Saturday, February 14, 2009

21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம்

21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம். - டாக்டர் A.P. முகமது அலி Ph. D. IPS(Retd)

வானத்தையும் பூமியையும் கடலையும் படைத்தது அதன் அதிசயங்களை நமக்கு குர் ஆனில் அல்லாஹ் காட்டியுள்ளான்.வானத்தின் கோளங்கள், அதன் செயல்பாடுகள், கடலுக்குள் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் பிரம்மிக்கவைப்பவையாகும். பூமி உருண்டை என்று உலக மக்களுக்கு எடுத்து இயம்பி,மனிதன்,மிருகம்,பறவை, பூச்சி போன்றவைகளுக்கு உணவினைக் கொடுத்து, மனிதனின் செயல்கள் அத்துமீறினால் அந்த பூமியினை பூகம்பத்தால் புரட்டிப்போடும் செயல்கள், சூறாவளியால்,கடல் சீற்றத்தால் அழிக்கும் பாடம்
குர் ஆன் கற்பிக்கிறது. மனித உடல் செயல்பாடுகள், மனதின் மாற்றங்கள், மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற தகவலும் குர் ஆனில் இல்லாமலில்லை. அவை உண்மை இல்லை எனில் எப்படி சந்திரனில் முதல் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங்கும், உலக குத்துச் சண்டை கொடிகட்டிப் பறந்த கிளேசியஸ் கிளே என்ற முஹம்மது அலியும் மற்றும் பல அறிஞர் இஸ்லாத்தை தழுவ முடியும். ஆகவே உலக மக்கள் இஸ்லாத்தை அனைத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றால் மிகையாகாது.

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் பல நடவடிக்கைகளை கையாள வேண்டும்
1) கல்வி
உம்மி நபியாக இருந்த பெருமானார் அவர்களுக்கு ஓதுக என்ற தாரக மந்திர பெட்டகமான குர் ஆணை இறக்கி அல்லாஹு அக்பர் என்ற அதிகாலை பாங்கை கீழை நாட்டில் ஆரம்பித்து மறுநாள் காலை பாங்கு மேலை நாட்டில் முடிய செய்துள்ளான் என்றால் ஏக இறை தத்துவ கல்வியினையின் மகிமையே என்றால் சாலபொருந்தும் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை என்றது இஸ்லாம், வெளிநாடுகளுக்கு சென்று தான் பொருளீட்ட வேண்டும் என்பதில்லை, இருந்த இடத்திலிருந்தே பொருள் சேர்க்கும் E-பிசினஸ் என்ற வியாபார உக்தி உள்ளது, கம்ப்யூட்டர் இஸ்லாமியருக்கு புதிது அல்ல, விப்ரோ சேர்மன் அசிம் பிரேம்ஜி தன் தந்தை கவனித்து வந்த எண்ணை தொழிலை விட்டு அமெரிக்கா நிறுவனமான IBM இந்தியாவை விட்டு வெளியேறிய போது அதன் இடத்தை நிறைவு செய்து பெருமை சேர்த்துள்ளார் என்றால் ஏன் நம்மால் முடியாது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நல்ல பல்கலை கழகமனால் நிச்சயம் முடியும், முதலில் பெண் கல்விக்கு வித்திட வேண்டும். ஒரு பிராமின் குடும்பத்தில் தன் மகன் IIT யிலோ IIM மிலோ சேருவதர்கோ பயிற்சியினை எட்டாவது அல்லது ஒன்பதாவதிலோ ஆரம்பித்து விடுகின்றனர். ஏன் நாமும் நம் பிள்ளைகளுக்கு TOFEL, GRE, IELTS, CAT, போன்ற பயிற்சிகளை கொடுக்க கூடாது, பெண் கல்விக்கு நாம் எப்போது முக்கியத்துவம் கொடுகிறோமோ அப்போது தான் நம் சமுதாயம் முன்னேற முடியும், கொஞ்சம் படித்தால் போதும் வளைகுடா நாடுகளில் சென்று தன் பிள்ளை நாலு காசு சம்பாதித்தால் போதும் என்று இருக்கக்கூடாது, அங்கு நம்மவர் படும் துன்பங்களை பெற்றோர் சென்று பார்த்தால் நிச்சயமாக தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள். இந்தியாவிலே ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் வருடத்திற்கு ஒரு கோடியே 18 லட்சம் என்பது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்.

2) பள்ளி வாசல் ஒரு நூலகமாக வேண்டும்
ஒவ்வொரு பள்ளி வாசலிலும் மார்க்க சம்பந்தமான நூல்கள் இருப்பதினை காணலாம் ஆனால் அதனை படிப்பவர்கள் குறைவு தான். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வீட்டுக்கு அல்லது வியாபாரஸ்தாபனங்களுக்கு செல்லாது பள்ளிவாசல் தின்னயே கத்தி என்றும் வெட்டி பேச்சில் ஆர்வமும் காட்டுவதை நிறுத்த வேண்டும், இமாம்கள் வருங்கால இளைஞர் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கும் ஆசானாக வேண்டும், அதற்கு இமாம்கள் நிறைய பொது அறிவு சம்பந்தமான விசயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் நஜ்ஜாஜ் கூட்டத்திற்கு பலியாவதை தடுக்க முடியாமல் போய் விடும். என்னுடைய கல்லூரி தோழன் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் பட்டம் பெற்று, இமாமாக இருந்து கொண்டு பின்பு புது கல்லூரி உதவி முதல்வராகவும் பணிபுரிந்தார். எல்லா இம்மாம்களும் பள்ளி இறுதி ஆண்டு வரையிலாவது பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3) அரசு வேலைகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் அரசு வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை, அரசு வேலைகளில் நமக்கு இட ஒதுக்கிடு கட்டாயம் என்ற நிலை வரும் போது அந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது, ஏனென்றால் அரசு வேலைகளில் கீழ்க்கண்ட பலன்கள் பெறலாம்.
a) வேலை உத்திரவாதம்
b) பல்வேறு சலுகைகள், நிலம், வீடு, வாகன லோன்கள், பெற்று அதன் சொந்தகாரர் ஆகலாம்.
c) மருத்துவ சலுகைகள், குடும்ப பென்சன், வாரிசுக்கு வேலை, போன்றவைகள் பெறலாம்.
d) அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளான முதியோர் பென்சன், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்க செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம்.
e) இராணுவம், காவல் துறையினில் பணியாற்றினால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல படுவதை, கோவையில் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாகபடுவதை தவிர்கலாம்.

4) தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்தால்
ஜாதி வெறி நிறைந்த இந்நாளில், ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராது, சிலம்பம் , மல்யுத்தம், குத்துசண்டை, கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்தால் தான் குஜராத் போன்ற கொலை வெறியர்களிடமிருந்து நம்மை காக்க முடியும். முன்னாள் மலேசியா பிரதமர் மஹாதிர் முஹம்மத் இஸ்லாமிய நாடுகள் வல்லரசாக அணு ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றது இக்காலத்தில் எவ்வளவு பொருத்தமானது.

5) அரசியலில் பங்கு
ஒவ்வொரு தேர்தலிலும் பல அரசியல் கட்சிகளுக்கு முதுகை கொடுக்கும் ஏணியாக இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மவர் வழிய சென்று ஆதரவு கொடுக்கும் நிலை மாற வேண்டும். பா.ம.க கட்சி நிறுவனர் போராட்டம் நடத்தி 20 சதவிகித ஒதுக்கீடு பெற முடிகிறது. ஏன் நம்மால் முடியவில்லை. ஏன்என்றால் கேரளா போன்ற ஒற்றுமையான சமுதாயத்தினை நாம் தமிழகத்தில் உருவாக்கவில்லை. வருங்கால இளைஞர்கள்கள் அவ்வாறான சூழ்நிலையினை உருவாக வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்



AP,Mohamed Ali
mdaliips@yahoo.com

உலகை உலாவர ஊக்குவிக்கும் இஸ்லாம்

உலகை உலாவர ஊக்குவிக்கும் இஸ்லாம்
( பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ. பி.டி. )

அவன் தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு )வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே அதன் பல கோணங்களிலும் சென்று அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொள்ளுங்கள்.
(அல்குர் ஆன் 67;15 )

பூமி ! ஆதம் பெறும் மக்கள் மீது மிக அன்பு கொண்டு அல்லாஹுத் தஆலா அளித்த அரிய பரிசு பூமி. விண்ணையும்,மண்ணையும் அழகுறப் படைத்து அனைத்து வசதிகளையும் அள்ளித் தெளித்து ஒழுங்குற மனிதன் வாழ அல் குர் ஆன் மூலம் நெறிப்படுத்தினான்.அறிவுப்பசிக்கு தீனியாக அமைவதே திருமறையின் வழிகாட்டுதல் என்பதை அல்முல்க் என்ற அத்தியாயத்தின் மேற்கண்ட வசனம் முன் மொழிகிறது.

வசதி என்பது மனிதனின் எண்ணத்தில் மட்டுமின்றி உலகின் வண்ணத்திலும் பொதிந்துள்ளது. ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட அனைத்து உயிரினங்களையும் படைத்து ஆறறிவு கொண்ட மனிதன் இறைவன் வகுத்த வரம்புக்குட்பட்டு இவற்றை அனுபவிக்க வேண்டுமெனப் பணித்தான். உலகின் பல்வேறு நாடுகள், பல்வேறுபட்ட தாவரங்களையும், உணவு வகைகளையும் படைத்தவன் அவனே. இவைகளைப் பற்றி பல கோணங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்,அவற்றைப் புசித்து மனிதன் மகிழ வேண்டும்,அவனது அளப்பரிய அருட்கொடைகளைப் பற்றி ஆராய வேண்டும்.மனிதனுக்கு அருளப்பட்ட நுண்ணறிவுத் திறனால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என அல்லாஹுத் தஆலா விரும்பினான்.

இதை நாம் புனித ஹஜ் பயணத்தில் கண்ணால் காணலாம். அந்த மாபெரும் உலக நாட்டில் பல கோணங்களிலிருந்து பலவகை கலாச்சாரங்களை மேற் கொள்ளும் மனிதர்கள் மட்டுமல்ல. பன்னாட்டு பழவகைகளும்,உண்டிகளும் மண்டிக் கிடக்கின்றன. எந்த நாடுகளில் சிறந்த உணவு வகைகள் உள்ளனவோ அத்தனையும் அங்கு வந்து குவியும். அவைகளைப் புசித்து இறையருளை சிந்தித்து சித்தமெல்லாம் பக்தியில் கரைந்துருகும் வாய்ப்பு அங்கு தான் கிடைக்கிறது.

இதைத் தவிர பல நாடுகளுக்குச் சென்று வர வாய்ப்பு பெற்ற மற்றவரும் அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு தத்தம் நாட்டிலும் இவ்வசதிகளை இறக்குமதி செய்ய விழைவர், முயற்சி மேற்கொள்வர் என்பது வெள்ளிடைமலை. இதனை இக்காலத்தில் கண்கூடாகப் பார்க்கிறோம். தொழில் வளங்கள், பயிர் வளங்கள், அறிவியல் கூறுகள் வான்வெளி ஆய்வுகள் இவை பல்கிப்பெருக வேண்டுமானால் பூமித்தாயின் மடியில் தவழும் மனிதக்குழந்தைகள் பல கோணங்களில் சென்று ஆய்வு செய்வது இன்றியமையாதது என்ற தத்துவம் இத்திருவசனத்தில் புதைந்துள்ளது எனலாம்.

நன்றி :

குர் ஆனின் குரல்
மாத இதழ்
ஜனவரி 2009

Résumé Tips

Résumé Tips

For Your International Experience

Résumé

“A global point of view is a critical skill set that is not easily come by

in the US, and it is a skill set that facilitates creativity, diversity of

Where are you locating your experience on your résumé?

thinking, and better skills for working with a variety of individuals

with varied backgrounds, interests and capabilities.”

If it is study program, consider listing the program in your

- Advertising Executive

education section rather than under activities or other

Have people assured you that your experience abroad “looks

experiences.

great on a résumé?” They're right! The bad news is that potential

B.A. University of Minnesota—Art History 2003

employers or members of graduate or professional school admissions

Paul Valéry Université, Montpellier, France, 2001

committees may lack these experiences themselves. It’s up to you

to effectively communicate the skills and proficiencies that will

If the experience included an internship, list the experience as a

benefit their organization and convince them of the value of your

professional experience rather than as an activity.

experience.

Marketing Assistant, Hamley’s Toys

“I think I have my current job because of my experiences abroad.

London, England, 1/02–5/02

Those experiences gave me greater self-confidence and a greater

understanding of myself, which led to my willingness to uproot myself

If you did a work program but the work was not particularly

and try new work in a new location.”

related to your intended profession, list it as work experience

-Higher Education Administrator

but concentrate on the cross-cultural learning.

