Monday, January 5, 2009

அண்ணல் நபிகள் பற்றி அறிஞர் அண்ணா

www.arignaranna.blogspot.com

Rajaghiri Gazzali


"அறிஞர் அண்ணா" என்று அகிலம் போற்றும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சர் ஆவார்.
அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949இல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்து வந்தது.
1957இல் நடைபெற்ற தேர்தலில் கலந்துகொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்ற போது அண்ணாதுரையும் சட்டசபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க.வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969இல் காலமானார். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவுகூரப்படுகிறார்.


அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.


இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.


பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.


இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.


தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.


இருளும் ஒளியும்

இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.


இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.


இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். "அது தவறு" என்பதை எடுத்துரைத்தார்கள்.


மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான். இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, "இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் - முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.


எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல - 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.


"நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?" என்று அவர்கள் கேட்டார்கள்.


அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: "இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு 'ஜமாஅத்' என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய 'ஜமாஅத்'திலே நான் இல்லை".


நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, 'ஜமாஅத்'திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.


எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.


யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.


இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ - அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.


தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.


வடநாட்டிலே இந்து - முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.


நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.


முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார். மிகுந்த நெருக்கடியான - ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.


அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்! ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! "பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது" என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத - விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!


இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.


சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?


நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.
ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் "360 உருவங்களும் ஆண்டவனல்ல" என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.


பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.


நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!


வேண்டாம் அற்புதங்கள்!


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.


யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.


அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.


அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.


இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.


உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!


அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!


எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.


அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!


இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே "இதை நம்பு" என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.


சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.


இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.


சொல்லும் செயலும்!

மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.


யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.


இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.


அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.


இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.


மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.

கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.


நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.


சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.



சமத்துவ மார்க்கம்

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.


இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.


நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.


மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.


மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.


இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ' அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!' என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் 'ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்' என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்' – கடவுளுக்குப் பொதுவாக' என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?


ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.

மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் 'மகான்' என்று சொல்லுகின்றோம்.


ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.


நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம். ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.


இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.


திருத்தொண்டு

கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.


யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.

சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.


எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.


சிறந்த மார்க்கம்

இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.


இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.


நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.


இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.


ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.


கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.


கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.


ஒன்றே குலம், ஒருவனே தேவன்

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.


மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.

மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.


ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.


இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.


ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.


ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.


இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.


இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன். ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.


காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும் அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள். அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல. அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன. இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.


மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.


இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.


மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.


பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.


எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் 'நாஸ்திகர்கள்' என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.


ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

அறப்பணி

என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.


எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.


என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக்கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.


ஏகதெய்வக்கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனேதேவன்" எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும், 1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை – நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால், அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.


இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்! மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!

எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து, நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.


அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன். வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது. அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.


இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும். பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.


பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.


அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
Subscribe to: Posts (Atom)

Aramex has organised a Gaza campaign and you can help them by donating what you can afford.

Aramex has organised a Gaza campaign and you can help them by donating what you can afford.
Below are the collection categories:

- 1st aid kits
- medical supplies
- tents
- blankets
- canned foods (not meat)
- clothes (New or as good as new)
- personal hygiene products

Deadline is on the 11th of January 09.

Certainly, you can drop the packs to the following collection points:

Mall of Emirates
Deira City Center
Sharjah City Center
Ajman City Center

In brief:

Hundreds of Israeli troops are moving deeper into Gaza as the second day of the ground assault gets under way.

International pressure to secure a ceasefire in Gaza is growing as it teeters on the brink of a humanitarian disaster.

Aid agencies have warned that people in the region are facing "grave" shortages of food and water.

Save the Children has warned that basic humanitarian supplies are running out with much of the city left without electricity and water.

The agency called for aid to be let in to the stricken area and said that 50,000 children are already suffering from chronic malnutrition.

More than 2,000 families were displaced prior to the launch of the ground offensive on Saturday with charities expecting the number to increase significantly as fighting escalates.
Please circulate!!! !!!!!!!
Millions of thanks for your help and support..May almighty allah bless you!!

நாடகமே உலகம்

http://jazeela.blogspot.com

நாடகமே உலகம்

ஜெஸிலா | அனுபவம்/ நிகழ்வுகள் | 60 மறுமொழிகள் | #

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

டாக்டர் அமீர்ஜஹான் துபாய் பயணம் - புகைப்படங்கள்










Sunday, January 4, 2009

ஊர்

சமிபத்தில் படித்ததில் இருந்து....... சில....

நபி இப்ராஹிம் அவர்கள் ஈராக் இல் “ஊர்” எனும் இடத்தில் பிறந்து வாழ்ந்து ஆட்சி செய்தார்கள். இது பாரசிகம் எனவும் அழைக்கப்பட்டது. "ஊர்” எனும் சொல் நாம் நினைப்பது போல் திராவிட மொழி சொல் அல்ல. இது ஒரு சுமேரிய மொழிச் சொல் ஆகும்.

மக்கள் நெருக்கமாக விவசாய நாகரிகத்தோடு, வியாபாரமும் செய்த மக்கள் குடியிருந்த இடங்களெல்லாம் “ஊர்” என அழைக்கப்பட்டது.

ஈரானில் நிசாபூர் எனும் ஒரு இடம் இருக்கிறது. இங்கு தான் உலக புகழ் பெற்ற கவிஞர் உமர்கையாம் பிறந்தார்.

ஆப்கனிஸ்தான் இல் உள்ள ஜோபூர்
பங்களாதேஷில் உள்ள தினாஜ்பூர்
இந்தியாவில் மைசூர், பெங்களூர், நாக்பூர், ஜெய்பூர், நாகூர்
துர்கியில் உள்ள ஷோக்பூர்
கம்போடியாவில் ஹங்கூர்
ரஷ்யாவில் பைலூர்
மலேசியாவில் சிலாங்கூர், கோலாலம்பூர்
சிங்கப்பூர்
பாகிஸ்தானில் லாகூர், பாகல்பூர்
இலங்கையில் தோப்பூர், மூதூர், மருதூர், நல்லூர், சம்பூர், நிந்தவூர், கோவிலூர், பச்சனூர், மயிலங்கடலூர், ஏறாவூர், மகிளூர்.

தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்:
வழுத்தூர், கூத்தாநல்லூர், பேகம்பூர், லால்பூர், திருவாங்கூர்,
எழும்பூர், பர்கூர், தானூர், கொடுங்கலூர், கண்ணனூர், திருவிடைமருதூர், வடலூர், ஆரய நல்லூர், கீழூர், சீழசாத்தனூர், மாணிக்கபூர், பெரம்பூர், நெல்லூர், கரூர், மாலையூர், கோயம்புத்தூர், பனையூர், வேலம்புதூர், வண்டியூர், கண்டியூர், மணலூர், செம்பனூர், அரியலூர், காட்டுபுதூர், ஆரூர், புத்தூர், எருக்கூர், நீடூர், ஆலந்தூர், சாத்தூர், சானூர், குன்னூர், அரசூர், மைலாப்பூர், திருப்பூர், கடலூர், முசாபூர், வடலூர், ஆம்பூர்.

உலக நாடுகள் பலவற்றிலும் ஊர் எனும் சொல்லோடு கூடிய பகுதிகள் உள்ளன.

