Showing posts with label சாந்தி. Show all posts
Showing posts with label சாந்தி. Show all posts

Saturday, February 21, 2009

சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!

அன்பு சகோதரர் விடுதலைவீரபத்திரன் அவர்களுக்கு,

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!! இலங்கையிலும் நிலவட்டுமாக!!!

நான் அனுப்பிய கட்டுரைகளுக்கு பதில் அனுப்பி இருந்தீர்கள். தாங்கள் எமக்கு அனுப்பிய அறிவுரைகளையும் ஏற்று கொள்கிறேன். நான் அனுப்பிய, திரட்டிய தகவல்கள் அனைத்தும் முஸ்லீம் அல்லாத சகோதரர்கள் அதுவும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் இணைய தளங்களிளிர்ந்து திரட்டியது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் தாங்கள் மதங்களை தூக்கி எறிந்துவிட்டு நல்ல மனிதர்களாக இருப்போம் என்று சொல்லி இருக்கிறிர்கள். அன்பு சகோதரரே! என் பள்ளி வாழ்விலும், கல்லூரி வாழ்விலும் சரி என்னுடன் படித்தவர்களுக்கும், இப்பொழுது என்னுடன் ஏன் என் அறையில் தங்கி இருக்கும் இந்து சகோதரார் ராஜாராமன் அவர்களுக்கும் என் நடவடிக்கைகள் பற்றி நன்றாக தெரியும்.

நான் எனது வீட்டு நூலக்கதிலே பகவத் கீதை, பைபிள். குரான், அம்பேத்கார் அவர்களின் எழுத்தும் சொல்லும், தந்தை பெரியார் அவர்களின் ஏராளமான புத்தகங்கள், சுவாமி விவேகனந்தரின் புத்தகங்கள், மகாத்மா காந்தி அவர்களின் புத்தகங்கள் ஏன் ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் புத்தகங்களை படித்தும் இருகிறேன். அவற்றை பாதுகாப்பாகவும் வைத்தும் இருகிறேன். என்னுடைய கணிப்பொறியில் காஞ்சி பெரியவர் அவர்களின் தெய்வத்தின் குரலும் என் வேலை நேரத்தில் ஓய்வு கிடைக்கும் போது படித்து கொண்டு இருகிறேன். நீங்கள் யாரை பார்த்து உங்கள் சுட்டு விரலை நீட்டுகிறிர்கள். மேலும் தாங்கள் நான் அனுப்பிய கட்டுரையின் அடிப்படை தெரியாமல் எமக்கு பதில் அனுப்பி உள்ளிர்கள் என்பது உண்மை. மேலும் என்னுடன் விவாதிக்க தயாராக இருந்தால் நான் எப்பொழுதும் தயாராகவே இருகிறேன். மின்னஞ்சலிலே தொடர்பு கொள்ளலாம்.

விடுதலைபுலிகள் தமிழ் நாட்டில் மட்டும் ஏதோ தடை செய்யப்பட்டு இருப்பதுபோல் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு வளைகுடா நாடுகளை தவிர எங்கு எல்லாம் தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அனுப்பி வைக்கிறேன்.

(தமிழ் நாட்டிலே நடக்கும் போராட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை மட்டுமே)


gazzali

To: gazzalie@yahoo.com
Date: Saturday, February 21, 2009, 5:06 AM





---------- Forwarded message ----------
From: விடுதலைவீரபத்திரன்
Date: 2009/2/21
Subject: வ‌ண‌க்க‌ம்.
To: Veera Pathiran



வ‌ண‌க்க‌ம். இய‌க்குன‌ர் சீமான் ப‌ற்றி நீங்க‌ள் அனுப்பிய‌ மெயில் பாடித்தேன்.விடுத‌லைபுலிக‌ள் இய‌க்க‌ம் த‌மிழ்நாட்டில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ இய‌க்க‌ம் தான். ஆனால் அவ‌ர்க‌ள் பாகிதான் தீவிர‌வாதிக‌ள் போல‌ இந்திய‌வுக்குள் வ‌ந்து தாக்குத‌ல் ந‌ட‌த்த‌வில்லை. த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌னிநாடு வேண்டும் என்றுதான் போர‌டிக்கொண்டு இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் யாரும் அப்பாவி சிங்க‌ளவர்களை கொல்ல‌வில்லை.பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்க‌வில்லை. ஆனால் சிங்க‌ள‌வர்க‌ள் தான் எல்லாம் செய்கிறார்க‌ள்.

எங்கோ இருக்கும் காசா மீது குண்டு போட‌ப்ப‌ட்ட‌போது துடித்த‌ உங்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் இருக்கும் இல‌ங்கை த‌மிழர்க‌ள் மீது தின‌மும் தாக்குத‌ல் ந‌டத்தி அதில் ஆயிர‌க்க‌ன‌க்கானோர் சாவுவ‌தை ப‌ற்றி தெரியாம‌ல் போய்விட்ட‌து. ம‌த‌ங்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில் சாதித்தது கிடையாது.ந‌ல்ல‌ ம‌னிதர்க‌ளாக‌ இருந்து சாதித்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம். ம‌த‌ங்க‌ளை தூக்கியெரிந்துவிட்டு முத‌லில் ந‌ல்ல‌ மனித‌ர்க‌ளாக‌ இருப்போம். இத‌ற்கு மேல‌ த‌ங்க‌ளுக்கு விரிவான‌ விள‌க்க‌ம் வேண்டும் என்றால் நான் உங்க‌ளுக்கு த‌ர‌ த‌யாராக‌ இருக்கிறேன்.

--

விடுதலைவீரபத்திரன் துபாய்
www.viduthalaiveeraa.blogspot.com