Saturday, March 28, 2009

முதுகுளத்தூர் இளங்கோவன் மடல்

Dear Brothers and Sisters


First of all my greetings to everyone...and their family members.

Everybody knows about me without introduction myself, I want to say few words about me and my involvement to this society. I have completed 28 years in UAE and I have been deeply involved Social Service activities in local organization since 1993 which was very much impressed to me. My involvement is entirely different from others . Many Social Service organization have been taking care of their own people society but my intention is to contribute to this society and pay back whatever the country has given us. A new authority under the Dubai Govt was recently set up to act as an umbrella for social service organizations and was also talked with promoting national Identity and empowering UAE National. Their objective is to promote national identity, to ensure that the UAE National is distinguishable and noticeable.


Herewith I am forwarding the following message from His Highness Sheikh Mohamed Bin Rashid Al Maktoum vision


It is far easier to build financial capital than it is to build intellectual, psychological and moral capital. Building a road or a bridge may take a year or two, but developing people takes a lifetime. Social development, in all its aspects, requires distinct programs, outstanding performance, patience and special criteria for measurement and evaluation.”


With these words, His Highness Sheikh Mohammed Bin Rashid Al Maktoum launched the Dubai Strategic Plan (DSP 2015), outlining his vision for Dubai as an inspiring model of community well-being and national identity.

I am taking s Statistical survey particular of this task. In this part I would request you all please forward your personal opinion "what we can serve to this society and what the country people are expecting us etc.." Your answer has to reach to me on or before 5th April 2009. I have to give the survey report to the Authority at teh earliest.

Your valuable points will elevate and strengthening the National Identity development.

My e.mail ID:saithree@hotmail.com

With Prayers, Love and Good wishes to all


Ilangovan
0506759789

As-Salam Trust, Aduthurai

Dear Brothers & Sisters,

Assalamu Alaikkum (Varah)

We are very glad to say that we have got the LETTER OF INTENT (first level approval) from AICTE - New Delhi. They have given two months time to visit us for inspection. Insha Allah we will be ready by April end for inspection.

Also we launched our website today. The site name is www.assalamtrust.com. Please view the website frequently for updates. You can give your suggestions for the quality of our website.

As we all know that we have to reach 100 members for the trust, up to now 74 has been filled and we are expecting your kind support to fill the remaining.

We request you to intimate your friends and relatives about our website.


Thanks & Regards,

Jamal Mohamed Ibrahim, Chairman
Shahjahan, Secretary
As-Salam Trust, Aduthurai

கண்ணே-கனியமுதே!

கண்ணே-கனியமுதே!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)

சமீபத்திய மணமுறிவுகள் நவீன முறையினை கையாண்டு எஸ்.எம்;.எஸ்-தொலைபேசி-கடிதங்கள் ழூலம் மிக எளியமுறையில் சொல்லி கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வினை சீர்குழைக்கப்படுகிறது. திருமணத்தில் கை நிறைய கைக்கூலி-சீர்-சீராட்டு பெற்றுக்கொண்டாலும் நிக்காப்புத்தகத்தில் அதெல்லாம் எழுதப்படுகிறதா என்றால் இல்லை. ஆனால் டைவர்ஸ் செய்யும் போது வெறும் மகரினை குறைந்த அளவு தொகையியாகத்திருப்பி மணமகளுக்கு அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. அதன் முடிவு மணமக்கள் மகிழ்வோடு வாழ்வினைத் தொடங்குவதை விட்டு விட்டு கோர்ட்-வக்கீல்-காவல் நிலையம் ஆகியோரின் வாசல்படியினை மிதிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இது போன்ற மணமுறிவுகள் ஏற்படுவதிற்கு காரணங்கள்-அவைகளை போக்கும் வழிகள் பற்றி சிந்தனை ஓட்டத்தில் உதிர்த்த கருத்தோவியம்-கவிதைத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்.

காரணங்கள் பல விதம்:

மணப்பெண் பெற்றோர் அரவணைப்பிலிருந்து புகுந்த வீட்டுக்கு எண்ணிலா கனவுக் கோட்டைகளுடன் காலடி வைக்கிறாள். ஆனால் கணவன் வீட்டில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று எண்ணும்போது அதிர்ச்சி அடைகிறாள். விதவை மாமியார்-வாழாவெட்டியாக இருக்கும் நாத்தனார் தங்களுடைய விரக்தியினை
புதுப்பெண்ணிடம் பொறிந்து தள்ளும் போதும்-அதனை தட்டிக்கேட்பதிற்கு தனது கணவனிடம் திரானி இல்லாத போது புகுந்த வீட்டில் அவள் அனாதையாகிறாள். மணகளை விட்டு மணமகன் பிரிந்து வெளி நாட்டுக்கு வேலைத் தேடி செல்லும் போது மணமகளைப் பற்றி அபாண்டமான தூபம் போடும் போது

