அல்லாஹ்வின் உதவிப்படை
அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்?
அல்குர்ஆன் 67:20
“ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது. நேர்த்தியானது. ஆனாலும் கவலையற்ற ஒரு மனிதனையும் நான் காணவில்லை என்று கூறுகிறான். வயிற்றுக்குச் சோறில்லை. கூழுக்கு உப்பில்லை என வறுமையில் வாடுபவரும் மூக்கு முட்ட சாப்பிட்டதால் வயிற்றுக்குச் சரியில்லை, பாலுக்குச் சர்க்கரை இல்லை என வருந்துவோரும் உலகத்தில் இல்லாமலில்லை. பெருந் துன்பங்கள் இழப்புகள் சோதனைகள் ஏற்படும்போது மனிதன் துவண்டு விடுவதுண்டு. தன்னிலை இழந்து தவிப்பதுமுண்டு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இறைவன் தாங்க முடியாத சுமையை மனிதன் மீது சுமத்துவதில்லை. மாறாக அவனை முழுமையாக நம்பும் நல்லடியாருக்கு அவன் பல வழிகளில் உதவி செய்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, விடாது தொடர் முயற்சி மேற்கொள்ளும் போது அவன் உதவியாக இருந்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறான் என்பதே இவ்வசனத்தின் உட்கருத்தாகும்.
வானம் பூமி அனைத்தையும் படைத்து மனிதனுக்கு வசமாக்கிக் கொடுத்தவன் யார்? புசிக்க ஆகாரம், அருந்த நீர், சுவாசிக்க காற்று, மிகுந்த ஞானம் இவற்றை அளித்தவன் யார்? மனிதன்பால் மிக்க அருளும் அன்பும் கொண்ட அல்லாஹுத்தஆலா அன்றோ? மனிதனின் வேதனையின் போதும் சோதனையின் போதும் உதவுபவனாக அவனின்றி யாருளர்? என ஆணித்தரமாக வினாக்கள் எழுப்பி அவற்றிற்கு விடையளிக்கும் வகையில் இவ்வசனத்தை இறக்கியருளினான். அல்லாஹ்வின் உதவிப்படைகளைப் பெற நம்மை நாம் தகுதியாக்கிக் கொள்வது நம் கடமை.
நன்றி : நர்கிஸ் ( டிசம்பர் 2008 )
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, May 2, 2009
Friday, May 1, 2009
இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. பேச்சுக்கலை
இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. பேச்சுக்கலை
'வாய் இருந்தால் வங்காளம் போகலாம்" என்பது கிராமப்புறங்களில் சொல்லப்படுகின்ற ஒரு பேச்சு வழக்குச் சொல். உலகில் உள்ள ஜீவராசிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டும் தான். பேச்சு என்பது ஒரு சிலருக்கு கை வந்த கலை. பலருக்கோ அது ஒரு வதை. உண்மையில் நன்றாகப் பேசத்தெரிந்தவன் இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வான் அல்லது உழைத்துக்கொள்வான் என்பதினை மேற்கொள் காட்டுவது தான் அந்த முதுமொழி. இதை இன்னொரு வகையில் "வாய் உள்ள பிழைத்துக்கொள்ளும்" என்று கூட சொல்வார்கள். ஊமையாய் இருக்கின்றவர்கள் கூட சைகை மொழியில் தங்களுக்கு ஏதாவதொரு வகையில் பேசிக் கொள்கின்றனர்.
உயிர் வாழ்வதற்கு மூச்சு எவ்வளவு முக்கியமானதோ அது போல் பேச்சும் முக்கியமானது. வாய் இருக்கின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் பேசக்கூடாது. நமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிதானமாக இருக்க வேண்டும். ஒரு சிற்பி எவ்வளவு நுணுக்கமாக ஒரு சிலையை செதுக்குகின்றானோஇ அவ்வளவு நுணுக்கமாக நாமும் வார்த்தைகளை தெரிந்து தெளிந்து பேச வேண்டும். அப்போது தான் பிறர் நமக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். பொருட்களை சிந்திவிட்டால் அள்ளி விடலாம். வார்த்தைகளை வீசி விட்டால் அள்ள முடியாது.
உங்கள் பேச்சு மற்றவரை இழிவு படுத்துவதற்காக மட்டும் இருக்கக்கூடாது. முடிந்தால் உங்கள் பேச்சு மூலம் மற்றவரை திருத்தப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு நான்கு பேர் திருத்துவார்களாக இருந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றியாகும். சிலர் இருக்கிறார்கள் எந்நேரமும் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை கண்டால் பலர் தள்ளியே நிற்பார்கள். பேசியே கழுத்துறுப்பவர் வருகிறார் என ஓட்டம் பிடித்து விடுவார்கள்.
சிலர் பேசுவதை கேட்பதற்கே அருமையாகவும் இனிமையாகவும் இருககும். இன்னும் ஒரு முறை இவர் பேசமாட்டாரா? என அவரது பேச்சு நம்மை ஏங்க வைக்கும். அந்தளவிற்கு அவருடைய பேச்சானது மகிமை மற்றும் மதிப்பு இருக்கும். பேசுவதை நிதானமாகவும் அதே சமயத்தில் அமைதியாகவும் தெளிவாகவும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பர்கள். நம்முடைய பேச்சு மற்றவருக்கு புரியும் படியும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பார்கள். மற்றும் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவருக்கே புரியாது மற்றவருக்கு என்ன புரிய வைக்க போகிறார்கள் என்பதும் தெரியாது.
ஆகையால் நம்முடைய பேச்சானது நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் சில முறைகளை பின்பற்ற வேண்டும். பேச்சுக்கலை பற்றிய ஆய்வாளர்கள் எப்படி பேச வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்ந்து தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ:
ஒருவர் பேசும் போது எளிமையாக இனிமையாக பேச வேண்டும் அதாவது எல்லோருக்கும் விளங்கக்கூடியதாக அப்பேச்சு அமைய வேண்டும்.
என்ன விடயத்தை பற்றி பேசப்போகின்றோம் என்பதை பற்றி நீங்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஏனெனில் எதைப் பேசப்போகின்றோம் என்பதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதிகமாக பேசாமல் இரத்தினச் சுருக்கமாக நறுக்கென்று பேச வேண்டும். மணிக்கணக்கில் பேச்சை இழுத்துக்கொண்டு போகக்கூடாது. அப்புறம் எதிரே உள்ளவர் துங்குவதற்கு தலையணையினை தேட வேண்டும்.
என்ன பேச போகின்றோம் என்பதினை முன் கூட்டியே தெரிந்து வைத்து அதனை பேச வேண்டும். பேச்சில் தடுமாற்றம் இல்லாமலும் தடங்கல் இல்லாமலும் பேச வேண்டும்.
உண்மையைப் பேச வேண்டும். எப்போதும் பேசும் போது யதார்த்தை உணர்ந்து நடைமுறை வாழக்கையில் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்திப் பேச வேண்டும்.
எதிரில் உள்ளவர்களை கவரக்கூடிய வகையில் பார்த்து பேச வேண்டும். கூட்டத்தில் எல்லோரையும் பார்த்து பேசுவது என்பது கடினம். அதனால் எதிரில் இருப்பவர்களில் ஒரு சிலரையாவது அடிக்கடி பார்த்துப் பேசுங்கள். அவர்களது முகபாவனையை வைத்து உங்கள் பேச்சு எப்படி உள்ளது என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ள முடியும். அதற்கேற்ப பேசவும் முடியும்.
எழுதி வைத்துப் படிக்கக்கூடாது. மேடையில் பேசும் போது எழுதி வைத்து வாசிப்பதைப் போல படிக்கக்கூடாது. அது மற்றவரையும் உங்களையும் சங்கடத்திற்குள் தள்ளி விடும். ஏனெனில் எழுதியதை படிக்கும் போது நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது வாய்பேச்சு வார்த்தைகளாக வராமல் எழுத்து வாக்கியங்களாக வரும். ஆகையால் அதில் கவனம் தேவை.
மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும். மேடையில் போய் நின்றதும் உங்கள் மூச்சை ஒரு முறை நன்றாக உள் இழுத்து மெதுவாக விட்டு விடுங்கள். அது உங்கள் பயத்தையும் பதற்றத்தையும் தணிக்கும்.
மேற் சொன்ன குறிப்புகளை நாம் மேற்கொண்டு பயிற்சியினை மேற்கொண்டால் நிச்சயம் நீங்களும் ஒரு மேடைப் பேச்சளார் ஆகலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இப்போது நடைமுறை வாழக்கைக்குகள் திரும்புவோம். பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் நாம் பேசியது உண்மையாக இருக்க வேண்டும். அதனை செயற்படுத்தியும் காட்ட வேண்டும் என்பதாகும். வெறுமனை பேசிவிட்டு போவதினால் பயன் இல்லை பேசியதை செயற்படுத்திக்காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக்கூடாது.
இப்போது மனிதர்கள் மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவது என்பது குறைவாக போய் விட்டது. மனிதர்கள் ஒருவருக்கொருவர்கள் மனம் விட்டு பேசினாலோ ஆயிரம் பிரச்சனைகள் தீர்ந்து விடும். அவரவர்கள் பேசாமல் இருக்க இருக்கத்தான் பிரச்சனைக்ள் அதிகரிக்கின்றது. மனைவி கணவனிடமும்இ தாய் தன் பிள்ளைகளிடமும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும்.
ஒருவரோடு பேசும் போது அன்பாகவும்இ மெதுவாகவும் பேசுங்கள். அவரிடமுள்ள நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக்காட்டி பேசுங்கள். அவரது குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டி பேசாமல் நீங்கள் இருந்தால் நிச்சயம் நன்றாக வருவீர்கள். உங்களிடம் நிறையத் திறமைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் முன்னேற இடம் உண்டு என உங்களுக்குள்ளே பேசிப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு அவர் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். முன்பை விட உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாக வைத்திருப்பார். இது தான் உங்கள் பேச்சின் சக்தி.
தூரத்தில் இருக்கும் ஒருவரை பார்த்து “எப்படி செளக்கியமா?” என தொண்டை கிழிய கத்திக் கேட்பதற்கும் அவர் அருகே சென்று கையையோஇ தலையையோ தடவிக் கொடுத்தவாறு “எப்படி செளக்கியமா இருக்கின்றீர்களா?” என மெதுவான குரலில் கேட்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. இந்த இனிமையான பேச்சின் அன்பைத்தான் எல்லோரும் உங்களிடம் எதிர் பார்ப்பது.
எனவேஇ பேசுங்கள் சக மனிதனோடு மனம் விட்டு இனிமையாக பேசுங்கள். உங்களை சூழ்ந்திருக்கும் மனச்சுமைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக கலந்து பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள். அதுவே பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். உங்கள் வாழ்க்கையினை பற்றி பேசுங்கள். உங்களுக்கு நல் வழிக்காட்டும் எதிர் கால திட்டத்தினை பற்றி பேசுங்கள். அது உங்களை நல் வழிப்படுத்தும். அன்பினை பற்றி பேசுங்கள். அது உங்கள் உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்தும். எப்போதும் நல்லதை பற்றி பேசுங்கள் அது உங்களுக்கு நல்லதாக அமையும்.
“ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும்இ தீமையில் தான் செய்தவற்றையம் தன முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்) நாளில்இ அதுஇ தான் செய்தவைகளுககும்இ தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும்இ அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டணையை நினைவு கூறுமாறு) உங்களை எச்சாிகை செய்கிறான்இ இன்னும் அல்லாஹ் (தன்) அடியார்கள் மிது மிக்க இரக்கமுடையவன்’’.
அல்குர்ஆன் 3:30
மனித குலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்இ “உங்களைப் போன்று வேகமாக பேசிக்கொண்டு செல்லமாட்டார்கள். அவர்கள் எவ்வாறு பேசுவார்களெனில்இ எண்ணிக்கணக்கிடக்கூடியவர்இ அப்பேச்சை எண்ணினால் அது இத்தனைச் சொற்களைக் கொண்டதுதான் என்று வரையறுத்திட முடியும்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரிஇ முஸ்லிம்இ மிஷ்காத்
அண்ணலாரின் நாவு ஆபாச வார்த்தை முழங்குவதை விட்டும் ஏசிப் பேசவதைவிட்டும் தூய்மையாக இருந்தது. கோபம் கொண்டு கண்டிக்கும் சந்தர்ப்பத்தில் “இவருக்கு என்ன நேர்ந்துவிட்டது. இவரது நெற்றியில் மண்படட்டும் என்று மட்டும் கூறுவார்கள். அத்துடன் அண்ணலார் அவர்கள் கடுகடுப்பானவராகவோஇ சதா முகத்தை “உம்” என்று வைத்துக் கொண்டவராகவோ இருந்ததில்லை. பேச்சுக்கு பேச்சு நாற்புறமும் எதிரொலி்க்கும் வகையில் ஓசையுடன் சிரிப்பவராகவும் இருந்ததில்லை. மாறாகஇ இதில் நடுத்தரமான நடத்தையை மேற்கொண்டிருந்தார்கள்.
நன்றி : இலங்கை வார இதழ் – வீர கேசரி
தொகுப்பு : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்
'வாய் இருந்தால் வங்காளம் போகலாம்" என்பது கிராமப்புறங்களில் சொல்லப்படுகின்ற ஒரு பேச்சு வழக்குச் சொல். உலகில் உள்ள ஜீவராசிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டும் தான். பேச்சு என்பது ஒரு சிலருக்கு கை வந்த கலை. பலருக்கோ அது ஒரு வதை. உண்மையில் நன்றாகப் பேசத்தெரிந்தவன் இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வான் அல்லது உழைத்துக்கொள்வான் என்பதினை மேற்கொள் காட்டுவது தான் அந்த முதுமொழி. இதை இன்னொரு வகையில் "வாய் உள்ள பிழைத்துக்கொள்ளும்" என்று கூட சொல்வார்கள். ஊமையாய் இருக்கின்றவர்கள் கூட சைகை மொழியில் தங்களுக்கு ஏதாவதொரு வகையில் பேசிக் கொள்கின்றனர்.
