Friday, August 20, 2010

பாலஸ்தீன்....

பாலஸ்தீன்....

கண்ணிருண்டு அதற்க்கொரு
கதையுண்டு;
விழிப்பிதிங்கி நிற்க்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..





வளைகுடா....

வளைந்துக் கொடுடா
என்பதின் சூட்சமம்தானோ
வளைகுடா;

வறண்டுப் போன
வாழ்க்கைக்கு
விவசாயம் செய்ய ஏற்ற இடம்
பாலைவனம்....


-யாசர் அரஃபாத்

அல்-மதரசதுல் காதரிய்யா - அய்யம்பேட்டை

அல்-மதரசதுல் காதரிய்யா - அய்யம்பேட்டை

அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹ்)

தங்களின் ஜகாத் மற்றும் சதக்கா நிதிகளை "அல்-மதரசதுல் காதரிய்யா" மகளிர் அரபிக் கல்லூரிக்கு வழங்கிட அன்புடன் அழைக்கிறோம்.

மதரசவைப் பற்றி சில வரிகள்:

தோற்றம் 1998
பயன் பெற்ற குழந்தைகள் 2009-2010 கல்வி ஆண்டு வரை 438
சிறார்களுக்கான உஸ்தாதுக்கள் 2
மதரசா கட்டுமான பணிகள் 2006 - 2009
மகளிர் அரபிக் கல்லூரி தோற்றம் 28 - 06 - 2009
மகளிர் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள் 4
முதல் பட்டமளிப்பு விழா 18 - 07 - 2010
இந்த ஆண்டு சேர்ந்துள்ளோர் 32
(ரமலான் முடியும் வரை சேர்க்கை உண்டு)

பாடத்திட்டம்:

பகுதி I :

தஜ்வீத் முறையில் குரான் ஓதுதல், குரான் மனனம், இஸ்லாமிய நல்லோழுக்கங்கள்,
ஷரியத் சட்டங்கள், ஜனாஜா (குளிப்பாட்டும், கபனிடும் பயிற்சி).

பகுதி II:

முதல் உதவி பயிற்சி, குடும்ப வரவுசெலவு கணக்கு பயிற்சி, சமையல் மற்றும் பரிமாறுதல் பயிற்சி

பகுதி - III தொழில் கல்வி:

1 . தையல் மற்றும் எம்ராய்டரி
2 . தட்டச்சு (தமிழ்/ஆங்கிலம்)
3 . அடிப்படை கணினி பயிற்சி மற்றும்(ஈமெயில் & இன்டர்நெட் )

மகளிர் நூலகம் இஸ்லாமிய மற்றும் மாற்றுமத சகோதரிகளுக்கும்
மகளிர் சிறப்பு பயான்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை
தராவீஹ் தொழுகை 8 ஆண்டுகளாக (70 - 90 பெண்கள்)

இன்ஷால்லாஹ் இந்த மார்க்க கல்வி நிறுவனத்தின் வெற்றிகரமான செயல்ப்பாட்டிற்கு தங்களின் மேலான ஆதரவையும் பங்களிப்பையும் அன்புடன் நாடுகிறோம்.

தங்களின் தாராளமான நிதிஉதவிகளை
"அல்-மதரசதுல் காதரிய்யா டிரஸ்ட்" A/C No.52480, CANARA BANK, Ayyampetai Branch என்ற பெயரில் NRI செக்காக அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விபரங்களுக்கு தொடர்புக்கொள்வீர்:

துபாய்: Mr . H . முஹம்மது இஸ்மாயில் தமிழ் நாடு: Mr .A . ஹபீப் ரஹ்மான் காதிரி
ஈமெயில்: hrismail@gmail.com போன்: +91-9442428747
போன்: +971-50-3433753

Blog spot : http://almadarasathulqadiriyah.blogspot.com

முகவரி:
நேரு நகர் 4ம் தெரு,
அய்யம்பேட்டை (Po),
தஞ்சாவூர் (Dt),
தமிழ் நாடு.

அழுகையோடு......

அழுகையோடு......


விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..

ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...

மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..

எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த முத்தம்..

மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;


-யாசர் அரஃபாத்