வாழ்வில் இசையாகப் பண்ணாக வந்தானது !
(வேறு)
ஒரு மறைவான இறை மீது ஈமான் கொண்டோம் – அந்த
இறையோனின் மறை மீதில் பற்றைக் கொண்டோம் – அரும்
மறையோதும் இன்பத்தில் மனநிம்மதி – அது
புரியாது படித்தாலும் பெரும் பாக்கியமே
பெரும்மறைபொருளை நிறைத்திருந்து பெயராகினாய் – அந்த
இறை தவிர்த்துன் புதை பொருளை யாரறிவது?
ஒரு குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே – உன்னால்
குவலயத்தில் நிமிர்ந்ததெங்கள் சமுதாயமே !
(வேறு)
உன்னை ஏந்திய ஜிப்ரயீல் பெரும் பாக்கியம் அடைந்தார்
தாங்கிய ஏந்தல் முஹம்மது அரும் புனிதம் அடைந்தார்
(வேறு)
பெற்றவனின் பரிசாகப் பார் மணக்கும் மலராகப்
பெற்றிட்டோம், பேறடைந்தோம், கற்றிற்றோம்,
களிப்படைந்தோம்
(எங்கள் வாழ்வும், வளமும்…)


ஓதுங்கள் ! ஓதுங்கள் !

ஓதுவீராக ! ஓதுவீராக !
உம்மியான முஹம்மதிடம் உத்தமர்கோன் ஜிப்ரயீல்தாம்
ரம்மியமாய் எடுத்து வைத்த அடிப்படைக்கல் !
ஓதுவீராக ! ஓதுவீராக !
பேரிருளைக் கிழித்தெறிந்து உலகுயர அஹமதரைத்
தேர்ந்தெடுத்து அறிவித்த மணியோசை !
ஓதுவீராக ! ஓதுவீராக !
மணிமொழியில் வேதந்தனில் இனிய வாழ்வின் வழியாகச்
செப்பனிட்ட பாதைக்கிது ஆரம்பம் !
ஓதுங்கள் ! ஓதுங்கள் !
ஒவ்வொரு நாளும் ஓதுங்கள் !
ஒன்றிய மனத்தோடோதுங்கள் !
இத்தரை மீதில் சத்தியமென்று
முத்திரை பெற்ற மா மறையை (ஓதுங்கள்)
ஆதாரம் எவனோ அந்த ஆண்டவனே தந்த மறை
ஆதாரம் நமக்கேதென்று அறிவிப்பாய் வந்த மறை
ஆதாமும் ஹவ்வா முதலாய் வரலாற்றைச்சொல்லும் மறை
ஆதாயம் தேடித் தரவே அருட் கொடையாய் நின்ற மறை
அதன் மொழி பார்த்தால் அதன் ஒலி கேட்டால்
வறண்ட உள்ளமும் விளை நிலம் ஆகும் !
வித்தகர் நபியின் சித்தமும் வென்று
நித்தமும் பயின்ற மாமறையை ( ஓதுங்கள் )
அவகாசம் கிடைக்கும் போது அர்த்தம் பார்த்துக்
கொள்ளுங்கள்
அவகாசம் தேவையில்லை அவசியமாக ஓதுங்கள்
அர்த்தங்கள் புரியும் போது அறிவையும் பெருக்கிக்
கொள்ளுங்கள்
அறியாமல் ஓதும்போதும் அருள் மழை கிட்டும் அறியுங்கள்!
உலகினில் கேட்டால் இதற்கிணை இல்லை
தெளிவினில் பார்த்தால் முழுமையின் எல்லை
ரத்தினச் சுருக்கம்; முற்றிய விளக்கம்;
புத்தொளி வழங்கும் மாமறையை ( ஓதுங்கள் )
பிள்ளைக்குக் கல்வி முதலாய் குர்ஆன் ஓதச் செய்யுங்கள்
சொல்லுக்குச் சொல்லாய்ச் சொல்லி ஹர்பைத் திருந்தச்
செய்யுங்கள்
எல்லாமும் இறையே என்னும் கொள்கை நிலையைச்
சாற்றுங்கள்
எப்போதும் ஓதும் இன்பம் தப்பாதென்று போற்றுங்கள் !
ஒழுங்குற ஓதினால் பகுத்தறிவேறும்
நலிந்திட்ட உடலும் சுகமுடன் தேறும் !
எத்துணை சிறப்பும், எத்துணை புகழும்
பக்தியில் திளைக்கும் மாமறையை ( ஓதுங்கள் )


இகந்தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( மெட்டு - பீத்தே பீத்தே )
வான்வீதியில் வந்ததே இன்பராகம்
தேன்மொழியினில் பொழிந்தநல் அன்புவேதம் !
1.திருநாளிலே குகையிலே நபியின் காதில்
ஒளியாகவே ஜிப்ரயீல் வந்து ஊதினார்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
உருவானதே அறிவுக் கண்ணூற்றின் வேகம் !
( வான் வீதியில் )
2.இறைவார்த்தையில் இசைத்தது பக்திகீதம்
இகம் வாழவே அருளிய முக்திராகம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதத்தின் இறுதியாம் சக்திவேதம் !
( வான் வீதியில் )
3.கொடுநரகையும் அழித்திடும் இறையின்நாதம்
கடும்பாவங்கள் கரைத்திடும் கனிந்தராகம்
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
படர்ந்தேத்திடும் பாங்காகவே பண்புவேதம் !
( வான் வீதியில் )
4.குறைமேவினும் தெளிவுடன் மிகைத்தோதினும்
இறைவழங்கிடும் நன்மைக்கோர் எல்லையில்லை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
இகந் தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( வான் வீதியில் )

( க‌விஞ‌ர் ஆலிம் செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ம‌றையாத‌ காவிய‌மொன்று........... எனும் க‌விதை நூலிலிருந்து )
வெளியீடு : ம‌ணிமேக‌லைப் பிர‌சுர‌ம்

Quran is the threshod of morals

Quran is the threshod of morals
(Dr.A.P. Mohamed Ali,Phd,IPS®)

After receiving my write up on the political unity among the Muslim leaders in Tamilnadu for the success in the future Assembly elections in 2011 and local bodies’ election brother Syed Abdul Kader from Chennai ETA Star had replied in his mail that it is very difficult to find good moral muslim leaders nowadays. I ponder over the preachings of Al-Quran over the morals and I wish you to share whether Islam is lacking of any morals.

John William Draper, in his “A history of the intellectual development of Europe” says, “The Quran abounds in excellent moral suggestions and precipts…maxims of which all men must approve…rules complete in themselves, suitable for common men in any of the incidents of life.”
Will Duran in his “The Age of Faith” says “…The Mohammeden faith touched the hearts and fancies of hundred of peoples, governed their morals and moulded their lives, gave them consoling hopes and strengthening pride”.
The above writings of the foreign authors prove that Islam is the religion of ethics. Mean morals are the offshoot of ignorance, oppression and extremity of fury. Rasoolallah has been appointed by Allah as apostle for the perfection of highest morals. Man is created as Allah’s vicegerent on earth. The perfect vicegerent is he who has the power of initiative himself, but whose independent action always reflects perfectly the will of his Principal(Allah). The life of the man is probationary in the earth. The reward or punishment is given according to his actions in the earth during his probationary life. Consciousness of a future and higher life is also the hope and consolation of those whose life in this earth is full of misery and sufferings.
There are three special characteristics of man; 1) he has been embodied with vast powers to explore the earth and universe and countless things around it, 2) he has been left free to choose a way of belief or disbelief, obedience or sin, virtue or vice as he likes and 3) an innate moral sense has been placed on him by which he could discriminate between good and bad. These three factors are the accountable on which man would be called upon to explain. That time inevitably will come only after the man breathes his last.


Democratic Principles: In any other religion people’s participation in governmental affairs is not known to history. In the Bible of Mathews it is written, “Give to Caesar what is Caesar.” It implies that there is no corresponding right of the people except the obligation of payment of state revenues. But in Islamic history all the four Caliphs were electe as ‘Air-ul-Mumineen.’ Ansars and Muhajirs spoke their point of view in the Calipha’s Advisory Council. Caliph had no absolute authority to impose any tax except with the consent of the respective Council. The Caliphs were granted allowance for their services. They had not lived in luxury like any other kings, emperors, pharaohs, etc.
Brotherhood: Quran has brought the whole some change to the lives of the humanity. It teaches of the brotherhood of man and the necessity to live unitedly by closing the ranks of the tribe, race, nation, language, sex, wealth, colour, ect. All those false barriers of distinctions only create hatred. The current conflicts based on the difference of colour, linguistic troubles, sectarian violences, racial struggles,etc. Rasoolallah had said in his farewell address, “Allah has made you brethren, one to another, so are not to be divided. Social equality can be seen during the daily five times prayers and festivel and Jumma prayers. In the place of blood shed and hatred at Mecca, Rasoolallah established a movement of brotherhood and solidarity by entering into Medina between migrants and natives called Muhajins and Ansars. The conflicts between Banu and Banu Umayya and the enmity between Quraish and Muzer why not even Jew and Christians were dispelled by the advent of Monotheism and Islamic Movement and unified and reformed the entire society in the Arab world because Islam is the impartial religion. It does not discriminate between men, it does not stifle the freedom of conscience on the followers of any religions in the form of worship and preachings and it does grant protection on par with Mussalamans. A person came to Hazrat Abdullah (Ral) and asked, “Which one is the most favourite person of Allah among the People?” for which he replied, “the most favourite person of Allah ishe who affords the greatest benefits to his fellowmen.” Rasoolallah advocates his followers to rise when the corps of non-muslims were taking out in front of them. Sri Ramana Maharishi says, ‘that the society based on the equality of brotherhood alone can withstand the test of time. It establishes peace and friendship.’
Tolerance: Quran has forbidden being intolerance. There is no ground for hatred on the basis of ones religion. Allah has in numerous verses of Quran made it clear that Allah could have made the humanity to embrace Islam, but after explaining good and evil he left it to the discretion of the humanity to take which direction they wish to sail. There are many instances in which muslims were pulled up when jews complained to Rasoolallah. Once a jew was slapped by a Muslim for which he was admonished. When a delegation of the Christian from Najra came to Medina, they were lodged in the mosque of the Holy Prophet even they were allowed to perform the prayer there itself.
Generosity: The oppression is the abuse of power or authority. It runs fury in the place of pleased, behaves miserably in the place of generosity-one becomes harsh in place of behaving softly, humble and graceful. There is a “Hadith”, that there was certain youth who came to prophet thrice and begged to be advised who replied him all the times-La Taghadhale (Keep away from fury). Another “Hadith” says, “the person is not the wrestler who knocks down others, brave is one who controls himself at the time of fury”. Omar-e-Farook(rad) was a staunch Calipha of equality. When he entered Syria as Caliph it was the turn of his slave to mount on the camel and Omar was conducting the camel. Imagine the once dreaded Omar was humble even to the slave. Man who would consider himself humble to others would always be out of superiority complex and would be attempting to do better always would refrain from teasing others and would forbear anything unpleasant or insolent from others and won’t consider any retaliation in the normal course of conduct.
Forgiveness: Quran advocates the forgiveness of the guilty person. Prophet Yousuf(alai)was pushed down intothe well by his brothers. Thinking that he had died that they chocked the shirt of Yusuf with blood and they invented a story saying that a wolf had devoured him. Yakub(alai) had also believed them. When the years passed they came to know that their brother survived from their plot. Yusuf who was the king then showered bounties on them. Then they appeared before their father and repented. Yakub had also prayed to Allah entreating Allah to forgive his sons.
Poor Tax: It is ordained by Islam that 1/8 of the Zakat is meant for the poor and needy. Quran says, “You be kind to your parents. When one or both of them attain old age in your life, say not to them a word of contempt nor repel them but address them in terms of honour and respect.” Rasoolallah said, “In paradise I and caretaker of the orphan will be like these two fingers pointing to the forefinger and middle finger. Abu Huraira had said, “The person who renders any service to widows and poor persons is like a crusader.” The Rahim is derived from Rahman and whoever does not show mercy to his relatives he severs his relations from Rahman-the merciful. Islam abhors the luxury and spendthrifts. Man holds property in trust. To waste is quite wrong. Any waste may lead to our own destruction. The worship of wealth is moral deterioration.They are called the brothers of the Satans. And the Satan is to his Lord ungrateful. Do not usurp orphan’s property except improve it. Give full measures and weigh with a balance that is straight.
Amassing of wealth and living on the interest are abhorred in Islam because they fleece the human beings like leeches sucking the human and animal blood. Indulgence of corrupt practices either in trade, business and profession is condemned. It is not an individual corruption alone but it also condemns institutional corruption. Institutional corruption means entering contractual obligation with the Governmental and any other organization by paying middle men to achieve their successful contract. Such contractual agreements ultimately affect the basic structures of people’s utilities. The money obtained from the institutional contracts is stashed away in foreign banks, Switzerland, etc. Imagine it is alleged that 70 lakh crores of money is illegally deposited in foreign banks. It is done at the cost of the people and country. In corrupt action of whoever gives and takes are offenders. Whoever abets are also offenders. By accumulating such illegal money is freely used for election as party funds and spent in pastimes. Some people think by amassing such illegal wealth will be compensated of their sins by giving alms and sadaqah. The people in Chennai-Mannadi know a Muslim gentle man running iron and steal and shop squandered money along with Indian Bank officials and freely distributed the gifts to many people and institutions thereby he was called as Vallal. Later on it was brought to the notice of the public that the money he amassed was the illegal one when he was booked by CBI. So by giving freebies, a person may not be a philanthropist. The persons indulging in FERA violation and Hawla transaction and amassing the wealth are also offenders of the Country. The Rich persons who runs real estates engaging the musclemen to dispossess their tenements are also offenders of the Society. It is not permissible in Islam.
Preventing infanticide: In the days of conducting the pre-natal tests to take option for a child Quran says, “Kill not your children for fear of want: we shall provide sustenance for them as well as for you. Verily the killing of them is a great sin.” Further the choosing of the child by inducing abortion will lead into adultery and getting immune to killing diseases like AIDs. Do not feel downcast on the birth of a child on account of financial hardship, ill health or for any other reason. Do not procure abortion or killing of a child after birth which are acts of heinous barbarity, gruesome cruelty and extreme cowardice. One Sahabi enquired from Rasoolallah to explain the greatest sins. Prophet told, ‘i) Polytheism ii) Disobedience to parents and iii) killing of ones own children. “Nor take life of anyone without valid reasons.

