Friday, January 9, 2009

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அலுவ‌ல‌க‌த்தில் வெள்ளிக்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக‌ ப‌த்ருதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். இக்கூட்ட‌த்தில் தாய‌க‌த்தில் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுவ‌து குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. தாய‌க‌த்தில் உள்ள‌ ஜ‌மாஅத் ச‌பை நிர்வாகிக‌ள் ஒத்துழைப்புட‌ன் ப‌ல்வேறு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட வேண்டிய‌தன் அவ‌சிய‌ம் குறித்து விள‌க்க‌ப்ப‌ட்ட‌து.

ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் கூட்ட‌ம் அமீர‌க‌த்தில் முத‌ன் முறையாக‌ ந‌டைபெற்ற‌து. இக்கூட்ட‌த்தில் ஆர்.முன‌வ‌ர்தீன், ஏ.ச‌த‌க்க‌த்துல்லா, ஏ. ர‌பீக் அஹ‌ம‌து, எஸ். முஹ‌ம்ம‌து யூசுப், எஸ்.அக்ப‌ர் அலி, எம்.ப‌ஜ்ருல் ஹ‌க், ஏ.சைய‌து அப்தாஹிர், எஸ். ச‌பீர் ஹுசைன், பி.ப‌த்ருதீன், எஸ்.பி.சாஹுல் ஹமீது, ச‌ஹாபுதீன் உள்ளிட்ட‌ ப‌ல்ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ஆர்.முனவ‌ர்தீன் கூட்ட‌த்திற்கான‌ ஏற்பாடுக‌ளைச் செய்திருந்தார். அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து கீழ‌முஸ்லிம் ஜமாஅத் ச‌பையின் அங்க‌த்தின‌க‌ள் ஆர். முன‌வ‌ர்தீன் 055 4064883 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.




Thursday, January 8, 2009

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை
மத்திய அரசு உத்தரவு


சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு), பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌..........

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌..........

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌ விரும்புவோர் கீழ்க்க‌ண்ட‌ உம்ரா ப‌யண முக‌வ‌ரை அணுக‌லாம்.

இன்ஷா அல்லாஹ் ர‌பியுல் அவ்வல் முத‌ல் ர‌ம‌ளான் மாத‌ம் இறுதி வ‌ரை ஒவ்வொரு மாத‌மும் உம்ரா செய்வ‌த‌ற்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு டீல‌க்ஸ் ப‌ஸ், உண‌வு வ‌ச‌தியுட‌ன் த‌மிழ் வ‌ழிகாட்டியுட‌ன் பிர‌த்யோக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌ய‌ண‌த்தேதி ஹிஜ்ரி 1430 ர‌பியுல் அவ்வல் பிறை 21, 18.03.2009

மேலும் விப‌ர‌ங்க‌ள் அறிய‌ தொட‌ர்பு கொள்ள‌

டி.எம்.ஐ. அப்துல் ஸ‌லாம் 050 695 3197
டி.ஏ. மிஸ்பாஹுதீன் 050 5152721

தொலைபேசி : 04 2251047 / 04 2260252

அமீர‌க‌த்தில் வாழும் இந்திய‌ர்க‌ளுக்கு 2009 ல் ஹஜ் செய்ய‌ முன்ப‌திவு செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

விருதுநகர், ஜன.8.

இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், காந்தீயமும், நேருவின் பொருளாதாரக் கொள்கைகள்தான் உலக அளவில் நிலைத்து நிற்கக்கூடியவை என்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.


ஸ்ரீவில்லி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலக்கிய வட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக்கழக வேந்தர் தி.கலசலிங்கம் தலைமை தாங்கினார். துணை வேந்தர் டாக்டர் செல்லையாதங்கராசு, டாக்டர் எம்.ஜெயகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேணுகா வரவேற்புரையாற்றினார். சந்தியா நன்றி கூறினார். இந்து லட்சுமி அறிக்கை வாசித்தார். கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் பேசும்போது கூறியதாவது இன்டர்நெட்டில் இந்த தலைப்புக்கு 2 கோடியே 22 லட்சம் அர்த்தமுள்ள சொற்றொடர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் ஞீங்குன்றனர் என்ற புலவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியதை அன்னை இந்திராகாந்தி ரஷியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார். அதையே நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற தனது நூலில் குறிப்பிட்டார். மாணவர்களாகிய ஞிங்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பிச் செல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஞிங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வல்லுநர்களாக மாற முடியும்.

உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை அறிவுக்கூர்மையை பயன்படுத்த நாடுகள் தயாராக உள்ளன. உலகில் உள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் எந்த நாடும் எந்த நாட்டிலும் வாணிபம் செய்யலாம்.

பணத்தை வங்கியில் போடலாம். உங்கள் திறமையை 151 நாடுகளில் காட்டி முன்னேற முடியும். டெக்னாலஜிக்கு எல்லை கிடையாது. இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவிலும், சைனாவிலும் தான் மனித வலம் கொட்டிக்கிடக்கிறது. எனவேதான் இங்கிருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துப்போகின்றன.

1995_ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவானது. இன்டர்நெட் உலகில் வாழ்கிறீர்கள். சந்தையில் எது தேவைப்படுகிறதோ அதை உருவாக்குங்கள். வெளிநாட்டவர் இங்கே முதலீடு செய்கிறார்கள்.

உங்களுக்கு இங்கேயே நிறைய வாய்ப்புள்ளது. இப்போது வந்தது போல் பொருளாதாரப் பாதிப்பு சில துறைகளில் வரலாம். ஐ.டி. போல் நமது நாட்டில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நேருவின் பொருளாதாரக் கொள்கையும், காந்தீயக்கொள்கையும் தான் உலகில் நிலைத்து நிற்கும் சக்தி வாய்ந்தவை. நமது பொருளாதாரம் நல்ல ஸ்திரத்தன்மையோடு விளங்குகிறது. உள்ள இருப்பையும் சேர்த்தால் பல லட்சம் கோடி இருப்பு ஆதாரம் உள்ளது. நமது ரிசர்வ் வங்கி சட்டங்கள் பாதுகாப்பானவை.

இப்போதுதான் இதுபோல் (ஆர்பிஐ) நாமும் செய்யலாமா என்று அமெரிக்கா ஆய்வுசெய்கிறது. மிகப்பெரிய கம்பெனிகளுக்குத்தான் ரிஸ்க் அதிகம். நமது பொருளாதாரம் ஒரு மிக்ஸ்டு எக்கனாமி. இப்போதெல்லாம் எம்.பி.ஏ. வகுப்புகளில் யோகா, பகவத்கீதை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே உலகமயமாதலில் உங்கள் பங்கு இந்த நாட்டிற்கு பயன்படுவதாக இருக்கட்டும் என்றார்.

விழா நிகழ்ச்சிகளை ராஜேஸ்சர்மா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரா.யவனராணி, டாக்டர் சக்திவேல் ராணி செய்திருந்தனர்.

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை

மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் 2522 8025
மாவ‌ட்ட‌ வ‌ருவாய் அதிகாரி 2522 9454
ஆட்சிய‌ரின் நேர்முக‌ உத‌வியாள‌ர் ( பொது ) 2526 8323

வ‌ட்டாட்சிய‌ர்க‌ள்

த‌ண்டையார்பேட்டை 2538 8978
புர‌சைவாக்க‌ம் பெர‌ம்பூர் 2537 5131
எழும்பூர் நுங்க‌ம்பாக்க‌ம் 2836 1890
மாம்ப‌ல‌ம் கிண்டி 2489 164
ம‌யிலாப்பூர் திருவ‌ல்லிக்கேணி 2433 1291


காவ‌ல்துறை த‌லைமை இய‌க்குந‌ர் 2844 7777/2844 7755
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( ச‌ட்ட‌ம் ஒழுங்கு ) 2844 7799
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( நிருவாக‌ம் ) 2844 7705
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( த‌லைமை அலுவ‌ல‌க‌ம் ) 2844 7706

