Friday, May 1, 2009

இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. பேச்சுக்கலை

இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. பேச்சுக்கலை


'வாய் இருந்தால் வங்காளம் போகலாம்" என்பது கிராமப்புறங்களில் சொல்லப்படுகின்ற ஒரு பேச்சு வழக்குச் சொல். உலகில் உள்ள ஜீவராசிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டும் தான். பேச்சு என்பது ஒரு சிலருக்கு கை வந்த கலை. பலருக்கோ அது ஒரு வதை. உண்மையில் நன்றாகப் பேசத்தெரிந்தவன் இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வான் அல்லது உழைத்துக்கொள்வான் என்பதினை மேற்கொள் காட்டுவது தான் அந்த முதுமொழி. இதை இன்னொரு வகையில் "வாய் உள்ள பிழைத்துக்கொள்ளும்" என்று கூட சொல்வார்கள். ஊமையாய் இருக்கின்றவர்கள் கூட சைகை மொழியில் தங்களுக்கு ஏதாவதொரு வகையில் பேசிக் கொள்கின்றனர்.


உயிர் வாழ்வதற்கு மூச்சு எவ்வளவு முக்கியமானதோ அது போல் பேச்சும் முக்கியமானது. வாய் இருக்கின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் பேசக்கூடாது. நமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிதானமாக இருக்க வேண்டும். ஒரு சிற்பி எவ்வளவு நுணுக்கமாக ஒரு சிலையை செதுக்குகின்றானோஇ அவ்வளவு நுணுக்கமாக நாமும் வார்த்தைகளை தெரிந்து தெளிந்து பேச வேண்டும். அப்போது தான் பிறர் நமக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். பொருட்களை சிந்திவிட்டால் அள்ளி விடலாம். வார்த்தைகளை வீசி விட்டால் அள்ள முடியாது.


உங்கள் பேச்சு மற்றவரை இழிவு படுத்துவதற்காக மட்டும் இருக்கக்கூடாது. முடிந்தால் உங்கள் பேச்சு மூலம் மற்றவரை திருத்தப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு நான்கு பேர் திருத்துவார்களாக இருந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றியாகும். சிலர் இருக்கிறார்கள் எந்நேரமும் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை கண்டால் பலர் தள்ளியே நிற்பார்கள். பேசியே கழுத்துறுப்பவர் வருகிறார் என ஓட்டம் பிடித்து விடுவார்கள்.


சிலர் பேசுவதை கேட்பதற்கே அருமையாகவும் இனிமையாகவும் இருககும். இன்னும் ஒரு முறை இவர் பேசமாட்டாரா? என அவரது பேச்சு நம்மை ஏங்க வைக்கும். அந்தளவிற்கு அவருடைய பேச்சானது மகிமை மற்றும் மதிப்பு இருக்கும். பேசுவதை நிதானமாகவும் அதே சமயத்தில் அமைதியாகவும் தெளிவாகவும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பர்கள். நம்முடைய பேச்சு மற்றவருக்கு புரியும் படியும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பார்கள். மற்றும் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவருக்கே புரியாது மற்றவருக்கு என்ன புரிய வைக்க போகிறார்கள் என்பதும் தெரியாது.


ஆகையால் நம்முடைய பேச்சானது நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் சில முறைகளை பின்பற்ற வேண்டும். பேச்சுக்கலை பற்றிய ஆய்வாளர்கள் எப்படி பேச வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்ந்து தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ:


ஒருவர் பேசும் போது எளிமையாக இனிமையாக பேச வேண்டும் அதாவது எல்லோருக்கும் விளங்கக்கூடியதாக அப்பேச்சு அமைய வேண்டும்.


என்ன விடயத்தை பற்றி பேசப்போகின்றோம் என்பதை பற்றி நீங்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஏனெனில் எதைப் பேசப்போகின்றோம் என்பதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதிகமாக பேசாமல் இரத்தினச் சுருக்கமாக நறுக்கென்று பேச வேண்டும். மணிக்கணக்கில் பேச்சை இழுத்துக்கொண்டு போகக்கூடாது. அப்புறம் எதிரே உள்ளவர் துங்குவதற்கு தலையணையினை தேட வேண்டும்.