உயிர் வாழ்வதற்கு மூச்சு எவ்வளவு முக்கியமானதோ அது போல் பேச்சும் முக்கியமானது. வாய் இருக்கின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் பேசக்கூடாது. நமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிதானமாக இருக்க வேண்டும். ஒரு சிற்பி எவ்வளவு நுணுக்கமாக ஒரு சிலையை செதுக்குகின்றானோஇ அவ்வளவு நுணுக்கமாக நாமும் வார்த்தைகளை தெரிந்து தெளிந்து பேச வேண்டும். அப்போது தான் பிறர் நமக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். பொருட்களை சிந்திவிட்டால் அள்ளி விடலாம். வார்த்தைகளை வீசி விட்டால் அள்ள முடியாது.
உங்கள் பேச்சு மற்றவரை இழிவு படுத்துவதற்காக மட்டும் இருக்கக்கூடாது. முடிந்தால் உங்கள் பேச்சு மூலம் மற்றவரை திருத்தப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு நான்கு பேர் திருத்துவார்களாக இருந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றியாகும். சிலர் இருக்கிறார்கள் எந்நேரமும் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை கண்டால் பலர் தள்ளியே நிற்பார்கள். பேசியே கழுத்துறுப்பவர் வருகிறார் என ஓட்டம் பிடித்து விடுவார்கள்.
சிலர் பேசுவதை கேட்பதற்கே அருமையாகவும் இனிமையாகவும் இருககும். இன்னும் ஒரு முறை இவர் பேசமாட்டாரா? என அவரது பேச்சு நம்மை ஏங்க வைக்கும். அந்தளவிற்கு அவருடைய பேச்சானது மகிமை மற்றும் மதிப்பு இருக்கும். பேசுவதை நிதானமாகவும் அதே சமயத்தில் அமைதியாகவும் தெளிவாகவும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பர்கள். நம்முடைய பேச்சு மற்றவருக்கு புரியும் படியும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பார்கள். மற்றும் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவருக்கே புரியாது மற்றவருக்கு என்ன புரிய வைக்க போகிறார்கள் என்பதும் தெரியாது.
ஆகையால் நம்முடைய பேச்சானது நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் சில முறைகளை பின்பற்ற வேண்டும். பேச்சுக்கலை பற்றிய ஆய்வாளர்கள் எப்படி பேச வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்ந்து தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ:
ஒருவர் பேசும் போது எளிமையாக இனிமையாக பேச வேண்டும் அதாவது எல்லோருக்கும் விளங்கக்கூடியதாக அப்பேச்சு அமைய வேண்டும்.
என்ன விடயத்தை பற்றி பேசப்போகின்றோம் என்பதை பற்றி நீங்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஏனெனில் எதைப் பேசப்போகின்றோம் என்பதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதிகமாக பேசாமல் இரத்தினச் சுருக்கமாக நறுக்கென்று பேச வேண்டும். மணிக்கணக்கில் பேச்சை இழுத்துக்கொண்டு போகக்கூடாது. அப்புறம் எதிரே உள்ளவர் துங்குவதற்கு தலையணையினை தேட வேண்டும்.
என்ன பேச போகின்றோம் என்பதினை முன் கூட்டியே தெரிந்து வைத்து அதனை பேச வேண்டும். பேச்சில் தடுமாற்றம் இல்லாமலும் தடங்கல் இல்லாமலும் பேச வேண்டும்.
உண்மையைப் பேச வேண்டும். எப்போதும் பேசும் போது யதார்த்தை உணர்ந்து நடைமுறை வாழக்கையில் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்திப் பேச வேண்டும்.
எதிரில் உள்ளவர்களை கவரக்கூடிய வகையில் பார்த்து பேச வேண்டும். கூட்டத்தில் எல்லோரையும் பார்த்து பேசுவது என்பது கடினம். அதனால் எதிரில் இருப்பவர்களில் ஒரு சிலரையாவது அடிக்கடி பார்த்துப் பேசுங்கள். அவர்களது முகபாவனையை வைத்து உங்கள் பேச்சு எப்படி உள்ளது என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ள முடியும். அதற்கேற்ப பேசவும் முடியும்.
எழுதி வைத்துப் படிக்கக்கூடாது. மேடையில் பேசும் போது எழுதி வைத்து வாசிப்பதைப் போல படிக்கக்கூடாது. அது மற்றவரையும் உங்களையும் சங்கடத்திற்குள் தள்ளி விடும். ஏனெனில் எழுதியதை படிக்கும் போது நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது வாய்பேச்சு வார்த்தைகளாக வராமல் எழுத்து வாக்கியங்களாக வரும். ஆகையால் அதில் கவனம் தேவை.
மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும். மேடையில் போய் நின்றதும் உங்கள் மூச்சை ஒரு முறை நன்றாக உள் இழுத்து மெதுவாக விட்டு விடுங்கள். அது உங்கள் பயத்தையும் பதற்றத்தையும் தணிக்கும்.
மேற் சொன்ன குறிப்புகளை நாம் மேற்கொண்டு பயிற்சியினை மேற்கொண்டால் நிச்சயம் நீங்களும் ஒரு மேடைப் பேச்சளார் ஆகலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இப்போது நடைமுறை வாழக்கைக்குகள் திரும்புவோம். பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் நாம் பேசியது உண்மையாக இருக்க வேண்டும். அதனை செயற்படுத்தியும் காட்ட வேண்டும் என்பதாகும். வெறுமனை பேசிவிட்டு போவதினால் பயன் இல்லை பேசியதை செயற்படுத்திக்காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக்கூடாது.
இப்போது மனிதர்கள் மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவது என்பது குறைவாக போய் விட்டது. மனிதர்கள் ஒருவருக்கொருவர்கள் மனம் விட்டு பேசினாலோ ஆயிரம் பிரச்சனைகள் தீர்ந்து விடும். அவரவர்கள் பேசாமல் இருக்க இருக்கத்தான் பிரச்சனைக்ள் அதிகரிக்கின்றது. மனைவி கணவனிடமும்இ தாய் தன் பிள்ளைகளிடமும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும்.
ஒருவரோடு பேசும் போது அன்பாகவும்இ மெதுவாகவும் பேசுங்கள். அவரிடமுள்ள நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக்காட்டி பேசுங்கள். அவரது குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டி பேசாமல் நீங்கள் இருந்தால் நிச்சயம் நன்றாக வருவீர்கள். உங்களிடம் நிறையத் திறமைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் முன்னேற இடம் உண்டு என உங்களுக்குள்ளே பேசிப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு அவர் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். முன்பை விட உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாக வைத்திருப்பார். இது தான் உங்கள் பேச்சின் சக்தி.
தூரத்தில் இருக்கும் ஒருவரை பார்த்து “எப்படி செளக்கியமா?” என தொண்டை கிழிய கத்திக் கேட்பதற்கும் அவர் அருகே சென்று கையையோஇ தலையையோ தடவிக் கொடுத்தவாறு “எப்படி செளக்கியமா இருக்கின்றீர்களா?” என மெதுவான குரலில் கேட்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. இந்த இனிமையான பேச்சின் அன்பைத்தான் எல்லோரும் உங்களிடம் எதிர் பார்ப்பது.
எனவேஇ பேசுங்கள் சக மனிதனோடு மனம் விட்டு இனிமையாக பேசுங்கள். உங்களை சூழ்ந்திருக்கும் மனச்சுமைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக கலந்து பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள். அதுவே பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். உங்கள் வாழ்க்கையினை பற்றி பேசுங்கள். உங்களுக்கு நல் வழிக்காட்டும் எதிர் கால திட்டத்தினை பற்றி பேசுங்கள். அது உங்களை நல் வழிப்படுத்தும். அன்பினை பற்றி பேசுங்கள். அது உங்கள் உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்தும். எப்போதும் நல்லதை பற்றி பேசுங்கள் அது உங்களுக்கு நல்லதாக அமையும்.
“ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும்இ தீமையில் தான் செய்தவற்றையம் தன முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்) நாளில்இ அதுஇ தான் செய்தவைகளுககும்இ தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும்இ அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டணையை நினைவு கூறுமாறு) உங்களை எச்சாிகை செய்கிறான்இ இன்னும் அல்லாஹ் (தன்) அடியார்கள் மிது மிக்க இரக்கமுடையவன்’’.
அல்குர்ஆன் 3:30
மனித குலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்இ “உங்களைப் போன்று வேகமாக பேசிக்கொண்டு செல்லமாட்டார்கள். அவர்கள் எவ்வாறு பேசுவார்களெனில்இ எண்ணிக்கணக்கிடக்கூடியவர்இ அப்பேச்சை எண்ணினால் அது இத்தனைச் சொற்களைக் கொண்டதுதான் என்று வரையறுத்திட முடியும்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரிஇ முஸ்லிம்இ மிஷ்காத்
அண்ணலாரின் நாவு ஆபாச வார்த்தை முழங்குவதை விட்டும் ஏசிப் பேசவதைவிட்டும் தூய்மையாக இருந்தது. கோபம் கொண்டு கண்டிக்கும் சந்தர்ப்பத்தில் “இவருக்கு என்ன நேர்ந்துவிட்டது. இவரது நெற்றியில் மண்படட்டும் என்று மட்டும் கூறுவார்கள். அத்துடன் அண்ணலார் அவர்கள் கடுகடுப்பானவராகவோஇ சதா முகத்தை “உம்” என்று வைத்துக் கொண்டவராகவோ இருந்ததில்லை. பேச்சுக்கு பேச்சு நாற்புறமும் எதிரொலி்க்கும் வகையில் ஓசையுடன் சிரிப்பவராகவும் இருந்ததில்லை. மாறாகஇ இதில் நடுத்தரமான நடத்தையை மேற்கொண்டிருந்தார்கள்.
நன்றி : இலங்கை வார இதழ் – வீர கேசரி
தொகுப்பு : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்
சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணம்.
சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணம்.
ஐக்கிய அமீரகத்தின் வட மாகாணங்களில் ஒன்றாகவும், அமீரக கடல் மார்க்கத்தின் முதல் நுழைவு வாயிலாகவும், துபை நகரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் துரத்தில் இருக்கும் ஃபுஜைரா தற்போது அதிகமதிகமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.
மலைகள் சூழ்ந்த ஒரு ரம்மியமான இயற்கையான அழகு சூழ்நிலையில் ஃபுஜைரா மாகாணம் இருப்பதால் அதனை காண பல வெளிநாட்டு பயணிகள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். துபை நகருக்கு வரும் பல வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஃபுஜைரா செல்ல வேண்டும் என்று விரும்புவதால், அங்கிருந்து கனரக வாகனங்களிலும் மற்றும் மென்ரக வாகனங்களிலும் இங்கு வந்து போகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வரும் போதே மலைகள் சூழந்த ஃபுஜைராவின் அழகினை ரசித்துக்கொண்டே வருகிறார்கள்.
இங்குள்ள துறைமுகத்திற்கு வெளி நாட்டு பயணி கப்பல்கள் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அதிகம் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதினை துறைமுக பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன் இத்துறைமுகத்தின் அனைத்து பணிகளையும் செய்யும் பொறுப்பினை துபை துறைமுக பொறுப்பு கழகம் (Dubai Port Authority) பல ஆண்டுகள் என்ற ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகையால் கப்பல் வாணிபங்களும் அதிகரித்து விட்டது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஃபுஜைரா நகரின் மைய பகுதியில் பழங்கால அருட்காட்சியகமும் ஒன்றும், அதனை சுற்றி பழங்கால கோட்டை ஒன்றும் உள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் அரேபியர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய அரியபொருட்களும் மற்றும் அதனை பற்றிய தகவல்களும் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல் அடங்கிய கையடக்க நூல் இங்கு உள்ளது. இந்த இடமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது.
ஃபுஜைரா - கொர்பகான் - திப்பா செல்லும் சாலை வழியில் "அல்பித்யா" என்ற கடற்கரை கிராமத்தில் கி.பி. 1446 வருடம் கட்டப்பட்ட புராதன பள்ளிவாசல் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளக்குகிறது. இந்த பள்ளி வாசல் கட்டப்பட்டு ஏறக்குறைய 562 வருடங்கள் ஆகி விட்டது என்பதினை அங்குள்ள துபை அரசாங்கத்தின் அகழ்வாராய்ச்சி கல்வெட்டானது நமக்கு தெரிகிறது. இப்பள்ளியினை அக்கிராமத்தில் வாழ்ந்த மீனவர்களின் முஸ்லிம் தலைவர் ஒருவர் தொழுகைக்காக கட்டியதாக இக்கிராமத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் தொழுவதற்கும் தனியாக வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதர மதத்தினர் அந்த பள்ளியின் புற பகுதியினை சுற்றி பார்க்கலாம். ஆனால் தொழுகை நடக்கும் இடத்திற்கு அனுமதி அளிப்பதில்லை. பள்ளியின் மற்றொரு புறத்தில் பழைமையான கோட்டையும் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் ஏறி, அதன் துளைகள் வழியாக நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கலாம். அப்படி நாம் பார்க்கும் போது ஒரு பக்கம் கடலும், மற்றொரு பக்கம் மலைகளும், இன்னொரு பக்கம் இயற்கை நிலப்பரப்புகளையும் நாம் அழகாக ரசிக்கலாம். மற்றும் அதே பகுதியில் மலை அடிவாரத்திற்கு கீழ் நீரருவி ஒன்றும் மிக அழகாக உள்ளது. மலைக்கு அடியே இருப்பதால் அந்நீரானது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பல வெளிநாட்டினர் மற:றம் சுற்றுலா பயணிகள் வந்து அங்கு குளித்து விட்டு செல்கிறார்கள்.