Indulgence of woman pleasure: Islam emancipated the womenfolk by condemning the female infanticide. The advocacy of wearing outer garments to cover the body of women except face is intended not to restrict the liberty of women but to protect them from defiling and molestation. Yusuf Qardawi in his book “The lawful and the prohibited in Islam” says, ‘during the present period of ignorance of the divine guidance, the display of feminine attractions has gone to vulgar extremes. In Islamic penal law the word Zina is used both for fornication and debauchery. Both man and woman are punished for adultery and extra-marital sex in Islamic law. But in India law only woman is punished where as man is let off, which is a partial treatment. Only recently law is going to come to punish both active and passive member in adultery. Adultery is not only shameful in itself and inconsistent with any self respect or respect for others, but also invites many other evils. It destroys the very foundation of family life and may lead to various crimes.
Treatment of wife: A stable and well organized family system is a prerequisite for the birth of a righteous society. Family life begins with the sacred matrimonial connection between the husband and wife. Quran says, “Treat your wife well in life. Discharge your obligation towards her with a liberal heart and adopt a favourable and self scarifying attitude in every matter concerning your wife.” “O people listen; behave well towards women, for they are like captives. You have no right to give them harsh treatment in case when they show open disobedience. If they are guilty of disobedience, keep away from them in the bed room. If she lacks beauty of face or person or is deficient in good means, morality, good sense or skill in household affairs, hear these faults with Patience. Look to her virtues; maintain a harmonious relationship by means of generosity, liberty of mind and self-sacrifice. Similarly wives should also respect the wishes of the husbands. The wives must make husbands happy by words, deeds, behaviour and manners.
Indulgence of thefts: Quran prescribes severe punishment. Ayath 5:36 says, ‘As to the thief, male or female, cut off their hands, retribution
For their deed and exemplary punishment from Allah. Only the right hand of the thief is cut off. But if the thief repents after his crime, and amends his conduct, Allah turns to him in forgiveness.’ The Socialist Gordan Gaskell says, “Foreigners consider cutting off a hand as punishment for theft is a horrible one but even they admit that it has made Soudi Arabia with the lowest crime rate.” An article in Time magazine dated 23.03.81 observes, ‘in America every 10 seconds a home is burgled, every 7 minutes a woman is raped and every 24 minutes a murder takes place.’

Abhorrence of Drinking, Drug addiction and Gaming:
Every sports lover knows about Argentinean Madonna who is enthroned as the greatest footballer of the 20th Century. He had lost to his glory because of the narcotic addition and lost his earnings to the tune of several millions of dollars and his health deteriorated. In an interview in 1996 he said, “A man who becomes an addict to narcotic has to fight against the drug each day”.
He then added, “One day as I was in the height of intoxication due to drug addiction, my young daughter asked me to get a cup of water for her. I was lying in bed and she prodded me and asked for water. But even though I wanted to get up, I could not do so; I felt as if I was nailed to the bed. This was the result of my consuming cocaine. My daughter asked me, ‘Can’t you even give me a cup of water?’ Those words haunted me throughout later on.”
Quran in verses 5:90 prohibits intoxication and gambling and they are
the handiwork of Satan. Both are hindering of the remembrance of Allah and from prayer. Both of them ruin our family lives. Alcohol remains a potent driving force behind a large portion of all crimes and it may be named as the mother of all evils. The encyclopedia of religion and ethics says about gambling, i) pleasure is obtained at the cost of the pain to another ii) it is essentially anti-social which scars the sympathies, cultivates a hard egoism and so produces a general deterioration of character.
It condemns back-biting, ridiculing, defaming and slander, avoiding suspicion and spying. A verse 49:12 says, “Nor speak ill of each other behind their back. Would any of you like to eat the flesh of his dead brother? Nay, you would abhor it”. Verses 49:11 says “Let not some men among you laugh at other. It may be that the latter are better than the former, nor call each other by offensive nick-names”. Thus it is clear Allah strictly forbids playing with the honour of other people. A verse 24:4 says “And those who launch a charge against chaste women and produce not four witnesses to support their allegations flog them with eighty stripes”.

Al-Quran is rich in morals. We need not derive any inspiration from any other religion for that. That’s why Mahatma Gandhi in Young India dt.21.3.1929 stated that all non-muslims should read and understand Islam in the same way as he has learnt it, and then only, all would extend love towards Islam. When others eulogizes Islamic principles should we not follow?

கல்வி கரையில் !

கல்வி கரையில் !


திருச்சியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது சொந்த ஊரான கீரனூர் அருகேயிருந்து நாற்பதாண்டுகளுக்கு முன்னர் குடியேறினார் அஹ்மத் என்ற அப்பெரியவர்.

உடன் தனது மனைவி மற்றும் ஒரே மகன் அன்சாரியையும் அழைத்துச் சென்றார்.தொழில் துறையில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததன் காரணமாக எட்டாம் வகுப்புடன் தனது மகன் படிப்புக்கு முழுக்கு போட்டார். தனக்கு உதவியாக தனது மகனை வைத்துக் கொண்டார்.

அல்லாஹ்வின் பேருதவியாலும் தனக்கிருந்த அனுபவத்தின் மூலமாகவும், அயராத உழைப்பின் மூலமாகவும் கடும் போட்டிகளுக்கிடையே திருச்சி மாநகரில் முன்னணி வணிகராக உயர்ந்தார். கிடைத்த லாபத்தில் நகர் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.

தக்க சமயத்தில் தனது மகன் அன்சாரிக்கு திருமணம் செய்து வைத்தார். அன்சாரிக்கும் அல்லாஹ்வின் கருணையால் நான்கு ஆண் மக்களும், இரண்டு பெண்களும் பிறந்தனர்.

தொழில்துறையை கவனிக்க ஆட்கள் தேவை இருந்ததால் தனது பேரக்குழந்தைகளை படிக்க வைக்கவில்லை. அவர்களையும் தொழில்துறையில் இணைத்துக் கொண்டார்.

இப்படி சீராகத்தான் அஹமதுடைய வாழ்க்கை போனது. காலத்தின் கட்டாயம் இறைவனின் நாட்டப்படி அஹ்மத் இறைவனடி சேர்ந்தார்.அப்பொழுதுதான் வியாபாரத்தில் பிரச்சனைகள் உறுவானது. அவரது மகன் அன்சாரியின் படிப்பறிவின்மை காரணமாக நிர்வாகத்திறமை இலலாமலும், தனது பிள்ளைகளின் ஆடம்பரபோக்கினை கண்டிக்க முடியாமலும் தேவையற்ற கடன் வாங்கி குவித்தார்.

திடீரென அன்சாரியும் வஃபாத்தானார். பிள்ளைகளோ கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல் தடுமாறினர்.போதிய அனுபவமின்மை, படிப்பறிவின்மை காரணமாக நன்றாக சென்று கொண்டிருந்த வணிகத்தை சமாளிக்க இயலவில்லை.

இதனால் வணிக நிறுவனத்தை கடன் வழங்கிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாய சூழல். இறுதியில் தங்களது குடும்பம் அன்றாட செலவுகளுக்கே அல்லாடும் சூழல்களை உறுவாக்கி விட்டது.

போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில், அனைவரும் வியக்கும் படி கஷ்டப்பட்டு முன்னேறிய வணிக குடும்பம் இன்று தள்ளாடும் சூழ்நிலையில்.

நாம் கற்க வேண்டிய பாடம்: குழந்தைகளுக்கு அவர்களது இளமைக் காலத்தில் கல்வியினை வழங்கியிருப்பின் இன்று அதனைக் கொண்டு அவர்கள் குடும்பத்தினை சிறப்பாக நடத்த ஏதுவாய் இருந்திருக்கும் எனவே எத்தகைய சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு கல்வினை வழங்க பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது.

(இது ஒரு உண்மைச் சம்பவம். பெயர் மற்றும் இடம் மாற்றப்பட்டுள்ன)


- காஹிலா

NRI ASSOCIATIONS

NRI ASSOCIATIONS

ABU DHABI MALAYALEE SAMAJAM
P O Box 2779
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6343155
FAX NO:6338736
BHAVNA ART LOVERS' ASSOCIATION
P.O. BOX 4216
DUBAI , U.A.E.
FAX NO:04-2698844
BHARTIYA BANGIYA PARISHAD
P.O. BOX 35364
DUABI , U.A.E.
FAX NO:04-3331027
DUBAI ART LOVERS' ASSOCIATION
P.O. BOX 13989
DUBAI , U.A.E.
FAX NO:04-2241798
DUBAI KAIRALI KALA KENDRAM
P.O. BOX 27051
DUBAI , U.A.E.
FAX NO:04-2945666
DUBAI PRIYADARSHINI
Dubai Priyadarshini
DUBAI , U.A.E.
FAX NO:04-555533
ECONOMIC FORUM
POB:9200
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 04-533905, 04-533918
FAX NO:04-538204
EMIRATES INDIAN BUSINESSMEN'S CLUB
C/o Geap Group of Companies
P.O. Box 5192
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 00971-4 857506/859450
FAX NO:00971-4 857498/02-216776
EMIRATES ART CENTRE
P.O. BOX 19935
DUBAI , U.A.E.
FAX NO:04-2238576
GOAN CULTURAL SOCIETY
P.O. BOX 23120
DUBAI , U.A.E.
FAX NO:04-2062029
GUJRATI SAMAJ
P.O. BOX 26696
DUBAI , U.A.E.
FAX NO:04-3552177
GUJRATI SAMAJ
P.O. BOX 26696
DUBAI , U.A.E.
FAX NO:04-3552177
INDIA ASSOCIATION ARIZONA
P O Box 60121
PHOENIX , U.A.E.
TELEPHONE NO. +1602 961 3289
INDIA SOCIAL CENTRE
P O Box 816
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6772225, 6772690, 6655201/2
FAX NO:6786895
INDIAN CULTURAL ASSOCIATION
P.O. BOX 11034
DUBAI , U.A.E.
FAX NO:04-2062029
INDIA ASSOCIATION ARIZONA
P O Box 60121
PHOENIX , U.A.E.
TELEPHONE NO. +1602 961 3289
INDIA SOCIAL CENTRE
P O Box 816
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6772225, 6772690, 6655201/2
FAX NO:6786895
INDIAN CULTURAL ASSOCIATION
P.O. BOX 11034
DUBAI , U.A.E.
FAX NO:04-2062029
INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS
P.O. Box 1961
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 04-222869
FAX NO:04-274867
INSTITUTE OF ENGINEERS OF INDIA
P.o. Box 12109
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 04-491628(R), 05-0525321(M)
FAX NO:04-491930
INSTITUTE OF CHARTERED ACCOUNTS
P O Box 4525
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 261715
FAX NO:261716
INDIAN LADIES' ASSOCIATION
P O Box 36600
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6421520
FAX NO:6421623
INDIAN SOCIAL CENTRE
AL AIN
P O Box 1620
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 03-642080
FAX NO:03-516416
INDIAN ASSOCIATION SHARJAH
P.O. BOX 342 Dubai
SHARJAH , U.A.E.
TELEPHONE NO. 04-3971269
INDIAN PHARMACEUTICAL ASSOCIATION
P O Box 43686
ABU DHABI , U.A.E.
FAX NO:318776
INDIAN ASSOCIATION DUBAI
P.O. BOX 342
DUBAI , U.A.E.
FAX NO:04-3971269
INDIA SOCIAL CENTRE
P.O. Box 816
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 772355/315449
FAX NO:00971-2 786895
INDIAN RELIEF COMMITTEE
DUBAI
P.O. BOX 50743
DUBAI , U.A.E.
FAX NO:04-3593159
INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF INDIA
P.O. Box 898
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 261716
FAX NO:00971-2 261715
INSTITUTE OF ENGINEERS OF INDIA
P.O. Box 43089
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 334936
FAX NO:00971-2 325646
INDIAN BUSINESS/PROFESSIONAL GROUP
P.O. Box 316
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 335569
FAX NO:00971-2 315559
INDIAN ASSOCIATION
P.O. Box 324
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 00971-4 852152/267225
FAX NO:00971-4 25620
INDIAN SOCIAL CLUB
FUJAIRAH
P.O. BOX 1099
FUJAIRAH , U.A.E.
FAX NO:09-2226538
INDIAN ASSOCIATION
UMM AL QUWAIN
P.O. BOX 672
UAQ , U.A.E.
FAX NO:06-7655571
INDIAN RELIEF COMMITTEE
RAS AL KHAIMAH
P.O. BOX 22448
RAK , U.A.E.
FAX NO:07-2285125
INDIAN SOCIAL & CULTURAL CLUB
KALBA
P.O. BOX 11422
KALBA , U.A.E.
FAX NO:09-2779357
INDIAN ART SOCIETY
P.O. BOX 50241
DUBAI , U.A.E.
FAX NO:04-2994989
INDIAN MUSLIM FORUM
P. O. Box 46590
U.A.E.
TELEPHONE NO. 63100251/050-4462781
FAX NO:216904
INSTITUTE OF ENGINEERS
P. O. Box 43089
U.A.E.
TELEPHONE NO. 7032706
FAX NO:325646
INDIAN ISLAMIC CENTRE
Post Box 4190
U.A.E.
TELEPHONE NO. 6724488/6761514/6322063
FAX NO:6760570
KANRATAKA SANGH
P.O. BOX 9081
DUBAI , U.A.E.
FAX NO:04-3482988
KERALA SOCIAL CENTRE
P O Box 3584
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 4481133
FAX NO:6314455
MANGLORE KONKANS
P.O. BOX 7432
DUBAI , U.A.E.
FAX NO:04-3351189
MAHARASHTRA MANDAL
P.O. BOX 34297
DUBAI , U.A.E.
FAX NO:04-2643786
MANGLORE KONKANS
P.O. BOX 7432
DXB , U.A.E.
FAX NO:04-3351189
OVERSEAS INDIAN ECONOMIC FORUM
P.O. Box 13094,Dubai AND
International Traders (ME)
PO Box 6
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 00971-4 525398
FAX NO:00971-4 521294
RASMAYI ANDHRA CULTURAL FORUM
P.O. BOX 1928
DUBAI , U.A.E.
FAX NO:04-2210211
RAS-AL KHAIMAH
P Box:4943
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 07-227381,07-225211
FAX NO:07-225346
SHARJAH
POB;2324,
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 06-358845(O), 06-356805
SUR HINDOL
P.O. BOX 52476
DUBAI , U.A.E.
FAX NO:04-531178
TAMIL LADIES ASSOCIATION
P.O. BOX 22804
DUBAI , U.A.E.
FAX NO:04-3975598
TAMIL NADU CULTURAL ASSOCIATION
P.O. BOX 5826
DUBAI , U.A.E.
FAX NO:04-3434466
TAMIL NADU CULTURAL ASSOCIATION
P.O. BOX 5826
DUBAI , U.A.E.
FAX NO:04-3434466
THE INDIAN AMERICAN NURESE ASSOCIATION
270 First Ave
Suite 5D
NEW YORK , U.A.E.
POSTAL CODE: NY 10009
TELEPHONE NO. 212 529 8834
FAX NO:908 577 0728
UMM-AL-QUWAIN
P Box:672
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 06-740999/e275
FAX NO:06-655571

பாபரி மஜ்ஜித் இடிப்பு தந்த படிப்பினை

பாபரி மஜ்ஜித் இடிப்பு தந்த படிப்பினை
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)
உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தி என்ற நகரம். அங்கே கோவிலும்-பள்ளிவாசலும் அருகருகே அமைந்து மக்கள் இந்துக்களும்-முஸ்லிம்களும் தங்கள்-தங்கள் வழிபாடுகளை அமைதியுடன் செயல் படுத்தி வந்தனர். அங்கே உள்ளவர்கள் யாரும் பாபரி மஜ்ஜித் இடிக்க வேண்டும் என்று குரல் எழுப்பவில்லை. இதேபோன்று உத்திரபிரதேசம் மதுராவிலும் கோவிலிலும்-பள்ளிவாசலிலும் தங்கள் வழிபாடுகளை நடத்தி வந்தனர் என்பது உண்மையே. ஆனால் இரண்டாம் உலகப்போரில் இந்திய சுதந்திரக் காற்று வேகமாக வீச ஆரம்பித்ததும்-ஆங்கிலேயர் பிரித்தாலும் கொள்கையினை கையிலெடுத்து இரண்டு சமுதாயத்தினையும் பிரித்தால் தான் நாம் இந்தியாவில் இனிமேலும் ஆட்சி செய்ய முடியுமென்று இந்துத்துத்துவா தலைவர்களுக்கு தூபம் போட்டு எழுப்பப்பட்ட கோசம் தான் பாபரி மஜ்ஜித் ராமர் பிறந்த ப+மி என்ற கோசம். அந்தக் கோசம் 1936ஆம் ஆண்டுக்கு முன்பில்லை என்பதுதான் உண்மை.
இந்துக்களும்-முஸ்லிம்களும் வாழும் ஊர்களில் அண்ணன்-தம்பிகளாக, அக்காள்-தங்கைகளாக ஒற்றுமையுடன் வாழ்வதினைப் பார்க்கிறோம். பின்பு ஏன் இந்த மதவெறி பிடித்த கோசங்கள். பாக்கிஸ்தானை ஜின்னா விரும்பியா பிரித்துக் கேட்டார?;. அந்தக் கோரிக்கைக்கு அவரை இந்துத்துவா வெறியர்கள் அல்லவா தள்ளினார்கள், என்று சொன்னது யார்? மத்தியில் பி.ஜே.பி. கட்சியின் 1998 அரசில் முக்கிய மந்திரியாகத் திகழ்ந்த முன்னாள் ராணுவ ஜெனரல் ஜஸ்வன்ட் சிங் தான் அவர். உண்மையினைச் சொன்னால் எவருக்கும் பிடிக்குமா? ஆகவே தான் பி.ஜே.பியிலிருந்து அத்வானி சொன்னது போல, ‘மிகவும் மகிழ்ச்சியில்லாத’ முடிவாக இருந்தாலும் ஜஸ்வன்ட் சிங் வெளியேற்றப் பட்டார்.
இந்திய சுதந்திரம் அடைந்தபோது மத ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியினை மதவெறிகொண்ட கோட்ஸேயின் துப்பாக்கி குண்டுக்கு பலியாக்கினார்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.
இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு பின்பு, பாபரி பிரச்சினைக்கு வித்திட்ட சம்பவம் தான் 1949 ஆம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிருந்தபோது பாபரி மஜ்ஜித் வளாகத்தில் ராமர் சிலையினை வைத்து வழிபட வழிவகை செய்தது.
ஓவ்வொரு தேர்தல் வரும் போதும் பாபரி மஜ்ஜித் பிரச்சனையினை பாரதிய ஜனசங் கையிலெடுத்து போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெறமுடியவில்லை.
அவர்கள் வெற்றி பெற்றது எப்போது? 1986 ஆம் ஆண்டு பாபரி மஜ்ஜித் வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கோவிலுக்குப் போட்டிருந்த ப+ட்டினை திறந்து விட்டதும், 1987 ஆம் ஆண்டு சிலன்யாஸ் என்ற ப+ஜைக்கு அனுமதியளித்ததும் யார்? ராஜீவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் அரசு தானே! 1992 ஆம் ஆண்டு மஜ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் கொடுக்கப்பட்டது.
இவ்வளவும் இடிக்கும்போது மத்தியில் யார் ஆட்சி இருந்தது? திரு. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி.
உ.பி. மாநிலத்தில் திரு. முலாயம் சிங் தலைமையிலான சமஜ்வாடி கட்சி 1990 ஆம் ஆண்டு ஆட்சி செய்தபோது பாபரி மஜ்ஜித் இடிக்க முழு முயற்சியுடன் வந்த கர்சேவக்யினரை தடுத்ததோடு மட்டுமல்லாமல், அத்து மீறிய 16 சேவகர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ஆளானார்கள். ஆகவே தான் அந்த ஆண்டு அவர்களால் முடியவில்லை. 1992 ஆம் ஆண்டு மாநிலத்தில் பி.ஜே.பி ஆட்சி திரு. கல்யாண்சிங் தலைமையில் ஆண்டபோது மத்தியில் காரிய மவுனத்திற்கு பெயர்போன திரு. நரசிம்மராவ் ஆட்சி நடைபெற்றது.
அவருக்கு தெரியாமல் மஜ்ஜித் இடிக்கப்பட்டிருக்கும் என எண்ணுகிறீர்களா?
புhரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வதாஸ் சொல்கிறார், ‘1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி தான் பிரதமரை சந்தித்ததாகவும், கர்சேவக்வினை ஒன்று திரட்டி என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர் கேட்டதாகவும், அதற்கு விஸ்வதாஸ் மஜ்ஜிதை இடிக்கப்போகிறோம், என்று சொன்னதாவும், அதேபோன்று மஜ்ஜித் இடிக்கும் வரை தான் அங்கு இருந்ததாகவும், அந்தக் குற்றத்திற்காக தான் தூக்குத்தண்டனைக்கும் தயார்’ என்று ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். ஆகவே திரு. நரசிம்மராவிற்கு தெரியாமல் இது நடந்திருக்கிறது என்றால் ஐ.பி, ரா போன்ற உளவுத்துறைகள் எதற்காக நாட்டில் இருக்கின்றன?. லட்சக்கணக்கான கர்சேவக் எல்லை மீறினால் என்னவாகும் என்று சாதாரண மனிதனுக்குக் கூட ஊகிக்க முடியும் ஆனால் அன்றைய பிரதமருக்குத் தெரியாது என்று இன்றைய காங்கிரஸ் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
அடுத்த சமாளிப்பு, மாநில முதல்வர் திரு. கல்யாண்சிங் ராணுவத்தினை பயன்படுத்தி கர்சேவக்களின் வெறியாட்டத்தினை தடுத்து நிறுத்துங்கள் என்று கேட்கவில்லையென்று. அவ்வாறு ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், மத்தியில் திரு. வாஜ்பாய் தலைமையிலான என்.பி.ஏ அரசு குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்திற்கு பின்பு முஸ்லிம்கள் மோடி அரசாங்க துணையுடன் வேட்டையாடப்பட்டது என்று அன்றைய மாநில உளவுத்துறை அடிசனல் டி.ஜி. ஸ்ரீகுமார் குற்றம் சாட்டியபோது பி.ஜே.பி. மாநில மோடி அரசு எங்களுக்கு மதக்கலவரத்தை அடக்க ராணுவத்தினை அனுப்ப கோரவில்லை ஆகவே 2000முஸ்லிம்களுக்கு மேல் அங்கு கொல்லப்பட்டனர் என்றால் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் அது பொன்குடம்’ என்று. ஆகவே லட்சக் கணக்கான கர்சேவக்கினை நாடு முழுவதும் ரதயாத்திரை மூலம் வெறியூட்டி அயோத்தியில் ஒன்று கூட்டி கடைசி நாள் வரை மிகவும் ஆக்கிரோசமான மஜ்ஜிதிற்கு எதிரான உரை நிகழ்த்தி விட்டு ‘ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக் கொள்வாளாம் பாப்பா’ என்று பாபரி மஜ்ஜித் இடிப்பு சதி திரு. வாஜ்பாயிக்கும், திரு. நரசிம்மராவிற்கும் தெரியாது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இதற்கு முன்பு மாநில அரசுகளை மத்திய அரசாங்கம் பல்வேறு காரணங்கள் சொல்லி கலைக்கவில்லையா? 1967ல் மேற்கு வங்கத்தில் முதல் கம்ய+னிஸ்ட் அரசு, கர்னாடகத்தில் பொம்மையிலான அரசு, ஜார்கண்ட்டில் பாரதிய ஜனதா அரசு, இவ்வளவுக்கும் ஏன் தமிழ்நாட்டில் தி.மு.க, அ..இ.அ.த.pமுக அரசுகள் எல்லாம் ஏதோ ஒரு நொண்டி சாக்கினைச் சொல்லியாவது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவில்லையா? இவ்வளவு ஏன் மேற்கு வங்களத்தில் நாக்சலைட் தீவிரவாதிகள் அத்துமீறல் என்றும் கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்ற மம்தா பானர்ஜியின் அரசியல் கோரிக்கையினை மறைமுகமாக மத்திய அரசு ஆதரித்து தருணம் பார்க்கவில்லையா? அதேபோன்று அன்றைய கல்யான்சிங் அரசினை நரசிம்மராவ் டிஸ்மிஸ் செய்திருந்தால் புராதானச் சின்னமான பாபரி மஜ்ஜித் இடிக்கப் பட்டிருக்குமா? அல்லது அதற்குப்பிறகாவது ஓடிய மதக்கலவரத்தினால் ஓடிய ரத்த ஆறு ஓடியிருக்குமா?
இவ்வளவு நடந்த பின்னரும் நீதியரசர் லிபர்கான் அறிக்கை 17ஆண்டுகளுக்கு பின்பு வந்த பின்னரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் பகத் சொல்கிறார், “பாபரி மஜ்ஜித் இடிப்பு தங்களுக்கு வருத்தம் தரவில்லை” என்று.. உலகத்தின் வல்லரசு அமெரிக்காவினை தலைமையேற்று நடத்தித்தருகிற பாரக் ஒபாமா தனக்கு முன்மாதிரி, மகாத்மா காந்திதான் என்று சொன்ன அந்த மகாத்மாவினையே கொன்ற ஆர்.எஸ்.எஸ். வேறியன் கோட்சேயினை மாவீரன் என்று போற்றும் இயக்கத்திற்கு தலைமையேற்று நடத்துவர் தானே அவர். ஆகவே தான் அவரிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
புp.ஜே.பியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் என்ன சொல்கிறார், ‘பாபரி மஜ்ஜித் ஒரு கட்டிடம் தான் பள்ளிவாசல் என்று சொல்ல முடியாது’ என்று.
அப்படி ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் பூஜை செய்யாத வேலூர் ஜலகண்டநாதர் கோவில் போன்று அ+யிரக்கணக்கான கோயில்களையும் இடிக்க அவர் அனுமதிப்பாரா?
ஆகவே மேலே சொன்னவர்கள் அமைப்பினைப்பினரின் கூற்றை வைத்து கீழ்க்கண்ட படிப்பினை தெரிந்து கொள்ளலாம்:
இந்துத்துவா அமைப்பினர் டாக்டர். அம்பேத்கார ;தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு சமதர்ம-சாதிமத வேற்றுமையில்லாத சமுத்துவ சமுதாயத்தினை இந்தியா அடைய விரும்பவில்லை.
புhபரி மஜ்ஜித் இடிப்பு இந்துத்துவா அமைப்பினர் வெற்றியாகக் கொண்டாடுவது-மத சகிப்புத்தன்மைக்கு வைத்த வெடிகுண்டு.
முஸ்லிம்கள்-கிறிஸ்துவ மைனாரிட்டிகளை சில காலங்களுக்கு முன்பு இருந்த தென் ஆப்பிரிக்கா நிறவெறி செயல்களான தனிரோடு, தனி பள்ளிக்கூடம், தனி வாகனம், தனி மார்க்கட் போன்று தனினைப் படுத்தி அவர்களுக்கு சட்டத்தில் அளிக்கப் பட்ட உரிமைகளை மறுக்கும் முயற்சி.
வுpலங்குகளுக்குக்கூட தீங்கு செய்யக்கூடாது என்று போதித்துப் போற்றப் படுகிற புத்தர், மகாவீரர் போன்றோர் பிறந்த மண்ணில், சகிப்புத் தன்னை- மத ஒற்றுமை போதிக்கும் பகவத் கீதையினை புறக்கணிக்கும் செயல் மட்டுமல்ல மாற்றுக் கருத்துகளுக்கு அடிக்கும் சாவு மணியென்றால் மறுக்க முடியுமா? இந்துத்துத்துவா நண்பர்களால்.