Skills

The Black Dog Pub, Cambridge, England

Served patrons in a local restaurant, worked as the only

What skills or proficiences have you acquired or enhanced

American in a British business, trained co-workers in American-

while you were abroad?

style customer service.

Some of the skills that professionals with international experience

If your resume includes a section for skills or proficiencies,

cite as being particularly useful in their careers include:

include specific skills acquired or improved while abroad.

• Enhanced cultural awareness and sensitivity to customs and

“My experience in Russia and Ukraine differentiated me from the

cultural differences

masses of “standard” college grads hunting for the most desirable jobs.

• Foreign language proficiency

I heard it time and again from employers.”

• Adaptability

-Advertising Account Planning Manager

• Ability to identify and achieve goals

Cover Letter

• General improvement in communications skills

• Increased confidence, initiative, and independence

How does your experience relate to your field?

• Greater flexibility and sense of humor

What field do you intend to work in? How might your

• Awareness of global economic and political issues and realities

international experience uniquely benefit a professional in that

• Ability to maintain an open mind and be tolerant of others

that field? Develop a strategy to specifically address this in your

• Clarification of goals and improved self-awareness

cover letter or résumé.

• General travel skills

My experience living in Ecuador will enhance my ability to

• Resource management

communicate and interact effectively with the local Latino

• Organization

population this position has the opportunity to work closely

• Problem solving and crisis management

with.

• Patience

My studies in Japan provided me with a great insight into

• Listening and observation

the cultural differences that influence consumers in different

• Specific professional skills or knowledge base

countries and will improve my ability to contribute to

international marketing initiatives.

Even if your career goals do not include a specific international

dimension at this time, you can promote the general transferable

skills, such as independence, confidence, and problem solving.



“Agriculture is truly a global business. Students who have studied or

interned abroad have a better perspective and are thus more valuable

to companies such as Archer Daniels Midland.”

- President and Chief Operating Officer of ADM

The Interview

Consider in advance where and how you will refer to your

experience abroad. While it is important, you should not use it as

your only point of reference.

If your interviewer remarks or asks about your international

experience, take it as an opportunity to expand. Don’t let the

opportunity pass by with a simple “Yes, it was great!”

Prepare specific examples. Did you:

• Do a specific project or research applicable to your field of

interest while abroad?

• Travel independently?

• Learn to work with a more diverse group of people than you

had previously been exposed to?

• Resolve a conflict based on misunderstandings or cultural

differences?

• Learn new activities, languages, hobbies, or skills?

“I usually bring up my international experience when asked, ‘tell me

something interesting about yourself'.”

-Clinical Research Coordinator

“My international experience is always asked about, whether it is

relevant to the position or not.”

-Director of Conferences for a Professional Association

Learning Abroad Center

A merged unit of Global Campus and ISTC

230 Heller Hall, 271 19th Avenue South, Minneapolis, MN 55455

612.626.9000 • 888.700.UOFM • 612.626.8009 (fax) • UMabroad@umn.edu • www.UMabroad.umn.edu

