Sunday, January 27, 2008

பிரியாணிக்கு அப்பு ..............

அமீரகத்தின் முதல் தமிழ் வானொலி ( ? ) என முழங்கிக் கொண்டிருக்கும் சக்தி எஃப்.எம். தனது விளம்பரத்தில் பிரியாணிக்கு அப்பு .......... என சமீபகாலமாக முழங்கி வருவது அமீரக தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கலாம்.

பிரியாணி என்றதும் அனைவருக்கும் ருசித்துப் பார்க்க வேண்டும் என்பது இயற்கை தானே. ஞாயிற்றுக்கிழமை 27.01.2008 அன்று இரவு உணவுக்காக சென்றேன். அன்பான உபசரிப்பு. ஆனால் பிரியாணி எதிர்பார்த்த சுவை கிடைக்கவில்லை.

ஏதோ லெமன் சாதம் சாப்பிட்டது போல் இருந்தது. பிரியாணி எப்படி என கருத்து கேட்டனர். சிறிது காரம் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தேன். இதையே பலரும் கூறி வருவதாக தெரிவித்தனர்.

ஆரம்பித்து மூன்று மாதம் ஆனதாக தெரிவித்தனர். விரைவில் சுவையில் மாற்றம் இருக்கும் என தெரிவித்தனர்.

செட்டிநாட்டு இல்லம் போன்று மதுரை அப்பு உணவகம் அமைக்கப்பட்டிருந்தது.