5) ஹிந்துத்துவா கொள்கைகள் கொண்ட கட்சிகளை மறுபடியும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அரியணையேற அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் யானை தன் தலையில் தானே மண்ணை எடுத்துப் போடும் செயலாகும். ஆகவே மதசார்பற்ற கட்சிகள் தங்கள் கருத்து வேற்றுமை-தனிபட்ட விருப்பு-வெறுப்பினை தள்ளி வைத்து விட்டு-1998 ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் மத்தியில் ஹிந்துத்துவா தங்கள் சுயநலத்திற்காக ஆதரித்து அந்த மந்திரி சபையில் சேர்ந்தது போல ஆதரவு கொடுக்காது-இனியாவது கூட்டணி அமைத்து ஹிந்துத்துவா வெறியர்களை தலை தூக்க விடக்கூடாது.

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010


கடந்த 10.12.09 அன்று துபாயில் நடைபெற்ற அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுகூட்டத்தில்,
அமைப்பின் 8-ஆம் ஆண்டு விழாவினையும், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையும் வருகிற
12.02.2010 அன்று “தமிழரங்கம்-2010’ என்று கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கனிமொழி எம்.பி, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை
அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, திராவிடர்கழகத்தலைவர் திரு கி.வீரமணி, நாகை நாடளுமன்ற
உறுப்பினர் திரு ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரை அழைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
பிரபல திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், பின்னனி பாடகர்கள் பங்குபெறும்
இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும் என அவ்வமைப்பின் தலைவர் திரு அமுதரசன் தெரிவித்தார்.
மேலும் விபரங்கட்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு சலீம் அவர்களை (050-4557513)
தொடர்புகொள்ளவும்

செய்திகள் வரவேற்கப்படுகின்றன

செய்திகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்சிகரம்.காம் கடந்த 3 ஆண்டுகளாக இணையதளத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இதில் அனைத்து துறகைள் சம்பந்தமான செய்திகளும் கொடுக்கப்படுகிறது.

எனவே தங்களுடைய நிறுவனங்கள், தங்களின் சுற்றுப்புறம் தொடர்பான செய்திகளும் வரேவற்கப்படுகின்றன. செய்திகளை இமெயில் மூலம் அனுப்பவும்.

நன்றி

இப்படிக்கு,
தமிழ்சிகரம் குழு.
tamilsigaram@yahoo.com

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். இவரா இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் சார்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம், புஹாரி ஷரீஃப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நூல்களை அழகு தமிழில், எளிய நடையில் மொழிபெயர்த்தவர் என எண்ணத் தோன்றும். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் துபையில் பணிபுரிந்து வந்த இவர் ஜுலை மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார்.

சமுதாயத்தில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள இவரது சமுதாயப் பணிகளை அறிந்து கொள்ள அவருடன் ஒரு சந்திப்பு :


கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்

பதில் : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி


கே : தங்களது இளமைப் பருவம் பற்றி….. ?

பதில் : நான் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தேன். பெற்றோர் பெயர் ஹாஜி எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் – ஹசீனாபி. எனது பெற்றோருக்கு 9 வது கடைக்குட்டியாக பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் 3 அக்கா, 5 அண்ணன்கள். 1970 ல் எனது தாயார் வஃபாத்தானார்.


கே : தங்களது கல்வி குறித்து ?


பதில் : காஞ்சிபுரத்தில் தர்கா பள்ளி,, டிஆர்.எஸ். பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்தேன். பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி.யை மார்ககக் கல்விக்காகத் துறந்தேன்.


பின்னர் வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1972 முதல் 1979 ஆம் ஆண்டு வரை ஓதி ஆலிம் ஸனது பட்டம் பெற்றேன்.


கே : பள்ளிக்கல்வியில் சிறப்புறக் கற்றிருந்த தாங்கள் அரபிக் கல்லூரியில் சேரக் காரணம் ?

பதில் : பிறை, முஸ்லிம் முரசு உள்ளிட்ட இதழ்களில் மார்க்க அறிஞர்கள் அப்துல் வஹ்ஹாப் சாஹிப், மஹதி, அல் ஃபத்தாஹ் பாகவி உள்ளிட்டோரின் கட்டுரைகள் என்னை அரபிக்கல்லூரியிலும், மேலும் வட மாநிலங்களில் உள்ள தேவ்பந்த் போன்ற மார்க்க்க் கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே 1972 ஆம் ஆண்டு வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த ஆண்டே அதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நீதிபதி மு.மு. இஸ்மாயில், எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முஸ்லிம் முரசு மாத இதழ் வெள்ளிவிழாவினையொட்டி நடத்திய ’நான் விரும்பும் தலைவர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நான் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் குறித்து எழுதிய கட்டுரைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் பரிசு ஏ.கே.அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் குறித்து எழுதிய சாயபு மரைக்காயருக்கு கிடைத்தது.

மதரஸாவில் படிக்கும் போது அதிகம் படிக்காமல் தேர்வுக்கு சில நாட்கள் முன்னர் படித்து விட்டு முதல் மாணவனாக தேர்வு பெறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. எனது அரபு மொழித் திறனுக்கு ஆசிரியர் சையது முஹம்மது மதனி அவர்கள் முக்கியக் காரணமானவர்.

மதரஸா பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தேன்.

அப்போதைய குடும்பச் சூழல் காரணமாக வட மாநிலங்களுக்கு சென்று படிக்க இயலவில்லை.

1990 ல் அலிகர் முஸ்லிம் பல்கலையில் எம்.ஏ. சேர்ந்த நான் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புக் கலவரம் காரணமாக அதனைத் தொடர இயலவில்லை.

அப்ஸலுல் உலமா படிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக எம்.ஏ. நவீன அரபி இலக்கியத்தில் 2007 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டம் பெற்றேன்.

தற்பொழுது எம்.ஃபில் பட்டப்படிப்புக்காக இஸ்லாமியப் பொருளாதாரம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எனும் தலைப்பில் பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பிக்க உள்ளேன்.

அதனைத் தொடர்ந்து பி.எச்.டி. படிப்பினை சென்னை அல்லது உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இறைவன் நாடினால் மேற்கொள்ள உள்ளேன்.


கே : தங்களது பணி குறித்து ?

பதில் : அரபுக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து மவ்லானா அபுல் ஹஸன் அலீ நத்வி அவர்களின் இஸ்லாமியப் பணியால் கவரப்பட்டு அவர் ஆரம்பித்த சகோதரத்துவ செய்தி ( Message of Humanity ) எனும் அமைப்பில் ஈடுபட நினைத்தேன். ஆனால் மவ்லானாவின் முக்கிய நண்பர்கள் சிலர் வஃபாத்தானதைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்பாடின்றி முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியக் களம் கிடைக்காததைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு மவ்லானா ஜமீல் அஹமத் அவர்களைச் சந்தித்து இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டில் ( ஐ.எஃப்.டி.) இணைந்தேன்.

1977 ல் அரபுக் கல்லூரியில் பயிலும் போதே மவ்லானா ஜமீல் சாஹிப் அவர்களின் வேண்டுகோளின்படி மவ்லானா மௌதூதி அவர்களால் உர்தூ மொழியில் எழுதப்பட்ட நூல் அகிலத்தலைவரின் அடிப்படைப்பணி எனும் தலைப்பில் தமிழில் எனது முதல் நூலாக மொழி பெயர்க்கப்பட்டது. எனினும் இந்நூல் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

பிறகு தீண்டாமை எனும் சிறு நூலை தமிழில் மொழிபெயர்த்தேன். தொடர்ந்து சுமார் 40 நூல்களை தமிழில் மொழிபெயர்த்தேன். அவற்றில் சுமார் 25 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.எஃப்.டி.யில் பணிபுரிந்ததன் காரணமாக சகோதர சமுதாய மக்கள், கம்யூனிசச் சித்தாந்த்தில் ஈடுபாடுடையவர்கள் என பல தரப்பு மக்களிடமும் இஸ்லாத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது என பயிற்சி பெற்றேன். இதற்கு வேலூர் இஸ்லாமிய செண்டரிலும், ஐ.எஃப்.டியிலும் நான் ஆற்றிய பணி மிகவும் உறுதுணையாய் இருந்தது.

1981-82 மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த காலம். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பேட்டி கண்டு கண்ணுக்குப் புலப்படாத இஸ்லாமிக் செண்டர் எனும் தலைப்பில் இருமுறை வெளியிட்டது அதன் பணிகளுக்கு மேலும் அங்கீகாரம் கிடைத்தது போலாகியது.

அதனைத்தொடர்ந்து திருக்குர்ஆனின் தமிழாக்கப்பணியினை ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. 1 முதல் 37 ஆம் அத்தியாயம் வரை மவ்லவி குத்புதீன் பாகவியும், 38 முதல் அம்ம ஜூஸ்வு வரை நானும் மொழிபெயர்த்தேன்.

இப்பணியில் பி.எஸ்.அலாவுதீன் மன்பஈ, ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத், சையது முஹம்மது மதனி, மஸ்தான் அலி உமரி உள்ளிட்ட பலர் ஒத்துழைத்ததை மறக்கவியலாது.

1990 ஆம் ஆண்டு திருக்குர் ஆன் முதல் தொகுதியும், 1991 ஆம் திருக்குர் ஆன் இரண்டாம் தொகுதியும் வெளியிடப்பட்டது.

எனது ஒப்பந்தப்படி 1986 டிசம்பர் 31 உடன் ஐ.எஃப்.டி. பணி நிறைவுற்றது.


இதன் பின்னர்


ஃபுர்கான் ப்ப்ளிகேஷன்ஸ்க்காக முஸ்லிம்கள் முன்னேறாத்து ஏன் ?, அஹ்மத் தீதாத் அவர்களின் நபிகள் நாயகம் பற்றி பைபிள், முஹம்மது பின் ஜமீலின் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், ஹதீஸ் கலை உள்ளிட்ட ஐந்து நூல்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். இப்பணி 1987 முதல் 1989 வரை.

அதனைத் தொடர்ந்து

1989 – 90 வரை ஈகா தியேட்டர் பின்னால் உள்ள எம்.இ.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரபி மொழி ஆசிரியர் பணி செய்தேன்.

பின்னர் 91ல் இந்தியா பைத்துஸ் ஸகாத்தில் ஆறு மாதம் பணியாற்றினேன்.


மேலும்

1984 முதல் 86 வரை சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரில் திருக்குர் ஆன் விரிவுரையாற்றும் பணி

1987 முதல் 90 வரை காயல்பட்டணத்தில் ரமளான் திருக்குர் ஆன் விளக்கவுரை



கே : தங்களது வெளிநாட்டுப் பயணம் குறித்து ?


1991 டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஸ்ட்டீஸ் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டேன்.

விமானப் பயணம் புதிதாக இருந்த்தால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட்து. இருப்பினும் ஸாஹிரா கல்லூரியில் 5000 பேர் பங்கேற்ற நிகழ்வில் உரை நிகழ்த்தினேன். அதனைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மாளிகாவத்தெ பிரதிபாஹாலில் நடைபெற்றது. இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் மீடியாவும் இஸ்லாமும் குறித்தும் உரை நிகழ்த்தினேன்.

அப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு தொடர்ந்து பாபர்மசூதி விவகாரத்தில் மந்தப் போக்கைக் கடைப்பிடித்தால் ஓராண்டில் அது இடிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை எனத் தெரிவித்தேன். ஆனால் அடுத்த ஆண்டே அது இடிக்கப்பட்டது பெரும் துரதிருஷ்டம்.

சவுதி அரேபியா :

1992 ஆம் ஆண்டு அல் அஹ்ஸா பகுதியில் உள்ள ஹுபூஃப் இஸ்லாமிக் சென்டரில் முதல் பொறுப்பாளராகப் பணிபுரிந்தேன்.

அறையில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபொழுது அரபி மற்றும் ஆங்கில மொழியில் இந்துத் தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியினைத் தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு இலங்கையில் பேசிய பேச்சினை நினைவு கூர்ந்தேன்.

அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் நடைபெற்ற கண்டனக் கூட்ட்த்தில் உர்தூ மொழியில் கடுமையான உரை நிகழ்த்தினேன். இது குறித்து பலரும் கவலை கொண்டனர். தான் காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணினர். எனினும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட சவுதி காவல்துறை அவ்வாறு எதுவும் செய்யவில்லை.





கே : வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ?


1995 ஆம் ஆண்டு மீண்டும் சென்னையில். ரஹ்மத் டிரஸ்டின் புஹாரி ஷரீஃப் மொழிபெயர்ப்புப் பணி, அதனைத் தொடர்ந்து புலூகுல் மரம் என்ற பிக்ஹ் நூல் தயாரிப்புப் பணி


கே : மீண்டும் வெளிநாட்டுப் பயணம் ?


ப 1999 ஆம் ஆண்டு அபுதாபியில் இஸ்லாமிய விவகாரத்துறையில் மூன்று ஆண்டுகள் பணி.

2003 ஆம் ஆண்டு முதல் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தில் பணி. அப்பொழுது இரு கண்கள் அறுவை சிகிச்சை, இரு பெண்களது திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பணிகளுக்கு ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ETA HRM Executive Director எம். அக்பர் கான் உள்ளிட்டோரது உதவிகள் மறக்கமுடியாதவை.

துபாயில் கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வுகள் முக்கியமானவை.



கே : தங்களது மறக்கவியலாத நிகழ்வுகள் குறித்து ?


