Monday, December 8, 2008

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்

சென்னை, டிச.8: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு சிறப்பு மாதிரி நேர்காணலை ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் 348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சிறப்பு மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 97878 02927, 94442 19712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது

ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது


பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.

அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.

தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=

துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா

துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா

துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வியாழக்கிழமை "மருளில்லா மலர்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது

கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கியச் செல்வர் சீனாதானா ( செய்யது எம். அப்துல் காதிர் ) தலைமை தாங்கினார். துவக்கமாக சபியுல்லா ஜமாலி இறைவசனங்களை ஓதினார். டாக்டர் டி நடராஜன் மற்றும் எஃப்.எம். அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.

'மருளில்லா மலர்கள்' நூலை ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் பொறியாளர் எம்.ஜே.முஹம்மது இக்பால் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஞானப்பாடல்களை தீன் இசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுதீன், மதுக்கூர் முஹம்மது தாவுது ஆகியோர் பாடினர்.

அமீரத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர் அப்துல் கதீம், வானலை வளர்தமிழ் ஜியாவுதீன், தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் குத்தாலம் அஷரப் அலி, சங்கமம் தொலைக்காட்சி இயக்குனர் கலையன்பன், கவிமதி, பட்டணம் மணி,காரை சர்புதீன்,ஆல்பட் பெர்னாட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கவிஞர்கள் இஷாக், நண்பன்,முத்துக்குமரன், துபை கிரஸண்ட் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கலீபுல்லாஹ், ஊடகத்துறை செய்தியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி

சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி


கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலமாக 6 சதவீத வட்டியில் ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் வாகனம் வாங்கலாம்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி, வருமான வரம்பு கிடையாது. கடன் பெறுவோர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.

பங்குத்தொகையாக ரூ.5,000, விளிம்புத்தொகையாக ஆட்டோ வாங்கும் தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இரு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பிணையம் அளிக்கலாம். மாதம் ரூ.200 வீதம் 4 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். டாம்கோ அனுமதிக்கும் விலையைவிட ஆட்டோவின் விலை, சந்தையில் கூடுதலாக இருந்தால் வித்தியாசத் தொகையை விண்ணப்பதாரரே செலுத்த வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய, மேலாளர், மாவட்ட தொழில்மையம், மணிக்கூண்டு, டவுன்ஹால் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


குறிப்பு :

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டோ வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட தொழில்மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நம்ம ஊரு செய்தி - தற்போது இணையதளத்தில்

நம்ம ஊரு செய்தி - தற்போது இணையதளத்தில்

வைர வணிகர் முனைவர் T.S.R.அய்யூப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மயிலாடுதுறை சுற்று வட்டார செய்திகளை சுமந்து வரும் நம்ம ஊரு செய்தி மாத இதழ் - தற்போது இணையதளத்தில்



http://www.nammaooruseythi.com/

YAHIND.COM

YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET

YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information.



Visit www.yahind.com





nri123.com - Information at your finger tips

கலைமாமணி குல் முஹம்மது

கலைமாமணி குல் முஹம்மது

www.hajigulmohamed.com

www.hajigulmohamed.com/mp3

ABOUT ‘’ KALAI MAMANI’’ ‘’ INNISAICHUDAR’’ HAJI E.GUL MOHAMED.
HE WAS BORN ON 14.02.1946 AT NAGORE. PRESENTLY LIVING AT 25,IST CROSS , GANAPATHY NAGAR, KARAIKAL . PONDICHERY STATE. HE HAS BEEN PERFORMED MORE THAN 2000 STAGE PROGRAMMES ALL OVER THE WORLD .IN SINGAPORE , MALASIA, SAUDI ARABIA , LAKSADWEEP, PONDY, TAMIL NADU, KARNATAKA, KERALA.ETC., HE HAS SUNG NEARLY 4000 SONGS AROUND THE WORLD.




HE IS NOT ONLY ISLAMIC DEVOTIONAL SINGER, BUT ALSO HE SUNGS NATIONAL INTEGRATED, REVELUTIONAL, & MAHA KAVI BARATHIYAR SONGS TO ENTERTINE HIS FANS. EX., PRESIDENT. OF INDIA MR A.P.J.ABDUL KALAM & PONDICHERRY CHIF MINISTER. N RANGA SAMI.HAS SEND THEIR WISHES BY APPRICIATING HIS SONG AND FOR HIS FUTURE GROWTH IN HIS WAY. AND MANY WISHES ARE BEEN SEND BY MINISTERS, HIGHER OFFICIAL,SPEAKERS AUTHERS. POETS, AND INDIAN POLITICAL LEADERS. AND MANY MAGAZINES & NEWSPAPERS HAS HONOURED HIM WITH MANY SPECIAL ARTICLES AND WISHES FOR HIS SEVERAL ATAGE PROGRAMMES AND HIS CD SONGS RELEASES. HE HIS PROUDLY SAYS THAT HIS MASTER IN KARNATIC NAGORE DURGA SANGEETHA VIDVAN MR.S.M.A. KADER. AND HE FOLLOWS HIMAND SINGING FROM PAST 40 YEARS AND HE SAYS THAT HE IS DEDICATING REST OF HIS FUTURE FOR DEVOTIONAL MUSIC OF ISLAMIC.






KALAI MAMANI INNISAICHUDAR HAJI E.GUL MOHAMED
No:25,1ST CROSS ,
GANAPATHY NAGAR,
KARAIKAL .
PONDICHERY STATE.

கடவுளுக்கு ஒரு கடிதம்

கடவுளுக்கு ஒரு கடிதம்

நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
shaickkalam@yahoo.com