அமீரகத்தின் மற்ற பகுதியிலிருந்து, கொர்பகான் கடற்கரை பகுதிக்கு மாலை நேரங்களில் பல குடும்பங்கள் சாப்பாடு செய்து சாப்பிடுவதற்கு வசதியாக பல சமையல் பொருட்களை கொண்டு வந்து விடுவார்கள். இவர்கள் இல்லம் திரும்பி செல்வதற்கு இரவு குறைந்தது 11 மணி ஆகிவிடும். அது வரை அவர்கள் அங்கு தான் குடும்பத்துடன் தங்கி ஜாலியாக இருப்பார்கள். கொர்பகான் பகுதியானது ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் கல்பா என்ற கடற்கரை பகுதியிலும் பல சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள். அதுவும் ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருந்தாலும் இந்த சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் ஃபுஜைராவினை மாகாணத்தினை கடந்து தான் செல்ல வேண்டும். கல்பா - ஷார்ஜா தரை மார்க்கமாக செல்லும் பல பயணிகள் 30 கிலோ மீட்டர் சுரங்க வழி சாலைப்பாதையினையும் பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள்.
ஃபுஜைரா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் காளை மாட்டு சண்டையானது மிகவும் பிரபலமானது. இங்குள்ள அரேபியர்கள் வளர்க்கும் காளை மாட்டினை இங்கு கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேர்ப்பார்கள். எந்த காளை மாடு பலம் வாய்ந்தாக இருக்கும் என்பதினை காளை மாட்டு சண்டையில் தெரிந்து விடும். அந்த மாட்டினை அதிகம் விலை கொடுத்து வாங்குவதற்கு மற்ற அரேபியர்கள் போட்டி போடுவார்கள். இதனை காண மற்ற நாடுகளிலிருந்து குறிப்பாக ஓமன், மஸ்கட் இங்கிருந்து பல பேர்கள் வருவார்கள். இதனை ஒலி ஒளி படம் எடுக்க பல வெளி நாட்டினர் வந்து விடுவார்கள்.
ஃபுஜைரா நகரானது, தற்போது துபை நகரில் கட்டப்பாட்டு வரும் பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்டங்களை போலவும், பல வசதிகளை கொண்ட வணிக வளாகங்களையும், உணவு விடுதிகளையும் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதினை பற்றி இங்குள்ளவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தகவல் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்
ஐக்கிய அமீரகத்தின் வட மாகாணங்களில் ஒன்றாகவும், அமீரக கடல் மார்க்கத்தின் முதல் நுழைவு வாயிலாகவும், துபை நகரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் துரத்தில் இருக்கும் ஃபுஜைரா தற்போது அதிகமதிகமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.
மலைகள் சூழ்ந்த ஒரு ரம்மியமான இயற்கையான அழகு சூழ்நிலையில் ஃபுஜைரா மாகாணம் இருப்பதால் அதனை காண பல வெளிநாட்டு பயணிகள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். துபை நகருக்கு வரும் பல வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஃபுஜைரா செல்ல வேண்டும் என்று விரும்புவதால், அங்கிருந்து கனரக வாகனங்களிலும் மற்றும் மென்ரக வாகனங்களிலும் இங்கு வந்து போகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வரும் போதே மலைகள் சூழந்த ஃபுஜைராவின் அழகினை ரசித்துக்கொண்டே வருகிறார்கள்.
இங்குள்ள துறைமுகத்திற்கு வெளி நாட்டு பயணி கப்பல்கள் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அதிகம் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதினை துறைமுக பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன் இத்துறைமுகத்தின் அனைத்து பணிகளையும் செய்யும் பொறுப்பினை துபை துறைமுக பொறுப்பு கழகம் (Dubai Port Authority) பல ஆண்டுகள் என்ற ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகையால் கப்பல் வாணிபங்களும் அதிகரித்து விட்டது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஃபுஜைரா நகரின் மைய பகுதியில் பழங்கால அருட்காட்சியகமும் ஒன்றும், அதனை சுற்றி பழங்கால கோட்டை ஒன்றும் உள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் அரேபியர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய அரியபொருட்களும் மற்றும் அதனை பற்றிய தகவல்களும் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல் அடங்கிய கையடக்க நூல் இங்கு உள்ளது. இந்த இடமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது.
ஃபுஜைரா - கொர்பகான் - திப்பா செல்லும் சாலை வழியில் "அல்பித்யா" என்ற கடற்கரை கிராமத்தில் கி.பி. 1446 வருடம் கட்டப்பட்ட புராதன பள்ளிவாசல் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளக்குகிறது. இந்த பள்ளி வாசல் கட்டப்பட்டு ஏறக்குறைய 562 வருடங்கள் ஆகி விட்டது என்பதினை அங்குள்ள துபை அரசாங்கத்தின் அகழ்வாராய்ச்சி கல்வெட்டானது நமக்கு தெரிகிறது. இப்பள்ளியினை அக்கிராமத்தில் வாழ்ந்த மீனவர்களின் முஸ்லிம் தலைவர் ஒருவர் தொழுகைக்காக கட்டியதாக இக்கிராமத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் தொழுவதற்கும் தனியாக வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதர மதத்தினர் அந்த பள்ளியின் புற பகுதியினை சுற்றி பார்க்கலாம். ஆனால் தொழுகை நடக்கும் இடத்திற்கு அனுமதி அளிப்பதில்லை. பள்ளியின் மற்றொரு புறத்தில் பழைமையான கோட்டையும் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் ஏறி, அதன் துளைகள் வழியாக நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கலாம். அப்படி நாம் பார்க்கும் போது ஒரு பக்கம் கடலும், மற்றொரு பக்கம் மலைகளும், இன்னொரு பக்கம் இயற்கை நிலப்பரப்புகளையும் நாம் அழகாக ரசிக்கலாம். மற்றும் அதே பகுதியில் மலை அடிவாரத்திற்கு கீழ் நீரருவி ஒன்றும் மிக அழகாக உள்ளது. மலைக்கு அடியே இருப்பதால் அந்நீரானது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பல வெளிநாட்டினர் மற:றம் சுற்றுலா பயணிகள் வந்து அங்கு குளித்து விட்டு செல்கிறார்கள்.
அமீரகத்தின் மற்ற பகுதியிலிருந்து, கொர்பகான் கடற்கரை பகுதிக்கு மாலை நேரங்களில் பல குடும்பங்கள் சாப்பாடு செய்து சாப்பிடுவதற்கு வசதியாக பல சமையல் பொருட்களை கொண்டு வந்து விடுவார்கள். இவர்கள் இல்லம் திரும்பி செல்வதற்கு இரவு குறைந்தது 11 மணி ஆகிவிடும். அது வரை அவர்கள் அங்கு தான் குடும்பத்துடன் தங்கி ஜாலியாக இருப்பார்கள். கொர்பகான் பகுதியானது ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் கல்பா என்ற கடற்கரை பகுதியிலும் பல சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள். அதுவும் ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருந்தாலும் இந்த சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் ஃபுஜைராவினை மாகாணத்தினை கடந்து தான் செல்ல வேண்டும். கல்பா - ஷார்ஜா தரை மார்க்கமாக செல்லும் பல பயணிகள் 30 கிலோ மீட்டர் சுரங்க வழி சாலைப்பாதையினையும் பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள்.
ஃபுஜைரா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் காளை மாட்டு சண்டையானது மிகவும் பிரபலமானது. இங்குள்ள அரேபியர்கள் வளர்க்கும் காளை மாட்டினை இங்கு கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேர்ப்பார்கள். எந்த காளை மாடு பலம் வாய்ந்தாக இருக்கும் என்பதினை காளை மாட்டு சண்டையில் தெரிந்து விடும். அந்த மாட்டினை அதிகம் விலை கொடுத்து வாங்குவதற்கு மற்ற அரேபியர்கள் போட்டி போடுவார்கள். இதனை காண மற்ற நாடுகளிலிருந்து குறிப்பாக ஓமன், மஸ்கட் இங்கிருந்து பல பேர்கள் வருவார்கள். இதனை ஒலி ஒளி படம் எடுக்க பல வெளி நாட்டினர் வந்து விடுவார்கள்.
ஃபுஜைரா நகரானது, தற்போது துபை நகரில் கட்டப்பாட்டு வரும் பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்டங்களை போலவும், பல வசதிகளை கொண்ட வணிக வளாகங்களையும், உணவு விடுதிகளையும் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதினை பற்றி இங்குள்ளவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தகவல் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்
இளையான்குடி டூ திண்டுக்கல் : ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு ( 05 மே 2009 )
இளையான்குடி டூ திண்டுக்கல் : ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு ( 05 மே 2009 )
திண்டுக்கல் நகர அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் & முக்கியஸ்தர்கள் கூட்டமைப்பு கல்வி விழிப்புணர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திண்டுக்கல் முஹம்மதியாபுரம் ஈதுஹா மஹாலில் நடைபெற இருக்கிறது.
மேற்படிப்பு, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனையினை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன் வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்வில் மாணாக்கர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கும், மாணவியருக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : 99768 58392 / 98940 57709
இந்நிகழ்ச்சியினை தங்களது ஊரிலும் நடத்த விரும்புவோர் முனைவர் எஸ். ஆபிதீனை 99658 92706 எனும் அலைபேசியிலோ அல்லது abideen222270@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
தகவல் உதவி :
முனைவர் எஸ். ஆபிதீன் 99658 92706 ( abideen222270@yahoo.com )
திண்டுக்கல் ஜாபர் சாதிக் ( jabarsathik@yahoo.co.in )
திண்டுக்கல் நகர அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் & முக்கியஸ்தர்கள் கூட்டமைப்பு கல்வி விழிப்புணர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திண்டுக்கல் முஹம்மதியாபுரம் ஈதுஹா மஹாலில் நடைபெற இருக்கிறது.
மேற்படிப்பு, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனையினை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன் வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்வில் மாணாக்கர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கும், மாணவியருக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : 99768 58392 / 98940 57709
இந்நிகழ்ச்சியினை தங்களது ஊரிலும் நடத்த விரும்புவோர் முனைவர் எஸ். ஆபிதீனை 99658 92706 எனும் அலைபேசியிலோ அல்லது abideen222270@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
தகவல் உதவி :
முனைவர் எஸ். ஆபிதீன் 99658 92706 ( abideen222270@yahoo.com )
திண்டுக்கல் ஜாபர் சாதிக் ( jabarsathik@yahoo.co.in )
Labels:
இளையான்குடி,
கல்வி,
திண்டுக்கல்,
மாநாடு,
விழிப்புணர்வு
கவிதை : கலைமறை முஹம்மதென்னும்.....
கவிதை
கலைமறை முஹம்மதென்னும்
காரணமே – காணுலகு!
( அமுதகவி அரசு அபிவைத்தாஜ் )
கலைமறை முஹம்மதென்னும்
காரணம் இல்லையாகில்
உலகுவிண் இரவி திங்கள்
ஒளிர் வுடுக்கணம் சுவர்க்கம்
மலை கடல் நதி பாதாளம்
வானவர் முதலாய் உம்மை
நிலையுற படைப்ப தில்லை
என் இறை நிகழ்த்தினானே…!
கலைமறை முஹம்ம தெங்கள்
காரணம் வந்ததாலே!
நிலையுற உலகம் யாவும்
நிலைத்துமே செழித்ததுவே!
பெருமானார் பிறப்பின் நோக்கம்
பெரும் பயன் தந்ததாலே!
அருமையாய் அகிலம் எல்லாம்
அற்புதம் கண்டதாமே!
பல்லாயிரம் நபிகள் வந்தும்
பயன் ஏதும் கிடைக்கவில்லை
எல்லோரும் இறைவன் தூதர்
என்றாலும் வெற்றி இல்லை!
வல்லோனின் இறுதித் தூதர்
வள்ளல் நபி வருகையாலே
தொல்லுலகின் துயரம் நீங்கி
தொடர்மகிழ் கிடைத்தது அன்றோ!
உலகத்தின் உயிர்கள் யாவும்
உத்தமரின் வருகையினாலே
நலம் பெற்று மகிழ்ந்ததிங்கே
வளம் தந்த வாகையினாலே!
ஆலத்தின் அருட்கொடையான
அனைவோர்க்கும் பொதுநபியாலே!
சீலத்தின் செழிப்பு எல்லாம்
காலத்தால் கனிந்தது அன்றோ!
கலைமறை முஹம்மதென்னும்
காரணமே – காணுலகு!
( அமுதகவி அரசு அபிவைத்தாஜ் )
கலைமறை முஹம்மதென்னும்
காரணம் இல்லையாகில்
உலகுவிண் இரவி திங்கள்
ஒளிர் வுடுக்கணம் சுவர்க்கம்
மலை கடல் நதி பாதாளம்
வானவர் முதலாய் உம்மை
நிலையுற படைப்ப தில்லை
என் இறை நிகழ்த்தினானே…!
கலைமறை முஹம்ம தெங்கள்
காரணம் வந்ததாலே!
நிலையுற உலகம் யாவும்
நிலைத்துமே செழித்ததுவே!
பெருமானார் பிறப்பின் நோக்கம்
பெரும் பயன் தந்ததாலே!
அருமையாய் அகிலம் எல்லாம்
அற்புதம் கண்டதாமே!
பல்லாயிரம் நபிகள் வந்தும்
பயன் ஏதும் கிடைக்கவில்லை
எல்லோரும் இறைவன் தூதர்
என்றாலும் வெற்றி இல்லை!
வல்லோனின் இறுதித் தூதர்
வள்ளல் நபி வருகையாலே
தொல்லுலகின் துயரம் நீங்கி
தொடர்மகிழ் கிடைத்தது அன்றோ!
உலகத்தின் உயிர்கள் யாவும்
உத்தமரின் வருகையினாலே
நலம் பெற்று மகிழ்ந்ததிங்கே
வளம் தந்த வாகையினாலே!
ஆலத்தின் அருட்கொடையான
அனைவோர்க்கும் பொதுநபியாலே!
சீலத்தின் செழிப்பு எல்லாம்
காலத்தால் கனிந்தது அன்றோ!
Thursday, April 30, 2009
மனித நேய விரோதிகள் யார்?
மனித நேய விரோதிகள் யார்?
(காயல் இளம்பிறையான்)
kayalpirai@gmail.com
இந்திய பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரங்கள், அறிக்கை போர்கள், வாக்குறுதி மழைகள் என தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிட்டது. இதில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சிபுரியும் இருபெரும் திராவிட கட்சிகள் இம்முறையும் ஒரு முஸ்லிமுக்குக்கூட வாய்ப்பு வழங்காதது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் தருகிறது. இதற்கு மூலகாரணம், முஸ்லிம்கள் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடத்திலே மேலோங்கி இருப்பதுதான். இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கடமையும், கடப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு என நான் வலியுறுத்துகிறேன். இது எனது சொந்தக் கருத்தல்ல. நமது சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களின் கருத்தாக உருப்பெற்றிருக்கிறது.