பதில் :

எனது 9 வது வயதில் 1965 ல் சீன ஆக்ரமிப்பின் போது சீனாவை எதிர்த்தும், நமது இந்திய ராணுவத்தின் வீரத்தைப் பாராட்டியும் பொதுமக்களின் ஆதரவை நமது நாட்டுக்காகத்திரட்டும் வகையிலும் நான் காஞ்சிபுரம் சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் பல்லாயிரம் மக்களிடையே ஆற்றிய ஆவேச உரை என்னால் மறக்க முடியாத ஒன்று.

கோகலே ஹாலில் மது ஒழிப்பு குறித்து துக்ளக் ஆசிரியர் சோவுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, 1984-85 ல் சென்னை எல்.எல்.ஏ. அரங்கில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, ஐ.எஃப்.டி. சார்பில் 1995 ல் பெரியார் திடலில் நான் தலைமை வகித்த நிகழ்வில் குமரி அனந்தன் பங்கேற்றது,

காஞ்சிபுரம் சமய நண்பர்கள் வட்டத்தின் சார்பில் ஆண்டர்சன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் எனது தமிழாற்றல் கண்டு வியந்தவர்கள் என்னை வருங்காலத்தில் தமிழக முதல்வராகக் கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலையுடன் பங்குபெறும் வாய்ப்பு. பல்சமய நிகழ்வுகளில் இஸ்லாம் ஒரு மதமல்ல அது ஒரு வாழ்க்கை நெறி என்பதனை மிகவும் உறுதியுடன் கூறியது அனைவரையும் சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஐக்கிய ஆலயத்தில் இஸ்லாம் குறித்து பாதிரியார்களுக்கு வகுப்பு எடுத்தேன்.

டெல்லிக்கு பின்னர் பணியின் நிமித்தமாக சென்றபொழுது அங்குள்ள பாதிரியார்களது தலைமை அலுவலகத்துக்கு சென்ற பொழுது என்னிடம் இஸ்லாம் குறித்து பாடம் படித்த பாதிரியார்கள் மிகவும் அன்புடன் நடந்து கொண்ட நிகழ்வு மறக்கவியலாது. டெல்லியில் இருந்து திரும்பிய சமயத்தில் அப்போதைய பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது மிகவும் வருத்தமானது.

போப் ஜான்பால் II அவர்கள் 1986ல் சென்னை வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சமய அறிஞர்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்த்து. அதில் சிராஜுல் மில்லத், மதுரை கண் டாக்டர் அப்துல் சத்தார் ஆகியோருடன் அடியேனுக்கும் வாய்ப்பு கிடைத்து வாழ்வில் மறக்கவியலாது.


கவிதை அனுபவம் குறித்து ?


மாதுளம் கனி என்ற தலைப்பில் நீண்ட கவிதையொன்றை பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் படிக்கும் போது வெளியிட்டேன். அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அமீரகத்தில் வானலை வளர்தமிழ் அமைப்பின் காரணமாக எனது கவித்திறனை கூர்தீட்ட மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது என்றால் மிகையல்ல.

வருங்காலத் திட்டம் ?


சென்னையில் மீண்டும் ஞாயிறு தோறும் திருக்குர் ஆன் விரிவுரையினைத் தொடர்வது, இஸ்லாமிய நூல்களை மொழிபெயர்த்தும், எழுதியும் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொள்வது.


இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது ?


இஸ்லாத்தை கூடுதல் குறைவின்றி அறிமுகப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது மேலாதிக்கத்திற்காக அதனைப் பயன்படுத்துகின்றனர். மக்களில் குறிப்பாக இளைஞர்கள் அப்பாவித்தனமாக அவர்களுக்கு பலியாகின்றனர்.

இதிலிருந்து விடுபட இளைஞர்கள் உண்மையான இஸ்லாத்தை, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினைப் பின்பற்றி வாழ்வில் உயர்நிலையினை அடைய வேண்டும். உண்மையான அறிவுப்புரட்சி கொணரப்படவேண்டும்.

கவர்ச்சிகரமான உரைகளை நம்பி இந்தப் போலி பிரச்சாரகர்களின் வலையில் வீழ்ந்து விடக்கூடாது.

ஸஹாபாக்கள், இமாம்கள், அவுலியாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரது வாழ்வு வரையறுக்கப்பட்டது. அவர்கள் வாயிலாகத்தான் இஸ்லாத்தை நாம் பெற்றுக்கொண்டோம்.

இவர்களைக் குறித்து இழிவாகப் பேசி வருபவர்கள் பயனற்றவர்கள். சமுதாயத்திற்கு தீங்கிழைப்பவர்கள். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் என்றே கூற வேண்டும்.

Pl correct the below para

சமுதாய நீதி பயனற்ற நுரைகுமிழாகப் போய்விடும், மக்களுக்குப் பயனளிக்கும் பொருட்டுதான் பூமியில் நிலைத்திருக்கும் என்று திருக்குர் ஆனில் கூறுகின்றது. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தப் போலி பிரச்சாரகர்கள் ஒருநாள் ஒழிந்து விரைவில் உண்மையான பிரச்சாரகர்கள் காணாமல் போய்விடுவர்.


சமுதாயம் வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு சமயம் முதலான ஆய்வுத்துறைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த நவீன உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

அறிவியல், தொழில்நுட்பக்கல்வியில் சிறப்புற திகழ்ந்தால் உலகத்தார் நம்மை புறக்கணிக்க முடியாது. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


மார்க்க்க் கல்வி உலக ஆதாயத்திற்காக்க் கற்கப்படுமேயானால் அதுவும் உலாகாதயமாகவே கருதப்படும். உலகக்கல்வி இறைதிருப்திக்காகக் கற்கப்பட்டால் அதுவும் இஸ்லாமியக் கல்வியாகக் கருதப்படும்.


இஸ்லாமியக் கல்வி இறை உணர்வோடு கற்கப்பட வேண்டும்

இஸ்லாமியக் கல்வியினால் நவீன தொழில்நுட்பத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கும்.

இறை நம்பிக்கையாளர்கள் உலகை அழிவில் இருந்து காப்பாற்றலாம். அவர்களிடத்தில் உலகின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் இறையுணர்வுடன் ஊழலற்ற ஆட்சியை உலகிற்குத் தருவார்கள்.


சந்திப்பு & பேட்டி : காஹிலா

‘ஹிஸ்னுல் முஸ்லிம்’

இப்போது புத்தம் புதிய வடிவில்

‘ஹிஸ்னுல் முஸ்லிம்’
(நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் களஞ்சியம்)


எனும் நூல் வெளிவந்துள்ளது.


தாருஸ் ஸலாஹ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூல் அழகிய வடிவில், கையடக்கத் தோற்றத்தில் வந்துள்ளது. குறிப்பிடத் தக்கது. சுமார் 267 துஆக்கள் அழகிய அரபி எழுத்துக்களுடன் 256 பக்கங்களில் ஆதாரக் குறிப்புகளுடன் காணப்படுகிறது. எளிமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒலிபெயர்ப்பும் (உச்சரிப்பும்) அடங்கியுள்ளது. இந்நூல் எல்லலோர் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்



தொடர்புக்கு


தாருஸ் ஸலாஹ் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
மொபைல் எண்கள் +91 94443 16031 / 94443 16031 / 96000 16031 / 98844 38740
மின்னஞ்சல் dharussalah@gmail.com

Thangam Magazine Jan 2010 issue e-Book

Thangam Magazine Jan 2010 issue e-Book

e-Book Link : http://ebook.thangamonline.com/jan10/

Plz Check it.
--
Regards,
T. Shaik Mydeen
CEO & Editor,
Thangam Tamil Monthly,
www.thangamonline.com.
e-mail : tshaikmydeen@yahoo.co.in
Mob: 098417 41392.

Wednesday, December 30, 2009

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=231


சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.
கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி
பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக்
பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக
வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த
மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும்
சந்தோசப் பட்டிருப்பார்கள் என்றால் மிகையாகாது.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி
சிறுபான்மை நலன் பற்றி விசாரித்த கமிஷன் அறிக்கையினை இந்திய
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்பதினை அனைவரும் அறிவர். அந்த
அறிக்கையில் மத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் 73 சதவீதம்
இருப்பதாகவும் ஆகவே 10 சதவீத வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என்றும், மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க
வேண்டும் என்றும், அவ்வாறு முஸ்லிம் மைனாரிட்டி வேட்பாளர்கள்
வேலைக்கு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையினை மற்ற
மைனாரிட்டிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அத்துடன் 50 சதவீத ரிசர்வேஷன் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற
நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர் நடத்தும்
நிறுவனங்களிலும் அமல் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த
ஒதுக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதத்திற்கு மனமாற்றம் கொண்டு இணைந்த
தலித் மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விரும்பினால் தங்கள் பழைய
சாதிச் சான்றிதழிலேயே ரிசர்வேஷன் பெற தடையில்லை என்றும்
சொல்லியுள்ளார். அவருடைய அறிக்கை நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி
அளித்த அறிக்கைக்கு பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
மத்திய அரசு சாரபில்; பிரதமர் தெரிவித்தார். நீதிபதி சச்சார் அறிக்கையின்
சாராம்சம் என்ன? முஸ்லிம் படிப்பிலும்-வேலை வாய்ப்பிலும் தலித்களை
விட மிகவும் தாழ்ந்திருக்கிறார்கள் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 62
ஆண்டுகள் ஆன பின்னரும் என்று தான் சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள்
முன்னேற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விட்டுள்ளார் என்பதினை அனைவரும் அறிந்ததே.

திரு. இல. கணேசன் அவர்கள் 23.12.2009 ஆம் தேதி வெளியிட்ட
அறிக்கையில், ‘நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் இந்த அறிக்கை இஸ்லாமிய,
கிறிஸ்துவ மத குருமார்கள் தூண்டிதலின் பேரில் கொடுக்கப்பட்ட
அறிக்கையென்றும், இந்த குருமார்கள் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழும்
பகுதிகளுக்கு சென்று, ‘நீ இந்துவாக இருப்பதால்தான் சாதிக் கொடுமை
நீடிக்கிறது, என் மதத்திற்கு வந்து விட்டால் சாதி ஒழியும், சமத்துவம்
நிலவும்’ என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள். இப்போதோ
மதம் மாறிய பின்னும் சாதி நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை
கேட்கிறார்கள், ஆகவே அந்த அறிக்கையினை நிராகரிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத ரீதியான பின் விளைவுகள் உண்டாக்கி விடும்’
கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையென்ன? நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டவர் முற்பட்ட,
ஆதிக்க சாதிகளின் முன்னால் சட்டையணிக்கூடாது, காலணி அணியக்கூடாது,
டீக்கடையில் ஒரே டம்ளரில் டீ வழக்கக் கூடாது, பிணங்கள் எரிப்பதிற்கு தனி
சுடுகாடு, அவர்கள் மேல் ஜாதி வீதிகளில் நடமாடக்கூடாது, கிணற்றில்
தண்ணீர் மேல் ஜாதியினர் பிடிக்கும் போது தண்ணீர் பிடிக்கக்கூடாது,
குளத்தில் ஒன்றாக குளிக்கக்கூடாது, கோயில்களில் ஒன்றாக சேர்ந்து
வணங்கக்கூடாது, மனமாற இரு ஜோடிகள் வௌ;வேறு ஜாதியினராக
இருந்தாலும் இணையக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளினால்
மனம் நொந்து கடலை நோக்கி ஓடி வரும் சிறு ஆறுகள் போல சமத்துவம்
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதம் நோக்கி ஓடி வருகிறாரகள் இந்து
மதத்திலுள்ள தலித் மக்கள். அவர்களுக்கு ஆசை வார்த்தை கொடுத்து யாரும்
அழைப்பதில்லை என்பதுதான் உண்மை. எப்போது ஒருவன் ‘லாயிலாக
இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸீலல்;லாஹ’; என்று இஸ்லாமிய மதத்தினை
ஏற்றுக் கொண்டானோ அப்போது ஜாதி வேறுபாடுகள் அறுத்ததெறிந்து
வீசப்படுகின்றன. இந்த நவீன உலகத்திலும் ஜாதி இந்துக்கள் தலித் மக்கள்
தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று சுவர் எழுப்பிய அதிசயம் பல
வருடங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடந்தபோது
இருந்தது. அதன் பின்பு நெல்சன் மண்டேலா 27 ஆண்டு தனிமை சிறையில்
இருந்தாலும் போராடி கறுப்பின மக்கள் உரிமை காத்ததோடு மட்டில்லாமல்
அதன் ஜனநாயக அரசின் ஜனாதிபதியாகவும் இருந்தார். ஆனால் தமிழகத்தில்
மதுரை மாவட்டத்தில் உத்தமபுரத்திலும் அது போன்ற சுவர் சமீபத்தில் அரசு
முயற்கியால் இடிக்கப்பட்டாலும் இன்னும் உரிமை மறுக்கப்படுகிறது என்று
தகவல் கிடைத்து பார்வையிட வந்த மார்க்கிஸ்ட் கம்ய+னிஸ்ட் பொலைட்
பீரோ மெம்பர் பிரிந்தா கரட் கூட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
என்றும் அது சம்பந்தமாக விசாரணை நடந்தது என்பதினையும் அனைவரும்
அறிந்ததே.