மேலும் எங்கு எல்லாம் “ஊர்” எனும் சொல்லோடு கூடிய “ஊர்” இருக்கிறதோ அங்கு எல்லாம் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருப்பார்கள் என்பது நிஜம்.

Rajaghiri Gazzali

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்


கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர்.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 மற்றும் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஏ.கே.எஸ். ஹிதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் ஏ. ஜரீனா லோட்டஸ், உடற்கல்வி ஆசிரியர் ஐ. பாபு ஆபிரகாம் ஆகியோர் பாராட்டினர்.

மேலும், இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

FAQs on Import of Gold by NRI's

FAQs on Import of Gold by NRI's

http://indiacustoms.blogspot.com/2008/01/import-of-gold-silver.html


Can NRIs bring gold into India?


Yes.
NRIs can bring into India gold upto 10,000 grams as part of their baggage once in
six months provided they have stayed abroad for a continuous period of six months.

In what form can the gold be brought into India?
The gold may be brought into India in any form, including ornaments (other
ornaments studded with stones and pearls).

Are NRIs required to pay customs duty on the gold brought by them into India?
Yes.
They are required to pay customs duty in any convertible foreign currency at a rate equivalent to Rs.220/- per 10 grams of gold. (may change from time to time)

How often can a NRI bring gold into India?
A NRI can bring gold into India once in six months.

Is it necessary that the NRI should have stayed abroad at least for a minimum period of six months prior to his return to India for being eligible to bring gold?
Yes.


Check Gold Prices & Charts in India and Overseas Market


Import of Silver by NRI's
Can NRIs bring silver into India?
Yes. NRIs can bring to India silver upto 100 kilograms as part of their personal baggage.

What is the rate of duty payment on such import?
The rate of duty on import of silver is Rs. 500 per kilogram which is payable in foreign currency. (may change from time to time)

Can NRI's bring both gold and silver?
Yes.

Can NRIs sell gold/silver imported by them to residents?
Yes. Gold/silver so brought by NRIs can be sold to residents against payment in rupees. Reserve Bank has granted general permission to persons resident in India to make payment to NRIs in Indian rupees by means of a crossed cheque in India and that such rupees are credited to Ordinary Non-resident Rupee (NRO) account of the NRI seller.



Rules & Regulations


Jewellery which is in addition to the duty free jewellery otherwise allowed


without payment of duty only is liable to payment of duty

(a) Who can import Gold as Baggage

Any passenger of Indian origin or
Any Passenger holding a valid passport issued under the Passport Act 1967



(b) Eligibility Conditions and Customs Duty

Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger has not availed of the exemption under this scheme at the time of such short visit.




The duty at the rate of Rs. 250 per 10 gm should be paid by the passenger in convertible Foreign currency
The weight of Gold (including ornaments) should not exceed 10 Kg per passenger
The gold is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India
Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.
The passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the Customs bonded warehouse and pay the duty before clearance. Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii)He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the duty before clearance.


Note: The jewellery, which is in addition to the jewellery otherwise allowed without payment of duty, only is liable to payment of duty under the above mentioned scheme for import of gold/silver.


Clearence of Silver on payment of duty


(a) Who can import Silver

Any Passenger of Indian Origin or

Any passenger holding a valid passport issued under the Passport Act 1967.



(b) Eligibility conditions and Customs Duty

Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger.has not availed of the exemption under this scheme at the time of such short visit.

The duty at the rate of Rs. 500 per Kilogram should be paid by the passenger in convertible Foreign currency

The quantity of Silver should not exceed 100 Kilogram per passenger

The Silver is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India

Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.

The passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the Customs bonded warehouse and pay the duty before clearance.Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the duty before clearance.

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

www.muduvaivision.com


ஜன. 3: ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த. குழந்தைசெட்டியார் நினைவு தினவிழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் மை. அப்துல் சலாம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கு.விவேகானந்தன் வரவேற்றார்.

சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை செட்டியாரின் உருவப்படத்தை, உறுப்பினர் எஸ்.கே. பால்ச்சாமி செட்டியார் திறந்துவைத்தார்.

கவிஞர் வேலுச்சாமிதுரை, ஆசிரியர் பாஸ்கரன், கலைச்செல்வன், கரு.நா. விசுவநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

திருச்சி கவிஞர் நந்தலாலா நடுவராகவும் கவிஞர்கள் முத்துநிலவன், மதுக்கூர். ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்.ஆர். வெங்கிடாஜலம் (வணிகர்), டாக்டர் கே. ஜோசப்ராஜன் (மருத்துவர்), புலவர் கு. முனியாண்டி (தமிழ்ப்பணி), சா. கஸ்தூரிபாய் (சமூகப்பணி) ஆர். வாசு (சிறந்த இசைப்பணி), கரு.நா. விசுவநாதன் (சிறந்த நாடகப்பணி).

சிறந்த சமூகப்பணி செய்துவரும் அமைப்பு என்ற முறையில், விபத்து மீட்புச் சங்கத்திற்குரிய விருதை, அச்சங்க இணைச் செயலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உரப்புளி ஜெயராமனுக்கும், 2-வது பரிசை பழ. முருகேசன், செய்யதா தேன்மொழி ஆகியோரும் பெற்றனர்.

சிறப்புப் பரிசாக தமிழரசி உதயக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு, சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

சலீம் கான்-ஐ.நா விருது

இன்றைய மாணவ சமுதாயம் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் 25 வயது சலீம்கான். மனித நேய சேவைக் காக ஐ.நா.சபை இளைஞர்கள் மாநாட்டில் முதல் முறையாக 'யூத் கேம்பைன்' விருதைப் பெற்றார் சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சலீம்கான்.

ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.

சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.

2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.

உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.

ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''

மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.

சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.

பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.

புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''

அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!

Rajaghiri Gazzali

Saturday, January 3, 2009

ரியாத்தில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

Dear All,

We have one Mr. Rajendran from the town of Chinna Salem, in Tamil Nadu, admitted to Shimesy Hospital's, Accident emergency section. He is suffering from High BP and has resulted in total paralysis of his left side. His brother approached Riyadh Indian Association (RIA) for help. Our Humanitarian Committee Convener Mr. Shahjagan from the day, the call was received, is behind this case. We all as Indians, owe Shajagan a lot, in this and many other cases.

Mr. Rajendran was claimed as brain dead by the doctors on arrival and was kept under observation. By god's grace, he reclaimed his consciousness and is now able to move his body and Doctors have advised to sent him to India ASAP for further medical assistance.

Mr. Rajendran has no valid Iqama and his Iqama is not renewed for the last nine years. All these works + his visa transfer from old to new transport, his authorization from Indian Embassy, strecher tickets from Air India are being followed up by our contacts. We are in need of money for all these, in tune of SAR.8000-SAR.10000.

RIA request all of you, who receive this e-mail to help as much possible to this unfortunate fellow countrymen. You can provide your contributions to me, Magesh ( Mob : 050-6634823) or Mr. Sekhar- Rajendran's brother (Mob : 050-9145644).

Rajendran is a make-shift tailor in KSA and has a family of wife and 2 daughters aged 17 and 13 in India.

Please help.