என்ன பேச போகின்றோம் என்பதினை முன் கூட்டியே தெரிந்து வைத்து அதனை பேச வேண்டும். பேச்சில் தடுமாற்றம் இல்லாமலும் தடங்கல் இல்லாமலும் பேச வேண்டும்.


உண்மையைப் பேச வேண்டும். எப்போதும் பேசும் போது யதார்த்தை உணர்ந்து நடைமுறை வாழக்கையில் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்திப் பேச வேண்டும்.


எதிரில் உள்ளவர்களை கவரக்கூடிய வகையில் பார்த்து பேச வேண்டும். கூட்டத்தில் எல்லோரையும் பார்த்து பேசுவது என்பது கடினம். அதனால் எதிரில் இருப்பவர்களில் ஒரு சிலரையாவது அடிக்கடி பார்த்துப் பேசுங்கள். அவர்களது முகபாவனையை வைத்து உங்கள் பேச்சு எப்படி உள்ளது என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ள முடியும். அதற்கேற்ப பேசவும் முடியும்.


எழுதி வைத்துப் படிக்கக்கூடாது. மேடையில் பேசும் போது எழுதி வைத்து வாசிப்பதைப் போல படிக்கக்கூடாது. அது மற்றவரையும் உங்களையும் சங்கடத்திற்குள் தள்ளி விடும். ஏனெனில் எழுதியதை படிக்கும் போது நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது வாய்பேச்சு வார்த்தைகளாக வராமல் எழுத்து வாக்கியங்களாக வரும். ஆகையால் அதில் கவனம் தேவை.


மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும். மேடையில் போய் நின்றதும் உங்கள் மூச்சை ஒரு முறை நன்றாக உள் இழுத்து மெதுவாக விட்டு விடுங்கள். அது உங்கள் பயத்தையும் பதற்றத்தையும் தணிக்கும்.


மேற் சொன்ன குறிப்புகளை நாம் மேற்கொண்டு பயிற்சியினை மேற்கொண்டால் நிச்சயம் நீங்களும் ஒரு மேடைப் பேச்சளார் ஆகலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.


இப்போது நடைமுறை வாழக்கைக்குகள் திரும்புவோம். பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் நாம் பேசியது உண்மையாக இருக்க வேண்டும். அதனை செயற்படுத்தியும் காட்ட வேண்டும் என்பதாகும். வெறுமனை பேசிவிட்டு போவதினால் பயன் இல்லை பேசியதை செயற்படுத்திக்காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக்கூடாது.


இப்போது மனிதர்கள் மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவது என்பது குறைவாக போய் விட்டது. மனிதர்கள் ஒருவருக்கொருவர்கள் மனம் விட்டு பேசினாலோ ஆயிரம் பிரச்சனைகள் தீர்ந்து விடும். அவரவர்கள் பேசாமல் இருக்க இருக்கத்தான் பிரச்சனைக்ள் அதிகரிக்கின்றது. மனைவி கணவனிடமும்இ தாய் தன் பிள்ளைகளிடமும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும்.


ஒருவரோடு பேசும் போது அன்பாகவும்இ மெதுவாகவும் பேசுங்கள். அவரிடமுள்ள நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக்காட்டி பேசுங்கள். அவரது குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டி பேசாமல் நீங்கள் இருந்தால் நிச்சயம் நன்றாக வருவீர்கள். உங்களிடம் நிறையத் திறமைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் முன்னேற இடம் உண்டு என உங்களுக்குள்ளே பேசிப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு அவர் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். முன்பை விட உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாக வைத்திருப்பார். இது தான் உங்கள் பேச்சின் சக்தி.


தூரத்தில் இருக்கும் ஒருவரை பார்த்து “எப்படி செளக்கியமா?” என தொண்டை கிழிய கத்திக் கேட்பதற்கும் அவர் அருகே சென்று கையையோஇ தலையையோ தடவிக் கொடுத்தவாறு “எப்படி செளக்கியமா இருக்கின்றீர்களா?” என மெதுவான குரலில் கேட்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. இந்த இனிமையான பேச்சின் அன்பைத்தான் எல்லோரும் உங்களிடம் எதிர் பார்ப்பது.