ஏன் சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனை கிராமத்தில் கோயில் தேர்
இழுக்க தலித்துகள் மறுக்கப் பட்டு அதனை தட்டிக்கேட்ட ஒன்பது தலித்
கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த கிராமத்தைப் பார்ப்பதிற்காக
1988ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் சென்றதினையும் அனைவரும் மறந்து
விடவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு தலித் முருகேசன் மதுரை மாவட்டம்
கீழையூர்பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டார் என அறிந்து அவரை
பணியாற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல,; அவர் உள்பட ஆறு
தலித்துகள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு பஸ்ஸில் வரும்
போது கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த வழக்கில்
உச்சநீதிமன்றமும் குற்றவாளிகளின் தண்டனையினை உறுதி செய்ததினையும்
அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள். விவசாய கூலி உயர்வு கேட்ட
தலித் விவசாயிகள் மிராசுதார்களால் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
25ந்தேதி மிருகத்தனமான செயலில் தஞசை மாவட்டம் கீழ் வெண்மணி
கிராமத்தில் 40 பேர் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட உயிருடன்
எரித்து கருக்பட்டனர் என்பதினை கல்லூரி மாணவானாக இருந்த
காலத்திலிருந்து இன்னும் பசுமையாக நெஞ்சில் உள்ளது. அன்றை முதல்வர்
பேரரிஞர் அண்ணா கூட அந்த செய்தி கேட்டு துடி துடித்து, ‘ என் நெஞ்சில்
பாய்ச்சிய ஈட்டியாக கருதி வேதனையடைந்து இரவு முழுவதும் உறங்காது
அல்லல் பட்டேன் என்று சொன்னதினை எல்லோரும் படித்திருப்பீர்கள.

சென்ற மாதங்கூட திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தலித்
மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நீதித் துறையின்
உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு அவர்களை
பஸ்ஸில் அணியாக அழைத்துச் செல்லும் போது கல், தடி கொண்டு
தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆகவே தான் கம்ய
+னிஸ்ட்டுகள் ஆலய நுழையும் போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
பழைய புராணத்தில் நந்தன் என்ற தலித் ஆண்டவனை தரிசிக்க கோவிலுக்கு
சென்றதாகவும் இறைவனை தரிசிக்க விடாமல் நந்நி போன்றவர்கள்
மறைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆகவே அவன் இறைவனிடம், ‘சற்றே
விலகியிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்கிறது, என்றும் நந்தன்
முறையிட்டதாகவும், இறைவன் செவிசாய்த்து ‘நந்தாய் உள்ளே வா’ என்று
அழைத்து நந்தன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாகவும் புராணம்
சொல்கிறது. ஆகவே ஆண்டவனே சொன்னால் தான் தலித்களுக்கு உரிமை
கொடுக்கும் நிலையிருப்பதால் தானே தலித் மக்கள் சமத்துவம்-
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஓடோடி வருகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏற்கனவே நீதியரசர் சச்சார்
அறிக்கையில் படிப்பில்- வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் தலித் போன்று
இருப்பதாலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய
தலித்கள் பொருளாதாரம்-கல்வியில் பின் தங்கியிருப்பதாலும் நீதியரசர்
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலித்கள் அனுபவித்த அரசு சலுகைகளை அவர்கள்
மதம் மாறினாலும் வழங்க வேண்டும் என்று பரிந்திருக்கிறாரே தவிர எந்த
முஸ்லிம் மத குருமார்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா போன்ற
அப்பழுக்கற்ற நீதிபதியினை யாரும் வசியப்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்ய
முடியாது.

பி.ஜே.பியில் தலித்-பிற்பட்ட தலைவர்கள் தலை தூக்க முடியுமா?
அவ்வாறு தமிழக தலைவராக வந்த டாக்டர் கிருபாநிதி வடநாட்டில் நடந்த
மாநாட்டில் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று அறிக்கை
விடுத்து ராஜினாமா செய்யவில்லையா? பிற்பட்ட சமுதாய தலைவர்களான
உமாபாரதி-கல்யான்சிங்-ஏன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போன்றோர்
பி.ஜே.பியில் இருந்து ஏன் விலகினார்கள் என்பது அவர்கள் விலகும் போது
கொடுத்த அறிக்கையினைப் பார்த்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
அங்கு தலித்-பிற்பட்ட சமூதாய மக்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது
என்பதே உண்மை. அவருடைய வீட்டினை ஒழுங்கு படுத்துவதிற்கு பதில்
கண்ணாடி மாளிகை போன்று இருக்கிற இஸ்;லாம் மதத்தினை ஜாதி உணர்வு
இஸ்லாத்திலும் இருக்கிறது போன்ற மாயையை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
ஆகவே தான் பி.ஜே.பி கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுத்தினார்கள் மக்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திருநாவுக்கரசர் பி.ஜே.பியிலிருந்து விலகும்
போது, ‘பி.ஜே.பியில் சேர்ந்ததால் நான் நல்ல இஸ்லாமிய நண்பர்களை
இழந்தேன், தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சி என்ற அமைப்புக்கு மக்கள்
ஆதரவு இல்லை என தெரிந்து கொண்டதாக’ வருத்தத்துடன் அறிவித்து விட்டு
விலகி இன்று காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே தான் மக்கள் ஆதரவே இல்லாத ஒரு அமைப்பில் இருந்து
கொண்டு தன் பெயர் தினந்தோரும் பத்திரிக்கைகளிலும்-தொலைக்காட்சியிலும்
வரவேண்டுமென்று ஓதும் வேதத்தினை சாத்தான் ஓதும் வேதமாக
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்லாது-ஒட்டுமொத்த தமிழக சமுதாயமும்
நினைத்து சிரிக்கிறது என்றால் அது உண்னைதானே?
சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=231


சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.
கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி
பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக்
பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக
வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த
மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும்
சந்தோசப் பட்டிருப்பார்கள் என்றால் மிகையாகாது.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி
சிறுபான்மை நலன் பற்றி விசாரித்த கமிஷன் அறிக்கையினை இந்திய
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்பதினை அனைவரும் அறிவர். அந்த
அறிக்கையில் மத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் 73 சதவீதம்
இருப்பதாகவும் ஆகவே 10 சதவீத வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என்றும், மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க
வேண்டும் என்றும், அவ்வாறு முஸ்லிம் மைனாரிட்டி வேட்பாளர்கள்
வேலைக்கு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையினை மற்ற
மைனாரிட்டிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அத்துடன் 50 சதவீத ரிசர்வேஷன் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற
நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர் நடத்தும்
நிறுவனங்களிலும் அமல் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த
ஒதுக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதத்திற்கு மனமாற்றம் கொண்டு இணைந்த
தலித் மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விரும்பினால் தங்கள் பழைய
சாதிச் சான்றிதழிலேயே ரிசர்வேஷன் பெற தடையில்லை என்றும்
சொல்லியுள்ளார். அவருடைய அறிக்கை நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி
அளித்த அறிக்கைக்கு பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
மத்திய அரசு சாரபில்; பிரதமர் தெரிவித்தார். நீதிபதி சச்சார் அறிக்கையின்
சாராம்சம் என்ன? முஸ்லிம் படிப்பிலும்-வேலை வாய்ப்பிலும் தலித்களை
விட மிகவும் தாழ்ந்திருக்கிறார்கள் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 62
ஆண்டுகள் ஆன பின்னரும் என்று தான் சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள்
முன்னேற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விட்டுள்ளார் என்பதினை அனைவரும் அறிந்ததே.

திரு. இல. கணேசன் அவர்கள் 23.12.2009 ஆம் தேதி வெளியிட்ட
அறிக்கையில், ‘நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் இந்த அறிக்கை இஸ்லாமிய,
கிறிஸ்துவ மத குருமார்கள் தூண்டிதலின் பேரில் கொடுக்கப்பட்ட
அறிக்கையென்றும், இந்த குருமார்கள் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழும்
பகுதிகளுக்கு சென்று, ‘நீ இந்துவாக இருப்பதால்தான் சாதிக் கொடுமை
நீடிக்கிறது, என் மதத்திற்கு வந்து விட்டால் சாதி ஒழியும், சமத்துவம்
நிலவும்’ என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள். இப்போதோ
மதம் மாறிய பின்னும் சாதி நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை
கேட்கிறார்கள், ஆகவே அந்த அறிக்கையினை நிராகரிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத ரீதியான பின் விளைவுகள் உண்டாக்கி விடும்’
கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையென்ன? நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டவர் முற்பட்ட,
ஆதிக்க சாதிகளின் முன்னால் சட்டையணிக்கூடாது, காலணி அணியக்கூடாது,
டீக்கடையில் ஒரே டம்ளரில் டீ வழக்கக் கூடாது, பிணங்கள் எரிப்பதிற்கு தனி
சுடுகாடு, அவர்கள் மேல் ஜாதி வீதிகளில் நடமாடக்கூடாது, கிணற்றில்
தண்ணீர் மேல் ஜாதியினர் பிடிக்கும் போது தண்ணீர் பிடிக்கக்கூடாது,
குளத்தில் ஒன்றாக குளிக்கக்கூடாது, கோயில்களில் ஒன்றாக சேர்ந்து
வணங்கக்கூடாது, மனமாற இரு ஜோடிகள் வௌ;வேறு ஜாதியினராக
இருந்தாலும் இணையக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளினால்
மனம் நொந்து கடலை நோக்கி ஓடி வரும் சிறு ஆறுகள் போல சமத்துவம்
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதம் நோக்கி ஓடி வருகிறாரகள் இந்து
மதத்திலுள்ள தலித் மக்கள். அவர்களுக்கு ஆசை வார்த்தை கொடுத்து யாரும்
அழைப்பதில்லை என்பதுதான் உண்மை. எப்போது ஒருவன் ‘லாயிலாக
இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸீலல்;லாஹ’; என்று இஸ்லாமிய மதத்தினை
ஏற்றுக் கொண்டானோ அப்போது ஜாதி வேறுபாடுகள் அறுத்ததெறிந்து
வீசப்படுகின்றன. இந்த நவீன உலகத்திலும் ஜாதி இந்துக்கள் தலித் மக்கள்
தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று சுவர் எழுப்பிய அதிசயம் பல
வருடங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடந்தபோது
இருந்தது. அதன் பின்பு நெல்சன் மண்டேலா 27 ஆண்டு தனிமை சிறையில்
இருந்தாலும் போராடி கறுப்பின மக்கள் உரிமை காத்ததோடு மட்டில்லாமல்
அதன் ஜனநாயக அரசின் ஜனாதிபதியாகவும் இருந்தார். ஆனால் தமிழகத்தில்
மதுரை மாவட்டத்தில் உத்தமபுரத்திலும் அது போன்ற சுவர் சமீபத்தில் அரசு
முயற்கியால் இடிக்கப்பட்டாலும் இன்னும் உரிமை மறுக்கப்படுகிறது என்று
தகவல் கிடைத்து பார்வையிட வந்த மார்க்கிஸ்ட் கம்ய+னிஸ்ட் பொலைட்
பீரோ மெம்பர் பிரிந்தா கரட் கூட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
என்றும் அது சம்பந்தமாக விசாரணை நடந்தது என்பதினையும் அனைவரும்
அறிந்ததே.

ஏன் சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனை கிராமத்தில் கோயில் தேர்
இழுக்க தலித்துகள் மறுக்கப் பட்டு அதனை தட்டிக்கேட்ட ஒன்பது தலித்
கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த கிராமத்தைப் பார்ப்பதிற்காக
1988ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் சென்றதினையும் அனைவரும் மறந்து
விடவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு தலித் முருகேசன் மதுரை மாவட்டம்
கீழையூர்பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டார் என அறிந்து அவரை
பணியாற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல,; அவர் உள்பட ஆறு
தலித்துகள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு பஸ்ஸில் வரும்
போது கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த வழக்கில்
உச்சநீதிமன்றமும் குற்றவாளிகளின் தண்டனையினை உறுதி செய்ததினையும்
அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள். விவசாய கூலி உயர்வு கேட்ட
தலித் விவசாயிகள் மிராசுதார்களால் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
25ந்தேதி மிருகத்தனமான செயலில் தஞசை மாவட்டம் கீழ் வெண்மணி
கிராமத்தில் 40 பேர் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட உயிருடன்
எரித்து கருக்பட்டனர் என்பதினை கல்லூரி மாணவானாக இருந்த
காலத்திலிருந்து இன்னும் பசுமையாக நெஞ்சில் உள்ளது. அன்றை முதல்வர்
பேரரிஞர் அண்ணா கூட அந்த செய்தி கேட்டு துடி துடித்து, ‘ என் நெஞ்சில்
பாய்ச்சிய ஈட்டியாக கருதி வேதனையடைந்து இரவு முழுவதும் உறங்காது
அல்லல் பட்டேன் என்று சொன்னதினை எல்லோரும் படித்திருப்பீர்கள.

சென்ற மாதங்கூட திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தலித்
மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நீதித் துறையின்
உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு அவர்களை
பஸ்ஸில் அணியாக அழைத்துச் செல்லும் போது கல், தடி கொண்டு
தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆகவே தான் கம்ய
+னிஸ்ட்டுகள் ஆலய நுழையும் போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
பழைய புராணத்தில் நந்தன் என்ற தலித் ஆண்டவனை தரிசிக்க கோவிலுக்கு
சென்றதாகவும் இறைவனை தரிசிக்க விடாமல் நந்நி போன்றவர்கள்
மறைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆகவே அவன் இறைவனிடம், ‘சற்றே
விலகியிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்கிறது, என்றும் நந்தன்
முறையிட்டதாகவும், இறைவன் செவிசாய்த்து ‘நந்தாய் உள்ளே வா’ என்று
அழைத்து நந்தன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாகவும் புராணம்
சொல்கிறது. ஆகவே ஆண்டவனே சொன்னால் தான் தலித்களுக்கு உரிமை
கொடுக்கும் நிலையிருப்பதால் தானே தலித் மக்கள் சமத்துவம்-
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஓடோடி வருகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏற்கனவே நீதியரசர் சச்சார்
அறிக்கையில் படிப்பில்- வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் தலித் போன்று
இருப்பதாலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய
தலித்கள் பொருளாதாரம்-கல்வியில் பின் தங்கியிருப்பதாலும் நீதியரசர்
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலித்கள் அனுபவித்த அரசு சலுகைகளை அவர்கள்
மதம் மாறினாலும் வழங்க வேண்டும் என்று பரிந்திருக்கிறாரே தவிர எந்த
முஸ்லிம் மத குருமார்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா போன்ற
அப்பழுக்கற்ற நீதிபதியினை யாரும் வசியப்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்ய
முடியாது.

பி.ஜே.பியில் தலித்-பிற்பட்ட தலைவர்கள் தலை தூக்க முடியுமா?
அவ்வாறு தமிழக தலைவராக வந்த டாக்டர் கிருபாநிதி வடநாட்டில் நடந்த
மாநாட்டில் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று அறிக்கை
விடுத்து ராஜினாமா செய்யவில்லையா? பிற்பட்ட சமுதாய தலைவர்களான
உமாபாரதி-கல்யான்சிங்-ஏன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போன்றோர்
பி.ஜே.பியில் இருந்து ஏன் விலகினார்கள் என்பது அவர்கள் விலகும் போது
கொடுத்த அறிக்கையினைப் பார்த்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
அங்கு தலித்-பிற்பட்ட சமூதாய மக்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது
என்பதே உண்மை. அவருடைய வீட்டினை ஒழுங்கு படுத்துவதிற்கு பதில்
கண்ணாடி மாளிகை போன்று இருக்கிற இஸ்;லாம் மதத்தினை ஜாதி உணர்வு
இஸ்லாத்திலும் இருக்கிறது போன்ற மாயையை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
ஆகவே தான் பி.ஜே.பி கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுத்தினார்கள் மக்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திருநாவுக்கரசர் பி.ஜே.பியிலிருந்து விலகும்
போது, ‘பி.ஜே.பியில் சேர்ந்ததால் நான் நல்ல இஸ்லாமிய நண்பர்களை
இழந்தேன், தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சி என்ற அமைப்புக்கு மக்கள்
ஆதரவு இல்லை என தெரிந்து கொண்டதாக’ வருத்தத்துடன் அறிவித்து விட்டு
விலகி இன்று காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே தான் மக்கள் ஆதரவே இல்லாத ஒரு அமைப்பில் இருந்து
கொண்டு தன் பெயர் தினந்தோரும் பத்திரிக்கைகளிலும்-தொலைக்காட்சியிலும்
வரவேண்டுமென்று ஓதும் வேதத்தினை சாத்தான் ஓதும் வேதமாக
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்லாது-ஒட்டுமொத்த தமிழக சமுதாயமும்
நினைத்து சிரிக்கிறது என்றால் அது உண்னைதானே?

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!
………………………………………………………………………

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
Sent from Chennai, TN, India

--

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ......!

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ......!



நெல்லை ஆ. க‌ண‌ப‌தி


இராம‌ர் கோயில் அவ‌சிய‌மா ?
நாட்டின் அமைதி அவ‌சிய‌மா ?
பாப‌ர் ம‌சூதி இடித்த‌ பாவ‌மும்
ப‌ழியும் நீங்கிட‌ வேண்டாமா ?

க‌ல்விதான் க‌ற்க‌ இள‌மையிலும்
கைகேயிவ‌ர‌த்தால் வ‌ள‌மையிலும்
ப‌ல்வேறு ஆண்டுக‌ள் காடுக‌ளில்
ப‌ழ‌கியே வாழ்ந்த‌வ‌ன் இராம‌பிரான் !

கானில் ப‌ட‌கோட்டி குக‌ன் த‌னையே
கண்ட‌தும் சோத‌ர‌ர் ஐவ‌ர் என‌
மானிட‌ன் ஆன்வ‌ன் பிற‌ இன‌த்தை
ம‌திப்ப‌தே பெருமை என்றுரைத்தான்

அயோத்தியில் வாழ்ந்த‌ அர‌ண்ம‌னையும்
ஆர‌ண்ய‌ வாழ்வும் ச‌ம‌ம் என்றான்
வ‌யோதிக‌ன் த‌ச‌ர‌த‌ன் த‌ந்தையினால்
வ‌ன்வாச‌ம் சென்ற‌வ‌ன் புண்ணிய‌வான் !

ம‌ன்ன‌வ‌ன் இராம‌ன் பிற‌ர் உண‌ர்வை
ம‌திப்ப‌தே ப‌ண்பு என‌ வாழ்ந்தான் !
என்ன‌வோ கோயில் கட்டுகிறோம்
இங்கு இரு என்றால் இருப்பனோ ?

இராம‌ர் இருக்கும் இட‌ம் அயோத்தி
எல்லோரும் அறிந்த‌ உண்மை இது !
பாப‌ர் ம‌சூதி கோயிலையே
ப‌டைப்பினும் இராம‌ன் வ‌ர‌மாட்டான்
அடுத்த‌வ‌ர் ம‌னைவியை அப‌க‌ரித்த‌
அதைக் க‌ண்டு கொதித்த‌வ‌ன் இராம‌பிரான்
அடுத்த‌வ‌ர் ம‌சூதியை அப‌க‌ரித்தே
அமைத்திடும் கோயிலில் புக‌மாட்டான் !

நெற்றியில் நாம‌ம் போடுவ‌தும்
நெஞ்சினில் ராம‌னைத் தேடுவ‌தும்
க‌ற்ற‌வ‌ர் போடும் திருக்கோயில்
க‌ற்கோயில் ந‌ம‌து நெஞ்ச‌மதே !

பாப‌ர் ம‌சூதியும் தாஜ்ம‌காலும்
ப‌ழ‌ம்புக‌ழ் போற்றும் பொக்கிஷ‌மே !
யாவ‌ரும் அறிந்த‌ உண்மை இது !
இத‌னை ம‌ற‌ப்ப‌து ச‌ரிதானோ ?

ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் டிச‌ம்ப‌ர் 16 31, 2009

Monday, December 28, 2009

அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி


அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி

அபுதாபி :

அமீரத்தில் செயல்படும் தமிழக அமைப்புகளில் அய்மான் சங்கம் மிகத் தொன்மையும்
சிறப்பும் வாய்ந்த அமைப்பாகும். அமீரகத்திலும் தாயகத்திலும் அய்மான் அமைப்பின்
பணிகள் பெரும் வரவேற்பை பெற்றவை. அதனை நிறுவியவர்களுள் ஒருவரும் 1976 முதல்
சங்கத்தின் உறுப்பினரும் கீழக்கரை நர காஜியாரும் சங்கத்தின் இந்நாள் தலைவருமான
காதர் பக்ஸ் ஹாஜி M.A. அவர்கள் தனது 33 வருட அமீரக வாழ்வை, சமுதாயப் பணியை
நிறைவு செய்து தாயம் திரும்புகிறார்.

அன்னாரை பாராட்டி வழியனுப்பும் முகமாக ஜனவரி 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று
தலைநகர் அபுதாபி ஹம்தான் சாலையில் அமைந்திருக்கும் ருசி ரெஸ்டாரன்ட் பேன்குவெட்
ஹாலில் மாலை 7 மணிக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தினர் ஏற்பாடு
செய்துள்ளனர்.

அய்மான் புதிய தலைவர் அதிரை சாஹுல் ஹமீது M.Sc தலைமையில் இந்நிகழ்சி
நடைபெறுகிறது. சமுதாயப் புரவலர் நோபிள் ஹமீது ஹாஜியார் அவர்கள் முன்னிலையில்
நடைபெறும் இந்நிகழ்வில் அபுதாபி தமிழ் சங்கம், துபை ஈமான் சங்கம் மற்றும்
தொழிலதிபர்களும் பல்வேறு தமிழக மற்றும் கேரள அமைப்புகளின் பிரதிநிதிகளும்
அறிஞர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

அய்மானின் நிறுவனத் தலைவர்களான அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார், கனிமொழிக் கவிஞர்
ஷம்சுதீன் ஹாஜி, கல்லூரிச் செயலளார் செய்யது ஜாபர், தொழிலதிபர் பனியாஸ் ஹமீத்
ஹாஜி, ஈமான் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, பாடகர்
தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Sunday, December 27, 2009

மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப் போட்டி

மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப் போட்டி

மேல்நிலைப்ப‌ள்ளி / க‌ல்லூரி / அர‌பிக் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்காக‌

ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இன்ஷா அல்லாஹ் வ‌ருகிற‌ 2010 ஜ‌ன‌வ‌ரி 30,31 அகிய‌ நாட்க‌ளில் திருச்சியில் மாநில‌ மாநாட்டை ந‌ட‌த்த‌ உள்ள‌து. இத‌னையொட்டி மேல்நிலைப்ப‌ள்ளிக‌ள், கல்லூரிக‌ள், அர‌பிக் க‌ல்லூரிக‌ளில் ப‌யிலும் மாண‌வ‌, மாண‌விய‌ருக்காக‌ மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப்போட்டி ஒன்றை ந‌ட‌த்துகிற‌து.

த‌லைப்பு

இஸ்லாம் ஒரு முழுமையான‌ வாழ்க்கை நெறி
அல்ல‌து
ச‌மூக‌ப் புத்த‌மைப்பில் முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளின் ப‌ங்கு
அல்ல‌து
முன்மாதிரிச் ச‌மூக‌த்தை உருவாக்குவ‌தில் இஸ்லாத்தின் ப‌ங்கு



விதிமுறைக‌ள்

மாண‌வ‌, மாண‌விய‌ர் மேற்குறிப்பிட்ட‌ த‌லைப்புக‌ளில் ஏதேனும் ஒன்றில் க‌ட்டுரைக‌ள் எழுத‌லாம்.
க‌ட்டுரைக‌ள் த‌மிழ் / ஆங்கில‌ம் / உருது மொழிக‌ளில் எழுத‌லாம்
க‌ட்டுரை 1000 வார்த்தைக‌ளுக்கு மிகாம‌ல் இருக்க‌ வேண்டும்
போட்டியில் ப‌ங்கு பெறும் மாண‌வ‌ / மாண‌விய‌ர் தாளின் ஒரு ப‌க்க‌த்தில் ம‌ட்டுமே த‌ங்க‌ள் கைப்ப‌ட‌ எழுத‌ வேண்டும்
தாங்க‌ள் ப‌யிலும் க‌ல்வி நிறுவ‌ன‌த்தின் ஒப்புத‌லோடு க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டும்
க‌ட்டுரைக‌ள் 30.12.2009 க்குள் பின்வ‌ரும் முக‌வ‌ரிக்கு வ‌ந்து சேர்ந்திட‌ வேண்டும்

ப‌ரிசுத் தொகை

முத‌ல் ப‌ரிசு : ரூ 5000
இர‌ண்டாம் ப‌ரிசு : ரூ 3000
மூன்றாம் ப‌ரிசு : ரூ 2000

இத்துட‌ன் சான்றித‌ழும், கேட‌ய‌மும், ம‌திப்புவாய்ந்த‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளும் ப‌ரிசாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் அனைவ‌ருக்கு சான்றித‌ழ்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

வெற்றி பெறும் மாண‌வ‌, மாண‌விய‌ருக்கு மாநில‌ மாநாட்டில் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி

ஒருங்கிணைப்பாள‌ர்
மாநில‌ அள‌விலான‌ க‌ட்டுரைப் போட்டி
ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில‌ மாநாடு
ஐ.எஃப்.டி. வ‌ளாக‌ம்
138 பெர‌ம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012

தொலைபேசி : 044 2662 1101 / 94449 01422 / 90431 30358

இறுதி நாள் : 05. 01. 2010

Saturday, December 26, 2009

பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள் -

பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள்!

_

துபாயில் கவிஞர் ஜின்னாஹ்வின் உணர்ச்சிபூர்வமான பேச்சு


25- 12- 2009 அன்று துபை சிவ்ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் மன்றத்தின் தமிழ்த்தேர் நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான

கவிஞர் திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் கலந்துகொண்டார்



நீரோடை http://niroodai.blogspot.com யென்னும் வலைப்பூவில் 100 கவிதைகளுக்குமேல் எழுதிய

கவிஞர் மலிக்காவின் கவிதைகளைப்பற்றி பேசும்போது அவர்

கூறியதாவது.

“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட

இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!


அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தpபடவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுkகவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!

இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு

அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.


அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து

“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.


என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...

.

அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.

ஆனால்

இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!

எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?

[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.

இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.

இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


என்ற வரிகளை முடிக்கும்போது அரங்கத்தில் கனமான அமைதி...

குண்டுசி விழுந்தால்கூட கேட்கும் சத்தம்.... பிறகு கவிதையின் ஆழத்தை அர்த்தத்தை புரிந்துகொண்ட பார்வையாளர்களின் கைதட்டல்

அடங்க வெகுநேரமானது. ஒரு சிலபெண்களின் கண்கள் ஈரமானதையும் பார்க்கமுடிந்தது பெண்களின் பக்கம் பலத்தவரவேற்பையும் பெருமிதத்தையும் பார்க்க முடிந்தது


இது ஒரு நல்ல கவிதையல்லவா?


உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது

இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்றுசொல்லிவிட்டு


மற்றும் ஒரு கவிதையான ”வலி” என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இது நான் ஏற்கனவே 8 பக்கம்கொண்ட ஒரு சிறுகதை ஒன்று எழுதியிருந்தேன். ஒரு முதியவரைப்பற்றி அந்த கதையை இவர் தன்சிறிய கவிதைக்குள் கொண்டுவந்துவிட்டார். என அந்த கவிதையை வசித்தார்


இதோ அந்த கவிதை:


கைத்தடியை தட்டித் தட்டிக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி வீடுவந்து
சேர்த்தவர்கள் வாசல்திரும்பவில்லை

உள்ளிருந்து ஒலித்தது ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின் ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு வாக்கிங்

கத்தியில்லாமல் குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல் வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம் தானாய் புலம்பியது ரத்தினமே

நீ”
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்!



என அந்த கவிதையை வாசித்து இடையிடையே அதற்கான விளக்கங்களும் சொல்லி மிகவும் பெருமைபட பாராட்டினார்.


