Tuesday, January 13, 2009

இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம் ( ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் )

இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம் ( ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் )


கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முத‌லில்
ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன்
நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த‌ மாணவர்களே
(கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள்.சிலகிறிஸ்த‌வர்கள்.அபூர்வமாக
சில முஸ்லிம்கள்.ஆனால்,ஒரு முக்கியமான விஷ‌யம்: இந்து,கிறிஸ்துவர்,இஸ்லாமியர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் மத‌த்தின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் எந்த‌ வேறுபாடும் கிடையாது. பல நேரங்களில் ஒரு மாணவனின் பெயரைக் கொண்டுதான் அவனுடைய மத‌ம்
தெரிந்த‌து. நடை,உடை,உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த‌ வேறுபாடும் தெரியவில்லை.
எல்லோரும் காமிக்ஸ் படித்தார்கள். எல்லோரும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள்.

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த‌ காலத்தில் மத‌ம் ஒரு முக்கிய குறியீடாகக் கருத‌ப்
படவில்லை. ஒவ்வொரு மாணவனும் பைபிள் அல்லது அறநெறி பாடத்தை படிக்க வேண்டும்
என்பது பள்ளியின் விதி. மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (அவர்களில் பெரும்பாலோர்
இந்துக்கள்)அவர்களுடைய பெற்றோரின் சம்மத‌த்துடன் பைபிள் பாடத்தையே விரும்பித்
தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக எல்லா முஸ்லிம் மாணவர்களும் பைபிள் வகுப்பிலேயே
சேர்ந்தார்கள்.யாரும் யாரையும் கட்டாயமாகவோ அல்லது நைச்சியமாகப் பேசியோ ம‌த‌மாற்றம் செய்ய முற்ப‌டவில்லை.

ஒவ்வொரு வகுப்பிலும் பல பிரிவுகள் இருந்த‌ன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மாணவர்
த‌லைவர்.ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மாணவர் த‌லைவர் என்று மாணவர்களே தேர்ந்
தெடுக்கவேண்டும். ஆறாவது வகுப்பில் (அப்பொழுது முத‌ல் பாரம் என்று அழைத்தார்கள்)
நாங்கள் தேர்ந்தெடுத்த‌ மாணவர் த‌லைவரின் பெயர் ஏ.கே.மூசா. பள்ளியோ கிறிஸ்துவர்கள்
நடத்தும் பள்ளி. பல ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. பெரும்பான்மையான மாணவர்களோ
இந்துக்கள். ஆனால்,எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓர் இஸ்லாமியர்.

அடுத்த‌டுத்த ஆண்டுகளில் ஏழாம்,எட்டாம்,ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் எங்கள்
வகுப்புத் த‌லைவராக அதே ஏ.கே.மூசா என்ற மாணவரையே தேர்ந்தெடுத்தோம். ஏ.கே.மூசா
எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். ஆனால்,சராசரி மாணவர். சராசரி உயரம். சராசரி கவர்ச்சி. ஆங்கிலம் தெரிந்த‌ போதும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றக் கூடிய ஆற்றல் கிடையாது.

பதினோராம் வகுப்புக்கு வந்தோம். அதுவே பள்ளியில் இறுதி வகுப்பு. ஆண்டு முடிவில் எஸ்.எஸ் எல்.சி.தேர்வு எழுத‌ வேண்டும்.பதினோராம் வகுப்பின் மாணவர் த‌லைவரே பள்ளியின் மாணவர் த‌லைவர் ஆவார்.பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அப்பொழுது பள்ளியின் த‌லைமை ஆசிரியர் ஈடும் இணையுமில்லாத‌ திரு.குருவில்லா ஜேக்கப்
அவர்கள். பள்ளி மாணவர் த‌லைவர் உயரமாக,கம்பீரமாக,கவர்ச்சியாக நன்றாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்திற்கேற்ப பதினோராம் வகுப்பு மற்றும் பள்ளியின் மாணவர் த‌லைவராக நாங்கள் ஒரு கவர்ச்சிகர‌மான மாணவரைத் தேர்ந்து எடுத்தோம். அவருடைய பெயர் ஹாரூன் முஹம்ம‌து.

பள்ளி வாழ்க்கை முடிந்த‌ பிறகு ஏ.கே.மூசாவுடன் தொடர்பு அறுந்து விட்டது. அவர் எங்கே,
எப்படி,என்ன செய்து கொண்டிருந்தார்,செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஹாரூண் முகம்மது ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறி குடியுரிமையும் பெற்றார். 1998ஆம்
ஆண்டு அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன்.

கான்வென்டில் படிக்கும்போது மல்லிகா என்றொரு மாணவி இருந்தார் பெயர் மல்லிகா
என்றாலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த‌வர். மிக அழகான,மிக புத்திசாலியான
பெண்.வகுப்பில் அந்த‌ப் பெண்ணுடன் தான் முத‌லிடத்திற்குப் போட்டி.

இஸ்லாமியச் சட்டம்,மத‌ம்,வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் சட்டக்கல்லுரியில் படிக்கும்
போது தான் அறிமுகம் ஏற்பட்டது. இந்து சட்டங்கள் என்றொரு பாடம் இருந்த‌து. அதைப்
போலவே இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றி பல மாயைத்தோற்றங்கள் இருந்த‌ன.
இந்து சமுதாயத்தின் மத்தியில் அறியாமையே இருந்த‌து.இஸ்லாமிய சட்டங்களை படித்த‌
பிறகு தான் அந்த‌ அறியாமை விலகியது.

இஸ்லாம் ஓர் உயர்ந்த‌ வாழ்க்கை முறை என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்து திருமணச்
சட்டங்கள்,இந்து வாரிசுரிமைச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து இஸ்லாமியச் சட்டங்கள் வேறு
படுகின்றன என்பது உண்மையே. ஆனால்,இந்த‌ வேறுபாடுகளின் காரணமாக மட்டுமே இந்து
சட்டங்கள் த‌ரம் உயர்ந்த‌வை என்றோ,இஸ்லாமியச் சட்டங்கள் த‌ரம் குறைந்த‌வை என்றோ
முடிவுக்கு வர முடியாது.

இந்து சட்டங்களை இறைவனே அருளினார் என்று வேத‌ங்களும் உபநிஷ‌த்துக்களும் குறிப்பிடு
வதைப்போல இஸ்லாமியச் சட்டங்களை இறைவன் த‌ம்முடைய தூத‌ர் முகம்மது நபி மூலம்
அருளினான் என்று இஸ்லாமியர் நம்புகிறார்கள்.

இஸ்லாமிய வாழ்க்கை முறையிலும் இஸ்லாமியச் சட்டங்களிலும் பல அம்சங்கள் என்னைக்
கவர்ந்துள்ளன.

ம‌னித‌ உரிமைகளைப் பற்றி இஸ்லாமிய பிரகடனம் என்றொரு பிர‌கடனத்தை 1981 ஆம்
ஆண்டில் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மதத்தில் கட்டாயம் கிடையாது என்பது
முக்கியமான கொள்கை.முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை சமயத்தினர் அவர்
களுடைய மத‌ம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின் பற்றி வாழ உரிமை உண்டு என்று
பிரகடனம் அறிவிக்கிறது. ஒருவருடைய ம‌த‌ நம்பிக்கையில் அவரை யாரும் கட்டாயப்
படுத்த‌வோ,கட்டுப்படுத்த‌வோ கூடாது என்பது திருக்குர் ஆனின் அடிப்படைக் கொள்கை.

பெண்களுக்கும் சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் தோன்றியது இஸ்லாம். பெண்கள்
தங்கள் பெயரில் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமையை
இஸ்லாம் அறிவிக்கிறது.

அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனித‌ர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும்
நிறைந்த‌ குலம் கோத்திரங்களையும்,நாடோடிகளையும் த‌மது த‌னி முயற்சியால்
இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த‌ பல‌ம் பொருந்திய
சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்த‌தோ என்று வரலாற்று ஆசிரியர்
தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார்.

த‌ம்முடைய‌ ய‌ங் இந்தியா ப‌த்திரிகைக‌ளில் முக‌ம்ம‌து ந‌பியின் உய‌ர் ப‌ண்புக‌ளைக் குறித்து
ம‌காத்மா காந்தி எழுதியதைப் பாருங்க‌ள்.

இஸ்லாத்திற்கு அக்கால‌த்திய‌ வாழ்க்கைய‌மைப்பில் உய‌ர்ந்த‌ ஒர் இட‌த்தைப் பெற்றுத் த‌ந்த‌து
வாள் ப‌ல‌ம‌ல்ல‌ என்று முன் எப்போதையும் விட‌ அதிக‌மாக நான் உண‌ர்ந்தேன். ந‌பிக‌ள் நாய‌க‌த்தின்
மாறாத‌ எளிமை,த‌ம்மைப் பெரிதாக‌க் க‌ருதாம‌ல் சாதார‌ண‌மானவ‌ராக‌ ந‌ட‌ந்து கொள்ளும் உயர் ப‌ண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த‌ த‌ன்மை,த‌ம் தோழ‌ர்க‌ள் மீது அவ‌ர்
கொண்டிருந்த‌ ஆழ்ந்த‌ அன்பு,அவ‌ர‌து அஞ்சாமை,இறைவ‌ன் மீதும் த‌ம‌து பிர‌சார‌ப் ப‌ணியிலும்
அவ‌ர் கொண்டிருந்த முழுமையான‌ ந‌ம்பிக்கை ஆகிய‌வை தாம் அவ‌ரது வெற்றிக்குக் காரண‌ங்க‌ள்.
இஸ்லாம் ஒரு போராளிக‌ளின் ம‌த‌ம் என்றொரு தோற்ற‌ம் இருக்கிற‌து.வாள் ப‌ல‌ம் கொண்டே
இஸ்லாம் ப‌ர‌விய‌து என்றும் வாள் ப‌ல‌த்தைக் கொண்டு இஸ்லாமிய‌ர் மற்றவ‌ர்களை அச்சுறுத்து
கிறார்க‌ள் என்றும் ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.

இஸ்லாமிய இய‌க்க‌ம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிற‌கே முன்னேறிய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில்
கொள்ள‌ வேண்டும். அண்ண‌ல் ந‌பிக‌ள் நாயக‌ம் இறைவ‌னின் தூத‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை ந‌பித்துவ‌ம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிற‌து.ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ப‌ணியை இஸ்லாம் அழைப்புப் ப‌ணி என குறிப்பிடுகிற‌து. இந்த‌ அழைப்புப் ப‌ணியை இர‌ண்டு கால‌ க‌ட்ட‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌லாம்.முத‌ல் காலக‌ட்ட‌ம் ம‌க்கா ந‌க‌ரில் ந‌ட‌ந்த‌ ச‌காப்த‌ம்.இது 13 ஆண்டுகள் நீடித்த‌து.இர‌ண்டாவ‌து கால‌ க‌ட்ட‌ம் ம‌த‌னீ ச‌காப்த‌ம்.இது 10 ஆண்டுக‌ள் நீடித்த‌து.

ம‌க்கீ ச‌காப்தத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் மீதும் அவ‌ருடைய‌ அழைப்புப் ப‌ணியின் மீதும்
சொல்லொணாத‌ கொடுமைக‌ளும்,அக்கிர‌ம‌ங்க‌ளும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்பட்ட‌ன‌.அன்றைய‌ அதிகார‌
வ‌ர்க்க‌த்தின‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌த்தை பைத்திய‌க்காரர் என்று ப‌ழித்தார்க‌ள். அவ‌ருடைய‌ பேச்சைக் கேட்க
யாரும் போக‌க் கூடாது என்று த‌டை விதித்தார்க‌ள்.முஸ்லிம்க‌ளைக் க‌ண்ட‌ போது அவ‌ர்க‌ளைத்
திட்டினார்கள்.வ‌சை பாடினார்க‌ள். ஆயினும் இஸ்லாமிய‌ அழைப்பின்பால் ம‌க்க‌ள் க‌வ‌ன‌ம் திரும்பி
ஏராள‌மான‌வ‌ர்கள் திர‌ண்டார்க‌ள். த‌ன்னுடைய‌ இறுதி ஆயுத‌மாக‌ வ‌ன்முறையை அதிகார‌ வ‌ர்க்க‌ம்
ஏவி விட்ட‌து.முஸ்லிம்க‌ள் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் அவ‌ர்க‌ளால் தாங்க‌ முடியாத‌ அள‌விற்குச் சென்று கொண்டிருந்த‌தைப் பார்த்த‌ பிற‌கு,ம‌க்கா ந‌க‌ரிலிருந்து வெளியேறுவ‌து என்று
ந‌பிக‌ள் நாய‌க‌ம் முடிவெடுத்தார்.ம‌க்கீ ச‌காப்த‌ம் ஒரு பெரும் போராட்ட‌ காலமாக‌ இருந்த‌து.பிற‌கு
தொட‌ங்கிய‌தே ம‌த‌னீ ச‌காப்த‌ம்.

த‌ம்மையும் த‌ம்முடைய‌ ம‌த‌த்தையும் த‌ற்காத்துக் கொள்ள‌வே முஸ்லிம்க‌ள் போராட்ட‌க் குண‌த்தை
வள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டியிருந்த‌து.

அர‌சிய‌ல் ம‌ற்றும் காழ்ப்பு உண‌ர்வுக‌ளின் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்திற்கு எதிராக‌ அவ‌தூறு பிர‌ச்சார‌ம்
ந‌டந்த‌து என்ப‌தே உண்மை. பேராசிரிய‌ர் பெவான் என்னும் வ‌ர‌லாற்று நூலாசிரிய‌ர்,முக‌ம்ம‌தைப்
பற்றியும் இஸ்லாம் ப‌ற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வையெல்லாம்
இல‌க்கிய‌ விந்தைக‌ளாகிவிட்ட‌ன என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் ஏக‌த்துவ‌ம்,ம‌றுமை ஆகிய‌ கோட்பாடுக‌ளை வ‌லியுறுத்துகிற‌து. ஒரே இறைவ‌ன் என்ப‌து
மூல‌க்கோட்பாடு.அவ‌னை ஒத்த‌தோ,விஞ்சிய‌தோ ஏதுமில்லை.அவ‌ன் அதிப‌தி. அவ‌னிடம் எந்த‌
குற்ற‌மும்,குறையும் காண‌ முடியாது.அவ‌ன் உட‌ல்க‌ளை உருவாக்கிய‌வ‌ன். ஆன்மாவை
உண்டாக்கிய‌வ‌ன்.அவ‌னே இறுதித் தீர்ப்பு நாளின் அதிப‌தி. இதுவே ஏக‌த்துவ‌ம்.
உங்க‌ளுள் ம‌றைந்திருப்ப‌வையும்,இந்த‌ உல‌கில் உங்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வையும் மறு
உல‌கில் உங்க‌ள் முன் வெட்ட‌ வெளிச்ச‌மாகிவிடும் என்ப‌து மூல‌க்கோட்பாடு. இதுவே ம‌றுமை.
இந்த‌ அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளில் என்ன‌ குற்ற‌த்தைக் காண‌ முடியும்?

எல்லா ம‌த‌ங்களிலும் அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளைச் சிதைப்ப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.கால‌ப்
போக்கில் ப‌ல‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் ம‌லிந்து விடுகின்ற‌ன‌. ம‌த‌ம் என்ப‌து ஒரு போர் வாளாக‌
மாறிவிடுகிற‌து.

இந்து ச‌ம‌ய‌த்திலும்,கிறிஸ்துவ‌ ச‌ம‌ய‌த்திலும்,யூத‌ ச‌ம‌ய‌த்திலும் தீவிர‌வாதிக‌ள் இருப்ப‌தைப்போல்
இஸ்லாத்திலும் தீவிர‌வாதிகள் இருக்கிறார்க‌ள். இந்த‌ தீவிர‌வாதிக‌ளினால்தான் ம‌த‌ங்க‌ளிடையே
ப‌கை வ‌ள‌ர்கிற‌து.இந்த‌த் தீவிர‌வாதிக‌ளின் சொல்லையும் செய‌லையும் கொண்டு ஒரு ம‌த‌த்தை
ம‌திப்பிட‌க்கூடாது.

திருக்குர் ஆனைப் ப‌டிப்ப‌த‌ற்கும்,ந‌பிகள் நாய‌க‌த்தின் வாழ்க்கை வ‌ர‌லாற்றைப் படிப்ப‌த‌ற்கும்
வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும்.திருக்குர் ஆன் ஓத‌ப்ப‌ட்ட‌ கால‌ம் கி.பி.610.
ஓர் எழுத்துக் கூட‌ மாறாம‌ல் எந்த‌ இடைச் செருக‌ல்க‌ளுக்கும் உள்ளாகாம‌ல் ஒரு நூல் உள்ள‌து
என்றால் அது திருக்குர் ஆன் ம‌ட்டுமே என்று ச‌ர் வில்லிய‌ம் மூர் குறிப்பிடுகிறார்.

திருக்குர் ஆனை ஏற்று ந‌பிக‌ள் நாய‌க‌த்தை இறைத்தூத‌ராக‌ப் போற்றும் இஸ்லாமிய‌ ச‌முதாய‌த்தின‌ர்
மற்ற‌ ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் சகோத‌ர‌ர்க‌ள் என்ற உண‌ர்வு ப‌ர‌வ‌ வேண்டும் என்று விழைகிறேன்.


( குட‌வாச‌ல் புதிய‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாவினையொட்டி வெளியிட‌ப்ப‌ட்ட‌ அருள் வ‌ச‌ந்த‌ம் எனும் ம‌ல‌ரிலிருந்து )

க‌ட‌ந்த‌ வார‌ம் துபாய் வ‌ருகை புரிந்த‌ சிங்க‌ப்பூர் இலியாஸ் இந்நூலினை வ‌ழ‌ங்கினார்.

இந்நூலின் சிற‌ப்பு குறித்து ந‌ர்கிஸ் மாத‌ இத‌ழின் கேள்வி ப‌திலில் வெளியாகியுள்ள‌து.

ஏழாம் ஆண்டில் இனிய‌ திசைக‌ள் !




ஏழாம் ஆண்டில் இனிய‌ திசைக‌ள் !

இறைய‌ருளால் உங்க‌ள் இனிய‌ திசைக‌ள் இத‌ழ் ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற‌து. இஸ்லாமிய‌த் த‌மிழ் இத‌ழ்க‌ளிலேயே த‌னித்துவ‌ம் மிக்க‌ இத‌ழாக‌ ச‌முதாய‌ மேம்பாடு ஒன்றினையே குறிக்கோளாக‌க் கொண்ட‌ இத‌ழாக‌ இனிய‌ திசைக‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பி வ‌ருவ‌தை அனைவ‌ரும் உண‌ர்வார்க‌ள்.

ச‌முதாய‌ச் சேவையில் முற்றிலும் த‌ன்னை அர்ப்ப‌ணித்துக் கொண்ட‌ இத‌ழாக‌ வெளிவ‌ந்து கொண்டிருக்கும் இனிய‌ திசைக‌ள் அறிவுஜீவிக‌ளுக்கான‌த‌ல்ல‌, பாம‌ர‌ முஸ்லிம்க‌ளுக்கான‌ தென்ப‌தில் பெருமித‌மும் பேருவ‌கையும் ப‌ர‌வி நிற்கின்ற‌ன‌.

ச‌முதாய‌த்திற்கு அத்தியாவ‌சிய‌ உட‌னடித் தேவைக‌ளாக‌ இருக்கும் க‌ல்வி, வேலைவாய்ப்புச் செய்திக‌ளோடு அர‌சிய‌ல், ஆன்மீக‌ம், இல‌க்கிய‌ம் உள்ளிட்ட‌வ‌ற்றையும் எடுத்துக்கூறி வ‌ழிகாட்டி வ‌ரும் இனிய‌ திசைக‌ள் க‌ட‌ந்த‌ ஆறாண்டுக‌ளாக‌ப் பெரும் ந‌ஷ்ட‌த்தையே அடைந்து வ‌ந்துள்ள‌து. அந்த‌ ந‌ஷ்ட‌த்தைக் கொஞ்ச‌ம் குறைத்துக் கொள்ளும் வ‌கையில் இந்த‌ இத‌ழ் மூல‌ம் த‌னிப்பிர‌தி ரூ.10 ஆண்டுச் ச‌ந்தா ரூ.120 மூன்றாண்டுச் ச‌ந்தா ரூ.350 ஐந்தாண்டுச் ச‌ந்தா ரூ.560 என்ற‌ வ‌கையில் விலையேற்ற‌ம் கொள்கிற‌து.

இனிய‌ திசைக‌ள் இத‌ழை ஆத‌ரித்து வ‌ரும் புர‌வ‌ல‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌ர்க‌ள், சந்தாதார‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ஆதிக்க‌த்தையும் ஊக்க‌த்தையும் தொட‌ர்ந்து பெருக்கித் தந்துத‌வ‌ ந‌ன்றியுண‌ர்வோடு விழைகிறோம். இனிய‌ திசைக‌ள் எட்டுத் திசையெங்கும் ப‌ர‌விட‌, த‌மிழ‌க‌த்துப் ப‌ள்ளிவாச‌ல்க‌ள், க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள், நூல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் உங்க‌ள் நேச‌த்திற்குரிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், அன்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் சென்றுசேர‌ ந‌ல்ம‌ன‌ம் கொண்ட‌ ச‌முதாய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் தாங்க‌ளே ச‌ந்தா செலுத்திச் ச‌முதாய‌ச் சேவையில் த‌ங்க‌ளையும் இணைத்துக் கொள்ள‌ப் பேர‌ன்போடு அழைக்கின்றோம். 5,10,15,20 என்ற‌ க‌ண‌க்கில் ஒருவ‌ரே ச‌ந்தா செலுத்தி, விரும்பும் நிறுவ‌ன‌ங்க‌ள், ம‌ன்ற‌ங்க‌ள், நூல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் முக‌வ‌ரிக‌ளைத் தெரிய‌ப்ப‌டுத்தினால் இனிய‌ திசைக‌ள் ஆங்காங்கே ப‌ர‌வும். எம‌து இத‌ழிய‌ல் சேவையில் இனிதே த‌ங்க‌ள‌து ப‌ங்க‌ளிப்பையும் தந்துத‌வுக‌.

புர‌வ‌ல‌ர்க‌ள், ஆர்வ‌ல‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌க‌ள், வாச‌க‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ஏழாமாண்டின் இனிய‌ தொட‌க்க‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள் ந‌ன்றியொடு.

ஆசிரிய‌ர் குழு

இனிய‌ திசைக‌ள் ஜ‌ன‌வ‌ரி 2009 மாத‌ இத‌ழ் த‌லைய‌ங்க‌த்திலிருந்து

இனிய‌ திசைக‌ள்
27 ந‌ர‌சிம்ம‌புர‌ம்
ம‌யிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 044 24936115

Cancer Update from John Hopkins

AFTER YEARS OF TELLING PEOPLE CHEMOTHERAPY IS THE ONLY WAY TO TRY ('TRY' IS THE KEY WORD) AND ELIMINATE CANCER, JOHN HOPKINS IS FINALLY STARTING TO TELL YOU THERE IS AN ALTERNATIVE WAY





Cancer Update from John Hopkins

1. Every person has cancer cells in the body. These cancer cells do not show up in the standard tests until they have multiplied to a few billion. When doctors tell cancer patients that there are no more cancer cells in their bodies after treatment, it just means the tests are unable to detect the cancer cells because they have not reached the detectable size.

2. Cancer cells occur between 6 to more than 10 times in a person's lifetime

3. When the person's immune system is strong the cancer cells will be destroyed and prevented from multiplying and forming tumors.

4. When a person has cancer it indicates the person has multiple nutritional deficiencies. These could be due to genetic, environmental, food and lifestyle factors.

5. To overcome the multiple nutritional deficiencies, changing diet and including supplements will strengthen the immune system.

6. Chemotherapy involves poisoning the rapidly-growing cancer cells and also destroys rapidly-growing healthy cells in the bone marrow, gastro-intestinal tract etc, and can cause organ damage, like liver, kidneys, heart, lungs etc.

7. Radiation while destroying cancer cells also burns, scars and damages healthy cells, tissues and organs.

8. Initial treatment with chemotherapy and radiation will often reduce tumor size. However prolonged use of chemotherapy and radiation do not result in more tumor destruction.

9 When the body has too much toxic burden from chemotherapy and radiation the immune system is either compromised or destroyed, hence the person can succumb to various kinds of infections and complications.

10. Chemotherapy and radiation can cause cancer cells to mutate and become resistant and difficult to destroy. Surgery can also cause cancer cells to spread to other sites.

11. An effective way to battle cancer is to starve the cancer cells by not feeding it with the foods it needs to multiply.

CANCER CELLS FEED ON:

a. Sugar is a cancer-feeder. By cutting off sugar it cuts off one important food supply to the cancer cells. Sugar substitutes like NutraSweet, Equal,Spoonful, etc are made with Aspartame and it is harmful. A better natural substitute would be Manuka honey or molasses but only in very small amounts. Table salt has a chemical added to make it white in color. Better alternative is Bragg's aminos or sea salt.

b. Milk causes the body to produce mucus, especially in the gastro-intestinal tract. Cancer feeds on mucus. By cutting off milk and substituting with unsweetened soya milk cancer cells are being starved.

c. Cancer cells thrive in an acid environment. A meat-based diet is acidic and it is best to eat fish, and a little chicken rather than beef or pork. Meat also contains livestock antibiotics, growth hormones and parasites, which are all harmful, especially to people with cancer.

d. A diet made of 80% fresh vegetables and juice, whole grains,seeds, nuts and a little fruits help put the body into an alkaline environment. About 20% can be from cooked food including beans. Fresh vegetable juices provide live enzymes that are easily absorbed and reach down to cellular levels within 15 minutes to nourish and enhance growth of healthy cells. To obtain live enzymes for building healthy cells try and Dr ink fresh vegetable juice (most vegetables including bean sprouts)and eat some raw vege tables 2 or 3 times a day. Enzymes are destroye d at t emperatures of 104 degrees F (40 degre es C).


e. Avoid coffee, tea, and chocolate, which have high caffeine.Green tea is a better alternative and has cancer-fighting properties. Water-best to drink purified water, or filtered, to avoid known toxins and heavy metals in tap water. Distilled water is acidic, avoid it.