எனவேஇ பேசுங்கள் சக மனிதனோடு மனம் விட்டு இனிமையாக பேசுங்கள். உங்களை சூழ்ந்திருக்கும் மனச்சுமைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக கலந்து பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள். அதுவே பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். உங்கள் வாழ்க்கையினை பற்றி பேசுங்கள். உங்களுக்கு நல் வழிக்காட்டும் எதிர் கால திட்டத்தினை பற்றி பேசுங்கள். அது உங்களை நல் வழிப்படுத்தும். அன்பினை பற்றி பேசுங்கள். அது உங்கள் உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்தும். எப்போதும் நல்லதை பற்றி பேசுங்கள் அது உங்களுக்கு நல்லதாக அமையும்.


“ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும்இ தீமையில் தான் செய்தவற்றையம் தன முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்) நாளில்இ அதுஇ தான் செய்தவைகளுககும்இ தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும்இ அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டணையை நினைவு கூறுமாறு) உங்களை எச்சாிகை செய்கிறான்இ இன்னும் அல்லாஹ் (தன்) அடியார்கள் மிது மிக்க இரக்கமுடையவன்’’.


அல்குர்ஆன் 3:30


மனித குலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்இ “உங்களைப் போன்று வேகமாக பேசிக்கொண்டு செல்லமாட்டார்கள். அவர்கள் எவ்வாறு பேசுவார்களெனில்இ எண்ணிக்கணக்கிடக்கூடியவர்இ அப்பேச்சை எண்ணினால் அது இத்தனைச் சொற்களைக் கொண்டதுதான் என்று வரையறுத்திட முடியும்.


அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரிஇ முஸ்லிம்இ மிஷ்காத்


அண்ணலாரின் நாவு ஆபாச வார்த்தை முழங்குவதை விட்டும் ஏசிப் பேசவதைவிட்டும் தூய்மையாக இருந்தது. கோபம் கொண்டு கண்டிக்கும் சந்தர்ப்பத்தில் “இவருக்கு என்ன நேர்ந்துவிட்டது. இவரது நெற்றியில் மண்படட்டும் என்று மட்டும் கூறுவார்கள். அத்துடன் அண்ணலார் அவர்கள் கடுகடுப்பானவராகவோஇ சதா முகத்தை “உம்” என்று வைத்துக் கொண்டவராகவோ இருந்ததில்லை. பேச்சுக்கு பேச்சு நாற்புறமும் எதிரொலி்க்கும் வகையில் ஓசையுடன் சிரிப்பவராகவும் இருந்ததில்லை. மாறாகஇ இதில் நடுத்தரமான நடத்தையை மேற்கொண்டிருந்தார்கள்.






நன்றி : இலங்கை வார இதழ் – வீர கேசரி


தொகுப்பு : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணம்.

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணம்.

ஐக்கிய அமீரகத்தின் வட மாகாணங்களில் ஒன்றாகவும், அமீரக கடல் மார்க்கத்தின் முதல் நுழைவு வாயிலாகவும், துபை நகரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் துரத்தில் இருக்கும் ஃபுஜைரா தற்போது அதிகமதிகமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.

மலைகள் சூழ்ந்த ஒரு ரம்மியமான இயற்கையான அழகு சூழ்நிலையில் ஃபுஜைரா மாகாணம் இருப்பதால் அதனை காண பல வெளிநாட்டு பயணிகள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். துபை நகருக்கு வரும் பல வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஃபுஜைரா செல்ல வேண்டும் என்று விரும்புவதால், அங்கிருந்து கனரக வாகனங்களிலும் மற்றும் மென்ரக வாகனங்களிலும் இங்கு வந்து போகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வரும் போதே மலைகள் சூழந்த ஃபுஜைராவின் அழகினை ரசித்துக்கொண்டே வருகிறார்கள்.

இங்குள்ள துறைமுகத்திற்கு வெளி நாட்டு பயணி கப்பல்கள் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அதிகம் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதினை துறைமுக பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன் இத்துறைமுகத்தின் அனைத்து பணிகளையும் செய்யும் பொறுப்பினை துபை துறைமுக பொறுப்பு கழகம் (Dubai Port Authority) பல ஆண்டுகள் என்ற ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகையால் கப்பல் வாணிபங்களும் அதிகரித்து விட்டது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஃபுஜைரா நகரின் மைய பகுதியில் பழங்கால அருட்காட்சியகமும் ஒன்றும், அதனை சுற்றி பழங்கால கோட்டை ஒன்றும் உள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் அரேபியர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய அரியபொருட்களும் மற்றும் அதனை பற்றிய தகவல்களும் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல் அடங்கிய கையடக்க நூல் இங்கு உள்ளது. இந்த இடமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது.