Thanks

Magesh
magesh74p@yahoo.com

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்

க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மானைக் கொண்டு விரைவில் சம‌ உரிமை மாத‌ இத‌ழ் பிப்ர‌வ‌ரி மாத‌ம் முத‌ல் வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ் செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழில் சிறுபான்மையின‌ருக்கு அர‌சு வ‌ழ‌ங்கும் ச‌லுகைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள், சிறுபான்மையின‌ரின் செய்திக‌ள், ச‌மூக‌, க‌ல்வி ம‌ற்றும் பொருளாதார‌ மேம்பாட்டு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ செய்திக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெறும்.

ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழை அனுப்ப‌ த‌மிழ‌க‌மெங்குமுள்ள‌ ஜ‌மாஅத்துக‌ள், முக்கிய‌ப் பிர‌முக‌ர்க‌ள் ம‌ற்றும் பொதுந‌ல‌ அமைப்புக‌ள் குறித்த‌ முக‌வ‌ரி ம‌ற்றும் தொலைபேசி எண்க‌ளை கீழ்க்க‌ண்ட‌ முக‌வ‌ரிக்கு அனுப்பி வைக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 28460127 / 9840040067
மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி :
ithayathulla@gmail.com

Friday, January 2, 2009

உங்களுக்கு விருப்பமா?

உங்களுக்கு விருப்பமா?

Posted By மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி On January 1, 2009 (3:21 pm) In அல்ஹதீஸ்

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஒரு நாளில் நூறு தடவை
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என ரும்புகின்றீர்களா?


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Article taken from இஸ்லாம்கல்வி.காம் - Portal - http://www.islamkalvi.com/portal
URL to article: http://www.islamkalvi.com/portal/?p=1205





--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

To unsubscribe from this group, send email to
tamilmuslimbrothers+unsubscribe@googlegroups.com
-~----------~----~----~----~------~----~------~--~---

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் இளையான்குடி ஜமாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 01.01.2009 வியாழ‌க்கிழ‌மை முஸ்ரிஃப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து.

இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு செல்வ‌ முஹ‌ம்ம‌து த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ மாண‌வ‌ர் ஒருவ‌ர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

செல்வ‌ முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் த‌ன‌து த‌லைமையுரையில் இதுபோன்ற‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள‌ அனைவ‌ரையும் பாராட்டுவ‌தாக‌த் தெரிவித்தார்.
ப‌ரீத் அஹ‌ம‌து வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.இச்சந்திப்பு நிக‌ழ்ச்சியின் நோக்க‌ம் குறித்த‌ அறிமுக‌வுரையினை ஜ‌லால் நிக‌ழ்த்தினார்.

அத‌னைத் தொட‌ர்ந்து க‌லிஃபா செய்ய‌து ஹுசைன் த‌ன‌து வாழ்த்துரையில் முப்ப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் இளையான்குடியில் டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரி துவ‌க்க‌ விழாவில் ப‌ங்கேற்ற‌ க‌ல்வி வ‌ள்ள‌ல் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துல் ர‌ஹ்மான் இத்த‌கைய‌ க‌ல்விப்ப‌ணிக்கு தூண்டுகோலாக‌ இருந்த‌ அனைவ‌ரையும் பாராட்டினார். இளையான்குடி ந‌க‌ரின் பெருமைக‌ளை க‌விதை ந‌டையில் எடுத்திய‌ம்பினார்.

அஹ்ம‌து க‌பீர் த‌ன‌து சிற‌ப்புரையில் இளையான்குடி ந‌க‌ர் குறித்த‌ ம‌ல‌ரும் நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். தொழிற்துறையில் நாம் ஈடுப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். வாழ்விய‌லின் நோக்க‌ங்க‌ளை உண‌ர்ந்து செய‌ல்ப‌ட‌க் கேட்டுக் கொண்டார். க‌ல்விச்சேவையில் இளையான்குடி ப‌ங்க‌ளிப்பை எடுத்துரைத்தார். இளையான்குடியில் 25 க்கும் மேற்ப‌ட்ட‌ க‌விஞ‌ர்க‌ள‌து இல‌க்கிய‌ச் சேவை குறித்து விவ‌ரித்தார். அர‌சிய‌ல், ச‌மூக‌ம், பொதுச்சேவை, ஆராய்ச்சித்துறை, அர‌சுப்ப‌ணி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறைக‌ளிலும் இளையான்குடி ம‌க்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்து விள‌க்கினார். தொட‌ர்ந்து ந‌ம‌தூரின் பெருமையினை நிலைநாட்ட‌ அனைவ‌ரும் த‌ங்க‌ள‌து ஒத்துழைப்பினை ந‌ல்கிட‌ கேட்டுக் கொண்டார்.


ப‌ஷீர் த‌ன‌து உரையில் த‌ற்பொழுதுள்ள‌ தொழில்நுட்ப‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ம‌க்கிடையே த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் எளிதாக‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ணியினை மேற்கொள்ள‌ வேண்டும். ப‌ணிவாய்ப்பு தேடி அமீர‌க‌ம் வ‌ரும் ந‌ம‌தூர் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு உத‌விட‌ முய‌ற்சிக‌ள் செய்ய‌ வேண்டும்.

அத‌னைத் தொட‌ர்ந்து அஷ்ர‌ஃப் அலி, அயூப் அலி, புரோஸ்கான், குத்புதீன், சுக‌ர்னோ, அப்துல் காத‌ர், லியாக்க‌த் அலி, நிஹ்ம‌த்துல்லாஹ், அமானுல்லாஹ், சுல்தான், செய்ய‌து, சாதிக், பாசித்,த‌மீம் அன்சாரி, செய்ய‌து, தாஹிர், சேட், ஹ‌மீதுல்லாஹ், சுல்தான், பைச‌ல், யாச‌ர், காத‌ர் சுல்தான், சுபைர், ப‌ரீத் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர்.

ரோஸ்லான் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார். நிக‌ழ்ச்சியினை சுல்த்தான் தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

இந்நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொள்ள‌ இய‌லாத‌ இளையான்குடி ச‌கோத‌ர‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பெய‌ரினை
050 745 0359 / 055 975 9919 ஆகிய‌ எண்க‌ளில் ப‌திவு செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்




















Civil Site Engineers & Project Engineer required for Dubai projects

For a large project, in Dubai, 3 site engineers are required along with 1 project engineer. Degree or Diploma in civil engineering with relevant experience may apply.
Those with previous experience in UAE building construction industry would get preference.

Those with driving UAE driving licence would be preferred.

Those who have recently lost jobs would be prefefred along with those visit visa.
Send you CVs to Mr. Iqubal Haidar on his email address: equbal@tawazunconstruction.ae

Fax: +971-6-5730037

மஞ்சை மயிலன்

தமிழ் நாட்டின் தொழில் துறைமுகமான கோயம்புத்தூர் அருகில் உள்ள பொள்ளாச்சி என்ற இடத்தில் பிறந்து எல்லா பணிகளிலும் மிகத்தான பணியான 'கல்விப் பணியினை' கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாநிலத்தில் பணியாற்றி இன்றும் மக்கள் மனதில் 'கல்விச் சேவைக்கு ஒரு மனிதனாக' இடம் பெற்றுள்ள மாமனிதர், தமிழாசிரியர், கல்வித் தந்தை மஞ்சை மயிலனின் கவிதை 'எது இனிது' என்ற பாடல் வரிகளை இந்த மடலுடன் இணைத்துள்ளேன். இவரைப் பற்றிய முழு விவரம் மற்றும் இவரது கவிதைகள் அனைத்து தொகை நூல்களையும் பெற, எமது இந்த சேவையின் 'கருப்பொருளாகவும்' மற்றம் ஐயாரின் குடும்பத்தினருமான கிருஷ்ணப் பிரியாவை தொடர்பு கொள்ளவும். (மின்னஞ்சல் – priyarajeswari@gmail.com, அலைபேசி - +91-98809-60332, வலைப்பூ - http://www.drcet.org/board_member.html).

துபாயில் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தின்னின் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" சிறுக‌தை நூல் வெளியீடு

துபாயில் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தின்னின் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" சிறுக‌தை நூல் வெளியீடு

துபாயில் ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சியின் ஆத‌ர‌வுட‌ன் இல‌ங்கையைச் சேர்ந்த‌ க‌விஞ‌ர் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தின்னின் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" என்னும் சிறுக‌தை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.

க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ரின் டாக்ட‌ர் வில்லிய‌ம்ஸ் த‌லைமை தாங்கினார். பாப‌நாச‌ம் அப்துல் ஹ‌மீது முன்னிலை வ‌கித்தார். ந‌ளாயினி ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தீன் குறித்து அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார்.

தீனிசைத் தென்ற‌ல் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் க‌விஞ‌ர‌து இலக்கிய‌ச் சேவை குறித்து பாட‌ல் பாடினார். க‌விஞ‌ர் கிளிய‌னூர் இஸ்ம‌த் சிறுக‌தை நூல் குறித்த‌ விம‌ர்ச‌ன‌ உரை நிக‌ழ்த்தினார்.
க‌விஞ‌ர் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தீன் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" நூலை வெளியிட‌ முத‌ல் பிர‌தியை டாக்ட‌ர் வில்லிய‌ம்ஸ் பெற்றுக் கொண்டார். அத‌னைத் தொட‌ர்ந்து பாப‌நாச‌ம் அப்துல் ஹ‌மீது உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

அமீர‌க‌ த‌மிழ்க் க‌விஞ‌ர்க‌ள் பேர‌வைத் த‌லைவ‌ர் அப்துல் க‌த்தீம், எஸ்.எம். ஃபாரூக், எஃப்.எம். அன்வ‌ர் பாட்சா, தேனிசைச் சுட‌ர் ஏ. அஷ்ர‌ஃப் அலி, தாய்ம‌ண் வாச‌க‌ர் வ‌ட்ட‌ அமைப்பாள‌ர் செ.ரெ.ப‌ட்ட‌ண‌ம் ம‌ணி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சி இய‌க்குந‌ர் க‌லைய‌ன்ப‌ன் நிக‌ழ்ச்சியினைத் தொகுத்து வ‌ழங்கினார். நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌வ‌ர்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.

நிக‌ழ்வில் ப‌ல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.









Wednesday, December 31, 2008

அறிஞர் சித்தி லெப்பை - இலங்கை

அந்த அரபிகள் தங்களது ஈமானுடைய உறுதியினாலும், சுத்த வீரத்தினாலும், மன ஒற்றுமையினாலும், விடா முயற்சியாலும் இவ்வளவு கீர்த்தியும், மேன்மையும், வெற்றியும் பெற்றார்கள். இப்படி இருக்க இக்காலத்தில் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தங்களுடைய முன்னோர்களாகிய அரபிகள் போல மன ஒற்றுமையும், முயற்சியும் இல்லாதிருக்கின்றனர். மற்ற பல சமயத்தினர் எல்லாம் கல்வியிலும், சீர்திருத்தத்திலும், மேற்பட்டு வருதலையும் இவர்கள் நாள்தோறும் கீழ் பட்டு வருதலையும் பார்த்து எவர்களும் மனம் வருத்தம் கொள்ளும் படியாய் இருக்கிறது. ஆகையால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எல்லாரும் ஒரு மனப்பட்டு கல்வி பயிற்சிக்குரிய கருமங்களிலே முயற்சிப்பது கடமையாகிறது.

சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னாள் அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் தமது சக மதத்தவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இது. அந்த வேண்டுகோள் இன்று கூட பொருத்தமுடையதாக காணப்படுகிறது. இடையில் சென்று கழிந்த ஒரு நூற்றாண்டு காலம் அவருடைய வேண்டுகோளின் கனாகனத்தை சற்றும் குறைத்தும் சிதைத்தும் விடவில்லை. காலத்து கேற்றதாக காணப்படும் அதன் துரதிஷ்ட குரல் எம் கவனத்தை ஈர்கின்றது. எனவே இலங்கை முஸ்லிம்கள் தமது முக்கிய தினங்களில் எல்லாம் அவரது அறை கூவலுக்கு செவிமடுத்து அன்னாரது நினைவு மங்காது பேணுதல் முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனும், நல்லாயனும், நல்லாசிரியனுமாகிய அவருக்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். 1838 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பிறந்த சித்தி லெப்பை அவர்கள் 1898 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் தேதி காலமானார்.

இலங்கையின் கலாச்சார வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டை மறுமலர்ச்சி காலம் எனலாம். நீண்ட நெடுங்காலம் நிலை தடுமாறி நினைவிழந்து, செயல் ஊக்கமின்றி கிடந்த பௌத்தர்களும், ஹிந்துக்களும் விழித்து எழுந்து கிழக்குலக அறநெறிகளுக்கும், மேற்குலக நெறி முறைகளுக்கும் சமரசம் காண, நவின அறிவாற்றலுக்கும் பண்டைய ஒழுக்க முறைகளுக்கும் ஒப்புரவு காண முயன்று கொண்டு இருந்தனர். மேற்கு நாட்டவரின் ஆதிக்கத்தில் பேதலித்து நின்றவர்கள் அவ்வாதிகத்தினால் ஏற்பட கூடிய நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்க்க முற்பட்டு இருந்தனர்.

ஆனால் இலங்கை முஸ்லிம்களோ எதிலும் அக்கறையற்று வாளாவிருந்தனர். சக சமுதாயத்தவர்கள் எழுச்சி பெற்று துடிப்புடன் செயற்பட்டமையை அவர்கள் உணரவில்லை. கைத்தொழில் புரட்சியினால் புத்தூக்கம் பெற்ற ஐரோப்பா உலகம் அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விட கங்கணம் கட்டி நின்றமையால் முஸ்லிம் உலகம் வலிமையற்று கிடந்ததென்பதை இலங்கை முஸ்லிம்கள் உணராது வாளாவிருந்தனர். மற்றும் பற்பல சாதியாரும் கல்வியிலும் சீர்திருத்தத்திலும் மேற்பட்டு வர இவர்கள் தமது தந்தை வழி தொழில்களுடன் திருப்தி பட்டு கிணற்று தவளைகளாக வாழ்ந்து வந்தனர். மாற்றத்தை வெறுத்த அவர்கள் "தழுவி நட அன்றேல் அழிந்து போ" என்ற வாழ்கை நியதியை அசட்டை செய்து வந்தனர். "மக்கள் தமது மனதை மாற்றிக்கொள்ள வராதவரை அல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் மாற்றமுண்டு பண்ண மாட்டான்". என்ற இறை வாக்கினை மறந்து இருந்தனர்.