மணமகனோ- மணமகளோ திருமணத்திற்கு முன்பு நடத்திக் கொண்டிருந்த காதல் நாடகங்களை அவையெல்லாம் கானல்நீர் என்று மறக்காமல்-நிக்கா புத்தகத்தில் மனவொப்ப கையெழுத்துப் போட்ட பின்னும் முந்தைய காதல் உலகில் சன்சரிக்கும் போது
மகன்; எங்கே மருமகள் முந்தானையில் ஒளிந்து கொள்வானோ என்ற பய உணர்வு மாமியாரை தொற்றிக்கொள்ளும் போது
மருமகள் படித்தவளாக இருந்தால் தங்களை மதிக்கமாட்டாளோ என்று படிக்காத மாமியாரோ-நாத்தனாரோ தாழ்வு மனப்பான்மையில் உழழும் போது
மருமகள் சற்று பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் அவளை அடிமைபோல் நடத்த முயலும் போது
மருமகள் பணக்காரியாக இருந்தால் அகங்காரி அவள் என்று அவப் பெயர் சூட்டும் போது
மருமகளுக்கு சிறு நோய் இருந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி அவளை தீண்டத்தகாதவள் ஆக்க முயலும் போது. ஆனால் தன் மகனுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை மூடி மறைப்பது. ஊதாரணத்திற்கு குணமாக்கக் கூடிய இனிப்பு நீர் மணமகளுக்கு இருக்கிறது என்று ஆட்டை வீட்டுக்கு அனுப்பியது போல் ஈனச்செயலும் நடந்துள்ளது. இந்தக் குறை போக்கத்தான் சீனாவின் சிற்பி மாசே துங் திருமணத்திற்கு முன்பு மணமக்கள் டாக்டரிடம் தனிக்கை செய்து நோய் குணமாதும் திருமண செய்யும் சம்பிராயத்தினை கொண்டு வந்தார்.
புகுந்த வீட்டில் தான் படும் வேதனையின் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் போது அவளைப் பார்த்து மணகளுக்கு பைத்தியம் என்ற பட்டத்தினை சூட்டும் பல்கலைக்கலகங்களாக மாமியார்களோ-நாத்தனார்களோ மாறும் போது-ஆனால் மணமகன் மன நிலை பாதித்தவன் என்ற உண்மையினை மறைக்க முயலும் போது
டி.விக்காட்சிகளில் வரும் மாமியார்-மருமகள் சண்டைகளை தங்கள் வீட்டிலும் அரங்கேற்ற முயலும் போது
பலர் மெச்ச ஆடம்பர திருமணம் கடன் வாங்கி நிறைவேற்றி விட்டு கடன்காரர்கள் துரத்தும் போது ஏற்படும் விரக்தி தங்களை கவ்வும் போது
இல்லாதவர் வீட்டில் அழகான பெண்ணை மகருக்காக திருமணம் என்று ஊரில் பறை சாட்டி விட்டு சீர்-சீராட்டு என்ற பெரிய லிஸ்ட்டை பெண் வீட்டாரிடம் கொடுத்து அவர்களும் தங்கள் மான மரியாதையை விட்டு நோட் புத்தகத்தினை கையிலேந்தி வீதி வீதியாக அலைய விட்டு திருமணம் செய்து கொடுத்தாலும் போதும் என்ற மன பக்குவம் அடையாது மணமகளை சீர்-சீராட்டுக் குறை சொல்லி நோகடிக்கும் போது
மேற்கூறிய குறைகளைக் களைய கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாளாம்:


திருமணத்திற்கு முன்பு மணமக்கள்-அவர்கள் பெற்றோர்கள் குடும்ப வாழ்வு சமூக சிந்தனை அடங்கிய புத்தகங்களை படிக்கச் செய்யலாம். மலேசியாவில் மணமக்களுக்கு ~கவின் குரிசு| என்று இன்பமான வழியில் வாழ்க்;கை அமைய மார்க்க போதனை நடைபெறும். அதே போன்று அமைப்பை ஏற்படுத்தி வழிகாட்டுதலில் ஈடுபடலாம்.
திருமணத்திற்கு பின்பு ஏற்படுகின்ற கருத்து வேற்றுமை காவல் நிலையம்-கோர்ட் வரை சென்று மானம் கப்பல் ஏறாமல் இருக்க கற்ற பெரியோர்கள் அடங்கிய கவுன்சிலிங் குழுவினை அமைக்கலாம்
ஏழை-எழியோர் திருமணம் செய்ய ஊர்க்காரர்களே பொறுப்பினை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டுத் தொகையினை(கார்ப்பஸ் பண்ட்) ஏற்படுத்தி எளிய முறையில் திருமணம் அமைய வழி வகுக்கலாம்
திருமணம் முடிந்து-விருந்தில் கலந்து கொண்டு வீட்டுச் செல்வதோடு தங்கள் காரியம் முடிந்தது என்றில்லாமல்-மணமக்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது அதனை தீர்த்து வைப்பதிற்கு ஒவ்வோர் ஊரிலும் பெரியோர் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும. இறை நம்பிக்கையாளர்கள் மனைவியின் ஒரு நடத்தை பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய வேறு நல்ல குணங்களுக்காவது மணகனுக்கு மனநிறைவினைத் தரலாம்.
குத்பாவில் ஓதப்படும் ~தஷஹ்ஹ_து| துவாவின் நோக்கம் ~ திருமணம் வெறும் மகிழ்ச்சி குதுகூலமட்டுமல்ல-அது மணமக்களிடையே நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாக-உற்ற துனைவர்களாக வாழ் நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற ஒப்பந்த பத்திரமாகும் என்று மணமக்களுக்கு அறிவு சான்ற பெரியோர் நினை ஊட்ட வேண்டும்.


மனைவிப் பா

-------------

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது

என பொற்றோர் பெரியோர் சொல்ல

படிப்பை பாதியில் நிறுத்தி உன்

பள்ளியறை தஞ்சம் புகுந்தேன்


கண்ணே கனிமானே தேனே தௌ;ளமுதே

மயிலே மாங்குயிலே

முகிலைக் கிழித்து வந்த முழு நிலவே

ஆழ் கடல் மூழ்கி தெரிந்தெடுத்த வலம் புரி சங்கே


கொம்புத் தேனல்லவோ உன் பேச்சு

கொடியிடையடி உன் இடுப்பு

சந்தனமடி உன் தேகம்

சலங்கையடி உன் சிரிப்பு


நடந்தால் நீ நடனம்

அசைந்தால் நீ தேர்

கவின் மிகு கவிதை உன் மூச்சு

கருமேகடி உன் கூந்தல்


கம்ப ரசத்தை மிஞ்சியது உன் கவிதை மயக்கத்தில

தந்தேன் என் தளிர் மேனியை

சுனாமியாக மாறி என்னை சூறையாடி உன்

தாகத்தை தனித்துக் கொண்டாய்



எல்லையில்லா மகிழ்ச்சி மூழ்கியிருந்த போது

இடிவிலுந்தது உன் செல்போன் வடிவில்

அர்த்த ராத்திரியில் கேட்டது பெண் குரல்

நடுங்கியது உன் குரல்


என்னை கண்ணே கற்கண்டே என

கவிதை பாடியது பொய்யா?

கேட்டது மறுமுனை பெண் குரல்

கண்ணாடியாக நொருங்கியது என் இதயம்


அடப்பாவி காலமெல்லாம் என்னைக்

காப்பாற்றுவாய் என வீர வசனம் பேசி-என்

கருப்பையை நீ ஈரமாக்கினாய்-ஆனால் நீயோ

கல்லறையடி உன் கருப்பை என்றாய்


வாடகைத் தாய் என்று உன்

பாவச்செயலை சுமந்தேன் பிள்ளை வடிவில்

அழுதேன் புழம்பினேன்

ஆறுதல் சொல்வதிற்குப் பதிலாக அடித்தாய்


ஆண்கள் எந்தச் சேற்றிலும்

கால் மிதித்து

எந்தக் குட்டையிலும்

கால் கழுவுவான் என்றாய்


நீயும் வேணும் அவளும் வேணும்

மறக்க முடியுமா அவள் நினைவை

என்று ~காதல் பரிசு| சினிமா பாணியில்

வஞ்சித்தாய் வசனம் பேசி


கொஞ்சும் கிளியே என அழைத்த நீயே என்னை

வஞ்சித்தபோது சொல்ல வேண்டுமா

உன் குடும்பத்தார்

குரூர குணங்களை


நின்றால் குற்றம் நடந்தால் குற்;றம்

தொட்டால் குற்றம் தொடங்கினால் குற்றம்

சிரித்தால் குற்றம் சினுங்கினால் குற்றம்

அம்மம்மா எத்தனை ஏச்சும் பேச்சும்


கண்ணீர் கரைந்த தூத்துக்குடி உப்பளமா என் வேதனை

காதல் சருகு போன்றது அதனை சேகரித்தால்

குளிர்காய உதவும்-ஆனால்

காலமெல்லாம் வாழ்விற்குத் துணையாகுமா?


