Thursday, February 21, 2008

சர்க்கரை!!

சர்க்கரை!!
--------

இனிப்பானது
சுவையானது
அனைவருக்கும்
பிடித்தமானது!
லட்டு பூந்தி
மைசூர் பாக்
அல்வா பழங்கள்... எனப்
பற்பல உருவங்களில்
உலா வருவது!

விருந்தோம்பலும்
மங்கல நிகழ்ச்சிகளும்
இவை யன்றி
இருப்பதில்லை!
தன் இனிப்பாலும்
சுவையாலும்
தானோர் 'கொடூரன்'
என்பதை உணராது
செய்து விடும்
தன்மை மிக்கது!

ஒருவர்
தன் வாழ்நாளில்
உட் கொண்ட
சர்க்கரைத் துகள்களைக்
காட்டிலும்
அது உட்கொண்ட
மனித உயிர்கள்
பற்பல மடங்கு!

'இன்சுலின்'
சுரப்பின் குறைபாடே
இந் நோய்க்குக் காரணம்!
உடனே உணர்ந்து
செயல்படா விட்டால்
விழிகள்
சிறுநீரகங்கள்
இதயம்
மூளை
நரம்பு மண்டலமென
ஒவ்வொன்றாய்ப் பாதிக்கும்!

உடலில் தொன்றும்
சிறுபுண் பெரிதாகும்
பீடித்த பகுதியைச்
சிறுகச் சிறுக
அரிக்கும்! அழிக்கும்!
அழிந்த பகுதி
பகுதி பகுதியாய்
தவணைகளில்
வெட்டி எடுக்கப்படும்!
இறுதியில்
உயிருக்கே உலைவைக்கும்!

சர்க்கரையுடன்
பகைமை.....!
நலம் காக்கும்.
உறவு......?
நலமும் வளமும்
நிம்மதியும் அழிக்கும்!
ஆன்மாவைச்
சாந்தி அடைய வைத்தே
அது சாந்தி அடையும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி:வார்ப்புகள்.

IMAMUDDIN GHOUSE MOHIDEEN

துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் ரத்ததான முகாம்

துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 22.02.2008 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை துபாய் அல் வாசல் மருத்துவமனையில் நடத்த இருக்கிறது. இம்முகாமில் கலந்து கொண்டு உயிர் காப்பதற்கு இன்றியமையாத் தேவையான ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண் : 04 2732087 / 050 385 19 29

துபாயில் நூல் அறிமுக விழா

துபாயில் நூல் அறிமுக விழா

துபாயில் வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது.

நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேச இருக்கிறார்.

நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மான் நூலை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com

துபாயில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம்