Saturday, March 15, 2008

ராஜ்ய சபா......

இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு 'ராஜ்ய சபா' என்று பெயர். இதன் பெரும்பாலான உறுப்பினர்கள்
பல்வேறு மாநிலங்களின் சட்ட மன்றங்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவரால் சிலர்
நியமிக்கப்படுவதும் உண்டு. சபை தொடர்ந்து இருக்கும். உறுப்பினர்களின் ஆயுட்காலம் தான் ஆறு ஆண்டுகள்.
இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற, அவர்களோ அல்லது
அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களோ தேர்ந்து எடுக்கப் படுவதுண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு இரண்டு ஆண்டும் ஆறு பேர் ஓய்வு பெற இன்னும் அறுவர்
தெர்ர்ந்து எடுக்கப் படுவர். தமிழகத்தைப் பொறுத்தவரைஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட 34
வாக்குகள் வேண்டும். இன்றைய நிலவரப்படி திமுக கூட்டணி நான்கு பேரையும், அதிமுக ஒருவரையும்
எளிதாகத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆறாவது இடத்துக்குத்தான் இழுபறி.

அதிமுக 60 + மதிமுக 6 = 66. இரண்டு இடங்களைபெற எதிரணிக்கு இரண்டு வாக்குகள் குறைவு. சென்ற முறை கனிமொழி களத்தில் இறக்கக்ப் பட்டதாலோ என்ன்வோ அந்த இரண்டு வாக்குகளை திமுக விட்டுக்
கொடுத்து அதிமுகவில் இருவர் தெரிவாக உதவியது. "இதுதான் உண்மையான ஜனநாயகம்" என்று ஜெ.
தன் வாழ்நாளில் முதல் முறையாக கலைஞரைப் பாராட்டினார்.

அந்த ஒரு இடத்தை தன் கூட்டணிக் கட்சி சகாவும், சிறந்த 'பார்லிமெந்தேரியனுமான' வைக்கோவுக்கு ஜெ
விட்டுக் கொடுப்பாரார் என்கிற நம்பிக்கையை அவர் பொய்த்துப் போக வைத்து விட்டார்

இம்முறை அந்த இடத்தை திமுக விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஐந்து வேட்பாளர்களை அறிவித்து
விட்டது. இரண்டு திமுக, இரண்டு காங்கிரஸ், ஒன்று இடது சாரிகளுக்கு. அதிமுக ஒன்றை தான் எடுத்துக்
கொண்டு மற்றதை மதிமுகவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. தேவைப்படும் அந்த இரண்டு வாக்குகளுக்கு
எங்கே போவார்கள் ?

ஒன்று விஜயகாந்திடம் இருக்கிறது. அது அநேகமாக திமுகவுக்குப் போகாது. இன்னொன்று 'தளி' தொகுதி-
யிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சுதந்திர உறுப்பினரிடம் இருக்கிறது. ஆனால் அவர் சட்ட மன்ற செயல்
பாடுகளில் இடதுசாரிகளுடந்தான் இணைந்து இருக்கிறார்.

ஆகவே, தேர்தல் நிச்சயம். நான்கு திமுகவினரும், ஒரு அதிமுகவும் தேர்ந்தெடுக்கப்பட, ஒரு இடத்துக்கு
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இருக்கும். எப்போதுமே ஏகமனதாகத் தீர்மானிக்கப்படும் ராஜ்யசபா இடங்கள்
22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தல் மூலம் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

அந்தத் தேர்தலில், மூன்றாவது சுற்றில் மத்திய அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பாலு நாவலர் நெடுஞ்செழியன்
தம்பி இரா.செழியனைத் தோற்கடித்தார்.

திமுக அணி நன்கு இடங்களில் தன் பங்குக்கான இரண்டு இடங்களுக்கான பெயரை அறிவித்து விட்டது.
அமீர் அலி ஜின்னாவையும் திருமது வாசந்தியையும் அறிவித்ததன் மூலம் திமுக சிறுபான்மையினரைக்
கவனத்தில் கொண்டுள்ளது ஆனால் இவற்றில் ஒன்று பேரா:ஸவாஹிருல்லாவுக்கொ, அல்லது கவிக்கோவுக்கோ போகும் என்ற வதந்திகள் வதந்திகளாகவே போயிருக்கின்றன கவிஞர் வைரமுத்துவும்
வரிசையில் நிற்கும் ஒருவர் என்று சொல்கிறார்கள்.

காங்கிரசுக்கு இரண்டு இடங்கள். அவற்றில் ஒன்றை தனகுத்தர வேண்டும் என்று பா.ம.க அடம் பிடிக்கிறது.
இது தொடர்பாக டெல்லியில்அமைச்சர்அன்புமணி ராமதாசுக்கும் காங்க்..கட்சி செயலர்அஹ்மது பட்டேலுக்கும்
பேச்சு வார்த்தைகள் தொடர்வதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன விளைவு என்னவாகுமோ தெரியாது. ஐந்தாவது இடத்துக்கு இடதுசாரி போட்டியிடுகிறது.

64,000 டாலர் கேள்வி. வெற்றி நிச்சயமில்லாத நிலையில் தன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்கோ போட்டியிடுவாரா என்பதுதான்.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாயில் தமிழக முஸ்லிம்களின் சமுதாய அமைப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு எதிர்வரும் ஹிஜ்ரி 1429 ரபியுல் அவ்வல் பிறை 12 ( 19 மார்ச் 2008 ) புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா பகுதியில் உள்ள தமிழ் பஜாரில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.

மேலும் இலங்கை புஷ்ரா ( நற்செய்தி ) மாத இதழ் ஆசிரியர் மௌலவி ஏ.எல் பதுறுத்தீன் ஷர்க்கி பரலேவி, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் ஆயங்குடி மௌலவி எம்.ஏ. காஜா முஅஹ்ம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

மீலாத் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் தலைவர் சையத் எம் ஸலாஹுதீன், கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் துணைத்தலைவர்கள் அஹ்மது முகைதீன், அப்துல் கத்தீம்,அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செய்லாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின்,இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

விழா சிறப்புற நடைபெற இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அல் ஹஸீனா ஜுவல்லரி, ஈடிஏ அஸ்கான்,லேண்ட்மார்க் ஹோட்டல், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், ரஷாதி ஹஜ் சர்வீஸ், இந்தியா சில்க் ஹவுஸ், லியோன் டீ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல் : ஈமான் அமைப்பின் ஊடகத்துறை

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சங்கம் வழங்கும் கல்வி உதவி நிதி




முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008
.