12. Meat protein is difficult to digest and requires a lot of digestive enzymes. Undigested meat remaining in the intestines become putrified and leads to more toxic buildup.

13. Cancer cell walls have a tough protein covering. By refraining from or eating less meat it frees more enzymes to attack the protein walls of cancer cells and allows the body's killer cells to destroy the cancer cells.

14. Some supplements build up the immune system (IP6, Flor-ssence,Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc.) to enable the body's own killer cells to destroy cancer cells. Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells.

15. Cancer is a disease of the mind, body, and spirit. A proactive and positive spirit will help the cancer warrior be a survivor. Anger, unforgiveness and bitterness put the body into a stressful and acidic environment. Learn to have a loving and forgiving spirit. Learn to relax and enjoy life.

16. Cancer cells cannot thrive in an oxygenated environment. Exercising daily, and deep breathing help to get more oxygen down to the cellular level. Oxygen therapy is another means employed to destroy cancer cells.

(PLEASE FORWARD IT TO PEOPLE YOU CARE ABOUT)

CANCER UPDATE FROM JOHN HOPKINS HOSPITAL , U S - PLEASE READ

1. No plastic containers in micro.

2. No water bottles in freezer.

3. No plastic wrap in microwave.

Johns Hopkins has recently sent this out in its newsletters. This information is being circulated at Walter Reed Army Medical Center as well.

Dioxin chemicals causes cancer, especially breast cancer. Dioxins are highly poisonous to the cells of our bodies.Don't freeze your plastic bottles with water in them as this releases dioxins from the plastic.

Recently, Dr. Edward Fujimoto, Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard. He talked about dioxins and how bad they are for us.. He said that we should not be heating our food in the microwave using plastic containers.

This especially applies to foods that contain fat. He said that the combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body. Instead, he recommends using glass, such as Corning Ware, Pyrex or ceramic containers for heating food. You get the same results, only without the dioxin. So such things as TV dinners, instant ramen and soups, etc., should be removed from the container and heated in something else.

Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc. He reminded us that a while ago some of the fast food restaurants moved away from the foam containers to paper. The dioxin problem is one of the reasons.

Also, he pointed out that plastic wrap, such as Saran, is just as dangerous when placed over foods to be cooked in the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food. Cover food with a paper towel instead.

This is an article that should be sent to anyone important in your life.

Good News for families residing in HARA, Riyadh-Saudi Arabia(Brothers Pass on to others)

Good News for families residing in HARA, Riyadh-Saudi Arabia(Brothers Pass on to others)

BISM ALLAH AL RAHMAN AL RAHEEM,

ASSALAM ALAIKUM TO ALL

Good News for urdu speaking families residing in HARA and adjoining areas.
A short term ( weekend classes) one month Islamic Tarbiyati Course
specifically for Ladies is being conducted in HARA.

The course is completely free (no fees).
Course start date : Thursday, 15th January 2009
Course will be conducted during weekend i.e only on Thursday and Friday.
Timings : After Asr prayer till Maghrib Azaan.

Refreshments (snacks) will be given after each session.

Certificate will be given after the completion of the course.

Valuable Prizes for those who pass with good marks.

Prize distribution on 12-2-2009.
Venue: Dar Al-Nisae building

Beside Masjid Al Kulia

Location : Take right turn from Makkah Polyclinic lane (after Saz
Supermarket)

( Opposite lane to Burjman Supermarket ( Lahori Khabay
Restaurant)

For futher details / information, please contact

"Islamic Propagation Office in Rabwah".

P.O.Box 29465 Riyadh 11457

Phone : 4454900 – 4916065

Mobile : 0508579371

Monday, January 12, 2009

INDIA CLUB

INDIA CLUB

India Club was formally inaugurated on 15th August 1964 (India's Independence Day) on a piece of land gifted by H.H. Sheikh Rashid Bin Sayed Al Maktoum.

India Club - A club that's put behind it many successful years, offering its 6500 members a wide spectrum of sports, entertainment, leisure facilities and superb cuisine.

The Club is a non profit sharing organization run by a Board of Trustee's.

The Club provides its members with top class facilities in the field of Sports, Social Amenities, Entertainment, Recreation and promotion of Business.

45th Anniversary Celebrations

Get Set to join the 45th Anniversary Celebrations of India Club on

Thursday, 22nd January 2009 - 9 : 00 pm onwards

Enjoy an enchanting evening of music and entertainment by Bollywood's versatile playback singers Alka Yagnik and Udit Narayan.

This event will be free of Club Members and their families on presentation of their valid ID cards at the entry gate.



BOARD OF TRUSTEES
Air India
Al Shirawi Trading & Contracting
Amar Traders
Builders Merchants
Dubai Trading Co.
Geebee Trading
Hemchand Brothers
International Traders (M.E.) Ltd.
Jeevan Traders
Jumbo Electronics
K M Brothers
Maghanmal Jethanand
Narain R. Sawlani
Narsingdas Naraindas
P G Trading Co.
Purshottam Kanji Pawani (Late)
Regal Traders
Sudhama Traders
Umrao Singh (Late)
Vasudev Chainani


EXECUTIVE COMMITTEE
Sunil Singh, Chairman
Siddharth Balachandran, Vice- Chairman
Mahendra Pancholia, Ex-Officio Chairman
Mohan Valrani, Advisor
Bharat Chachara, General Manager


BOARD OF DIRECTORS
Sunil Singh
Siddharth Balachandran
Mahendra Pancholia
Mohan Valrani
Deepak Jethwani
Kamlesh Bhatia
Naresh Chainani
Sunil Sawlani
Vikram Shroff
Pratap Rangwani
Sunil Pathak
Dr. Manu Mehta
Ratnakar Shetty
Tasleem Karmali
Panzi Lobo
A. K. Prakashan
Bharat Chachara


MANAGEMENT STAFF
Bharat Chachara, General Manager
Simon Varella, Manager- HR & Administration
Rajsekharan, Asst. Manager - Finance & Logistics
Siddharth Ghatge, Asst. Manager- Sales & Marketing
Arun Chaturvedi, Asst. Manager - I. T.
Komal Kirpalani, Executive Secretary




Tel: + 9714 337 1112
Fax: + 9714 337 8880
P.O. Box: 679
Dubai ( U.A..E)

http://www.indiaclubdubai.com/html/home.asp

Important Hadees

The Holy Prophet (SAW) Said:

1) Four things that make your body sick:
a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people

2) Four things that destroys the body:
a) Worrying
b) Sorrow (Sadness/Grief)
c) Hunger
d) Sleeping late in the night

3) Four things that dry the face & take away its happiness:
a) Lying
b) Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c) Arguing without adequate knowledge & Information.
d) Excessive immorality (doing something wrong without fear).

4) Four things that increases the wetness of face & it happiness:
a) Piety
b) Loyalty
c) Generosity (being kind)
d) To be helpful to others without he/she asking for that.

5) Four things that stop the Rizq (Sustenance) :
a) Sleeping in the morning (from Fajr to sunrise)
b) Not Performing Namaz or Ir-regular in Prayers
c) Laziness / Idleness
d) Treachery / Dishonesty

6) Four things that bring / increase the Rizq:
a) Staying up in the night for prayers.
b) Excessive Repentance
c) Regular Charity
d) Zikr (Remembrance of Allah / God).

The Holy Prophet (SAW), Also said to communicate to others even if you listen One Verse (Ayaah) & this one verse will stand on the Day of Judgment for intercession.

The Holy Prophet (SAW) said, Stop doing everything during the Azaan, even reading the Quran, the person who talks during the Azaan will not be able to say the Kalima E Shahada on his/her death bed....

Please pass this message to Muslims...




**READ THIS DUAA FOR BETTER LIFE**


Allahumma- inni- ala- Zikr-ika -wa Shuk-rika wa husni-Ibaadatik

A very powerful Dua'a has been sent to you. Imagine if 1000 people read it just because of you. Jazakallah. BECAUSE ONLY you will seek goodness.

திப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை

திப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி "துந்தாஜிவாக்'கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறைப்பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொதுஎதிரியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப் படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.

மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.

அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள்மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப்படுகிறார்.

கும்பினி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம்பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பினி ஆட்சி. கல்லாய்ச் சமைந்த துயரம் என 1500 அடி உயர சங்ககிரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விடவேண்டாம்!

25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்..

திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக் கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம் மனைக் காட்டிக் கொடுத்த "வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.

ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.

வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர்.

திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.

ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக் காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.

இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் "தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.

வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.

அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. "இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினை யல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். ""வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப் படுகிறது.
சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர் களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களி லிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டை யின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.

கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர் களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை ""வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.

வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.

-ராஜகிரி கஸ்ஸாலி-

Please Vote for Muslim Brothers in PL and forward to every muslim in this world

From: Ameenudeen
Sent: Monday, 12 January, 2009 2:51:45 PM
Subject: URGENT :: Please Vote for Muslim Brothers in PL and forward to every muslim in this world


Dear Brother in Islam,
Assalamu Alaikkum(var), Yesterday I have seen the support for palestine is 63% and today is 57% and if you see voters statistics every single Isralie supported his communitiy and they are the maximum voted till now 63 k, when a single country and single community can make a difference, we 1 billion popultation can't make a difference?

Please vote immediately and keep on forward this to every single muslim in this world.

Jazakhumullahu Khairan,

S. Ameenudeen

----- Original Message -----
From: Haji Sharif


HURRY UP!!! BEFORE THE TIME PASS we muslim at least could do this???

A vote in CNN asking





From: yonus kafeel
Sent: Sunday, January 11, 2009 8:36 AM

From: :: Ikram NadeeM :: [mailto:ikramnadeem @copatra. com]
Sent: Saturday, January 10, 2009 6:59 PM

HURRY UP!!! BEFORE THE TIME PASS we muslim at least could do this???

A vote in CNN asking

"Do you think israel had a right to attack Gaza ? "

we are now losing on 54% to 46% please vote....and forward the following voting site to maximum number of your Muslim friends & relatives:

http://www.israel- vs-palestine. com


Jaza-k-Allah Khair

Sunday, January 11, 2009

இலவச கல்வி!

இலவச கல்வி!

www.e-learningcenter.com

இந்தத் தளம் கீழ்கண்ட 10 அருமையான கோர்ஸ்களை இலவசமாகச் சொல்லித் தருகிறது. இயன்றவரை அனைத்துச் சகோதரர்களும் பயன்படுத்த முயலுங்கள்.

Elearning Center Demo CurriculumInfo...
Networks (CompTIA A+ Essentials 220-601 - Course 6)Info...
Basics of HTML and XHTML (Web Publishing and Design with HTML 4.01 and XHTML - Course 2)Info...
Start Using JavaScript (JavaScript - Course 1)Info...
Working with Active Directory (Windows Server 2003 - Course 2)Info...
DataSets and XML Data (Visual Basic .NET for XML Web MCSD/MCAD 70-310 - Course 1)Info...
Programming with PHP (PHP and MySQL - Course 3)Info...
Creating a Worksheet (Excel 2007 - Course 2)Info...
Management in Perspective (Fundamentals of Business Management - Course 1)Info...
Communicating (Customer Service - Course 2)Info...
Creating and Communicating Vision (Leadership (Videos) - Course 1)Info...

Do and Dont's for 2009

Do and Dont's for 2009

Health:

1. Drink plenty of water.
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
3. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Make time to practice meditation, yoga, and prayer.
6. Play more games.
7. Read more books than you did in 2008.
8. Sit in silence for at least 10 minutes each day.
9. Sleep for 7 hours.
10. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.

Personality:

11.. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
12. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don't over do. Keep your limits.
14. Don't take yourself so seriously.. No one else does.
15. Don't waste your precious energy on gossip.
16. Dream more while you are awake.
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your resent happiness.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Make peace with your past so it won't spoil the present.
21.. No one is in charge of your happiness except you.
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more.
24. You don't have to win every argument. Agree to disagree.

Society:

25. Call your family often.
26. Each day give something good to others.
27. Forgive everyone for everything.
28. Spend time with people over the age of 70 & under the age of 6.
29. Try to make at least three people smile each day.
30. What other people think of you is none of your business.
31. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.

Life:

32. Do the right thing!
33. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
34. GOD heals everything.
35. However good or bad a situation is, it will change.
36. No matter how you feel, get up, dress up and show up.
37. The best is yet to come.
38. When you awake alive in the morning, thank GOD for it.
39. Your Inner most is always happy. So, be happy.

Last but not the least:
40. Please Forward this to everyone you care about.

எளிய மருத்துவக் குறிப்புகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.


மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்


Source : http://www.darulsafa.com/www/Health/health_tips.htm

Saturday, January 10, 2009

பாலஸ்தீனச் .............

check out these websites on palestine and israel......

http://www.ifamericansknew.org/

http://www.endtheoccupation.org/

http://cnionline.org/

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உரிமையா?

Is Terrorism a Muslims Monopoly?
Dr.Zakir Naik's very informative, educative video with historical evidence in Tamil now available in your favorite www.tamilmuslimtube.

http://www.tamilmuslimtube.com/video/Is-terrorism-Muslims-monopoly-D

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உரிமையா?

Dr.ஜாகிர் நாயக் அவர்களின் சரித்திரப் பூர்வமான ஆதாரங்களுடன் கூடிய சிறந்த வீடியோ சொற்பொழிவு தற்பொழுது தமிழ் மொழிமாற்றத்துடன் உங்களின் விருப்பமான www.tamilmuslimtube.com ல்

http://www.tamilmuslimtube.com/video/Is-terrorism-Muslims-monopoly-D

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம்

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !

ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது

அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !

த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !

அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !

பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !

ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !

கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !

க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !

லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !

அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !

நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !

ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிற‌து !



-

பொற்கிழி க‌விஞ‌ர் மு.ச‌ண்முக‌ம்,
இளையான்குடி

நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை

04564 245988
99763 72229

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

ஆலயத்தைக் காப்பாற்ற
ஆனைப் படைமீது கற்களை வீசிட
அபாபீல் பறவைகளை
அனுப்பி வைத்த அல்லாஹ்வே..!

பாலஸ்தீனத்தின் பாலகர்களும் "அக்ஸா"
ஆலயத்தைக் காப்பாற்ற தானே
இனவெறியன் இஸ்ரேலர் மீது
மன உறுதியுடன் கற்களை வீசியும்;
பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில்
தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே...........!
இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை????????????

தீர்ப்பு நாளின் அதிபதியே..!
தீர்ப்பை இவ்வுலகில் தந்து விட்டாலும்
தீர்ந்து விடாது உனது தண்டனை இஸ்ரேலர் மீது
உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான்,
உன்மீது ஆதரவு வைக்கும் உரிமையில் கேட்கின்றோம்;

கதறும் பாலகர்களின் குரல் கேட்டு
பதறும் எங்கள் வேதனை அறியும் படைத்தோனே.......!
அப்பாவிகளைக் கொல்லும் அ(ந்த)ப் பாவிகளை அழித்து விடு;
எப்போதும் தலைதூக்காமல் இஸ்ரேலர்களை ஒழித்து விடு


-அலறும் பால்ஸ்தீனர்கள் மீது அனுதாபங்களுடன்,
"கவியன்பன்" கலாம், அதிராம்ப்ட்டினம்.

0097150-8351499
shaickkalam@yahoo.com

cheaper Air Arabia fares from chennai

Dear Esteemed clients,



Greetings from Air Arabia …



Air Arabia offers special fares starting from INR6035/-* from Chennai
to Sharjah effective 11Jan to 18Jan'09. other days INR 6300 Please
book early to avail our special offers as limited seats are available.



For any clarifications, please feel free to contact us at the below
mentioned telephone nos.



Thanks and Best Regards

Air Arabia

GSA -Track India Private Limited.
Ground Floor, 7, Ponmari Towers ,
Montieth Lane, Egmore,
Chennai - 600 008
Telephone : +91 044 45508435
Fax : +91 044 45508431

airarabia.com

Pay Less. Fly More

*conditions Apply

Friday, January 9, 2009

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அலுவ‌ல‌க‌த்தில் வெள்ளிக்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக‌ ப‌த்ருதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். இக்கூட்ட‌த்தில் தாய‌க‌த்தில் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுவ‌து குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. தாய‌க‌த்தில் உள்ள‌ ஜ‌மாஅத் ச‌பை நிர்வாகிக‌ள் ஒத்துழைப்புட‌ன் ப‌ல்வேறு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட வேண்டிய‌தன் அவ‌சிய‌ம் குறித்து விள‌க்க‌ப்ப‌ட்ட‌து.

ப‌ர‌ம‌க்குடி கீழ‌முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் கூட்ட‌ம் அமீர‌க‌த்தில் முத‌ன் முறையாக‌ ந‌டைபெற்ற‌து. இக்கூட்ட‌த்தில் ஆர்.முன‌வ‌ர்தீன், ஏ.ச‌த‌க்க‌த்துல்லா, ஏ. ர‌பீக் அஹ‌ம‌து, எஸ். முஹ‌ம்ம‌து யூசுப், எஸ்.அக்ப‌ர் அலி, எம்.ப‌ஜ்ருல் ஹ‌க், ஏ.சைய‌து அப்தாஹிர், எஸ். ச‌பீர் ஹுசைன், பி.ப‌த்ருதீன், எஸ்.பி.சாஹுல் ஹமீது, ச‌ஹாபுதீன் உள்ளிட்ட‌ ப‌ல்ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ஆர்.முனவ‌ர்தீன் கூட்ட‌த்திற்கான‌ ஏற்பாடுக‌ளைச் செய்திருந்தார். அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து கீழ‌முஸ்லிம் ஜமாஅத் ச‌பையின் அங்க‌த்தின‌க‌ள் ஆர். முன‌வ‌ர்தீன் 055 4064883 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.




Thursday, January 8, 2009

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை
மத்திய அரசு உத்தரவு


சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு), பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌..........

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌..........

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌ விரும்புவோர் கீழ்க்க‌ண்ட‌ உம்ரா ப‌யண முக‌வ‌ரை அணுக‌லாம்.

இன்ஷா அல்லாஹ் ர‌பியுல் அவ்வல் முத‌ல் ர‌ம‌ளான் மாத‌ம் இறுதி வ‌ரை ஒவ்வொரு மாத‌மும் உம்ரா செய்வ‌த‌ற்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு டீல‌க்ஸ் ப‌ஸ், உண‌வு வ‌ச‌தியுட‌ன் த‌மிழ் வ‌ழிகாட்டியுட‌ன் பிர‌த்யோக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌ய‌ண‌த்தேதி ஹிஜ்ரி 1430 ர‌பியுல் அவ்வல் பிறை 21, 18.03.2009

மேலும் விப‌ர‌ங்க‌ள் அறிய‌ தொட‌ர்பு கொள்ள‌

டி.எம்.ஐ. அப்துல் ஸ‌லாம் 050 695 3197
டி.ஏ. மிஸ்பாஹுதீன் 050 5152721

தொலைபேசி : 04 2251047 / 04 2260252

அமீர‌க‌த்தில் வாழும் இந்திய‌ர்க‌ளுக்கு 2009 ல் ஹஜ் செய்ய‌ முன்ப‌திவு செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

விருதுநகர், ஜன.8.

இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், காந்தீயமும், நேருவின் பொருளாதாரக் கொள்கைகள்தான் உலக அளவில் நிலைத்து நிற்கக்கூடியவை என்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.


ஸ்ரீவில்லி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலக்கிய வட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக்கழக வேந்தர் தி.கலசலிங்கம் தலைமை தாங்கினார். துணை வேந்தர் டாக்டர் செல்லையாதங்கராசு, டாக்டர் எம்.ஜெயகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேணுகா வரவேற்புரையாற்றினார். சந்தியா நன்றி கூறினார். இந்து லட்சுமி அறிக்கை வாசித்தார். கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் பேசும்போது கூறியதாவது இன்டர்நெட்டில் இந்த தலைப்புக்கு 2 கோடியே 22 லட்சம் அர்த்தமுள்ள சொற்றொடர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் ஞீங்குன்றனர் என்ற புலவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியதை அன்னை இந்திராகாந்தி ரஷியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார். அதையே நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற தனது நூலில் குறிப்பிட்டார். மாணவர்களாகிய ஞிங்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பிச் செல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஞிங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வல்லுநர்களாக மாற முடியும்.

உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை அறிவுக்கூர்மையை பயன்படுத்த நாடுகள் தயாராக உள்ளன. உலகில் உள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் எந்த நாடும் எந்த நாட்டிலும் வாணிபம் செய்யலாம்.

பணத்தை வங்கியில் போடலாம். உங்கள் திறமையை 151 நாடுகளில் காட்டி முன்னேற முடியும். டெக்னாலஜிக்கு எல்லை கிடையாது. இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவிலும், சைனாவிலும் தான் மனித வலம் கொட்டிக்கிடக்கிறது. எனவேதான் இங்கிருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துப்போகின்றன.

1995_ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவானது. இன்டர்நெட் உலகில் வாழ்கிறீர்கள். சந்தையில் எது தேவைப்படுகிறதோ அதை உருவாக்குங்கள். வெளிநாட்டவர் இங்கே முதலீடு செய்கிறார்கள்.

உங்களுக்கு இங்கேயே நிறைய வாய்ப்புள்ளது. இப்போது வந்தது போல் பொருளாதாரப் பாதிப்பு சில துறைகளில் வரலாம். ஐ.டி. போல் நமது நாட்டில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நேருவின் பொருளாதாரக் கொள்கையும், காந்தீயக்கொள்கையும் தான் உலகில் நிலைத்து நிற்கும் சக்தி வாய்ந்தவை. நமது பொருளாதாரம் நல்ல ஸ்திரத்தன்மையோடு விளங்குகிறது. உள்ள இருப்பையும் சேர்த்தால் பல லட்சம் கோடி இருப்பு ஆதாரம் உள்ளது. நமது ரிசர்வ் வங்கி சட்டங்கள் பாதுகாப்பானவை.

இப்போதுதான் இதுபோல் (ஆர்பிஐ) நாமும் செய்யலாமா என்று அமெரிக்கா ஆய்வுசெய்கிறது. மிகப்பெரிய கம்பெனிகளுக்குத்தான் ரிஸ்க் அதிகம். நமது பொருளாதாரம் ஒரு மிக்ஸ்டு எக்கனாமி. இப்போதெல்லாம் எம்.பி.ஏ. வகுப்புகளில் யோகா, பகவத்கீதை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே உலகமயமாதலில் உங்கள் பங்கு இந்த நாட்டிற்கு பயன்படுவதாக இருக்கட்டும் என்றார்.

விழா நிகழ்ச்சிகளை ராஜேஸ்சர்மா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரா.யவனராணி, டாக்டர் சக்திவேல் ராணி செய்திருந்தனர்.

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை

மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் 2522 8025
மாவ‌ட்ட‌ வ‌ருவாய் அதிகாரி 2522 9454
ஆட்சிய‌ரின் நேர்முக‌ உத‌வியாள‌ர் ( பொது ) 2526 8323

வ‌ட்டாட்சிய‌ர்க‌ள்

த‌ண்டையார்பேட்டை 2538 8978
புர‌சைவாக்க‌ம் பெர‌ம்பூர் 2537 5131
எழும்பூர் நுங்க‌ம்பாக்க‌ம் 2836 1890
மாம்ப‌ல‌ம் கிண்டி 2489 164
ம‌யிலாப்பூர் திருவ‌ல்லிக்கேணி 2433 1291


காவ‌ல்துறை த‌லைமை இய‌க்குந‌ர் 2844 7777/2844 7755
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( ச‌ட்ட‌ம் ஒழுங்கு ) 2844 7799
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( நிருவாக‌ம் ) 2844 7705
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( த‌லைமை அலுவ‌ல‌க‌ம் ) 2844 7706

தீய‌விப்புத்துறை இய‌க்குந‌ர் 2855 4156
தீய‌விப்பு க‌ட்டுப்பாட்டு அறை 2855 4176

தீய‌விப்பு நிலைய‌ங்க‌ள்

திருவான்மியூர் 2440 1213
கொருக்குபேட்டை 2554 4662
ஜெ.ஜெ.ந‌க‌ர் 2656 3629
கோய‌ம்பேடு 2479 2610
ஆளுந‌ர் மாளிகை 2235 4835
எழும்பூர் 2575 0633
ம‌ண‌லி 2594 1147
அத்திபட்டு 2795 0080

சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னை முத‌ல்வ‌ர் 2530 5111
இருப்பிட‌ ம‌ருத்துவ‌ அதிகாரி 2530 5555

நூல் அறிமுக‌ம்

நூல் அறிமுக‌ம்

நூல் : இந்தியாவில் இஸ்லாமிய‌ இய‌க்க‌ம்
ஆசிரிய‌ர் : ஷேக் முஹ‌ம்ம‌து கார‌க்குன்னு
ப‌க்க‌ம் : 64
விலை : ரூ. 20
வெளியீடு : இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட்
எண். 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012

www.iftchennai.org

பொங்கல் வாழ்த்து"

பொங்கல் வாழ்த்து"

சோற்றிலே நாம் கை வைத்திட-
சேற்றிலே கால் வைத்து;
ஏற்றமுடன் ஏர் பிடித்து;
ஆற்றலுடன் தான் உழைத்திடும்
போற்றுதலுக்குரிய உழவர்களின்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இல்லத்தில் செல்வம் பொங்க
இனிவரும் காலமெல்லாம்
இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க
சக்கரைப் பொங்கலாய்
எக்கணமும் இன்பமே பொங்கட்டும்....................!!!!!!!!!!!!

கவிதைப் பொங்கல் சமைத்து
"கவியன்பன்" கலாம் தருகின்றேன் வாழ்த்து.

-"kavianban"kalam, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Government of India has an online Grievance forum

Government of India has an online Grievance forum at http://www.pgportal.gov.in

Dont think like """Can you imagine this is happening in INDIA ? ""

I mistale lies with us, the people 75%..That we should agree open heartedly.....

The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.

Many of us say that these things don't work in India .
Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.

So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India .