பல நேரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக பேசி மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை விளைவித்துவரும் பா.ஜ.க-வைப் போலவே அ.தி.மு.க-வும் சில நேரங்களில் சிறுபான்மையினரை சீண்டி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம்.
1. பொது சிவில் சட்டம் வேண்டும், 2. ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்ட வேண்டும்? 3. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் மதமோதல்களை உருவாக்கும் போன்ற பா.ஜ.க-வின் ஊதுகுழல் போல் இப்படிப்பட்ட அர்த்தமற்ற அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறது. எனவேதான் பி.ஜே.பி தமிழகத்திற்கு அவசியமில்லை. அதன் கொள்கைகளைத்தான் அ.தி.மு.க. பரப்பிவருகிறதே என அரசியல் விமர்சகர் சோலை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை இன விரோதப்போக்கை கடைபிடித்துவரும் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சீட்டு தந்தால், தங்களின் கொள்கைகளை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு அதனைப்பெற பேரம் பேசும் பெருமைக்குரியவர்கள்தான் மனித நேய மக்கள் கட்சி என்பதை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.
மனிதநேயத்திற்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறைப்பதற்காகவே முஸ்லிம் என்ற பெயரை வைப்பதற்கு அஞ்சுகின்றனர். இவர்கள்தான் முஸ்லிம்களின் காவலர்களாம்!
சமுதாயத்தின் ஒற்றுமையை, கட்டுக்கோப்பை சிதைத்து உடைத்து சின்னாபின்னப் படுத்தியதுதான் அவர்கள் செய்த மகத்தான சாதனை. சமுதாயத்தை ஓரணியில் திரட்டுகிறோம் என்று புறப்பட்டவர்கள் தாங்களே பல அணிகளாக பிரிந்ததுதான் மிச்சம். தங்களுக்கிடையே திருட்டுப்பட்டங்கள் சூட்டி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் சமுதாய வழிகாட்டிகளாம்! வெட்கமாயில்லை?
முழுக்க முழுக்க வஹ்ஹாபிசத்தை விதைத்துவரும் உங்களுக்கும் வக்ஃப் வாரியத்திற்கும் என்ன சம்பந்தம்? கோடிக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் உள்ளது என்பதை குறிவைத்துத்தானே அந்தப்பதவியை அடம்பிடித்து வாங்கி அனுபவித்து வந்தீர்கள்? இல்லை இல்லை அந்த வாரியத்தை நெறிபடுத்தி, ஒழுங்குபடுத்தத்தான் அதனைக்கேட்டுப் பெற்றோம் என்றால், அதனை கைகழுவியதன் காரணம் என்ன? உங்களை நோக்கி சமுதாயத்திலிருந்து புறப்பட்ட எதிர்கணைகள்தானே? நாமாகவே விலகிவிடுவதுதான் கௌரவம் என்றுதானே அதனை ராஜினாமா செய்தீர்கள்? சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று இனியும் பகல்கனவு காணாதீர்கள்.
நீங்கள் யார்? எந்தப் போர்வையில் உலா வருகிறீர்கள் என்பதையெல்லாம் முஸ்லிம் லீக் தோலுரித்துக்காட்ட முனைந்து விட்டதால் என்னப்பேச்சு பேசுகிறோம் என்றுகூட சிந்திக்காமல் அநாகரீகமாக முஸ்லிம் லீக்கை பி.ஜே.பியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் சகோதரர் ஜவாஹிருல்லாஹ். நாவடக்கம் வேண்டும். நாவு நரகத்தற்கு இழுத்துச்செல்லும் என்ற நபிமொழிக் கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பி.ஜே.பியைப் போலவே சமூக ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை பாழ்படுத்துபவர்கள் என்று உங்களை நோக்கித்தான் மக்கள் கைநீட்டிப் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஏதோ தமிழக முஸ்லிம்கள் உங்களைத்தான் ஆதரிக்கிறார்கள், முஸ்லிம் லீக்கை கைவிட்டுவிட்டார்கள் என்ற உங்களின் தவறான எண்ணம், அகங்காரம், ஆணவம் எல்லாம் உங்களை இந்தத்தேர்தலில் தலைகுணிய செய்துவிடும் என்பது மட்டும் திண்ணம். இன்ஷா அல்லாஹ்.
உங்கள் தலைமை நிர்வாகிகளை எடுத்துக்கொண்டாலும், செயற்குழு, பொதுக்குழு என்று எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் வஹ்ஹாபிச சாயலைக் கொண்டவர்கள்தானே? அப்படி இருக்க, நாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பு என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? என்று நான் வினவ கடமைப்பட்டுள்ளேன். விடையுண்டா?
இடஒதுக்கீடை தி.மு.க. அரசு நடைமுறைப் படுத்தவில்லை என்று கூறி ஒரு கூட்டம் அ.தி.மு.க-வின் பக்கமும், இல்லை இல்லை கலைஞர்தான் இந்த மகத்தான இடஒதுக்கீட்டையே நம் சமுதாயத்திற்கு வழங்கினார் என்று ஒரு குழுவும் பிரிந்து நின்று பிரச்சார சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்றைக்கு எந்தக் காரணத்தை சொல்லி எதிர்த்தார்களோ அவர்கள் தி.மு.க-வை ஆதரிக்க, நன்றி கெட்டவர்களாய் ஆதரித்தவர்கள் இன்றைக்கு தி.மு.க-வை எதிர்க்கிறார்கள். இந்த இரு பிரிவினரும்தான் சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மஹல்லாக்களில், பள்ளிகளில் பிரிவினைகளை உருவாக்க முனைந்தவர்கள் என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் எழுதிப்போடப்பட்டுள்ள போர்டு – கரும்பலகைகளே போதிய ஆதாரமாகும்.
எனவே இவர்களை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லோரும் ஒன்றாக புறக்கணிப்பார்கள் என்பதில் முள்ளின் முனையளவும் சந்தேகமில்லை.
(காயல் இளம்பிறையான்)
kayalpirai@gmail.com
இந்திய பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரங்கள், அறிக்கை போர்கள், வாக்குறுதி மழைகள் என தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிட்டது. இதில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சிபுரியும் இருபெரும் திராவிட கட்சிகள் இம்முறையும் ஒரு முஸ்லிமுக்குக்கூட வாய்ப்பு வழங்காதது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் தருகிறது. இதற்கு மூலகாரணம், முஸ்லிம்கள் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடத்திலே மேலோங்கி இருப்பதுதான். இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கடமையும், கடப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு என நான் வலியுறுத்துகிறேன். இது எனது சொந்தக் கருத்தல்ல. நமது சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களின் கருத்தாக உருப்பெற்றிருக்கிறது.
பல நேரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக பேசி மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை விளைவித்துவரும் பா.ஜ.க-வைப் போலவே அ.தி.மு.க-வும் சில நேரங்களில் சிறுபான்மையினரை சீண்டி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம்.
1. பொது சிவில் சட்டம் வேண்டும், 2. ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்ட வேண்டும்? 3. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் மதமோதல்களை உருவாக்கும் போன்ற பா.ஜ.க-வின் ஊதுகுழல் போல் இப்படிப்பட்ட அர்த்தமற்ற அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறது. எனவேதான் பி.ஜே.பி தமிழகத்திற்கு அவசியமில்லை. அதன் கொள்கைகளைத்தான் அ.தி.மு.க. பரப்பிவருகிறதே என அரசியல் விமர்சகர் சோலை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை இன விரோதப்போக்கை கடைபிடித்துவரும் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சீட்டு தந்தால், தங்களின் கொள்கைகளை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு அதனைப்பெற பேரம் பேசும் பெருமைக்குரியவர்கள்தான் மனித நேய மக்கள் கட்சி என்பதை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.
மனிதநேயத்திற்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறைப்பதற்காகவே முஸ்லிம் என்ற பெயரை வைப்பதற்கு அஞ்சுகின்றனர். இவர்கள்தான் முஸ்லிம்களின் காவலர்களாம்!
சமுதாயத்தின் ஒற்றுமையை, கட்டுக்கோப்பை சிதைத்து உடைத்து சின்னாபின்னப் படுத்தியதுதான் அவர்கள் செய்த மகத்தான சாதனை. சமுதாயத்தை ஓரணியில் திரட்டுகிறோம் என்று புறப்பட்டவர்கள் தாங்களே பல அணிகளாக பிரிந்ததுதான் மிச்சம். தங்களுக்கிடையே திருட்டுப்பட்டங்கள் சூட்டி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் சமுதாய வழிகாட்டிகளாம்! வெட்கமாயில்லை?
முழுக்க முழுக்க வஹ்ஹாபிசத்தை விதைத்துவரும் உங்களுக்கும் வக்ஃப் வாரியத்திற்கும் என்ன சம்பந்தம்? கோடிக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் உள்ளது என்பதை குறிவைத்துத்தானே அந்தப்பதவியை அடம்பிடித்து வாங்கி அனுபவித்து வந்தீர்கள்? இல்லை இல்லை அந்த வாரியத்தை நெறிபடுத்தி, ஒழுங்குபடுத்தத்தான் அதனைக்கேட்டுப் பெற்றோம் என்றால், அதனை கைகழுவியதன் காரணம் என்ன? உங்களை நோக்கி சமுதாயத்திலிருந்து புறப்பட்ட எதிர்கணைகள்தானே? நாமாகவே விலகிவிடுவதுதான் கௌரவம் என்றுதானே அதனை ராஜினாமா செய்தீர்கள்? சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று இனியும் பகல்கனவு காணாதீர்கள்.
நீங்கள் யார்? எந்தப் போர்வையில் உலா வருகிறீர்கள் என்பதையெல்லாம் முஸ்லிம் லீக் தோலுரித்துக்காட்ட முனைந்து விட்டதால் என்னப்பேச்சு பேசுகிறோம் என்றுகூட சிந்திக்காமல் அநாகரீகமாக முஸ்லிம் லீக்கை பி.ஜே.பியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் சகோதரர் ஜவாஹிருல்லாஹ். நாவடக்கம் வேண்டும். நாவு நரகத்தற்கு இழுத்துச்செல்லும் என்ற நபிமொழிக் கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பி.ஜே.பியைப் போலவே சமூக ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை பாழ்படுத்துபவர்கள் என்று உங்களை நோக்கித்தான் மக்கள் கைநீட்டிப் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஏதோ தமிழக முஸ்லிம்கள் உங்களைத்தான் ஆதரிக்கிறார்கள், முஸ்லிம் லீக்கை கைவிட்டுவிட்டார்கள் என்ற உங்களின் தவறான எண்ணம், அகங்காரம், ஆணவம் எல்லாம் உங்களை இந்தத்தேர்தலில் தலைகுணிய செய்துவிடும் என்பது மட்டும் திண்ணம். இன்ஷா அல்லாஹ்.
உங்கள் தலைமை நிர்வாகிகளை எடுத்துக்கொண்டாலும், செயற்குழு, பொதுக்குழு என்று எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் வஹ்ஹாபிச சாயலைக் கொண்டவர்கள்தானே? அப்படி இருக்க, நாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பு என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? என்று நான் வினவ கடமைப்பட்டுள்ளேன். விடையுண்டா?
இடஒதுக்கீடை தி.மு.க. அரசு நடைமுறைப் படுத்தவில்லை என்று கூறி ஒரு கூட்டம் அ.தி.மு.க-வின் பக்கமும், இல்லை இல்லை கலைஞர்தான் இந்த மகத்தான இடஒதுக்கீட்டையே நம் சமுதாயத்திற்கு வழங்கினார் என்று ஒரு குழுவும் பிரிந்து நின்று பிரச்சார சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்றைக்கு எந்தக் காரணத்தை சொல்லி எதிர்த்தார்களோ அவர்கள் தி.மு.க-வை ஆதரிக்க, நன்றி கெட்டவர்களாய் ஆதரித்தவர்கள் இன்றைக்கு தி.மு.க-வை எதிர்க்கிறார்கள். இந்த இரு பிரிவினரும்தான் சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மஹல்லாக்களில், பள்ளிகளில் பிரிவினைகளை உருவாக்க முனைந்தவர்கள் என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் எழுதிப்போடப்பட்டுள்ள போர்டு – கரும்பலகைகளே போதிய ஆதாரமாகும்.
எனவே இவர்களை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லோரும் ஒன்றாக புறக்கணிப்பார்கள் என்பதில் முள்ளின் முனையளவும் சந்தேகமில்லை.
யுஏஇ தமிழ்ச்சங்க நிகழ்ச்சி புகைப்படங்கள் ( 23 ஏப்ரல் 2009 )
யுஏஇ தமிழ்ச்சங்க நிகழ்ச்சி புகைப்படங்கள் ( 23 ஏப்ரல் 2009 )
http://picasaweb.google.com/packven/FINAL?authkey=Gv1sRgCKSjvt_hv8zLrQE&feat=directlink
http://picasaweb.google.com/packven/FINAL?authkey=Gv1sRgCKSjvt_hv8zLrQE&feat=directlink
Why mother is so special
Why mother is so special
When I came home in the rain,
Brother asked why didn't you take an umbrella.
Sister advised, Why didn't you wait till rain stopped.
Father angrily warned, only after getting cold, you will realize.
But Mother, while drying my hair, said, stupid rain!
Couldn't it wait, Till my child came home?
That's MOM ...................
When I came home in the rain,
Brother asked why didn't you take an umbrella.
Sister advised, Why didn't you wait till rain stopped.
Father angrily warned, only after getting cold, you will realize.
But Mother, while drying my hair, said, stupid rain!
Couldn't it wait, Till my child came home?
That's MOM ...................
India International School - Bangalore - India
kamala marapatla
dateMon, Apr 27, 2009 at 1:35 PM
subject:India International School - Bangalore - India
Dear Parents / Students,
It was a great pleasure to meet you at our stall in GETEX, Education Exhibition, Dubai during 15th -18th April, 2009 and share information about India International School, Bangalore, India.