எனவே முஸ்லிம்கள் கல்வித்துறையில் பின்தங்கியும், பொருளாதார துறையில் தேக்க முற்றும், கலாச்சார துறையில் ஒதுங்கியவர்களாக, மார்க்க துறையில் மாற மரபு உடையவர்களாக, ஆய்வு துறையில் ஆர்வங் குன்றியவர்களாக, அரசியல் துறையில் கணக்கு எடுக்க படாமலும் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இந்த பரிதாப நிலையினை சித்தி லெப்பை அவர்கள் தீட்சனியத்துடன் கண்டு மனம் வெதும்பினர். சென்று கழிந்த பல நூற்றாண்டுகளில் ஊக்கமும் உற்சாகமும் குன்றி வாழ்ந்த தமது சக மதத்தவர்கள், எதிர் காலம் பற்றி எவ்வளவு சிரதையுமற்றவர்களாக மாறிவிட்டமை கண்ட அவர் இலங்கை முஸ்லிம்கள் தமது சமுதாயத்தின் பரிதாப நிலைமையை உணர வைத்தால் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கொண்டார். இப்பணியில் தமது சமுதாயத்தின் பிற பெரியார்களின் ஒத்துழைப்பையும் பெறல் அவசியம் என்பதையும் அவர் உணர்ந்தார். இதனை சாதிப்பதற்காக அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். " முஸ்லிம் நேசன்" என்று அந்த இதழுக்கு பெயரிட்டார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் முறையாக வெளிவந்த இப்பத்திரிகையில் ஆசிரியர் வசனமே நாம் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய பகுதி.

இந்த ஆசிரிய வசனத்திலே, சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாக தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் ஆகியன சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் தமது பத்திரிகையில் பிரசுரிக்க தீர்மானித்து இருந்தார். வர்த்தக துறையில் புதிதாக தோன்றி வரும் போட்டியாளர்களை விட்டு தமது சக மதத்தவர்களை எச்சரிக்க முற்பட்டார். தமது வாசகர்களின் மகிழ்ச்சிக்காகவும், முன்னேற்றதிர்க்காகவும் கற்று அறிந்த உலமா பெருமக்களின் கருத்து பெட்டகத்தை திரட்டி தரபோவதாக அறிவித்தார். அரபு கிதாபுகளிலும், ஆங்கில நூல்களிலும் பறந்து செறிந்து இருக்கும் அறிவு செல்வங்களை எல்லாம் தேன் சேர்க்கும் வண்டை போல சேகரித்து தமது வாசகர்களுக்கு வழங்க இருப்பதாக எழுதினார். இவ்வகையாக தமது சக மதத்தவர்களின் மனதிலே அரண்கள் அமைக்க அவர் விரும்பினார். இவையே அவரது திட்டங்களும் லட்சியங்களும் ஆகும்.

சித்தி லெப்பை அவர்கள் எதனையும் துருவி ஆராயும் இயல்பு உடையவராய் விளங்கினார். சட்ட துறையில் மட்டும் அவர் பாண்டித்தியம் பெற்று இருக்கவில்லை. சமகால அரசியல் விவகாரங்களை ஐயந்திரிபற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தை பீடித்த பீடைகள் யாவை என்பதை வெகு நுட்பமாக நாடி பிடித்து சொல்லும் திறமை பெற்று இருந்தார். சர் சயேத் அஹ்மத் கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். ஆறுமுக நாவலரின் சமய, கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிகளும் 1880 இல் கானல். ஒல்கோட் அவர்களை இலங்கையின் பால் ஈர்த்த பௌத்த நடவடிக்கைகளும் அவர்களை பெரிதும் வசிகரித்து இருந்தன. இஸ்லாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களை தேட அவரை தூண்டியது.

ஆகவே அவர் தமது பிரக்கிராசித் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த அந்தஸ்தையும் மகிழ்ச்சியுடன் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக தம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கை மூலமாகவும் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றியும் எழுதிய கட்டுரைகள், முஸ்லிம் பாடசாலைகளின் உபயோகதிற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய பிரசங்கங்கள், கொழும்பிலும் பிற இடங்களிலும் நிறுவிய பாடசாலைகள் ஆகியவற்றினாலும் பெரும் வெற்றி ஈட்டினார்.

தமது கால உலகில், இலங்கை முஸ்லிம்கள் ஆங்கிலத்தை புறக்கணித்தல் தற்கொலைக்கு சமமானது என்பதை சித்தி லெப்பை ஐயம்திரிபற அறிந்து இருந்தார். எனவே இஸ்லாத்தின் மீதுள்ள உவப்புக்கோ, முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கோ பங்கம் ஏற்படாத வகையில் ஆங்கிலம் போதிக்கும் பாடசாலைகளை அமைப்பதற்கான வழி வகைகளை ஆராயலானார்.

1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக அல்-மதரஸதுஸஹிராஹ் என்னும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியாக மலர்ந்தது.

இஸ்லாத்துடன் உள்ளார்ந்த தொடர்பில்லாத போதிலும் மக்கள் மனதிலே வேரூன்றி இரண்டறக் கலந்துவிட்ட பல பழக்க வழக்கங்களைக் கைவிடுமாறு அவர் தமது சக மதத்தவர்களைக் கேட்டுக் கொண்டார். இப்பழக்க வழக்கங்கள் காலத்தையும் நேரத்தையும் செல்வத்தையும் விரயஞ் செய்வனவென்று எடுத்துக் காட்டினார். எனவே ஜனாஸா அடக்கம், சியாரத் செய்தல், தொப்பி அணிதல், நிக்காஹ் சடங்குகள், ஜும்மா பிரசங்கங்கள் என்பனவற்றை ஒட்டிய சம்பிரதாயங்களில் மாற்றங்கள் தேவை எனப் பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய வாழ்கை முறையை திடப்படுதுவதற்கே தரீக்குகள் ஆரம்பிக்கபட்டனவன்றி மக்களுக்கிடையே பகைமையைப் பெருக்குதற்கல்ல என்று வற்புறுத்தி விளக்கினார்.

சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் முஹமதியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இந் நியமனம் கிடைக்கும் வரை சித்தி லெப்பை அவர்களே முஸ்லிம்களின் உத்தியோகச் சார்பற்ற பிரதிநிதியாகத் தமது மக்களின் நலனை முன்னிட்ட விசயங்களில் அவரே அரசாங்க அதிகாரிகளுடன் பரிந்து பேசினார். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார். சமயம் நேர்ந்த போதெல்லாம் இலங்கை முஸ்லிம்களின் சமுதாய ஒருமைப் பாட்டையும், கலாச்சார தனித்துவத்தையும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும் நிலைநாட்டி வந்தார்.

தனது பெரியார்களைக் கனம் பண்ணாத சமுதாயம் பெரியார்கள் தோன்றுவதற்கான அருகதையற்றதாக நாளடைவில் சீரழிந்து விடுமென்பெது நிருபனமான உண்மை. இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் தந்தையும் சமுதாய வழிகாடியுமாகிய சித்தி லெப்பை அவர்களின் பெயர் நிலைத்து நிற்பதற்கும், அவர் மீது நமக்கிருக்கும் மதிப்பை வெளிபடுத்துவதற்க்கும் சிறந்த வழி அன்னார் காட்டிய வழியில் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் அல்லாது அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் பயனிப்போமாக!

இக்கட்டுரை மணி மஞ்சரி 1972 ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டது.

முதல் கிப்லா

GAZA...

இன்று
எமது விழிகள் தாங்கி நிற்கின்ற கண்ணீர்த்துளிகள்!
பதில் காணாமல் போய்விடாது!

உயிரை உருக்கிச் செய்யும்
எங்கள் பிரார்த்தனைகள் - வானை துளைத்துச் சென்று
இஸ்ரேலின் இதயத்தை
கீறாமல் விடாது!

கை ஏந்துங்கள்! கண்ணீர் விடுங்கள்!
இந்த காற்றும் நெருப்பும் - அல்லாஹ்வின் படை!
அவனிடம் மன்றாடுங்கள்!

மலரை முத்தமிடும் வயதில்..
அங்கே குண்டுகளில் தீக்குளிக்கும்
பிஞ்சுகளுக்காக நெஞ்சுருகுங்கள்!

நெஞ்சுக்குள் கல் இருக்கும்
அந்த இஸ்ரேலின் அடிபிரள
அழுது கேளுங்கள்!

எமது முதல் கிப்லாவின் வரலாறு காண இங்கே ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள்

http://jamath- circle..com/ play.php? vid=431

--
-Marikkar-

LIFE WITH THE T.V.

Dear all.

Not everything that comes through TV is bad. However, because the average child between two and 11 years old watches over 27 hours of poorly supervised television per week; because the only thing that kids do more than watch television is sleep, and because most parents are unaware of the indecent liberties that television takes with our children, you must control this 19 inch Shaitan, as a friend of mine calls it.

1) Halal (permissible) and Haram (forbidden) on TV: TV programs include stirring documentaries about history, science, and nature as well as excellent dramatizations of classics. It also includes a lot of Haram in terms of violence, sex, antifamily and anti-Islamic values in cartoons, sitcoms, talk shows and films. It's the job of parents to observe Halal and Haram on TV programs and guide their children. One rule you can use when teaching your kids the right and wrong of television is the following: if it's Haram to do then, it's Haram to watch.

2) TV Rules for Children: A carefully programmed TV can be a beneficial ally! Set clear rules for your children on how much TV they can watch, when they can watch it, and which shows are permitted. Then stick to your policy no matter how many tears and voices protest. You are the boss. You can unplug the television whenever you want to.

3) Don't Just Allow "Watching TV": Allow children to watch a particular program which you have approved, not just "watch TV."

4) No Channel Surfing: Channel surfing usually means watching the worst of the shows which are on at any given moment. More stops at sex and violence scenes.

5) Homework First: Insist that homework and chores be done before TV is turned on. (No this is not considered child abuse, not at least in Illinois where I live.) Only one in ten parents require children to do homework first at this moment.

6) Watch Together: Watch TV with your children. It will be lots of fun. You might have some topics to talk about later. You may share some laughter as well. If you cannot watch with them all the time, at least do it occasionally.

7) Talk to Children about the Programs: Talking to your children about the programs they watched or you watched together will give you an opportunity to debrief them about the rights and wrongs in them.

8) Never Use TV as Babysitter: No matter what, don't just train your little Muslim to become an avid TV watcher by letting TV calm him down when he is crying or when you want to do something else other than attend to the baby. Also make this rule clear to the babysitters you hire as well. If you have no choice but to subject you child to a daycare center, choose one which does not use TV as its control mechanism. Seventy percent of daycare centers use TV during a typical day.

9) A Smaller Screen is Better: A small-sized TV is better than a larger size TV. The larger size encourages worse watching habits.

10) One TV is Better than Two: One TV placed in the living room will help you keep an eye on what is being watched. A TV in your child's bedroom is the worst thing. It is not that you don't trust your children. It is the TV which you don't trust. The average household in America has 2.24 TVs in their homes and 54 percent of kids in America have a TV in their bedrooms.

11) No Cable Channels: With a few exceptions, cable provides more of the bad TV and adult-oriented programming. I was staying at a pious Muslim's home as the TV brought a rush of his kids in the room I was staying in. To my astonishment, they ignored their "uncle's" presence and protest as they intensely watched a hot nude sex scene on some cable channel. Recently in Florida, during the daytime, a cable company showed adult programs.

12) Encourage Commercial-Free Channels: Public Television and other Commercial Free TV have more informative programs. It is estimated that the average child sees 20,000 commercials per year. Unlike adults, who often mute out commercials, or who get up and make a mad dash for the bathroom during the 60 to 180 seconds, children like TV ads. They like to be told what to lobby for...and lobby they do.

13) VCR Gives Parents More Control: VCR gives you control of TV time and programs. Many parents use the VCR more than television programs broadcast scheduled times. Balance your TV consumption with videos of good programming offered by Muslims and non-Muslims. This will be more in your control and will contribute to the learning process of children. Some of the good video programs could be as good as anything on TV. Adam's World for children ages two to nine is one such video series. Tens of thousands of children learn and have fun with Adam and Aneesah.

One day, I noticed Sister Lonnie Ali (Champion Muhammad Ali's wife) had ordered another set of Adam's World. Since I knew they had a complete set of Adam's World, I asked why she was buying another one. She told me that Asad (their son) had watched Adam's World so many times that all the tapes were worn out. She said he must have watched each tape more than 100 times. His game at one point was to say the dialogue before Adam said it.

14) TV Off Days: Some Muslims keep TV off all Ramadan. Every year there is a campaign called TV Turn Off Week, which encourages people to not watch TV for at least a week. You may want to do the same for very personal reasons. Television can affect young children in adverse ways: aggressive behavior, difficulty falling asleep, nightmares and an insatiable appetite for advertised products. If your kids are showing signs of this nature, eliminating TV for a week or so may help.

15) More Family Activities: TV takes away family time. Poorly managed television wastes opportunities for kids to learn how to relate to other people - including their parents and siblings. And relating with their families is a desire of today's youth. In a nationwide, ethnically balanced survey of 750 ten to sixteen-year-olds, "three-quarters said that if they had a choice between watching TV or spending time with their families, they'd opt for family time."

16) Buy a Movie Camera: Yes you read it correctly. Instead of children being subject to TV, give them the tools to control TV. Empower them with technology. Give them a gift of a video camera. Consumer Reports has a lot of recommendations for good camcorders. Let your kids write a script, shoot a video, edit it on their computer, and put it back on VCR or incorporate it in a multimedia production (and send a copy to Sound Vision. That little producer might have more talent than you think.)

17) Plan Your Time: If you develop the habit of developing a personal plan, children are likely to follow you in the considerate use of their time. By developing a plan for using your time, you will learn to place TV time in proper proportion to other things in life which you want to achieve.

18) Start a TV Journal: To make good use of TV programs, ask children to write a report about it. Have them answer questions like: who were the characters? What was the plot? What was good? What was bad? What did the program try to promote? Let them be the critic instead of simply being lost to agenda of television producers.

19) Fight bad TV programs: Always protest wrong types of things inserted by producers in what you and your children watch. If you don't protest and pursue the matter, they will learn that they can get away with this and will do more of it, not less. Call toll-free to record your dislike of a program: 1-800-TV-COUNTS (operated by the Parents' Television Council, a family oriented, non-Muslim group).

20) Stick to Your Guns: Your children will resist all rule-making efforts to limit their TV time and program selection. Discuss your reasoning with them, but stick to your guns. This is a decision about their growing up as Muslims. More than 4,000 studies have proven that the behavior of children is affected by their TV watching habits. You cannot let false images and wrong ideals distort the future of your children. You must help tomorrow's Muslims today by being reasonable, but firm. If you don't control TV, TV will control you, your pocket, your children, and your worldview.

21) Children Follow You: The bottom line principle of parenting is that children follow you. If you are a couch potato, and fail to practice what you preach, don't expect your rules to have any value. Watch what you are watching if you want anyone to follow your rules about TV. Whether you give prime time to your family or to TV will determine the future direction of your life and your children's life.

"O ye who believe! Why do you preach something you are not practicing? It is of most distasteful in the sight of Allah that ye say that which ye do not" (Quran: 61:2-3).