மலிக்காவை ஊக்கப்படுத்தும் விதமாக காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

அவர்கள் விருதை வழங்க அழைத்தபோது மலிக்கா அவர் அருகில் வந்து

தான் விருது வாங்கும் நேரத்தில் தன்னுடைய இலக்கியப்பணி மற்றும் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் கணவரும் தன்னருகில் இருக்கவேண்டும் என்று சொல்லியபோது,


மிகவும் சந்தோஷப்பட்ட கவிஞர் ஜின்னாஹ் உடனே மலிக்காவின் கணவர் ஃபாரூக்அலியை மேடைக்கு அழைத்தார்கள், “வாங்கப்பா” உங்களுக்காத்தான் அவர் கவிதை எழுதியிருக்கிறார் எவ்வளவு மகிழ்ச்சியான விசயம்!’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது மீண்டும் அரங்கம் அதிர்ந்தது கரகோசத்தால்.

ஃபாரூக்அலி அருகில் வர கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து விருதை பெற்றுக்கொண்டகாட்சியை பார்வையாளர்கள் மகிழ்ச்சியோடு பார்த்து இருவரையும் கவுரவிக்கும் விதமாக பலத்த கைதட்டல் எழுப்பினார்கள்.


வளர்ந்து வரும் கவிஞரை புகழ்பெற்ற, பலவிருதுகள் பெற்ற,

ஜின்னா அவர்கள் மேடையில் மனதார பாராட்டிய நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஜின்னா அவர்களின்மீது மேலும் உயர்வான மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது.


கவிஞர் ஜின்னா அவர்களின் பெருந்தன்மை பாராட்டதக்கது.

ஆற்றல் மிக்க ஜின்னா அவர்களின் வாழ்த்து வளரும் இந்த கவிஞரை நிச்சயம் இலக்கிய உலகில் செழித்து வாழவைக்கும்!


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒருபெண் இருப்பாள் என்பது பழமொழி

ஓவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒருஆண் உண்டு என்ற புதுமொழியை உண்டாக்கிய கவிஞர் மலிக்கா அவர்களின் அன்புக்கணவர் பாரூக் அலி அவர்களை பெண்கள் சமூகமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது


விருதுக்கான ஏற்பாடுகளை குமுதம் சிறுகதை எழுத்தாளர் ஷேக் சிந்தா மதார். கவிஞர் கமால். பத்திரிகையாளர் திருச்சி சையது. ஆகியோர் செய்திருந்தனர்.


.கவிஞர் ஜின்னா அவர்களால் வழங்கப்பட்ட பரிசு கேடயத்திலிருந்த

மின்னும் நட்சத்திரம்போல்கவிஞர் மலிக்காவும்

கவிதை வானில் நட்சத்திரமாக வாழ வாழ்த்துகிறோம்!


..

PROPHET'S MEDICINE FOR HEALTH

PROPHET'S MEDICINE FOR HEALTH
Dr K. S. RAMAKRISHNA RAO, an Indian Professor of Philosophy in his booklet, "Muhammad, the Prophet of Islam," calls him the "PERFECT MODEL FOR HUMAN LIFE." Prof. Ramakrishna Rao explains his point by saying "The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes! There is Muhammad, the Prophet. There is Muhammad, the Warrior; Muhammad, the Businessman ; Muhammad, the Statesman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of Orphans; Muhammad, the Protector of Slaves ; Muhammad, the Emancipator of Women; Muhammad, the Judge; Muhammad, the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero."
God's Messenger said, "If anyone among you is secure in mind (also, among his family or in his house) in the morning, healthy in body, and has food for the day, it is as though the whole world has been brought into his possession."
Prophets advice for Eating
"In eating, apportion a third of your stomach to food, another third to water, and leave the last third empty. The bowl most distasteful to God is a full stomach."
What I fear concerning my community is a large paunch, oversleep, idleness and the lack of certainty.
'Cleanliness is half of faith (Iman)'.
"Do not lean and eat."
"Wash both hands up to the wrists"
"Do not find fault with the food."
"Remove your shoes before eating."
"When eating, sit with either both knees on the ground or one knee raised or both knees raised."
"Eat with the right hand."
"Whilst eating one should not remain completely silent"
"Drink water in 3 breaths removing the utensil from the mouth after each sip. Do not drink directly from the jug or bottle. One should pour the contents into a glass first and then drink"
"The best drink in this world and the hereafter is water; when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver."
"Don't eat until you are hungry."
"The blessings of food lie in washing hands before and after eating."
"When a fly falls into the bowl of somebody among you, he should dip it completely in the food before taking it out. For there is disease in one of the fly's wings and cure in the other." (Flies carry microbes. But, when it is submerged in the food with a slight touch, the tiny bag on the other wing bursts open to scatter the anti-bacteria to kill the germs it has already left. This is one of the latest discoveries in medicine.)

Prophets advice for health
"O Servant of God, use medicine, because God hath not created a pain without a remedy for it".
"Use of Medicine is the Decree of God"
"If I bring something to you on your religion, do act according to it, and if I bring you something related to this world, then you have a better knowledge of your own earthly affairs (Maurice Bucaille in 'Quran Bible and Science')."
"Do not neglect having your diseases treated, for God does not send a disease for which He will not send a cure except for old age."
'When you hear about a break of plague in any area, do not enter there and when it has broken in a land where you are, then do not run way from it (and spread elsewhere). '(Principle of quarantine)
"Keep away from the leper as you do from a lion. (To prevent the spread of leprosy.)"
"When a dog has licked a bowl of yours, clean it seven times, first time with earth, the other six with water. (Dogs carry microbes of certain diseases)"
"If dogs were not a separate community, I would order their killing. (For they carry germs harmful to man's health.)"

Before going to sleep:-
1. One should change into some other clothes (e.g. pyjamas).
2. Apply surmah in both the eyes,
3. To brush the teeth with a miswaak,
4. Sleep on the right hand side.
5. Sleep with the right palm under the right cheek.
6. Keep the knees slightly bent when sleeping.
"One must cut one's nails & hairs of the pubic region within every forty days."
"Males must wear the pants above the ankles. Females should ensure that their lower garment covers their ankles"
"To announce ones arrival by coughing, greeting, etc. even though it may be your own house"(A means for avoiding any fear.)"
"If it did not place an excessive burden upon my community, I would command them to clean their teeth with miswaak [a tooth stick] before each of the five daily prayers."
'Disease' he said, 'is not the wrath of God, because Prophets also suffered great pains, much greater than ordinary people. Victims of epidemics like Cholera and Plague are martyrs. '
"Resort to Medicine first and then pray to God to get rid of the diseases."
Prophets medicine for health
--God's Messenger, upon him be peace and blessings, once proclaimed that ten things are intrinsically necessary for men and therefore ordered by the Prophets. Circumcision is one of them. (Scientists admit that the loose fold of the skin at the end of the male sex organ is exposed and susceptible to infections and even to cancer. Therefore, millions of people are circumcised in Europe and America .)
--"Khumbi (mushroom) is a part of Mann, Mann actually is from paradise, its water is a cure for the ailments of the eyes."
--"A house without dates has no food - also to be eaten at the time of childbirth."
--"Fig is a fruit from paradise and a cure for piles."
--"None of your women who are pregnant and eat of water melon will fail to produce off spring who are good in countenance and good in character."
--"Pomegranate cleanses you of Satan and evil aspirations for 40 days."
--"The best drink in this world and the hereafter is water, when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver. "
--"Have regular use of honey for keeping fit."
--"Black Cumin (Hadith; Habb al-Sauda) is a remedy for every disease except death."
--"milk wipes away heat from the heart just as the finger wipes away sweat from the brow. It strengthens the back, improved the brain, renews vision and drives away forgetfulness.
--For loss of appetite he frequently advised to take Talbina, a preparation of Barley.
--For constipation he used to recommend the use of Senna.
-- Similarly, for different ailments he would advise for taking herbal drugs like Olive, Black Cumin, Chicory, Fenugreek, Ginger, Marjorum, Saffron, Vinegar, Water-Cress etc.
--"Treat your eyes with kohl, for it nourishes eyes and eyelashes."
--"It is not permissible to eat any unslaughtered chicken. Such chicken will be Harmful" (It's the Scientific fact Jhatka (Blood Clotted Meat) is harmful for Human beings and more painful for the animals (SPINAL CORD disaster before death))
--"I command every woman to have Clothing such as to cover the whole body with the exception of the face and the hands. & that clothing should not be fitting that reveal the shape of the body. (Not exposing the skin is an advice given by the US Department of Health And Human Services (HHS) and the Centers for Disease Control and Prevention. They have sponsored a campaign called "Choose Your Cover for skin", encouraging people to protect themselves from sun's UV rays and skin cancer. The campaign's section on clothing notes that "a long-sleeved shirt and long pants with a thick weave provide the best protection.)
A man asked the Messenger: 'I used to suffer from an illness, and I took alcohol for a remedy. When alcohol was banned, I went to God's Messenger, and asked him whether I would be allowed to continue taking alcohol. No, for it (alcohol) is not a remedy, rather it is the disease itself, God's Messenger declared. A woman asked the Messenger: - 'O God's Messenger, my blood does not stop; shall I abandon the prescribed prayers?' No, you must not, for it is not the menstrual blood, it is a hemorrhage, God's Messenger replied.

Muhammad (pbuh) was nothing more or less than a human being. But he was a man with a noble mission, which was to unite humanity on the worship of ONE and ONLY ONE GOD and to teach them the way to honest and upright living based on the commands of God. He always described himself as, 'A Servant and Messenger of God,' and so indeed every action of his proclaimed to be. (EDWARD GIBBON and SIMON OCKLEY in HISTORY OF THE SARACEN EMPIRES, London, 1870, p. 54)
In the name of Allah, the Beneficent, the Merciful.
All praise is due to Allah, the Lord of the Worlds.
The Beneficent, the Merciful.
Master of the Day of Judgment.
Thee do we serve and Thee do we beseech for help.
Keep us on the right path.
The path of those upon whom Thou hast bestowed favours. Not (the path) of those upon whom Thy wrath is brought down, nor of those who go astray.[the Holy Quran- Sura # 1,Aayat 1-7] - AMEEN

"Say: we believe in God and in what has been revealed to us, and what was revealed to Abraham, Isma'il: Isaac, Jacob and The Tribes, and in (the Books) given to Moses, Jesus and the Prophets, from their Lord: We make no distinction between one and another, among them, and to God do we bow our will (in Islam).." (Qur'an, Al-Imran 3:84) "So verily with every difficulty there is relief."- [THE HOLY QURAN, 094.005]

"If Allah is your protector, none can overcome you, and if He forsakes you, then who can help you? Trust Allah and have faith in His sovereign power"[Qur'an, Al-Imran, Surah 3:160]

"Faint not nor grieve for you will overcome them if you are(indeed) believers."[ Qur'an, Aal -e-imraan-3, Aayat 139]

"And say "O my Lord! I seek refuge with Thee from the suggestions of the Evil Ones. And I seek refuge with Thee O my Lord! Lest they should come near me." [Qur'an, AL-MUMENOON 023.097-98]

"O ye who believe! Fear Allah and be with those who are true (in word and deed)." [Qur'an, Al-Tauba, 009.119]

Then which of the favors of your Lord will ye deny?
[THE HOLY QURAN, AR-RAHMAN]

Wednesday, December 23, 2009

Application for Imam post (Singapore)

From: Farook M
Date: Tue, Dec 22, 2009 at 8:05 AM
Subject: Application for Imam post (Singapore)
To: ilumseeker@gmail.com


Asslamu alikum

Applications wanted for Imam post

We are looking for an enthusiastic Tamil speaking Imam, with the following qualification
- Hafiz
- Alim
- Knowledge of current affairs
- Able to converse in English would be an added advantage

Interested applicants, please send your resume with a copy of your recent photo, qualification certificates and recording of your qirath (Quranic recitation) and speech in Mp3 format to:

Secretary
Masjid Abdul Gafoor
41 Dunlop Street
Singapore 209369

email: masjidag@superdsl.com.sg

For enquiries, please email to Secretary, Masjid Abdul Gafoor at masjidabdulgafoor@gmail.com

Note: Only short listed candidates will be notified

Please fwd to your alim contacts who may be interested. Jazakallah.

Salaam

Tuesday, November 24, 2009

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சி

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சி
துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் அமீர‌க‌த்தின் 38 ஆவ‌து தேசிய‌ தின‌ம், வேலூர் எம்.பி. எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சிக‌ளை டிச‌ம்ப‌ர் 2 ஆம் தேதி இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளி ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இம்மாபெரும் விழாவில் அமீர‌க‌த்தில் வாழ்ந்து வ‌ரும் இந்திய‌ ம‌க்க‌ளுக்குப் ப‌ல்வேறு சேவைக‌ளை ஆற்றிவ‌ரும் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, தொழில்துறை ம‌ற்றும் ம‌னித‌நேய‌ப்ப‌ணிக‌ளுக்கு உத‌வி வ‌ரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன், ச‌மூக‌ சேவைக்காக‌ இந்திய‌ க‌ம்யூனிட்டி வெல்ஃபேர் க‌மிட்டியின் க‌ன்வீன‌ர் கே. குமார் உள்ளிட்டோர் கௌர‌வ‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌ர்.
மேலும் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து.

இவ்விழாவிற்கு க‌லைப்புலி தாணு சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்கிறார். ச‌ன்டிவி க‌ல்யாண‌மாலை புக‌ழ் வாசுகி ம‌னோக‌ர‌ன் குழுவின‌ரின் ப‌ட்டிம‌ன்ற‌ம், இசைய‌மைப்பாள‌ர் க‌ங்கை அமர‌ன் த‌லைமையில் பாட்டுக்கு பாட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து. துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ குழ‌ந்தைக‌ளின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சியும் இட‌ம்பெற‌ இருக்கிற‌து.

அனும‌திச் சீட்டு உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கினுள் அனும‌திக்க‌ப்ப‌டுவ‌ர். அனும‌திச் சீட்டுக‌ளை பெற‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் சி. ஜெக‌நாத‌ன் 050 5787657 / விழாக்குழு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா 050 467 4399 / 050 51 96 433 / dubaitamilsangam@gmail.com உள்ளிட்ட‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொண்டு பெற‌லாம்.