ஃபுஜைரா - கொர்பகான் - திப்பா செல்லும் சாலை வழியில் "அல்பித்யா" என்ற கடற்கரை கிராமத்தில் கி.பி. 1446 வருடம் கட்டப்பட்ட புராதன பள்ளிவாசல் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளக்குகிறது. இந்த பள்ளி வாசல் கட்டப்பட்டு ஏறக்குறைய 562 வருடங்கள் ஆகி விட்டது என்பதினை அங்குள்ள துபை அரசாங்கத்தின் அகழ்வாராய்ச்சி கல்வெட்டானது நமக்கு தெரிகிறது. இப்பள்ளியினை அக்கிராமத்தில் வாழ்ந்த மீனவர்களின் முஸ்லிம் தலைவர் ஒருவர் தொழுகைக்காக கட்டியதாக இக்கிராமத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் தொழுவதற்கும் தனியாக வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதர மதத்தினர் அந்த பள்ளியின் புற பகுதியினை சுற்றி பார்க்கலாம். ஆனால் தொழுகை நடக்கும் இடத்திற்கு அனுமதி அளிப்பதில்லை. பள்ளியின் மற்றொரு புறத்தில் பழைமையான கோட்டையும் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் ஏறி, அதன் துளைகள் வழியாக நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கலாம். அப்படி நாம் பார்க்கும் போது ஒரு பக்கம் கடலும், மற்றொரு பக்கம் மலைகளும், இன்னொரு பக்கம் இயற்கை நிலப்பரப்புகளையும் நாம் அழகாக ரசிக்கலாம். மற்றும் அதே பகுதியில் மலை அடிவாரத்திற்கு கீழ் நீரருவி ஒன்றும் மிக அழகாக உள்ளது. மலைக்கு அடியே இருப்பதால் அந்நீரானது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பல வெளிநாட்டினர் மற:றம் சுற்றுலா பயணிகள் வந்து அங்கு குளித்து விட்டு செல்கிறார்கள்.

அமீரகத்தின் மற்ற பகுதியிலிருந்து, கொர்பகான் கடற்கரை பகுதிக்கு மாலை நேரங்களில் பல குடும்பங்கள் சாப்பாடு செய்து சாப்பிடுவதற்கு வசதியாக பல சமையல் பொருட்களை கொண்டு வந்து விடுவார்கள். இவர்கள் இல்லம் திரும்பி செல்வதற்கு இரவு குறைந்தது 11 மணி ஆகிவிடும். அது வரை அவர்கள் அங்கு தான் குடும்பத்துடன் தங்கி ஜாலியாக இருப்பார்கள். கொர்பகான் பகுதியானது ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் கல்பா என்ற கடற்கரை பகுதியிலும் பல சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள். அதுவும் ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருந்தாலும் இந்த சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் ஃபுஜைராவினை மாகாணத்தினை கடந்து தான் செல்ல வேண்டும். கல்பா - ஷார்ஜா தரை மார்க்கமாக செல்லும் பல பயணிகள் 30 கிலோ மீட்டர் சுரங்க வழி சாலைப்பாதையினையும் பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள்.

ஃபுஜைரா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் காளை மாட்டு சண்டையானது மிகவும் பிரபலமானது. இங்குள்ள அரேபியர்கள் வளர்க்கும் காளை மாட்டினை இங்கு கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேர்ப்பார்கள். எந்த காளை மாடு பலம் வாய்ந்தாக இருக்கும் என்பதினை காளை மாட்டு சண்டையில் தெரிந்து விடும். அந்த மாட்டினை அதிகம் விலை கொடுத்து வாங்குவதற்கு மற்ற அரேபியர்கள் போட்டி போடுவார்கள். இதனை காண மற்ற நாடுகளிலிருந்து குறிப்பாக ஓமன், மஸ்கட் இங்கிருந்து பல பேர்கள் வருவார்கள். இதனை ஒலி ஒளி படம் எடுக்க பல வெளி நாட்டினர் வந்து விடுவார்கள்.