தீய‌விப்புத்துறை இய‌க்குந‌ர் 2855 4156
தீய‌விப்பு க‌ட்டுப்பாட்டு அறை 2855 4176

தீய‌விப்பு நிலைய‌ங்க‌ள்

திருவான்மியூர் 2440 1213
கொருக்குபேட்டை 2554 4662
ஜெ.ஜெ.ந‌க‌ர் 2656 3629
கோய‌ம்பேடு 2479 2610
ஆளுந‌ர் மாளிகை 2235 4835
எழும்பூர் 2575 0633
ம‌ண‌லி 2594 1147
அத்திபட்டு 2795 0080

சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னை முத‌ல்வ‌ர் 2530 5111
இருப்பிட‌ ம‌ருத்துவ‌ அதிகாரி 2530 5555

நூல் அறிமுக‌ம்

நூல் அறிமுக‌ம்

நூல் : இந்தியாவில் இஸ்லாமிய‌ இய‌க்க‌ம்
ஆசிரிய‌ர் : ஷேக் முஹ‌ம்ம‌து கார‌க்குன்னு
ப‌க்க‌ம் : 64
விலை : ரூ. 20
வெளியீடு : இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட்
எண். 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012

www.iftchennai.org

பொங்கல் வாழ்த்து"

பொங்கல் வாழ்த்து"

சோற்றிலே நாம் கை வைத்திட-
சேற்றிலே கால் வைத்து;
ஏற்றமுடன் ஏர் பிடித்து;
ஆற்றலுடன் தான் உழைத்திடும்
போற்றுதலுக்குரிய உழவர்களின்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இல்லத்தில் செல்வம் பொங்க
இனிவரும் காலமெல்லாம்
இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க
சக்கரைப் பொங்கலாய்
எக்கணமும் இன்பமே பொங்கட்டும்....................!!!!!!!!!!!!

கவிதைப் பொங்கல் சமைத்து
"கவியன்பன்" கலாம் தருகின்றேன் வாழ்த்து.

-"kavianban"kalam, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Government of India has an online Grievance forum

Government of India has an online Grievance forum at http://www.pgportal.gov.in

Dont think like """Can you imagine this is happening in INDIA ? ""

I mistale lies with us, the people 75%..That we should agree open heartedly.....

The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.

Many of us say that these things don't work in India .
Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.

So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India .

உண்மையான தேசத் தலைவர்

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.. அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

மனிதர்களே!

இதனால் சகலமானவர்களுக்கும்’. புத்தகத்தின் முன்னுரை…

மனிதர்களே!

இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.
உதிரும் பழமைகள் உதிரட்டும்.
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.

ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.

பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.
துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.

தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள்.
அவசரப்படாதீர்கள்

அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.
இங்கே மலர்களுக்குதான் முதல் மரியாதை.
வேர்கள் வெளிவருவதேயில்லை
தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.
சுறுசுறுப்பாயிருங்கள்.

ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஆக்சிஜன் அதிகம்.

எல்லோரையும் மதியுங்கள்.
சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ -
எவருக்குத் தெரியும்.

உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல -ஊர் பேசட்டும்.
பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது.
இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றி வைத்திருக்கிறது.
மகிழ்ச்சி…மகிழ்ச்சி…மகிழ்ச்சியைத் தவிர இந்த விரிந்த பிரபஞ்சத்தில் வேறில்லை.
துன்பம் என்பது அறியாமை.
துன்பம் என்பது அறிவின்மை.
அறிவில் நிமிருங்கள்.
அன்பில் நெகிழுங்கள்.
உழைப்பில் உயருங்கள்.
பிறகு பாருங்கள்.

இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும்.

