வெளிச்சம் தோன்றும்
கடந்து போன கசப்பான நாட்களை நினைத்து வருந்தாமல் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்து பயப்படாமல் இன்று செய்யும் காரியத்தில் முனைந்திருப்பவனே புத்திசாலி என்று ஓர் அறிஞர் சொல்கிறார்.
கடந்த காலம் என்பது கனவு போன்றது. அதை மறந்து விடவேண்டும். எதிர் காலம் என்பது நிச்சயமில்லாத ஒன்று. ஆனால் நிகழ் காலம் என்பது நிஜமானது. எனவே இதில் கவனம் செலுத்துபவனே புத்திசாலி என்பது அந்த அறிஞரின் கூற்று.
இன்று என்பது கையிலிருக்கும் ரொக்கம் மாதிரி. நாளை என்பது லாட்டரி சீட்டு மாதிரி. மூன்று காலங்களில் நிகழ் காலமே முக்கியம். அதற்கு கடந்த காலம் ஒரு பாடம். எதிர் காலம் ஒரு லட்சியம்.
இந்த நிகழ் கால வாழ்வின் திட்டம் எதுவாக இருக்க வேண்டும்?
சிக்கனம்தான் முதல் திட்டமாக இருக்க வேண்டும். அளவான செலவு. திட்மிட்ட செலவு. பிறகு அதில் கொஞ்சமாவது சேமிப்பு என்று திட்டத்தை வகுத்தால் வாழ்க்கை நலமாக இருக்கும். நாளை என்ற பயம் நீங்கும். சேமிப்பே நம்பிக்கையூட்டும்.
இதைத் தவிர நம்பிக்கையுள்ள திடமான மனம் அமைய என்ன வழி?
தினசரி கொஞ்சம் தியானம். காலை - மாலை ஐந்து நிமிடம் கூடப் போதும். மனதைப் பண்படுத்தி அதனைத் தறிகெட்டு ஓடவிடாது உங்கள் வசமாக்கிக் கொணடால் நீங்களே வெற்றி வீரர்.
இப்படிப் பல விதங்களில் நம்மை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதற்குத் திட்டமிட வேண்டும். அதற்கேற்றபடி செயல்பட வேண்டும். நேற்றைவிட இன்று உயர்ந்து பண்பட்டிருக்க வேண்டும். இன்றைவிட நாளை மேலும் உயர்நிலையில் இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களை விட நாம் நன்றாக வாழ்கிறோம். நாகரீகமாக வாழ்கிறோம்.அறிவியல் சாதனங்களை அனுபவிக்கிறோம். நம் சந்ததியினரை இதைவிட நன்றாக வாழ வைக்க வேண்டும் அல்லவா? அதற்கு நாம் திட்டமிட வேண்டும்.
ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!
விடி வெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகத்தான் இருக்கும்.
ஆனால் நிச்சயம் வெளிச்சம் தோன்றும்.
http://www.valoothoor.com/
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Wednesday, August 6, 2008
லட்சியக் கவிஞர் இக்பால்
ஏப். 21: இக்பால் நினைவு தினம்
'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்
எம்.ஜெ.முஹம்மது இக்பால்
(இக்கட்டுரையாளர் மதம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதிவருபவர். சமூக நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றுபவர். துபாய் பொறியியல் நிர்வாக சங்கத் தலைவர். துபாயில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர்.)
''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''
இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.
அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.
அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் அவரிலிருந்து 150 வருடத்திற்கு முற்பட்டவர்கள், காஷ்மீர் பிராமண பண்டித இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர், முஸ்லிம் சூஃபி ஞானியால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கைகளிலும், ஆன்மிகத்திலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்தார். ஷேக் நூர் முஹமதுவின் மகனாக பிறந்த இக்பால் இளம் பிராயத்திலேயே கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்புற்று விளங்கினார்கள். பரம்பரை முஸ்லிமாக இருந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மை, ஞானநெறி போன்றவற்றை மறந்திருந்த அக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஞான நெறிகளை, கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்த அல்லாமா இக்பால் அவர்கள்,
''மீரும் மீர்ஸாவும்
தம் உள்ளத்தையும் சமயத்தையும்
அரசியலில் மூழ்கடித்து விட்டனர்.
இந்த பிராமணச் சிறுவன் மட்டுமே
அந்தரங்களை அறிந்தவனாக இருக்கின்றான்''
என்று பாடினார்.
இளம் வயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அல்லாமா இக்பால் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை கால தாமதமாக வகுப்பிற்கு வரவே, ஆசிரியர் ''ஏன் தாமதம்'' எனக் கேட்க, அதற்கு இக்பால் அவர்கள் ''ஐயா, இக்பால் தாமதமாகத்தானே வரும்'' எனக்கூறி இக்பால் என்ற சொல்லுக்கு புகழ் என்றொரு அர்த்தம் உள்ளது என விளக்கி ஆசிரியரை வியக்கச் செய்தார்.
இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட நிபுணராக விளங்கிய ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ அவர்கள் அல்லாமா இக்பாலைப்பற்றி
குறிப்பிடும் போது ''உலகின் இக்கால மகா கவிகளில் அல்லாமா இக்பால் தலையானவர். உர்து, பாரசீக மொழிகளில் பாட்டுக்கள், கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த தொழிலாளி. கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக நான் அவரை ஒரு முதல்தரமான கவிஞராகவும், சிந்தனையாளராகவும் மதித்து போற்றி வருகின்றேன்'' என கூறுகின்றார்.
''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா''
தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டதற்கு அல்லாமா இக்பாலின் ''உலகம் முழுவதிலும் சிறந்தது எம் ஹிந்துஸ்தானம்'' என்று அர்த்தம் கொண்ட, இன்றும் எல்லா தரப்பினராலும் எல்லா நிகழ்ச்சியிலும் பாடலாக இன்றி இசையாக இசைக்கப்படுகின்ற ''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா'' என்கிற பாடல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
இந்தியா பல மதங்கள், பல வழிபாடுகள், பல மக்களைக் கொண்டு நாடு. எனவே
''மதம் ஒருவரோடொருவர்
சண்டை போடச் சொல்லவில்லை
ஹிந்த் நமது ஜென்ம பூமி
ஹிந்துஸ்தான் நம்முடையது''
எனப் போற்றி புகழ்ந்தார். மேலும் ''ஓ சிந்தனையற்றவனே, உன் நாட்டை எண்ணிப்பார். மேல்நாட்டில் உன்னை அழிக்க சதி நடக்கின்றது. நடப்பதையும் நடக்க இருப்பதையும் பார். வெறும் பழங்கதை பேசுவதில் என்ன இருக்கின்றது? இதை உணராவிட்டால் இந்திய மக்களாகிய நீங்கள் அழிக்கப்படுவீர்கள். உலகச் சரித்திரத்தில் உங்களின் அடிச்சுவடு இல்லாது போகும்'' என்றும்
என்னரும் இந்தியச் சகோதரர்களே!
''நீங்கள் இத்தோட்டத்தின் பாதுகாவலர்கள். எனவே இதன் பிளவு நீங்க வழிகாணுங்கள். அப்பிளவு என்னும் பேய்க்காற்று செடிகளைப் பாழாக்கி விட்டது'' மேலும் ''நீ இந்தியாவை கண்டதில்லையா? இதயமுள்ள யாரும் போற்றும் நாடல்லவா அது! அதன் ஒவ்வோர் அணுவும் உலகின் மீது ஒளி வீசினாலும், அந்தோ! அது புழுதியிலும், குருதியிலும் கிடந்து தத்தளிக்கின்றதே'' என ஜாவீது நாமா எனும் புத்தகத்தில் தனது மகனிடம் கேட்பதாக எழுதுகிறார். தனது மகன் ஜாவீது இடம் கேட்பது என்பது இளைஞர் சமூகத்திற்கே விடுக்கும் அறைகூவல் அது!
மேலும் ஒரு பாடலின் மூலம் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் போது
(காஜா மொயினுதீன்) க்ஷ¤ஸ்தி
சத்தியத்தின் செய்தியை எந்தப் பூமியில் பரப்பினாரோ,
(குரு) நானக் எந்தப் பூங்காவில்
ஏகத்துவ கீதத்தை பொழிந்தாரோ,
தாத்தாரிய (முகலாயர்கள்) எதைத்
தமது சுய நாடாக ஆக்கிக் கொண்டனரோ,
எது ஹிஜாஸ்வாசிகளை அரபுப் பாலையை விட்டு வந்து
(தன்னகத்தே) குடியேறச் செய்ததோ
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.
பாரஸீக வானிலே உடைந்து கிடந்த
(ஞானியர், கவிஞர்களாய) விண்மீண்கள்,
மீண்டும் ஒளி தந்து ஜொலிக்கச் செய்த
வானம் எங்குளதோ,
ஏகத்துவத்தின் நாதத்தை
உலகம் எத்தலத்திலிருந்து கேட்டதோ,
அரபு நாட்டின் அதிபர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு
தண்ணென்ற பூங்காற்று எங்கிருந்து வீசியதோ,
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.
மூஸா(அலை) இறைவனுடன் பேசிய
ஸீனா மலை உலகின் இதயமாகும்.
நூஹ§ (அலை) அவர்களின் கப்பல் (கடைசியில் வந்து)
முகாமிட்டுத் தங்கிய ஜுதி மலையும் சிறப்புடையதே!
(இது போலவே) வானமளாவ வளர்ந்து மாளிகை போல்
அழகு தந்து நிற்கும் இமயமலை எங்குளதோ,
எதன் சாரலில் வாழ்வது சொர்க்க வாழ்வோ
அதுவே என் தாய்த்திரு நாடு?
அதுவே என் தாய்த்திரு நாடு.
என தாய் நாட்டின் மீது உள்ள நேசத்தை பற்றி பாடலின் வாயிலாக கூறுகின்றார்.
அரசியல்
சிறப்பு மிக்க அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1930-ல் அல்லாமா இக்பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931-ல் லண்டனில் நடந்த 2-வது வட்ட மேஜை மாநாட்டிற்கு இக்பால் அவர்கள் ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நேருவிடம் முஸ்லிம்கள் நலம், சிறுபான்மையினர் நலம் இவற்றை எல்லாம் எடுத்துக்கூறி சுதந்திரம் பெற்ற பிறகு இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார், அவருடைய கருத்துகள் நேருவின் அயல் நாட்டு கொள்கைகளில் மிகவும் பிரதிபலிக்கவே செய்தது. அல்லாமா இக்பால் மரணப்படுக்கையில் இருந்தபோது பஞ்சாபில் கஞ்ச் மஸ்ஜித் தகராறு விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளை அடக்குவதற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அதை அறிந்து வேதனையடைந்த அல்லாமா டாக்டர் இக்பால் இயலாத இந்த நிலையிலும் ''என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய், கலவரம் நடக்கும் இடத்தில் வையுங்கள் துப்பாக்கி குண்டு முதலில் என் இதயத்தை துளைக்கட்டும். அப்பொழுதாவது ஒற்றுமை நிலைக்கட்டும்'' என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். பிற சமய மக்களையும், மதங்களையும் மதித்து வாழவேண்டும் என்று அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார். திருக்குர்ஆன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அடிப்படையில் மாற்று மதத்தினவர்களிடம் சுமூகமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தினார் கவிஞர்.
சமய நல்லிணக்கம்
இஸ்லாத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திருகுர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையையும் செம்மையுடன் பின்பற்றிய கவிஞர் நபியினை தரிசிப்பது என்பது நம் உடலை அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு உட்படுத்தி மனித நேயத்துடன் நடப்பது எனவும், இறையினை தரிசிப்பது நபியினால் போதிக்கப்பட்ட சொல், செயல்களை பின்பற்றி, இறையோடு சம்பந்தப்படும் கருணை, இரக்கம் முதலிய குணங்களை நம் மனதுள் வளர்த்து உலகிலும் அவை நிலவும்படி செய்தல்தான் என்கிறார். இஸ்லாமிய சமாதான அடிப்படையில், சாந்தி நிலவச் செய்தால் உலகில் அமைதி நிலவும் எனக்கூறும் கவிஞர், பிற சமயங்களை அன்புடன் நோக்கினார். கிருஷ்ணபகவானின் கீதை பெரிதும் அவரை கவர்ந்திருந்தது. ஹிந்து சமுதாயத்தை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் எனக் கூறிய கவிஞர், அலஹாபாத் முஸ்லிம் லீக் மகாநாட்டில் அவர் எழுப்பிய உரை ''பிற வகுப்பினரிடம் கெட்ட எண்ணங்கொண்ட எந்த வகுப்பும் கீழ்த்தரமானது; வெறுக்கத்தக்கது. பிற வகுப்பினரின் பழக்கவழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் நான் மரியாதை காட்டுகின்றேன். அவசியமேற்படின் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறபடி அவற்றை பாதுகாப்பது என் கடமையாகும். எனினும் என் வாழ்க்கை, நடத்தை ஆகியவற்றின் உற்பத்தியாக விளங்கும் வகுப்பிடம் நான் அன்பு கொண்டுள்ளேன்; அவ்வகுப்பு தன் மதம், தன் இலக்கியம், தன் கலாச்சாரம் ஆகியவற்றைத் தந்து எனது உணர்ச்சியில் ஜீவசக்தியாக நின்று நான் இன்றுள்ள நிலைக்கு என்னை உயர்த்திற்று.
மேலும் ஒரு பாடலில்
நான் கோயிலுக்கு மரியாதை செய்கிறேன்;
கஃபாவின் முன் அடிபணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு;
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.
என தனது உரையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும் தனது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
சிறப்பு மிக்க உர்தூ, பாரஸீக சிந்தனையாளர் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ ஒரு கடிதத்தில் அல்லாமா இக்பாலை பற்றி குறிப்பிடுகின்றார்.
''இக்பால் முஸ்லிம் தத்துவத்தையும், முஸ்லிம் கலைப்பண்பையும், முஸ்லிம் தீரச் செயல்களையும் பற்றி அதிகம் எழுதியுள்ளார் என்பது உண்மைத்தான். ஆனால் மில்டனைக் கிறிஸ்த்தவக் கவிஞன் என்று கூறி அவர் கவிதைகளை கட்டுப்படுத்தவோ, காளிதாஸனை ஹிந்து சமயக் கவி என்று கூறி அவர் கவிப் பெருமைக்கு வேலியிடவோ யாரும் முயன்றதில்லை; மற்ற மதத்தினரும் இதே காரணத்திற்காக இக்கவிஞர்களின் பெருமையைக் குறைத்துக் கூறியதுமில்லை. இக்பால் முஸ்லிம் சரித்திர வெற்றிகளையும் கலாசார சாதனைகளையும் குறித்து எழுதினால், அதற்காக முஸ்லிமல்லாதவர் அவரைக் குறையாக மதிப்பிட்டு விட முடியாது.
''ஊணாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோ எண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும். போலி ஒற்றுமை நிலைக்காது. உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள். ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும். நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லனவே செய்யுங்கள். வல்லவனுக்கு இது உகந்தது'' என மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஆன்மிகம்
ஆழ்ந்த நாட்டுப்பற்று கொண்டும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட கவிஞர் இக்பால் அவர்கள், இளைஞர்கள், செயலாற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும், அயராமல் உழைக்க வேண்டும், நாட்டைச் சீர்படுத்த வேண்டும் என்று எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்தார். மனிதனின் அகமிய வளர்ச்சிக்கு அன்பு, தேவையற்ற உலக ஆசைகள் பற்றிய அக்கறையே முற்றுமற்றிருப்பது, தீரம், சகிப்புத்தன்மை, உணவு தேடல், திறனை வளர்த்தல், ஆகியன முக்கியமானவை என்றார். லக்ஷ¤யங்களையும், மதிப்புகளையும் உண்டாக்கி அவற்றை எய்த முயற்சிப்பதே அன்பின் உன்னதமான படித்தரமாகும் எனக்கூறும் கவிஞர் அச்சம், யாசகம், அடிமைத்தனம், சாதி பிரிவு, உயர்குலம், தாழ்குலம், பேதம் ஆகியவை களையப்பட வேண்டும் என்கிறார். பொதுவாக சட்டங்களுக்கு கீழ்படிந்து, தன்னை கட்டுப்படுத்தி, இறைவனின் பிரதிநிதித்துவத்தை எய்துதல் மனிதனுக்கு அவசியம் என்கிறார் அல்லாமா இக்பால் அவர்கள்.
சுதந்திர வேட்கையூட்டிய, இளைஞர்களை எழுச்சியூட்டிய பாரதியும், இக்பாலும் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே இயற்கை எய்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் கனவு கண்ட இலக்ஷ¤ய இந்தியா, இலக்ஷ¤ய இளைஞர்கள் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. சமுதாய விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும், சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை வளர வேண்டும்.
''மனித இனம் ஒரே இனம். சாதியெனும் உயர்வு, தாழ்வு ஒழிய வேண்டும். இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழியவேண்டும். இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகின்றான். ஒற்றுமை, சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும். மனிதனின் உள்ளம் பாற்போல் இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்றவன்'' என நபி(ஸல்) அவர்களின் திருப்பேரர் மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலான அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்கள் மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகளை இல்லை என்பதை அழகாக எடுத்தியம்புகிறார்கள்.
அல்லாமா இக்பால் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சிறிய அளவில் ஒரு சிருஷ்டிகர்த்தனே. இச் சிருஷ்டி சக்திகளைப் பாழாக்குவது பெரும் பாவமாகும்.
''செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்
ஒருக்கணமவது ஓய்பவர்கள்
சதா சுழன்றுகொண்டிருக்கும்
கால சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்''
என்று கூறும் கவிஞர்
''ஹே, இந்தியாவே,
உன் நிலை என்னை சுழலச்செய்கிறது
கதைகளிலெல்லாம், உன் கதையே வெகு துயரமானது''
என்று தனது நாட்டைபற்றி ஆதங்கப்படுகின்றார்.
''இந்தியர்களே! வானத்தின் அங்கியுள்ளே
இடி மறைந்திருக்கிறது.
இப்பாரத பூமியின் புல்புல் களான நாம்
கவலையற்று நம் கூடுகளில் தூங்கிக்
கொண்டிருக்க இதுவன்று நேரம்''
என்று இந்தியர்களை விழிக்கச்செய்கின்றார்.
மேலும் அவர் வடித்த இதய ராகம் இன்றைய சூழலில் எவ்வளவு பொருந்தும்.
''என்னருமை மக்களே!
இப்பூமியில் ஒரு புதிய தேவாலயத்தை
அன்புக்கோயிலை,
பரஸ்பரம் ஒருவரையொருவர்
நேசிக்கச் செய்யும் நிலையத்தை
எழுப்புவோம் வாரீர்!''
என தன் தாய் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
நம் இந்தியர்கள் சாதி, மத இன பேதமின்றி ஒன்றுபட்டு, இலக்ஷ¤ய கவிஞர், சிந்தனையாளர், தத்துவஞானி அல்லாமா டாக்டர் இக்பாலின் வார்த்தைகளை செவியுற்று புதியதோர் இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்பதையே இந்த 60-ம் ஆண்டு நினைவு தினத்தின் செய்தியாக கொள்வோம்.
http://www.ambalam.com/idhal/special/2000/April/special23_03.html
'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்
எம்.ஜெ.முஹம்மது இக்பால்
(இக்கட்டுரையாளர் மதம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதிவருபவர். சமூக நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றுபவர். துபாய் பொறியியல் நிர்வாக சங்கத் தலைவர். துபாயில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர்.)
''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''
இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.
அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.
அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் அவரிலிருந்து 150 வருடத்திற்கு முற்பட்டவர்கள், காஷ்மீர் பிராமண பண்டித இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர், முஸ்லிம் சூஃபி ஞானியால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கைகளிலும், ஆன்மிகத்திலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்தார். ஷேக் நூர் முஹமதுவின் மகனாக பிறந்த இக்பால் இளம் பிராயத்திலேயே கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்புற்று விளங்கினார்கள். பரம்பரை முஸ்லிமாக இருந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மை, ஞானநெறி போன்றவற்றை மறந்திருந்த அக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஞான நெறிகளை, கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்த அல்லாமா இக்பால் அவர்கள்,
''மீரும் மீர்ஸாவும்
தம் உள்ளத்தையும் சமயத்தையும்
அரசியலில் மூழ்கடித்து விட்டனர்.
இந்த பிராமணச் சிறுவன் மட்டுமே
அந்தரங்களை அறிந்தவனாக இருக்கின்றான்''
என்று பாடினார்.
இளம் வயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அல்லாமா இக்பால் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை கால தாமதமாக வகுப்பிற்கு வரவே, ஆசிரியர் ''ஏன் தாமதம்'' எனக் கேட்க, அதற்கு இக்பால் அவர்கள் ''ஐயா, இக்பால் தாமதமாகத்தானே வரும்'' எனக்கூறி இக்பால் என்ற சொல்லுக்கு புகழ் என்றொரு அர்த்தம் உள்ளது என விளக்கி ஆசிரியரை வியக்கச் செய்தார்.
இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட நிபுணராக விளங்கிய ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ அவர்கள் அல்லாமா இக்பாலைப்பற்றி
குறிப்பிடும் போது ''உலகின் இக்கால மகா கவிகளில் அல்லாமா இக்பால் தலையானவர். உர்து, பாரசீக மொழிகளில் பாட்டுக்கள், கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த தொழிலாளி. கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக நான் அவரை ஒரு முதல்தரமான கவிஞராகவும், சிந்தனையாளராகவும் மதித்து போற்றி வருகின்றேன்'' என கூறுகின்றார்.
''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா''
தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டதற்கு அல்லாமா இக்பாலின் ''உலகம் முழுவதிலும் சிறந்தது எம் ஹிந்துஸ்தானம்'' என்று அர்த்தம் கொண்ட, இன்றும் எல்லா தரப்பினராலும் எல்லா நிகழ்ச்சியிலும் பாடலாக இன்றி இசையாக இசைக்கப்படுகின்ற ''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா'' என்கிற பாடல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
இந்தியா பல மதங்கள், பல வழிபாடுகள், பல மக்களைக் கொண்டு நாடு. எனவே
''மதம் ஒருவரோடொருவர்
சண்டை போடச் சொல்லவில்லை
ஹிந்த் நமது ஜென்ம பூமி
ஹிந்துஸ்தான் நம்முடையது''
எனப் போற்றி புகழ்ந்தார். மேலும் ''ஓ சிந்தனையற்றவனே, உன் நாட்டை எண்ணிப்பார். மேல்நாட்டில் உன்னை அழிக்க சதி நடக்கின்றது. நடப்பதையும் நடக்க இருப்பதையும் பார். வெறும் பழங்கதை பேசுவதில் என்ன இருக்கின்றது? இதை உணராவிட்டால் இந்திய மக்களாகிய நீங்கள் அழிக்கப்படுவீர்கள். உலகச் சரித்திரத்தில் உங்களின் அடிச்சுவடு இல்லாது போகும்'' என்றும்
என்னரும் இந்தியச் சகோதரர்களே!
''நீங்கள் இத்தோட்டத்தின் பாதுகாவலர்கள். எனவே இதன் பிளவு நீங்க வழிகாணுங்கள். அப்பிளவு என்னும் பேய்க்காற்று செடிகளைப் பாழாக்கி விட்டது'' மேலும் ''நீ இந்தியாவை கண்டதில்லையா? இதயமுள்ள யாரும் போற்றும் நாடல்லவா அது! அதன் ஒவ்வோர் அணுவும் உலகின் மீது ஒளி வீசினாலும், அந்தோ! அது புழுதியிலும், குருதியிலும் கிடந்து தத்தளிக்கின்றதே'' என ஜாவீது நாமா எனும் புத்தகத்தில் தனது மகனிடம் கேட்பதாக எழுதுகிறார். தனது மகன் ஜாவீது இடம் கேட்பது என்பது இளைஞர் சமூகத்திற்கே விடுக்கும் அறைகூவல் அது!
மேலும் ஒரு பாடலின் மூலம் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் போது
(காஜா மொயினுதீன்) க்ஷ¤ஸ்தி
சத்தியத்தின் செய்தியை எந்தப் பூமியில் பரப்பினாரோ,
(குரு) நானக் எந்தப் பூங்காவில்
ஏகத்துவ கீதத்தை பொழிந்தாரோ,
தாத்தாரிய (முகலாயர்கள்) எதைத்
தமது சுய நாடாக ஆக்கிக் கொண்டனரோ,
எது ஹிஜாஸ்வாசிகளை அரபுப் பாலையை விட்டு வந்து
(தன்னகத்தே) குடியேறச் செய்ததோ
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.
பாரஸீக வானிலே உடைந்து கிடந்த
(ஞானியர், கவிஞர்களாய) விண்மீண்கள்,
மீண்டும் ஒளி தந்து ஜொலிக்கச் செய்த
வானம் எங்குளதோ,
ஏகத்துவத்தின் நாதத்தை
உலகம் எத்தலத்திலிருந்து கேட்டதோ,
அரபு நாட்டின் அதிபர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு
தண்ணென்ற பூங்காற்று எங்கிருந்து வீசியதோ,
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.
மூஸா(அலை) இறைவனுடன் பேசிய
ஸீனா மலை உலகின் இதயமாகும்.
நூஹ§ (அலை) அவர்களின் கப்பல் (கடைசியில் வந்து)
முகாமிட்டுத் தங்கிய ஜுதி மலையும் சிறப்புடையதே!
(இது போலவே) வானமளாவ வளர்ந்து மாளிகை போல்
அழகு தந்து நிற்கும் இமயமலை எங்குளதோ,
எதன் சாரலில் வாழ்வது சொர்க்க வாழ்வோ
அதுவே என் தாய்த்திரு நாடு?
அதுவே என் தாய்த்திரு நாடு.
என தாய் நாட்டின் மீது உள்ள நேசத்தை பற்றி பாடலின் வாயிலாக கூறுகின்றார்.
அரசியல்
சிறப்பு மிக்க அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1930-ல் அல்லாமா இக்பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931-ல் லண்டனில் நடந்த 2-வது வட்ட மேஜை மாநாட்டிற்கு இக்பால் அவர்கள் ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நேருவிடம் முஸ்லிம்கள் நலம், சிறுபான்மையினர் நலம் இவற்றை எல்லாம் எடுத்துக்கூறி சுதந்திரம் பெற்ற பிறகு இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார், அவருடைய கருத்துகள் நேருவின் அயல் நாட்டு கொள்கைகளில் மிகவும் பிரதிபலிக்கவே செய்தது. அல்லாமா இக்பால் மரணப்படுக்கையில் இருந்தபோது பஞ்சாபில் கஞ்ச் மஸ்ஜித் தகராறு விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளை அடக்குவதற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அதை அறிந்து வேதனையடைந்த அல்லாமா டாக்டர் இக்பால் இயலாத இந்த நிலையிலும் ''என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய், கலவரம் நடக்கும் இடத்தில் வையுங்கள் துப்பாக்கி குண்டு முதலில் என் இதயத்தை துளைக்கட்டும். அப்பொழுதாவது ஒற்றுமை நிலைக்கட்டும்'' என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். பிற சமய மக்களையும், மதங்களையும் மதித்து வாழவேண்டும் என்று அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார். திருக்குர்ஆன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அடிப்படையில் மாற்று மதத்தினவர்களிடம் சுமூகமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தினார் கவிஞர்.
சமய நல்லிணக்கம்
இஸ்லாத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திருகுர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையையும் செம்மையுடன் பின்பற்றிய கவிஞர் நபியினை தரிசிப்பது என்பது நம் உடலை அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு உட்படுத்தி மனித நேயத்துடன் நடப்பது எனவும், இறையினை தரிசிப்பது நபியினால் போதிக்கப்பட்ட சொல், செயல்களை பின்பற்றி, இறையோடு சம்பந்தப்படும் கருணை, இரக்கம் முதலிய குணங்களை நம் மனதுள் வளர்த்து உலகிலும் அவை நிலவும்படி செய்தல்தான் என்கிறார். இஸ்லாமிய சமாதான அடிப்படையில், சாந்தி நிலவச் செய்தால் உலகில் அமைதி நிலவும் எனக்கூறும் கவிஞர், பிற சமயங்களை அன்புடன் நோக்கினார். கிருஷ்ணபகவானின் கீதை பெரிதும் அவரை கவர்ந்திருந்தது. ஹிந்து சமுதாயத்தை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் எனக் கூறிய கவிஞர், அலஹாபாத் முஸ்லிம் லீக் மகாநாட்டில் அவர் எழுப்பிய உரை ''பிற வகுப்பினரிடம் கெட்ட எண்ணங்கொண்ட எந்த வகுப்பும் கீழ்த்தரமானது; வெறுக்கத்தக்கது. பிற வகுப்பினரின் பழக்கவழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் நான் மரியாதை காட்டுகின்றேன். அவசியமேற்படின் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறபடி அவற்றை பாதுகாப்பது என் கடமையாகும். எனினும் என் வாழ்க்கை, நடத்தை ஆகியவற்றின் உற்பத்தியாக விளங்கும் வகுப்பிடம் நான் அன்பு கொண்டுள்ளேன்; அவ்வகுப்பு தன் மதம், தன் இலக்கியம், தன் கலாச்சாரம் ஆகியவற்றைத் தந்து எனது உணர்ச்சியில் ஜீவசக்தியாக நின்று நான் இன்றுள்ள நிலைக்கு என்னை உயர்த்திற்று.
மேலும் ஒரு பாடலில்
நான் கோயிலுக்கு மரியாதை செய்கிறேன்;
கஃபாவின் முன் அடிபணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு;
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.
என தனது உரையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும் தனது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
சிறப்பு மிக்க உர்தூ, பாரஸீக சிந்தனையாளர் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ ஒரு கடிதத்தில் அல்லாமா இக்பாலை பற்றி குறிப்பிடுகின்றார்.
''இக்பால் முஸ்லிம் தத்துவத்தையும், முஸ்லிம் கலைப்பண்பையும், முஸ்லிம் தீரச் செயல்களையும் பற்றி அதிகம் எழுதியுள்ளார் என்பது உண்மைத்தான். ஆனால் மில்டனைக் கிறிஸ்த்தவக் கவிஞன் என்று கூறி அவர் கவிதைகளை கட்டுப்படுத்தவோ, காளிதாஸனை ஹிந்து சமயக் கவி என்று கூறி அவர் கவிப் பெருமைக்கு வேலியிடவோ யாரும் முயன்றதில்லை; மற்ற மதத்தினரும் இதே காரணத்திற்காக இக்கவிஞர்களின் பெருமையைக் குறைத்துக் கூறியதுமில்லை. இக்பால் முஸ்லிம் சரித்திர வெற்றிகளையும் கலாசார சாதனைகளையும் குறித்து எழுதினால், அதற்காக முஸ்லிமல்லாதவர் அவரைக் குறையாக மதிப்பிட்டு விட முடியாது.
''ஊணாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோ எண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும். போலி ஒற்றுமை நிலைக்காது. உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள். ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும். நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லனவே செய்யுங்கள். வல்லவனுக்கு இது உகந்தது'' என மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஆன்மிகம்
ஆழ்ந்த நாட்டுப்பற்று கொண்டும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட கவிஞர் இக்பால் அவர்கள், இளைஞர்கள், செயலாற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும், அயராமல் உழைக்க வேண்டும், நாட்டைச் சீர்படுத்த வேண்டும் என்று எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்தார். மனிதனின் அகமிய வளர்ச்சிக்கு அன்பு, தேவையற்ற உலக ஆசைகள் பற்றிய அக்கறையே முற்றுமற்றிருப்பது, தீரம், சகிப்புத்தன்மை, உணவு தேடல், திறனை வளர்த்தல், ஆகியன முக்கியமானவை என்றார். லக்ஷ¤யங்களையும், மதிப்புகளையும் உண்டாக்கி அவற்றை எய்த முயற்சிப்பதே அன்பின் உன்னதமான படித்தரமாகும் எனக்கூறும் கவிஞர் அச்சம், யாசகம், அடிமைத்தனம், சாதி பிரிவு, உயர்குலம், தாழ்குலம், பேதம் ஆகியவை களையப்பட வேண்டும் என்கிறார். பொதுவாக சட்டங்களுக்கு கீழ்படிந்து, தன்னை கட்டுப்படுத்தி, இறைவனின் பிரதிநிதித்துவத்தை எய்துதல் மனிதனுக்கு அவசியம் என்கிறார் அல்லாமா இக்பால் அவர்கள்.
சுதந்திர வேட்கையூட்டிய, இளைஞர்களை எழுச்சியூட்டிய பாரதியும், இக்பாலும் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே இயற்கை எய்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் கனவு கண்ட இலக்ஷ¤ய இந்தியா, இலக்ஷ¤ய இளைஞர்கள் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. சமுதாய விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும், சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை வளர வேண்டும்.
''மனித இனம் ஒரே இனம். சாதியெனும் உயர்வு, தாழ்வு ஒழிய வேண்டும். இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழியவேண்டும். இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகின்றான். ஒற்றுமை, சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும். மனிதனின் உள்ளம் பாற்போல் இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்றவன்'' என நபி(ஸல்) அவர்களின் திருப்பேரர் மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலான அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்கள் மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகளை இல்லை என்பதை அழகாக எடுத்தியம்புகிறார்கள்.
அல்லாமா இக்பால் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சிறிய அளவில் ஒரு சிருஷ்டிகர்த்தனே. இச் சிருஷ்டி சக்திகளைப் பாழாக்குவது பெரும் பாவமாகும்.
''செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்
ஒருக்கணமவது ஓய்பவர்கள்
சதா சுழன்றுகொண்டிருக்கும்
கால சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்''
என்று கூறும் கவிஞர்
''ஹே, இந்தியாவே,
உன் நிலை என்னை சுழலச்செய்கிறது
கதைகளிலெல்லாம், உன் கதையே வெகு துயரமானது''
என்று தனது நாட்டைபற்றி ஆதங்கப்படுகின்றார்.
''இந்தியர்களே! வானத்தின் அங்கியுள்ளே
இடி மறைந்திருக்கிறது.
இப்பாரத பூமியின் புல்புல் களான நாம்
கவலையற்று நம் கூடுகளில் தூங்கிக்
கொண்டிருக்க இதுவன்று நேரம்''
என்று இந்தியர்களை விழிக்கச்செய்கின்றார்.
மேலும் அவர் வடித்த இதய ராகம் இன்றைய சூழலில் எவ்வளவு பொருந்தும்.
''என்னருமை மக்களே!
இப்பூமியில் ஒரு புதிய தேவாலயத்தை
அன்புக்கோயிலை,
பரஸ்பரம் ஒருவரையொருவர்
நேசிக்கச் செய்யும் நிலையத்தை
எழுப்புவோம் வாரீர்!''
என தன் தாய் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
நம் இந்தியர்கள் சாதி, மத இன பேதமின்றி ஒன்றுபட்டு, இலக்ஷ¤ய கவிஞர், சிந்தனையாளர், தத்துவஞானி அல்லாமா டாக்டர் இக்பாலின் வார்த்தைகளை செவியுற்று புதியதோர் இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்பதையே இந்த 60-ம் ஆண்டு நினைவு தினத்தின் செய்தியாக கொள்வோம்.
http://www.ambalam.com/idhal/special/2000/April/special23_03.html
Tuesday, August 5, 2008
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி 23.08.2008 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 8 மணி வரை முஜாஹிதீன் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் : 9722169 / 98868849 / 92282984 / unarvaiunnai@eduquest.com.sg
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி 23.08.2008 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 8 மணி வரை முஜாஹிதீன் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் : 9722169 / 98868849 / 92282984 / unarvaiunnai@eduquest.com.sg
Launch of Online Registration for Indian Nationals in Kuwait
The Embassy of India announces the launch of Online Registration for Indian Nationals based in Kuwait with effect from August 15, 2008. All Indian nationals are encouraged to visit the Embassy website http://indembkwt.org/onlineregister.php in this regard and register themselves on the Online Registration Form.
அமீரகத்தில் பணிபுரியும் எமனேசுவரம் ஜமாஅத்தினர்
அமீரகத்தில் பணிபுரியும் எமனேசுவரம் ஜமாஅத்தினர்
ஷேக் அப்துல் காதர் - 050 4834 582
அஸ்லம் - 050 5722 456
அலாவுதீன் ( பொறியாளர் ) - 050 4904950 ராசல் கைமா
தாரிப் மைதீன் ஷார்ஜா - 050 7570 933
அக்பர் 050 7629 464
சையது ஏபிஎஸ் 050 784 7708
ஷேக் 050 8488 042
சகுபர் 050 4984 653
ரசாக் 06 8020 499
ஹபீப் - 050 521 86 74
கனி - 050 845 26 81
புகாரி 050 8452 681
பஷீர் 050 5461 938
அயூப் -
அஸ்மி - 050 872 6988
ஷேக் அப்துல் காதர் - 050 4834 582
அஸ்லம் - 050 5722 456
அலாவுதீன் ( பொறியாளர் ) - 050 4904950 ராசல் கைமா
தாரிப் மைதீன் ஷார்ஜா - 050 7570 933
அக்பர் 050 7629 464
சையது ஏபிஎஸ் 050 784 7708
ஷேக் 050 8488 042
சகுபர் 050 4984 653
ரசாக் 06 8020 499
ஹபீப் - 050 521 86 74
கனி - 050 845 26 81
புகாரி 050 8452 681
பஷீர் 050 5461 938
அயூப் -
அஸ்மி - 050 872 6988
வசந்தம்
வசந்தம்
காலாண்டிதழ் ( குவைத் )
ஆசிரியர்
எம்.ஏ. அப்துல் முஸவ்விர்
தொடர்புக்கு
அஞ்சல் பெட்டி எண் 1613
சபாத் 13017
குவைத்
தொலைபேசி : 2444116 / 117
தொலைநகல் : 2400057
மின்னஞ்சல் : musawir@ipc-kw.com
www.ipc-kw.com
காலாண்டிதழ் ( குவைத் )
ஆசிரியர்
எம்.ஏ. அப்துல் முஸவ்விர்
தொடர்புக்கு
அஞ்சல் பெட்டி எண் 1613
சபாத் 13017
குவைத்
தொலைபேசி : 2444116 / 117
தொலைநகல் : 2400057
மின்னஞ்சல் : musawir@ipc-kw.com
www.ipc-kw.com
துபாயில் டி. ஃபார்ம் பயில
துபாயில் டி. ஃபார்ம் பயில
துபாயில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்மானில் உள்ள கல்ஃப் மருத்துவ பல்கலையில் டி.ஃபார்ம், பி.பி.டி உள்ளிட்ட படிப்புகள் பயில குறைந்த இடங்களே உள்ளன.
கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகம்
அஞ்சல் பெட்டி எண் 4184
அஜ்மான்
ஐக்கிய அரபு அமீரகம்
தொலைபேசி : 06 743 1333
தொலைநகல் : 06 743 1222
மின்னஞ்சல் : admissions@gmcajman.com
இணையத்தளம் : www.gmcajman.com
துபாயில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்மானில் உள்ள கல்ஃப் மருத்துவ பல்கலையில் டி.ஃபார்ம், பி.பி.டி உள்ளிட்ட படிப்புகள் பயில குறைந்த இடங்களே உள்ளன.
கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகம்
அஞ்சல் பெட்டி எண் 4184
அஜ்மான்
ஐக்கிய அரபு அமீரகம்
தொலைபேசி : 06 743 1333
தொலைநகல் : 06 743 1222
மின்னஞ்சல் : admissions@gmcajman.com
இணையத்தளம் : www.gmcajman.com
நீதியின் குரல் - மின்னிதழ்
நீதியின் குரல் - மின்னிதழ்
KUWAIT NEETHIENKURAL AUGUST ISSUE
http://neethienkural.googlepages.com/home
http://neethienkural.googlepages.com/home
தொடர்புக்கு :
villupuramshaji@gmail.com
sithima@gmail.com
KUWAIT NEETHIENKURAL AUGUST ISSUE
http://neethienkural.googlepages.com/home
http://neethienkural.googlepages.com/home
தொடர்புக்கு :
villupuramshaji@gmail.com
sithima@gmail.com
சுற்றுச்சூழல் குறித்த ஆங்கில மாத இதழ்
Society & Environment
creating Green communities for Better Tomorrow
Monthly Magazine
Editor & Art Director
Seema Sangra
Society & Environment
P O Box NO. 28399
Dubai - UAE
Tel : 04 332 6666
Fax : 04 332 6777
E mail : jacob.zayedprize@gmail.com
Zayed Int'l Prize for the Environment
P O Box 28299
Dubai - UAE
Tel : 04 332 6666
Fax : 04 332 6777
E mail zayedprz@emirates.net.ae
www.zayedprize.org.ae
creating Green communities for Better Tomorrow
Monthly Magazine
Editor & Art Director
Seema Sangra
Society & Environment
P O Box NO. 28399
Dubai - UAE
Tel : 04 332 6666
Fax : 04 332 6777
E mail : jacob.zayedprize@gmail.com
Zayed Int'l Prize for the Environment
P O Box 28299
Dubai - UAE
Tel : 04 332 6666
Fax : 04 332 6777
E mail zayedprz@emirates.net.ae
www.zayedprize.org.ae
பெண் முதல்வர் / கல்வி ஆலோசகர் தேவை
பெண் முதல்வர் / கல்வி ஆலோசகர் தேவை
தமிழகத்தின் பிரபல சமுதாயக் கல்லூரிக்கு பெண் முதல்வர் மற்றும் கல்வி ஆலோசகர் ( ஆண் ) தேவை.
ஓய்வுபெற்றவர்கள் கல்வி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.
உடன் தங்களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கவும்
muduvaihidayath@gmail.com
தமிழகத்தின் பிரபல சமுதாயக் கல்லூரிக்கு பெண் முதல்வர் மற்றும் கல்வி ஆலோசகர் ( ஆண் ) தேவை.
ஓய்வுபெற்றவர்கள் கல்வி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.
