Monday, February 11, 2008

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள .....

Assalamu Alaikum,

Please visit the below link & trust me this will be useful for most of us especially for the students.

http://www.world-english.org/


Regards,

S.M. Arif Maricar
http://arifmaricar.blogspot.com

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்

அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) வருடந்தோறும் மீலாத் பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்த போட்டிகள் குறித்த விபரமாவது :

பேச்சுப் போட்டி 1 ( ஆலிம் பெருமக்களுக்கு மட்டும் )

வெள்ளிக்கிழமை 29.02.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற இருக்கிறது.

உலக வாழ்வில் பெருமானாரின் இறுதி நாட்கள், இன்றைக்கும் பொருந்துகிற இறுதித் தூதரின் சொற்கள், மஹ்ஷர் வெளியில் மாநபியின் ஷபாஅத், அரபகம் அண்ணலாரின் வருகைக்கு முன்னரும்,பின்னரும் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பேசுவதற்கு தயார் நிலையில் வரவேண்டும். இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 20.02.2008

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

புனித குர்ஆன் மனனப் போட்டி 07.03.2008 வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை 07.03.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற இருக்கிறது.

புனித குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கான மனனப் போட்டியில் நாற்பது வயதிற்கு உட்பட்ட ஹாபிழ்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டி இவ்வருடம் முதல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 29.02.2008


இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச புனித உம்ரா பயணம், துபாய் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக் கூப்பன், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

பேச்சுப் போட்டி 2 ( பொதுமக்கள், மாணவ, மாணவியர் )

வெள்ளிக்கிழமை 14.03.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( அல்முதினா லூலூ செண்டர் பின்புறம் ) நடைபெற இருக்கிறது.

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் ( ஸல் ) அவர்கள், வேந்தர் நபிகளின் வருகை பற்றி வேதங்களின் முன்னறிவிப்பு, சான்றோர்கள் பார்வையில் ( ஸல் ), உத்தம நபியும், உண்மைத் தோழர்களும், பயணம் வகுத்த பாதை ( ஹிஜ்ரத் ) ஆகிய தலைப்புகளில் பொதுமக்கள் பேசலாம்.

இப்போட்டியில் அனைத்து சமுதாய மக்களும் ஜாதிம் மதம், இன வேறுபாடின்றி பங்கேற்கலாம்.

அண்ணலார் ( ஸல் ) ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒன்றில் மாணவ, மாணவியர் பேசலாம்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 10.03.2008

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் ஷார்ஜா திருச்சி ஷார்ஜா இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

போட்டி குறித்த மேலதிக விபரங்களுக்கு விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்ய்யத்தீன் 050 58 53 888, ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712, ஈமான் அலுவலகம் 04 2661415 தொலைநகல் 04 2664142 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

ETA-Ascon seeks jets for new airline


ETA-Ascon seeks jets for new airline

By Saifur Rahman, Business News Editor

Published: February 10, 2008, 00:45

Dubai: ETA-Ascon, one of the UAE's largest diversified conglomerates, is in talks with regional jet manufacturers Embrayer, Bombardier and ATR to acquire jets to start its new airline in India, a top official said.
"Yes, we have started talking to all three regional jet manufacturers - Embrayer, Bombardier and ATR - to acquire 70-90 seater regional jets for the new airline in India," Syed M. Salahuddin, managing director of the $4.3 billion Emirates Trading Agency-Associated Construction (ETA-Ascon) group, told Gulf News on Wednesday.
"We have already got the licence to start the airline. We are preparing for commercial launch in around October. It will be a regional airline."