An equal oppor t unit y e ducat or and e mpl oy er

R és um é T ip s • 10/ 03 • 100






Résumé Tips
For Your International Experience
Résumé
“A global point of view is a critical skill set that is not easily come by
in the US, and it is a skill set that facilitates creativity, diversity of
Where are you locating your experience on your résumé?
thinking, and better skills for working with a variety of individuals
with varied backgrounds, interests and capabilities.”
If it is study program, consider listing the program in your
- Advertising Executive
education section rather than under activities or other
Have people assured you that your experience abroad “looks
experiences.
great on a résumé?” They're right! The bad news is that potential
B.A. University of Minnesota—Art History 2003
employers or members of graduate or professional school admissions
Paul Valéry Université, Montpellier, France, 2001
committees may lack these experiences themselves. It’s up to you
to effectively communicate the skills and proficiencies that will
If the experience included an internship, list the experience as a
benefit their organization and convince them of the value of your
professional experience rather than as an activity.
experience.
Marketing Assistant, Hamley’s Toys
“I think I have my current job because of my experiences abroad.
London, England, 1/02–5/02
Those experiences gave me greater self-confidence and a greater
understanding of myself, which led to my willingness to uproot myself
If you did a work program but the work was not particularly
and try new work in a new location.”
related to your intended profession, list it as work experience
-Higher Education Administrator
but concentrate on the cross-cultural learning.
Skills
The Black Dog Pub, Cambridge, England
Served patrons in a local restaurant, worked as the only
What skills or proficiences have you acquired or enhanced
American in a British business, trained co-workers in American-
while you were abroad?
style customer service.
Some of the skills that professionals with international experience
If your resume includes a section for skills or proficiencies,
cite as being particularly useful in their careers include:
include specific skills acquired or improved while abroad.
• Enhanced cultural awareness and sensitivity to customs and
“My experience in Russia and Ukraine differentiated me from the
cultural differences
masses of “standard” college grads hunting for the most desirable jobs.
• Foreign language proficiency
I heard it time and again from employers.”
• Adaptability
-Advertising Account Planning Manager
• Ability to identify and achieve goals
Cover Letter
• General improvement in communications skills
• Increased confidence, initiative, and independence
How does your experience relate to your field?
• Greater flexibility and sense of humor
What field do you intend to work in? How might your
• Awareness of global economic and political issues and realities
international experience uniquely benefit a professional in that
• Ability to maintain an open mind and be tolerant of others
that field? Develop a strategy to specifically address this in your
• Clarification of goals and improved self-awareness
cover letter or résumé.
• General travel skills
My experience living in Ecuador will enhance my ability to
• Resource management
communicate and interact effectively with the local Latino
• Organization
population this position has the opportunity to work closely
• Problem solving and crisis management
with.
• Patience
My studies in Japan provided me with a great insight into
• Listening and observation
the cultural differences that influence consumers in different
• Specific professional skills or knowledge base
countries and will improve my ability to contribute to
international marketing initiatives.
Even if your career goals do not include a specific international
dimension at this time, you can promote the general transferable
skills, such as independence, confidence, and problem solving.

“Agriculture is truly a global business. Students who have studied or
interned abroad have a better perspective and are thus more valuable
to companies such as Archer Daniels Midland.”
- President and Chief Operating Officer of ADM
The Interview
Consider in advance where and how you will refer to your
experience abroad. While it is important, you should not use it as
your only point of reference.
If your interviewer remarks or asks about your international
experience, take it as an opportunity to expand. Don’t let the
opportunity pass by with a simple “Yes, it was great!”
Prepare specific examples. Did you:
• Do a specific project or research applicable to your field of
interest while abroad?
• Travel independently?
• Learn to work with a more diverse group of people than you
had previously been exposed to?
• Resolve a conflict based on misunderstandings or cultural
differences?
• Learn new activities, languages, hobbies, or skills?
“I usually bring up my international experience when asked, ‘tell me
something interesting about yourself'.”
-Clinical Research Coordinator
“My international experience is always asked about, whether it is
relevant to the position or not.”
-Director of Conferences for a Professional Association
Learning Abroad Center
A merged unit of Global Campus and ISTC
230 Heller Hall, 271 19th Avenue South, Minneapolis, MN 55455
612.626.9000 • 888.700.UOFM • 612.626.8009 (fax) • UMabroad@umn.edu • www.UMabroad.umn.edu
An equal oppor t unit y e ducat or and e mpl oy er
R és um é T ip s • 10/ 03 • 100

பிடிஎஃப் டூ வேர்ட் டாகுமெண்ட்

Download this file from the following link and install it.

http://www.yaodownload.net/hellopdf/pdf2wordsetup.exe

உங்கள் தம்பி

வலைப்பதிவு: ungal Thambi
இடுகை: தேசத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும்
இணைப்பு: http://ungalthambi.blogspot.com/2009/02/blog-post_06.html

நீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்டுமே கொண்டு ‌!!!

நீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்டுமே கொண்டு ‌!!!

இதை க‌டைபிடிப்ப‌த‌ன் மூல‌ம் எந்த‌ தீங்கும் விளைய‌ வாய்ப்பில்லையாத‌லால் இதை செய்து பாருங்க‌ளேன்.