Our school is situated in the IT hub and in the safest place with respect to safety concerns of parents. The school focuses on the all round development of the student with Music, Arts, Sports as a part of its curriculum resulting in holistic attribute
CURRICULUM :
We are a Co- Educational Institute following the ICSE (Indian Certificate of Secondary Education , Affiliated to New Delhi Board , India) curriculum from Nursery to Grade 12 , IGCSE (International Certificate of Secondary Education , Affiliated to Cambridge University , UK) curriculum for Grade 9 – 10 we also offer “A “ level and “O” level courses. We offering PUC (Pre University College, affiliated to Bangalore University) and ISC (11th and 12th as per ICSE curriculum) courses.
IIS Infrastructure:
The school takes great pride in its imposing, contemporary state-of-the-art infrastructure, inviting students to explore new arenas of learning.
The campus boasts of an international standard indoor stadium, play grounds, game courts and well maintained parklands.
The school possesses:
Fully equipped, spacious and well ventilated Physics, Chemistry & Biology Laboratories.
A separate English Language Laboratory for linguistic research and development of skills.
An exclusive Mathematics Laboratory for making mathematical activities interesting.
A Social-Science Laboratory for learning and preserving artifacts of historical value.
A Computer Laboratory that boasts of a computer-student ratio of 1:1 with internet browsing facilities.
HOSTEL FACILITIES :
The IIS Hostel Block is a spatial structure built within the pristine campus. Every room accommodates three inmates, equipped with modern amenities of international standards, with ample storage, comfortable furnishings with separate cupboards, study table for every individual in each room, attached bathrooms running hot/cold water for every room and separate study room on every floor. The hostels are efficiently supervised by hostel mothers. To handle any sort of medical emergency the school provides in-house medical services, with a doctor and his team always on alert.
FOOD :
For boarders there is a wide choice of both, vegetarian and non-vegetarian in Indian/Continental food. Complete hygiene as per International Standards is maintained in the kitchen under the supervision of professional cooks and professionally trained staff
.
For any further enquires,kindly contact :
India International School
# 26/1 , Sarjapur Road (Near Wipro Corporate Office)
Chikka Bellandur , Carmelram Post
Bangalore – 560035
India
Ph.No. – 080 – 28439001 / 2
080 – 28439382 / 4
080 – 65366001 / 2
080 – 28440407
009844082220
009844504257
Fax – 28440944
Email Id – contacts.iis@gmail.com
Website – www.iis.edu.in
dateMon, Apr 27, 2009 at 1:35 PM
subject:India International School - Bangalore - India
Dear Parents / Students,
It was a great pleasure to meet you at our stall in GETEX, Education Exhibition, Dubai during 15th -18th April, 2009 and share information about India International School, Bangalore, India.
Our school is situated in the IT hub and in the safest place with respect to safety concerns of parents. The school focuses on the all round development of the student with Music, Arts, Sports as a part of its curriculum resulting in holistic attribute
CURRICULUM :
We are a Co- Educational Institute following the ICSE (Indian Certificate of Secondary Education , Affiliated to New Delhi Board , India) curriculum from Nursery to Grade 12 , IGCSE (International Certificate of Secondary Education , Affiliated to Cambridge University , UK) curriculum for Grade 9 – 10 we also offer “A “ level and “O” level courses. We offering PUC (Pre University College, affiliated to Bangalore University) and ISC (11th and 12th as per ICSE curriculum) courses.
IIS Infrastructure:
The school takes great pride in its imposing, contemporary state-of-the-art infrastructure, inviting students to explore new arenas of learning.
The campus boasts of an international standard indoor stadium, play grounds, game courts and well maintained parklands.
The school possesses:
Fully equipped, spacious and well ventilated Physics, Chemistry & Biology Laboratories.
A separate English Language Laboratory for linguistic research and development of skills.
An exclusive Mathematics Laboratory for making mathematical activities interesting.
A Social-Science Laboratory for learning and preserving artifacts of historical value.
A Computer Laboratory that boasts of a computer-student ratio of 1:1 with internet browsing facilities.
HOSTEL FACILITIES :
The IIS Hostel Block is a spatial structure built within the pristine campus. Every room accommodates three inmates, equipped with modern amenities of international standards, with ample storage, comfortable furnishings with separate cupboards, study table for every individual in each room, attached bathrooms running hot/cold water for every room and separate study room on every floor. The hostels are efficiently supervised by hostel mothers. To handle any sort of medical emergency the school provides in-house medical services, with a doctor and his team always on alert.
FOOD :
For boarders there is a wide choice of both, vegetarian and non-vegetarian in Indian/Continental food. Complete hygiene as per International Standards is maintained in the kitchen under the supervision of professional cooks and professionally trained staff
.
For any further enquires,kindly contact :
India International School
# 26/1 , Sarjapur Road (Near Wipro Corporate Office)
Chikka Bellandur , Carmelram Post
Bangalore – 560035
India
Ph.No. – 080 – 28439001 / 2
080 – 28439382 / 4
080 – 65366001 / 2
080 – 28440407
009844082220
009844504257
Fax – 28440944
Email Id – contacts.iis@gmail.com
Website – www.iis.edu.in
”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !
”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !
தமுமுகவினருக்கு கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொது செயலாளர் மற்றும் தொண்டர்களுக்கு மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சலாத்துடன் எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் சமாதானம் நிலவிட துஆ செய்கிறேன்.கடந்த 16 ஆண்டுகளாக தங்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் சேவை போன்ற பொது சேவைகளை சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் செய்து வருவதை எல்லோரும் நன்கறிவோம். இச்சேவைகளுக்கான நற்கூலி நாளை மறுமையில் கிடைக்கும். என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் தாங்கள் செய்திருப்பீர்கள் என திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது தான் உண்மையென்றால் அனைவருக்கும் சந்தோஷமே! மனிதன் செய்யும் ஒவ்வொரு அமல்களுக்கும் நிச்சயமாக கூலி வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே! அதற்குரிய நற்கூலியை நாளை மறுமையில் வழங்கப்படும் போது நல் அமல்களில் ஈடுபட்ட மனிதர்களின் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது ! இதையெல்லாம் உணர்ந்து தான் தாங்கள் பகிரங்கமாகவே அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ்வின் மீது சத்தியம் ! என்று பிரகடனம் செய்தீர்கள். ஒருவேளை மனம் மாறி அரசியலுக்கு வந்து விட்டால் இதற்காகத்தான் தமுமுகவினர் இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகளை செய்திருக்கின்றனர். என்ற எண்ணம் பொது மக்களிடம் ஏற்பட்டு நாளை மறுமையில் இறைவனின் அருள் கிடைக்காமல் போய் விடலாம் என்ற அச்சத்தின் விளைவாகத் தானே நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அறிவித்த அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ் மீதாணை என்ற சத்தியம். அந்த நேரத்தில் உங்களது குரலில் இருந்த வீரியத்தை வர்ணிக்க வார்த்தை கிடையாது ! ஆனால் இன்றோ, அந்த சத்தியம் என்னாயிற்று? ஏன் சத்தியத்தை முறித்தீர்கள்? ஒரு முஸ்லிம் சத்தியத்தை முறிக்க நினைத்தால் அதற்கான பரிகாரத்தை நிறைவேற்றிய பின்னரே சத்தியத்தை முறித்ததற்கான காரண காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற அல்குர்ஆனின் வசனத்தை படித்துப் பாருங்கள். குர்ஆனின் அடிப்படையில் வாழ வேண்டிய நீங்கள் உங்களது சத்திய முறிவுக்கான பரிகாரத்தை நிறைவேற்றினீர்களா? இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சத்திய பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தொண்டரும் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். சத்தியத்தை முறிப்பது பாவம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முறித்த சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய பாவம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது ! உங்களின் சத்திய முறிவுக்கான பரிகாரத்தை இதோ அல்குர்ஆன் கூறுகிறது பாருங்கள்! ஏதாவதொன்றை உறுதிபடுத்து வதற்காகச் செய்யும் சத்தியத்திற்காக (அவற்றில் தவறினால்) அல்லாஹ் உங்களை பிடிப்பான். எனவே (சத்தியத்தை முறித்தால்) அதனுடைய பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் உணவில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக இருக்கும். அல்லது பத்து ஏழைகளுக்கு உடுத்த உடை கொடுப்பதாயிருக்கும். அல்லது ஓர் அடிமையை உரிமை விடுவதாயிருக்கும். ஆனால் எவர் இம்மூன்றில் எதனையும் செய்ய சக்தி பெற்றுக் கொள்ளவில்லையோ? அப்போது மூன்று நாட்கள் நோன்பு (வைப்பது பரிகாரம் ஆகும்) இது தான் உங்களுடைய சத்தியங்களுக்கு அவற்றை நீங்கள் முறித்தால் பரிகாரமாகும். ஆகவே உங்களுடைய சத்தியங்களைப் பேணி காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:89) இவ்வளவு பெரிய விஷயத்தை சடாரென உதறிவிட்டு நாளை மறுமையின் விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இவ்வுலக அரசியல் பதவிகளுக்காக ஆசைப்பட்டு இறையருளை இழக்க துணிந்திருப்பது எவ்வகையில் நியாயம்? இதை உங்களில் ஒருவன் என்ற சகோதர உரிமையோடு கேட்கிறேன். அரசியல் என்னும் சாக்கடைக்குள் மூழ்கியதும் உங்களின் அணுகுமுறைகளை கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா? உங்களது 16 வருட பொது சேவைக்குரிய நற்கூலி வெறும் ஒரேயொரு சீட் ஒதுக்கீடு மட்டுமே! இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. நான் கூறுவது நீங்கள் எடுத்த திமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையைப் பற்றி! உங்களின் கண்ணியத்தையும், செல்வாக்கையும் திரைப்பட நடிகர் சரத்குமாரிடம் நீங்கள் நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே தமிழக முஸ்லிம் சமுதாயம் நன்கு தெரிந்து கொண்டது! உங்கள் கட்சியின் வலிமையை தெரிந்து கொண்ட சரத்குமார் உங்களுடன் கூட்டணியே வேண்டாமென்று தலை தெறிக்க ஓடியதையும் மக்கள் நன்கறிவர். இவ்வளவு அவமானங்களும் உங்களுக்கு ஏன் எதனால் ஏற்பட்டது? இறைவன் மீது செய்த சத்தியத்தை கேவலம் அரசியலுக்காக முறித்துக் கொண்டதால் வந்த வினையால் தான்! தமுமுகவினரின் பொது சேவைக்குரிய நற்கூலியை அரசியல் மூலம் பெறுவதைவிட நாளை மறுமையில் இறைவனிடம் பெறுவதுதான் உயர்வு! இப்போதும் கெட்டு விடவில்லை உடனடியாக உங்கள் கட்சியை கலைத்து விட்டு நீங்கள் செய்த சத்தியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் தேர்தலில் இருந்து விலகி கொள்ளுங்கள். மீண்டும் தமுமுகவின் மூலமே பொது சேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற லட்சியப் பயணத்தை தொடருங்கள். அரசியல் எனும் சாக்கடைக்காக இறையருளை இழக்க வேண்டாம் என மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை
தமுமுகவினருக்கு கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொது செயலாளர் மற்றும் தொண்டர்களுக்கு மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சலாத்துடன் எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் சமாதானம் நிலவிட துஆ செய்கிறேன்.கடந்த 16 ஆண்டுகளாக தங்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் சேவை போன்ற பொது சேவைகளை சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் செய்து வருவதை எல்லோரும் நன்கறிவோம். இச்சேவைகளுக்கான நற்கூலி நாளை மறுமையில் கிடைக்கும். என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் தாங்கள் செய்திருப்பீர்கள் என திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது தான் உண்மையென்றால் அனைவருக்கும் சந்தோஷமே! மனிதன் செய்யும் ஒவ்வொரு அமல்களுக்கும் நிச்சயமாக கூலி வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே! அதற்குரிய நற்கூலியை நாளை மறுமையில் வழங்கப்படும் போது நல் அமல்களில் ஈடுபட்ட மனிதர்களின் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது ! இதையெல்லாம் உணர்ந்து தான் தாங்கள் பகிரங்கமாகவே அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ்வின் மீது சத்தியம் ! என்று பிரகடனம் செய்தீர்கள். ஒருவேளை மனம் மாறி அரசியலுக்கு வந்து விட்டால் இதற்காகத்தான் தமுமுகவினர் இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகளை செய்திருக்கின்றனர். என்ற எண்ணம் பொது மக்களிடம் ஏற்பட்டு நாளை மறுமையில் இறைவனின் அருள் கிடைக்காமல் போய் விடலாம் என்ற அச்சத்தின் விளைவாகத் தானே நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அறிவித்த அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ் மீதாணை என்ற சத்தியம். அந்த நேரத்தில் உங்களது குரலில் இருந்த வீரியத்தை வர்ணிக்க வார்த்தை கிடையாது ! ஆனால் இன்றோ, அந்த சத்தியம் என்னாயிற்று? ஏன் சத்தியத்தை முறித்தீர்கள்? ஒரு முஸ்லிம் சத்தியத்தை முறிக்க நினைத்தால் அதற்கான பரிகாரத்தை நிறைவேற்றிய பின்னரே சத்தியத்தை முறித்ததற்கான காரண காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற அல்குர்ஆனின் வசனத்தை படித்துப் பாருங்கள். குர்ஆனின் அடிப்படையில் வாழ வேண்டிய நீங்கள் உங்களது சத்திய முறிவுக்கான பரிகாரத்தை நிறைவேற்றினீர்களா? இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சத்திய பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தொண்டரும் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். சத்தியத்தை முறிப்பது பாவம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முறித்த சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய பாவம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது ! உங்களின் சத்திய முறிவுக்கான பரிகாரத்தை இதோ அல்குர்ஆன் கூறுகிறது பாருங்கள்! ஏதாவதொன்றை உறுதிபடுத்து வதற்காகச் செய்யும் சத்தியத்திற்காக (அவற்றில் தவறினால்) அல்லாஹ் உங்களை பிடிப்பான். எனவே (சத்தியத்தை முறித்தால்) அதனுடைய பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் உணவில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக இருக்கும். அல்லது பத்து ஏழைகளுக்கு உடுத்த உடை கொடுப்பதாயிருக்கும். அல்லது ஓர் அடிமையை உரிமை விடுவதாயிருக்கும். ஆனால் எவர் இம்மூன்றில் எதனையும் செய்ய சக்தி பெற்றுக் கொள்ளவில்லையோ? அப்போது மூன்று நாட்கள் நோன்பு (வைப்பது பரிகாரம் ஆகும்) இது தான் உங்களுடைய சத்தியங்களுக்கு அவற்றை நீங்கள் முறித்தால் பரிகாரமாகும். ஆகவே உங்களுடைய சத்தியங்களைப் பேணி காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:89) இவ்வளவு பெரிய விஷயத்தை சடாரென உதறிவிட்டு நாளை மறுமையின் விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இவ்வுலக அரசியல் பதவிகளுக்காக ஆசைப்பட்டு இறையருளை இழக்க துணிந்திருப்பது எவ்வகையில் நியாயம்? இதை உங்களில் ஒருவன் என்ற சகோதர உரிமையோடு கேட்கிறேன். அரசியல் என்னும் சாக்கடைக்குள் மூழ்கியதும் உங்களின் அணுகுமுறைகளை கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா? உங்களது 16 வருட பொது சேவைக்குரிய நற்கூலி வெறும் ஒரேயொரு சீட் ஒதுக்கீடு மட்டுமே! இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. நான் கூறுவது நீங்கள் எடுத்த திமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையைப் பற்றி! உங்களின் கண்ணியத்தையும், செல்வாக்கையும் திரைப்பட நடிகர் சரத்குமாரிடம் நீங்கள் நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே தமிழக முஸ்லிம் சமுதாயம் நன்கு தெரிந்து கொண்டது! உங்கள் கட்சியின் வலிமையை தெரிந்து கொண்ட சரத்குமார் உங்களுடன் கூட்டணியே வேண்டாமென்று தலை தெறிக்க ஓடியதையும் மக்கள் நன்கறிவர். இவ்வளவு அவமானங்களும் உங்களுக்கு ஏன் எதனால் ஏற்பட்டது? இறைவன் மீது செய்த சத்தியத்தை கேவலம் அரசியலுக்காக முறித்துக் கொண்டதால் வந்த வினையால் தான்! தமுமுகவினரின் பொது சேவைக்குரிய நற்கூலியை அரசியல் மூலம் பெறுவதைவிட நாளை மறுமையில் இறைவனிடம் பெறுவதுதான் உயர்வு! இப்போதும் கெட்டு விடவில்லை உடனடியாக உங்கள் கட்சியை கலைத்து விட்டு நீங்கள் செய்த சத்தியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் தேர்தலில் இருந்து விலகி கொள்ளுங்கள். மீண்டும் தமுமுகவின் மூலமே பொது சேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற லட்சியப் பயணத்தை தொடருங்கள். அரசியல் எனும் சாக்கடைக்காக இறையருளை இழக்க வேண்டாம் என மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை
Lose your job?? Don't lose hope!!
