Dear Brothers and Sisters
First of all my greetings to everyone...and their family members.
Everybody knows about me without introduction myself, I want to say few words about me and my involvement to this society. I have completed 28 years in UAE and I have been deeply involved Social Service activities in local organization since 1993 which was very much impressed to me. My involvement is entirely different from others . Many Social Service organization have been taking care of their own people society but my intention is to contribute to this society and pay back whatever the country has given us. A new authority under the Dubai Govt was recently set up to act as an umbrella for social service organizations and was also talked with promoting national Identity and empowering UAE National. Their objective is to promote national identity, to ensure that the UAE National is distinguishable and noticeable.
Herewith I am forwarding the following message from His Highness Sheikh Mohamed Bin Rashid Al Maktoum vision
It is far easier to build financial capital than it is to build intellectual, psychological and moral capital. Building a road or a bridge may take a year or two, but developing people takes a lifetime. Social development, in all its aspects, requires distinct programs, outstanding performance, patience and special criteria for measurement and evaluation.”
With these words, His Highness Sheikh Mohammed Bin Rashid Al Maktoum launched the Dubai Strategic Plan (DSP 2015), outlining his vision for Dubai as an inspiring model of community well-being and national identity.
I am taking s Statistical survey particular of this task. In this part I would request you all please forward your personal opinion "what we can serve to this society and what the country people are expecting us etc.." Your answer has to reach to me on or before 5th April 2009. I have to give the survey report to the Authority at teh earliest.
Your valuable points will elevate and strengthening the National Identity development.
My e.mail ID:saithree@hotmail.com
With Prayers, Love and Good wishes to all
Ilangovan
0506759789
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label முதுகுளத்தூர். Show all posts
Showing posts with label முதுகுளத்தூர். Show all posts
Saturday, March 28, 2009
Friday, December 26, 2008
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
www.mudukulathur.com
www.muduvaivision.com
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 26 டிசம்பர் 2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் துஆ ஓதி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ஏ.ஷாஜஹான், சென்னை அல் ஹரமைன் அறக்கட்டளை தலைவர் முஹம்மது ரபீக் ஹாஜியார், பொறியாளர்கள் ருக்னுதீன்,தேரிருவேலி காஜா நஜுமுதீன், பனைக்குளம் ஜாஹிர் ஹுசைன் குடும்பத்தினர். திடல் ஜமாஅத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் உமர் ஜஃபர் மன்பயீ, திடல் முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால் நாசர், பெரியபள்ளிவாசல் முன்னாள் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான எம்.அன்வர், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்குட்பட்ட இவ்விடத்தில் இப்புதிய பள்ளிவாசல் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அல் ஹரமைன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பள்ளி கட்டப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாவர். இவர்களது குழந்தைகள் மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வதற்கும் இப்பள்ளிவாசல் உதவியாக இருக்கும்.
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
www.mudukulathur.com
www.muduvaivision.com
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 26 டிசம்பர் 2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் துஆ ஓதி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ஏ.ஷாஜஹான், சென்னை அல் ஹரமைன் அறக்கட்டளை தலைவர் முஹம்மது ரபீக் ஹாஜியார், பொறியாளர்கள் ருக்னுதீன்,தேரிருவேலி காஜா நஜுமுதீன், பனைக்குளம் ஜாஹிர் ஹுசைன் குடும்பத்தினர். திடல் ஜமாஅத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் உமர் ஜஃபர் மன்பயீ, திடல் முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால் நாசர், பெரியபள்ளிவாசல் முன்னாள் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான எம்.அன்வர், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்குட்பட்ட இவ்விடத்தில் இப்புதிய பள்ளிவாசல் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அல் ஹரமைன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பள்ளி கட்டப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாவர். இவர்களது குழந்தைகள் மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வதற்கும் இப்பள்ளிவாசல் உதவியாக இருக்கும்.
Thursday, October 23, 2008
முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு
முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு
முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/1024-green-blood-book-release-function-in-mudukulathur.html
http://www.muduvaivision.com/data/mnews.asp?id=78
எதிர்வரும் ( 25 அக்டோபர் ) சனிக்கிழமை மாலை இரண்டு மணியளவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில்
பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற நமது மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா
மடிக்கணினி ( லேப்டாப் ) இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு வழங்குதல்
'பச்சை இரத்தம்' ( இந்திய விடுதலைப்போரில் பங்கேற்ற இந்திய முஸ்லிம்கள் பற்றியது ) நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது.
இந்நூல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி பேராசிரியர்கள் ஆபிதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.
இவர் ஏற்கனவே என்ன படிக்கலாம் ? , ராமர் பாலமா - ஆதாம் பாலமா ? என்பன போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஜில்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி,முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபாபுரம் பள்ளிவாசல் தலைவர் செய்யது இப்ராஹிம், கல்விக்குழுத்தலைவர் திவான் முஹம்மது, மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால்நாசர், தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது, நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எம்.எஸ். லியாக்கத் அலி, வரிசை முஹம்மது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என். காதர்ஷா, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ, டாக்டர் குலாம், டாக்டர் ஷேக் முகைதீன் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
லெப்டினட் பேராசிரியர் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்துகிறார். பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம் ஆய்வுரை நிகழ்த்துகிறார்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், இஸ்லாமிக் பயிற்சி மைய முதல்வர் ஏ. சுல்தான் அலாவுதீன் சேட் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு 94 880 23 199 அல்லது muduvaihidayath@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/1024-green-blood-book-release-function-in-mudukulathur.html
http://www.muduvaivision.com/data/mnews.asp?id=78
எதிர்வரும் ( 25 அக்டோபர் ) சனிக்கிழமை மாலை இரண்டு மணியளவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில்
பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற நமது மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா
மடிக்கணினி ( லேப்டாப் ) இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு வழங்குதல்
'பச்சை இரத்தம்' ( இந்திய விடுதலைப்போரில் பங்கேற்ற இந்திய முஸ்லிம்கள் பற்றியது ) நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது.
இந்நூல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி பேராசிரியர்கள் ஆபிதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.
இவர் ஏற்கனவே என்ன படிக்கலாம் ? , ராமர் பாலமா - ஆதாம் பாலமா ? என்பன போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஜில்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி,முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபாபுரம் பள்ளிவாசல் தலைவர் செய்யது இப்ராஹிம், கல்விக்குழுத்தலைவர் திவான் முஹம்மது, மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால்நாசர், தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது, நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எம்.எஸ். லியாக்கத் அலி, வரிசை முஹம்மது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என். காதர்ஷா, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ, டாக்டர் குலாம், டாக்டர் ஷேக் முகைதீன் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
லெப்டினட் பேராசிரியர் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்துகிறார். பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம் ஆய்வுரை நிகழ்த்துகிறார்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், இஸ்லாமிக் பயிற்சி மைய முதல்வர் ஏ. சுல்தான் அலாவுதீன் சேட் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு 94 880 23 199 அல்லது muduvaihidayath@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Thursday, September 18, 2008
முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்
முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்
www.muduvaivision.com
www.muduvaivision.com
Sunday, July 20, 2008
முதுகுளத்தூர் முகவரிகள்
'ஹஜ்ரத் சேட் ஆலிம் சாஹிப்'
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495
muduvaisaitalim@gmail.com
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495
muduvaisaitalim@gmail.com
Sunday, July 13, 2008
டாக்டர் ஹாஜி எஸ் அப்துல் காதர்
http://drhajeesabdulkader.blogspot.com
Regards,
Fakhrudeen Ali Ahamed
Installation Manager - ESC & MW
New Doha International Airport Project
THYSSENKRUPP ELEVATORS - QATAR
P.O.Box 47405, DOHA, QATAR.
Mobile:+974 6738227
Fax:+974 4341949
email: fakhrudeen.ali@thyssenkrupp.com
Regards,
Fakhrudeen Ali Ahamed
Installation Manager - ESC & MW
New Doha International Airport Project
THYSSENKRUPP ELEVATORS - QATAR
P.O.Box 47405, DOHA, QATAR.
Mobile:+974 6738227
Fax:+974 4341949
email: fakhrudeen.ali@thyssenkrupp.com
Labels:
அப்துல் காதர்,
நல்லாசிரியர்,
முதுகுளத்தூர்
Saturday, April 19, 2008
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு:
ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888
நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு:
ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888
நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sunday, March 30, 2008
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்
சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்
சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem
Wednesday, February 20, 2008
திருமண வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி .............
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெரு மர்ஹும் கே.ஏ. ஹபிபுல்லா பேரனும், ஆசிரியர் கே.ஹெச். முஹம்மது ஹுசைன் அவர்களது புதல்வருமான சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் எம்.அப்துல் காதர் ( எம்.பி.ஏ.), மணமகனுக்கு எம். நசீர் முஹம்மது அவர்களது குமாரத்திக்கும் திருமணம் ஹிஜிரி 1429 ஸபர் பிறை 17 ( 25 பிப்ரவரி 2008 ) திங்கட்கிழமை காலை நிக்காஹ் பெரிய பள்ளிவாசலில் காலை பத்து மணிக்கு நடைபெற இருக்கிறது.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்தி துஆச் செய்கிறது.
தொடர்பு எண்கள் : 04576 - 222 658 / 94423 20099 / 98 948 78931
Wednesday, February 13, 2008
துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது
துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.
பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.
ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.
அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.
டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.
பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.
நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008
Sunday, February 3, 2008
எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட அமீரகத்தில் ஐந்தாண்டு பணிபுரிய வேண்டும் :
எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட அமீரகத்தில் ஐந்தாண்டு பணிபுரிய வேண்டும் :
துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பு விழாவில் தமிழக பிரமுகர் பேச்சு
அமீரக தமிழர்கள் அமைப்பு, துபாய்,அஜ்மான் மற்றும் தமிழ்த்தேர் அமைப்புகள் இணைந்து தமிழகத்தின் பிரபல மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான், டாக்டர் ஏ. நஸிருல் அமீன் ஆகியோருக்கு வரவேற்பு மற்றும் மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சி துபாய் கராமா சிவ் ஸ்டார் பவன் உண(ர்)வகத்தில் 01.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அஜ்மான் அ.சு. மூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்த்தேர் அமைப்பின் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். துபாய் அமீரக தமிழர்கள் அமைபின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈடிஏ அஸ்கான் தொழிலாளர் முகாம் நிர்வாகி சம்சுதீன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் தனது உரையில் எளிமையான நிலையில் வாழ்ந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் இலக்குடன் செயல்பட்டதால் மிக உயர்ந்த நிலையை அடைந்து கோடானுகோடி மக்களின் இதயங்கவர்ந்தவராக மாறினார். உழைப்பில் உண்மை இருக்குமானால் உயர்நிலையை அடையலாம் என்பது தனது அமீரக சுற்றுப்பயணத்தில் கண்ட அனுபவம் என்றார் முத்தாய்ப்பாக.
மதுக்கூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தண்டபாணி தனது உரையில் அமீரகத்தில் மன்னராட்சி இருந்தாலும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருவது தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவில் வளங்கள் பல இருந்தும் ஜனநாயக நடைமுறை நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் எம்.பி, எம்.எல்.ஏக்கு போட்டியிட வேண்டுமென்றால் அமீரகத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற தகுதியைக் கொண்டவராக இருத்தல் வேண்டும் எனும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பேன் என்றார். ( இவ்வாறு அரங்கமே அதிர்ந்தது )
இந்தியன் முஸ்லிம் சங்கத்தின் ( ஈமான் ) துணைத்தலைவர் தனது உரையில் தமிழ் மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ்க் குடும்பங்களில் பட்டதாரிகளே இல்லை எனும் நிலையை மாற்ற வேண்டும் என்றார். இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் மற்றும் தியாகத்திருநாள் இவையிரண்டும் உணர்த்தும் படிப்பினைகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் அஷ்ரப் அலி, தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ. பட்டணம் மணி, அமீரகக் கவிஞர்கள் பேரவையின் இசாக்,
உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
ஏற்புரை நிகழ்த்திய சென்னை ஏ.ஜே. அறக்கட்டளைத் தலைவரும், பிரபல செக்ஸாலஜி நிபுணருமான டாக்டர் ஏ.அமீர்ஜஹான் அவர்கள் தனது உரையில் தமிழ் மகன் உலகின் எப்பகுதிக்கு சென்றாலும் தாயகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, தமிழ் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறான். தமிழ் மகன் பணம் மட்டுமலாது சிறந்த குணம் கொண்டவராக இருந்து வருகிறான். அறிவுப்பாலம் இட்ட அப்துல் கலாமை நினைவு கூர்ந்த அவர் தமிழனின் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
சென்னை ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வியை ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சென்னை அன்புப் பாலம் அமைப்பின் வெளிநாடு வாழ் இந்தியர்க்கு சிறப்பான சேவையாற்றியமைக்கான விருது பெற்ற ஏ.எஸ். மூர்த்தி, சாதனையாளர் விருது பெற்ற கோவிந்தராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
ரபிக், ஜியாவுதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
மருத்துவம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாரடைப்பு ஏற்படும் போது தடுக்க வேண்டிய வழிமுறைகள், பாலியல் குறித்த சந்தேகங்கள், நடைப்பயிற்சியின் அவசியம், தினமும் குடிக்க வேண்டிய குடிநீரின் குறைந்த பட்ச அளவு உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டது.
தமிழ்த்தேர் அமைப்பின் கந்தநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவிமதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சைபுதீன், தமிழ்த்தேர், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆடிட்டர் அமீர் சுல்தான்,பொதுச்செயலாளர் கே.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் பொருளாளர் ஏ.அஹ்மது இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tuesday, January 29, 2008
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.
பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.
சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
தகவல் உதவி :
ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.
பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.
சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
தகவல் உதவி :
ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்
Labels:
பரிசளிப்பு விழா,
பள்ளி,
பள்ளிவாசல்,
முதுகுளத்தூர்
Saturday, January 26, 2008
முதுகுளத்தூரில் குடியரசு தின விழா
Subscribe to:
Posts (Atom)
