Friday, January 22, 2010

Tamil Islamic Website

Tamil Islamic Website

1. www.islamkalvi.com
2. www.islamiyadawa.com
3. www.suvanathendral.com
4. www.tamilquran.com
5. http://thiruquran.com
6. www.tharjuma.com
7. www.tamilislam.com
8. www.satyamargam.com
9. www.readislam.net
10. www.nouralislam.org
11. www.tamilmuslimmedia.com
12. www.quraaninkural.com
13. www.rahmathtrust.com
14. www.a1realism.com
15. www.tmmk.info
16. www.tmmk-ksa.com
17. www.intjonline.in
18. www.intj.in
19. www.tntj.net
20. www.onlinepj.com
21. www.rajaghiri.net
22. www.rajaghiri.com
23. www.rajaghiribaithulmal.com
24. www.pandaravadai.com
25. www.valoothoor.com
26. www.avoor.tk
27. www.govindakudi.com
28. www.ilayangudikural.com
29. www.mudukulathur.com
30. www.chittarkottai.com
31. www.nellaieruvadi.com
32. www.nidur.info
33. www.kadayanalluraqsha.com
34. www.nidurseasons.com
35. www.lalpet.com
36. www.tzronline.com
37. www.vkalathur.com
38. www.counselormansoor.com
39. www.makkamasjid.com
40. www.k-tic.com
41. www.mypno.com
42. www.muslimleaguetn.com
43. www.parangipettai.com
44. www.parangi.com
45. www.portonovo.in
46. www.imandubai.org
47. www.iqna.ir
48. www.samarasam.net
49. www.ift-chennai.org
50. www.alhasanath.org
51. www.srilankanmuslims.net
52. www.idmk.in
53. www.idmk.org
54. www.tmml.org
55. www.samooganeethi.org
56. www.tamilislam.webs.com
57. www.tamilmuslim.in
58. www.darulsafa.com

பணமே! பணமே!

பணமே! பணமே!
அருளில்லார்க்கு

அவ்வுலகில்லை

பொருளில்லார்க்கு

இவ்வுலகில்லை-எனும்

நன்மொழி படித்து

உன்னை நேசித்தேன்.



அல்லும் பகலும்

அயராதுழைத்தேன்.

அவனியில் வாழ்ந்திட

அயராதுழைத்தேன்.



உனைத்தேடித் தேடி-என்

உறவுகளை மறந்தேன்.

உனைத்தேடி அடைந்திட

பல்லிடம் அலைந்தேன்.



படைத்தோன் விதித்த

தடைகளை மீறி-உனை

ஈட்டிச் சேர்த்தேன்.

வட்டியில் ஈட்டிய

மொத்தப் பணத்தையும்

பெட்டியில் வைத்தே

பூட்டினை இட்டேன்.



உன் மூலம்-நான்

நிம்மதி பெறவே

உனைத் தேடி உலகினில்

நாள்தோறும் அலைந்தேன்.

அயல்நாடு சென்று

அயராதுழைத்தேன்.

உவர்நீர் சிந்தி

உற்சாகமாய் உழைத்தேன்.



உற்ற மனைவியை

பெற்ற பிள்ளைகளை

பற்றின்றி துறந்தேன்.



ஆனால்

நீ வந்த பின்பே

நிம்மதியிழந்தேன்.

நித்தமும் கட்டிலில்

நித்திரை இழந்தேன்.



உனை அடைந்திடவே

இத்தரணியில்

எத்தனை குற்றங்கள்!

எத்தனை கொலைகள்!



பணம் பாதாளம்வரை

பாயும்.

பணம் பத்தும்

செய்யும்.

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே.

உனக்குத்தான்

எத்தனையெத்தனை

பழமொழிகள்!



உனை அடைந்திடத்தானே-ஒரு

வஞ்சியவள்

வேசியானாள்.



உனைப்

பெற்றிடத்தானே

பெற்றவளையே-ஒரு

தனயன் கொன்றான்.



உனைப் பெற்றிடத்தானே

உடன்பிறந்தானின்

உயிரையே பறித்தான்.



உனை அடைந்திடத்தானே-பல

தடைகளை மீறி-பிறர்

உடைமைகளைக்

களவு செய்தான்.



உனைப் பெற்றிடத்தான்

எத்தனையெத்தனை

குறுக்கு வழிகளை

குறுமதி மானிடன்

கைக்கொள்கிறான்.



பெருவாரியாக-உனைப்

பெற்றிட எண்ணி

கள்ளத்தனமாய்

கள்ள நோட்டடித்தான்.

இன்று-அவன்

சிறையறைக்குள்

சிக்குண்டு தவிக்கிறான்
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net

பணமே வருகை தருவாயா?

பணமே வருகை தருவாயா?

நீ
செல்வந்தர்களோடுதானே
உறவு வைத்துக்கொள்கிறாய்!
அவர்களைத்தானே
அன்றாடம் நீ
தேடிச் செல்கிறாய்!

ஏழைகள் எங்களின்
வீட்டுக்கு
வருகை தந்து-எம்
வறுமையைப்
போக்கமாட்டாயா?

நீயும்
கேடுகெட்ட மானிடரைப்
போன்றுதானோ?
அவர்கள்தாம்
வசதியுடையோருடனே
ஒட்டிக்கொள்வர்.
வசதியற்றோரை
வெட்டிக்கொள்வர்.

நீ
செல்வந்தர்களின்
இல்லங்களில்
சோம்பேறியாய்த்
துயில்கொள்வதைவிட
ஏழைகள் எங்களின்
குடிசைகளுக்கு
வருகை தந்து-எங்களின்
வயிறுகள் நிரப்பலாமே!

நீ ஏன்
செல்வந்தர்களின்
பெட்டிகளுக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாய்?

எங்களின்
இல்லங்களுக்கு-நீ
வருகை தந்தால்
நாங்கள் உனைச்
சுதந்திரமாகத்
திரியவிடுவோமே!

செல்வந்தர் வீட்டில்
சிறைபட்டுக் கிடப்பதே
உன் விருப்பமா?
ஏழைகள் எங்களின்
இல்லங்களுக்கு
வருகை தந்து
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கமாட்டாயா?

ஏழை வீட்டுக்கு
வருகை தந்து-எங்கள்
குழந்தைகளின்
பசிபோக்க மாட்டாயா?

எங்கள் பிள்ளைகளின்
உயர்படிப்புக்கு
உதவிசெய்ய மாட்டாயா?

இங்கே
வெம்பி வாடும்-முதிர்
கன்னிப் பெண்டிரின்
திருமணத்தை
நடத்தி வைக்கமாட்டாயா?

தினம் தினம்
துன்பத்தில் துவளும்-எங்கள்
துயரத்தைக் களைந்திட-எம்
இல்லங்களுக்கு-நீ
என்றுதான்
வருகை தருவாயோ?

உன்
வரவுக்காகக்
காத்திருக்கும்
பரம ஏழை.
......................................

--
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net