இத்த‌க‌வ‌ல் எனக்கு ஈ மெயில் மூல‌மாக‌ கிடைக்க‌ப்பெற்ற‌து.
நல்ல எண்னத்தில் இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். யாரையும் கிண்ட‌ல‌டிக்கும் எண்ணத்திலோ, யாருக்கும் தீங்கும் விளைக்கும் எண்ண‌த்திலோ இதை நான் ப‌திவு செய்ய‌வில்லை

CLICK AND READ THIS ARTICLE

நீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்டுமே கொண்டு ‌!!!

http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/blog-post_06.html




2009/2/8 ASALAM SMT HOUSE

http://nunippul.blogspot.com/2009/02/blog-post.html

சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?
தமிழ்மணம் பரிந்துரை : 3/3



Pathivu Toolbar ©2009thamizmanam.com


சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் எம். மருதுபாண்டியன்
எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்
200 பக்கங்கள் விலை ரூ. 80
நீயூ ஹாரிசன் மீடியாவின் நலம் வெளியிடு.


சர்க்கரை நோய் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை மிக தெளிவாய், விரிவாய் விளக்கியிருக்கிறார் டாக்டர் எம். மருதுபாண்டியன். அட்டையில் போட்டிருந்தப்படி
டயாபடீஸ் A to Z விளக்குகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாய் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இணையத்தில் தேடி, சாப்பிடும் முறைகளையும், உடல்பயிற்சியின்
அவசியத்தை தெரிந்துக் கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சில பல சந்தேகங்கள்- முக்கியமாய் உணவுகளைக் குறித்து எப்பொழுது வரும்.

அந்நேரத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி!

சர்க்கரை நோய்- இதைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் மருத்துவர். உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்றால், இந்தியாவில்
இரண்டு கோடி பேர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஏழ்மை நிலையில் வியாதியைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். உடல் எடை முக்கிய பங்கு என்றால், எனக்கு சொல்லப்பட்ட காரணம் தாயின் சீதனம்..

முதல் அத்தியாயத்திலேயே நம்பிக்கை தருகிறார். அதாவது மருத்துவரை நம்பியிருக்காமல், சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு, நீடித்த உடற்பயிற்சி, தீவிர உணவு கட்டுப்பாடு, உரிய காலஹ்தில் பரிசோதனைகள், உடல் பருமனைத் தவிர்த்தல். இந்த ஐந்தும் போதுமா, நோயின் தாக்கலில் இருந்து மீள என்றால் போதும் என்றுச் சொல்பவர் ஆறாவதாக ஒரு விஷயம்- மருத்துவ சிகிச்சை. குறைந்த மருந்தில் நிறைந்த சிகிச்சை. இதுவே சர்க்கரை நோய்க்கான சிறப்பான சிகிச்சை. (மேற்படி வரிகளை அப்படியே தந்துள்ளேன். அனாவசிய மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிறார் என்று நினைக்கிறேன்.

எடையைக் குறைக்க எளிய யோசனைகள் தந்துள்ளார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிக உபயோகமாய் இருக்கிறது.

பத்திய உணவின் நிச்சய பலன் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. காலை, நன் பகல், மதியம், மாலை, இரவு என்று உணவு உண்ணுவதை ஐந்து முறையாய் பிரித்து என்ன உணவுகள் எவ்வளவு சாப்பிடலாம் என்று துல்லியமாய் கணக்கிட்டு சொல்கிறார். கலோரி கணக்கும், ரத்தத்தில் அதனால் சேரும் சர்க்கரை அளவையும் சொல்லியிருக்கிறார். உதாரணமாய் 200மி.லி நீர் மோர் குடித்தால் 10 மி.கி சதவீதம் வரை அதிகமாகலாம். 200 மி.லி சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி (பாதி பால்/ பாதி நீர்) குடித்தால் 40 மி.கி சதவீதம் அதிகரிக்கலாம். இதே சர்க்கரைப் போட்டு குடித்தால் 140 மி.கி வரை சர்க்கரை அதிகமாகுமாம்.

200மி.லி உப்பிட்ட எலுமிச்சை , தக்காளி ஜூஸ் குடித்தால் 30 மி.கி சதவீதம் அதிகமாகும். இதே 200 மிலி பழரசம் , சர்க்கரை இட்டு குடித்தால் 250 மி.கி அதிகரிக்கும்.

பொதுவாய் பட்டியலில் இருப்பதைப் பார்த்து ரத்தத்தில் சர்க்கரையை 50 மி.கி சதவீதம் குறைவான அளவில் அதிகமாக்கும் பானங்களை பருகலாம் என்கிறார்.