உண்மையான தேசத் தலைவர்

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.. அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

மனிதர்களே!

இதனால் சகலமானவர்களுக்கும்’. புத்தகத்தின் முன்னுரை…

மனிதர்களே!

இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.
உதிரும் பழமைகள் உதிரட்டும்.
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.

ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.

பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.
துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.

தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள்.
அவசரப்படாதீர்கள்

அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.
இங்கே மலர்களுக்குதான் முதல் மரியாதை.
வேர்கள் வெளிவருவதேயில்லை
தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.
சுறுசுறுப்பாயிருங்கள்.

ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஆக்சிஜன் அதிகம்.

எல்லோரையும் மதியுங்கள்.
சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ -
எவருக்குத் தெரியும்.

உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல -ஊர் பேசட்டும்.
பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது.
இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றி வைத்திருக்கிறது.
மகிழ்ச்சி…மகிழ்ச்சி…மகிழ்ச்சியைத் தவிர இந்த விரிந்த பிரபஞ்சத்தில் வேறில்லை.
துன்பம் என்பது அறியாமை.
துன்பம் என்பது அறிவின்மை.
அறிவில் நிமிருங்கள்.
அன்பில் நெகிழுங்கள்.
உழைப்பில் உயருங்கள்.
பிறகு பாருங்கள்.

இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும்.

- வைரமுத்து

Wednesday, January 7, 2009

நம்ம ஊரு செய்தி மாத இதழ்

நம்ம ஊரு செய்தி மாத இதழ்


http://www.nammaooruseythi.com/

மில்லி கெஜட்

மில்லி கெஜட்

http://epaper.milligazette.com/mg/epapermain.aspx

மில்லி கெஜட்

மில்லி கெஜட்

http://epaper.milligazette.com/mg/epapermain.aspx

வேலைவாய்ப்புத் தளங்கள்

www.monstercom



GULF REGION

Bahrain Jobs
http://www.gulfjobsites.com/jobs/Bahrain/

Gulf Jobs
http://www.gulfjobsites.com/jobs/Gulf/

Iran Jobs
http://www.gulfjobsites.com/jobs/Iran/

Iraq Jobs
http://www.gulfjobsites.com/jobs/Iraq/

Kuwait Jobs
http://www.gulfjobsites.com/jobs/Kuwait/

Oman Jobs
http://www.gulfjobsites.com/jobs/Oman/

Qatar Jobs
http://www.gulfjobsites.com/jobs/Qatar/

Saudi Arabia Jobs
http://www.gulfjobsites.com/jobs/Saudi_Arabia/

Top Companies in the Gulf
http://www.gulfjobsites.com/jobs/Top_Companies/

United Arab Emirates Jobs
http://www.gulfjobsites.com/jobs/United_Arab_Emirates/



CATEGORIES BY PROFESSION

Accounting Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Accounting_and_Finance

Agriculture and Forestry Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Agriculture_and_Forestry_Jobs

Architecture and Civil Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Architecture_and_Civil_Engineering_Jobs

Arts and Entertainment Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Arts_and_Entertainment

Arts Education Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Arts_Education_Jobs

Automotive Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Automotive_Jobs

Aviation and Aerospace Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Aviation_and_Aerospace_Jobs

Biotechnology & Pharmaceuticals Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Biotechnology_and_Pharmaceuticals_Jobs

CAD and CAM Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/CAD_and_CAM_Jobs

Chemical Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Chemical_Engineering_Jobs

Chemistry Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Chemistry_Jobs

Childcare Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Childcare_Jobs

Construction and Maintenance Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Construction_and_Maintenance_Jobs

Disabled Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Disabled_Jobs

Education Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Education

Electronic Commerce Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Electronic_Commerce_Jobs

Electronics and Electrical Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Electronics_and_Electrical_Jobs

Emergency Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Emergency_Services_Jobs

Energy and Environment Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Energy_and_Environment_Jobs

Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Engineering_Jobs

Fashion and Modeling Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Fashion_and_Modelling_Jobs

Financial Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Financial_Services_Jobs

Food and Related Products Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Food_and_Related_Products_Jobs

Food and Restaurant Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Food_and_Restaurant_Jobs

Graphic Design Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Graphic_Design_Jobs

Healthcare Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Healthcare_Jobs

Home Based Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Home_Based_Jobs

Hospitality Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Hospitality_Jobs

Human Resources Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Human_Resources_Jobs

Industrial Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Industrial_Engineering_Jobs

Industrial Goods and Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Industrial_Goods_and_Services_Jobs

Insurance Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Insurance_Jobs

IT Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/IT_Jobs

Jobs for Students
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Jobs_for_Students

Jobs in NGOs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Jobs_in_NGOs

Knowledge Management Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Knowledge_Management_Jobs

Law Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Law_Jobs

Library and Information Science Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Library_and_Information_Science_Jobs

Management Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Management_Jobs

Mapping and GIS Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Mapping_and_GIS_Jobs

Marketing and Advertising Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Marketing_and_Advertising_Jobs

Material Sciences Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Material_Sciences_Jobs

Mechanical Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Mechanical_Engineering_Jobs

Media and Publishing Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Media_and_Publishing_Jobs

Medicine Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Medicine_Jobs

Nonprofit Resources Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Nonprofit_Resources_Jobs

Nursing Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Nursing_Jobs

Oil and Gas Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Oil_and_Gas_Sector

Open Source Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Open_Source_Jobs

Philosophy Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Philosophy_Jobs

Plastics Engineering Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Plastics_Engineering_Jobs

Real Estate Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Real_Estate_Jobs

Referral Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Referral_Services_Jobs

Retail Trade Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Retail_Trade_Jobs

Science Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Science_Jobs

Sports Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Sports_Jobs

Telecommunications Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Telecommunications_Jobs

Translation Services Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Translation_Services_Jobs

Transportation and Logistics Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Transportation_and_Logistics_Jobs

Travel and Tourism Jobs
http://www.gulfjobsites.com/jobs/Profession_Specific/Travel_and_Tourism_Jobs



OTHER IMPORTANT REGIONS

Afghanistan Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Afghanistan

Australia Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Australia

Canada Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Canada

Egypt Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Egypt

Europe Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Europe

Finland Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Finland

India Jobs - VERY LARGE SECTION
http://www.gulfjobsites.com/jobs/World/India

South Africa Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Jobs_in_South_Africa

Jordan Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Jordan

Lebanon Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Lebanon

New Zealand Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/New_Zealand

Pakistan Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Pakistan

Philippines Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Philippines

Syria Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/Syria

United Kingdom Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/United_Kingdom

United States of America Jobs
http://www.gulfjobsites.com/jobs/World/United_States_of_America

World Job Sites
http://www.worldjobsites.org



SOME OTHER USEFUL SECTIONS

Directory of Immigration Consultants
http://www.gulfjobsites.com/jobs/World/Immigration_Consultants

Resume Guidance
http://www.gulfjobsites.com/jobs/Depts/Resume_Guidance/

Resume Writing Services
http://www.gulfjobsites.com/jobs/Depts/Resume_Writing_Services/

Tuesday, January 6, 2009

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு


சென்னை, ஜன.6-

கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன. விரிவுரையாளர்களும், உதவி பேராசிரியர்களும் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என்று பதவி உயர்வு பெறுவார்கள்.

தற்போது விரிவுரையாளர் பணிக்கு எம்.பில். அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பி.எச்டி. முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

யு.ஜி.சி. பரிந்துரை

இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.கே.சதா கமிட்டியின் பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விட கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்று 3 வகையான ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், சதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

பி.எச்டி. கட்டாயம்

இந்த நிலையில், யு.ஜி.சி. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற அடிப்படையில்தான் ஆசிரியர் பணி இடங்கள் இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு கண்டிப்பாக பி.எச்டி. தேவை என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இணை பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் பி.எச்டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதிய நியமனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையே தீர்வு!

ஒற்றுமையே தீர்வு!

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1125&Itemid=52

உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.

கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.

கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.

மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.

அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.

தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.

இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.

இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.

ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.

மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.

எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.

வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!

கல்வி உதவித்தொகை

1.ஐக்கிய பொருளாதரப் பேரவை
அலி டவர்ஸ் 55 கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு சென்னை-6
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

2. இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க்
முஸ்டாக் அஹமது (ஐ.டி..பி)
11 இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை-14
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

3. ஆல் இந்தியா இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
688 அண்ணாசாலை
சென்னை-6

4. பி.எஸ் அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் ஃபவுண்டேஷன்
4 மூர்ஸ் சாலை
சென்னை-6
(ஜகாத் உரியவர்களுக்கு மட்டும்)

5. முகம்மது சதக் அறக்கட்டளை
133 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-34

6. மெஜஸ்டிக் ஃபவுண்டேஷன்
117 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை-2

7. ஆலிம் முகம்மது சாலிஹ் அறக்கட்டளை
நிசாரா பொனன்ஸா எல்.ஐ.சி எதிரில்
அண்ணாசாலை
சென்னை-2

8. செய்யது வெல்ஃபேர் டிரஸ்ட்
சிந்துபூந்துரை
நெல்லை

9. அஸ்மாகாசிம் அறக்கட்டளை
மாண்ட்டியத் சாலை
எக்மோர் சென்னை-8

10. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்ஃபேர் டிரஸ்ட்
டி-பிளாக் 10(23) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை-40

11. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை-3

12. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

27-உட்ஸ் சாலை

சென்னை-2

13. தமிழ்நாடு பைத்துல்மால்
வாலாஜா மசூதி வளாகம்
காயிதே மில்லத் நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி சென்னை-5

14. கீழக்கரை பைத்துல்மால்
கீழக்கரை

15. அடையாறு பைத்துல்மால்
அடையாறு மசூதி எல்.பி ரோடு
சென்னை-41

16. சகோதரத்துவ சமூக நீதிப் பேரவை
ரயிலார் நகர்
மதுரை-18

17. மியாஸி அறக்கட்டளை
புதுக்கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை-14

18. எஸ்.ஐ.இ.டி.
கே.பி தாசன் ரோடு
தேனாம்பேட்டை சென்னை-18

19. எஸ்.அஹமது மீரான்
புரபசனல் கொரியர்ஸ்
மகாராஐh சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டைசென்னை-18

20. மெப்கான்
தபால்பெட்டி எண் 3
திருமங்களம்
மதுரை-625106

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம்.
.
இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது.

பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை பாடியோ அல்லது முனுமுனுத்தோ, அதற்கு நிகரான பாடல்களை தேடலாம். விரும்பிய பாடல்களை தேடிப் பெறும் வசதியைத் தரும் இணைய தளங்கள் அனேகம் இருக்கின்றன.

ஆனால் பாடல்களை பாடிக்காட்டியே தேடக் கூடிய, புதுமையான வசதி தரும் தளம் இது மட்டும்தான். அந்த வகை யில் இந்த தளம் மிகவும் சுவாரசியமானது.
தற்போது அறிமுகமாகும் எந்த தளமும், சமூக பண்பு இல்லாமல் இருப்பதில்லை. அதாவது இணைய வாசிகள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொள்ளும் சேவை யையும் சேர்ந்தே வழங்குகின்றன. இந்த தளமும் இத்தகைய சமூக பண்புடனேயே உதயமாகியிருக்கிறது.

இசைப்பிரியர்கள் இந்த தளத்தின் மூலம் மற்ற இசைப்பிரியர்களை தொடர்பு கொண்டு நண்பர்களாக முடியும். பாடல்களை பாடி காட்டும் போது, அதே பாடலை வேறு யார் பாடியிருக் கிறாரோ, அதனை நாம் கேட்டு மகிழ முடியும். அது பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அவரோடு நட்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிடித்தமான பாடல்களை பாடுவதன் மூலமும், அவற்றை மற்ற வர்கள் பாடிக் காட்ட கேட்டு கருத்து சொல்வதன் மூலமும் இசைப்பிரியர் கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்தமுறை வேறு யாராவது பாடலை பாடி தேடும் போது, நீங்கள் பாடி வைத்திருக்கும் பாடல் அவருக் கான பட்டியலில் முதலிடத்தில் வந்து நிற்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர் அதனை கேட்டு ரசித்து உங்களோடு தொடர்பு கொண்டு, நண்பராகும் வாய்ப்பு உள்ளது.
மற்ற எந்த இசையைச் சேர்ந்த தளங்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம், இந்த தளத்தில் எந்த மொழியிலும் பாடலாம் என்பதே. பெரும்பாலான இசைத் தளங்களில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கிறது. நம்மவர்கள் தமிழ் பாடலை கேட்க விரும்பினால் அந்த தளங்கள் கைகொடுக்காது.

ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை. தமிழிலேயே பாடித் தேடலாம்.
இது போல எந்த உலக மொழியிலும் பாடல்களை பாடலாம். காலப் போக்கில் இந்த தளம் பிரபலமாகி பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறும் போது எல்லா மொழி களிலும் பொருத்தமான பாடல்களை தேடுவது சாத்தியமாகலாம்.

இந்த தளத்தில் தேடுவதோடு, தங்களுக்கான தனி பக்கத்தையும் உருவாக்கி கொண்டு சுருக்கமான சுயசரிதை விவரங்களை வெளியிட்டு, ஒத்த ரசனை உள்ளவர்களை தேடி நட்புறவு கொள்வது மிகவும் சுலபமானது. இத்தோடு பிடித்தமான பாடல்களை இந்த தளத்தின் மூலமே காசு கொடுத்து வாங்கவும் முடியும்.

இசையையும், இசைச்சார்ந்த மனிதர் களையும் தேடுவதை சுலபமாக்கும் சுவாரஸ்யமான தளம் என்று இதனை வர்ணிக்கலாம். இசைப்பிரியர்கள் இந்த தளத்தில் தங்களை மறந்து மூழ்கிக் கிடக்கலாம்.

www.midomi.com

Minambur Foundation

Dear All,

We give free service and coordination for getting admission for the following Institutes.

For MBA in Indian and UK universities minimum qualification must be a graduation. For USA online university, you can apply, if you have experience of two years with a two year diploma of any course.

Please visit the websites and choose a suitable course according to your qualification and requirements.

If you find any difficulty, please feel free to meet me in our office to decide.

1) English language courses in UK for any age group at London Study Center (www.londonstudycentre.co.uk )(British council approved Institute). These are full time courses in London , UK . On admission guidance will be given for visa procedure.

2) International School of Business Studies (www.isbs.org.uk). - Business Studies and Accountancy courses in London , UK for regular students. (British council approved Institute) MBA degree awarded by " Wales University ". These are full time courses in London, UK. On admission, guidance will be given for visa procedure. These courses can be converted part time to find a job after some time. IELTS requirement can be relaxed. Assured admission guaranteed.

3) Banasthali Deemed University, Rajasthan, India, (www.banasthali.org): Self study B.Ed. (One year), M.Ed. (One year), BBA, B.Sc.(Comp.Sci), MBA, etc. distance courses from Banasthali University , (Accredited, Indian Human resources Ministry approved university), for working class.

4) Online courses of Washington American Global University, (private non-accredited, registered university) USA for senior working class.(www.wagu-edu.us) , Any country Embassy attestation can be obtained.

Ashfaq Hussain
Saad Othman Al-Brahim Cont. Est. (Educational services).
Minambur Foundation (Chennai , India ),
14, Hafsa Bint Umar Street , Raudah-I,
P.O.box-100805, Riyadh- 11645.
Phone# 01 4915683, Fax# 01 4931988,
Mobile # 0551986077, Email: ashfaq106@gmail.com

என் செய்வேன்?

என் செய்வேன்?

http://www.muduvaivision.com/data/kavithai.asp?id=8

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை
வேலிகளால் அடைத்து – நாலாபுறமும்
வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால்
வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும்

காளை கரவை மாடுகளை எல்லாம்
கயிறுகளால் கட்டி வைத்து
தார் குச்சிகளால் தினமும்
தீண்டினால் அவை என் செய்யும்

காண்பவர் வாழாவிருப்பாரோ
கண்களை முடிகொள்வாரோ
வாயில்லா ஜீவன் அதை
வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ

மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா
மனித மனம் என்ன
மிருகத்திலும் கொடியதா – அல்லது
மங்கி மழுங்கி விட்டோடா?

பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது
பிழைக்க வந்த வந்தேரிகளால்
ஏ அமெரிக்காவின் கள்ள குழந்தையே
இஸ்ரேல் எனும் ஈனப்பிரவியே

ஏதைக் கண்டுவிட நீ துடிக்கிறாய்
யாரை வெல்வோம் என நினைக்கிறாய்?
மண்ணில் சாய்ந்தவரெல்லாம் மாண்டுவிட்டனரா - இல்லை
மறுமை சோலையின் மலர்களாகி விட்டனர்

வீழாத வல்லரசு உண்டா?
வீண்சுமர் வென்று
வெற்றி வாகை சுஉடிய கொற்றவன் எவனும்
உலகில் உண்டா?

தொடுத்த போர்கள் எல்லாம்
தொடர்வதைத்தானே பார்க்கிறோம்
வியட்நாம் பாடம் தரவில்லையா
வீழவில்லை இன்னும் பாரசீகமும் ஆப்கானும்


உயிர் துறந்த எங்களது உடல் உறுப்பே
உன் உடல் வடிக்கும் குருதியால்
என் இகம் துடிக்கும் செய்தியை
என் இதயம் கேட்கும் கேள்வியை

அது உகுக்கும் கண்ணீரை
எப்படி துடைப்பேன் - இறைவனிடம்
இரு கைகளை ஏந்துவதை தவிர நான்
என் செய்வேன்? என் செய்வேன்?


முதுவை சல்மான் - ரியாத்-அல்ஜிரியா
salmanhind007@yahoo.co.in