உடன் தங்களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கவும்
muduvaihidayath@gmail.com
Monday, August 4, 2008
குவைத் தமிழ்.காம்
குவைத் தமிழ்.காம்
குவைத்திலிந்து மாதந்தோறும் வெளிவரும் இலவச தமிழ் இதழ்
kwttamilcom@yahoo.com
P O Box No 1515
Safat 13015 Kuwait
Tel : 7466289/9165899/7172518
kwttamilcom@yahoo.com
9165899
7172518
6137993
குவைத்திலிந்து மாதந்தோறும் வெளிவரும் இலவச தமிழ் இதழ்
kwttamilcom@yahoo.com
P O Box No 1515
Safat 13015 Kuwait
Tel : 7466289/9165899/7172518
kwttamilcom@yahoo.com
9165899
7172518
6137993
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்
41 பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை 600 098
விலை ரூ. 50
வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்
41 பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை 600 098
விலை ரூ. 50
குவைத் தமிழ் முரசு
குவைத் தமிழ் முரசு
பிளாட்டினம் பிரிண்டிங் பிரஸ்
ஓமன் எக்ஸ்சேஞ் அருகில்
டாலர்கோ எக்ஸ்சேஞ் கீழ்தளம்
முர்காப்
குவைத்
தொலைபேசி : 2427642 / 9287527
platinum_kwt@yahoo.com
பிளாட்டினம் பிரிண்டிங் பிரஸ்
ஓமன் எக்ஸ்சேஞ் அருகில்
டாலர்கோ எக்ஸ்சேஞ் கீழ்தளம்
முர்காப்
குவைத்
தொலைபேசி : 2427642 / 9287527
platinum_kwt@yahoo.com
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை மாத இதழ்
UNITED ECONOMIC FORUM Bulletin
Price Rs. 10
The monthly magazine from United Economic Forum
The Secretary
United Economic Forum
Ali Towers
D First Floor
No 55 Greems Road
Chennai 600 006
Tel : 28295445
Price Rs. 10
The monthly magazine from United Economic Forum
The Secretary
United Economic Forum
Ali Towers
D First Floor
No 55 Greems Road
Chennai 600 006
Tel : 28295445
Labels:
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை,
தமிழ்,
மாத இதழ்
மகிழ்ச்சியான குடும்பம்
மகிழ்ச்சியான குடும்பம்
ஷேக் முஹம்மத் காரக்குன்னு
தமிழில் : கே. எம். முஹம்மது
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
iftchennai12@gmail.com
www.iftchennai.org
விலை : ரூ. 40
வெளியீட்டெண் : 180
ஷேக் முஹம்மத் காரக்குன்னு
தமிழில் : கே. எம். முஹம்மது
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
iftchennai12@gmail.com
www.iftchennai.org
விலை : ரூ. 40
வெளியீட்டெண் : 180
Labels:
இஸ்லாம்,
தமிழ்,
நூல்,
மகிழ்ச்சியான குடும்பம்
காணாமல் போன ஒட்டகம்
காணாமல் போன ஒட்டகம்
( கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு )
தொகுப்பாசிரியர்
பேரா மு அப்துல் சமது எம்.ஏ. எம்.பில்
வெளியீடு
I.O.C. அறக்கட்டளை
431 நேதாஜி சாலை
ஈரோடு 638 001
தொலைபேசி : 0424 - 2222879 / 229 2228
98 431 81333
( கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு )
தொகுப்பாசிரியர்
பேரா மு அப்துல் சமது எம்.ஏ. எம்.பில்
வெளியீடு
I.O.C. அறக்கட்டளை
431 நேதாஜி சாலை
ஈரோடு 638 001
தொலைபேசி : 0424 - 2222879 / 229 2228
98 431 81333
Labels:
இஸ்லாம்,
கல்வி,
காணாமல் போன ஒட்டகம்,
தமிழ்
தியாகத்தின் நிறம் பச்சை
தியாகத்தின் நிறம் பச்சை
( இந்திய சுதந்திரப் போரும் இஸ்லாமியர் பங்களிப்பும் )
எம். அப்துல் சமது
முதுநிலை விரிவுரையாளர்
தமிழ்த்துறை
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் 625 533
( இந்திய சுதந்திரப் போரும் இஸ்லாமியர் பங்களிப்பும் )
எம். அப்துல் சமது
முதுநிலை விரிவுரையாளர்
தமிழ்த்துறை
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் 625 533
Labels:
இஸ்லாம்,
தமிழ்,
தியாகத்தின் நிறம் பச்சை,
தியாகம்,
நூல்
ஓமன்
ஓமன் சுற்றுலாத்துறை
www.omantourism.gov.om
info@omantourism.gov.om
www.omanrealestate.org
பத்திரிகை
www.timesofoman.com
www.omantourism.gov.om
info@omantourism.gov.om
www.omanrealestate.org
பத்திரிகை
www.timesofoman.com
THURSDAY
THURSDAY
Weekly Treat by TIMES OF IMAN
Published by
MUSCAT PRESS & PUBLISHING HOUSE
POST BOX 770
POSTAL CODE : 112
RUWI
SULTANATE OF OMAN
TEL : 248 11 953
FAX : 248 13 153
E MAIL : thursday@timesofoman.com
Weekly Treat by TIMES OF IMAN
Published by
MUSCAT PRESS & PUBLISHING HOUSE
POST BOX 770
POSTAL CODE : 112
RUWI
SULTANATE OF OMAN
TEL : 248 11 953
FAX : 248 13 153
E MAIL : thursday@timesofoman.com
துபாயில் தராவீஹ் தொழுகையினை நடத்த தயாராய் இருக்கும் தமிழக ஹாபிழ்
Assalamu Alaikkum.
This is Soofi Hussain working in Trans Gulf Electro Mechanical (Al naboodah group of companies)as a Commercial Assistant.
i have memorised Holly QURAN (AL -HAFIZ). I would like to conduct Taravih prayer during the Ramzan.so if u find any vacancy for tat i kindly request u to inform me.
Presently i am staying at Hor Al Anz(near emirates post office)
Wassalam
Regards,
Al-Hafiz M.A. Soofi Husaain
050-1691740
This is Soofi Hussain working in Trans Gulf Electro Mechanical (Al naboodah group of companies)as a Commercial Assistant.
i have memorised Holly QURAN (AL -HAFIZ). I would like to conduct Taravih prayer during the Ramzan.so if u find any vacancy for tat i kindly request u to inform me.
Presently i am staying at Hor Al Anz(near emirates post office)
Wassalam
Regards,
Al-Hafiz M.A. Soofi Husaain
050-1691740
Muslims haven't availed of constitutional rights: justice Ahmadi
Muslims haven't availed of constitutional rights: justice Ahmadi
http://www.yahind.com/news/directory.php?id=1495
New Delhi, Aug 2 (IANS) With former Indian chief justice A.M. Ahmadi saying Muslims have let down the constitution by not availing of rights enshrined therein, a book launch event here Saturday turned into an occasion for introspection.
Ahmadi, in his no-nonsense address at the city's India Islamic Cultural Centre (IICC), urged the gathering of around 50 Muslims drawn from different walks of life to use constitutional rights to their advantage.
'We have let down the constitution, the constitution hasn't let us down. We have not used our constitutional rights to our advantage. We have not seriously tried to avail our legal entitlements,' Ahmadi said after releasing a book titled 'A Guide To Uplift Minorities' by the city-based Human Welfare Trust.
The book is a collection of welfare schemes by the central and state governments meant for Muslims and other minority communities, and elaborates how to avail of them.
Ahmadi said the Indian constitution had put in place a system providing equal opportunities to all, and one needed to make concerted efforts to use them for socio-economic and political advancement.
He said lack of education among Muslims was a major concern and was acting as a deterrent in their path to all round advancement.
'Religious education is a must, but secular education is equally a must. There can be no bigger social service than educating the community,' said Ahmadi.
'Educating our female lot is more important. An educated mother means an educated family. We must concentrate on educating our community, particularly women.'
The upliftment of Indian Muslims, who account for over 138 million of the country's billion plus population, has become a major issue of debate ever since Justice Rajinder Sachar submitted his report on the condition of minorities in India in November 2006.
Maulana Jalaluddin Umari, president of Jamaat-e-Islam Hind (JIH), a religious organisation, also underlined the need for the community's educational and social emancipation through hard work.
'Instead of depending upon others, the community must come forward and do the needful to educate people, and help the needy. Weaker sections need to be helped out,' Umari said.
Prime Minister Manmohan Singh had set up the committee in March 2005 to evaluate the socio-economic and educational status of minorities, in particular Muslims.
The committee said that 25 percent of Muslim children in the 6-14 year age group have either never attended school or have dropped out, while in premier colleges only one out of 25 undergraduate students and one out of 50 postgraduate students is a Muslim.
- IANS
மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார் நீதியரசர் அஹமது,
உலக் கல்வியை உதாசீனப்படுத்த இஸ்லாமா சொன்னது? அல்லது இறுதித்தூதர் சொன்னார்களா?
இஸ்லாமிய கல்விக்கும் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம் - மதிப்பு - மரியாதைகளை 'உலக கல்விக்கும்' கொடுத்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்குமே.
மிகச்சிறுபான்மையினராக வாழ்ந்த முந்தைய இஸ்லாமிய சமூகம், மிக்க வலிமை வாய்ந்த்ததாக எப்படி விளங்கியது? அப்பொழுது அவர்கள் பின்பற்றியது - நாம் தற்போது பின்பற்றும் அதே குர் ஆன் தானே?
படியுங்கள் என்று திருமறை கூற்றுப்படி பாரசீக, இந்திய, சீன மற்றும் கிரேக்க மொழிகளில் வெளியான அறிவியல், கணிதம் மற்றும் தத்துவ நூல்களை கற்று தேர்ந்தனர். அத்துறைகளின் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். வான் கோளங்களின் ஆய்வியல் (astromomy), புவியியல், கணிதவியலில் புதிய பிரிவுகளை (aljebra) உருவாக்கினர் - அதனால்தான், இஸ்லாம் உலகெங்கும் விரைந்து பரவியது.
ஆனால் 15 நூற்றாண்டைச்சார்ந்த இஸ்லாமிய கல்விமான்களோ, படியுங்கள் என்று குர்ஆன் கூறியது இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி மட்டுமே என்று பொருள் விளக்கம் செய்து 'மறுமையில் மகிழ்ச்சியாக வாழ - மார்ரக்க கல்வி மட்டும் போதும்' என்று முழங்கி - உலகக்கல்வியை உதாசீனப்படுத்தினர்.
அய்ரோப்பிய நாடுகளில் மறுமலர்ச்சியும் - தொழிற்புரட்சியும் நடந்து முன்னேற்றப்பாதயில் சென்ற அதே காலக்கட்டத்தில், நமது மார்க்க அறிஞர்கள் அச்சு இயந்திரங்கள் அனுமதிக்கப்படலாமா, புகைப்படம் எடுக்கலாமா? பள்ளிவாசல்களில் மின்சார விளக்கு எரியலாமா போன்ற பிரச்சினைகளை பற்றி விவாதித்து வந்தனர். அந்த நிலை இன்னும் தொடர்வது வருந்ததக்கது.
தொப்பி அவசியமா?
உதட்டுச்சாயம் கூடுமா?
கலர் கைலி கட்டலாமா?
ந்ண்டு சாப்பிடலாமா?
நைலான் புடவை கட்டலாமா?
இறால் கூடுமா?
போன்ற கேள்விகளை மதஹபு-ஏகத்துவம் பரப்பும் பத்திரிக்கைகளின் கேள்வி-பதில் பகுதிகளில் இன்னும் கேட்டும்-படித்தும், மார்க்க அறிஞர்கள் பங்கெடுக்கும் நேரடி நிகழ்ச்சிகளில் பார்த்தும் வருகிறோம்.
திருமறையும்- நபிமுறையும் மறைமுகமாக கோடிட்டுக்காட்டியவைகளை, மாற்றுமத அறிவியலார்கள், தங்களது நேரத்தையும்-பொருளையும் செலவு செய்து ஆராய்ந்து குர்ஆன் கூறியது உண்மை என்று ஆய்வுக்கட்டுரை மூலம் வெளியிடும்போது - அந்தச்செய்தியை 'மின்னஞ்சல் மூலம் 'forward' செய்கிற அளவிற்கு மட்டும் நாம் 'தொழில் நுட்ப' அறிவு பெற்று வாழ்கிறோம்.
பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்களேன், ஆண்களின் பார்வையிலிருந்து தடுப்பதற்காக - வயது வந்த் பெண்களை வீட்டில் அடைத்து வைப்பது இஸ்லாமிய நெறியா?.அல்லது அவர்கள் கல்வி கற்க உற்ற சமூக சூழ்நிலையை, பாதுகாப்போடு கூடிய கல்வி நிலையங்களை உருவாக்குவது இஸ்லாமிய வழியா?.
பெண் குழந்தைகளை பருவ வயது வரை கல்வி கற்கச்செய்து, பூப்பெய்ததிலிருந்து திருமணத்திற்கு இடைப்பட்ட காலம் வரை வீட்டில் நல்லொழுக்கப் (ஆன்மீக) பயிற்சியை, அல்லது மதரஸாக்களில் ஆன்மீக கல்வியை அளித்து திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணால் ஒழுக்கமிக்க உறுப்பினரகளைக் கொண்ட கண்ணியமிக்க குடும்பத்தை உருவாக்க முடியும் என்று இன்னும் சில சகோதரர்கள் இன்னும் அடம்பிடிக்கிறார்கள்.
புர்காவின் நிறம் மற்றும் அதன் நீள அகலங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு 'முஸ்லிம் பெண்ணுக்கு' இலக்கணம் அமைக்கிறார்கள்.
மூப்பெய்யும் வரை கற்க சொன்ன இஸ்லாத்திற்கு மாறாக - பூப்பெய்யும் வரை கற்றாலே போதுமானது என்கிறார்கள்..
அறிந்தவனும் அறியாதவனும் அல்லா முன் சமமல்ல, கருவரையிலிருந்து - கல்லறை செல்லும் வரை கல்வியை தேடென்ற உயரிய இஸ்லாமிய அறிவுரைகளை பின்னுக்கு தள்ளி - 'மறுமை' வாழ்க்கையை அனுபவிக்க 'மய்யித்துகளாக' முஸ்லிம்களை தயாராக்கி வருகிறோம்.
இஸ்லாமிய மக்களின் - சமூக-பொருளாதார நிலை ஏற்றம் வருவது நம் எதிரிகளின் கைகளில் மட்டும் இல்லை- நம்முடைய கைகளிலும் உள்ளது என்பதை வல்ல இறைவன் நம் அனைவரின் மனதிலும் உதிக்க செய்யவேண்டும்.
--
தோழமையுடன்,
பிறைநதிபுரத்தான்
pirainathipurathaan@gmail.com
http://www.yahind.com/news/directory.php?id=1495
New Delhi, Aug 2 (IANS) With former Indian chief justice A.M. Ahmadi saying Muslims have let down the constitution by not availing of rights enshrined therein, a book launch event here Saturday turned into an occasion for introspection.
Ahmadi, in his no-nonsense address at the city's India Islamic Cultural Centre (IICC), urged the gathering of around 50 Muslims drawn from different walks of life to use constitutional rights to their advantage.
'We have let down the constitution, the constitution hasn't let us down. We have not used our constitutional rights to our advantage. We have not seriously tried to avail our legal entitlements,' Ahmadi said after releasing a book titled 'A Guide To Uplift Minorities' by the city-based Human Welfare Trust.
The book is a collection of welfare schemes by the central and state governments meant for Muslims and other minority communities, and elaborates how to avail of them.
Ahmadi said the Indian constitution had put in place a system providing equal opportunities to all, and one needed to make concerted efforts to use them for socio-economic and political advancement.
He said lack of education among Muslims was a major concern and was acting as a deterrent in their path to all round advancement.
'Religious education is a must, but secular education is equally a must. There can be no bigger social service than educating the community,' said Ahmadi.
'Educating our female lot is more important. An educated mother means an educated family. We must concentrate on educating our community, particularly women.'
The upliftment of Indian Muslims, who account for over 138 million of the country's billion plus population, has become a major issue of debate ever since Justice Rajinder Sachar submitted his report on the condition of minorities in India in November 2006.
Maulana Jalaluddin Umari, president of Jamaat-e-Islam Hind (JIH), a religious organisation, also underlined the need for the community's educational and social emancipation through hard work.
'Instead of depending upon others, the community must come forward and do the needful to educate people, and help the needy. Weaker sections need to be helped out,' Umari said.
Prime Minister Manmohan Singh had set up the committee in March 2005 to evaluate the socio-economic and educational status of minorities, in particular Muslims.
The committee said that 25 percent of Muslim children in the 6-14 year age group have either never attended school or have dropped out, while in premier colleges only one out of 25 undergraduate students and one out of 50 postgraduate students is a Muslim.
- IANS
மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார் நீதியரசர் அஹமது,
உலக் கல்வியை உதாசீனப்படுத்த இஸ்லாமா சொன்னது? அல்லது இறுதித்தூதர் சொன்னார்களா?
இஸ்லாமிய கல்விக்கும் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம் - மதிப்பு - மரியாதைகளை 'உலக கல்விக்கும்' கொடுத்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்குமே.
மிகச்சிறுபான்மையினராக வாழ்ந்த முந்தைய இஸ்லாமிய சமூகம், மிக்க வலிமை வாய்ந்த்ததாக எப்படி விளங்கியது? அப்பொழுது அவர்கள் பின்பற்றியது - நாம் தற்போது பின்பற்றும் அதே குர் ஆன் தானே?
படியுங்கள் என்று திருமறை கூற்றுப்படி பாரசீக, இந்திய, சீன மற்றும் கிரேக்க மொழிகளில் வெளியான அறிவியல், கணிதம் மற்றும் தத்துவ நூல்களை கற்று தேர்ந்தனர். அத்துறைகளின் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். வான் கோளங்களின் ஆய்வியல் (astromomy), புவியியல், கணிதவியலில் புதிய பிரிவுகளை (aljebra) உருவாக்கினர் - அதனால்தான், இஸ்லாம் உலகெங்கும் விரைந்து பரவியது.
ஆனால் 15 நூற்றாண்டைச்சார்ந்த இஸ்லாமிய கல்விமான்களோ, படியுங்கள் என்று குர்ஆன் கூறியது இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி மட்டுமே என்று பொருள் விளக்கம் செய்து 'மறுமையில் மகிழ்ச்சியாக வாழ - மார்ரக்க கல்வி மட்டும் போதும்' என்று முழங்கி - உலகக்கல்வியை உதாசீனப்படுத்தினர்.
அய்ரோப்பிய நாடுகளில் மறுமலர்ச்சியும் - தொழிற்புரட்சியும் நடந்து முன்னேற்றப்பாதயில் சென்ற அதே காலக்கட்டத்தில், நமது மார்க்க அறிஞர்கள் அச்சு இயந்திரங்கள் அனுமதிக்கப்படலாமா, புகைப்படம் எடுக்கலாமா? பள்ளிவாசல்களில் மின்சார விளக்கு எரியலாமா போன்ற பிரச்சினைகளை பற்றி விவாதித்து வந்தனர். அந்த நிலை இன்னும் தொடர்வது வருந்ததக்கது.
தொப்பி அவசியமா?
உதட்டுச்சாயம் கூடுமா?
கலர் கைலி கட்டலாமா?
ந்ண்டு சாப்பிடலாமா?
நைலான் புடவை கட்டலாமா?
இறால் கூடுமா?
போன்ற கேள்விகளை மதஹபு-ஏகத்துவம் பரப்பும் பத்திரிக்கைகளின் கேள்வி-பதில் பகுதிகளில் இன்னும் கேட்டும்-படித்தும், மார்க்க அறிஞர்கள் பங்கெடுக்கும் நேரடி நிகழ்ச்சிகளில் பார்த்தும் வருகிறோம்.
திருமறையும்- நபிமுறையும் மறைமுகமாக கோடிட்டுக்காட்டியவைகளை, மாற்றுமத அறிவியலார்கள், தங்களது நேரத்தையும்-பொருளையும் செலவு செய்து ஆராய்ந்து குர்ஆன் கூறியது உண்மை என்று ஆய்வுக்கட்டுரை மூலம் வெளியிடும்போது - அந்தச்செய்தியை 'மின்னஞ்சல் மூலம் 'forward' செய்கிற அளவிற்கு மட்டும் நாம் 'தொழில் நுட்ப' அறிவு பெற்று வாழ்கிறோம்.
பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்களேன், ஆண்களின் பார்வையிலிருந்து தடுப்பதற்காக - வயது வந்த் பெண்களை வீட்டில் அடைத்து வைப்பது இஸ்லாமிய நெறியா?.அல்லது அவர்கள் கல்வி கற்க உற்ற சமூக சூழ்நிலையை, பாதுகாப்போடு கூடிய கல்வி நிலையங்களை உருவாக்குவது இஸ்லாமிய வழியா?.