ஃபுஜைரா நகரானது, தற்போது துபை நகரில் கட்டப்பாட்டு வரும் பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்டங்களை போலவும், பல வசதிகளை கொண்ட வணிக வளாகங்களையும், உணவு விடுதிகளையும் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதினை பற்றி இங்குள்ளவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தகவல் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

இளையான்குடி டூ திண்டுக்க‌ல் : ஒரு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு ( 05 மே 2009 )

இளையான்குடி டூ திண்டுக்க‌ல் : ஒரு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு ( 05 மே 2009 )

திண்டுக்க‌ல் ந‌க‌ர‌ அனைத்து ப‌ள்ளிவாச‌ல்க‌ளின் முத்த‌வ‌ல்லிக‌ள் & முக்கிய‌ஸ்த‌ர்க‌ள் கூட்ட‌மைப்பு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழ‌மை காலை 9 ம‌ணி முத‌ல் ப‌க‌ல் 1 ம‌ணி வ‌ரை திண்டுக்க‌ல் முஹ‌ம்ம‌தியாபுர‌ம் ஈதுஹா ம‌ஹாலில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மேற்ப‌டிப்பு, க‌ல்வி உத‌வித்தொகை ம‌ற்றும் வேலைவாய்ப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆலோச‌னையினை இளையான்குடி டாக்ட‌ர் சாகிர் உசேன் க‌ல்லூரி வில‌ங்கிய‌ல் துறை பேராசிரிய‌ர் முனைவ‌ர் எஸ். ஆபிதீன் வ‌ழ‌ங்க‌ இருக்கிறார்.

இந்நிக‌ழ்வில் மாணாக்க‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பெற்றோருட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பெண்க‌ளுக்கும், மாண‌விய‌ருக்கும் த‌னி இட‌வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேல‌திக‌ விப‌ரங்க‌ளுக்கு : 99768 58392 / 98940 57709

இந்நிக‌ழ்ச்சியினை த‌ங்க‌ள‌து ஊரிலும் ந‌ட‌த்த‌ விரும்புவோர் முனைவ‌ர் எஸ். ஆபிதீனை 99658 92706 எனும் அலைபேசியிலோ அல்ல‌து abideen222270@yahoo.com என்ற மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

த‌கவ‌ல் உத‌வி :
முனைவ‌ர் எஸ். ஆபிதீன் 99658 92706 ( abideen222270@yahoo.com )
திண்டுக்க‌ல் ஜாப‌ர் சாதிக் ( jabarsathik@yahoo.co.in )

கவிதை : கலைமறை முஹம்மதென்னும்.....

கவிதை

கலைமறை முஹம்மதென்னும்

காரணமே – காணுலகு!

( அமுதகவி அரசு அபிவைத்தாஜ் )



கலைமறை முஹம்மதென்னும்

காரணம் இல்லையாகில்

உலகுவிண் இரவி திங்கள்

ஒளிர் வுடுக்கணம் சுவர்க்கம்

மலை கடல் நதி பாதாளம்

வானவர் முதலாய் உம்மை

நிலையுற படைப்ப தில்லை

என் இறை நிகழ்த்தினானே…!



கலைமறை முஹம்ம தெங்கள்

காரணம் வந்ததாலே!

நிலையுற உலகம் யாவும்

நிலைத்துமே செழித்ததுவே!

பெருமானார் பிறப்பின் நோக்கம்

பெரும் பயன் தந்ததாலே!

அருமையாய் அகிலம் எல்லாம்

அற்புதம் கண்டதாமே!



பல்லாயிரம் நபிகள் வந்தும்

பயன் ஏதும் கிடைக்கவில்லை

எல்லோரும் இறைவன் தூதர்

என்றாலும் வெற்றி இல்லை!

வல்லோனின் இறுதித் தூதர்

வள்ளல் நபி வருகையாலே

தொல்லுலகின் துயரம் நீங்கி

தொடர்மகிழ் கிடைத்தது அன்றோ!



உலகத்தின் உயிர்கள் யாவும்

உத்தமரின் வருகையினாலே

நலம் பெற்று மகிழ்ந்ததிங்கே

வளம் தந்த வாகையினாலே!

ஆலத்தின் அருட்கொடையான

அனைவோர்க்கும் பொதுநபியாலே!

சீலத்தின் செழிப்பு எல்லாம்

காலத்தால் கனிந்தது அன்றோ!