- வைரமுத்து

Wednesday, January 7, 2009

நம்ம ஊரு செய்தி மாத இதழ்

நம்ம ஊரு செய்தி மாத இதழ்


http://www.nammaooruseythi.com/

மில்லி கெஜட்

மில்லி கெஜட்

http://epaper.milligazette.com/mg/epapermain.aspx

மில்லி கெஜட்

மில்லி கெஜட்

http://epaper.milligazette.com/mg/epapermain.aspx

வேலைவாய்ப்புத் தளங்கள்

www.monstercom



GULF REGION

Bahrain Jobs
http://www.gulfjobsites.com/jobs/Bahrain/

Gulf Jobs
http://www.gulfjobsites.com/jobs/Gulf/

Iran Jobs
http://www.gulfjobsites.com/jobs/Iran/

Iraq Jobs
http://www.gulfjobsites.com/jobs/Iraq/

Kuwait Jobs
http://www.gulfjobsites.com/jobs/Kuwait/

Oman Jobs
http://www.gulfjobsites.com/jobs/Oman/

Qatar Jobs
http://www.gulfjobsites.com/jobs/Qatar/

Saudi Arabia Jobs
http://www.gulfjobsites.com/jobs/Saudi_Arabia/

Top Companies in the Gulf
http://www.gulfjobsites.com/jobs/Top_Companies/

United Arab Emirates Jobs
http://www.gulfjobsites.com/jobs/United_Arab_Emirates/



CATEGORIES BY PROFESSION

Accounting Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Accounting_and_Finance

Agriculture and Forestry Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Agriculture_and_Forestry_Jobs

Architecture and Civil Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Architecture_and_Civil_Engineering_Jobs

Arts and Entertainment Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Arts_and_Entertainment

Arts Education Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Arts_Education_Jobs

Automotive Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Automotive_Jobs

Aviation and Aerospace Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Aviation_and_Aerospace_Jobs

Biotechnology & Pharmaceuticals Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Biotechnology_and_Pharmaceuticals_Jobs

CAD and CAM Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/CAD_and_CAM_Jobs

Chemical Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Chemical_Engineering_Jobs

Chemistry Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Chemistry_Jobs

Childcare Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Childcare_Jobs

Construction and Maintenance Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Construction_and_Maintenance_Jobs

Disabled Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Disabled_Jobs

Education Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Education

Electronic Commerce Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Electronic_Commerce_Jobs

Electronics and Electrical Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Electronics_and_Electrical_Jobs

Emergency Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Emergency_Services_Jobs

Energy and Environment Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Energy_and_Environment_Jobs

Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Engineering_Jobs

Fashion and Modeling Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Fashion_and_Modelling_Jobs

Financial Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Financial_Services_Jobs

Food and Related Products Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Food_and_Related_Products_Jobs

Food and Restaurant Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Food_and_Restaurant_Jobs

Graphic Design Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Graphic_Design_Jobs

Healthcare Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Healthcare_Jobs

Home Based Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Home_Based_Jobs

Hospitality Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Hospitality_Jobs

Human Resources Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Human_Resources_Jobs

Industrial Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Industrial_Engineering_Jobs

Industrial Goods and Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Industrial_Goods_and_Services_Jobs

Insurance Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Insurance_Jobs

IT Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/IT_Jobs

Jobs for Students
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Jobs_for_Students

Jobs in NGOs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Jobs_in_NGOs

Knowledge Management Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Knowledge_Management_Jobs

Law Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Law_Jobs

Library and Information Science Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Library_and_Information_Science_Jobs

Management Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Management_Jobs

Mapping and GIS Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Mapping_and_GIS_Jobs

Marketing and Advertising Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Marketing_and_Advertising_Jobs

Material Sciences Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Material_Sciences_Jobs

Mechanical Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Mechanical_Engineering_Jobs

Media and Publishing Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Media_and_Publishing_Jobs

Medicine Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Medicine_Jobs

Nonprofit Resources Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Nonprofit_Resources_Jobs

Nursing Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Nursing_Jobs

Oil and Gas Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Oil_and_Gas_Sector

Open Source Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Open_Source_Jobs

Philosophy Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Philosophy_Jobs

Plastics Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Plastics_Engineering_Jobs

Real Estate Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Real_Estate_Jobs

Referral Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Referral_Services_Jobs

Retail Trade Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Retail_Trade_Jobs

Science Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Science_Jobs

Sports Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Sports_Jobs

Telecommunications Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Telecommunications_Jobs

Translation Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Translation_Services_Jobs

Transportation and Logistics Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Transportation_and_Logistics_Jobs