பெண் குழந்தைகளை பருவ வயது வரை கல்வி கற்கச்செய்து, பூப்பெய்ததிலிருந்து திருமணத்திற்கு இடைப்பட்ட காலம் வரை வீட்டில் நல்லொழுக்கப் (ஆன்மீக) பயிற்சியை, அல்லது மதரஸாக்களில் ஆன்மீக கல்வியை அளித்து திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணால் ஒழுக்கமிக்க உறுப்பினரகளைக் கொண்ட கண்ணியமிக்க குடும்பத்தை உருவாக்க முடியும் என்று இன்னும் சில சகோதரர்கள் இன்னும் அடம்பிடிக்கிறார்கள்.
புர்காவின் நிறம் மற்றும் அதன் நீள அகலங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு 'முஸ்லிம் பெண்ணுக்கு' இலக்கணம் அமைக்கிறார்கள்.
மூப்பெய்யும் வரை கற்க சொன்ன இஸ்லாத்திற்கு மாறாக - பூப்பெய்யும் வரை கற்றாலே போதுமானது என்கிறார்கள்..
அறிந்தவனும் அறியாதவனும் அல்லா முன் சமமல்ல, கருவரையிலிருந்து - கல்லறை செல்லும் வரை கல்வியை தேடென்ற உயரிய இஸ்லாமிய அறிவுரைகளை பின்னுக்கு தள்ளி - 'மறுமை' வாழ்க்கையை அனுபவிக்க 'மய்யித்துகளாக' முஸ்லிம்களை தயாராக்கி வருகிறோம்.
இஸ்லாமிய மக்களின் - சமூக-பொருளாதார நிலை ஏற்றம் வருவது நம் எதிரிகளின் கைகளில் மட்டும் இல்லை- நம்முடைய கைகளிலும் உள்ளது என்பதை வல்ல இறைவன் நம் அனைவரின் மனதிலும் உதிக்க செய்யவேண்டும்.
--
தோழமையுடன்,
பிறைநதிபுரத்தான்
pirainathipurathaan@gmail.com
Sunday, August 3, 2008
உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=8/2/2008&secid=86
திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார்.
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.
என்.சி.இ.ஆர்.டி.:-
தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.
தேசிய திறனாய்வு திட்டம்:-
1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின்
குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.
தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.
இணையதளம் அளிக்கும் சேவை:-
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=8/2/2008&secid=86
திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார்.
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.
என்.சி.இ.ஆர்.டி.:-
தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.
தேசிய திறனாய்வு திட்டம்:-
1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின்
குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.
தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.
இணையதளம் அளிக்கும் சேவை:-
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
Saturday, August 2, 2008
உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு
உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு
லண்டன், ஆக. 1: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.
இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.
லண்டன், ஆக. 1: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.
இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்
கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்த வல்லி ஏ. இஹ்சானுல்லா இல்லத் திருமணம் ஞாயிறன்று கோட்டக் குப்பத்தில் நடைபெற்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மணமக்களை வாழ்த்தி பேசியபோது தெரிவித்ததாவது:
ஆலிம்களின் கோட்டை என்ற சிறப்புக் குரிய கோட்டக்குப்பம் மக்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ப தோடு அல்லாமல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் ஒவ் வொன்றையுமே முஸ்லிம் லீகின் நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர்.
இது திருமண நிகழ்ச் சியா அல்லது முஸ்லிம் லீகின் மாநாடா என வியக்கும் அளவிற்கு சிறப் பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருக்கிறது. இந்த ஊரில் மற்ற ஊர்களுக்கு வழிகாட்டும் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ரப்பானிய்யா அரபி பெண்கள் மதரஸா என மார்க்கக் கல்வி பணிகள் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இந்த மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தமிழ கத்தன் பல பகுதிகளுக்கும் சென்று குர்ஆனின் போதனைகளை ஹதீஸ் களின் விளக்கங்களை சமு தாய மக்கள் நல்ல முறை யில் எடுத்துரைத்து மார்க்க சேவை ஆற்றி வருகின்றனர்.
எனக்கு முன்பு பேசிய சகோதரர் துபை அப்துல் ரஹ்மான் இந்த ஊரின் பிரச்சினை தொடர்பாக மக்கள் நடந்து கொண்ட முறைகள் குறித்து சில செய்திகளை தெரிவித்தார். கோரிக்கைகள் எதுவானா லும் அதனை எப்படி அணுக வேண்டும் என இறைவன் தனது திருமறை யில் வழிகாட்டியுள்ளான். திருக்குர்ஆனில் முதல் அத்தியாயமான ~அல்ஹம்து சூராவை இறைவன் அமைத்து தந்துள்ள விதமே பல செய்தி களை நமக்கு அழகுற விளக்குகிறது.
இறைவனை புகழ்ந்து அவனது ஆற்றலை வியந்து போற்றும் வகையில் முதல் சில வசனங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய ஆற்றலுக் கும் - சிறப்புக்கும் உரிய இறைவனுக்கு கட்டுப் பட்டு நடப்போம் என்று மக்கள் இறைவனுக்கு உறுதி அளிப்பது போன்று அடுத்த சில வசனங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு அடுத்துத்தான் ~இறைவா எங்களை நேரான வழியில் செலுத்து வாயாக என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்படி இறைமறை வசனம் ஒரு ஒழுங்கு முறையை நமக்கு விளக்கி காட்டுகிறது. இறைவனிடம் நமது கோரிக்கைகளை வைக்கும் இரே வழிமுறையைத்தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தும் அனைத்து கட்சி களைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லோரும் டெல்லி யில் ஒன்றாக கூடி முஸ்லிம் சமுதாயத்துக்கு எப்படியெல்லாம் பணி யாற்ற வேடும் என ஆலோ சனை செய்தோம்.
முஸ்லிம்களின் விவகாரம் தொடர் பாக மத்திய அரசு உடனுக் குடன் தீர்வு காணும் வகை யில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி அமைச்சகம் அமைக்க பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்தோம்.
பிரதமரிடம் நேரம் வாங்கி அவரை சந்தித்த போது நாங்கள் எந்த நோக் கத்திற்காக சென்றோமோ அந்த நோக்கத்தை விட்டு விட்டு ஆளாளுக்கு அவர வர் மாநில பிரச்சினையை பேச துவங்கி விட்டனர்.
பின்னர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த தும்தான் நாம் எந்த நோக் கத்துக்காக பிரதமரை சந்தித்தோமோ அதனை குறித்து விரிவாக விவாதிக் காமல் வந்து விட்டதை அவர்களுக்கு சுட்டிக் காட்டியதுடன் நமது கோரிக்கைகள் தொடர் பாக அரசை அணுகும் போது குர்ஆன் கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்து விளக்கினோம்.
அதன்படி இன்னொரு நாள் பிரதமரை சந்தித் தோம். முதலில் அவரை மனமார வாழ்த்தி பாராட் டினோம். பின்னர் அவர் தலைமையிலான அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் உற்ற துணையாக இருக்கும் என்ற உறுதியை தெரிவித் தோம். பிறகுதான் நாங்கள் அவரை சந்திக்க வந்ததன் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.
இந்த அணுகுமுறையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மன் மோகன்சிங் எங்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதன்படி சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் அமைத்து தந்துள்ளார்.
இறைவன் வழிகாட்டும் இந்த அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தால் நமது கோரிக்கைகள் அனைத் திலும் உறுதியான வெற்றி யினை பெற முடியும்.
இப்போது மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி செய்யக் கூடிய அரசுகள் சிறுபான்மை மக்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்ட அரசுகள். இந்த அரசு களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கும் எந்த செயலி லும் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது. அதிலும் முஸ்லிம்கள் இதில் மிக தெளிவாக இருக்க வேண்டும். அதன்வாயிலா கத்தான் நாம் நமது சமு தாயத்துக்கு நன்மைகளை செய்ய முடியும். நமது எல்லா செயல்களையும் இறைவன் காட்டும் வழி முறையில் அமைத்து கொள்ள வேண்டும். அதற் காக இறைவனிடம் அனை வரும் துஆ செய்வோம்.
இவ்வாறு பேராசிரியர் பேசினார்.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்த வல்லி ஏ. இஹ்சானுல்லா இல்லத் திருமணம் ஞாயிறன்று கோட்டக் குப்பத்தில் நடைபெற்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மணமக்களை வாழ்த்தி பேசியபோது தெரிவித்ததாவது:
ஆலிம்களின் கோட்டை என்ற சிறப்புக் குரிய கோட்டக்குப்பம் மக்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ப தோடு அல்லாமல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் ஒவ் வொன்றையுமே முஸ்லிம் லீகின் நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர்.
இது திருமண நிகழ்ச் சியா அல்லது முஸ்லிம் லீகின் மாநாடா என வியக்கும் அளவிற்கு சிறப் பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருக்கிறது. இந்த ஊரில் மற்ற ஊர்களுக்கு வழிகாட்டும் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ரப்பானிய்யா அரபி பெண்கள் மதரஸா என மார்க்கக் கல்வி பணிகள் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இந்த மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தமிழ கத்தன் பல பகுதிகளுக்கும் சென்று குர்ஆனின் போதனைகளை ஹதீஸ் களின் விளக்கங்களை சமு தாய மக்கள் நல்ல முறை யில் எடுத்துரைத்து மார்க்க சேவை ஆற்றி வருகின்றனர்.
எனக்கு முன்பு பேசிய சகோதரர் துபை அப்துல் ரஹ்மான் இந்த ஊரின் பிரச்சினை தொடர்பாக மக்கள் நடந்து கொண்ட முறைகள் குறித்து சில செய்திகளை தெரிவித்தார். கோரிக்கைகள் எதுவானா லும் அதனை எப்படி அணுக வேண்டும் என இறைவன் தனது திருமறை யில் வழிகாட்டியுள்ளான். திருக்குர்ஆனில் முதல் அத்தியாயமான ~அல்ஹம்து சூராவை இறைவன் அமைத்து தந்துள்ள விதமே பல செய்தி களை நமக்கு அழகுற விளக்குகிறது.
இறைவனை புகழ்ந்து அவனது ஆற்றலை வியந்து போற்றும் வகையில் முதல் சில வசனங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய ஆற்றலுக் கும் - சிறப்புக்கும் உரிய இறைவனுக்கு கட்டுப் பட்டு நடப்போம் என்று மக்கள் இறைவனுக்கு உறுதி அளிப்பது போன்று அடுத்த சில வசனங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு அடுத்துத்தான் ~இறைவா எங்களை நேரான வழியில் செலுத்து வாயாக என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்படி இறைமறை வசனம் ஒரு ஒழுங்கு முறையை நமக்கு விளக்கி காட்டுகிறது. இறைவனிடம் நமது கோரிக்கைகளை வைக்கும் இரே வழிமுறையைத்தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தும் அனைத்து கட்சி களைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லோரும் டெல்லி யில் ஒன்றாக கூடி முஸ்லிம் சமுதாயத்துக்கு எப்படியெல்லாம் பணி யாற்ற வேடும் என ஆலோ சனை செய்தோம்.
முஸ்லிம்களின் விவகாரம் தொடர் பாக மத்திய அரசு உடனுக் குடன் தீர்வு காணும் வகை யில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி அமைச்சகம் அமைக்க பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்தோம்.
பிரதமரிடம் நேரம் வாங்கி அவரை சந்தித்த போது நாங்கள் எந்த நோக் கத்திற்காக சென்றோமோ அந்த நோக்கத்தை விட்டு விட்டு ஆளாளுக்கு அவர வர் மாநில பிரச்சினையை பேச துவங்கி விட்டனர்.
பின்னர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த தும்தான் நாம் எந்த நோக் கத்துக்காக பிரதமரை சந்தித்தோமோ அதனை குறித்து விரிவாக விவாதிக் காமல் வந்து விட்டதை அவர்களுக்கு சுட்டிக் காட்டியதுடன் நமது கோரிக்கைகள் தொடர் பாக அரசை அணுகும் போது குர்ஆன் கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்து விளக்கினோம்.
அதன்படி இன்னொரு நாள் பிரதமரை சந்தித் தோம். முதலில் அவரை மனமார வாழ்த்தி பாராட் டினோம். பின்னர் அவர் தலைமையிலான அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் உற்ற துணையாக இருக்கும் என்ற உறுதியை தெரிவித் தோம். பிறகுதான் நாங்கள் அவரை சந்திக்க வந்ததன் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.
இந்த அணுகுமுறையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மன் மோகன்சிங் எங்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதன்படி சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் அமைத்து தந்துள்ளார்.
இறைவன் வழிகாட்டும் இந்த அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தால் நமது கோரிக்கைகள் அனைத் திலும் உறுதியான வெற்றி யினை பெற முடியும்.
இப்போது மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி செய்யக் கூடிய அரசுகள் சிறுபான்மை மக்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்ட அரசுகள். இந்த அரசு களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கும் எந்த செயலி லும் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது. அதிலும் முஸ்லிம்கள் இதில் மிக தெளிவாக இருக்க வேண்டும். அதன்வாயிலா கத்தான் நாம் நமது சமு தாயத்துக்கு நன்மைகளை செய்ய முடியும். நமது எல்லா செயல்களையும் இறைவன் காட்டும் வழி முறையில் அமைத்து கொள்ள வேண்டும். அதற் காக இறைவனிடம் அனை வரும் துஆ செய்வோம்.
இவ்வாறு பேராசிரியர் பேசினார்.
அராபிய இலக்கியங்களில் இந்தியா
அராபிய இலக்கியங்களில் இந்தியா
Webdunia
- எம்.எஸ்.அஷ்ரஃப்
சிற்றிதழ் : அட்சரம் (செப். 03)
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
தனி இதழ் : ரூ.25/-
பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.
பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.
சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.
இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத் தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.
இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின் துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.
இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.
இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.
இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.
அராபிய இலக்கியங்களில் இந்தியா
இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார். நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்குமிடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.
இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.
இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.
மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.
அராபிய இலக்கியங்களில் இந்தியா
எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.
நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.
தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.
முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.
இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.
http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0705/11/1070511017_1.htm
Webdunia
- எம்.எஸ்.அஷ்ரஃப்
சிற்றிதழ் : அட்சரம் (செப். 03)
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
தனி இதழ் : ரூ.25/-
பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.
பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.
சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.
இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத் தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.
இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின் துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.
இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.
இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.
இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.
அராபிய இலக்கியங்களில் இந்தியா
இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார். நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்குமிடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.
இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.
இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.
மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.
அராபிய இலக்கியங்களில் இந்தியா
எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.
நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.
தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.
முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.
இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.
http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0705/11/1070511017_1.htm
சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.
தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. ‘இளமையில் கல்’ என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.
"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.
தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.
(http://tamilmurasu.tamil.sg/node/626)
பிறைநதிபுரத்தான்
கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.
தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. ‘இளமையில் கல்’ என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.
"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.
தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.
(http://tamilmurasu.tamil.sg/node/626)
பிறைநதிபுரத்தான்
இஸ்லாத்தை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்
Assalamualaikum.
We can even start by giving a booklet " Understanding Islam and the Muslims ", a 32 page booklet having the following topics like, ' what is Islam', what do muslims believe', ' do islam and christianity have different origins'.
This book has photos beside the answer for easier understanding.
It can be printed in bulk and distributed.
Any person interested to know about Islam, can understand the entire concept about Islam.
Sincerely,
Mohamed Imtiaz
Jan Trust
97 Coral Merchant Street
Chennai 1
T: 25244015
imtiazhlc@hotmail.com
We can even start by giving a booklet " Understanding Islam and the Muslims ", a 32 page booklet having the following topics like, ' what is Islam', what do muslims believe', ' do islam and christianity have different origins'.
This book has photos beside the answer for easier understanding.
It can be printed in bulk and distributed.
Any person interested to know about Islam, can understand the entire concept about Islam.
Sincerely,
Mohamed Imtiaz
Jan Trust
97 Coral Merchant Street
Chennai 1
T: 25244015
imtiazhlc@hotmail.com
பஹ்ரைனில் இலவச கணிப்பொறி வகுப்புகள்
பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள்
பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள் ஆரம்ப விழா கடந்த
25-07-2008 வெள்ளி மாலை 8-30 மணிக்கு தமுமுக மர்கஸில் வைத்து நடைபெற்றது.
மண்டலத் தலைவர் முஹைதீன் ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பொருளாளர் ராஜகிரி யூசுப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
கரம்பை ஜக்கரிய்யா வரவேற்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் வேல்ட் நிறுவனத்தின் நிதி நிர்வாக மேலாளர்
ஐ. சபீருத்தீன் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பில் 2 கம்ப்யூட்டர்கள்
வழங்கி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு B.F.C. Real Estate
Pvt Ltd., நிறுவன பங்குதாரர்களின் தலைவர் S.M.T. காலித், டிஸ்கவர்
இஸ்லாம் தாயீ சகோ. முபாரக், பஹ்ரைன் தமிழ் சங்க பிரதிநிதி திருவை பஷீர்,
அக்குப்பஞ்சர் மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்கினர். அமைப்பாளர் ஏர்வாடி ரிஸ்வான் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கணிப்பொறி வகுப்பின் ஆசிரியர் அப்துல் காதர் நிர்வாகிகள் கோட்டார்
ரபீக், ஜாபர், பீர்முஹம்மது பேசினர். இந்நிகழ்ச்சியில் ஹாமா டவுன்
தமுமுகவின் வழிகாட்டுதலின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வேலூரைச்
சேர்ந்த சகோ. வினோத் தன் புதிய பெயரான
ஏ. அப்துல் வாஹித் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கலந்துகொண்டோர்
தக்பீர் முழக்கமிட்டு வாழ்த்தினர்.
முடிவில் தமீமுன் அன்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல் : எஸ். முஹம்மது அப்துல் காதர், பஹ்ரைன்
S. Mohd. Abdul Kader
Video Editor
Rayana Media Center
P.O Box 5021
Kingdom of Bahrain
Mob No: +973 39685402
www.rayanamediacenter.com
பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள் ஆரம்ப விழா கடந்த
25-07-2008 வெள்ளி மாலை 8-30 மணிக்கு தமுமுக மர்கஸில் வைத்து நடைபெற்றது.
மண்டலத் தலைவர் முஹைதீன் ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பொருளாளர் ராஜகிரி யூசுப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
கரம்பை ஜக்கரிய்யா வரவேற்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் வேல்ட் நிறுவனத்தின் நிதி நிர்வாக மேலாளர்
ஐ. சபீருத்தீன் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பில் 2 கம்ப்யூட்டர்கள்
வழங்கி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு B.F.C. Real Estate
Pvt Ltd., நிறுவன பங்குதாரர்களின் தலைவர் S.M.T. காலித், டிஸ்கவர்
இஸ்லாம் தாயீ சகோ. முபாரக், பஹ்ரைன் தமிழ் சங்க பிரதிநிதி திருவை பஷீர்,
அக்குப்பஞ்சர் மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்கினர். அமைப்பாளர் ஏர்வாடி ரிஸ்வான் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கணிப்பொறி வகுப்பின் ஆசிரியர் அப்துல் காதர் நிர்வாகிகள் கோட்டார்
ரபீக், ஜாபர், பீர்முஹம்மது பேசினர். இந்நிகழ்ச்சியில் ஹாமா டவுன்
தமுமுகவின் வழிகாட்டுதலின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வேலூரைச்
சேர்ந்த சகோ. வினோத் தன் புதிய பெயரான
ஏ. அப்துல் வாஹித் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கலந்துகொண்டோர்
தக்பீர் முழக்கமிட்டு வாழ்த்தினர்.
முடிவில் தமீமுன் அன்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல் : எஸ். முஹம்மது அப்துல் காதர், பஹ்ரைன்
S. Mohd. Abdul Kader
Video Editor
Rayana Media Center
P.O Box 5021
Kingdom of Bahrain
Mob No: +973 39685402
www.rayanamediacenter.com
முத்துப்பேட்டை சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வெளி உலகிற்கு தொியாத பல சாதனைகள் இருக்கிறார்கள். அரசியல் துறை, பொது நல சேவை, எழுத்துலக துறை, திரைப்படத்துறை போன்ற பல துறைகளில் சாதனைகளை படைத்த மற்றும் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கும் ஒரு சிலரை நோிடைய சந்தித்து அவா்களின் அனுபவங்களை பற்றிய கட்டுரை இது.
பொது சேவையில் தன்னாா்வத்துடன் செயல்படும் ஜனாப். முகைதீன் அப்துல் காதா் அவா்கள், துபாயில் செயல்படும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவரான ஜனாப். எம். அப்துல் ரஹ்மான் அவா்களின் தந்தையாவாா்.முஸ்லிம் லீக் கட்சியில் மிகுந்த பற்றுக்கொண்டவர் என்று சொல்வதைவிட தீவிர பற்றுக்கொண்டவர். இவாின் பிறந்த தேதி 14.3.1933. இவருடைய தாயாா் இறந்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளை
இவர் ஏற்றுக்கொண்டார்.
