Sunday, February 24, 2008

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

காயல் பிறைக்கொடியான் - அவர்
இறைவனின் நல்லடியான் !

அவருடைய தொகுப்புகள் அனைத்தும்
சமுதாயத்திற்கு வகுப்புகள் !

அவருடைய வார்த்தைகள் அவற்றின்
வார்ப்புகள் !

அவர் சிந்தனையில் கருத்துக்கள்
கரு பிடிக்கும் ! அவைகள்
சமூகத்தின் துரு எடுக்கும் !

கவிஞர் மஹ்மூது ஹுசைன் - அவர்
இன்னும் ஒரு தோண்டப்படாத சுரங்கம்
நல்ல பல கவிதைகள் அதில் உறங்கும் !

அவருடைய ஆக்கங்கள் தனிவுடமை அல்ல
அவைகள் சமூகத்தின் பொதுவுடமை !

தமதாதாயக் கவிஞர்கள் வாழும் இவ்வுலகில்
சமுதாதாயக் கவிஞர் உம் போல் சிலரே !

உம் கவிதைகள் வெளிவுலகிற்கு வராத நிலையிலேயே
நீர் விண்ணுலகை அடைந்துவிட்டீர் !

சுமக்க முடியாத ஒரு கவிதைப் பெட்டகம் - இங்கு
இறக்கி வைக்கப்பட்டுள்ளது ! ( இன்னாலில்லாஹி .......... )

ஒரு கவிதை மரணம் அடைந்தும்
மரணமே கவிதையாய் வாழ்கிறது !

------------- காயல் யு. அஹமது சுலைமான் , துபாய்

காயல் பிறைக்கொடியான் மஹ்மூது ஹுசைன் மறைவையடுத்து எழுந்த கவிதை