Showing posts with label டிப்ஸ். Show all posts
Showing posts with label டிப்ஸ். Show all posts

Wednesday, September 15, 2010

சில பயனுள்ள டிப்ஸ்கள்......................

சில பயனுள்ள டிப்ஸ்கள்......................




தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும்
அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்
தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்

இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும்


கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு
அரைத்தால் ருசியாக இருக்கும்.

பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்

ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல்
குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்

நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி
பளிச்சென்று இருக்கும்

மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள்.நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

Sunday, February 22, 2009

பெற்றோருக்கான டிப்ஸ்...

பெற்றோருக்கான டிப்ஸ்... தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.

கலை, ஓவியம், விளையாட்டு போன்ற வற்றில் உங்கள் பிள் ளையின் கவனம் சிதறலாம். நீங்கள் தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும்.வழக்கத்தை விட அதிக, "ஸ்ட்ரெய்ன்' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவர்.

எனவே, சத்தான உணவையே கொடுங்கள். முக்கியமாக, நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள்(வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தரவல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட் டால், "இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே' என்று புலம்ப வேண்டாம். "முதல்ல ரெஸ்ட் எடு; உடம்பு சரியான பிறகு படிச்சுக் கலாம்' என்று சொல்லுங்கள்.படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட் கார்ந்து கொண்டு, "அதை முடிச்சிட்டியா? இது தானே படிக்கிற?' என்றெல்லாம் கேட்ப தை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ, புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு, "கம்பெனி' கொடுப்பது அதிக பலன் தரும்.நீங்களும், வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும், நம்பிக்கை வார்த்தைகளும் தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும். எனவே, கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர் களை உற்சாகப் படுத்துங்கள்.

Sunday, February 8, 2009

Google தேடல் டிப்ஸ்

Google தேடல் டிப்ஸ்

மேற்கோள் குறிகள் இரண்டாக அமையட்டும்: எப்போதும் நீங்கள் தேடும் சொற்கள் அல்லது சொல் தொகுதி கொண்ட இணைய தளம் வேண்டுமென்றால் அவற்றை இரு மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கவும். எடுத்துக் காட்டாக women who love rosesஎன்ற சொல் தொகுதி கொண்ட தளம் தேவைப்படுகையில் மேற்கோள் குறி இல்லாமல் தேடிய போது 3,46,00,000 என்ற எண்ணிக்கையில் தளங்கள் இருப்பதாகக் காட்டியது. இவற்றில் பெரும்பாலானவை நாம் தேடும் தளங்களுக்குச் சம்பந்தமில்லாதவையாக இருக்கலாம். இதனையே ""women who love roses'' என டைப் செய்து தேடிய போது தளங்கள் 45,500 என்று காட்டப்பட்டது. மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கப்படுகையில் மிகச் சரியாக நாம் எந்த வரிசையில் சொற்களை அமைத்திருக்கிறோமோ அந்த வரிசையில் சொல் தொகுதிகள் இருந்தால் மட்டுமே தளங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தரப்படுகின்றன.

1. சிறிய நட்சத்திரக் குறியீடு (*) : ஆங்கிலத்தில் wildcard என்று கூறப்படுவதனைக் குறிக்க சிறிய நட்சத்திரக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறோம். இதனை உங்கள் தேடுதல் பணியிலும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சொல்லினை அடுத்து எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்று அமைக்க இந்த குறியீட்டினை அமைத்துத் தேடலாம். குறிப்பிட்ட சொல் தொகுதியில் ஒரே ஒரு சொல்லை மறந்துவிட்டு அதனைத் தேட முயற்சிக்கையில் இந்த வகை குறியீட்டுடனான தேடல் கை கொடுக்கிறது. எடுத்துக் காட்டாக காவிரியின் குறுக்கே உள்ள பாலம் என்பதனைக் குறிக்க "the bridge on the river cauvery'' என அமைக்கலாம். ஆனால் காவேரி என்பது மறந்துவிட்டால் the bridge on the river XXஎன அமைக்க முடியாது. அது தவறான தகவலையே தரும். இங்கே the bridge on the river * என அமைத்தால் காவேரி குறுக்கே உள்ள பாலங்கள் குறித்த தகவல் கிடைக்கும். இரண்டு சொற்கள் இருக்கலாம் என தேட விரும்பினால் "the bridge on the river ** ”என அமைக்கவும்.

2.குறிப்பிட்ட தளத்தில் மட்டும்: இணையத்தில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நீங்கள் தேடும் தகவல் உள்ளது. ஆனால் அது எங்கே தரப்பட்டுள்ளது என்று நினைவில் இல்லை. அந்த தளத்தில் மட்டும் தேட விரும்பினால் "site:" என்று கொடுத்துத் தேடலாம். எடுத்துக் காட்டாக தமிழ் நாடு அரசின் இணைய தளமான www.tn.nic.in என்ற இணைய தளத்தில் மட்டும் ஞிச்ததிஞுணூதூ என்ற சொல் உள்ள இடங்களைப் பார்க்க விரும்பினால் "cauvery" site:www.tn.nic.in என டைப் செய்து கொடுத்து சரியான முடிவுகளைப் பெறலாம். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் தேடும் தகவல் இருப்பது நன்றாக உங்களுக்குத் தெரியும். எனவே இந்த தளம் இல்லாமல் மற்ற தளங்களில் தேடித் தகவல்களை அறிய வேண்டும் என்றால் ஒரு கழித்தல் () அடையாளத்தை இங்கு ண்டிtஞு: ஆப்பரேட்டருக்கு முன்னால் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக காவேரி குறித்து தமிழ்நாடு அரசு தளம் தவிர மற்ற தளங்களில் தேட வேண்டும் என்றால் "cauvery" site:www.tn.nic.in எனக் கொடுத்துத் தேடலாம்.

3. அதே பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல்லின் பொருள் சார்ந்து இருக்கும் மற்ற சொற்களை அறிந்து கொள்ள கூகுள் தேடலை வரையறை செய்திடலாம். இதற்கு ஆங்கிலத்தில் tilde ("~") என அழைக்கப்படும் அடையாளக் குறியைப் பயன்படுத்த வேண்டும். இதனை நாம் தேடும் சொல்லின் முன்னால் எந்த இடைவெளியும் இன்றி அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக எம்.எஸ்.வேர்ட் தொகுப்பு குறித்து விளக்கமான குறிப்புகள் தரும் தளங்களைக் காண விரும்புகிறீர்கள். இந்த குறிப்புகள் என எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவற்றைப் பெறும் வழியை இந்த ஆப்பரேட்டர் தருகிறது. இங்கு "msword" ~tutorial என அமைத்தால் எம்.எஸ் வேர்ட் குறித்த basics, hints, guide, tips, tricks ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

4.விளக்கங்கள் பெற: ஒரு சொல்லின் விளக்கங்கள் பெற கூகுள் "define" என்ற ஆப்பரேட்டரைக் கையாள்கிறது. எந்த சொல்லுக்கு விளக்கம் வேண்டுமோ அதன் முன்னால் இதனை இணைத்துச் செயல்படுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக nano technology என்ற சொல் குறித்து விளக்கம் வேண்டும் என்றால் define nano technology என்று கொடுத்தால் போதும். விளக்கத்தோடு இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து தளங்களும் கிடைக்க what is nano technology எனக் கொடுத்துப் பெறலாம்.

from
mansoorkmc@yahoo.com

Sunday, January 18, 2009

சில கணிணி டிப்ஸ்

சில கணிணி டிப்ஸ்

ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter

Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl-லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt-ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.
F3 அழுத்தினால் Find திறக்கும்.
F5 அழுத்தினால் refresh ஆகும்.
Alt-ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift-ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.
shift-ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab-ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run -ல்
... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்
.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்
. (ஒரு புள்ளி டைப்பினால்)User Profile திறக்கப்படும்

WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் L-வை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் U-வை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

imamcivil@gmail.com

Saturday, August 16, 2008

Tips for Better Life

Tips for Better Life

1. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in 2007.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'. You have no idea what their journey is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26.. What other people think of you is none of your business.
27. However good or bad a situation is, it will change.
28. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.
29. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
30. Envy is a waste of time. You already have all you need.
31. The best is yet to come.
32. No matter how you feel, get up, dress up and show up.
33. Do the right thing!
34. Call your family often.
35. Your inner most is always happy. So be happy.
36. Each day give something good to others.
37. Don't over do. Keep your limits.