1953 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவா்களை நோில் சந்தித்து உரையாடி இருக்கிறாா் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பலாிடம் நட்பு வைத்து இருக்கிறாா். தமிழக முதல்வா் டாக்டா். கலைஞருடன் மிகுந்த நட்புடன் பழகுபவா். குறிப்பாக சொன்னால் பனத்வாலா, திருப்பூா் மைதீன் பீா் முஹம்மது அப்துல் சமது வடகரை. பாக்கர், யூசுப் சாஹிப் (மறுமலா்ச்சி ஆசிரியா்) போன்ற மறைந்த
தலைவா்களுடன் மிகுந்த நட்பு கொண்டு இருந்தாா் மற்றும் பேராசிரியா் . காதா் மொய்தீன் அவா்களுடன் மிகுந்தநட்பு கொண்டு இருக்கிறாா்.
கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது கேரளா முன்னாள் முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதரி பட், எம். கல்யாண சுந்தரம், பாப்பா. உமாநாத், தா. பாண்டியன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறார். அத்துடன் டாக்டர் கலைஞரை அவர்களை இரு முறை சந்தித்து இருக்கிறார்.
சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு சொந்தமான கட்டிட்டத்திற்கு சிறு வயதிலேயே நன்கொடை அளித்துள்ளாா். அவா் கொடுத்தது வேறும் மூன்று ரூபாய் மட்டும் தான். ஆனால் அந்த தொகை தற்போது பல ஆயிரங்கள் மதிப்பு மிக்கதாக உள்ளது. கொடுத்தது சிறிய தொகை தான் இருந்தாலும் சிறிய வயதிலேயே அதனை கொடுத்து இருக்கிறாா் என்று தான் நாம் பார்க்க வேண்டும்.
முகைதீன் அப்துல் காதா் அவா்கள், முத்து நகாில் சங்கத்து பள்ளிக்கூடம் என்று சொல்லப்படும் ஆவன்னா நேனா பள்ளியில் பெற்றோா் ஆசிரியர் கழகத்தின் தலைவராக கடந்த பத்தாண்டுகளாக பணி புரிகிறாா். மற்றும் பல பொது சேவைகளிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் பல சேவைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்.
தந்தையை தொடர்ந்து அவருடைய மகனாரும் பல பொது சேவைகள், கல்வி சேவைகள், சமுதாய சேவைகள், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, நோய்வாய் அடைந்த ஏழைகளுக்கு நிதியுதவி போன்ற பல உதவிகளை ஈமான் அமைப்பு மூலமாகவும் மற்றும் முத்துப்பேட்டை கல்வி பேரவை மூலமாகவும் செய்துக்கொண்டு வருகிறாா்.
முஸ்லிம் கட்சியினை பலப்படுத்த தாங்கள் கூறும் கருத்து என்னவென்று, ஜனாப். முகைதீன் அப்துல் காதர் அவர்களை கேட்டேன். ஆா்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அவா்களுக்கு நம்பிக்கையை வளர்த்து வர வேண்டும். நம் சமுதாய இளைஞர்கள் துணிந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் உறுதுணையாக இருக்க வேண்டும்
என்றார்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உடல் பொருள் ஆவியை தியாகம் செய்த பல தலைவர்களை இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக ஆயத்தமாகி கொண்டு நாம் எண்ணிப்பார்க்கமால் இருக்க முடியாது. பற்பல இஸ்லாமியா்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இருந்தனா். ஆனால் சில பாசிச சக்திகள் தியாகம் செய்த இஸ்லாமியர்களை மறைந்து விட்டு மறந்து விட்டு என்னவோ
அவா்கள் தான் இந்திய சுதந்திரத்தினை வாங்கி தந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.
15.8.1922 ஆம் ஆண்டு முத்துப்பேட்டையில் பிறந்த ~முத்துக்கவிஞர்~ என்றழைக்கப்படும். கவிஞர். கே.எஸ்.முகம்மது தாவூத் அவர்களை 31.7.2008 அன்று அவருடைய இல்லத்தில் அந்தி நேரத்தில் சந்தித்தேன். இவருக்கு 2 ஆண் மகனார்கள், 4 பெண் மகள்கள், பேத்தி 2 உள்ளது, 4 பேரன்கள் உள்ளார்கள். எளிமையான தோற்றம், திண்ணமான பேச்சு, வார்த்தை பொலிவு, கவித்துவம் அமைந்த வார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவரை நான் ஒரு கவிஞர் என்று தான் எண்ணி இருந்தேன். பின்னர் தான் தெரிந்தது இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று.
1943ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முத்துப்பேட்டையில் இவர் மூன்றாவது மட்டும் தான் படித்து வந்தார். பின்னர் பர்மாவிற்கு சென்று அனுபவ ரீதியாக ஹிந்தி, உருது, பர்மா, சிங்களம், முதலிய மொழிகளை தெரிந்து வைத்து இருக்கிறார்.
இந்தியா, மலேஸியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் கட்டுரை எழுதி இருக்கிறார். 86 வயதாகி விட்ட இந்த வயதிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.. இவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இன்பத்தமிழ் இலக்கணம் என்ற நூலினை பாராட்டி அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள உலக கலை பண்பாட்டு அமைப்பு என்ற நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
சிறப்பித்துள்ளது. மற்றும் 14.7.2001 அன்று முத்துப்பேட்டையில் நடந்த மீலாது விழா சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் இவருக்கு ஜே.எம். ஹாரூண் அவா்கள் பொன்னாடை போாத்தி சிறப்பித்தார்.
இவர் சிறந்த நாட்டு பற்று உடையவர், தமிழ் பற்று மிக்கவர், நாட்டுப்பற்றுடன் மனித நேய நல்லிணத்திற்'காகவும் தொண்டாற்றி வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் மார்க்க கமிட்டி முன்னாள் அங்கத்தினர். பல மார்க்க பத்திரிகைகளுக்கும் பல செய்திகளை அனுப்புவதால் பல இஸ்லாமிக பத்திரிகைகள் இவருக்கு இலவசமாக இவர் இல்லம் தேடி வருகிறது. முத்து நகரில் உள்ள ஆவன்னா நேனா பள்ளிக்கூடம் துவங்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறார். மற்றும் எஸ்.பி.கே. தோட்ட வளாகத்தில் உள்ள மக்கா பள்ளி வாசல் கட்டிடபணி துவங்கி அனைத்து வேலைகள் முடிவதற்கும் இவர் பணி புரிந்து இருக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாதிகள் நினைவு பரிசினை முன்னாள் முதல்வர். ஜெயலலிதா அவர்களின் கைககளால் பெற்று இருக்கிறார். அத்துடன் 1973 ஆம் ஆண்டு இந்திய நாட்டு சுதந்திரத்தின் 25ஆம் ஆண்டு விழாவில் பட்டயமும் மற்றும் சான்றும் பெற்று இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர தினத்தின் போது இவரை பாராட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்குவார்கள்.
இவரிடம் தற்போது பல அரிய தகவல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்று உள்ளது. மற்றும் பிரசுரம் ஆகாமல் இவருடைய பல கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வேறும் காகிதத்தில் இவர் கைப்பட எழுதப்பட்டு உள்ளது. அதனை யாரேனும் பிரசுரத்திற்கு எடுத்து வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால் அவரை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்.
அவருடைய முகவரி : முத்து கவிஞர். முகம்மது தாவூத். குட்டியாா்பள்ளி தெரு. பேட்டை சாலை. முத்துப்பேட்டை 614 704. திருவாரூா் மாவட்டம்.
முத்துப்பேட்டை ஹெச். எம்.ஆர். என்றழைக்கப்படும் ஜனாப். ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களும் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர். மணி விளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்து உள்ளார். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஸன் பள்ளியின் நிா்வாகி, தாளாளர், முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்து உள்ளது. எம். ஏ வரலாறில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பயிற்று இருக்கிறார். முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் முஹல்லா நிர்வாகத்தில் 18 ஆண்டுகள் செயலாளர் பணி. தற்போது 4 ஆண்டுகள் தலைவர் பணி. திருவாரூர்் மாவட்ட ரீதியில் நிரந்தர சமாதான கமிட்டி உறுப்பினராக இவர் உள்ளார்.
1972 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதிந்து இன்றும் பல சாதனைகளை புரிந்துவரும் முத்துப்பேட்டை. முஹம்மது அலி (என்ற) பாபு மகா ராஜா என்ற திரைப்பட இயக்குனா் பிறந்த ஊரும் முத்துப்பேட்டை என்றால் மிகையாகாது. உதவி இயக்குனராக சிநேகிதி, அன்பு சகோதரர்கள் போன்ற படங்களில் பணி புரிந்து உள்ளார். வசனகர்த்தாவாக சமர்ப்பணம் மற்றும் கமலம் போன்ற படங்களில் பணியாற்றி
உள்ளார்.
1981 ல் வெளியான இவா் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் தரையில் வாழும் மீன்கள். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அம்பிகா அறிமுகம். நடிகை வனிதா அறிமுகம். நடிகர் விஜய்பாபு அறிமுகம். நகைச்சுவை நடிகா் எஸ்.எஸ். சந்திரன் அறிமுகம். நடிகா். ராதா ரவி அறி்முகம். மற்றும் இசையமைப்பாளா் சந்திரபோஸ் அவர்களும் இந்த படத்தில் முதன் முறையாக இசையமைத்தார். பல முகங்களை
திரைக்கு தந்து, மிகவும் எளிமையான வாழ்க்கையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா. இரண்டு பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறார். இயக்குனா் பாபு மகா ராஜா. .
1962ல் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பினை முத்து நகாில் பயின்றார். முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெருக வாழ்ந்தான், கோவிலூர் பெண்கள் பள்ளிக்கூடம் மற்றும் மல்லிப்பட்டினம் மனோரா போன்ற பகுதியில் முதன் முதலில் இயக்கப்பட்ட இவருடைய முதல் திரைபடமான தரையில் வாழும் மீன்களாக தான் இருக்கும். இவருடைய முதல் படத்தினை வளநாடு சினி ரீலீஸ் - திருச்சி என்ற நிறுவனம் வெளியிட்டது. இவரின் இரண்டாவது திரைப்படம் தொடரும் சரித்திரங்கள். 3வது படம் அர்த்தமுள்ள ஆசைகள். தற்போது இவரிடம் ஓசை என்ற படத்திற்கான கதை வசனம் எல்லாம் தயார். ஆனால் தயாரித்து வெளியிட நல்ல ஒரு தயாரிப்பாளரை எதிர்ப்பார்த்து இவர் காத்து இருக்கிறார். இதனை படிக்கும் திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இருந்தால் அவரிடம் தொடர்பினை நான் ஏற்படுத்தி
தருகிறேன். இங்கு ஒன்றினை குறிப்பிட விரும்பிகிறேன். நடிகர் மோகன் நளினி நடித்து ஓசை என்ற படமானது பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த கதையல்ல. ஏனெனில் ஒரு திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் மற்றொரு திரைப்படம் வெளி வரலாம் என்பது திரைத்துறையின் நியதி.
தாங்களின் எதிர் கால சாதனையாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள் என்பதனை பற்றி கேட்ட போது, எதிர் காலத்தில் நான் ஒரு நல்ல இயக்குனராக மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும். மற்றும் மத்திய அரசாங்கம் அளிக்கும் திரைப்படத்துக்கான உயர்ந்த விருதினை நான் பெற வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்
போன்ற படங்களை மொழி மாற்றம் செய்து உள்ளேன். ஆகையால் தமிழ் நாடு மட்டுமின்றி மற்ற மாநில திரைத்துறையிலும் சில நண்பர்களை நான் பெற்று இருக்கிறேன். இறைவனின் நாட்டப்படி நானும் ஒரு நாள் பெரிய இயக்குனர் என்ற பெயர் எடுப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன்.. .
இது போல் பல சிறப்புகளை கொண்ட படைப்பாளிகளை பெற்ற ஊராக தான் இன்றைய முத்துப்பேட்டை உள்ளதே தவிர பொய் ஊடகங்கள் ஊகத்தினை தான் நினைக்கிறதே தவிர உண்மையினை மறைக்கிறது. காலம் ஒரு நாள் பதில் சொல்லும். இத்தகைய படைப்பாளிகளும் மற்றும் சாதனை செய்துக்கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் ஊர் முத்துப்பேட்டை இன்னும் சிறக்கும் சிறப்பாக வளரும்.
வெளி உலகிற்க்கு தெரியாத படைப்பாளிகள் இருக்கும் இந்த ஊரினை பற்றி பல அரிய தகவல்கள் அறிய விரும்புவோர்கள் ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்தால் பல உண்மைகள் புரியும்.
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வெளி உலகிற்கு தொியாத பல சாதனைகள் இருக்கிறார்கள். அரசியல் துறை, பொது நல சேவை, எழுத்துலக துறை, திரைப்படத்துறை போன்ற பல துறைகளில் சாதனைகளை படைத்த மற்றும் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கும் ஒரு சிலரை நோிடைய சந்தித்து அவா்களின் அனுபவங்களை பற்றிய கட்டுரை இது.
பொது சேவையில் தன்னாா்வத்துடன் செயல்படும் ஜனாப். முகைதீன் அப்துல் காதா் அவா்கள், துபாயில் செயல்படும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவரான ஜனாப். எம். அப்துல் ரஹ்மான் அவா்களின் தந்தையாவாா்.முஸ்லிம் லீக் கட்சியில் மிகுந்த பற்றுக்கொண்டவர் என்று சொல்வதைவிட தீவிர பற்றுக்கொண்டவர். இவாின் பிறந்த தேதி 14.3.1933. இவருடைய தாயாா் இறந்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளை
இவர் ஏற்றுக்கொண்டார்.
1953 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவா்களை நோில் சந்தித்து உரையாடி இருக்கிறாா் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பலாிடம் நட்பு வைத்து இருக்கிறாா். தமிழக முதல்வா் டாக்டா். கலைஞருடன் மிகுந்த நட்புடன் பழகுபவா். குறிப்பாக சொன்னால் பனத்வாலா, திருப்பூா் மைதீன் பீா் முஹம்மது அப்துல் சமது வடகரை. பாக்கர், யூசுப் சாஹிப் (மறுமலா்ச்சி ஆசிரியா்) போன்ற மறைந்த
தலைவா்களுடன் மிகுந்த நட்பு கொண்டு இருந்தாா் மற்றும் பேராசிரியா் . காதா் மொய்தீன் அவா்களுடன் மிகுந்தநட்பு கொண்டு இருக்கிறாா்.
கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது கேரளா முன்னாள் முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதரி பட், எம். கல்யாண சுந்தரம், பாப்பா. உமாநாத், தா. பாண்டியன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறார். அத்துடன் டாக்டர் கலைஞரை அவர்களை இரு முறை சந்தித்து இருக்கிறார்.
சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு சொந்தமான கட்டிட்டத்திற்கு சிறு வயதிலேயே நன்கொடை அளித்துள்ளாா். அவா் கொடுத்தது வேறும் மூன்று ரூபாய் மட்டும் தான். ஆனால் அந்த தொகை தற்போது பல ஆயிரங்கள் மதிப்பு மிக்கதாக உள்ளது. கொடுத்தது சிறிய தொகை தான் இருந்தாலும் சிறிய வயதிலேயே அதனை கொடுத்து இருக்கிறாா் என்று தான் நாம் பார்க்க வேண்டும்.
முகைதீன் அப்துல் காதா் அவா்கள், முத்து நகாில் சங்கத்து பள்ளிக்கூடம் என்று சொல்லப்படும் ஆவன்னா நேனா பள்ளியில் பெற்றோா் ஆசிரியர் கழகத்தின் தலைவராக கடந்த பத்தாண்டுகளாக பணி புரிகிறாா். மற்றும் பல பொது சேவைகளிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் பல சேவைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்.
தந்தையை தொடர்ந்து அவருடைய மகனாரும் பல பொது சேவைகள், கல்வி சேவைகள், சமுதாய சேவைகள், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, நோய்வாய் அடைந்த ஏழைகளுக்கு நிதியுதவி போன்ற பல உதவிகளை ஈமான் அமைப்பு மூலமாகவும் மற்றும் முத்துப்பேட்டை கல்வி பேரவை மூலமாகவும் செய்துக்கொண்டு வருகிறாா்.
முஸ்லிம் கட்சியினை பலப்படுத்த தாங்கள் கூறும் கருத்து என்னவென்று, ஜனாப். முகைதீன் அப்துல் காதர் அவர்களை கேட்டேன். ஆா்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அவா்களுக்கு நம்பிக்கையை வளர்த்து வர வேண்டும். நம் சமுதாய இளைஞர்கள் துணிந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் உறுதுணையாக இருக்க வேண்டும்
என்றார்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உடல் பொருள் ஆவியை தியாகம் செய்த பல தலைவர்களை இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக ஆயத்தமாகி கொண்டு நாம் எண்ணிப்பார்க்கமால் இருக்க முடியாது. பற்பல இஸ்லாமியா்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இருந்தனா். ஆனால் சில பாசிச சக்திகள் தியாகம் செய்த இஸ்லாமியர்களை மறைந்து விட்டு மறந்து விட்டு என்னவோ
அவா்கள் தான் இந்திய சுதந்திரத்தினை வாங்கி தந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.
15.8.1922 ஆம் ஆண்டு முத்துப்பேட்டையில் பிறந்த ~முத்துக்கவிஞர்~ என்றழைக்கப்படும். கவிஞர். கே.எஸ்.முகம்மது தாவூத் அவர்களை 31.7.2008 அன்று அவருடைய இல்லத்தில் அந்தி நேரத்தில் சந்தித்தேன். இவருக்கு 2 ஆண் மகனார்கள், 4 பெண் மகள்கள், பேத்தி 2 உள்ளது, 4 பேரன்கள் உள்ளார்கள். எளிமையான தோற்றம், திண்ணமான பேச்சு, வார்த்தை பொலிவு, கவித்துவம் அமைந்த வார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவரை நான் ஒரு கவிஞர் என்று தான் எண்ணி இருந்தேன். பின்னர் தான் தெரிந்தது இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று.
1943ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முத்துப்பேட்டையில் இவர் மூன்றாவது மட்டும் தான் படித்து வந்தார். பின்னர் பர்மாவிற்கு சென்று அனுபவ ரீதியாக ஹிந்தி, உருது, பர்மா, சிங்களம், முதலிய மொழிகளை தெரிந்து வைத்து இருக்கிறார்.
இந்தியா, மலேஸியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் கட்டுரை எழுதி இருக்கிறார். 86 வயதாகி விட்ட இந்த வயதிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.. இவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இன்பத்தமிழ் இலக்கணம் என்ற நூலினை பாராட்டி அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள உலக கலை பண்பாட்டு அமைப்பு என்ற நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
சிறப்பித்துள்ளது. மற்றும் 14.7.2001 அன்று முத்துப்பேட்டையில் நடந்த மீலாது விழா சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் இவருக்கு ஜே.எம். ஹாரூண் அவா்கள் பொன்னாடை போாத்தி சிறப்பித்தார்.
இவர் சிறந்த நாட்டு பற்று உடையவர், தமிழ் பற்று மிக்கவர், நாட்டுப்பற்றுடன் மனித நேய நல்லிணத்திற்'காகவும் தொண்டாற்றி வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் மார்க்க கமிட்டி முன்னாள் அங்கத்தினர். பல மார்க்க பத்திரிகைகளுக்கும் பல செய்திகளை அனுப்புவதால் பல இஸ்லாமிக பத்திரிகைகள் இவருக்கு இலவசமாக இவர் இல்லம் தேடி வருகிறது. முத்து நகரில் உள்ள ஆவன்னா நேனா பள்ளிக்கூடம் துவங்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறார். மற்றும் எஸ்.பி.கே. தோட்ட வளாகத்தில் உள்ள மக்கா பள்ளி வாசல் கட்டிடபணி துவங்கி அனைத்து வேலைகள் முடிவதற்கும் இவர் பணி புரிந்து இருக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாதிகள் நினைவு பரிசினை முன்னாள் முதல்வர். ஜெயலலிதா அவர்களின் கைககளால் பெற்று இருக்கிறார். அத்துடன் 1973 ஆம் ஆண்டு இந்திய நாட்டு சுதந்திரத்தின் 25ஆம் ஆண்டு விழாவில் பட்டயமும் மற்றும் சான்றும் பெற்று இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர தினத்தின் போது இவரை பாராட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்குவார்கள்.
இவரிடம் தற்போது பல அரிய தகவல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்று உள்ளது. மற்றும் பிரசுரம் ஆகாமல் இவருடைய பல கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வேறும் காகிதத்தில் இவர் கைப்பட எழுதப்பட்டு உள்ளது. அதனை யாரேனும் பிரசுரத்திற்கு எடுத்து வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால் அவரை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்.
அவருடைய முகவரி : முத்து கவிஞர். முகம்மது தாவூத். குட்டியாா்பள்ளி தெரு. பேட்டை சாலை. முத்துப்பேட்டை 614 704. திருவாரூா் மாவட்டம்.
முத்துப்பேட்டை ஹெச். எம்.ஆர். என்றழைக்கப்படும் ஜனாப். ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களும் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர். மணி விளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்து உள்ளார். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஸன் பள்ளியின் நிா்வாகி, தாளாளர், முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்து உள்ளது. எம். ஏ வரலாறில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பயிற்று இருக்கிறார். முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் முஹல்லா நிர்வாகத்தில் 18 ஆண்டுகள் செயலாளர் பணி. தற்போது 4 ஆண்டுகள் தலைவர் பணி. திருவாரூர்் மாவட்ட ரீதியில் நிரந்தர சமாதான கமிட்டி உறுப்பினராக இவர் உள்ளார்.