மாற்றான் தோட்டத்து மல்லிகையை

மனக்க விரும்பும் நீ

தன் வீட்டு மல்லிகையை

தவிக்க விடலாமா?


கனவனே கண்கண்ட தெய்வம் கற்புக்கரசி கண்ணகி

கதையில் படித்தேன்-ஆனால்

என்னை வாடகைத் தாயாக்கி

மாதவியினைக் கைப்படிக்க எண்ணலாமா?


மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்

ஆடையாக என சொல்லியது திருக்குர்ஆன்

ஆனால் நீ ஆட்கொல்லி விஷமாக மாறலாமா?



ஆடு மாடுமாடுகள் திருமணம் செய்வதில்லை

ஆறறிவு மனிதனுக்கு திருமணம் புனிதச் செயல்

துன்பத்தைத மறந்து இன்பத்தைத் தருபவள் மனைவி

அந்தத் துணையைத் துறத்தலாமா?


ஓர் இறை நம்பிக்கையாளன்-தன் துணையின்

ஒரு பழக்கம் பிடிக்கவில்லையெனில்

அவளுடைய வேறு பழக்கங்கள் உங்களுக்கு

மனநிறை தந்தால் அவளை நேசியுங்கள்


சொன்னது அல்குர்ஆன்-நீ

மறந்திருக்க மாட்டாய்- ஏனென்றால்

படித்தவன் பண்பாளன் என பெரியோர்

சொல்லக் கேட்டிருக்கிறேன்


நல்ல குடும்பம் ஓர் பல்கலைக் கழகமாமே

நம் குடும்பம் மட்டும் நடுத் தெருவிலா?

சிந்தித்து செயலாற்று-அடிமைச்

சிறைக்கதவை உடைத்து வெளியே வா


இசைக்கு சரணம்-சுருதி அவசியம்-உன்

செவிக்கு என் கவிதை

எதுகை-மோனை தெரியாது-என்

இதயச்சுமை எதுவுமே தெரியாதா?.

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!

அஜ்மானில் சிவ் ஸ்டார் ப‌வ‌ன் புதிய‌ கிளை திற‌ப்பு விழா

அஜ்மானில் சிவ் ஸ்டார் ப‌வ‌ன் புதிய‌ கிளை திற‌ப்பு விழா

அஜ்மானில் சிவ் ஸ்டார் ப‌வ‌ன் புதிய‌ கிளை திற‌ப்பு விழா 03.04.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.

நிக‌ழ்ச்சியில் ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் ஏ. அஷ்ர‌ப் அலி, வ‌ளைகுடா த‌மிழ‌ர் பேர‌வை த‌லைவ‌ர் அன்வ‌ர் பாஷா, அஜ்மான் அமீர‌க‌ த‌மிழ‌ர்க‌ள் அமைப்பின் நிர்வாகி மூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

சிவ் ஸ்டார் ப‌வ‌ன் உரிமையாள‌ர் கோவிந்த‌ராஜ‌ன் ஏற்புரை நிக‌ழ்த்தினார். 2001 ஆம் ஆண்டு துபாயில் 5 ஊழிய‌ர்க‌ளுட‌ன் துவ‌ங்கிய‌ இந்நிறுவ‌ன‌ம் இன்று 140 பேருட‌ன் உய‌ர்ந்திருப்ப‌த‌ற்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் பேராத‌ர‌வு தான் என‌க் குறிப்பிட்டார்.

வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் செயலாள‌ர் ஜியாவுத்தீன் த‌ம்ப‌தியின‌ர் வாழ்த்துக்க‌விதை வாசித்தார்.

இந்நிக‌ழ்வில் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன்,யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ம், அமீர‌க‌ த‌மிழ் ம‌ன்ற‌ம், அமீர‌க‌ த‌மிழ்க் க‌விஞ‌ர் பேர‌வை ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். ச‌ங்க‌ம் தொலைக்காட்சியின் இய‌க்குந‌ர் க‌லைய‌ன்ப‌ன் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.
ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சியின் சார்பில் ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. அத‌னைத் தொட‌ர்ந்து விருந்து உப‌ச‌ரிப்பு ந‌டைபெற்ற‌து.