Travel and Tourism Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Travel_and_Tourism_Jobs



OTHER IMPORTANT REGIONS

Afghanistan Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Afghanistan

Australia Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Australia

Canada Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Canada

Egypt Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Egypt

Europe Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Europe

Finland Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Finland

India Jobs - VERY LARGE SECTION
http://www.gulfjobsites.com/jobs/World/India

South Africa Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Jobs_in_South_Africa

Jordan Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Jordan

Lebanon Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Lebanon

New Zealand Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/New_Zealand

Pakistan Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Pakistan

Philippines Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Philippines

Syria Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Syria

United Kingdom Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/United_Kingdom

United States of America Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/United_States_of_America

World Job Sites
http://www.worldjobsites.org



SOME OTHER USEFUL SECTIONS

Directory of Immigration Consultants
http://www.gulfjobsites.com/jobs/World/Immigration_Consultants

Resume Guidance
http://www.gulfjobsites.com/jobs/Depts/Resume_Guidance/

Resume Writing Services
http://www.gulfjobsites.com/jobs/Depts/Resume_Writing_Services/

Tuesday, January 6, 2009

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு


சென்னை, ஜன.6-

கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன. விரிவுரையாளர்களும், உதவி பேராசிரியர்களும் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என்று பதவி உயர்வு பெறுவார்கள்.

தற்போது விரிவுரையாளர் பணிக்கு எம்.பில். அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பி.எச்டி. முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

யு.ஜி.சி. பரிந்துரை

இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.கே.சதா கமிட்டியின் பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விட கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்று 3 வகையான ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், சதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

பி.எச்டி. கட்டாயம்

இந்த நிலையில், யு.ஜி.சி. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற அடிப்படையில்தான் ஆசிரியர் பணி இடங்கள் இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு கண்டிப்பாக பி.எச்டி. தேவை என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இணை பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் பி.எச்டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதிய நியமனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையே தீர்வு!

ஒற்றுமையே தீர்வு!

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1125&Itemid=52

உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.

கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.

கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.

மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.

அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.

தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.

இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.

இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.

ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.

மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.

எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.

வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!

கல்வி உதவித்தொகை

1.ஐக்கிய பொருளாதரப் பேரவை
அலி டவர்ஸ் 55 கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு சென்னை-6
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

2. இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க்
முஸ்டாக் அஹமது (ஐ.டி..பி)
11 இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை-14
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

3. ஆல் இந்தியா இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
688 அண்ணாசாலை
சென்னை-6

4. பி.எஸ் அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் ஃபவுண்டேஷன்
4 மூர்ஸ் சாலை
சென்னை-6
(ஜகாத் உரியவர்களுக்கு மட்டும்)

5. முகம்மது சதக் அறக்கட்டளை
133 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-34

6. மெஜஸ்டிக் ஃபவுண்டேஷன்
117 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை-2

7. ஆலிம் முகம்மது சாலிஹ் அறக்கட்டளை
நிசாரா பொனன்ஸா எல்.ஐ.சி எதிரில்
அண்ணாசாலை
சென்னை-2

8. செய்யது வெல்ஃபேர் டிரஸ்ட்
சிந்துபூந்துரை
நெல்லை

9. அஸ்மாகாசிம் அறக்கட்டளை
மாண்ட்டியத் சாலை
எக்மோர் சென்னை-8

10. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்ஃபேர் டிரஸ்ட்
டி-பிளாக் 10(23) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை-40

11. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை-3

12. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

27-உட்ஸ் சாலை

சென்னை-2

13. தமிழ்நாடு பைத்துல்மால்
வாலாஜா மசூதி வளாகம்
காயிதே மில்லத் நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி சென்னை-5

14. கீழக்கரை பைத்துல்மால்
கீழக்கரை

15. அடையாறு பைத்துல்மால்
அடையாறு மசூதி எல்.பி ரோடு
சென்னை-41

16. சகோதரத்துவ சமூக நீதிப் பேரவை
ரயிலார் நகர்
மதுரை-18

17. மியாஸி அறக்கட்டளை
புதுக்கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை-14

18. எஸ்.ஐ.இ.டி.
கே.பி தாசன் ரோடு
தேனாம்பேட்டை சென்னை-18

19. எஸ்.அஹமது மீரான்
புரபசனல் கொரியர்ஸ்
மகாராஐh சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டைசென்னை-18

20. மெப்கான்
தபால்பெட்டி எண் 3
திருமங்களம்
மதுரை-625106

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம்.
.
இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது.

பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை பாடியோ அல்லது முனுமுனுத்தோ, அதற்கு நிகரான பாடல்களை தேடலாம். விரும்பிய பாடல்களை தேடிப் பெறும் வசதியைத் தரும் இணைய தளங்கள் அனேகம் இருக்கின்றன.

ஆனால் பாடல்களை பாடிக்காட்டியே தேடக் கூடிய, புதுமையான வசதி தரும் தளம் இது மட்டும்தான். அந்த வகை யில் இந்த தளம் மிகவும் சுவாரசியமானது.
தற்போது அறிமுகமாகும் எந்த தளமும், சமூக பண்பு இல்லாமல் இருப்பதில்லை. அதாவது இணைய வாசிகள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொள்ளும் சேவை யையும் சேர்ந்தே வழங்குகின்றன. இந்த தளமும் இத்தகைய சமூக பண்புடனேயே உதயமாகியிருக்கிறது.

இசைப்பிரியர்கள் இந்த தளத்தின் மூலம் மற்ற இசைப்பிரியர்களை தொடர்பு கொண்டு நண்பர்களாக முடியும். பாடல்களை பாடி காட்டும் போது, அதே பாடலை வேறு யார் பாடியிருக் கிறாரோ, அதனை நாம் கேட்டு மகிழ முடியும். அது பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அவரோடு நட்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிடித்தமான பாடல்களை பாடுவதன் மூலமும், அவற்றை மற்ற வர்கள் பாடிக் காட்ட கேட்டு கருத்து சொல்வதன் மூலமும் இசைப்பிரியர் கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்தமுறை வேறு யாராவது பாடலை பாடி தேடும் போது, நீங்கள் பாடி வைத்திருக்கும் பாடல் அவருக் கான பட்டியலில் முதலிடத்தில் வந்து நிற்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர் அதனை கேட்டு ரசித்து உங்களோடு தொடர்பு கொண்டு, நண்பராகும் வாய்ப்பு உள்ளது.
மற்ற எந்த இசையைச் சேர்ந்த தளங்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம், இந்த தளத்தில் எந்த மொழியிலும் பாடலாம் என்பதே. பெரும்பாலான இசைத் தளங்களில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கிறது. நம்மவர்கள் தமிழ் பாடலை கேட்க விரும்பினால் அந்த தளங்கள் கைகொடுக்காது.

ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை. தமிழிலேயே பாடித் தேடலாம்.
இது போல எந்த உலக மொழியிலும் பாடல்களை பாடலாம். காலப் போக்கில் இந்த தளம் பிரபலமாகி பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறும் போது எல்லா மொழி களிலும் பொருத்தமான பாடல்களை தேடுவது சாத்தியமாகலாம்.

இந்த தளத்தில் தேடுவதோடு, தங்களுக்கான தனி பக்கத்தையும் உருவாக்கி கொண்டு சுருக்கமான சுயசரிதை விவரங்களை வெளியிட்டு, ஒத்த ரசனை உள்ளவர்களை தேடி நட்புறவு கொள்வது மிகவும் சுலபமானது. இத்தோடு பிடித்தமான பாடல்களை இந்த தளத்தின் மூலமே காசு கொடுத்து வாங்கவும் முடியும்.

இசையையும், இசைச்சார்ந்த மனிதர் களையும் தேடுவதை சுலபமாக்கும் சுவாரஸ்யமான தளம் என்று இதனை வர்ணிக்கலாம். இசைப்பிரியர்கள் இந்த தளத்தில் தங்களை மறந்து மூழ்கிக் கிடக்கலாம்.

www.midomi.com

Minambur Foundation

Dear All,

We give free service and coordination for getting admission for the following Institutes.

For MBA in Indian and UK universities minimum qualification must be a graduation. For USA online university, you can apply, if you have experience of two years with a two year diploma of any course.

Please visit the websites and choose a suitable course according to your qualification and requirements.

If you find any difficulty, please feel free to meet me in our office to decide.

1) English language courses in UK for any age group at London Study Center (www.londonstudycentre.co.uk )(British council approved Institute). These are full time courses in London , UK . On admission guidance will be given for visa procedure.

2) International School of Business Studies (www.isbs.org.uk). - Business Studies and Accountancy courses in London , UK for regular students. (British council approved Institute) MBA degree awarded by " Wales University ". These are full time courses in London, UK. On admission, guidance will be given for visa procedure. These courses can be converted part time to find a job after some time. IELTS requirement can be relaxed. Assured admission guaranteed.

3) Banasthali Deemed University, Rajasthan, India, (www.banasthali.org): Self study B.Ed. (One year), M.Ed. (One year), BBA, B.Sc.(Comp.Sci), MBA, etc. distance courses from Banasthali University , (Accredited, Indian Human resources Ministry approved university), for working class.

4) Online courses of Washington American Global University, (private non-accredited, registered university) USA for senior working class.(www.wagu-edu.us) , Any country Embassy attestation can be obtained.

Ashfaq Hussain
Saad Othman Al-Brahim Cont. Est. (Educational services).
Minambur Foundation (Chennai , India ),
14, Hafsa Bint Umar Street , Raudah-I,
P.O.box-100805, Riyadh- 11645.
Phone# 01 4915683, Fax# 01 4931988,
Mobile # 0551986077, Email: ashfaq106@gmail.com

என் செய்வேன்?

என் செய்வேன்?

http://www.muduvaivision.com/data/kavithai.asp?id=8

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை
வேலிகளால் அடைத்து – நாலாபுறமும்
வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால்
வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும்

காளை கரவை மாடுகளை எல்லாம்
கயிறுகளால் கட்டி வைத்து
தார் குச்சிகளால் தினமும்
தீண்டினால் அவை என் செய்யும்

காண்பவர் வாழாவிருப்பாரோ
கண்களை முடிகொள்வாரோ
வாயில்லா ஜீவன் அதை
வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ

மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா
மனித மனம் என்ன
மிருகத்திலும் கொடியதா – அல்லது
மங்கி மழுங்கி விட்டோடா?

பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது
பிழைக்க வந்த வந்தேரிகளால்
ஏ அமெரிக்காவின் கள்ள குழந்தையே
இஸ்ரேல் எனும் ஈனப்பிரவியே

ஏதைக் கண்டுவிட நீ துடிக்கிறாய்
யாரை வெல்வோம் என நினைக்கிறாய்?
மண்ணில் சாய்ந்தவரெல்லாம் மாண்டுவிட்டனரா - இல்லை
மறுமை சோலையின் மலர்களாகி விட்டனர்

வீழாத வல்லரசு உண்டா?
வீண்சுமர் வென்று
வெற்றி வாகை சுஉடிய கொற்றவன் எவனும்
உலகில் உண்டா?

தொடுத்த போர்கள் எல்லாம்
தொடர்வதைத்தானே பார்க்கிறோம்
வியட்நாம் பாடம் தரவில்லையா
வீழவில்லை இன்னும் பாரசீகமும் ஆப்கானும்


உயிர் துறந்த எங்களது உடல் உறுப்பே
உன் உடல் வடிக்கும் குருதியால்
என் இகம் துடிக்கும் செய்தியை
என் இதயம் கேட்கும் கேள்வியை

அது உகுக்கும் கண்ணீரை
எப்படி துடைப்பேன் - இறைவனிடம்
இரு கைகளை ஏந்துவதை தவிர நான்
என் செய்வேன்? என் செய்வேன்?


முதுவை சல்மான் - ரியாத்-அல்ஜிரியா
salmanhind007@yahoo.co.in