New entry

ETA-Ascon group, a major player in shipping, trading, construction, real estate and power sectors, has recently entered into aviation business with Star Aviation - a new leasing entity.
"We already have eight aircraft leased to different airlines and the portfolio size is worth $200 million," Salahuddin said.
The group, jointly owned by Dubai's Al Ghurair Group and a group of non-resident Indians, which had grown its business through trading, shipping and construction, has further diversified its portfolio by entering into real estate, hospitality, cement production, steel manufacturing, retail, jewellery and food services.
It has rebranded its property and hospitality portfolio with ETA Star that has more than 15 million square feet of built-up area in the planning and construction, worth $10 billion.
It is also developing a Dh2 billion luxury neighbourhood - Dubai Lifestyle City in Dubai. "We are planning to develop Lifestyle Cities in other parts of the world," he said.
Shipping
However, the company which employs 58,000 people, is also expanding its core businesses. With 35 vessels, it owns the largest privately owned fleet.
"We have ordered 30 vessels worth $1.5 billion that will join our 35-strong fleet in four years. Among the new vessels, the ratio between bulk carriers and liquid will be 50:50. We are also expanding our liquid carriers fleet," he said.
"As 80 per cent of the global trade move by sea, we are enjoying our share of growth. Last year, we carried 25 million metric tonnes of cargo, which will go up to 30-35 million tonnes."
India expansion
ETA-Ascon group has been investing in India heavily as major opportunities are being unlocked by the Indian government.
"India provides the biggest opportunity for us and we see so much scope for growth," he said.
His company is currently planning and developing two townships in India's Bangalore and Chennai.
"However, investment in infrastructure could unlock opportunities in other areas. For example, we have recently started a cargo rail service (Railway Wagon) to move containers between Delhi and Bombay, which will expand to all other major Indian cities as the economy grows there."

http://www.gulfnews.com/business/Aviation/10188600.html

துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு


துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு

துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் சார்பில் கீழை சீனா தானாவின் 'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா லேண்ட் மார்க் ஹோட்டலில் 08.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பவித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார்.

கந்தநாதன் தனது நூல் விமர்சன உரையில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் மனித நேயம், மதநல்லிணக்கம், இறைநம்பிக்கையினை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியை மலிகா சபியுதீன் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளைக் கொண்ட இதுபோன்ற புத்தகங்களை வாரம் ஒருமுறை குழந்தைகளிடம் வாசித்துக் காண்பித்து இக்கணினி யுகத்தில் அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முயல வேண்டும் என்றார்.

பொறியாளர் ஆல்பர்ட் இந்நூலை வாசிப்பவர் தனித மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார் என்பதில் ஐயமில்லை என்றார்.

'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' நூலை நூலாசிரியர் கீழை சீனா தானா அவர்கள் வெளியிட தொழிலதிபர் முரளி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மர்சூக், பாபநாசம் அப்துல் ஹமீது, அஜ்மான் மூர்த்தி, டாக்டர் வில்லியம்ஸ், இலங்கை எழுத்தாளர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மர்சூக் அவர்கள் தனது உரையில் இந்நூல் தனக்கு ஒரு ஊக்க சக்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து டாக்டர் வில்லியம்ஸ், அஜ்மான் மூர்த்தி, அப்துல் வாஹித், கவிஞர் இஸ்மத், கமருல் ஜமான், உஸ்மான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

நூலாசிரியர் கீழை சீனா தானா ஏற்புரை நிகழ்த்தினார்.

சங்கமம் தொலைக்காட்சி ( 04 3530607 ) நிர்வாக இயக்குநர் கலையன்பன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

http://www.puduvaitamilsonline.com/news8.html

துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்


துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிஃபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன் ( வயது 38 ) . தற்பொழுது சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு என்னும் ஊரில் வசித்து வருபவர். வளைகுடா கனவுகளுடன் கடந்த 09.12.2006 அன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ஒரு லட்சம் செலவு செய்து வருகை புரிந்தார். லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரண்டரை மாதம் கழித்து அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப் காண்டிராக்டரிடம் பணிபுரிந்துள்ளார்.

28.12.2007 அன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுது நடக்க முடியாத சூழ்நிலையில் தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இவருக்கு யாரேனும் உதவ முன்வருவார்களா ? என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன்.
இவரது தொடர்பு எண் 050 9044240.

குறிப்பு : இச்செய்தியை www.thatstamil.com இணைய இதழில் படித்து விட்டு பாலாஜி, பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சகோதரகள் உதவ முன்வந்துள்ளனர். இதற்காக முயற்சி எடுத்த வி. களத்தூர் கமால் பாஷாவுக்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/11/world-tamil-youths-suffering-in-dubai.html

http://tmpolitics.blogspot.com/2008/02/blog-post_10.html