By: Abdul Malik Mujahid
Source: soundvision.com





 Best Regards.
Mohd.sheriff
IIS.RIYADH.
0509195698

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை
வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

அன்பு மானிடா!

அன்பு மானிடா!

www.muduvaivision.com


ஆறு பத்தாண்டுகள் அற்ப வாழ்க்கை
அந்த வாழ்விலே ஆறு பருவம்
அழகிய குழந்தை ஒன்று
ஆசை மழலை இரண்டு
அன்புச் சிறுவர் மூன்று

வன்மிகு வாலிபம் நாலு
பன்மிகு வயோதிகம் ஐந்து
முற்றும் கடந்த முதுமை ஆறு
முதல் நான்கு அறியாமல் கடந்துவிடும்

ஆறாம் பருவமதில் குழந்தை மனது திரும்பிவிடும்
இடையிருக்கும் இருபருவமதில் நீ
இணையற்ற வாழ்வு வாழவா?
அற்பத்திலும் அற்ப உலகில்

அற்புதமான வாழ்வைத்தேடி
அலைதிரயும் அன்பு மானிடா
அமைதியான வாழ்வு அமைதியானப் பொழுது
அமைதியான உறக்கம் - இவை

அத்துனையும் கானல் நீர்தானடா உனக்கு
வாழ்பவனை கண்டதுண்டா நீ
வாழ்ந்தவனை கேட்டதுண்டா
மறை அளித்த இறைவன் சொல்போன்று

மண்ணான இவ்வுலகம் - அளவு கடந்து
எழும்பி பறக்க இயலாத
எளிய கொசுப்பரவையின் சிறு
இறக்கைக்கு சமமா னதுதானடா

இரவில் வீழ்கிறோம் மஞ்சத்தில்
எழுந்து பறக்கிறோம் புலர்பொழுதில்
எழுந்தமர்ந்த நேரமதை எண்ணினால்
இத்துணை நாழி உறங்கியதை அறிகிறோம்

மஞ்சத்தில் சாய்ந்ததை அறிகிறோம்
மறுகணமே உறக்கத்தை ஏற்றோம்
மறுநாளே நினைவுற்று எழுந்தோம்
இடைப்பட்ட நேரத்தில் எங்கேயடா சென்றோம்?

இழந்த நினைவு திரும்பாமல்
இறப்பெஇதோர் எத்தனை பேர்
இறப்புக்கு சமமான சிறுமரனம்தானே
இந்த உறக்கம் உனக்கு

இகம் கடந்த உறக்கம் இதில்
எவ்வகை தேவையும் உனக்கு
இருக்கவே இல்லையே
நித்திரை கடந்து நீ

நெடு நிலம் பார்க்கையில்
தேவைகளில் உனக்கு
இல்லாதது இல்லையே
அற்ப மானிடா அதற்காக உனை

உறங்கியே இருக்க சொல்வேனா?
உறக்கத்தில் ஆசை கொள்
உறக்கத்திலேயே இருவகை உண்டு
உறக்கத்தில் ஆசை கொள்

நன்றல்லா நினைவு தரும்
நல்ல தூக்கமும் நலம் தராது மெய்க்கு
நாளெல்லாம் நலம் தரும்
நல் உறக்கத்தில் ஆசைகொள்

நல்ல உறக்கத்திலும் நல்லது
நன்றானது அறிவிக்கவா உனக்கு
நிரந்தர தூக்கமான மரணம்தானது!
நித்தம் வரும் உறக்கம்

விடியல் கண்டால் விலகிவிடும்
நிரந்தர தூக்கத்தின் விடியல் மறுமை
நன்மனதுடன் உறக்கம் நர்தூக்கம்
நன்மனதுடன் உறக்கம் நல்விடியல்

அன்றாட உறக்கத்தில் நலம் தேடும் நீ
அந்திம கால உறக்கத்தை நலமாக்கு
இன்னுமா விளங்கவில்லை
இந்த உலக வாழ்வே

இறப்பதற்கான தயாரிப்புதானடா
இறந்தவனைப் பார்த்தாயா?
இனிய நறுமண மலரில் துயில்கிறான்
இறந்தவன் பிறவிப் பலனை அடைந்துவிட்டானடா

மதிகெட்ட மானிடா மரணத்தை ஆசைகொள்
மண்ணுலக வாழ்வின் அர்த்தம் புரியும்
வாழ்வையும் மரணம் அதையும்
யாசிக்காதே நேசி.

முதுவை சல்மான், ரியாத்
salmanhind007@yahoo.co.in

அமீர‌க‌ இந்திய‌ பிரெட‌ர்னிடி ஃபார‌ம் ந‌ட‌த்தும் க‌ட்டுரைப் போட்டி

அமீர‌க‌ இந்திய‌ பிரெட‌ர்னிடி ஃபார‌ம் ந‌ட‌த்தும் க‌ட்டுரைப் போட்டி

அமீர‌க‌ இந்திய‌ பிரெட‌ர்னிடி ஃபார‌ம் அமீர‌க‌ வாழ் இந்திய‌ர்க‌ளுக்காக‌ 'இந்தியா அடுத்‌து' ( INDIA NEXT ) எனும் த‌லைப்பிலான‌ க‌ட்டுரைப் போட்டியொன்றினை அறிவித்துள்ள‌து. இக்க‌ட்டுரைப் போட்டியில் அமீர‌க‌ வாழ் இந்திய‌ர் அனைவ‌ரும் ப‌ங்கேற்க‌லாம்.

க‌ட்டுரையினை ஆங்கில‌ம், உர்தூ, ஹிந்தி, த‌மிழ், ம‌லையாள‌ம் ம‌ற்றும் க‌ன்ன‌ட‌ம் ஆகிய‌ மொழிக‌ளில் எழுத‌லாம்.

இப்போட்டி இரு பிரிவுக‌ளாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. ப‌தினெட்டு வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌ ப‌ள்ளி மாணாக்க‌ர்க‌ள் ஒரு பிரிவாக‌வும், ப‌தினெட்டு வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ள் ம‌ற்றொரு பிரிவாக‌வும் க‌ண‌க்கில் கொள்ள‌ப்ப‌டுவ‌ர்.

'இந்தியா அடுத்து' எனும் க‌ருப்பொருளை மைய‌மாக‌க் கொண்ட இக்க‌ட்டுரைப்போட்டி இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் நேற்று, இன்று,நாளை,தேசிய‌ம், ச‌மூக‌நீதி, சிறுபான்மை ம‌ற்றும் பெரும்பான்மையின‌ர், அர‌சிய‌ல், பொருளாதார‌ம் ம‌ற்றும் க‌ல்வி உரிமை, தேசிய‌ பாதுகாப்பு, சுத‌ந்திர‌ம், ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் உள்ளிட்ட‌வைக‌ளைக் கொண்டு 2000 வார்த்தைக‌ளுக்கு மிகாம‌ல் இருத்த‌ல் வேண்டும்.