Lose your job?? Don't lose hope!!
by Asma bint Shameem
As world markets suffer from the ongoing global financial crisis and housing markets slump, as jobs are lost and unemployment rates rise high, as businesses close down and people don't have a source of income, you worry.
You worry about the growing global recession and its challenges. And you worry about your family, your kids, how to provide for them, how to put food on the table, how to pay the bills....
In times such as these, this is a reminder for my brothers and sisters, as the reminder always benefits the believers.
"But remind, the Reminder will benefit the believers." (Surah adh-Dhaariyaat: 55)
KEEP YOUR IMAAN STRONG
1. Remember.... nothing happens except by the will and decree of Allaah:
Belief in al-qadar (the Divine decree) is one of the pillars of our Imaan, and no one's faith is complete without it. So if you lost your job, it was by the Will and Decree of Allaah. Allaah says:
"No calamity befalls on the earth or in yourselves but it is inscribed in the Book of Decrees (al-Lawh al-Mahfooz) before We bring it into existence. Verily, that is easy for Allaah" (al-Hadeed:22)
Also the Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Know that what has passed you by was not going to befall you, and that what has befallen you was not going to pass you by. And know that victory comes with patience, relief with affliction, and ease with hardship." (Tirmidhi-Saheeh)
2. It is Allaah that provides for you and NOT your employer;
Remember that Allaah is al-Razzaaq (the Provider) and the Best of those who provide. It was Allaah who was providing you before you lost your job and it is still He that will provide you after you lost it. The one who fed you when you were in your mother's womb will also feed you when you are an adult. And it was not you who was putting food on the table for your family. Rather it was Allaah using you as a means to provide for them.
"Except for Allah, is there any other Creator who provides for you out of heaven and earth? There is no god except He. Where then do you turn?" (Surah Faatir:3)
3. Know that your provision was written for you before you were even born:
Allaah had sent an angel to write down your provision for you when you were just a few days old in your mother's womb, and you will get it, no matter what.
"(the angel) says, ‘O Lord, male or female? Doomed or blessed? What is his provision? What is his lifespan?' And that is written in his mother's womb." (Bukhaari)
There is nothing that can take your provision away. And you will not die until you have had your full provision. The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:
"The Holy Spirit (Jibreel) has inspired to me that no soul will die until it has completed its appointed term and received its provision in full, so fear Allaah and do not be desperate in seeking provision, and no one of you should be tempted to seek provision by means of committing sin if it is slow in coming to him, for that which is with Allaah can only be attained by obeying Him." (Saheeh al-Jaami', 2085)
4. It is a test for you from Allaah:
Remember that disasters and calamities are a test of a believer's patience. And so He will test you to see how strong you are and how you will react to His test. And know if Allaah loves a person, He tests him.
"We shall test you with something of fear and hunger, and decrease of goods, life and fruits. Give glad tidings to the patient." (al-Baqarah: 155)
5. Surely, it is a means of expiation of your sins:
Calamities are a means of expiation of sin and raising one's status. The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:
"There is nothing that befalls a believer, not even a thorn that pricks him, but Allaah will record one good deed for him and will remove one bad deed from him." (Muslim).
And he said: "Trials will continue to befall the believing man and woman, with regard to themselves, their children and their wealth, until they meet Allaah with no sin on them." (Tirmidhi, saheeh by al-Albaani)
WHAT TO DO
1. Have tawakkul on Allaah
Always think to yourself...Allaah wouldn't decree something for me unless it was good for me. Have faith in Allaah's Words....
"But you may hate a thing although it is good for you, and may love a thing although it is evil for you. Allah knows, and you do not." (Baqarah:216)
The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said: "If you put your trust in Allaah in the true sense, He will grant your provision as He grants to the birds, who go out in the morning hungry and come back full." (Ahmad, Ibn Maajah and al-Tirmidhi) .
2. Be patient
Remember that with every difficulty comes ease and with hardship comes relief.
"How wonderful is the affair of the believer, for all his affairs are good and this does not apply to anyone except the believer. If something good happens to him he is grateful, and that is good for him, and if something bad happens to him he is patient, and that is good for him." (Muslim).
3. Review your life and make LOTS of Istighfaar
Look at your life. Is there something that you need to improve on? Is there something that you need to give up? Is there anything that may be a cause of Allaah's warning or punishment to you?
"And whatever of misfortune befalls you, it is because of what your hands have earned" [al-Shoora:30]
"A man may be deprived of provision by a sin that he commits." (Ibn Maajah-saheeh by al-Albaani)
If there is such a thing, NOW is the time to fix yourself. Ask Allaah sincerely to forgive you and He will. There is no doubt in that.For He is al-Ghafoor, ar-Raheem.
‘Ask forgiveness from your Lord, verily, He is Oft‑Forgiving. He will send rain to you in abundance, and give you increase in wealth and children, and bestow on you gardens and bestow on you rivers.'"[Nooh 71:10-12]
Fear Allaah and obey Him as much as you can:
Obedience is the key to the Mercy of Allaah and fearing Him (taqwa) is a means to attain all success. Allaah says:
"And whosoever fears Allaah and keeps his duty to Him, He will make a way for him to get out (from every difficulty). And He will provide him from (sources) he never could imagine. And whosoever puts his trust in Allaah, then He will suffice him. Verily, Allaah will accomplish his purpose. Indeed Allaah has set a measure for all things" [al-Talaaq:2- 3]
Make dua and do lots of good deeds
Never forget that Dua is the weapon of the believer. Pray to Allaah with the attitude of certainty and He will surely respond. Do a lot of acts of worship, such as reading Qur'aan, fasting, giving charity, etc. This will get rid of your worry and anxiety, and give you happiness, peace of mind and success in this dunya as well as in the Hereafter.
"Whoever works righteousness - whether male or female - while he (or she) is a true believer; verily, to him We will give a good life (in this world with respect, contentment and lawful provision), and We shall pay them certainly a reward in proportion to the best of what they used to do (i.e. Paradise in the Hereafter)" (al-Nahl:97)
Also, worship at times of hardship and tribulation has a special sweetness to it and a great reward.
The Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Worshipping at times of tribulation and confusion is like migrating to join me." (Muslim)
Uphold ties of kinship
If there are any family members that you have cut off from or are not on speaking terms, etc., correct that and ask them for forgiveness, even if it was not your fault.
Why?
Because the Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Whoever would like his provision to be increased and his life span to be extended, let him uphold the ties of kinship."
Do your best to seek Halaal earnings.... .
Work hard to find a means of living for your family, while relying on Allaah. That is a responsibility placed upon you by Him.
Imam Ahmad was asked about a man who sat in his house or in the masjid and said, "I will not do anything until my rizq comes to me." He said, "This is a man who has no knowledge.
"Strive to do that which will benefit you and seek the help of Allaah, and do not feel helpless." (Muslim).
BUT, don't lose sight of the Aakhirah
However, do realize that this world is only temporary and the REAL life is that of the Hereafter. This world should not be the main concern of the Muslim, rather our focus should be on what we do for the Aakhirah.
The Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Whoever is mainly concerned about the Hereafter, Allaah will make him feel independent of others and will make him focused and content, and his worldly affairs will fall into place. But whoever is mainly concerned with this world, Allaah will make him feel in constant need of others and will make him distracted and unfocused, and he will get nothing of this world except what is decreed for him." (Tirmidhi- saheeh by al-Albaani in Saheeh al-Jaami').
Wassalam.
by Asma bint Shameem
As world markets suffer from the ongoing global financial crisis and housing markets slump, as jobs are lost and unemployment rates rise high, as businesses close down and people don't have a source of income, you worry.
You worry about the growing global recession and its challenges. And you worry about your family, your kids, how to provide for them, how to put food on the table, how to pay the bills....
In times such as these, this is a reminder for my brothers and sisters, as the reminder always benefits the believers.
"But remind, the Reminder will benefit the believers." (Surah adh-Dhaariyaat: 55)
KEEP YOUR IMAAN STRONG
1. Remember.... nothing happens except by the will and decree of Allaah:
Belief in al-qadar (the Divine decree) is one of the pillars of our Imaan, and no one's faith is complete without it. So if you lost your job, it was by the Will and Decree of Allaah. Allaah says:
"No calamity befalls on the earth or in yourselves but it is inscribed in the Book of Decrees (al-Lawh al-Mahfooz) before We bring it into existence. Verily, that is easy for Allaah" (al-Hadeed:22)
Also the Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Know that what has passed you by was not going to befall you, and that what has befallen you was not going to pass you by. And know that victory comes with patience, relief with affliction, and ease with hardship." (Tirmidhi-Saheeh)
2. It is Allaah that provides for you and NOT your employer;
Remember that Allaah is al-Razzaaq (the Provider) and the Best of those who provide. It was Allaah who was providing you before you lost your job and it is still He that will provide you after you lost it. The one who fed you when you were in your mother's womb will also feed you when you are an adult. And it was not you who was putting food on the table for your family. Rather it was Allaah using you as a means to provide for them.
"Except for Allah, is there any other Creator who provides for you out of heaven and earth? There is no god except He. Where then do you turn?" (Surah Faatir:3)
3. Know that your provision was written for you before you were even born:
Allaah had sent an angel to write down your provision for you when you were just a few days old in your mother's womb, and you will get it, no matter what.
"(the angel) says, ‘O Lord, male or female? Doomed or blessed? What is his provision? What is his lifespan?' And that is written in his mother's womb." (Bukhaari)
There is nothing that can take your provision away. And you will not die until you have had your full provision. The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:
"The Holy Spirit (Jibreel) has inspired to me that no soul will die until it has completed its appointed term and received its provision in full, so fear Allaah and do not be desperate in seeking provision, and no one of you should be tempted to seek provision by means of committing sin if it is slow in coming to him, for that which is with Allaah can only be attained by obeying Him." (Saheeh al-Jaami', 2085)
4. It is a test for you from Allaah:
Remember that disasters and calamities are a test of a believer's patience. And so He will test you to see how strong you are and how you will react to His test. And know if Allaah loves a person, He tests him.
"We shall test you with something of fear and hunger, and decrease of goods, life and fruits. Give glad tidings to the patient." (al-Baqarah: 155)
5. Surely, it is a means of expiation of your sins:
Calamities are a means of expiation of sin and raising one's status. The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:
"There is nothing that befalls a believer, not even a thorn that pricks him, but Allaah will record one good deed for him and will remove one bad deed from him." (Muslim).
And he said: "Trials will continue to befall the believing man and woman, with regard to themselves, their children and their wealth, until they meet Allaah with no sin on them." (Tirmidhi, saheeh by al-Albaani)
WHAT TO DO
1. Have tawakkul on Allaah
Always think to yourself...Allaah wouldn't decree something for me unless it was good for me. Have faith in Allaah's Words....
"But you may hate a thing although it is good for you, and may love a thing although it is evil for you. Allah knows, and you do not." (Baqarah:216)
The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said: "If you put your trust in Allaah in the true sense, He will grant your provision as He grants to the birds, who go out in the morning hungry and come back full." (Ahmad, Ibn Maajah and al-Tirmidhi) .
2. Be patient
Remember that with every difficulty comes ease and with hardship comes relief.