காய்கறிகள், பழ வகைகளிலும் எதை சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும் என்ற பட்டியலும் இருக்கிறது. முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழையை
தவிர்க்க சொல்கிறார். இதைத்தவிர அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுவகைகளில், அசைவம் உட்பட அனைத்து சத்துக்களின் (நூறுகிராமில்) நீண்ட பட்டியல் இருக்கிறது.

''வாழ்க்கை முழுவதும் உடல்பயிற்சியா, உணவுகட்டுப்பாடா என்று திகைத்துவிடாதீர்கள். அதுவே அன்றாட வாடிக்கையாய் மாற்றிக் கொள்ளுங்கள். போக போக
பழகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமையாகியும் விடுவீர்கள். பிறகென்ன பூரண ஆரோக்கியம்தான்'' - மருத்துவர் சொன்ன அறிவுரையில் ஹைலைட் இதுதான். நன்றி டாக்டர். இதை புரிந்துக் கொண்டாலே, சர்க்கரை நோயால் வரும் பல பிரச்சனைகளை, வராமல் தடை செய்யலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமில்லையா?

புத்தகத்தில் எதை எடுத்து இங்கு சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் முக்கியமானவை. பொதுவாய் இத்தகைய மருத்துவ விழிப்புணர்வு
புத்தகங்களில் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இதில் டாக்டர் எம். மருது பாண்டியன் அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்களை எழுத்தில் மிக அருமையாய் வடித்திருக்கிறார் அய். ஜெயச்சந்திரன் (எழுத்து வடிவம்). அவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிறேன். தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அந்தளவிற்கு எல்ல்லார் வீடுகளிலும் சர்க்கரையும் நோய் புகுந்துள்ளதே :-(
Labels: புத்தகவாசம்

ஆசிரியர்கள் தேவை

ஆசிரியர்கள் தேவை

இளையான்குடியில் செயல்பட்டு வரும் இக்ரா மெட்ரிக் பள்ளிக்கு பல்வேறு வகுப்புகளுக்கு
ஆசிரிய/ஆசிரியைகள் தேவை.

சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலதிக விபரம் பெற


இக்ரா மெட்ரிக் பள்ளி
சிவகெங்கை சாலை
இளையான்குடி 630 702
மின்னஞ்சல் : vetrifff@yahoo.com

விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்

(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர், இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.
'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அன்றும்... அயோத்தி அவலம்...
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.
புதைந்து போன புரட்சி மலர்கள்
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அன்றும் ஒரு பொடோ
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
பெண் போராளிகள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.
அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.
'என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு'.
வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.
பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.
1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ( http://www.understandquran.com ) தமிழில் 20.02.2009 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற இருக்கிறது.

மேலதிக விபரம் பெற சையத் ஜாபர் 050-4929184 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






---------- Forwarded message ----------
From: understand Quraan
Date: Sat, Feb 14, 2009 at 1:47 AM
Subject: Understand Quraan in Tamil
To: Muduvai Hidayath , kahidarts@gmail.com
Cc: jafsdeen@yahoo.com, aimanjaafar@gmail.com



Dear Brothers


Assalamu Alaikum....

Please find attached herewith an information on the UNDERSTAND QURAAN http://www.understandquran.com/
programme Insha Allah scheduled to be held in ETA HRD Hall in Abu Dhabi on the 20th Feb 2009, between
5 and 8 PM.

Kindly circulate the attached to all your Abu Dhabi contacts and pass on the message to all tamil speaking
muslims in Abu Dhabi.

Please note that the notice is prepared using Sarukesi font, which is also attached for ready use.

With kind regards
Seyed Jaafar
050-4929184

வட்டி அழியும் !

வட்டி அழியும் !

அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !

ஏன் இது நிகழ்ந்தது?

இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.

ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !
அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.

அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்

*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது

*ஊக வணிகத்துக்கு வழியில்லை

*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை

*கடனுக்கு உடைமை உத்தரவாதம்

*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு

*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்

*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி
இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்

இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் )
தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )

உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?

இனியாவது விழித்துக் கொள்வோமா?

இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது

*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக

*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)

*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)

*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)
*கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)

*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.

*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)

*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)

எனவே அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்தாமல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இனியேனும் ஆவன் செய்வோமா ?

( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )

நர்கிஸ் மாத இதழ்

நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்
நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா
கௌரவ ஆசிரியர் : டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )
துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா

முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்ன ஞ்சல் : aneesnargis@hotmail.com