Saturday, December 27, 2008

உடன் பிறப்பு

உடன் பிறப்பு

தாயின் கருவறையில்
சேய்மையாய் பிறந்த உறவு

உதிரம் ஒன்றானாலும்
வாழ்க்கையில்
உதிரக் கூடாத உறவுகள்
சகோதரன் சகோதரி…

ஒன்றாய் பிறந்து
ஒன்றாய் வளர்ந்து
ஒன்றாய் வாழ்வதில்
சிலர்
ஒற்றுமை இழப்பதேன்…?

கருத்துக் கலப்பில்
கரையேராமல்
குருத்துவம் இழக்கும்
இவர்களின்
குருதி உறவுகள்…

அவசர வாழ்க்கைக்கு
ஆசைகள் அதிகம்
அதனால்
அனைத்து தேவைகளுக்கும்
ஆசிரியராவது சுயநலம்…

விட்டுக்கொடுப்பதற்கு
பொருள் இருந்தாலும்
உறவை வெட்டுவதற்கு
பலர்
பொருளாகிறார்கள்…

நீயா…? நானா…?
சுயநலக் களத்தில்
சூனியனர்களாகும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகள்…

கூடப்பிறந்தவர்களோடு
கூட்டாக வாழாதபோது
கூட்டாளிகளுடன் கூடுவதில்
குணம் நிறக்குமா…?

பக்கத்து வீட்டுக்காரனை
மன்னித்து விடும் மனம்
பாசக்காரனுக்கு அது கொடுப்பது
மரணதண்டனை…

பாசமும் அன்பும்
மதிப்புத் தெரியாதவர்களுக்கு
மத்தியில்
மரணமாகிக் கொண்டிருக்கிறது…

இது
தாய்பாலின் கலப்படமா…?
தாரம் தந்த பாடமா..?

யார் வகுப்பு நடத்தினாலும்
அங்கு
பாசம் குருவானால்
வேசக்கரு களைந்துவிடும்…

உறவில் உறைந்தவர்கள்
பலரின்
உள்ளங்களில் வாழ்கிறார்கள்…

உறவைத் துறந்தவர்கள்
தங்களின்
உள்ளத்தை தொலைக்கிறார்கள்…

தான் என்ற தலைக்கணம்
தரையிறங்கினால்
நாம் என்ற ஒற்றுமை
தலை சிறக்கும்…!



--
12/25/2008 04:44:00 AM அன்று கவிவனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது

kiliyanurismath@gmail.com

நவீன கல்வியின் சிற்பி

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று ஆசாத் வலியுறுத்தினார்.

அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.

இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.
1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார்.
17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்.

கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.


1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.


முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.

35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.

1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள்
1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார்.
1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.


ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்
சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.


உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.


தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார்.

1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.


காந்தி மற்றும் நேரு ஆகியோருடன் மௌலானா ஆசாத்




கல்கத்தாவில் உள்ள ஆசாத் அருங்காட்சியகம்



எகிப்தில் உள்ள கலாச்சார மையம்

ஆதாரம்: www.moulanaazad.blogspot.com

ராஜகிரி கஸ்ஸாலி

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி

சென்னை, டிச. 26: "பயங்கரவாதத்துக்கு எதிரான பதில் நடவடிக்கையில் போலீஸ், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள், மக்கள் பங்களிப்பு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீஸ் நண்பர்கள் திட்ட இயக்குநரும் ஐ.ஜி. யுமான பிரதீப் வி. பிலிப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்û

fop@airtelmail.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி தங்களது பங்கேற்பைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் இல்லை.

பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரங்களை atccontest@gmail.com

என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

கட்டுரைகள் 1500 முதல் 2 ஆயிரம் வார்த்தைகள் வரையில் இருக்கலாம். இதற்கான விண்ணப்ப மனுக்களை 2009 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் பூகோள கிராமம் - சில காட்சிகள்

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1951&Country_name=Gulf&cat=new


சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் துபாய் பூகோள‌ கிராம‌ம்

துபாயில் வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் விற்ப‌னைத் திருவிழாவினையொட்டி பூகோள‌ கிராம‌ம் ப‌ல்வேறு நாடுக‌ளின் க‌லை, க‌லாச்சார‌த்தை நினைவு கூறும் வ‌ண்ண‌ம் 1996 ஆம் ஆண்டு ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து.

ஆர‌ம்ப‌த்தில் த‌ற்காலிக‌ இட‌த்தில் செய‌ல்ப‌ட்ட‌ பூகோள‌ கிராம‌ம் த‌ற்பொழுது துபாய்லேண்ட் ப‌குதியில் 17.2 மில்லிய‌ன் ச‌துர‌ அடி ப‌ர‌ப்பில் நிர‌ந்த‌ர‌மாக‌ அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள‌ம், ப‌ங்காளாதேஷ், இல‌ங்கை, ஆப்கானிஸ்தான், எகிப்து, ச‌வுதி அரேபியா, க‌த்தார், லெப‌னான், சிரியா, கிழ‌க்கு ஆசிய‌ நாடுக‌ள், ஐரோப்பிய‌ நாடுக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ள் இதில் அர‌ங்குக‌ளை அமைத்துள்ள‌ன‌.

இந்த‌ அர‌ங்குக‌ளில் அந்த‌ந்த‌ நாடுக‌ளின் க‌லை நிக‌ழ்ச்சிக‌ள், பொருட்க‌ள் உள்ளிட்ட‌வை அனைவ‌ரையும் க‌வ‌ரும் வ‌ண்ண‌ம் விள‌ங்கி வ‌ருகிற‌து.

குழ‌ந்தைக‌ள் விளையாட்டு அர‌ங்கு, இந்திய‌ உண‌வுக் கூட‌ம், நீர் சாக‌ச‌ விளையாட்டு, ச‌ர்வ‌தேச திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் அமைப்பின் அர‌ங்கு உள்ளிட்ட‌வை பார்வையாள‌ர்களை வெகுவாக‌க் க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ஐந்து ரூபாயாக‌ இருந்த‌ நுழைவுக் க‌ட்ட‌ண‌ம் இவ்வாண்டு பத்து ரூபாய் வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. மாலை நான்கு ம‌ணி முத‌ல் ந‌ள்ளிர‌வு வ‌ரை இப் பூகோள‌ கிராம‌ம் பார்வையாள‌ர்க‌ளுக்கு திற‌ந்து வைக்க‌ப்ப‌டுகிற‌து.

எதிர்வ‌ரும் பிப்ர‌வ‌ரி 21 ஆம் தேதி வ‌ரை இப்பூகோள‌ கிராம‌ம் செய‌ல்ப‌டும்