"How wonderful is the affair of the believer, for all his affairs are good and this does not apply to anyone except the believer. If something good happens to him he is grateful, and that is good for him, and if something bad happens to him he is patient, and that is good for him." (Muslim).
3. Review your life and make LOTS of Istighfaar
Look at your life. Is there something that you need to improve on? Is there something that you need to give up? Is there anything that may be a cause of Allaah's warning or punishment to you?
"And whatever of misfortune befalls you, it is because of what your hands have earned" [al-Shoora:30]
"A man may be deprived of provision by a sin that he commits." (Ibn Maajah-saheeh by al-Albaani)
If there is such a thing, NOW is the time to fix yourself. Ask Allaah sincerely to forgive you and He will. There is no doubt in that.For He is al-Ghafoor, ar-Raheem.
‘Ask forgiveness from your Lord, verily, He is Oft‑Forgiving. He will send rain to you in abundance, and give you increase in wealth and children, and bestow on you gardens and bestow on you rivers.'"[Nooh 71:10-12]
Fear Allaah and obey Him as much as you can:
Obedience is the key to the Mercy of Allaah and fearing Him (taqwa) is a means to attain all success. Allaah says:
"And whosoever fears Allaah and keeps his duty to Him, He will make a way for him to get out (from every difficulty). And He will provide him from (sources) he never could imagine. And whosoever puts his trust in Allaah, then He will suffice him. Verily, Allaah will accomplish his purpose. Indeed Allaah has set a measure for all things" [al-Talaaq:2- 3]
Make dua and do lots of good deeds
Never forget that Dua is the weapon of the believer. Pray to Allaah with the attitude of certainty and He will surely respond. Do a lot of acts of worship, such as reading Qur'aan, fasting, giving charity, etc. This will get rid of your worry and anxiety, and give you happiness, peace of mind and success in this dunya as well as in the Hereafter.
"Whoever works righteousness - whether male or female - while he (or she) is a true believer; verily, to him We will give a good life (in this world with respect, contentment and lawful provision), and We shall pay them certainly a reward in proportion to the best of what they used to do (i.e. Paradise in the Hereafter)" (al-Nahl:97)
Also, worship at times of hardship and tribulation has a special sweetness to it and a great reward.
The Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Worshipping at times of tribulation and confusion is like migrating to join me." (Muslim)
Uphold ties of kinship
If there are any family members that you have cut off from or are not on speaking terms, etc., correct that and ask them for forgiveness, even if it was not your fault.
Why?
Because the Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Whoever would like his provision to be increased and his life span to be extended, let him uphold the ties of kinship."
Do your best to seek Halaal earnings.... .
Work hard to find a means of living for your family, while relying on Allaah. That is a responsibility placed upon you by Him.
Imam Ahmad was asked about a man who sat in his house or in the masjid and said, "I will not do anything until my rizq comes to me." He said, "This is a man who has no knowledge.
"Strive to do that which will benefit you and seek the help of Allaah, and do not feel helpless." (Muslim).
BUT, don't lose sight of the Aakhirah
However, do realize that this world is only temporary and the REAL life is that of the Hereafter. This world should not be the main concern of the Muslim, rather our focus should be on what we do for the Aakhirah.
The Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Whoever is mainly concerned about the Hereafter, Allaah will make him feel independent of others and will make him focused and content, and his worldly affairs will fall into place. But whoever is mainly concerned with this world, Allaah will make him feel in constant need of others and will make him distracted and unfocused, and he will get nothing of this world except what is decreed for him." (Tirmidhi- saheeh by al-Albaani in Saheeh al-Jaami').
Wassalam.
TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்
TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்
தர்மபுரியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 2 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : PRK கல்யாண மண்டபம், உருது ஸ்கூல் ரோடு, தர்மபுரி
தொடர்பிற்கு : 9443212388, 9894520178 -அபூ சலீம் (தர்மபுரி மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. தர்மபுரி மாவட்ட மாணவர் அணி.
லெப்பைகுடி காடு (பெரம்பலுர் மாவட்டம்) -ல் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 3 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : Dr.S.ஜாபர் அலி.PhD. (உதவி பேராசிரியர்)
S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, லெப்பைகுடி காடு, பெரம்பலுர்
தொடர்பிற்கு : 9843398149
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
பெரம்பலுர் மாவட்ட மாணவர் அணி.
திருப்பதூரில் (சிவகங்கை மாவட்டம்) TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)
நாள் : மே 3- ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
இடம் : இமயம் டியூஸன் சென்டர், மேஸ்த்திரியார் தெரு. திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
தொடர்பிற்கு : 9003811959, 9944244632
மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.
தர்மபுரியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 2 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : PRK கல்யாண மண்டபம், உருது ஸ்கூல் ரோடு, தர்மபுரி
தொடர்பிற்கு : 9443212388, 9894520178 -அபூ சலீம் (தர்மபுரி மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. தர்மபுரி மாவட்ட மாணவர் அணி.
லெப்பைகுடி காடு (பெரம்பலுர் மாவட்டம்) -ல் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 3 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : Dr.S.ஜாபர் அலி.PhD. (உதவி பேராசிரியர்)
S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, லெப்பைகுடி காடு, பெரம்பலுர்
தொடர்பிற்கு : 9843398149
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
பெரம்பலுர் மாவட்ட மாணவர் அணி.
திருப்பதூரில் (சிவகங்கை மாவட்டம்) TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)
நாள் : மே 3- ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
இடம் : இமயம் டியூஸன் சென்டர், மேஸ்த்திரியார் தெரு. திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
தொடர்பிற்கு : 9003811959, 9944244632
மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.
Tuesday, April 28, 2009
http://picasa.google.com
http://picasa.google.com/
Download Picasa and install, create username and password
Open Picasa
It will read all the photos
and select the folders all pictures and Synchroniz
and Share enter the email address
Download Picasa and install, create username and password
Open Picasa
It will read all the photos
and select the folders all pictures and Synchroniz
and Share enter the email address
மஸ்னவி ஷரீப் தமிழாக்கம்
assalamu alaikkum
masnavi sharif available at jeddha
plz call your copy 0506573319
price 50 riyal
wasasalam
masnavi sharif available at jeddha
plz call your copy 0506573319
price 50 riyal
wasasalam
சில சில்லி வாக்கியங்கள்
சில சில்லி வாக்கியங்கள்
கங்கை, காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ,ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியாது
திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரால் ஒரு குரலில் மட்டுமே பேசமுடியும்
என்ன தான் தன் தலை சுற்றினாலும் தன் முதுகை பார்க்க முடியாது ..
மீன் பிடிப்பவர் மீனவர் . நாய் பிடிப்பவர் நாயவராக முடியாது.
என்ன தான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கி
உள்ளே போட முடியாது
தேள்,பாம்பு கொட்டினால் வலிக்கும் முடி கொட்டினால் வலிக்காது.
ஸ்கூல்,காலேஜ் டெஸ்டில் பிட் அடிக்கலாம் , பிளட் டெஸ்டில் பிட் அடிக்க முடியாது .
பொங்கலுக்கு அரசாங்க லீவு.ஆனால் இட்லி , தோசைக்கு ?
கோலம் மாவுல கோலம் போடலாம், ஆனால் கடலை மாவுல கடலை போட முடியாது .
லைஃப் ல ஒன்னுமே இல்லைனா போர் அடிக்கும். தலையில்
ஒன்னுமே இல்லைனா கிளார் அடிக்கும்.
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட காசு இருந்தாலும், ஃபாஸ்ட் ஃபுட் ல் நின்று தான் சாப்பிடனும்.
என்ஜினியரிங் காலேஜ்ல் படித்தால் என்ஜினியர், ஆனால் பிரஸிடன்ஸி காலேஜ்ல் படித்தால் ? ?
டீ கப்பில் டீ இருக்கும், ஆனால் வேர்ல்டு கப்பில் வேர்ல்டு
இருக்குமா ?
பால் கோவா செய்ய பால் தேவை. ஆனால் ரச குள்ளா செய்ய ரசமா ?
பல் வலி வந்தால் பல் பிடுங்கனும்,கால்,தலை வலி வந்தால் ??
கங்கை, காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ,ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியாது
திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரால் ஒரு குரலில் மட்டுமே பேசமுடியும்
என்ன தான் தன் தலை சுற்றினாலும் தன் முதுகை பார்க்க முடியாது ..
மீன் பிடிப்பவர் மீனவர் . நாய் பிடிப்பவர் நாயவராக முடியாது.
என்ன தான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கி
உள்ளே போட முடியாது
தேள்,பாம்பு கொட்டினால் வலிக்கும் முடி கொட்டினால் வலிக்காது.
ஸ்கூல்,காலேஜ் டெஸ்டில் பிட் அடிக்கலாம் , பிளட் டெஸ்டில் பிட் அடிக்க முடியாது .
பொங்கலுக்கு அரசாங்க லீவு.ஆனால் இட்லி , தோசைக்கு ?
கோலம் மாவுல கோலம் போடலாம், ஆனால் கடலை மாவுல கடலை போட முடியாது .
லைஃப் ல ஒன்னுமே இல்லைனா போர் அடிக்கும். தலையில்
ஒன்னுமே இல்லைனா கிளார் அடிக்கும்.
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட காசு இருந்தாலும், ஃபாஸ்ட் ஃபுட் ல் நின்று தான் சாப்பிடனும்.
என்ஜினியரிங் காலேஜ்ல் படித்தால் என்ஜினியர், ஆனால் பிரஸிடன்ஸி காலேஜ்ல் படித்தால் ? ?
டீ கப்பில் டீ இருக்கும், ஆனால் வேர்ல்டு கப்பில் வேர்ல்டு
இருக்குமா ?
பால் கோவா செய்ய பால் தேவை. ஆனால் ரச குள்ளா செய்ய ரசமா ?
பல் வலி வந்தால் பல் பிடுங்கனும்,கால்,தலை வலி வந்தால் ??
Sunday, April 26, 2009
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று காலை முதல் உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார்.
இன்று காலை அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற கருணாநிதி அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தனது உண்ணாநிலையைத் தொடங்கினார்.
இது தமிழர்களுக்கான தன்னுடைய மற்றொரு தியாகம் என்று கூறிய முதல்வர், ராஜபக்சேவின் இன அழிப்பில் நானும் ஒருவனாக இருக்கட்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று விடுதலைப் புலியினர் தாங்களாகவே முன்வந்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். இலங்கை அரசு அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்ட நிலையில், இதுபற்றிக் கூறிய கருணாநிதி இன்று ஓர் இரவு பொறுத்திருப்போம் என்று கூறியிருந்தார்.
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று காலை முதல் உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார்.
இன்று காலை அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற கருணாநிதி அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தனது உண்ணாநிலையைத் தொடங்கினார்.
இது தமிழர்களுக்கான தன்னுடைய மற்றொரு தியாகம் என்று கூறிய முதல்வர், ராஜபக்சேவின் இன அழிப்பில் நானும் ஒருவனாக இருக்கட்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று விடுதலைப் புலியினர் தாங்களாகவே முன்வந்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். இலங்கை அரசு அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்ட நிலையில், இதுபற்றிக் கூறிய கருணாநிதி இன்று ஓர் இரவு பொறுத்திருப்போம் என்று கூறியிருந்தார்.
நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்
அப்துல் கையூம் அவர்களின் எள்ளலும்-துள்ளலும் இணைந்த எழுத்து நடையில் இசைமுரசு நாகூர் ஹனீபாவை பற்றிய கட்டுரை மிக மிக அருமை.
கட்டுரை நாகூர் ஹனீபா பற்றி - தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்கத்தக்க அளவிற்கு ஆதாரபூர்வமான தகவல்களை கொண்டிருக்கிறது.
தமிழ் முஸ்லிம்களின் இல்லங்களில் - ஒரு காலத்தில் ‘வெள்ளிக்கிழமை’ இரவு நேரங்களில் அவரின் பாடல்கள் ’டேப் ரிகார்டர்’ மூலம் ஒலிக்கப்படுவது ’சுன்னத்தாக’ கருதப்பட்டு வந்தது..
வீடியோவாக்கப்படும் தமிழ் முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகளில் மறக்காமல் (இன்றும்) இணைக்கப்படும் பாடலான
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்க வாழ்க..
மணமக்கள்
வாழ்க வாழ்கவே .
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க.. என்ற பாடலை யாரும் மறக்க இயலாது...
உண்மையில் நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு சரித்திரம்தான்..
அருமையான கட்டுரை தந்த ஆசிரியர் அப்துல் கையூம் அவர்களுக்கு
நன்றியும்..வாழ்த்துகளும்..
தோழமையுடன்
பிறைநதிபுரத்தான்
வலைப்பூ: உரையாடல்
-----------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare
--- On Fri, 24/4/09, அப்துல் கையூம் wrote:
From: அப்துல் கையூம்
Subject: {TMB - 3010} நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்
To: "Tamil Muslim Brothers"
Date: Friday, 24 April, 2009, 12:18 AM
நன்றி : திண்ணை
ஏப்ரல் 23, 2009
- அப்துல் கையூம்
சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை
‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும்
எழுதவில்லையே என்று
குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று
கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் -ஒரு சரித்திரம், ஆகையால்
'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன்
செய்தேன்.
‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம்
இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார்
பாணியில் பால்பாயிண்ட்
பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.
வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட
மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு
அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி
‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.
நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு
‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை
மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்”
என்றால் மற்றவர் “பித்தளை”தானே?
அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள
நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப
நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு
அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது
சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற
பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில்
போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம்
எடுத்துக் கொண்டார்கள்.
மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி
இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த
என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின்
குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப்
பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்"
என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன்
பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில்
என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில்
அக்கறை
செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை
செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை
அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை
வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.
ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு
இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய
பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா
வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக்
கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு
இந்தியாவாகத் தெரிந்தது.
நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு
எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா
அறியாமோ?” “நிங்ஙள் அவரை
கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத்
தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே
அறிந்து வைத்திருந்தார்.
வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள்.
அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும்
பொருந்துகின்ற
அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும்
மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.
‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில்
வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?”
என்ற கேள்வி எழலாம்.
“அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD
என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.
நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல்,
நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?
ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது
கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப்
போன்ற
உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற
விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன்
இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.
“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான்
வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று
பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர்
கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.
அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்
என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும்
கொடுமையை
எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.
"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில்
‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து
எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை
எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.
இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள்
மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான்
செய்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற
அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது.
“முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர
சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை. ஹனிபாவின் சில
பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.
“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர்
பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ
எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள்
உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால்
ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு
கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர்
உண்டு.
“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்
வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”
என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு
குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.
“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே
ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”
என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக
ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.
தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர்
நாளடைவில்
“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”
என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக்
கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல
வேண்டும்.
‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள்
முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த
முறை’யையும், ‘பெரியார் பிலாலின்
தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும்
பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய
சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.
“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”
என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன்
கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று
பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு
தெளிவு பிறக்க வைத்து விடும்.
“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர்
அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த
கனிவான அறிவுரையை
காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.
“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”
என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன்
தத்ரூபமாக காட்சிதரும்.
“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”
என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.
“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”
என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும்
கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே
உணர முடியும்.
தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர்
கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு
இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு
கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.]
ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே
பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத்
துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.
இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய
பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல
‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய
பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத
இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர்.
ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.
இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக
முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட,
நின்றுக்
கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க
வைத்த கதை.
இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும்
நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி,
உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை
செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற
மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான்
சகித்துக் கொள்ள முடியவில்லை.
எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள்
வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.
மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ
‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி
எத்தனை கட்டை என்ற விவரத்தை
காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை”
என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார்.
(‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)
ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த
நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர்
தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த
‘சிச்சுவேஷன் காமெடி’.
“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”
என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.
"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற
தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட
குரல் வளம்
அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு
நிவேதிதா.
நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள்
சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர்
ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை
கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை
ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால்
அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை
வெளிப்படுத்தினார்.
நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு
அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.
1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில்
களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார்.
மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம்
இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.
பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம்
A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத்
நின்றிருந்தாலாவது
ஜெயித்திருப்பாரோ என்னவோ?
“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத்
இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய
நண்பர் அன்வாருல்லா.
கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று
நேற்று எற்பட்ட ஒன்றா?
“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து
முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து
இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.
தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும்
பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச்
செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது
குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட
என்பது அ.மா.சாமியின் கூற்று.
“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”
என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய
பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.
“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி
பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க
வீறு கொண்டு எழுவார்கள் வீரமறவர்கள்.
“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர்
பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு
தேவையாக இருக்கிறது”
என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.
1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன்
சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி
எழுதிய
“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”
என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.
கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு
ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம்
லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர்
துறந்தார்.
1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள்
பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில்
அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர
நிகழ்வு.
“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும்
மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.
இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன்
தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு
ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.
அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று
வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’
கலை அறியாது
‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய
இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி
மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.
தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல,
கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர்
இந்த வெள்ளிநரை வேந்தன்.
ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்
கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம்
முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில்
நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது
காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே
வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில்
சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.
“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”
என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்”
என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.
“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”
என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி
அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல்
காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக்
காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !
நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள்
அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து
செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.
"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"
என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.
'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்
"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்" என்பார்
இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா.
அப்துல் கபூர்.
"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே" என்று.
அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை
ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று
தொடங்கும்
இன்னொரு பாடலிலும்
“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”
என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!”
என்ற பாட்டிலும்
“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”
என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக
“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”
என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக்
காட்டியிருப்பார்.
இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி
பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம்
“நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க
வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.
84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த
மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும்
செய்யும்
பிரார்த்தனை.
அருஞ்சொற்பொருள்:
மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்
திண்ணையில் அப்துல் கையூம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904235&format=html
கட்டுரை நாகூர் ஹனீபா பற்றி - தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்கத்தக்க அளவிற்கு ஆதாரபூர்வமான தகவல்களை கொண்டிருக்கிறது.
தமிழ் முஸ்லிம்களின் இல்லங்களில் - ஒரு காலத்தில் ‘வெள்ளிக்கிழமை’ இரவு நேரங்களில் அவரின் பாடல்கள் ’டேப் ரிகார்டர்’ மூலம் ஒலிக்கப்படுவது ’சுன்னத்தாக’ கருதப்பட்டு வந்தது..
வீடியோவாக்கப்படும் தமிழ் முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகளில் மறக்காமல் (இன்றும்) இணைக்கப்படும் பாடலான
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்க வாழ்க..
மணமக்கள்
வாழ்க வாழ்கவே .
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க.. என்ற பாடலை யாரும் மறக்க இயலாது...
உண்மையில் நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு சரித்திரம்தான்..
அருமையான கட்டுரை தந்த ஆசிரியர் அப்துல் கையூம் அவர்களுக்கு
நன்றியும்..வாழ்த்துகளும்..
தோழமையுடன்
பிறைநதிபுரத்தான்
வலைப்பூ: உரையாடல்
-----------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare
--- On Fri, 24/4/09, அப்துல் கையூம்
From: அப்துல் கையூம்
Subject: {TMB - 3010} நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்
To: "Tamil Muslim Brothers"
Date: Friday, 24 April, 2009, 12:18 AM
நன்றி : திண்ணை
ஏப்ரல் 23, 2009
- அப்துல் கையூம்
சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை
‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும்
எழுதவில்லையே என்று
குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று
கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் -ஒரு சரித்திரம், ஆகையால்
'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன்
செய்தேன்.
‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம்
இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார்
பாணியில் பால்பாயிண்ட்
பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.
வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட
மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு
அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி
‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.
நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு
‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை
மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்”
என்றால் மற்றவர் “பித்தளை”தானே?
அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள
நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப
நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு
அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது
சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற
பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில்
போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம்
எடுத்துக் கொண்டார்கள்.
மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி
இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த
என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின்
குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப்
பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்"
என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன்
பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில்
என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில்
அக்கறை
செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை
செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை
அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை
வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.
ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு
இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய
பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா
வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக்
கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு
இந்தியாவாகத் தெரிந்தது.
நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு
எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா
அறியாமோ?” “நிங்ஙள் அவரை
கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத்
தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே
அறிந்து வைத்திருந்தார்.
வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள்.
அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும்
பொருந்துகின்ற
அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும்
மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.
‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில்
வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?”
என்ற கேள்வி எழலாம்.
“அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD
என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.
நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல்,
நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?
ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது
கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப்
போன்ற
உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற
விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன்
இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.
“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான்
வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று
பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர்
கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.
அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்
என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும்
கொடுமையை
எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.
"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில்
‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து
எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை
எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.
இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள்
மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான்
செய்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற
அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது.
“முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர
சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை. ஹனிபாவின் சில
பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.
“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர்
பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ
எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள்
உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால்
ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு
கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர்
உண்டு.
“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்
வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”
என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு
குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.
“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே
ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”
என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக
ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.
தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர்
நாளடைவில்
“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”
என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக்
கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல
வேண்டும்.
‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள்
முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த
முறை’யையும், ‘பெரியார் பிலாலின்
தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும்
பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய
சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.
“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”
என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன்
கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று
பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு
தெளிவு பிறக்க வைத்து விடும்.
“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர்
அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த
கனிவான அறிவுரையை
காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.
“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”
என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன்
தத்ரூபமாக காட்சிதரும்.
“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”
என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.
“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”
என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும்
கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே
உணர முடியும்.
தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர்
கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு
இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு
கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.]
ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே
பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத்
துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.
இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய
பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல
‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய
பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத
இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர்.
ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.
இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக
முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட,
நின்றுக்
கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க
வைத்த கதை.
இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும்
நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி,
உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை
செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற
மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான்
சகித்துக் கொள்ள முடியவில்லை.
எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள்
வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.
மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ
‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி
எத்தனை கட்டை என்ற விவரத்தை
காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை”
என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார்.
(‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)
ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த
நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர்
தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த
‘சிச்சுவேஷன் காமெடி’.
“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”
என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.
"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற
தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட
குரல் வளம்
அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு
நிவேதிதா.
நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள்
சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர்
ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை
கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை
ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால்
அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை
வெளிப்படுத்தினார்.
நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு
அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.
1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில்
களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார்.
மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம்
இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.
பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம்
A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத்
நின்றிருந்தாலாவது
ஜெயித்திருப்பாரோ என்னவோ?
“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத்
இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய
நண்பர் அன்வாருல்லா.
கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று
நேற்று எற்பட்ட ஒன்றா?
“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து
முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து
இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.
தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும்
பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச்
செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது
குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட
என்பது அ.மா.சாமியின் கூற்று.
“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”
என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய
பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.
“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி
பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க
வீறு கொண்டு எழுவார்கள் வீரமறவர்கள்.
“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர்
பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு
தேவையாக இருக்கிறது”
என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.
1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன்
சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி
எழுதிய
“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”
என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.
கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு
ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம்
லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர்
துறந்தார்.
1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள்
பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில்
அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர
நிகழ்வு.
“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும்
மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.
இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன்
தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு
ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.
அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று
வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’
கலை அறியாது
‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய
இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி
மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.
தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல,
கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர்
இந்த வெள்ளிநரை வேந்தன்.
ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்
கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம்
முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில்
நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது
காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே
வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில்
சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.
“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”
என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்”
என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.
“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”
என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி
அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல்
காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக்
காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !
நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள்
அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து
செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.
"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"
என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.
'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்
"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்" என்பார்
இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா.
அப்துல் கபூர்.
"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே" என்று.
அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை
ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று
தொடங்கும்
இன்னொரு பாடலிலும்
“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”
என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!”
என்ற பாட்டிலும்
“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”
என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக
“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”
என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக்
காட்டியிருப்பார்.
இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி
பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம்
“நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க
வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.
84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த
மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும்
செய்யும்
பிரார்த்தனை.
அருஞ்சொற்பொருள்:
மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்
திண்ணையில் அப்துல் கையூம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904235&format=html
அபுதாபி அய்மான் நிகழ்ச்சியில்....
மாறாத சொந்தம் !
மாறாத சொந்தம் !
கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை
சிந்தனையில் தேன் சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே
வழிபார்க்கும் வையகமே!
முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை?
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?
ஓரழகு! சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும் –
யாதான போதிலுமே?
சொல்லழகு செயலழகு
சோர்வறியாத திறமழகு!
நல்லழகு மாதிரிபோல்
நானிலத்தில் ஏதழகு?
பொறுமைக்கோர் இலக்கணமாய்,
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!
புண்சிரிப்போ முழுநிலவு!
பூப்போன்ற மென்மைமுகம்!
கண்பார்வை, அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!
முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே!
சாந்தஒளி வீசிடுமே!
அடியெடுக்கும் நடைநேர்த்தி
அணிந்திருக்கும் உடைநேர்த்தி
வடிதேனாம் அவர்மொழிகள்,
வையகத்தில் தனிநேர்த்தி!
கண்ணியத்தின் சின்னமவர்
கஸ்தூரி வாசமவர்
பொன்பொதிந்த வெள்ளியெனப்
பொலியும் அவர்திருமேனி!
குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்!
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!
சொர்க்கத்தின் மாமன்னர்!
சோபனங்கள் கூறுபவர்!
வர்க்கமெனும் மானுடம்நாம்,
வைத்திருக்கும் மணிமகுடம்!
மாறாத சொந்தமிவர்
மறவாத பந்தமிவர்
ஆறாத துயரினிலும்
ஆறுதலாம் அண்ணலிவர்
நன்றி : மணிச்சுடர் தமிழ் நாளிதழ்
கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை
சிந்தனையில் தேன் சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே
வழிபார்க்கும் வையகமே!
முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை?
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?
ஓரழகு! சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும் –
யாதான போதிலுமே?
சொல்லழகு செயலழகு
சோர்வறியாத திறமழகு!
நல்லழகு மாதிரிபோல்
நானிலத்தில் ஏதழகு?
பொறுமைக்கோர் இலக்கணமாய்,
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!
புண்சிரிப்போ முழுநிலவு!
பூப்போன்ற மென்மைமுகம்!
கண்பார்வை, அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!
முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே!
சாந்தஒளி வீசிடுமே!
அடியெடுக்கும் நடைநேர்த்தி
அணிந்திருக்கும் உடைநேர்த்தி
வடிதேனாம் அவர்மொழிகள்,
வையகத்தில் தனிநேர்த்தி!
கண்ணியத்தின் சின்னமவர்
கஸ்தூரி வாசமவர்
பொன்பொதிந்த வெள்ளியெனப்
பொலியும் அவர்திருமேனி!
குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்!
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!
சொர்க்கத்தின் மாமன்னர்!
சோபனங்கள் கூறுபவர்!
வர்க்கமெனும் மானுடம்நாம்,
வைத்திருக்கும் மணிமகுடம்!
மாறாத சொந்தமிவர்
மறவாத பந்தமிவர்
ஆறாத துயரினிலும்
ஆறுதலாம் அண்ணலிவர்
நன்றி : மணிச்சுடர் தமிழ் நாளிதழ்
Subscribe to:
Posts (Atom)