இக்க‌ட்டுரைப் போட்டி கோழிக்கோடில் பிப்ர‌வ‌ரி 13 முத‌ல் 15 வ‌ரை ந‌டைபெற‌ இருக்கும் பாப்புல‌ர் பிர‌ண்ட்டின் தேசிய‌ அர‌சிய‌ல் மாநாட்டினையொட்டி ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

க‌ட்டுரைக‌ளை அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி
மின்ன‌ஞ்ச‌ல் : eiffcontest@gmail.com
தொலைந‌க‌ல் : 06 5345654
EMIRATES INDIA FRATERNITY FORUM
P O BOX NO. 3782
SHARJAH - UAE


மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ 050 966 2345
க‌டைசி தேதி : 31 ஜ‌ன‌வ‌ரி 2009

secretary

we need an efficient secretary for my professor friend of mine -- a saudi to recieve and take care of all travels and stay in india from feb 3 - 14 My fiend is comming for recruitment of prof and scientists


1 we need really smart person -- only male
2 good in English and in communication


compensation will be very good

if he is smart we can absorb him in ksu for 4k - 6k pm

any body with skills in PRO and also nimble footed

pl call 0505142074





we have opening for a variety of REAL talents as
PROF ASST PROF
computer software eng
business adm

it is a pity we dont get rt persons





PAY VERY high for rt person

rgds vm


Life is to cherish and ennoble

Dr V Masilamani
Prof. Laser Group, King Saud Univ Riyadh, KSA
off ph:00 966 1 4676624/6611 res ph 2802332
masilamaniv@yahoo.com

WAR ON GAZA

http://muqith.blogspot.com/



WAR ON GAZA

What Muslims Can Do….



1. Muslims must offer special Salah and special Dua seeking help and blessings of Allah in times when other Muslim men, women and children are the target of oppression.



The following authentic supplications are recommended:

اللّهمّ إنّا نجعلك في نحورهم ونعوذبك من شرورهم

‘O Allah, We ask You to restrain them by their necks and we seek refuge in You from their evil’.



اللّهمّ منزل الكتاب, سريع الحساب, اهزم الأحزاب, اللّهمّ اهزمهم وزلزلهم

‘O Allah, Revealer of the Book, Swift to account, Defeat the groups (of disbelievers), O Allah, defeat them and shake them.’



حسبنا الله ونعم الوكيل

‘Allah is sufficient for us, the Best of those on whom to depend’.



2. Stage legal and peaceful demonstrations wherever possible.



3. Involve school and college students and form human chain to register peaceful protest against the Zionist terrorism.



4. Write letters to the editors expressing anguish and mobilising public opinion against the brutal attacks.



5. Participate in the opinion poll conducted by various agencies and vote against the perpetrators of crime against humanity.



6. Muslims in different countries must form delegations comprising of right thinking people and submit a draft memorandum to the presidents and prime ministers of their countries to pressurise the Zionist regime to stop the aggression.



7. Muslim writers, teachers, media personnel, imams of masajid should explain to the people the historical background of Palestine struggle and the illegal occupation of the Jewish people in the blessed land of Palestine.



8. Contributions in form of money and medical aid must be mobilised and ensured that it reaches the victims of the most inhuman nation on earth!



9. It is unfortunate that the Arab world is not united in times of distress. Lips service must go and the Arab world must stand united in defeating the evil nexus of terror and tyranny.



10. Self-respecting nations must prevail upon the Egyptian government to open the Rafah border to help ease the tension.


muqith_ali@yahoo.co.in

WAR ON GAZA

http://muqith.blogspot.com/



WAR ON GAZA

What Muslims Can Do….



1. Muslims must offer special Salah and special Dua seeking help and blessings of Allah in times when other Muslim men, women and children are the target of oppression.



The following authentic supplications are recommended:

اللّهمّ إنّا نجعلك في نحورهم ونعوذبك من شرورهم

‘O Allah, We ask You to restrain them by their necks and we seek refuge in You from their evil’.



اللّهمّ منزل الكتاب, سريع الحساب, اهزم الأحزاب, اللّهمّ اهزمهم وزلزلهم

‘O Allah, Revealer of the Book, Swift to account, Defeat the groups (of disbelievers), O Allah, defeat them and shake them.’



حسبنا الله ونعم الوكيل

‘Allah is sufficient for us, the Best of those on whom to depend’.



2. Stage legal and peaceful demonstrations wherever possible.



3. Involve school and college students and form human chain to register peaceful protest against the Zionist terrorism.



4. Write letters to the editors expressing anguish and mobilising public opinion against the brutal attacks.



5. Participate in the opinion poll conducted by various agencies and vote against the perpetrators of crime against humanity.



6. Muslims in different countries must form delegations comprising of right thinking people and submit a draft memorandum to the presidents and prime ministers of their countries to pressurise the Zionist regime to stop the aggression.



7. Muslim writers, teachers, media personnel, imams of masajid should explain to the people the historical background of Palestine struggle and the illegal occupation of the Jewish people in the blessed land of Palestine.



8. Contributions in form of money and medical aid must be mobilised and ensured that it reaches the victims of the most inhuman nation on earth!



9. It is unfortunate that the Arab world is not united in times of distress. Lips service must go and the Arab world must stand united in defeating the evil nexus of terror and tyranny.



10. Self-respecting nations must prevail upon the Egyptian government to open the Rafah border to help ease the tension.


muqith_ali@yahoo.co.in

Tuesday, December 30, 2008

Family accommodation available

Family accommodation (shared) available in Al Buteena, Sharjah.

Family accommodation available near Hamriya Park, Dubai.

Contact No.: 050-5486909

mdismailb@yahoo.com

புதிய பூமி

புதிய பூமி

கலகம் இல்லா
உலகம் காண்போம்;
"ஒன்றே குலம்-ஒருவனே தேவன்"
நன்றாய் மனம், மொழி,மெய்யால்
நடாத்தி காட்டுவோம்;
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
படைத்தவன் ஒருவனுக்கே
பயந்து விட்டால்....
படைப்பினம் யாவும்
வசமாகும் நம்மிடம்!!!
சமத்துவம் என்னும்
மரத்தினை வேரறுக்கும்
"சுயநல"க் கோடாரியைத்
தொட வேண்டா.
இவையெல்லாம்
இன்றே நடந்து விட்டால்.....
ஆதாம் ஏவாள்
ஆனந்தமாய் உலா வந்த
சுவனத்து சுகம்போல்
அமைதி பூங்காவாய்
அகிலமே மாறிவிடும்

-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

பாலஸ்தீன பாலகனே

பாலஸ்தீன பாலகனே

நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால்

நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை

நெஞ்சில் சுமக்கிறாய்.

நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து



எத்துனை வேதனை நீ ஏற்றாயோ

என்னாள் குமுற இயலவில்லை

உன் நெந்சம் துளைத்த ரவைகள்

எம் இதயமும் தொலைத்ததடா



காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்

காலம் உனக்கு விடை தந்து விட்டது

காயம் உனது ஆறி விட்டது

இதயமோ எமது?



படை பட்டாளங்களுக்கு முன்னால்

பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும்

கற்கள் எம்மாத்திரம் என நினைத்திருந்தேன்

கண்டு கொண்டு விட்டேன் உண்மையை



ஷைத்தானை கல்லால்தான் அடிக்க வேண்டும்

சுவனத்தின் சொந்தகாரனே

ஷஹிதாகி சாய்ந்தவனே

சின்னஞ்சிறு பாலகனே



உன் மரண செய்தி கேட்டு

அன்னை உனது இங்கு

இன்னும் இருந்திருந்தால்

எப்படி துடித்திருப்பாளோ



இன்னும் அதிகமாய் இந்த

இஸ்லாம் சமுதாயம் துடிக்கிறது

இம்மை துறந்த இலவளே

என்றாவது சந்திப்போம்

இல்லை, இல்லை

சுவனத்தில் சந்திப்போம்



முதுவை சல்மான், ரியாத்