1972 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதிந்து இன்றும் பல சாதனைகளை புரிந்துவரும் முத்துப்பேட்டை. முஹம்மது அலி (என்ற) பாபு மகா ராஜா என்ற திரைப்பட இயக்குனா் பிறந்த ஊரும் முத்துப்பேட்டை என்றால் மிகையாகாது. உதவி இயக்குனராக சிநேகிதி, அன்பு சகோதரர்கள் போன்ற படங்களில் பணி புரிந்து உள்ளார். வசனகர்த்தாவாக சமர்ப்பணம் மற்றும் கமலம் போன்ற படங்களில் பணியாற்றி
உள்ளார்.
1981 ல் வெளியான இவா் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் தரையில் வாழும் மீன்கள். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அம்பிகா அறிமுகம். நடிகை வனிதா அறிமுகம். நடிகர் விஜய்பாபு அறிமுகம். நகைச்சுவை நடிகா் எஸ்.எஸ். சந்திரன் அறிமுகம். நடிகா். ராதா ரவி அறி்முகம். மற்றும் இசையமைப்பாளா் சந்திரபோஸ் அவர்களும் இந்த படத்தில் முதன் முறையாக இசையமைத்தார். பல முகங்களை
திரைக்கு தந்து, மிகவும் எளிமையான வாழ்க்கையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா. இரண்டு பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறார். இயக்குனா் பாபு மகா ராஜா. .
1962ல் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பினை முத்து நகாில் பயின்றார். முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெருக வாழ்ந்தான், கோவிலூர் பெண்கள் பள்ளிக்கூடம் மற்றும் மல்லிப்பட்டினம் மனோரா போன்ற பகுதியில் முதன் முதலில் இயக்கப்பட்ட இவருடைய முதல் திரைபடமான தரையில் வாழும் மீன்களாக தான் இருக்கும். இவருடைய முதல் படத்தினை வளநாடு சினி ரீலீஸ் - திருச்சி என்ற நிறுவனம் வெளியிட்டது. இவரின் இரண்டாவது திரைப்படம் தொடரும் சரித்திரங்கள். 3வது படம் அர்த்தமுள்ள ஆசைகள். தற்போது இவரிடம் ஓசை என்ற படத்திற்கான கதை வசனம் எல்லாம் தயார். ஆனால் தயாரித்து வெளியிட நல்ல ஒரு தயாரிப்பாளரை எதிர்ப்பார்த்து இவர் காத்து இருக்கிறார். இதனை படிக்கும் திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இருந்தால் அவரிடம் தொடர்பினை நான் ஏற்படுத்தி
தருகிறேன். இங்கு ஒன்றினை குறிப்பிட விரும்பிகிறேன். நடிகர் மோகன் நளினி நடித்து ஓசை என்ற படமானது பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த கதையல்ல. ஏனெனில் ஒரு திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் மற்றொரு திரைப்படம் வெளி வரலாம் என்பது திரைத்துறையின் நியதி.
தாங்களின் எதிர் கால சாதனையாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள் என்பதனை பற்றி கேட்ட போது, எதிர் காலத்தில் நான் ஒரு நல்ல இயக்குனராக மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும். மற்றும் மத்திய அரசாங்கம் அளிக்கும் திரைப்படத்துக்கான உயர்ந்த விருதினை நான் பெற வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்
போன்ற படங்களை மொழி மாற்றம் செய்து உள்ளேன். ஆகையால் தமிழ் நாடு மட்டுமின்றி மற்ற மாநில திரைத்துறையிலும் சில நண்பர்களை நான் பெற்று இருக்கிறேன். இறைவனின் நாட்டப்படி நானும் ஒரு நாள் பெரிய இயக்குனர் என்ற பெயர் எடுப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன்.. .
இது போல் பல சிறப்புகளை கொண்ட படைப்பாளிகளை பெற்ற ஊராக தான் இன்றைய முத்துப்பேட்டை உள்ளதே தவிர பொய் ஊடகங்கள் ஊகத்தினை தான் நினைக்கிறதே தவிர உண்மையினை மறைக்கிறது. காலம் ஒரு நாள் பதில் சொல்லும். இத்தகைய படைப்பாளிகளும் மற்றும் சாதனை செய்துக்கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் ஊர் முத்துப்பேட்டை இன்னும் சிறக்கும் சிறப்பாக வளரும்.
வெளி உலகிற்க்கு தெரியாத படைப்பாளிகள் இருக்கும் இந்த ஊரினை பற்றி பல அரிய தகவல்கள் அறிய விரும்புவோர்கள் ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்தால் பல உண்மைகள் புரியும்.
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
திருக்குர்ஆன் இணையத்தளம்
கீழ்க்கண்ட
திருக்குர்ஆன் இணையத்தளம்
அரபி - ஆங்கிலம்
அரபி - உர்தூ
உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஓதுவதைக் கேட்டு பயன் பெறலாம்
http://www.quranexplorer.com/quran/
அரபி மொழியை உச்சரிப்புடன் பயில உதவும் இணையத்தளம்
http://www.multimediaquran.com/
திருக்குர்ஆன் இணையத்தளம்
அரபி - ஆங்கிலம்
அரபி - உர்தூ
உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஓதுவதைக் கேட்டு பயன் பெறலாம்
http://www.quranexplorer.com/quran/
அரபி மொழியை உச்சரிப்புடன் பயில உதவும் இணையத்தளம்
http://www.multimediaquran.com/
Labels:
அரபி,
ஆங்கிலம்,
இணையத்தளம்,
இஸ்லாம்,
திருக்குர்ஆன்
Monday, July 28, 2008
Sunday, July 27, 2008
தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.
தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.
தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
திருக்குர்ஆனும் - திருக்குறளும்
திருக்குர்ஆனும் - திருக்குறளும்
தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு
விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்
இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.
மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.
இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்ற குறலால் விளக்கப்படுகிறது.
கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்
திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.
தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்
மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.
புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்
பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?
என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
இக்குறளிலும் விளக்குகிறார்.
இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :
இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்ற குறளில் விளக்குகிறார்.
ஷக்கராத் பற்றி திருக்குறள்
எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
எல்லாப்புகழும் இறைவனுக்கே :
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு
என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.
நன்றி : இஸ்மி
ஜூலை 2005
தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு
விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்
இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.
மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.
இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்ற குறலால் விளக்கப்படுகிறது.
கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்
திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.
தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்
மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.
புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்
பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?
என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
இக்குறளிலும் விளக்குகிறார்.
இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :
இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்ற குறளில் விளக்குகிறார்.
ஷக்கராத் பற்றி திருக்குறள்
எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
எல்லாப்புகழும் இறைவனுக்கே :
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு
என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.
நன்றி : இஸ்மி
ஜூலை 2005
ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு
ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு
ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.
THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.
THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
குர்ஆனின் குரல் இணையத்தில்
குர்ஆனின் குரல் இணையத்தில்
http://www.quraaninkural.com/
Labels:
இணையம்,
இதழ்,
இஸ்லாம்,
குர்ஆனின் குரல்,
மாத இதழ்
கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை
கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை
தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட
செய்து வருகிறது.
அங்குள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று,அவர்கள் எவ்வாறு கல்வி சேiவையினை செய்து வருகிறார்கள் என்பதினை பற்றி வாசகர் ஒருவர் தொகுத்த கட்டுரையின் சாராம்சம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனோ அல்லது மகளோ 8வது அல்லது 10வது படித்தால் போதும் என்ற மனப்பான்மையயுடன் தான் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தனர். ஆனால் இன்றோ என்னுடைய மகனும் மகளும் படிக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் ஒவ்வொரு பெற்றோரும் மாறி விட்டார்கள். இந்த மாற்றத்தல் விளைத்தது தான் முத்து நகரில் பல கல்வி நிறுவனங்கள்.
1. அரசு உதவி பெறும் ஆவன்னா நேனா துவக்கப்பள்ளி
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
3. பிரிலியண்ட மெட்ரிக்குலெஷ்ன பள்ளி
4. ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
5. வின்னர்ஸ் மெட்ரிக்குலெஸன் பள்ளி
6. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி
7. இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோவிலூர் பெண்கள் மேல்நலைப்பள்ளி
8. சரஸ்வதி வித்யாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி
9. பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
10. முத்துப்பேட்டை கல்வி பேரவை
11. கணிப்பொறி மென்பொருள் பயிற்சி மையம்
20.5.1941 ஆம் ஆண்டு ஜனாப். முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் துவங்கப்பட்ட, ஆவன்னா நேனா பள்ளியானது நகரின் புராதன பள்ளிக்கூடமாக இன்றும் விளக்குகிறது. தற்போது இங்கு 510 மாணாக்காகள் கல்வி பயிலுகிறார்கள். 14 ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணி புரிகிறார்கள். 1 முதல் 5 வகுப்புகள் இங்கு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 உட் பிரிவுகள் உள்ளன என்பதினை பள்ளியின் தலைமையாசிரியை
திருமதி. பெ. சீதா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளையின் சார்பில்நகரின் எல்லைப்பகுதயில் 16.6.1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரிலியண்ட. மெட்ரிக்குலேஷன் பள்ளியானது கல்வி சேவையினை 26 ஆண்டுகளாக செய்து வலருகிறது. இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் என்றால், முத்து நகரில் துவங்கப்படட்ட முதல் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புமுதல் திறமையும் தகுதியும் வாய்நத
ஆசிரியர் ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் போதிக்கப்படுகிறது. பரிவுடன் பண்புடன் கல்வியினை போதித்து ஒழுக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. 11க்கும் மேற்பட்ட கணிப்பொறிகளை கொண்டு மாணாக்கர்களுக்கு கணிப்பொறி பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் 3வது மொழியாக ஹிந்தியும் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
குழந்தைகள் அமைதியாக படிப்பதற்கு பள்ளியை சுற்றிலும் இயற்கையான சூழல் பரந்த விளையாட்டு மைதானம்.
மேலும், தாளாளர் மற்றும் முதல்வரான. ஜனாப்ஃ முகம்மது யாகூப் ஆ.ய.இ டீளஉ.இ டீ.வ அவர்கள் கூறும் போது எங்கள் பள்ளியில் தற்போது 49 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். அதில் 3 ஆசிரியைகள் இஸ்லாமியர்கள். 1467 மாணாக்கர்கள் கல்வி பயில்கிறார்கள். நல்ல தரத்துடன் நாங்கள் மாணாக்கர்களுக்கு கல்வியினை கற்று தருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் நல்லதொரு பள்ளிக்கூடம்
என்று சுற்று வட்டார மக்கள் எங்கள் பபள்ளியினை சொல்கிறார்கள். பெற்றேர்கள் அனைவரும் தன்னுடைய சந்ததிகளுக்கு இம்மைக்கு கொடுக்கக்கூடிய கல்வியினை கொண்டு மறுமைக்கு விளைநிலைமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
பெண்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயர்நத நோக்கில் 10.6.1996 அன்று முத்துப்பேட்டை அப்துல் காசிம் நகரில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது தன்னுடைய கல்வி பணியினை நன்கு செய்து வருகிறது. அப்பள்ளியின் முதல்வரான திருமதி. சகுந்தலா ஆ.யு ஆ.நுன.இஆ.Phடை.இ அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் போது, எங்கள் பள்ளியானது அரசு
அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும். இங்கு படித்து வெளியில் சென்ற பல மாணவிகள் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படைக்கொண்டு படித்து வருகிறார்கள். தற்போது எங்கள் பள்ளியில் 900 மாணவிகள் பயில்கிறார்கள். அதில் மாற்று மத மாணவிகள் 300 பேர்கள். மதநல்லிணம் அடிப்டையில் செயல்படும் எங்கள் பள்ளியில் 40 ஆசிரியைகள் 40
பேர்கள் மாற்று மதத்தினர். நாங்க் பெண்கள் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கல்வியினை போதித்து வருகிறோம். இங'கு ஐங்கால தொழுகை மற்றும் இஸ்லாமிய அடிப்படைகள் கொள்கைகளும் போதிக்க்ப்படீகறது. பள்ளியின் உள்ளே தற்போது பள்ளி வாசல் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. மதியம் 12 முதல் 1230 வரை அரபி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகிறது புனித மாதமான ரமலானில்
சிறப்பு தொழுகை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இஸ்லாமிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக 3 ஆசிரியைகள் பிரத்யேக நியமிக்கப்ட';டுள்ளனர்.
எங்கள் ரஹ்மத் அறக்கட்டளையானது, பல சேவைகளை செய்து வருகிறது. தற்போது 11ம் வகுப்பில் சோந்துள்ள அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இலவசக்கல்வி அதாவது பள்ளிகட்டணம் விடுதிக்கட்டணம் பத்தகம் போன்றவற்றை அளித்து வருகிறது. மற்றும் 10ம் வகுப்ப தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முத்துப்பேடடை முஸ்லிம் ஜமாத் கொடுத்து வருகிறது. அதில் எங்கள்
பள்ளியின் பல மாணவிகள் பயன் பெற்றனர்.
ஊடகத்துறையிலும் எங்கள் அறக்கட்டளையானது பல சேவைகளை செய்து வருகிறது. இணையத்தளம் மூலமாக திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்ற வற்றை நூhலாக வெளியிட்டு வருகிறது.அதனை வெளிநாட்டவர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பல எழுத்தாளர்களை ஊக்ககுவிக்கும் பணிகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முத்துப்பேட்iயில் நடைபெற்ற விழா ஒன்றில் இலங்கை சார்ந்த
எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் எழுதிய முத்தான முத்துப்பேட்டை என்ற நூலானது வெளியிட்ப்பட்டது. மற்றும் ஜுலை 6 - 2008 அன்று சிங்கப்பூரில் எழுத்தாளார் ராணி மைந்தன் அவாகள் எழுதிய முஸ்தபா - சிங்கப்புபபூரில் ஒரு வெற்றி தமிழர் என்ற நூhலானது வெளிளிட';ப்பட்து. அந்த வழாவிற்கு சிங்கை மற்றும மலேஷியாவை சார்ந்த பல தமிழர் அமைப்புக் கலந்துக்கொண்டது.
எங்கள் பள்ளியின் ஆலோசகர்களாக, திரு; மலைச்சாமி ஐ.ஏ.எஸ்., கவிப்பேரரசு. திரு. வைரமுத்து, கவிக்கோ. அப்துல் ரஹ்மான்ஈ திரு; மு. கல்யாண சுந்தர தேவர் அவர்களும் உள்ளனர். பள்ளயின் நாட் குறிப்பிபில் திரு;. வைரமுத்து அவர்கள் எழுதிய நாளை உலகம் நமக்கு.. நன்மை யாவும் நமக்கு.. நாங்கள் சேர்ந்து கைகள் தட்டினால் விடிந்து போகும் கிழக்கு.. என்ற பாடலானது பள்ளி பாடலாக இடம் பெற்றுள்ளது.
எங்கள் பள்ளியின் தாளாளர் ஜனாப். எம். ஏ. முஸ்தபா அவர்கள், தனிப்பட்ட முறையில் 20 இலட்சம் ஊக்கத்தொகையினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, ஆய்வினை செய்யும் மாணாக்கர்களுக்கு கொடுத்து உதவி உள்ளார்.
20.1.1992 ஆம் ஆண்டு துவங்கபட்ட வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது நகரின் மைய பகுதியான புதுத்தொருவில் உள்ளது. இதன் முதல்வர் மற்றும் தாளாளர் ஹெச். எம். ரஷீஸ் கான் எம்.ஏ.பி.எட.அவர்களை நேர் காணும் போது, தற்போது எங்கள் பள்ளியில் 237 மாணவ மாணவிகள் கல்வி பயில்களிறார்கள்.15 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணி புரிகிறார்கள். பத்தாம் வகுப்பு தேரிவில் எங்கள் ப்ளியானது100 சதவீதம்
தேர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் பள்ளியானது இந்தகல்வியாண்டு முதல் ஆலங்காடு என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மாணாக்கர்களுக்கு சிநறந்த கல்வியனை நாங்கள் நன்றாக செய்து வருகிறோம்.
இந்த பள்ளியின் முதல்வரை பற்றி சில தகவல்கள் முத்துப்பேட்டை ஹெச். எம். ஆர் என்று அன்பாக இங்குளள மக்களால் அழைக்கப்படும் இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் திருமணமானது 31.8.1961 ஆம் ஆண்டு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்களால் நடத்தி வைக்க்பட்டது. 1964 ஆம் ஆண்டு 1994 வரை முத்துப்பேட்டை அரசு உயர்நநைப்ப்pளயில் 30 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார்.
இவர் நர்கிஸ் - பத்திரிகையின் கடைசி பக்க சிந்தனை, முஸ்லிம் முரசு, ஆனந்த பொலிவு, நூhருல் இஸ'லாம் குண்டூசி போன்ற பத்திரிகைகள் மற்றும் பல விழா மலர்கள் நீடூர் மதரஸா ஆண்டு மலர், நர்கிஜ் மாத இதழின் 15ஆம் ஆண்டு மலர், மயிலாடுதுறை மீலாது விih மலர், பள்ளி வாசல் தறிப்பு விih மலர்கள் போன்வற்றில் இவரின் படைப்புகள்.
அன்பு, அறிவு, பொறுமை பற்றிய இவர் எழுதிய தத்துவர்ந்த நூலானது வாஷிங்டன் உலக நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் சிங்கை வாசக சாலையிலும் இவரின் நுநாலானது இடம் பெற்றுள்ளது.
சிற்ந்த கல்வி மான்களை உருவாக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் முத்து நகரில் முத்தாக விள்க்குகிறது. அத்துடன் பல இஸ்லாமிய அமைப்புகளும் , முஸ்லிம்இயக்கங்களும், வெளிநாட்டு வாழ் அமைப்புகளும் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கல்வி சேவைகளை செம்மையாக செய்து வருகிறது. வரும் காலத்தில் முத்துப்பேட்டை நகரானது கல்வியில் மேன்பாடு பெற்ற நகராக மாற
உள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே.
தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட
செய்து வருகிறது.
அங்குள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று,அவர்கள் எவ்வாறு கல்வி சேiவையினை செய்து வருகிறார்கள் என்பதினை பற்றி வாசகர் ஒருவர் தொகுத்த கட்டுரையின் சாராம்சம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனோ அல்லது மகளோ 8வது அல்லது 10வது படித்தால் போதும் என்ற மனப்பான்மையயுடன் தான் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தனர். ஆனால் இன்றோ என்னுடைய மகனும் மகளும் படிக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் ஒவ்வொரு பெற்றோரும் மாறி விட்டார்கள். இந்த மாற்றத்தல் விளைத்தது தான் முத்து நகரில் பல கல்வி நிறுவனங்கள்.
1. அரசு உதவி பெறும் ஆவன்னா நேனா துவக்கப்பள்ளி
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
3. பிரிலியண்ட மெட்ரிக்குலெஷ்ன பள்ளி
4. ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
5. வின்னர்ஸ் மெட்ரிக்குலெஸன் பள்ளி
6. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி
7. இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோவிலூர் பெண்கள் மேல்நலைப்பள்ளி
8. சரஸ்வதி வித்யாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி
9. பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
10. முத்துப்பேட்டை கல்வி பேரவை
11. கணிப்பொறி மென்பொருள் பயிற்சி மையம்
20.5.1941 ஆம் ஆண்டு ஜனாப். முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் துவங்கப்பட்ட, ஆவன்னா நேனா பள்ளியானது நகரின் புராதன பள்ளிக்கூடமாக இன்றும் விளக்குகிறது. தற்போது இங்கு 510 மாணாக்காகள் கல்வி பயிலுகிறார்கள். 14 ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணி புரிகிறார்கள். 1 முதல் 5 வகுப்புகள் இங்கு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 உட் பிரிவுகள் உள்ளன என்பதினை பள்ளியின் தலைமையாசிரியை
திருமதி. பெ. சீதா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளையின் சார்பில்நகரின் எல்லைப்பகுதயில் 16.6.1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரிலியண்ட. மெட்ரிக்குலேஷன் பள்ளியானது கல்வி சேவையினை 26 ஆண்டுகளாக செய்து வலருகிறது. இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் என்றால், முத்து நகரில் துவங்கப்படட்ட முதல் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புமுதல் திறமையும் தகுதியும் வாய்நத
ஆசிரியர் ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் போதிக்கப்படுகிறது. பரிவுடன் பண்புடன் கல்வியினை போதித்து ஒழுக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. 11க்கும் மேற்பட்ட கணிப்பொறிகளை கொண்டு மாணாக்கர்களுக்கு கணிப்பொறி பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் 3வது மொழியாக ஹிந்தியும் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
குழந்தைகள் அமைதியாக படிப்பதற்கு பள்ளியை சுற்றிலும் இயற்கையான சூழல் பரந்த விளையாட்டு மைதானம்.
மேலும், தாளாளர் மற்றும் முதல்வரான. ஜனாப்ஃ முகம்மது யாகூப் ஆ.ய.இ டீளஉ.இ டீ.வ அவர்கள் கூறும் போது எங்கள் பள்ளியில் தற்போது 49 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். அதில் 3 ஆசிரியைகள் இஸ்லாமியர்கள். 1467 மாணாக்கர்கள் கல்வி பயில்கிறார்கள். நல்ல தரத்துடன் நாங்கள் மாணாக்கர்களுக்கு கல்வியினை கற்று தருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் நல்லதொரு பள்ளிக்கூடம்
என்று சுற்று வட்டார மக்கள் எங்கள் பபள்ளியினை சொல்கிறார்கள். பெற்றேர்கள் அனைவரும் தன்னுடைய சந்ததிகளுக்கு இம்மைக்கு கொடுக்கக்கூடிய கல்வியினை கொண்டு மறுமைக்கு விளைநிலைமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
பெண்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயர்நத நோக்கில் 10.6.1996 அன்று முத்துப்பேட்டை அப்துல் காசிம் நகரில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது தன்னுடைய கல்வி பணியினை நன்கு செய்து வருகிறது. அப்பள்ளியின் முதல்வரான திருமதி. சகுந்தலா ஆ.யு ஆ.நுன.இஆ.Phடை.இ அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் போது, எங்கள் பள்ளியானது அரசு
அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும். இங்கு படித்து வெளியில் சென்ற பல மாணவிகள் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படைக்கொண்டு படித்து வருகிறார்கள். தற்போது எங்கள் பள்ளியில் 900 மாணவிகள் பயில்கிறார்கள். அதில் மாற்று மத மாணவிகள் 300 பேர்கள். மதநல்லிணம் அடிப்டையில் செயல்படும் எங்கள் பள்ளியில் 40 ஆசிரியைகள் 40
பேர்கள் மாற்று மதத்தினர். நாங்க் பெண்கள் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கல்வியினை போதித்து வருகிறோம். இங'கு ஐங்கால தொழுகை மற்றும் இஸ்லாமிய அடிப்படைகள் கொள்கைகளும் போதிக்க்ப்படீகறது. பள்ளியின் உள்ளே தற்போது பள்ளி வாசல் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. மதியம் 12 முதல் 1230 வரை அரபி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகிறது புனித மாதமான ரமலானில்
சிறப்பு தொழுகை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இஸ்லாமிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக 3 ஆசிரியைகள் பிரத்யேக நியமிக்கப்ட';டுள்ளனர்.
எங்கள் ரஹ்மத் அறக்கட்டளையானது, பல சேவைகளை செய்து வருகிறது. தற்போது 11ம் வகுப்பில் சோந்துள்ள அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இலவசக்கல்வி அதாவது பள்ளிகட்டணம் விடுதிக்கட்டணம் பத்தகம் போன்றவற்றை அளித்து வருகிறது. மற்றும் 10ம் வகுப்ப தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முத்துப்பேடடை முஸ்லிம் ஜமாத் கொடுத்து வருகிறது. அதில் எங்கள்
பள்ளியின் பல மாணவிகள் பயன் பெற்றனர்.
ஊடகத்துறையிலும் எங்கள் அறக்கட்டளையானது பல சேவைகளை செய்து வருகிறது. இணையத்தளம் மூலமாக திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்ற வற்றை நூhலாக வெளியிட்டு வருகிறது.அதனை வெளிநாட்டவர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பல எழுத்தாளர்களை ஊக்ககுவிக்கும் பணிகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முத்துப்பேட்iயில் நடைபெற்ற விழா ஒன்றில் இலங்கை சார்ந்த
எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் எழுதிய முத்தான முத்துப்பேட்டை என்ற நூலானது வெளியிட்ப்பட்டது. மற்றும் ஜுலை 6 - 2008 அன்று சிங்கப்பூரில் எழுத்தாளார் ராணி மைந்தன் அவாகள் எழுதிய முஸ்தபா - சிங்கப்புபபூரில் ஒரு வெற்றி தமிழர் என்ற நூhலானது வெளிளிட';ப்பட்து. அந்த வழாவிற்கு சிங்கை மற்றும மலேஷியாவை சார்ந்த பல தமிழர் அமைப்புக் கலந்துக்கொண்டது.
எங்கள் பள்ளியின் ஆலோசகர்களாக, திரு; மலைச்சாமி ஐ.ஏ.எஸ்., கவிப்பேரரசு. திரு. வைரமுத்து, கவிக்கோ. அப்துல் ரஹ்மான்ஈ திரு; மு. கல்யாண சுந்தர தேவர் அவர்களும் உள்ளனர். பள்ளயின் நாட் குறிப்பிபில் திரு;. வைரமுத்து அவர்கள் எழுதிய நாளை உலகம் நமக்கு.. நன்மை யாவும் நமக்கு.. நாங்கள் சேர்ந்து கைகள் தட்டினால் விடிந்து போகும் கிழக்கு.. என்ற பாடலானது பள்ளி பாடலாக இடம் பெற்றுள்ளது.
எங்கள் பள்ளியின் தாளாளர் ஜனாப். எம். ஏ. முஸ்தபா அவர்கள், தனிப்பட்ட முறையில் 20 இலட்சம் ஊக்கத்தொகையினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, ஆய்வினை செய்யும் மாணாக்கர்களுக்கு கொடுத்து உதவி உள்ளார்.
20.1.1992 ஆம் ஆண்டு துவங்கபட்ட வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது நகரின் மைய பகுதியான புதுத்தொருவில் உள்ளது. இதன் முதல்வர் மற்றும் தாளாளர் ஹெச். எம். ரஷீஸ் கான் எம்.ஏ.பி.எட.அவர்களை நேர் காணும் போது, தற்போது எங்கள் பள்ளியில் 237 மாணவ மாணவிகள் கல்வி பயில்களிறார்கள்.15 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணி புரிகிறார்கள். பத்தாம் வகுப்பு தேரிவில் எங்கள் ப்ளியானது100 சதவீதம்
தேர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் பள்ளியானது இந்தகல்வியாண்டு முதல் ஆலங்காடு என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மாணாக்கர்களுக்கு சிநறந்த கல்வியனை நாங்கள் நன்றாக செய்து வருகிறோம்.
இந்த பள்ளியின் முதல்வரை பற்றி சில தகவல்கள் முத்துப்பேட்டை ஹெச். எம். ஆர் என்று அன்பாக இங்குளள மக்களால் அழைக்கப்படும் இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் திருமணமானது 31.8.1961 ஆம் ஆண்டு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்களால் நடத்தி வைக்க்பட்டது. 1964 ஆம் ஆண்டு 1994 வரை முத்துப்பேட்டை அரசு உயர்நநைப்ப்pளயில் 30 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார்.
இவர் நர்கிஸ் - பத்திரிகையின் கடைசி பக்க சிந்தனை, முஸ்லிம் முரசு, ஆனந்த பொலிவு, நூhருல் இஸ'லாம் குண்டூசி போன்ற பத்திரிகைகள் மற்றும் பல விழா மலர்கள் நீடூர் மதரஸா ஆண்டு மலர், நர்கிஜ் மாத இதழின் 15ஆம் ஆண்டு மலர், மயிலாடுதுறை மீலாது விih மலர், பள்ளி வாசல் தறிப்பு விih மலர்கள் போன்வற்றில் இவரின் படைப்புகள்.
அன்பு, அறிவு, பொறுமை பற்றிய இவர் எழுதிய தத்துவர்ந்த நூலானது வாஷிங்டன் உலக நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் சிங்கை வாசக சாலையிலும் இவரின் நுநாலானது இடம் பெற்றுள்ளது.
சிற்ந்த கல்வி மான்களை உருவாக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் முத்து நகரில் முத்தாக விள்க்குகிறது. அத்துடன் பல இஸ்லாமிய அமைப்புகளும் , முஸ்லிம்இயக்கங்களும், வெளிநாட்டு வாழ் அமைப்புகளும் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கல்வி சேவைகளை செம்மையாக செய்து வருகிறது. வரும் காலத்தில் முத்துப்பேட்டை நகரானது கல்வியில் மேன்பாடு பெற்ற நகராக மாற
உள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே.
தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
மக்கள் சக்தி இயக்கம்
Dear Mr. Bala - Gurusamy.
Well written.
Since you are talking about "Self development" - following link could be useful for those people.
This is by the famous "writer" on Self development Dr. MS Udayamurthy.
These days - lot of youngsters have joined and making their monthly magazine on socio-political change.
Interested could read from this.
http://www.makkalsakthi.org/index.php?option=com_content&task=view&id=36&Itemid=45
http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/
MAKKAL SAKTHI EYAKKAM
Dr.M.S.UDAYAMURTHY
17A, South avenue
Thiruvanmiyur, Chennai - 41
Tamil Nadu
India
600041
044-24421810 ,9443562030
http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/
Well written.
Since you are talking about "Self development" - following link could be useful for those people.
This is by the famous "writer" on Self development Dr. MS Udayamurthy.
These days - lot of youngsters have joined and making their monthly magazine on socio-political change.
Interested could read from this.
http://www.makkalsakthi.org/index.php?option=com_content&task=view&id=36&Itemid=45
http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/
MAKKAL SAKTHI EYAKKAM
Dr.M.S.UDAYAMURTHY
17A, South avenue
Thiruvanmiyur, Chennai - 41
Tamil Nadu
India
600041
044-24421810 ,9443562030
http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/
Saturday, July 26, 2008
துபாய் முகவரிகள்
அமீரகத் தமிழர்கள் அமைப்பு
கே. சிவகுமார் 055 9760054
பாரத் 050 2500202
மீர் ஜாபர் கான் 055 4059 064
செந்தில் குமார் 050 461 0388
சைபுதீன் 050 6973502
முஸ்டாக் அஹமத் 050 697 6719
ஜெரால்ட் மேனுவேல் 050 288 9054
அன்வர்தீன் 050 549 2469
எம். சாதிக் அலி 050 382 5313
பத்திரிகை
முஹம்மது யூசுஃப், கல்ஃப் டுடே 050 6797 685 / 06 5777999
கதிஜா 050 650 8320
பட்கல் டுடே - 050 7870 113
சக்தி எஃப் எம் - 050 864 33 11
டாக்டர் என்.எம். ஷாகுல் ஹமீது
பல் மருத்துவர்
Dr.N.M. Shahul Hameed,
Jansons Stars Polyclinic,
Easa Saleh Algurg Building,
Opp. Sea Shell Inn Hotel,
Khalid Bin Waleed Road,
P.O. Box 5868, Fax: 00971 4 - 3932009
Bur Dubai - UAE
Tel : Res : 00971 4-2668458, Mob: 00971 50- 8772059
shahulnauru@gmail.com
Flat No. 423, Greata Pearl, 174, Choolaimedu High Road, CHENNAI-600094.
Tamil Nadu, India.Tel 0091 9841774037
Al Musalla Medical Centre
Al Musalla Tower
P O Box No. 26238
Bur Dubai
Tel : 04 3966123
Fax : 04 3966493
அக்பர் பாட்சா
Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213
Saudi Business Center
P. O. Box 5791
Jeddah 21432
Saudi Arabia
Tel: +966 2 657 2420, 657 4417
E mail: abatcha@gmail.com
Website: www.maxvision-international.com
துபாய் பொறியாளர்கள்
Name: Haji.H.N.shahul hameed
qualification:M.SC., Eleectronics
designation:India- tamil nadu-thanjore
present position in the company working: as Electronic Engineer in Mega Electronics/IMega -dubai
in P.O. Box No. ,:287580
contact telephone No.050-8098430/055-7376422/04-2220639
E mail :shahulnazeem@gmail.com
Address:NAsr,sqare,Gargash centre,deira dubai-UAE
Work experience in max 4 lines :
Ø Installing the PABX ( LG Norte,Panasonic,NEC,Our Brand) -Tracing the Signal line - Configuration of Extension - Programming the system and installing the cabling And Also Installing the CCTV Cameras (all types of Camera)with DVR,PCI Slots, PCMCIA and Troubleshooting the DVR, Switcher and configuration by using Network(internet) and Remote viewing software and also programming in LED panel Display and Timer Punching card reader and Time Attendance Machine
அறந்தாங்கி ஜமாஅத் உறுப்பினர்கள்
1. Akbar - 050-7629464
2. Syed APS - 050 - 7847708
3.Shaik - 050-8488042
4.Sagubar - 050-4984653
5. Razak - 06-8020499
6. Habeeb - 050 - 5218674
7. Gani - 050 - 8452681
8. Buhar - 050 -5215003
9. Basheer - 050 -5461938
10.Ayoob - 050 - 5997141
11. Asmi - 050 -8726988
12. Alawdeen - 050-4904950
வர்த்தகம்
Dubai Festival City
info@dubaifestivalcity.com
www.dubaifestivalcity.com
கே. சிவகுமார் 055 9760054
பாரத் 050 2500202
மீர் ஜாபர் கான் 055 4059 064
செந்தில் குமார் 050 461 0388
சைபுதீன் 050 6973502
முஸ்டாக் அஹமத் 050 697 6719
ஜெரால்ட் மேனுவேல் 050 288 9054
அன்வர்தீன் 050 549 2469
எம். சாதிக் அலி 050 382 5313
பத்திரிகை
முஹம்மது யூசுஃப், கல்ஃப் டுடே 050 6797 685 / 06 5777999
கதிஜா 050 650 8320
பட்கல் டுடே - 050 7870 113
சக்தி எஃப் எம் - 050 864 33 11
டாக்டர் என்.எம். ஷாகுல் ஹமீது
பல் மருத்துவர்
Dr.N.M. Shahul Hameed,
Jansons Stars Polyclinic,
Easa Saleh Algurg Building,
Opp. Sea Shell Inn Hotel,
Khalid Bin Waleed Road,
P.O. Box 5868, Fax: 00971 4 - 3932009
Bur Dubai - UAE
Tel : Res : 00971 4-2668458, Mob: 00971 50- 8772059
shahulnauru@gmail.com
Flat No. 423, Greata Pearl, 174, Choolaimedu High Road, CHENNAI-600094.
Tamil Nadu, India.Tel 0091 9841774037
Al Musalla Medical Centre
Al Musalla Tower
P O Box No. 26238
Bur Dubai
Tel : 04 3966123
Fax : 04 3966493
அக்பர் பாட்சா
Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213
Saudi Business Center
P. O. Box 5791
Jeddah 21432
Saudi Arabia
Tel: +966 2 657 2420, 657 4417
E mail: abatcha@gmail.com
Website: www.maxvision-international.com
துபாய் பொறியாளர்கள்
Name: Haji.H.N.shahul hameed
qualification:M.SC., Eleectronics
designation:India- tamil nadu-thanjore
present position in the company working: as Electronic Engineer in Mega Electronics/IMega -dubai
in P.O. Box No. ,:287580
contact telephone No.050-8098430/055-7376422/04-2220639
E mail :shahulnazeem@gmail.com
Address:NAsr,sqare,Gargash centre,deira dubai-UAE
Work experience in max 4 lines :
Ø Installing the PABX ( LG Norte,Panasonic,NEC,Our Brand) -Tracing the Signal line - Configuration of Extension - Programming the system and installing the cabling And Also Installing the CCTV Cameras (all types of Camera)with DVR,PCI Slots, PCMCIA and Troubleshooting the DVR, Switcher and configuration by using Network(internet) and Remote viewing software and also programming in LED panel Display and Timer Punching card reader and Time Attendance Machine
அறந்தாங்கி ஜமாஅத் உறுப்பினர்கள்
1. Akbar - 050-7629464
2. Syed APS - 050 - 7847708
3.Shaik - 050-8488042
4.Sagubar - 050-4984653
5. Razak - 06-8020499
6. Habeeb - 050 - 5218674
7. Gani - 050 - 8452681
8. Buhar - 050 -5215003
9. Basheer - 050 -5461938
10.Ayoob - 050 - 5997141
11. Asmi - 050 -8726988
12. Alawdeen - 050-4904950
வர்த்தகம்
Dubai Festival City
info@dubaifestivalcity.com
www.dubaifestivalcity.com
வளைகுடா முகவரிகள்
சவுதி அரேபியா
Meeran Moosa
Managment Accountant
MIS Administrator
Adham Center - 3rd Floor
Madina Road
Jeddah KSA
Tel : 02 614 2424 ( 241 )
050 785 3965
moosameeran@apsl-ksa.com
கத்தார் முகவரிகள்
Sikkender Korankiyan
Maintenance Supervisor
Qatar District Cooling Company
P.O. Box 24979 – Doha, Qatar
Office : (974) 496-0555
Fax : (974) 496-0599
Mobile : (974) 580 9664
E-mail : skorankiyan@qatarcool.com
Website : www.qatarcool.com
Meeran Moosa
Managment Accountant
MIS Administrator
Adham Center - 3rd Floor
Madina Road
Jeddah KSA
Tel : 02 614 2424 ( 241 )
050 785 3965
moosameeran@apsl-ksa.com
கத்தார் முகவரிகள்
Sikkender Korankiyan
Maintenance Supervisor
Qatar District Cooling Company
P.O. Box 24979 – Doha, Qatar
Office : (974) 496-0555
Fax : (974) 496-0599
Mobile : (974) 580 9664
E-mail : skorankiyan@qatarcool.com
Website : www.qatarcool.com
Labels:
உணர்வு,
செய்தி,
தர்கா,
மறுப்பு,
ஜமாஅத்துல் உலமா
Global: Life Behind the Abaya: Under Cover in Saudi Arabia
Global: Life Behind the Abaya: Under Cover in Saudi Arabia
By Sakuntala Narasimhan
My first reaction is to refuse to go - I will not visit Saudi Arabia if I am required to wear a 'burkha' (veil), when my husband need not observe any Islamic dress codes. However, curiosity ultimately wins over feminist indignation.
On arrival at Riyadh airport I am escorted very politely to the separate "Ladies Lounge", while husband proceeds to the main lounge. As I sit, I can't help but admire the paintings and other works of art, the velvet furnishings and ornate fittings. Almost like some royal palace. I catch myself thinking: Opulence doesn't necessarily mean gender equality.
I have brought along a 'burkha' with me, but even after we exit the airport and arrive at the Faisaliya Hotel, along one of the main boulevards of the city, no one asks me to put it on. The next morning, however, the management brings me a silky, embroidered black 'abaya' (as the 'burkha' is known in Saudi Arabia) with a polite suggestion that I may be "more comfortable" wearing it when I go out. "Comfortable?" I think. "In a 'burkha' that threatens to efface my personality and individuality?" I get the answer, but with a few surprises, over the next six days of my stay in Riyadh.
I am in the city as an invitee to an international award ceremony, conducted along the lines of the Nobel Prize, with prizes of $200,000, awarded annually to global achievers in science and medicine. At the lavishly decorated Prince Sultan Grand Ceremonial Hall, where the glittering ceremony is taking place, the women sit at separate tables. To my right is a woman who owns a large, flower importing business and, beside her, a woman who teaches economics at the university. On my left sits a woman, who heads a large NGO in Jeddah, spends part of the year in New York and was "a close friend of JRD Tata". Next to her is a young journalist, and completing the group at our table is a wealthy heiress, just back from her Swiss holiday. All are dressed in black 'abayas'. When the TV cameras pan towards our table, the young, exquisitely made-up businesswoman quickly draws her veil across her face, turns to me and says, "Tell me when the camera is off." She, like
all the women at my table, speaks beautiful English. Why does she want to cover her face, I ask. "You wouldn't like to hitch up your sari and show your leg, right? Similarly, I don't like strangers staring at my face," she says.
The women sitting beside me have perfectly manicured hands, painted nails, matching glossy lipstick and eye shadow. If you put these on, I ask, doesn't the 'abaya' smother it all? The economics professor retorts, "Not at all. I put it on for my pleasure, just as I eat delicacies for my personal pleasure. I am not putting on make-up to attract men." So, are the western and eastern sexist norms merely variations of the commodification of women?
"You know," adds the heiress from Jeddah, "in the West, I have seen women dressed in near-identical business suits, at formal events. Is that any different?" For these women, the 'abaya' makes no difference.
And surprisingly, it somewhat feels the same way once I wear mine. Initially, I am resentful; thereafter it doesn't matter. In Riyadh there is air-conditioning everywhere - including in the taxis - and I don't feel hot under the extra layer of the veil.
The next morning as our group gathers, the wife of the award winner for medicine, who is an American, declares that she feels "comfortable" in her 'abaya'; "I don't have to worry about my crumpled skirt," she jokes. That day, we visit the national museum, the university and a medical hospital-cum-research centre. And even at the centre, there are women, dressed in, what else, but the 'abaya', engaged in great scientific experiments and using hitech equipment.
Another day, I decide to stroll through the gold market (just like the Zaveri Bazar in Mumbai but much grander) and pay a visit to the nearby mall. I am free to move around and no one restricts my entry anywhere. That day, I also discover first-hand that young Saudi girls have their own strategies to grab some fun despite the seclusion - every girl is equipped with a sophisticated mobile, and via the cellphone lots of banter with young men goes on, including courtship. As I sit in the segregated women's area in the mall, I watch in silent fascination, as a teenage girl sits down, whips out her mobile. Trust modern technology - and youthful ingenuity - to circumvent restrictions! Does she like wearing the 'abaya', I ask. She swiftly replies, "It's like having to wear underwear, because it is considered 'decent'. Perhaps Serena Williams would play faster
if she wore a bikini, but she doesn't, right?"
On our last day we are taken on a desert safari, where there is no segregation. Though clad in the mandatory 'abaya', I sit with a mixed group - men and women. It reminds me of a dinner party I had attended at the rich and opulent mansion of a conservative business family at Malabar Hill, Mumbai. There, imported drinks flowed freely for the men seated in the drawing room, but the daughter-in-law (clad in an expensive designer sari) attended to the guests with her 'ghoonghat' (the end of the sari used to cover the head) drawn decorously over her expensive, salon-maintained hair. "The 'ghoonghat' is to show respect to elders, which is part of our culture, why should I rebel?" she had retorted when I questioned her about her reaction to the conservative norms imposed by her in-laws.
So, I come to the conclusion that sexist codes that treat the female differently exist everywhere and in all cultures, only their manifestations differ. Take, for example, the fact that last year thousands of girls in the 'modern' West chose, for their graduation present, breast enhancement surgery paid for by parents.
Here's a poser for feminist analysis - how is this version of sexist social pressures any better than the mandatory covering of the female body? Why do we see less indignation over one set of socio-cultural norms, and more over the other?
Even at the dinner hosted by the genial Indian ambassador, M.O.H. Farookh, at his residence in the exclusive diplomatic enclave, the wives of the local Indian officials sit separately. Why? "Just by habit," they say. At dinner, however, men and women eat together.
So, at the end of six days of wearing an 'abaya', I ask myself whether the dress code made a difference. The truthful answer (which comes even to my feminist sensibilities as a surprise) is that it didn't. Marginally, yes, because women cannot travel without a male escort, and so on, but in the words of Lakshmi, an Indian living in Riyadh "one is equally handicapped in Delhi because of the all-pervasive goondaism". As for obliterating my personality, I am what I am, regardless of dress. And 'abayas' need not - and apparently do not - consign women to drabness, unless they want to break through major male bastions.. Which is true of anywhere in the world.
I am glad I went. Even if I had to wear an 'abaya'.
(Courtesy: Women's Feature Service)
Copyright © 2008, NewsBlaze, Daily News
By Sakuntala Narasimhan
My first reaction is to refuse to go - I will not visit Saudi Arabia if I am required to wear a 'burkha' (veil), when my husband need not observe any Islamic dress codes. However, curiosity ultimately wins over feminist indignation.
On arrival at Riyadh airport I am escorted very politely to the separate "Ladies Lounge", while husband proceeds to the main lounge. As I sit, I can't help but admire the paintings and other works of art, the velvet furnishings and ornate fittings. Almost like some royal palace. I catch myself thinking: Opulence doesn't necessarily mean gender equality.
I have brought along a 'burkha' with me, but even after we exit the airport and arrive at the Faisaliya Hotel, along one of the main boulevards of the city, no one asks me to put it on. The next morning, however, the management brings me a silky, embroidered black 'abaya' (as the 'burkha' is known in Saudi Arabia) with a polite suggestion that I may be "more comfortable" wearing it when I go out. "Comfortable?" I think. "In a 'burkha' that threatens to efface my personality and individuality?" I get the answer, but with a few surprises, over the next six days of my stay in Riyadh.
I am in the city as an invitee to an international award ceremony, conducted along the lines of the Nobel Prize, with prizes of $200,000, awarded annually to global achievers in science and medicine. At the lavishly decorated Prince Sultan Grand Ceremonial Hall, where the glittering ceremony is taking place, the women sit at separate tables. To my right is a woman who owns a large, flower importing business and, beside her, a woman who teaches economics at the university. On my left sits a woman, who heads a large NGO in Jeddah, spends part of the year in New York and was "a close friend of JRD Tata". Next to her is a young journalist, and completing the group at our table is a wealthy heiress, just back from her Swiss holiday. All are dressed in black 'abayas'. When the TV cameras pan towards our table, the young, exquisitely made-up businesswoman quickly draws her veil across her face, turns to me and says, "Tell me when the camera is off." She, like
all the women at my table, speaks beautiful English. Why does she want to cover her face, I ask. "You wouldn't like to hitch up your sari and show your leg, right? Similarly, I don't like strangers staring at my face," she says.
The women sitting beside me have perfectly manicured hands, painted nails, matching glossy lipstick and eye shadow. If you put these on, I ask, doesn't the 'abaya' smother it all? The economics professor retorts, "Not at all. I put it on for my pleasure, just as I eat delicacies for my personal pleasure. I am not putting on make-up to attract men." So, are the western and eastern sexist norms merely variations of the commodification of women?
"You know," adds the heiress from Jeddah, "in the West, I have seen women dressed in near-identical business suits, at formal events. Is that any different?" For these women, the 'abaya' makes no difference.
And surprisingly, it somewhat feels the same way once I wear mine. Initially, I am resentful; thereafter it doesn't matter. In Riyadh there is air-conditioning everywhere - including in the taxis - and I don't feel hot under the extra layer of the veil.
The next morning as our group gathers, the wife of the award winner for medicine, who is an American, declares that she feels "comfortable" in her 'abaya'; "I don't have to worry about my crumpled skirt," she jokes. That day, we visit the national museum, the university and a medical hospital-cum-research centre. And even at the centre, there are women, dressed in, what else, but the 'abaya', engaged in great scientific experiments and using hitech equipment.
Another day, I decide to stroll through the gold market (just like the Zaveri Bazar in Mumbai but much grander) and pay a visit to the nearby mall. I am free to move around and no one restricts my entry anywhere. That day, I also discover first-hand that young Saudi girls have their own strategies to grab some fun despite the seclusion - every girl is equipped with a sophisticated mobile, and via the cellphone lots of banter with young men goes on, including courtship. As I sit in the segregated women's area in the mall, I watch in silent fascination, as a teenage girl sits down, whips out her mobile. Trust modern technology - and youthful ingenuity - to circumvent restrictions! Does she like wearing the 'abaya', I ask. She swiftly replies, "It's like having to wear underwear, because it is considered 'decent'. Perhaps Serena Williams would play faster
if she wore a bikini, but she doesn't, right?"
On our last day we are taken on a desert safari, where there is no segregation. Though clad in the mandatory 'abaya', I sit with a mixed group - men and women. It reminds me of a dinner party I had attended at the rich and opulent mansion of a conservative business family at Malabar Hill, Mumbai. There, imported drinks flowed freely for the men seated in the drawing room, but the daughter-in-law (clad in an expensive designer sari) attended to the guests with her 'ghoonghat' (the end of the sari used to cover the head) drawn decorously over her expensive, salon-maintained hair. "The 'ghoonghat' is to show respect to elders, which is part of our culture, why should I rebel?" she had retorted when I questioned her about her reaction to the conservative norms imposed by her in-laws.
So, I come to the conclusion that sexist codes that treat the female differently exist everywhere and in all cultures, only their manifestations differ. Take, for example, the fact that last year thousands of girls in the 'modern' West chose, for their graduation present, breast enhancement surgery paid for by parents.
Here's a poser for feminist analysis - how is this version of sexist social pressures any better than the mandatory covering of the female body? Why do we see less indignation over one set of socio-cultural norms, and more over the other?
Even at the dinner hosted by the genial Indian ambassador, M.O.H. Farookh, at his residence in the exclusive diplomatic enclave, the wives of the local Indian officials sit separately. Why? "Just by habit," they say. At dinner, however, men and women eat together.
So, at the end of six days of wearing an 'abaya', I ask myself whether the dress code made a difference. The truthful answer (which comes even to my feminist sensibilities as a surprise) is that it didn't. Marginally, yes, because women cannot travel without a male escort, and so on, but in the words of Lakshmi, an Indian living in Riyadh "one is equally handicapped in Delhi because of the all-pervasive goondaism". As for obliterating my personality, I am what I am, regardless of dress. And 'abayas' need not - and apparently do not - consign women to drabness, unless they want to break through major male bastions.. Which is true of anywhere in the world.
I am glad I went. Even if I had to wear an 'abaya'.
(Courtesy: Women's Feature Service)
Copyright © 2008, NewsBlaze, Daily News
Friday, July 25, 2008
THE INSTITUTION OF ENGINEERS ( INDIA )
THE INSTITUTION OF ENGINEERS ( INDIA )
DUBAI CHAPTER
Invites all Indian Engineers working in Dubai & Northern Emirates to send their Bio -data
like
Name,
qualification,
designation
present position in the company working
in P.O. Box No. ,
contact telephone No.
E mail
Address
Work experience in max 4 lines
etc.
on or before 31st July 2008
at the Institutions
E mail address : ieidubai@gmail.com
for publishing your bio-data in our forthcoming Directory / Magazine to be published shortly.
DUBAI CHAPTER
Invites all Indian Engineers working in Dubai & Northern Emirates to send their Bio -data
like
Name,
qualification,
designation
present position in the company working
in P.O. Box No. ,
contact telephone No.
E mail
Address
Work experience in max 4 lines
etc.
on or before 31st July 2008
at the Institutions
E mail address : ieidubai@gmail.com
for publishing your bio-data in our forthcoming Directory / Magazine to be published shortly.
'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?' - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கருத்து
'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?'
மனம் திறக்கிறார்கள் எம்.பி.க்கள்!
வருகின்ற 22ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். சிறிய கட்சித் தலைவர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு.
"ஒரு எம்.பி.க்கு 25 கோடி ரூபாயிலிருந்து, 30 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் பேசப்படுகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான ஏ.பி. பரதனே குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் அரசை ஆதரித்த இடது சாரிகள், இப்போது மற்ற கட்சிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்க முன் வருகின்ற நேரத்தில் இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள்.
இந்நிலையில், "எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டோம்.
காதர் மொகைதீன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.பி.க்களை இவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்யவே எங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பணம் வாங்குவதற்காகத் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. இது மாதிரி குற்றச்சாட்டுகளைச் சொல்வது பாராளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். ஏதோ ஒரு நேரத்தில் எங்கோ ஒரு எம்.பி. பணம் வாங்கியிருக்கலாம்.
அதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எல்லோருமே பணம் வாங்குகிறார்கள்; பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது அபத்தம்.
வாக்கெடுப்பில் தனிப்பட்ட எம்.பி.க்களின் முடிவு ஒன்றும் இல்லை. கட்சித் தலைமை ஒரு முடிவை எடுத்து சொல்லப் போகிறது.
அதன்படி எம்.பி. வாக்களிக்கப் போகிறார். எந்த எம்.பி.யாவது மாறி வாக்களிக்க நினைத்தால் அதை ஓப்பனாகவே சொல்லிவிட்டுச் செய்கிறார். அப்படியிருக்கையில் பணம் விளையாடுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுவது நாட்டைக் கெடுக்கிற வேலை.
இந்தப் பிரச்சாரங்கள் பத்திரிகை தர்மத்திற்கும் உகந்ததல்ல. இது மாதிரி பிரச்சாரம் செய்வதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் நம் நாட்டு ஜனநாயகத்தை வளர்க்க உதவாது. மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, ஜனநாயகத்தைக் குலைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். குதிரை பேரம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாடு குழம்பிக் கிடப்பதை விரும்புகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
http://www.tamilanexpress.com/politics/politics.asp
மனம் திறக்கிறார்கள் எம்.பி.க்கள்!
வருகின்ற 22ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். சிறிய கட்சித் தலைவர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு.
"ஒரு எம்.பி.க்கு 25 கோடி ரூபாயிலிருந்து, 30 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் பேசப்படுகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான ஏ.பி. பரதனே குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் அரசை ஆதரித்த இடது சாரிகள், இப்போது மற்ற கட்சிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்க முன் வருகின்ற நேரத்தில் இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள்.
இந்நிலையில், "எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டோம்.
காதர் மொகைதீன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.பி.க்களை இவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்யவே எங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பணம் வாங்குவதற்காகத் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. இது மாதிரி குற்றச்சாட்டுகளைச் சொல்வது பாராளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். ஏதோ ஒரு நேரத்தில் எங்கோ ஒரு எம்.பி. பணம் வாங்கியிருக்கலாம்.
அதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எல்லோருமே பணம் வாங்குகிறார்கள்; பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது அபத்தம்.
வாக்கெடுப்பில் தனிப்பட்ட எம்.பி.க்களின் முடிவு ஒன்றும் இல்லை. கட்சித் தலைமை ஒரு முடிவை எடுத்து சொல்லப் போகிறது.
அதன்படி எம்.பி. வாக்களிக்கப் போகிறார். எந்த எம்.பி.யாவது மாறி வாக்களிக்க நினைத்தால் அதை ஓப்பனாகவே சொல்லிவிட்டுச் செய்கிறார். அப்படியிருக்கையில் பணம் விளையாடுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுவது நாட்டைக் கெடுக்கிற வேலை.
இந்தப் பிரச்சாரங்கள் பத்திரிகை தர்மத்திற்கும் உகந்ததல்ல. இது மாதிரி பிரச்சாரம் செய்வதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் நம் நாட்டு ஜனநாயகத்தை வளர்க்க உதவாது. மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, ஜனநாயகத்தைக் குலைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். குதிரை பேரம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாடு குழம்பிக் கிடப்பதை விரும்புகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
http://www.tamilanexpress.com/politics/politics.asp
Saudi Arabian warships on maiden visit to India
Saudi Arabian warships on maiden visit to India
Signalling improvement in defence ties between the two countries, two Saudi Arabian naval warships will arrive in India on their maiden visit Monday, a Indian Navy official said here Friday.
"The Saudi Arabian ships have been visiting Pakistan. But it is the first time that the country's warships are coming to India," the navy official said.
The two warships will arrive July 28 at Mumbai on a four-day friendly port call.
'The visit by the Saudi Navy ships is a result of the Indian Ocean Naval Symposium organised by India recently. Saudi Arabia is an important country in the In
dian Ocean Rim and the port call is an indication how countries look at India in the emerging world scenario,' the official added.
Seventy-nine cadets of the Al Fahad Naval Academy will also be part of the entourage.
Saudi Arabia is considered a major ally of the US and most of its weapons platforms come from the West.
http://www.indiaenews.com/india/20080725/134452.htm
Signalling improvement in defence ties between the two countries, two Saudi Arabian naval warships will arrive in India on their maiden visit Monday, a Indian Navy official said here Friday.
"The Saudi Arabian ships have been visiting Pakistan. But it is the first time that the country's warships are coming to India," the navy official said.
The two warships will arrive July 28 at Mumbai on a four-day friendly port call.
'The visit by the Saudi Navy ships is a result of the Indian Ocean Naval Symposium organised by India recently. Saudi Arabia is an important country in the In
dian Ocean Rim and the port call is an indication how countries look at India in the emerging world scenario,' the official added.
Seventy-nine cadets of the Al Fahad Naval Academy will also be part of the entourage.
Saudi Arabia is considered a major ally of the US and most of its weapons platforms come from the West.
http://www.indiaenews.com/india/20080725/134452.htm
Labels:
இந்தியா,
கப்பல்,
சவுதி அரேபியா,
போர்,
வருகை
AMU to set up modern information and communication lab
AMU to set up modern information and communication lab
The Aligarh Muslim University (AMU) will set up a state-of-art information and communication laboratory for its engineering students, a university official said Friday.
'An alumnus of the university, M.P. Varshney, has donated Rs.1 million for setting up the lab,' AMU spokesperson Rahat Abrar told IANS on phone.
The lab will be equipped with all the latest information and communication technology devices, including fast-speed computers, Internet and other facilities, he added.
Varshney studied in the varsity during 1942-46 and later joined the chemistry department of AMU as a faculty member, officials said.
http://www.indiaenews.com/education/20080725/134427.htm
The Aligarh Muslim University (AMU) will set up a state-of-art information and communication laboratory for its engineering students, a university official said Friday.
'An alumnus of the university, M.P. Varshney, has donated Rs.1 million for setting up the lab,' AMU spokesperson Rahat Abrar told IANS on phone.
The lab will be equipped with all the latest information and communication technology devices, including fast-speed computers, Internet and other facilities, he added.
Varshney studied in the varsity during 1942-46 and later joined the chemistry department of AMU as a faculty member, officials said.
http://www.indiaenews.com/education/20080725/134427.htm
Invitation Meet Moulana Khalid Saifullah Rahmani Saheb
Invitation Meet Moulana Khalid Saifullah Rahmani Saheb
Chairman, Hidayaa Shariah Board
Assalamualaikum!
Here is an opportunity to meet Moulana Khalid Saifullah Rahmani Saheb, Chairman, Hidayaa Shariah Board!
The Hidayaa Shariah Board is functioning under the chairmanship of eminent Islamic Scholar, Moulana Khalid Saifullah Rahmani Saheb. Currently, Moulana Khalid Saifullah Rahmani Saheb holds the following esteemed responsibilities at various levels in India and abroad
General Secretary, Islamic Fiqh Academy, India
Founder Member, All India Muslim Personal Law Board
Director, Al Mahad-ul-Aali Al Islami, Hyderabad
Gen. Secretary, Deeni Madaris Board, A.P.
Member, General Council for Islamic Banks and Financial Institutions, Bahrain
Gen. Secretary, Majlis Tahaffuz-e-Khatm-e-Nobuwat, A.P.
Member of Literary Committee, Dairatul-Ma-Arif al Osmania
President, Jamia Ayeshah Niswan, Hyderabad
Chairman, Darul Uloom Sabilul Falah Jalley, Darbhanga (Bihar)
Editor Quarterly, Bahs-O-Nazar, Delhi
Columnist, Munsif Daily, Hyderabad
It is a great pleasure in inviting you to a session on ‘Shariah-compliance in Indian Stock Market’ by Moulana Saheb. Please note the following details and mark your calendar for the program at Tolichowki, Hyderabad, India.
City: Hyderabad (India)
On: Wed, 30-Jul-2008
07.15 pm – 08.00 pm (Opportunities in Indian Stock Market)
08.00 pm – 08.30 pm (Shariah-compliance in Indian Stock Market)
08.30 pm – 09.00 pm (Question Hour & Relationship Building)
Venue: 8-1-21/169, S.K.Enclave (Ground Floor), Opp: Reliance Fresh,
Surya Nagar Colony, Tolichowki, Hyderabad 500008
For more details, please contact
+91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)
Hidayaa?
Hidayaa endeavours to bring to you the best of Indian stocks and the trading practices which are Shariah-compliant all under one roof. Hidayaa, a novel concept of investing in stocks, is a pioneering effort of corporate member of NSE, BSE & CDSL viz., Saaketa Consultants Limited having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.
Services
Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)
PS. Parties interested in Business Partnership with Hidayaa, please email to business@hidayaa.com or call +91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)
Wassalam,
Syed, Abdul Najeeb
Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323
Chairman, Hidayaa Shariah Board
Assalamualaikum!
Here is an opportunity to meet Moulana Khalid Saifullah Rahmani Saheb, Chairman, Hidayaa Shariah Board!
The Hidayaa Shariah Board is functioning under the chairmanship of eminent Islamic Scholar, Moulana Khalid Saifullah Rahmani Saheb. Currently, Moulana Khalid Saifullah Rahmani Saheb holds the following esteemed responsibilities at various levels in India and abroad
General Secretary, Islamic Fiqh Academy, India
Founder Member, All India Muslim Personal Law Board
Director, Al Mahad-ul-Aali Al Islami, Hyderabad
Gen. Secretary, Deeni Madaris Board, A.P.
Member, General Council for Islamic Banks and Financial Institutions, Bahrain
Gen. Secretary, Majlis Tahaffuz-e-Khatm-e-Nobuwat, A.P.
Member of Literary Committee, Dairatul-Ma-Arif al Osmania
President, Jamia Ayeshah Niswan, Hyderabad
Chairman, Darul Uloom Sabilul Falah Jalley, Darbhanga (Bihar)
Editor Quarterly, Bahs-O-Nazar, Delhi
Columnist, Munsif Daily, Hyderabad
It is a great pleasure in inviting you to a session on ‘Shariah-compliance in Indian Stock Market’ by Moulana Saheb. Please note the following details and mark your calendar for the program at Tolichowki, Hyderabad, India.
City: Hyderabad (India)
On: Wed, 30-Jul-2008
07.15 pm – 08.00 pm (Opportunities in Indian Stock Market)
08.00 pm – 08.30 pm (Shariah-compliance in Indian Stock Market)
08.30 pm – 09.00 pm (Question Hour & Relationship Building)
Venue: 8-1-21/169, S.K.Enclave (Ground Floor), Opp: Reliance Fresh,
Surya Nagar Colony, Tolichowki, Hyderabad 500008
For more details, please contact
+91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)
Hidayaa?
Hidayaa endeavours to bring to you the best of Indian stocks and the trading practices which are Shariah-compliant all under one roof. Hidayaa, a novel concept of investing in stocks, is a pioneering effort of corporate member of NSE, BSE & CDSL viz., Saaketa Consultants Limited having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.
Services
Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)
PS. Parties interested in Business Partnership with Hidayaa, please email to business@hidayaa.com or call +91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)
Wassalam,
Syed, Abdul Najeeb
Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323
Subscribe to:
Posts (Atom)

