Sunday, February 22, 2009

துபாயில் வாரந்தோறும் தமிழில் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாரந்தோறும் தமிழில் மார்க்க சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

18.02.2009 புதன்கிழமை நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் அஸ்கர் அலி பிலாலி சிஷ்தியுல் காதிரி ‘கருணை நபி.......’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தமிழகப் பெருமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக மஃரூப் செயல் பட்டு வருகிறார்.

No comments: